Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:55:59 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15488
#KOTW15488
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 25, 2015
காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் பயங்கரம்! மனைவி கண் எதிரே கணவர் வெட்டிக் கொலை!! அண்ணன் கொலைக்கு தம்பி பழி தீர்த்தார்: தினத்தந்தி செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6243 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் மனைவி கண் எதிரே கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அண்ணன் கொலைக்கு தம்பி பழி தீர்த்தார்.



இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

பத்திர எழுத்தர்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூரைச் சேர்ந்தவர் ராஜன் நாடார். இவருடைய மகன் சிவபெருமாள் (வயது 43). இவருடைய மனைவி கலைச்செல்வி (40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சிவபெருமாள், கலைச்செல்வி ஆகிய 2 பேரும் காயல்பட்டினம் புதிய பஸ் நிலைய வளாக கட்டிடத்தில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தனர். இவர்கள் அனைவரும் காயல்பட்டினம் வீரசடச்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை 10.30 மணியளவில் வழக்கம்போல் கணவன், மனைவி 2 பேரும் காயல்பட்டினம் பஸ் நிலைய வளாக கட்டிடத்தில் உள்ள தங்களது கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

வெட்டிக் கொலை

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 5 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் சிவபெருமாளின் கடையின் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தினர். அவர்களில் 3 பேர் மட்டும் அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களுடன் சிவபெருமாளின் கடைக்குள் புகுந்தனர். அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிவபெருமாள் வெளியே தப்பி ஓடினார். அவர் பஸ் நிலைய வளாக கட்டிடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் கமால் என்பவரது கடைக்குள் ஓடிச் சென்று தஞ்சம் புகுந்தார்.

ஆனாலும் அவரை விரட்டிச் சென்ற மர்ம நபர்கள் 3 பேரும் சிவபெருமாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைப் பார்த்த கலைச்செல்வி அலறி துடித்தார்.

போலீசார் விசாரணை

சிவபெருமாளின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. மேலும் அவரது வலது கை துண்டாகி தொங்கியது. பின்னர் மர்மநபர்கள் 3 பேரும் அங்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றனர். உடனே அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சிவபெருமாளை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த சிவபெருமாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சப்– இன்ஸ்பெக்டர்கள் சியாம் சுந்தர், கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:–

டாஸ்மாக் பார் உரிமையாளர் கொலை

ஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுத நாடார். இவருடைய மகன் வி.வி.அய்யப்பன் (வயது 37). அ.தி.மு.க. பிரமுகரான இவர் தெற்கு ஆத்தூரில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவி அனுராதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

அய்யப்பன், மனைவியின் சொந்த ஊரான ஆத்தூர் அருகே உள்ள கீரனூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அனுராதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 22–ந்தேதி அனுராதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கிடையே 23–ந்தேதி அய்யப்பன் 2–வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

2 பேர் கைது

அனுராதாவின் நினைவு தினத்தில் சோகத்தில் இருந்த உறவினர்கள், இதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அய்யப்பனிடம் சென்று தட்டி கேட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அனுராதாவின் உறவினர்கள் அய்யப்பனை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இதுதொடர்பாக அனுராதாவின் உறவினர்களான அப்பகுதியைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் விஷ்ணுகுமார் (28), மனோகர் லால் மகன் முத்துகிருஷ்ணன் (23) ஆகிய 2 பேரை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.

தம்பி பழி தீர்த்தார்

அனுராதாவின் உறவினர்கள் அய்யப்பனை கொலை செய்தபோது, சிவபெருமாள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவபெருமாளை பழி தீர்க்க அய்யப்பனின் தம்பி ராமசுப்பிரமணியன் திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று காலையில் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த காயல்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து சிவபெருமாளை வெட்டிக் கொலை செய்தனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவான ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தி வெளியீடு:
தினத்தந்தி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..
posted by omer anas (doha,qatar) [25 February 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 39377

நமது காயலுக்கு வந்த அவமான ச(த)ரித்திரம் இது! வேறு ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [26 February 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39379

அஸ்ஸலாமு அலைக்கும்

சரித்திரம்'' வாய்ந்த நம் ஊரில் இப்படி ஒரு அசம்பாவிதமா நினைத்து பார்க்கவே நம் மனம் கூசுகிறது .... எம் அருமை நண்பர் குறிப்பிட்டது போல இது ஒரு அவமானமே ...இந்த போக்கில் நம் ஊர் போனால் கண்டிப்பாகவே நமது ஊருக்கு ''போலீஸ ஸ்டேசன் அவசியமே ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved