Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:33:07 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15081
#KOTW15081
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 23, 2014
காயல்பட்டினம் கண்ணகுமது மகுதூமுகம்மது புலவரின் இலக்கியப் பங்களிப்பு குறித்த முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடு! பொது வாய்மொழித் தேர்வு நிகழ்ச்சி சென்னை புதுக்கல்லூரியில் நாளை (டிசம்பர் 24) காலை நடைபெறுகிறது!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2909 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இவரின் படைப்புகளின் ஒன்றான சீறா வசன காவியம், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறையின் பகுதி நேர ஆய்வாளராக இருக்கும் சு.முரளி எம்.ஏ., பி.எட். என்பவரால் சமீபத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டது.



காயல்பட்டினம் கண்ணகுமது மகுதூமுகம்மது புலவரின் இலக்கியப் பங்களிப்பு - ஓர் ஆய்வு என்ற தலைப்பில் - சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் (Phd) பட்டத்திற்கான ஆய்வேட்டினையும் - ஆய்வாளர் சு.முரளி சமர்ப்பித்துள்ளார்.



புதுக்கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறையின் ஆய்வு நெறியாளர் மற்றும் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.முகம்மது அலியின் நெறியாள்கையின் கீழ் உருவான இந்த ஆய்வேடு சம்பந்தமான பொது வாய்மொழித் தேர்வு டிசம்பர் 24 (புதன் கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கல்லூரியில் அமைந்துள்ள என்.எம். ஜக்கரிய்யா அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த பொது வாய்மொழித் தேர்விற்கு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், அறிஞர் பொது மக்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்க்கப்படுகிறார்கள்.

தகவல்:
பி.எம்.சதக்கத்துல்லாஹ்,
தைக்காத் தெரு.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கன்னமகுமது மகுதூமுகம்மதுவா
posted by mackie noohuthmbi (kayalpaattinam) [23 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38543

மெய்சிலிர்க்கிறது. யார் இவர், இவரைப் பற்றி நமதூர் கவிஞர்கள் இலக்கிய வல்லுனர்கள் யாரும் இதுவரை பேசியதாக அவருக்கு விழா எடுத்ததாக என் அறிவுக்கு எட்டியவரை தெரிய வில்லையே. இந்த ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றவர் கூட ஒரு காயல்பட்டினம் நண்பராக தெரியவில்லையே..

சதகத்துல்லா அப்பா அவர்களை பற்றி சொல்லும்போது, "சதகதுல்லாஹ் அப்பாவை சதக்காவாக ஞாலத்துக்கு ஈந்த ஞான பூமி இது" என்று காயல்பட்டினத்தை கவிக்கோ புகழ்ந்து கூறுவார்.

நண்பர் சதகதுல்லாஹ் அவர்களுக்கு நன்றி. 24ம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் நமதூர் இலக்கியவாதிகள் சென்னையில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து இந்த பெருமகனாரின் வாழ்க்கை சரித்திரத்தையும், முடிந்தால் அவர் எழுதிய சீராவின் நகல் ஒன்றையும் பெற்று வந்து நமதூரில் பிரபலப் படுத்தவேண்டும்.

நமது பெருமை நமக்கே தெரியவில்லை... நமது சரித்திரத்தை நாம் தெரிந்து கொள்வது நமக்கு பெருமை அல்லவா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. திறமையானவர்கள் போற்றப்படவேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [23 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38546

கயல்பட்டணத்தின் பாரம்பரிய சரித்திரத்தை எழுதியவர்களின் கவனத்திலிருந்து இந்த கருவூலம் கைநழுவியது எப்படி? அதுவும் நமதூருக்கு சம்பந்தமில்லாத ஒரு சகோதரருக்கு எப்படி கிடைத்தது. இது நம்மவர்கள் நம்மூரைப் பற்றிய ஆராய்ச்சியில் முழுமை அடையவில்லை என்பதை காட்டுகிறது அல்லவா?

இன்னும் இந்த புண்ணிய பூமியின் பாரம்பரிய கலாச்சார புதையல் பொக்கிஷத்தை தோண்ட தோண்ட வெளிவரும் போல் தெரிகிறது. அல்லது எங்கேயோ யாரெல்லாமோ இப்புதையலை பதுக்கி வைத்திருக்கிறார்களோ என்னவோ?..

இத்த எண்ணம் ஏற்பட காரணம் பல துறைகளிலும் மாணிக்கங்களாய் திகழ்ந்த நம் மேன்மைக்குறியவர்களை அன்றைய முன்னோர்கள் சரியான நேரத்தில், சரியான வழியில் முன்னிலைப்படுத்தவில்லையோ? அந்த மாணிக்கங்களை பட்டை தீட்டி பிரசாசிக்க செய்ய தவறிவிட்டார்களோ அன்று வாழ்ந்த பெரியோர்கள் என்ற சந்தேகம் எழுகிறது!

இந்த சந்தேகம் உண்மையாககக் கூட இருக்கலாம் ஏனென்றால் வரகவி காசீம்புலவர் கால்வழி வந்த கவிஞர் மஹ்மூது ஹுசைன் அவர்களின் கவிக்கனியை நம்மூரில் சுவைக்காதவர்களை கை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு கவிப்புலமையில் பிரகாசித்த அக்கவிஞரை ஒருசில அமைப்புகள் தவிர, மற்றபடி அவருக்காக இந்த ஊரில் அவரை என்றும் நிலையாக நினைவு கூறும் வரலாற்று பேழை பொக்கிஷம்கள் பிற்காலத்திலுள்ளவர்களுக்கு சான்றாக கிடைக்கக்கூடிய பணிகள் செய்யப்பட்டனவா என்றால் இல்லை,

இன்னும் ஒருபடி மேலே சொல்லவேண்டுமென்றால் அக்கவிஞரின் திறமையையும், புகழையும் அவர் காலத்திலேயே அவரும் மற்றும் அனைவர்களும் திருப்தி அடையும் அளவிற்குறிய மிகப்பெரும் மரியாதையை அக்கவிமகனுக்கு செய்யவில்லையே என்பதுதான் எதார்த்த உண்மையும், என்மனதினுள் எழுந்துகொண்டே இருந்த ஆதங்கமும் ஆகும்!

தற்போது நடந்துள்ள நிகழ்வுக்கு கருத்துபதிவு செய்யும் இவ்வேளையில் என் ஆதங்கத்தை அனைவரும் அறிய ஒர் வாய்ப்பாக அமைதுள்ளதுள்ளத்தை நினைத்து ஆறுதல் அடைகிறேன் அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved