Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:00:22 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15597
#KOTW15597
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 18, 2015
நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் அவசியம்! அது எனது கோரிக்கையே!! 01ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.லுக்மான் விளக்கம்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3421 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகராட்சியின் அலுவல் பயன்பாட்டிற்காக புதிய வாகனம் வாங்குவது குறித்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளன.

குறிப்பாக - இது தொடர்பாக, ஏப்ரல் 2012இல், நகர்மன்றத் தலைவரின் விருப்பத்தின் பெயரில் அந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக உறுப்பினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து - இத்தீர்மானத்தை முன்மொழிந்த அப்போதைய 01வது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்களிடம் - இத்தீர்மானம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என காயல்பட்டினம்.காம் வினவியது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தின் சுருக்கம்:-

ஆரம்ப காலத்தில், நகராட்சியில் பணியிலிருந்த அலுவலர்கள் யாருமே நகர்மன்றத் தலைவருக்கு உரிய தகுதியை வழங்காதிருந்தனர்.

பொதுவாகவே நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவருக்கென வாகனம் உண்டு. ஆனால் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு இல்லை. நகராட்சிப் பணிகளை அவ்வப்போது பார்வையிட ஒரு வாகனம் மிகவும் அவசியமாகிறது.

நகராட்சியில் ஒரேயொரு வாகனம் மட்டுமே உள்ளது. (வாகனம் குறித்த கூட்டப் பொருள் முன்வைக்கப்பட்ட காலத்தில்) அப்போதைய நகராட்சி ஆணையர் ஊரில் இருக்கவில்லை. திருநெல்வேலியிலிருந்து தினமும் வந்து சென்றுகொண்டிருந்தார். அவரை அழைத்து வரவும், திரும்ப வீட்டில் விடுவதற்குமே அந்த வாகனம் பெரும்பாலும் பயன்பட்டது.

நகர்மன்றத் தலைவரே தனது பொறுப்பிற்கான தகுதியை விரும்பாவதவராகத்தான் இருந்தார். என்றாலும், அவருக்கென ஒரு தகுதி உள்ளதல்லவா? அதை அவர்கள் ஏற்றே ஆக வேண்டும். எளிமை என்பது இரண்டாவது விஷயம்.

நகர்மன்றத் தலைவர் ஆபிதா ஷேக்குடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த வாகனக் கோரிக்கை ஆபிதா என்பவருக்கானது அல்ல அது. நகர்மன்றத் தலைவர் என்ற அந்தப் பொறுப்பில் யார் இருந்தாலும் அவருக்கு ஒரு வாகனம் அவசியமாகிறது என்பதே எனது கருத்து.

“நீங்கள் சேர்மன் ஆனதால் யாருக்கு லாபமோ, நஷ்டமோ தெரியாது... ஆனால் உங்களுக்கு கடுமையான நஷ்டமே! உங்கள் வீட்டுப் பொறுப்புகளைக் கவனிக்க முடியவில்லை... உங்கள் குழந்தைகளுக்கு உரிய அரவணைப்பை, பாசத்தை வழங்க முடியவில்லை... திடீரென நகராட்சி அலுவல்கள் எதிர்படும்போது, வீட்டு வேலைகளையெல்லாம் போட்டது போட்ட படி விட்டுவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும் நிலை...” என்று நகர்மன்றத் தலைவரிடம் நானே கூறியிருக்கிறேன்.

நகர்மன்றத் தலைவர் என்ற அடிப்படையில் அவர்களைப் பலமுறை ஆதரித்திருக்கிறேன். பலமுறை எதிர்கருத்தும் கொண்டிருக்கிறேன்... ஆனால் அவையனைத்துமே என் மனசாட்சிப்படி நான் செய்தவைதான். அவர்கள் ஒரு கருத்தை சரியெனக் கருதி அதன்படி செயல்பட்டிருக்க அது எனக்கு தவறாகக் கூட பட்டிருக்கலாம். அல்லது சரியான ஒரு கருத்து அவரால் தவறாகக் கூட கருதப்பட்டிருக்கலாம். அது வேறு விஷயம்.

வாகனம் வாங்க வேண்டுமென்பது நகர்மன்றத் தலைவரின் கோரிக்கையே அல்ல. அவர்கள் அந்தக் கூட்டப் பொருளை முன்வைக்கவுமில்லை. இது நான் முன்மொழிந்த கூட்டப் பொருள்தான். அவர்கள் சொல்லி நான் அதை முன்வைக்கவுமில்லை. எனது கோரிக்கையை அஜெண்டாவில் சேர்ப்பதற்காக நான் நகர்மன்றத் தலைவரிடம் வழங்கியபோதுதான் அவர்களுக்கே அது தெரியும். தனக்கு வாகனம் வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையிலும் அவர்களை நான் காணவில்லை. தனக்கென வாகனம் எதுவும் இல்லாத ஒரே சேர்மனாக இவர்கள்தான் இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

என்னைப் பொருத்த வரை, சேர்மனும் தன் தகுதியை உணராமல் அலுவல்களுக்காக கடுமையாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். தெரு விளக்குகளைத் தம் கைகளால் எடுத்துச் சென்று பணியாற்றுவது வரை உறுப்பினர்களும் தங்கள் மதிப்பை உணராமல் அலுவல்களுக்காக கடுமையாக அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றனர் என்றே சொல்வேன். அவ்வாறு இருக்காதீர்கள் என நான் அவர்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன்.


இவ்வாறு 01ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தீர்மானம் நிறைவேறியதா? இல்லையா?
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39663

சகோதரர் லுக்மான், உங்களின் நீண்ட விளக்கத்துக்கு நன்றி. ஆனால், இப்போதைய சர்ச்சையே, நீங்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியதா? தோற்கடிக்கப்பட்டதா? என்பது தான்.

அதற்கான பதில், உங்களின் விளக்கத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே.

உங்களின் பனி சுமைகளுக்கு மத்தியில் இந்த விளக்கத்தை கொடுத்தது போல், அந்த தீர்மானம் நிறைவேறியதா? என்று பதில் அளித்தால், சர்ச்சை முடிவுக்கு வரும். சர்ச்சை தொடராமல் முடிவுக்கு கொண்டு வர பதில் தருவீகள் என்று அனைவரும் எதிர்பார்கின்றனர்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நடந்ததைச் சொல்வதில் எனக்குத் தயக்கமெதுவுமில்லை!
posted by S,K.Salih (Kayalpatnam) [18 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39665

செய்தி எண் 15573இல் சாளை அப்துர்ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்கள் கருத்துப்பதிவு (கருத்து எண்: 39658) செய்துள்ளார். அதையொட்டி, இச்செய்தியின் கீழும் கருத்துப்பதிவு (கருத்து எண்: 39663) செய்துள்ளார். அவருக்கு எனது விளக்கம்:-

(1) நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்க அப்போதைய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் கோரும் அக்கூட்டப் பொருள் ஏப்ரல் (2012) மாத கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அதை ஆதரித்து சிலரும், எதிர்த்து சிலரும் பேசினர் என்பதை செய்தியில் நான் பதிவு செய்துள்ளேன்.

அக்கூட்டத்தில், உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் உட்பட சிலர் கலந்துகொள்ளவில்லை என்பதே எனக்கு நினைவு.

(2) “பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்தும், தலைவி தீர்மானத்தைத் திருத்திவிட்டார்” என்ற உறுப்பினர்களின் தற்போதைய வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை.

காரணம், 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்தல் முடிவுற்ற பின் மிக நெருக்கத்தில் நடைபெற்ற கூட்டம் அது. அப்போது தலைவர் - உறுப்பினர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் என குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.

எனவே, ஒரு கூட்டப் பொருள் வாசிக்கப்படும்போது, அதை ஆதரித்தோ, எதிர்த்தோ உறுப்பினர்களால் பேசப்படும். பெரும்பான்மை உணர்வுகள் மதிக்கப்பட்டு, அதனடிப்படையில் தீர்மானம் இயற்றப்படும். (தனி வாக்கெடுப்பு நடத்தும் முறை அப்போது இல்லை.)

இது நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் வாங்கும் கூட்டப் பொருளுக்கு மட்டுமல்ல! தலைவர் - உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக விவாதத்திற்கு வரும் முன்பு வரை சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கூட்டங்களின் அனைத்து தீர்மானங்களுக்கும் இம்முறையே கடைப்பிடிக்கப்பட்டது.

(3) ஒரு கூட்டப் பொருளை ஆதரித்தோ, எதிர்த்தோ உறுப்பினர்களைக் கையை உயர்த்தச் சொல்லி, இன்னின்னார் ஆதரவு, எதிர்ப்பு என்று மினிட் புத்தகத்தில் பதிவு செய்யும் நடைமுறை - கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து பிற்காலத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் 18ஆவது வார்டு உறுப்பினர் திரு. இ.எம்.சாமி அவர்களால் முன்வைக்கப்பட்டதாகவே எனக்கு நினைவு. அதனடிப்படையிலேயே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

(4) வீடியோ பதிவு குறித்து குறிப்பிடும் சாளை அப்துர்ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்கள், அக்காலகட்டத்தில் நானும், இன்னொரு இணையதள நிருபரும் படம் / வீடியோ எடுத்ததாகச் சொல்கிறார். அது உண்மையில்லை.

நானும், நண்பர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீயும் கூட்டங்களைப் படமெடுத்தோம் என்பது மட்டுமே உண்மை. வீடியோ எடுத்ததே - “தலைவி தீர்மானத்தைத் திருத்தி எழுதிவிட்டார்” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பிறகுதான்.

(அவ்வாறு ஒரு கூட்டத்தில் நான் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, 12ஆவது வார்டு உறுப்பினர் திரு. சுகு அண்ணன் அவர்கள் எனது கேமராவைப் பறிக்க முனைந்தது வரை வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும்.

அந்த முயற்சியைத் தொடர்ந்தும் நான் வீடியோ பதிவு செய்ததைக் கண்ட - 18ஆவது வார்டு உறுப்பினர் திரு. இ.எம்.சாமி அவர்கள் எனது கேமராவுக்கு மிகவும் அருகில் முகத்தை வைத்துக்கொண்டு, “வீடியோ வேணாம்!” என பலமுறை சொன்னதும் அந்த வீடியோ பதிவில் அடக்கம்.

அதற்குப் பிறகுதான், காயல்பட்டணம்.காம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி இன்றளவும் வீடியோ பதிவு செய்து வருகிறது.)

“இத்தனை சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறதே...? இக்கருத்துக்களை முற்கூட்டியே சொல்வதற்கென்ன?” என்று கூட கேள்வியெழுப்பப்படலாம்.

இப்போதும் என் பெயர் இழுக்கப்பட்டிருக்காவிட்டால் நான் இக்கருத்தைப் பதிவு செய்யாமல் தவிர்த்தே இருப்பேன். என் கடமை செய்திகளை உள்ளது - உள்ளபடி வெளியிடுவது மட்டுமே! தேவையான நேரங்களில் கருத்துப்பதிவு செய்வதுமுண்டு. (பெரும்பாலும் இறப்புச் செய்திகளுக்கு இரங்கல் தெரிவிக்கவே நான் அதிகம் கருத்துப்பதிவு செய்திருப்பேன்.)

இவற்றையெல்லாம் ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் உரிமை. யாரையும் திருப்தி படுத்துவதற்காக சத்தியம் செய்யும் அளவுக்குப் போக எனக்கு எந்த அவசியமும் இல்லை.

சிலருக்கு வேண்டுமானால் இது பாரதூரமான விஷயமாக இருக்கலாம். என்னைப் பொருத்த வரை பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனவைதான் இவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:.நகர்மன்றத் தலைவருக்கு வாகனம்
posted by Fuad (Singapore) [18 March 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 39666

சகோதரர் லுக்மான் அவர்களின் மனசாட்சிப்படி தெரிவித்த விளக்கத்திற்கு நன்றி.

நீங்கள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியதா அல்லது நிறைவேறவில்லையா? என்பதை விளக்கினால் நல்லது. விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன்.

வீணாக நகர்மன்றத் தலைவரை விமர்சிப்பதற்கு நீங்கள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சிலருக்கு காழ்புணர்ச்சி...
posted by HASBULLAH MACKIE (dubai) [18 March 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39667

இங்கே கருத்து பதிவு செய்துள்ள ஒருவர் சகோதரர் லுக்மான் அவர்கள் கொடுத்த விளக்கத்தை சரி காண்கிறார் என்றே நினைக்கிறேன்.. ஆமோதித்து விட்டு பிறகு அது நிறைவேறியதா/ இல்லையா??என்று விளக்க சொல்லுகிறார். ஒருவரின் மீது குற்றம் துருவி துருவி ஆராய்ந்து அதன் அளவில் உறுதியாக இருப்பதாகவே இங்கு தெரிகிறது. இதை கைவிட்டு நடந்த உண்மைகளை உண்மையாக சொல்லுவது தான் மனிதாபிமான செயல்..

மற்ற இணையதளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளதை பார்க்கும் போது தலைவி அவர்கள் தனக்கு ஒரு வாகனம் வேண்டும் என்று ஒரே ஆணவத்தில் இருக்கிறார் என்றும். இந்த செய்தியின் மூலம் தலைவர் என்ற முறையில் அவருக்கு வாகனம் தேவை அவசியம் என்பது புலனாகிறது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சகோதரர் லுக்மான் தீர்மானம் நிறைவேறியது பற்றி சொல்லவில்லையா?
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39670

சகோதரர் SK சாலிஹ், லுக்மான் காக்கா அவர்களின் நீண்ட விளக்கத்தில், வாகனம் வாங்குவதான தீர்மானம் நிறைவேறியது பற்றி உங்களிடம் சொன்னாரா? அப்படி சொல்லியிருந்தால், அதையும் முழுமையாக வெளியிட்டால் வாசகர்களுக்கு புரியும்.

உங்களிடம், உங்களிருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஒலிப்பதிவு நாடா கண்டிப்பாக இருக்கும்.

முன்னர், இரு உறுப்பினர்கள் லஞ்சம் கேட்டதாக உரையாடலை ஒலிபரப்பிய இந்த இணையதளம், இதையும் 'முழுமையாக' வெளியிடும் என்று நம்புகிறேன்.

தம்பி சாலிஹ், உங்களின் பதிலுக்கு வருகிறேன்.

“பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்தும், தலைவி தீர்மானத்தைத் திருத்திவிட்டார்” என்ற உறுப்பினர்களின் தற்போதைய வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை". (C&P) ஆனால், "இவற்றையெல்லாம் ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் உரிமை. யாரையும் திருப்தி படுத்துவதற்காக சத்தியம் செய்யும் அளவுக்குப் போக எனக்கு எந்த அவசியமும் இல்லை" (C&P) அல்லாஹ் மிகவும் அறிந்தவன். பொய் சொல்கிறவர்களை கண்டிப்பாக தண்டிப்பான்.

"அக்காலகட்டத்தில் நானும், இன்னொரு இணையதள நிருபரும் படம் / வீடியோ எடுத்ததாகச் சொல்கிறார். அது உண்மையில்லை." (C&P) . என் வாசகத்தை திரும்பவும் வாசியுங்கள்.

"காக்கா, அந்த வீடியோ பதிவு இருந்தால் தான் பிரச்சனையே இல்லையே. அந்த காலகட்டத்தில் இந்த இணையதளம் மற்றும் இன்னொரு இணையதள நிருபர் மட்டுமே புகைப்படம்/ வீடியோ மற்றும் குறிப்பெடுத்தனர்." (C&P)

என்னுடைய பதிவிலும் வீடியோ பதிவு இல்லை, (புகைப்படம் / வீடியோ) என்று தான் குறிப்பிட்டுள்ளேன். "நானும், நண்பர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீயும் கூட்டங்களைப் படமெடுத்தோம் என்பது மட்டுமே உண்மை." (C&P)

நகரமன்ற கூட்டத்தை வீடியோ உறுப்பினர்கள் எதிர்த்தாலும் (இப்போது எதிர்கவில்லை), என்னுடைய கருத்து, தணிக்கை செய்யப்படாமல் முழுமையாக வீடியோ கண்டிப்பாக வேண்டும். உறுப்பினர்கள் எதிர்த்த போதும் என் கருத்து இது தான்.

என்னுடைய முந்தைய பதிவில்(#39659), வாகனம் பழுது பார்க்கும் தீர்மானம் பற்றி நீங்கள் (செய்தி எண்: 8410; பொருள் எண்:13) குறிப்பிட்டதற்கு மாற்றமாக தலைவி மினிட் புத்தகத்தில் எழுதியது பற்றியும்,

http://123.63.242.116/Kayalpattinam/theermana%20apr%202012%2027.04.12.pdf
மீண்டும் அதே பொருள் குறித்த அக்டோபர் 2012 மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்றது. (செய்தி எண்: 9565- ல் பொருள் எண்: 24) பற்றி செய்தி பற்றியும் குறிப்பிட்டு,

"அதே பொருள் மீது ஏப்ரல் மாத கூட்டம் பற்றிய செய்தியில் இந்த இணையதள நிருபர் தெரிவித்த தகவல் சரியா? அல்லது “இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சொல்லும் நகர்மன்றத் தலைவர் தகவல் சரியா?" (C&P) என்ற கேள்விக்கு பதில் சொல்வீர்கள் என்று பார்த்தேன். பதில் இல்லை.

வாக்குவாதம் செய்ய வேண்டும் என்பதல்ல எனது குறிக்கோள். மக்களுக்கு விபரம் புரிய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே.

-சாளை. அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Lukman (chennai) [18 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39672

Assalamu alaikum. வாகனம் வேன்றும் என்ற எனது அஜண்டாவில் வைத்த தீர்மானம் நிறை வேறவில்லை. சகோ. ஸாலிஹ் என்னிடம். விளக்கம் கேட்கும் போடும் அவரிடம் இதை சொன்னேன் அன்றைய காலகட்டத்தில் தலைவர் வுரிப்பினர்கள் இடய பெரிய அளவில் கருது வேறுபாடு இல்லாத நிலையில் தீர்மானம் நிறை வேற்றப்பற்றிண்டால் அன்றே வாகனம் வாங்கப்ப்டிருக்கும் .இவ்வளவு விமர்சனத்திற்கு வுல்லாகும் நகர மன்ற தலைவரும் வுரிப்பினர்களும் பரிதபதிற்குரியவர்களே .. இதனால் வருங்காலத்தில் இந்த பொறுப்புக்கு வருவதற்கு பலருக்கு தயக்கம் ஏற்ப்படும்

எ.லுக்மான்
முன்னாள் நகர .மன்ற வுரிப்பினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அப்படித்தான்... ஆனா அப்படி இல்ல!
posted by Javed Nazeem (Chennai) [19 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39686

தீர்மானம் தோற்று விட்டது. பால்ய நண்பர்கள் பதுருல் ஹக் மற்றும் மொஹிதீன் மட்டுமே எதிர்த்த தீர்மானம் தோற்று விட்டது.

ஆயினும் தீர்மானம் வென்று விட்டது - நகர்மன்றத் தலைவர் மாற்றி எழுதி விட்டார் அல்லவா? அதனால் வென்று விட்டது.

நகரின் மிகப்பெரும் இயக்கம் நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து வென்று, அதன் மூலம் இவர் என்ன தவறு செய்ய மாட்டார் என்று கண் கொத்தி பாம்பு போல் ஒவ்வொருவரும் கவனித்து வரும் நிலையிலும், பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இருக்கிற நிலையிலும் நகர்மன்றத் தலைவர் மாற்றி எழுதி விட்டார் அல்லவா? அதனால் வென்று விட்டது.

இதெல்லாம் லாஜிக், எமக்கு வேண்டியது மேஜிக் - சாரி உண்மை என்பார் சகோதரர். உண்மைதான். பேசுவோம்.

தீர்மான நகல் வடிவம் உண்மையாக எப்பொழுது கிடைத்தது? என்று சுல்தான் காக்கா கேள்வி எழுப்புகிறார்கள். உறுப்பினர்களுக்கு கொடுத்த நகல் மட்டும் தீர்மானம் தோற்று விட்டது என்று காண்பிக்கும் வகையில் மந்திரத் தன்மை கொண்டு அமைக்கப்பட்டது. இது உண்மை.

வழக்கமாக ஒரு நிகழ்வு நடந்தால், குறைந்தது ஒரே ஒரு மாதத்திற்கு மேல் சுடச்சுட செய்தி தரும் நம் இணைய தளம் அதிசயமாக ஒரே வாரத்தில் செய்தி தருகிறது. அதில் தீர்மானம் வென்றதாகத் தானே இருக்கிறது என்று யாரேனும் கேள்வி எழுப்பலாம். உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள் கணிப்பொறியில் மட்டும் தீர்மானம் தோற்று விட்டது என்று காண்பிக்கும் வகையில் மந்திரத் தன்மை கொண்டு அமைக்கப்பட்டது. இது உண்மை.

தீர்மானத்தை மாற்றி அமைக்க வந்த தீர்மானத்துக்கு செல்வோம். "வண்டியே வாணா"னு சொன்ன உறுப்பினர்கள் "நிதிநிலையை கருத்தில் கொண்டு வாணா" என்று சொல்லும் அதிசயத்தை காணலாம். ஏன் என்று கேட்கக்கூடாது. ஏனெனில் உறுப்பினர்கள் அனைவரும் தலைவரின் தீர்மான மாற்ற தவறை மறைத்து அவரைக் காக்கும் வகையில் மந்திரத்தன்மை கொண்டு மாற்றப் பட்டு விட்டார்கள். இது உண்மை.

சகோதரர் ரிபாயின் கேள்விகளில் கிட்டத்தட்ட ஒன்றுக்குமே பதில் அளிக்காமல் சுல்தான் காக்காவின் கேள்விகளில் வீடியோ பற்றிய கேள்வியை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிட்டு கருத்து சொல்கிறோம் பாருங்கள்? அது திறமை.

இத்தனை அடிப்படை கேள்விகள் பதில்அளிக்காமல் இருந்தும், புதியதாக ஒரு கருத்துப் பதிந்து அங்கேயும் "தீர்மானத்தை தலைவர் மாற்றி எழுதினாரா இல்லையா" என்கிற ஒரே கேள்வியை மட்டும் திரும்பத் திரும்ப கேட்கிறோம் பாருங்கள். அது கடமை.

இன்னும் சகோதரர் ஜஹாங்கிர் மீது பெருமதிப்பு உள்ளது. இது சத்தியம். சில கருத்து வேறுபாடுகளால் அவர் மாற்றுப் பாதையில் செல்வதாக கருதுவதால். தூய்மையான, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் அவர் என்று நம்புவதால். இந்த அடைமொழியை அதாவது "தூய்மையான, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்" என்கிற அடைமொழியை கீழ்காணும் நபர்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று அவரை வேண்டுவோம்.

Option 1: நகர்மன்றத் தலைவர் Option 2: அவர் தற்போது இணைந்திருக்கும் சில உறுப்பினர்கள். அவர் யாரைத் தேர்ந்தெடுப்பார் என்பதை அவருடைய மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. குறும்புத்தி உடையவர்களே எல்லா விதமான குழப்பங்களுக்கும் காரணம்
posted by Habeeb Mohamed Nasrudeen (Qatar) [19 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39693

இவ்வளவு விமர்சனத்திற்கு வுல்லாகும் நகர மன்ற தலைவரும் வுரிப்பினர்களும் பரிதபதிற்குரியவர்களே copy paste

முன்னாள் உறுப்பினர் லுக்மான் காக்காவின் கருத்துப்பதிவிலிருந்து தெரியவருவது - தலைவியும், உறுப்பினர்களும் தத்தமது பொறுப்புகளுக்கும் மேலாகவே மக்களுக்காக பணியாற்றுகிறார்கள்,

உறுப்பினர்களை எப்போதும் குறை கூறும் குறுகிய மனப்பான்மையுடைய குறும்புத்தி உடையவர்களே எல்லா விதமான குழப்பங்களுக்கும் காரணம் என்பது தெளிவாக விளங்குகிறது.

இருப்பவன் ஒழுங்கா இருந்தா ...............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [19 March 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39698

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் மரியாதைக்குரிய முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜனாப் ..லுக்மான் காகா அவர்களின் விளக்கமும் & நம் மரியாதைக்குரிய நண்பர் ஜனாப் .SKS அவர்களின் விளக்கமும் தெரிந்தது ......

பொதுவாக இந்த விளக்கம் & பறை சாட்டுவது எல்லாம் சுத்தமாகவே தேவைக்கற்றது தான் .....நமது கண்ணியமிகு .நகர் மன்ற தலைவி அவர்களுக்கு '' அனுவலகமான வேலைகளுக்கு செல்ல '' வாகனம் என்பது தற்போதைய காலத்துக்கும் ....சூழ் நிலைமைக்கும் ரொம்பவும் அவசியமே ....இதற்க்கு ஏன் தேவைக்கற்ற இவ்வளவு '' விமர்சனங்கள் ..... இது தேவைதானா ??

முன்பு நமது ஊரில்சொல்வார்கள் ...மாமியார் / மருமகள் கதை ....( உட்காந்தால் ...நின்றாள் ....குற்றம் என்று .....) அது போன்று தான் உள்ளது நம் ஊர் நகர் மன்றத்தின் அனைத்து செயல் பாடுகள்......

ஊருக்கு நல்லது செய்வது பற்றி முடிவு எடுங்கள் .....அது தான் எங்களுக்கு சந்தோசமே ..& தேவையும் கூட .....

இதனை வருஷம் தன்னுடைய சொந்த வாகனத்தில் சென்று ஊருக்கான அனுவலகமான வேலைகளை '' நம் ஊருக்கு ( நல்லது ) செய்ததை நாம் நினைத்து பார்க்க வேணும் ..+ .. நம் கண்ணியமிகு நகர் மன்ற தலைவி அவர்களை நினைத்து பெருமை படனும் ...அதை விட்டு ,, விட்டு ....தேவைகற்றதை சொல்வதும் ,,எழுதுவதும் கொஞ்சமும் சரி இல்லை ..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (17/3/2015) [Views - 2633; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved