Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:23:19 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14838
#KOTW14838
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 3, 2014
கடற்கரை துப்புரவுப் பணியில் ‘கலங்கரை விளக்கம்’ தன்னார்வ மகளிர்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5790 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரை பராமரிப்பு தொடர்பாக நகர்மன்றக் கூட்டங்கள் பலவற்றில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்ட நிலையிலும், அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் அவை ஏட்டளவிலேயே உள்ளன.

நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எப்போதாவது ஒருமுறைதான் கடற்கரைக்கு வந்து செல்லும் நிலையுள்ளதால், பராமரிப்பு விதிமீறல்கள் கண்காணிக்கப்படாத நிலையில், பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையும் இணைந்து நாளுக்கு நாள் கடற்கரையில் சேரும் குப்பைகளின் அளவு அதிகரித்து வருகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு, இந்த ஊரின் மக்களாக தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற கடமையுணர்வுடன் களமிறங்கியுள்ளனர் காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் இயங்கி வரும் ‘கலங்கரை விளக்கம்’ மகளிர் தன்னார்வக் குழுவினர்.

காயல்பட்டினம் கடற்கரையை, இம்மாதம் 01ஆம் நாள் சனிக்கிழமையன்று 14.00 மணி முதல், 16.00 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றி, முழுமையாக துப்புரவு செய்தனர்.













நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி தன்னார்வ மகளிருக்கு, துப்புரவுப் பணிக்குத் தேவையான பொருட்களை வழங்கி, பணியின்போது நேரில் சென்று வழிகாட்டினார்.

வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட குடும்பப் பெண்கள், சிறுவர் - சிறுமியர் என 30க்கும் மேற்பட்டோர் தன்னார்வத்துடன் பணியாற்றியமைக்காக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், கடற்கரைக்கு நேரில் சென்று அவர்களை வாழ்த்திப் பாராட்டினார்.



இதுகுறித்து, தன்னார்வ மகளிர் கூறியதாவது:-

காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியைச் சேர்ந்த நாங்கள், ‘கலங்கரை விளக்கம்’ என்ற பெயரில் இயக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் வசிக்கும் ஊருக்கு எங்களால் இயன்ற எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலே இவ்வமைப்பின் துவக்கத்திற்குக் காரணம்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக வஹீதா அம்மா இருந்த காலத்தில், கடற்கரையில் இதுபோன்று சேர்ந்த அளவுக்கதிகமான குப்பைகளை நாங்கள் தன்னார்வத்துடன் களப்பணியாற்றி அகற்றினோம். அதைப் போல தற்போதும் நாங்கள் களப்பணியாற்றுகிறோம். இப்பணியை எங்களால் இயன்ற அளவுக்கு தொடர்ந்து செய்வோம்.

கடற்கரையில் சேரும் குப்பைகள் பெரும்பாலும் தேனீர் அருந்தும் கோப்பைகள், திண்பண்டங்களுக்கான தட்டுகள், ஐஸ் க்ரீம் உறைகள், விறகடுப்பு வைத்து திண்பண்டங்கள் விற்பனை செய்வோர் விட்டுச் செல்லும் அடுப்புக் கரி ஆகியனவாகவே உள்ளன. இவற்றை விற்பனை செய்ய வரும் வணிகர்களுக்கு நகராட்சி நிர்வாகம் முறையான கட்டுப்பாடுகளை விதித்து, அதன்படி தொடர்ந்து கண்காணித்து வந்தாலே இக்குப்பைகள் சேராமல் கடற்கரை சுத்தமாக இருக்கும். அதை, ஆணையர் தலைமையிலான நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

“துள்ளி விளையாட வேண்டிய வயதில் நீங்களும் ஏன் இந்த வேலையைச் செய்கிறீர்கள்?” என்று அங்கிருந்த சிறுவர்களிடம் வினவியபோது, “எடம் துப்புரவா இருந்தாத்தானே நாங்க நல்ல ஜாலியா வௌயாட முடியும்? அதுக்குத்தான் செஞ்சோம்...” என்றனர் அவர்கள்.

காயல்பட்டினம் கடற்கரை பராமரிப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Changes Begins with the Self...
posted by Mohamed Shaikna (Chennai) [03 November 2014]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 37984

அஸ்ஸலாமு அலைக்கும்..

பாராட்ட தக்க நல்லதொரு முயற்சி... இதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.. "சுத்தம் ஈமானில் பாதி" என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்...

நமது கடற்கரை அழகாக தூய்மையாக இருக்க அதை பயன்படுத்தும் நாமே முயற்சிகள் செய்திட வேண்டும். கடற்கரையில் அங்கங்கே குப்பை போடும் தொட்டி வைத்தால் கடற்கரை மாசு படுவதை விட்டு ஒரு வகையில் தடுக்க இயலும்...

தான் உண்ணும் உணவின் கழிவை தானே அப்புறப்படுத்த வேண்டும்...

இன்ஷா அல்லாஹ் காயலை தூய்மையானதாக பராமரிப்போம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. 'தான்சுத்தமாக இருந்தால் தானிருக்குமிடம் சுத்தமாக இருக்கும்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [03 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 37985

அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு.

முன்னார்வர்த்தோடு முனைந்திருக்கும் இந்தத்தன்னார்வக்குழுவை உளமாரப்பாராட்டுவோம் உங்களைப்போல் கலங்கரைவிளக்கங்கள் இருப்பதால்தான் இயற்கையும் மாசும்தூசும் இந்த உலகையும், நம் ஊரைப்பெரிதளவும் தாக்காமலிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

வரலாற்றில் காயல்பட்டணம் வழிகாட்டும் நல்லவிழியாகவே இருந்திருக்கிறது இன்னும் ஊரே ஒருகலங்க்கரைவிளக்கமாக வாழ்கிறது, அந்தவகையில் இன்னுமோர் எடுத்துக்காட்டு, இந்தத்தன்னார்வக்குழுவான மாஷா அல்லாஹ் "கலங்கரைவிளக்கக்குடும்பம்' உங்களின் இந்த ஒற்றுமையுணர்வோடு ஆற்றும் சேவைகளுக்கு இன்ஷா அல்லாஹ் இருலோகத்திலும் நன்மைகளைத்தந்தருள்வானாக ஆமீன், நேர்வழிகாட்ட இறைவன் போதுமானவன்.

உங்களின் இந்த அற்புதமான சேவை மற்றமக்களையும் ஊக்குவிக்கவேண்டும்.

முன்னாதாரமாகவிளங்கும் இந்தக்கலங்கரைவிலக்கம்போல் நமதூரில் அந்தந்த வட்டாரங்களிலுள்ள அனைத்துத்தரப்பினரும் இணைந்துசெயல்பட்டால் தூய்மையுடனும் கொடியநோய்களிலிருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்.

வல்ல இறைவன் நல்லெண்ணங்களை நம் உள்ளங்களில் விதைப்பானாக ஆமீன்.

''சுத்தம் சுகம்தரும்"

"சுத்தம் சோறுபோடும்"

'தான்சுத்தமாக இருந்தால் தன்சுற்றமும் சுத்தமாக இருக்கும்.'

"சுத்தம் ஈமானிலும் விழிப்புணர்விலும் ஒரு பகுதி "

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBA (RIYADH) [03 November 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37986

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்....இந்த பெண்மணிகள் / சிறுவர்களின் அற்புத பணியை நினைத்து நம் ஊர் மக்கள் அனைவர்களும் பெருமை படவும் / இந்த பொது பணியை முன்னின்று செய்த ''' கலங்கரை விளக்கம் '''' தன்னார்வ மகளிர்.....அமைப்பினர்கள் யாவர்களையும் '' வாழ்த்துவதோடு ...இவர்களின் நல வாழ்வுக்காகவும் '' ஹக்கில் நாம் மனதார துவாவும் '' செய்ய வேணும் .....

இந்த ... '' ‘கலங்கரை விளக்கம்’ தன்னார்வ மகளிர்'' அமைப்பினர்களின் தொன்று மேலும் சிறந்தோங்க வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்........

இந்த தள்ளாத வயதிலேயும் நம் ஊருக்கு இல்லை ...இல்லை அவர்கள் வாழும் ஊருக்கு நல்லது செய்ய நினைப்பதை நினைத்து பெருமையாகவே உள்ளது ....

இப்படி ஒரு பொது நல அமைப்பு நமது ஊரில் இருப்பது நாம் இப்போது தான் அறிகிறோம் ...

நம் ஊர் கடற்கரைக்கு வரும் நம் ஊர் மக்களே '' துப்பரவை '' ( சுத்தத்தை ) பேணுவது இல்லை ......அதான் வருத்தமே ......கஞ்சி ...வடை மற்றும் ஒரு சில தின் பன்றகளை விற்பவர்களும் கூட அலச்சியமகவே இருக்கிறார்களே ...அதுவும் நமக்கு மன கஷ்டமாகவே உள்ளது ......

இந்த அசுற்றமற்ற ....செயலுக்கு எப்படித்தான் முற்று புள்ளி வைப்பது ...

தாங்கள் ( கூறியது ) பதிவு செய்தது போன்று நம் ஊர் நகர் மன்றம் ஏன் தான் ?? நம் கடற்கரை விசயத்தில் இப்படி '' பொடு'' போக்காக நடந்து கொள்கிறதோ .....நகர் மன்ற மரியாதைக்குரிய தலைவி அவர்கள் வந்து பாராட்டுவது பெரியது அல்ல ....அவர்கள் இந்த விசயத்தில் கவனம் கொள்வது தான் சிறப்பு ....

நாம் பொருத்து இருந்து நம் ''நகர் மன்றதின் ,, நல்ல செயல்களை பார்ப்போம் ....காலங்களும் வேகமாகவே ஒடி விட்டன ...இல்லை ஓடுகின்றன .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:..பிஞ்சு கைகளுக்கு காயம் எற்பட்டால் நாமல்லவா பொறுப்பு..
posted by A.R.Refaye (Abudhabi) [03 November 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37987

‘கலங்கரை விளக்கம்’ மகளிர் தன்னார்வக் குழுவினர் கடற்கரை துப்புரவுப் பணியில் தன்னார்வத்துடன் பணியாற்றியமைக்காக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களுடன் நானும் எனது நன்றியையும் ,வாழ்த்தையும் தெரிவித்துகொள்கிறேன்.

தன்னார்வக் குழுவினர் வயது முதிர்ந்தோர்,சிறுவர் – சிறுமியர்களை இப்பணிக்கு தவிர்த்திருக்கலாம் அவர்களின் ஆர்வம் வரவேற்க்கப்படவேண்டியதுதான் ஆனால் பிஞ்சு கைகளுக்கு காயம் எற்பட்டால் நாமல்லவா பொறுப்பு.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Vilack SMA (Jeddah) [03 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37989

வீட்டில் சேதம் குப்பைகளையே லாரிக்காரனிடம் நேரிடையாக கொடுக்காமல் தெருவில் வீசுபவர்கள் ஒருபோதும் பொதுக்காரியங்களில் ஈடுபட மாட்டார்கள் .

தன்னார்வ தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [03 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37998

கலங்கரை விளக்கம் தன்னார்வலர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ரிங் பால் வீசுவது மாதிரி தன வீட்டு குப்பையை மற்றவர்களின் வீட்டை நோக்கி வீசுபவர்கள் இருக்கையிலே பொது இடத்தை சுத்தமாக வைத்திருப்பார்கள் என்றெல்லாம் எதிர் பார்க்க முடியாது.

இவர்கள் போல் பல தன்னார்வலர்கள் ஏற்பட வேண்டும். நகராட்சி நிர்வாகமும் பல கட்டுப்பாடுகளை அபராதத்துடன் விதிக்க வேண்டும்.

அப்போது தான் கடற்கரைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [04 November 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38009

கலங்கரை விளக்கம் தன்னார்வ மகளிர் அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சுத்தம் சுகம் தரும்
posted by NIZAR (kayalpatnam) [04 November 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38010

காயல்பட்டினம் கட்புடையார் வட்டம் பகுதியல் செயல்படும் கலங்கரை விளக்கம் மகளிர் தன்னார்வ குழுவினர் காயல் கடற்கரையை சுத்தம் செய்தனர் என்ற செய்தி இதயத்தை மகிழ்வித்தது.கலங்கரை விளக்கம் தன்னார்வ குழுவினரின் இந்த சேவை மிகுந்த வரவேற்கதக்கது.

சரி இப்படி ஏதாவது தொண்டு நிறுவனம் வந்தாதான் கடற்கரையை சுத்தமாக பார்க்கமுடியும். ஆனால் நம் நகராட்சி இதை பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை. இவ்வளவு பணியாளர்கள் இருந்தும் கடற்கரை சுத்தம் செய்யும் பணிக்கும் ஆட்களை பனி அமர்த்தவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

அதாவது நகர்மன்றத்தில் கடற்கரை சுத்தமாக்கும் பொருளாக பல தீர்மானங்கள் போட்டும் அது அனைத்தும் அதிகாரிகளின் மேஜை குப்பையாக இருப்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது. நகர தலைவி,மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என அனைவரும் இந்த கடற்கரை சுத்தமாக்கும் விசயத்தில் ஒருமித்த கருத்தில் இருந்தாலும், அதிகாரிகள் அதற்கு முட்டு கட்டையாக இருப்பது மக்கள் விரோதசெயல் என்றுதானே சொல்லமுடியும்.

இந்த கடற்கரையை பொறுத்தவரை ஞாயிற்று கிழமை மற்றும்தான் அதிகமான மக்கள் புலக்கதினால் குப்பை குவிகின்றது.அதனால் திங்கள்கிழமை நகராட்சியில் இருந்து சொற்ப ஊழியர்களை கொண்டு சுத்தம் செய்தாலே போதுமானதாகும்.

அட வாரத்துக்கு ஒருநாள் சுத்தம்பண்ண இந்த நகராட்சிக்கு யோக்கியதை இல்லையா?மக்கள் தேர்ந்தடுத்த தலைவி மட்டும் உறுப்பினர்கள் இருந்தும் அதிகாரம் முழுவதும் அதிகாரிகள் கைகளில் கொட்டி கிடப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

வரும் நகர் மன்ற கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் கடற்கரை விசயத்தை முக்கிய பொருளாக எடுக்க வேண்டும்.

இந்த கடற்கரை சுத்தமாகும் விசயத்துக்கு நிரந்தர தீர்வை நகராட்சி எடுக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் பொதுமக்களை திரட்டி இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும்.

கலங்கரை விளக்கம் தொண்டு நிறுவனம் மென்மேலும் வெற்றி நடை போட என் இதயமார்ந்த வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved