Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:39:41 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14983
#KOTW14983
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 8, 2014
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது மதிமுக!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2835 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பான முடிவு இன்று வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வைகோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் விலகல் அறிவிப்பை நிலைத்தகவலை பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியில் கடந்த சில மாதங்களாகவே உரசல்கள் நிலவி வருகின்றன. இலங்கை தமிழர் விவகாரத்தில் பிரதமர் மோடியை வைகோ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, எச்.ராஜா போன்றோர் மதிமுகவுக்கும், வைகோவுக்கும் எதிராக வெளியிட்ட கருத்துகள் மதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் விமர்சிக்க வைத்தது.

பாஜக தலைவர்களின் பேச்சை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும் என்று வைகோ கூறினார். ஆனால் அதற்கு எந்த விதமான பதிலையும் பாஜக தேசிய தலைமை வெளியிடவில்லை.

பாஜக மாநில தலைவர் தமிழிசையும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சில சமரச முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும், இலங்கை அதிபர் ராஜபக்ச திருப்பதி வரவுள்ளது போன்ற விஷயங்கள் வைகோவை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.

இன்று கூடும் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தொடருவதா? அல்லது வெளியேறுவதா? என்ற முடிவை வைகோ அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக உயர் நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fareed (Dubai) [08 December 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38383

Good decision from MDMK .Tamil speaking peoples looking others also take the same decision.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...தேறான் தெளிவும்.....
posted by mackie noohuthmbi (kayalpaattinam) [08 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38384

தேறான் தெளிவும் தெளிவுற்றான் கண் ஐயுறலும் தீரா இடும்பை தரும் என்ற வள்ளுவன் குறள் இந்த கலிங்கத்து புலிக்கு தெரியாமல் போனது ஏன்? புலி பசித்தாலும் புல்லை திங்காது என்ற பழ மொழி இந்த தமிழகத்து தளபதிக்கு தெரியாமல் போனது ஏன்? சிங்கம் சிங்கிளாகத்தான் போகும் என்ற சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய டயலாக் கூடவா இந்த புரட்சி புயலுக்கு புரியாமல் போனது?

கொள்கைக்காக கூட்டணி என்ற லட்சிய நிலை மாறி, சீட்டுக்காக கூட்டு - நோட்டுக்காக ஓட்டு என்று லட்சங்களுக்காக கூட்டணி என்ற நிலை தமிழகத்தில் அரங்கேறியபோது இதை எல்லாம் நினைத்து பார்க்க வைகோவுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. கைபர் கணவாய் வழியே இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியக் கூட்டங்கள் திராவிடக் கட்சிகளுடன் எப்படி கொஞ்சி குலாவ முடியும். எண்ணையும் தண்ணியுமாக எத்தனை நாட்கள் இருக்க முடியும். இதெல்லாம் சாமானிய மக்கள் எதிர்பார்த்தே இருந்தார்கள். அதனால்தான் கடந்த தேர்தலில் வைக்கோவையே மக்கள் புறக்கணித்தார்கள். தங்க ஊசி என்றால் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?

திமுகவில் இருந்தபோது மூன்றாம் அத்தியாயமே வருக என்று சுவர்களில் இவர் புகழ் பாடி நோடிஸ்கள் வெளியானபோது அதை பொறுக்க முடியாத கலைஞர், அந்த தளபதிக்கு விடை கொடுத்து அனுப்பினார். மீண்டும் இணைந்தபோதும் உறவுகள் ஒட்டாமலே இருந்தது. மகன் என்றால் உதடுகள் ஒட்டும் அண்ணன் என்றால் உதடுகள் ஒட்டாது. போதாத காலம் அம்மாவிடம் அடைக்கலம் புகுந்த புரட்சி புயலுக்கு அங்கும் ஏமாற்றமே காத்திருந்தது. இது புயல் அல்ல புழுதி என்று அவர் ஊதி தள்ளப் பட்டார். வாராத வரமாக வந்தது மக்களவை தேர்தல். தமிழகத்தின் LADY ஒரு பக்கம் -ஸ்டாலினின் DADDY மறுபக்கம் இவர்களுக்கு ஒரு சவாலாக குஜராத்தின் MODI அமைவார் என்று எதிர்பார்த்து அந்த கூடாரத்தில் சங்கமமாகிய வைக்கோவுக்கு அங்கும் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.. அவருக்கொரு ராசி. அவர் எங்கிருந்து வெளியேறினாலும் அவருக்கு கை கொடுக்க ஒரு புது கட்சி எப்போதுமே தயாராக இருக்கும். இப்போது அது தமிழ் மாநில காங்கிரஸ் என்ற வடிவில் உதயமாகி உள்ளது. அவர் அங்கே சங்கமமாகலாம் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால் சுமார் 20 ஆண்டுகளாக இவரையே நம்பி இருக்கும் தொண்டர்கள் இனி என்ன முடிவெடுப்பார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வைகறையே வருக என்று ஆரத்தழுவி அணைத்தவர்கள் - இவர் ஒரு மூன்றாம் பிறை இவருக்குள் ஒரு முழு நிலவு மறைந்திருக்கிறது என்று நினைத்தவர்கள் - இப்படி தேய் பிறையாகி விட்டதே என்று கண் கலங்கி நிற்கிறார்கள். இப்போதும் சரியான வியூகம் வகுத்து அவர் காய் நகர்த்த தவறினால் 45 வயது விஸ்வநாதன் ஆனந்தனை 25 வயது கார்ல்சன் வெற்றி கொண்ட கதைதான் அரசியல் சதுரங்க விளையாட்டில் இனி நடக்கும்.

நாடகமே உலகம் நாளை நடப்பதை யார் அறிவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [08 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38385

வைகோ - பாஜக வை விட்டு விலகியது வரவேற்க வேண்டியவை. அதிமுகவிற்கு தஞ்சம் தேடவே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வடை போச்சே...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [09 December 2014]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38386

நம்பிட்டோம்...

ஒரு அரசியலில் ஊறிய தலைவருக்கு இந்த கேள்விகளெல்லாம் கூட்டனிக்கு முன்னரே தொன்றாததும், கூட்டனியின் போது இதுபற்றி கூட்டறிக்கை விடத் தோன்றாததும் துரதிஷ்டவசமானது என நம்ப இயலவில்லை...!

தமிழகத்தில் அடுத்த நடைபயணம் எப்போது...!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒரு நடைபயணம் போட்டால் அனைத்தையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்ற தவறான எண்ணம் இனி எடுபடாது..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [09 December 2014]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38387

ஈழத்தின் முழு முதல் எதிரி பிஜேபி என நன்கு தெரிந்தும் பதவிகள் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பல தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஈழ விடுதலை விரும்பிகளின் வேண்டுகோளையும் மீறி அவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு, இன்று செல்லாக்காசாக்கப்பட்டு அவர்கள் தூக்கி எறியும் நிலை வந்துவிட்ட பிறகு கூட்டணியை விட்டு வெளியேறி ‘ தமிழினத்துக்காக வெளியேறினோம்’ என நீங்கள் பூச்சுற்றுவதை நம்புவதற்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை திரு.வையாபுரி கோபால்சாமி அவர்களே....

நீங்கள் கூறுவது போலவே ஒரு வேளை தமிழர் நலனுக்காக கூட்டணி வைத்திருந்தாலும் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்‌ஷேவுக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டபோதே கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தால் ‘தமிழர் நலனில் அக்கறை ‘ என்ற நாடகம் எடுபட்டு இருக்கும். என்ன செய்வது அப்போதெல்லாம் எப்படியாவது ஒரு ராஜ்யசபா சீட்டும் அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று காத்திருந்தன் விளைவு இன்று உங்கள் நாடகம் தமிழ் கூறும் நல்லுலகால் எள்ளி நகையாடப்படுகிறது. கண் கெட்ட பின்னே வரும் சூரிய உதயத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved