Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:49:50 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14987
#KOTW14987
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 9, 2014
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மீள் குடியேற்ற உதவிகள் செய்திட மழை-வெள்ள நிவாரணக் குழு தீர்மானம்! பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் முதற்கட்ட உதவி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2467 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் அண்மையில் தொடராகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்திடுவதற்காக ‘காயல்பட்டினம் மழை - வெள்ள நிவாரணக் குழு’ எனும் பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் குடியிருப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலையான நிவாரண உதவிகளைச் செய்திடுவதென இவ்வமைப்பின் மூன்றாவது கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டி ஸிராஜ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-

அண்மையில் துவங்கப்பட்ட காயல்பட்டணம் மழை, வெள்ள நிவாரண குழுவின் மூன்றாவது அமர்வு சதுக்கைதெருவிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 03-12-2014 புதன் கிழமை காலை 11:00 மணியளவில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஹாஜி துளிர் எம்.எல்.சேக்னா லெப்பை அவர்களின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களில் மூத்தவரும், காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் பொருளாளருமான வாவு நாசர் அவர்கள் கூட்டத்தலைவராக முன்மொழியப்பட்டு அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டி சிராஜ் நிஜார் வந்திருந்த அனைவர்களையும் வரவேற்றதோடு, இதுவரையும் நிவாரண குழு செய்துவந்துள்ள செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். அவரது உரை பின்வருமாறு;

காயல்பட்டணம் மழை, வெள்ள நிவாரண குழுவின் வேண்டுகோளை ஏற்று வருகைதந்திருக்கும் உங்கள் அனைவருக்கும், எனது சார்பிலும், நமது நிவாரண குழு சார்பிலும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அண்மைகாலத்தில் துவங்கப்பட்ட அமைப்பாக இருந்தாலும், காயல்மாநகர மக்களுக்கு ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளை நீக்க மிக சிறப்பாக நிவாரண பணியாற்றிருக்கிறோம். அல்ஹம்துலில்லிஹ்… இறைவன் நாடினால் இனி வரும் காலங்களில் எண்ணற்ற பணிகள் செய்ய காத்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்

மேலும் சென்ற மாதம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் எளியோர்களுக்கு, ஒரு வாரகாலமாக உணவளிக்கும் அறப்பணியை நமதூர் பொதுநல அமைப்புகள், வெளிநாடுவாழ் காயலர்களால் நடத்தப்படும் காயல் நலமன்றங்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் ஒத்துழைப்பு, உதவியுடன் செய்துமுடித்தோம். அல்ஹம்துலில்லிஹ்…

நிவாரண குழுவின் உதவியுடன், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ரவிக்குமார் மற்றும் சுகாதார துணை இயக்குநர் S.உமா அவர்களின் உத்தரவின் பேரில் 27-11-2014 வியாழக்கிழமை சென்ட்ரல் மேனிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் பணியாற்றியதை பாராட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 28-11-2014 தேதியில் நன்றி தெரிவித்த கடிதம் கிடைக்கப்பெற்றோம்.

தற்போது நமதூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், குடிசையில் வாழும் மக்களின் வீட்டின் நிலையை நமதுகுழு ஆய்வு செய்திருக்கிறது. ஆய்வின் விவரங்களை A) முழுவதும் பாதிக்கப்பட்ட குடிசை, B) பாதிக்கப்பட்ட குடிசைக்கு தேவையான தளவாட சாமான்கள் அளிப்பது, C) பராமரிப்பு வேலைகள் செய்து கொடுப்பது போன்ற மூன்று வகைகளில் பட்டியல் படுத்திருக்கிறது.

வரலாறு காணாத மழையால் உருவாகியுள்ள இடர்பாடுகளை நீக்க, நமதூர் பொதுநல அமைப்புகள், வெளிநாடுவாழ் காயலர்களால் நடத்தப்படும் காயல் நலமன்றங்கள் மற்றும் சமுதாய இயக்கங்கள் அவர்களால் இயன்ற நிதியினை இந்த நிவாரண குழுவின் பொருளாளர் அவர்களிடம் கிடைக்க செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனை ஏற்ற சில அமைப்புகள் தங்களால் இயன்ற நிதியை தருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். பல அமைப்புகளின் பதில்களை எதிர்பாத்திருகிறோம். இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் நல்பதிகள் வருமென கருதுகிறோம். இவ்வாறாக அவரதுரை அமைதிருந்தது.

பின்னர் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் கருத்து பரிமாற்றத்தின் அடிப்படையில் பின்வறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மான எண் 1, 1000 பெருமதியுள்ள அத்தியாவசிய பொருட்கள் வழங்கள்

பாதிப்புக்கு உள்ளான அனைவர்களுக்கும் ரூபாய் 1000 பெருமதியான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மான எண் 2, காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் 30 குடும்பங்கள் ஏற்பு

சதுக்கை தெருவில் அமைந்திருக்கும் காயலட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஆகும் முழு செலவை ஒப்புக்கொண்டதற்கு நிவாரண் குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தீர்மான எண் 3, குடிசையாகவோ அல்லது கல் கட்டிடமாகவோ கட்டிதர முடிவு செய்யப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட குடிசைகளை அதன் குடிசைவடிவிலேயே புதுப்பிப்பதென்றால் சுமார் ரூபாய் 5,00,000/- வரை வரலாம் என்று கணக்கெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் மீண்டும் மழை பெய்தால் குடிசைகள் பழுதடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததின் அடிபடையில், குடிசையை புதிப்பிப்பதைவிட கல் கட்டிடமாக கட்ட ஆரம்ப உதவிகள் செய்வதென்றால் சுமார் ரூபாய் 15,00,000/- செலவாகலாம் என கணக்குகெடுக்கப்பட்டது. இதற்காக நமதூர் அமைப்புகளின் ஒத்துழைப்புக்கு ஏற்பவும், நிவரணகுழுவின் விதிமுறைக்கு உட்பட்டும் முடிவு செய்யப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டது. இக்கூட்டதில் மழை வெள்ள நிவாரண குழுவினர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துக்கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட 2ஆவது தீர்மானத்தின் படி, சதுக்கை தெருவில் அமைந்திருக்கும் காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில் 07-12-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில், அறக்கட்டளையின் தலைவர் பாளையம் முஹம்மது ஹசன் அவர்கள் தொடங்கி வைத்தார்; அதனை தொடர்ந்து அறக்கட்டளையின் பொருளாளர் வாவு நாசர், அறக்கட்டளையின் துணைத்தலைவர் டூட்டி. சுஹரவத்தி, சமூக ஆர்வலர்களான பேங்காங் காயல் நலமன்றத்தலைவர் செய்யது முஹம்மது, ஓமன் காயல் நலமன்ற பிரதிநிதி இஸ்மாயில் சூபி, துபாய் காயல் நலமன்ற பிரதிநிதி பாவா நவாஸ், மற்றும் குவைத் காயல் நலமன்ற பிரதிநிதி சலாஹுத்தீன், ஆகியோர் 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும், பெட் சீட்டையும் வழங்கினர்.









இந்நிகழ்வை மழை, வெள்ள நிவாரண குழுவின் நிர்வாகிகளான, ஜனாப். ஜுவல் ஜங்சன் அப்துர்ரஹ்மான், ஜனாப். சம்சுத்தீன், ஜனாப். செய்கு சுலைமான், ஜனாப். கண்டி சிராஜ் நிஜார், மற்றும் கல்/ப். செய்யது முஹம்மது ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [09 December 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38389

வல்ல ரஹ்மான் உங்களின் நல்ல செயல்களை அங்கீகரிப்பானாக.

தொடர்மழையால் மக்கள் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்து அனுபவித்தேன்.

கூடவே நம் மக்கள் குழு குழுவாக நிவாரண பணிகளும், உணவு வழங்கியும் மக்களுக்கு உதவியதை கண்டு மகிழ்ந்தேன்.

வல்ல அல்லாஹ் நோய் இல்லாத, நிம்மதியான வாழ்வை அனைவர்களுக்கும் தருவானாக.

ஒவ்வெரு அமைப்பும் தனித்தனியாக உதவிகளை செய்வதை தவிர்த்து, ஒருங்கிணைந்த இந்த அமைப்புடன் கைகோர்த்து களம் இறங்கினால் நன்றாக இருக்குமே.

மக்கள் இது மாதிரி பணிகளுக்கு வாரி வழங்க ரெடி ஆக இருக்கின்றார்கள், ஆனால் ஐந்து ஆறு அமைப்புகள் ஒரே மாதிரி, ஒரே நேரத்தில், தனித்தனியாக ஒரே நபரிடம் உதவிக்கு செல்லுவது, உதவி செய்பவருக்கு தர்ம சங்கடத்தை கொடுப்பது தாங்கள் அறியாதது அல்ல.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:.அரசு மூலமும் இது போல் உதவி கிடைக்க ஆவணம் செய்யவேண்டும்..
posted by A.R.Refaye (Abudhabi) [09 December 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38390

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்; மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

குறள் விளக்கம்: பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியை பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?

பிரிதி பலன் பார்க்காமல் எல்லா சமூகத்தவரும் பயனடைய இந்த பெருந்தகைகள் செய்த உதவிகள் நன்றி பாராட்டப்படவேண்டியவை.

அரசு மூலமும் இது போல் உதவி கிடைக்க ஆவணம் செய்யவேண்டும்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நிரந்தர நன்மை ..
posted by ummuhani kareem (kayalpatnam) [09 December 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38391

எல்லாம் வல்ல இறைவனின் ரஹ்மத்தும் கிருபையும் உங்கள் அனைவரின் மீதும் நிலவட்டுமாக ஆமீன்

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved