Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:34:51 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15509
#KOTW15509
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 2, 2015
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெண்கள் பகுதிக்கு மூடுவிழா...?
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4244 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் கிளை அலுவலகம் நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்துள்ளது. தற்போது பெரிய தெருவில் அவ்வலுவலகம் அமைந்துள்ளது.

இந்நகரிலுள்ள கோஷா பெண்களைக் கருத்திற்கொண்டு, இதுநாள் வரை இந்த வங்கி, சென்ட்ரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி என நகரில் இயங்கி வரும் முக்கிய வங்கிகளில் பெண்களுக்கு தனிப்பகுதி நடைமுறையில் உள்ளது.

ஆனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்கள் பகுதியில் சேவைக் குறைபாடுகள் உட்பட பல்வேறு சேவைக் குறைபாடுகள் இருந்து வருவதாக வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.

இன்று காலையில் அவ்வங்கிக்குச் சென்று வந்த பலர், பொதுப்பகுதியில் பெண்கள் நிறைந்திருப்பதைக் கண்ணுற்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.



இதுகுறித்து வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டபோது, “அலுவலர் பற்றாக்குறை காரணமாக சில நேரங்களில் பெண்கள் பகுதி சேவை பாதிக்கப்படுகிறது... தற்போது சில அலுவலர்கள் 3 நாட்கள் விடுப்பில் உள்ளமையால் கூடுதலாக சிரமம் ஏற்பட்டுள்ளது... எம்மிடம் இருக்கும் அலுவலர்களைக் கொண்டு இயன்ற வரை குறையற்ற சேவையை வழங்கவே நாங்களும் விரும்புகின்றோம்...” என்றார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்று நேற்றல்ல..இது ஒரு தொடர்கதை..
posted by mackie noohuthambi (colombo) [02 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39408

இந்தியன் ஓவர்சீஸ் பெண்கள் பகுதி இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே ஆண்கள் பகுதிக்குத்தான் பெண்கள் வந்து தங்கள் வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது.

ஊரிலேயே குறைந்த பணத்தில் 500 ரூபாய்க்கு வங்கி கணக்கு திறக்கும் வசதி இங்குதான் உள்ளது. ஊரில் இருக்கும் வங்கிகளிலேயே புழுக்கம் நிறைந்த வங்கியும் பண புழக்கம் நிறைந்த வங்கியும் இதுதான் . மணிக் கணக்கில் காத்துக் கிடந்து பணம் எடுக்க - போட, சந்தை கடை மாதிரி எப்போதும் கூட்டம் நிறைந்து வழிகிறது.

வருபவர்களுக்கு காற்று வசதி வெளிச்சம் பற்றி வங்கி மேலாளருக்கு கவலை இல்லை. அதிகாரிகள் அலுவலர்கள் மட்டும் சொகுசாக குளிரூட்டப் பட்ட இடத்தில இருக்கிறார்கள். சர்விசும் சரி இல்லை.

வங்கி மேலாளர் எப்போதும் எரிச்சலோடுதான் இருப்பார். ஒரு குறை தீர்க்க ஒரு குறை கேட்க அவரை அணுக முடியாது சில பங்களாக்களில் கேட்டு முன்னால் ஒரு போர்டு தொங்கும் "நாய்கள் ஜாக்கிரதை!". பார்த்தால் அங்கு நாய் இருக்காது. காவலாளி இருப்பார். அவரைத்தான் அப்படி சொல்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொள்வோம். கிட்டத் தட்ட அதே நிலைதான் இங்கும்.

பொது நல அமைப்புக்கள், பெரியவர்கள் அங்கு போய் பார்த்தால் தெரியும், பெண்கள் படும் கஷ்டம். சில மாதங்களுக்கு முன் கேஸ் சிலின்டர் மானியம் விஷயமாக பெண்கள் இங்கு வந்து அல்லோல கல்லோல பட்டார்கள். இந்த குறைகளை மேலிடம் கண்டு கொள்வதில்லை. முறையாக அவர்களுக்கு நாம் அறிவிக்கவும் தவறி விட்டோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்குகளை நாம் எல்லோரும் ஏக காலத்தில் ரத்து செய்து மற்ற வங்கிகளில் முதலீடு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு வரும்.

விழிப்புணர்வு கூட்டம் ஒன்று கண்டனக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்து சீதக்காதி திடல் அந்த வங்கியின் அருகிலேயே உள்ளது. அங்கே இந்த கூட்டத்தை நடத்தினால் நல்ல மாற்றம் ஏற்படும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். SDPI ஊழல் ஒழிப்புக்காக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று நமதூரில் நாளை மறுநாள் போராட்டம் செய்யவிருப்பதாக இணைய தளம் மூலம் அறிகிறேன். அவர்கள் அஜெண்டாவில் இந்த விஷயத்தையும் சேர்த்தால் நல்லது என்று அவர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

நீரோட்டம் இல்லாமல் நிலம் விளையாது
போராட்டம் இல்லாமல் நலம் விளையாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [02 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39409

இந்த இருட்டுக்கடை வங்கியில் தினமும் இதே நிலைமைதான்.

ஒவ்வொரு முறை வங்கிக்கு போகும் போதும், யாராவது ஒருவர் ஆதங்கப்படுக்கொண்டும், மேனேஜர் உடன் சண்டை போட்டுக்கொண்டும்தான் இருக்கின்றார்கள்.

பல சமயங்களில் பெண்களின் கூட்டம் அதிகமாக ஆண்கள் பகுதியில் கண்டதும், நம்ம ஊர் வங்கிதானா என்று மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டு, மேனேஜர் இடம் விவரம் கேட்டால் ஒரே பதில் தான். ஆட்கள் பற்றாக்குறை.

என்று தீருமோ இந்த குறை.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by shaalik abbas faisal D (kayalpatnam) [02 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39411

இந்த வங்கியில் சில மாதங்களாகவே இதே நிலைமை தான், கேட்கும் போதெல்லாம் ஊழியர் பற்றாக்குறை என்ற குறையே சொல்கிறார்கள், ஊழியர் பற்றாக்குறை என்றால் மேலிடத்துக்கு முறையிட்டு பற்றாக்குறை ஊழியரை பெற வேண்டியதுதானே?

ஆண்கள் பகுதியில் ஆண்கள் நின்று செயல்பட முடியா வண்ணம் பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது,எது எதற்கோ புது புது இயக்கங்களை தோற்று விப்பவரகள் அல்லது தேவை பொருட்டு இயக்கத்தின் பெயரை மாற்றிக்கொள்பவர்கள் இது விசயத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்தி, முறையான நடவடிக்கை எடுத்தால் நம் ஊரின் பாரம்பரியமான பெண்களுக்கென்ற தனி பகுதி காப்பாற்றப்படும், இல்லை என்றால் கூடிய சீக்கிரம் இந்த செய்தியின் தலைப்பில் குறிப்பிட்டுள்ள படி இந்த பெண்கள் பகுதிக்கு மூடு விழா நடத்தப்படுவது உறுதி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
posted by Ismail Sufi (Kayalpatnam) [02 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39414

அஸ்ஸலாமு அலைக்கும்.

மக்கி நூஹு தம்பி மச்சான் எழுதி இருக்கும் கருத்து மிகவும் சரியானது.

நமதூர் மக்கள் எல்லோரும் சேர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கணக்கை க்ளோஸ் செய்துவிட்டால் தானாகவே வங்கியை மூடி விடுவார்கள்.

நானும் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தேன். வங்கியின் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்காத காரணத்தினால் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பே நான் என் கணக்கை க்ளோஸ் செய்துவிட்டேன்.

எத்தனையோ வங்கிகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் துரிதமாக பணிகள் நடந்து வருகிறது. ஆனால் நமதூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்னும் 1950 ஆம் ஆண்டில் உள்ள நடைமுறைதான் இருந்து வருகிறது.

தம்பி சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், (அல்கோபார்) எழுதி இருப்பது போல இருட்டுக்கடை வங்கிதான் நமதூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

கூடிய சீக்கிரம் மூடு விழா நடத்தினால்தான் விடிவு காலம் பிறக்கும்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்னம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [02 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39415

மேனேஜரிடம் கூட ஓரளவு சந்தேகம் கேட்கலாம் ஆனால் அங்கு வேலை செய்யும் மற்றவர்களை நெருங்க முடியாது. நாய்க்கடி பேய்க்கடிதான்.

பணம் அனுப்புவதற்கான செலானை பெண்கள் பக்கம் நின்று கேட்டால் இப்படி வந்து வாங்குங்கள் அங்கு ஆளில்லை என்கிறார்கள் ஆண்கள் பக்கம் போய் தான் எடுக்க வேண்டும். என்றைக்கும் அப்படி தான்.

ஏதாவது சந்தேகம் கேட்டால் அவ்வளவு தான் பாய்ந்து விடுவார்கள்

இந்த வேலை கிடைக்க எத்தனை பேர் காலை பிடித்திருப்பார்கள் பொது மக்கள் என்ன கிள்ளுக்கீரையா? இதையெல்லாம் பொது நல அமைப்புகள் கவனிக்க வேண்டும்

நான் ஒரு நாள் மேனேஜரிடம் இதை பற்றி சொன்னேன் எங்களின் பேங்குகளில் வேலைப்பளு அதிகம் என்றார் அப்படியானால் நாம் தான் வங்கிகணக்கை மூடி விட வேண்டும் அப்படி நமதூர் மக்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மேலிடம் இதில் தலையிடும்

நமதூரில் வாடிக்கையாளர்களுக்கு மரியாதையான முறையில் கனிவாக நடந்து கொள்ளக்கூடிய பேங்க் I C I C I தான் இப்போது குறைந்த பட்ச பணம் 2000 இருக்கும் ஒரு ஸ்கீம் இருப்பதாக சொன்னார்கள்.

அடுத்து சென்ட்ரல் பேங்க் மேனேஜரிடம் எந்த சந்தேகமும் கேட்க முடியாது ஒரு நாள் A T M கார்டில் ஒரு பிரச்சினை என்று அவரிடம் விளக்கம் கேட்க சென்ற போது அவர் சொன்ன பதில் இதையெல்லாம் என்னிடம் வந்து கேட்கிறீர்கள் அங்குள்ளவர்களிடம் போய் கேளுங்கள் என்றார் இவருக்கு தான் ஒரு M L A அல்லது அமைச்சர் என்ற நினைப்போ?

நாம் பொதுவாக டாக்டர்களை மட்டுமே குறை கூறி பழகி விட்டோம் மக்கள் தைரியமாக தனது கருத்துகளை முறையிட வேண்டும்

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [03 March 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39442

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த IOB .. வங்கி ''யின் வேலை பாடு சுத்தமாகவே ...சரி இல்லை ,,எப்போ போனாலும் இந்த '' பேங்கின் '' அதிகாரிகளின் பேச்சின் தன்மையும் கூட கொஞ்சமும் சரி இல்லாமல் மரியதையற்று போய் இருக்கும் .....இவர்களின் பேச்சால் வாடிக்கையாளர்களுக்கும் கோபம் தான் வரும் .....

நாம் IOB '' பேங்கின் '' உள்ளே போனால் நமக்கே தூக்கம் வரும் அளவுக்கு ....விளக்கின் ஒளி பவரே '' இல்லாமல் தன்மையற்று இருக்கும் ......வாடிக்கையாளர்கள் நமக்கே இப்படி என்றால் ...உள்ளே வேலை செய்யும் வங்கி '' ஊழியர்களுக்கு எப்படி இருக்கும் ....சுறு ,,சுறுப்பு ,,எப்படி தான் வரும் ......

நானும் இந்த பேங்கில் தான் ...சாதா கணக்கும் & NRE '' கணக்கும் பல வருடங்களாகவே வைத்து இருந்தேன் ...இவர்களின் வேலையின் வேக குறைவால் ...இவர்களின் மரியாதையற்ற பேச்சால் என்னுடைய இரு கணக்கையும் முடித்து கொண்டேன் ....

சென்ட்ரல் பேங்கின் ஆட்கள் குறைவாக இருப்பின் ...வங்கி ஊழியர்கள் கடுமையான சுறு ,,சுறுப்புடன் வேலை பார்க்கும் தோரணையே ...தனி தான் ....CBI ...பேங்க் அதிகாரிகள் யாவர்களும் வாடிக்கையாளர்களிடம் ரொம்பவும் கண்ணியமுடன் ( மரியதைதன்மையுடன் ( பேசுவார்கள் ....வடிக்கையலரான நமக்கும் இந்த வங்கிக்கு போகவும் ...நம்முடைய வரவு செலவுகளை வைப்பதற்கும் மனம் வருகிறது ...... இந்த CBI பேங்க் ...பெண்கள் பகுதியும் பாதுகாப்பாகவே உள்ளது ....

IOB யில்....பெண்கள் பகுதி ரொம்பவும் மோசமே .....அனைத்து நம் பெண்களும் எப்பவும் அதிகாரி பகுதியில் குவிந்து தான் இருப்பார்கள் ....

நம் அருமை சகோதரர் அவர்கள் சொல்வது போல இந்த பேங்க் நம் ஊருக்கு தேவையற்றதே ......

வாடிக்கையாளர்களை மதிப்பது தான் , நம் ஜனநாயக நாட்டின் கடமை ....அது இந்த IBO யில் சுத்தமாகவே இல்லை என்று தான் சொல்லலாம் ......

SBI பேங்க் நம் ஊருக்கு கொண்டு வருவதற்கு நம் ஊர் பொது நல அமைப்பினர்கள் கொஞ்சம் முயற்ச்சி எடுத்தால் வரகூடிய வாய்ப்புக்கள் உண்டு .....ஊரின் பொதுநல அமைப்புக்கள் கவனிக்குமா ......SBI பேங்க் நம் ஊருக்கு ரொம்பவும் அவசியம் தேவை என்பது நம் யாவர்களும் அறிந்ததே ......

ஊரின் பெரியவர்களும் / பொது நல அமைப்பு துரிதமான முயற்ச்சி எடுத்தால் SBI பேங்க் வர வாய்ப்பு உண்டு ..... நம் ஊர் பெண்கள் SBI பங்கின் வேலை விசையமாக நம் பக்கத்து ஊருக்கு போய் வருவதை நான் கண்டு உள்ளேன் ..... அது தவிர்க்க படலாம் ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...IOB இது வங்கியா...?அல்லது வாந்தியா...?
posted by AnbinalA (Jaipur) [04 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39469

இது IOBவங்கி என்று நினைத்து நாம் உள்ளே சென்றால்... வாந்திதான் எடுக்கிறார்கள் மேளாலர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை...

வங்கி என்ற எந்த அடையாளமுமில்லா...சாலை கடை விரிப்பே... மளிகை கடை.,காய்கறி கடை.,கறி. கோழி கடை.,ஏன்...? மீன் கடைகளை விட மிக...மிக...மோசமான கடை என்பதை விட கண்டனத்துக்கூறியது இந்த IOB .

நாம் மாறாத வரை
இந்த வாங்கியின் சேவையும் மாறாது...
இந்தியாவும் மாறாது...

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதே மா ற் ற ம் தா ன். . . .
ஆறாம் அறிவு மனித இனம் சிந்திப்பதற்கே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved