Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:38:13 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14706
#KOTW14706
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 17, 2014
உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கியது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2826 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனையையையும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கக் கோரியும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உட்பட 4 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் பி லோகுர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு, ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் வழக்குரைஞரிடம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதில், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கக் கூடாது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் படித்து 2 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட வேண்டும். ஆவணங்களை படிக்க கால அவகாசம் வேண்டும் என்று நீங்கள் சொன்னால், உடனடியாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்று கூறினர்.

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருப்பதாக வழக்குரைஞர் கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

கர்நாடக உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்கும் என்று நம்புகிறோம்.

டிசம்பர் 18ம் தேதி வரை நாட்டை விட்டு எங்கும் செல்லக் கூடாது.

இதையடுத்து, அடுத்த வழக்கு விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [17 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37778

தர்மம் தலைகாக்கும்.

அடேங்கப்பா..

தாயைப் பிரிந்து தவித்த குட்டிக் குழந்தை, மீண்டும் தன் தாயைக் கண்டபோது எப்படித் துடித்து துவளுமோ, அதுபோல துள்ளிக் குதிக்கிறார்கள், புரட்சி தலைவி அம்மா அவர்களின் உண்மை அதிமுகவினர்.. அந்த அளவுக்கு அவர்களின் கொண்டாட்டத்தில் துள்ளல் தெரிகிறது. புரட்சி தலைவரின் உண்மை அதிமுக தொண்டர்கள் தீபாவளியை இன்றே அவர்கள் ஆரம்பித்து விட்டனர்.

வீழ்வேன் என்று நினைத்தயோ
இனி என்னை புதியதாக்கி
மதி தன்னை தெளிவு செய்து
தமிழக மக்களை என்றும்
மகிழ்சியடைய செய்வேன் அம்மா
அம்மாவின் தண்டனை நிறுத்தி வைப்பு....

மீண்டும் முதல்வராக எங்கள் அம்மா வரும் சூழல் ரொம்ப ஹப்பி இனி தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அ.தி.மு.க உண்மை தொண்டர்களின் தீபாவளி கொண்டாட்டம்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [17 October 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37782

புரட்சி தலைவரின் உண்மை அதிமுக தொண்டர்கள் தீபாவளியை இன்றே அவர்கள் ஆரம்பித்து விட்டனர்(C&P)

விசுவாசத்தைப்பாராட்டத்தான் வேண்டும் அப்படின்னா இன்றிலிருந்தே புதுவேட்டி புது புடவை புது சட்டையணிந்து கொண்டாட ஆரம்பித்து விடார்காள் நம்மூர் அதிமுக உண்மைதொன்டர்களும் என்று சொல்லுங்கோ

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...புயலுக்கு பின்னே அமைதி...
posted by mackie noohuthambi (chennai) [17 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37787

சிறை சென்று சிறை வாசம் அனுபவித்தவர்களுக்குத் தான் ஜாமீன் அருமை தெரியும். அது ஒரு குற்றமும் செய்யாமல் வீண் பழி சுமத்தி சிறையில் அடைக்கப் பட்டாலும், உள்ளபடியே தவறு செய்து சிறையில் அடைக்கப் பட்டாலும் சரியே.

ஜாமீன் கிடைத்தது என்ற தகவல் தேனாக இனிக்கும் சிறை வாசிகளுக்கு. அது முன்னாள் முதல்வராக இருக்கட்டும் சேரியில் வாழும் சாமான்ய மனிதனாக இருக்கட்டும். இருவருக்கும் கிடைக்கும் மன சந்தோஷம் - அவர்கள் குடும்பத்தினருக்கு - அவர்கள் ஆதரவாளர்களுக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி சொல்லில் அடங்காது எழுத்தில் எழுதி முடியாது.

1993இல் நமதூரில் நடந்த மீன்கடை கலவரங்களில் சிறை வாசம் அனுபவித்த என் போன்றவார்களுக்கு அந்த அனுபவம் புதுமை என்றும் மறக்க முடியாதது. 15 நாட்கள் உள்ளே இருந்தபோது, எங்களை பார்க்க வந்தவர்கள் தரும் பரிசு பொருட்கள் வாழைப் பழம், பிரித்தானியா பிஸ்கட் மிக சுவையாக தெரியும். எங்களை தினசரி மருத்துவர்கள் பரிசோதனை செய்து எங்கள் வியாதிக்கு மருந்து தருவார்கள் (ஜெயிலுக்கு போகிறவர்களுக்கு உடனே நோய் வந்து விடும்). வேளை தவறாமல் சாப்பாடு, உறக்கம், காற்றோட்டமான திறந்த வெளியில் உலா வருதல், நண்பர்களுடன் அரட்டை, 5 வேளை தொழுகை எல்லாம் இருக்கும். மாலை 6 மணியானால் எல்லாம் அடங்கி விடும். தேசிய கொடி இறக்கப்படும் எங்களை உள்ளே அடைக்கப்படும்.

ஆயிரம் வசதிகள் இருந்தும் NO PEACE OF MIND! இப்படி அநியாயமாக வந்து மாட்டிக் கொண்டோமே என்ற கவலை மட்டும் இரவு பகலாக எங்கள் உள்ளத்தை வாட்டி வதைக்கும்.

திடீரென ஒரு செய்தி வந்தது, நாளைக்கு ஜாமீனில் உங்களுக்கு விடுதலை. அப்போது ஏற்பட்ட சந்தோஷத்துக்கு ஈடாக எந்த சந்தோசமும் இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டதில்லை. புயலுக்கு பின்னே அமைதி - துயருக்குபின் வரும் சுகம் ஒரு பாதி. இருளுக்கு பின் வரும் ஜோதி. இதுதான் இயற்கை நியதி.

முன்னாள் முதல்வர் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது போல் எங்களுக்கும் ஒரு நிபந்தனை - தூத்துக்குடி மாவட்டத்துக்குள் இன்னும் 15 நாளைக்கு நுழையக் கூடாது. எந்த நிபந்தனையையும் ஏற்க தயார், ஜாமீன் மட்டும் தாருங்கள் என்ற கோரிக்கை மூத்த வழக்கறிஞர் நரிமன் மட்டும் சொல்வதல்ல, எல்லா வக்கீலும் அதை சொல்லித்தான் ஜாமீன் பெற வேண்டும். அரசு வக்கீலும் அமைதியாக இருக்க வேண்டும்.பவானி சிங் மாதிரி முன்னுக்குப் பின் முரணாக பேசக் கூடாது. ஜாமீன் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க கூடாது. நாம் செய்த பாவங்களை எண்ணி வருந்த வேண்டும் இனிமேல் இப்படி பாவங்கள் செய்ய மாட்டேன் என்று இறைவனிடம் சொல்லி மன்றாட வேண்டும்.இது ஜாமீனில் வெளிவந்துள்ள எல்லோருக்கும் பொது நியதி.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது
என்று வள்ளுவம் கூறுகிறது.

நினைத்துப் பார்க்கிறேன். திரும்பிப் பார்க்கிறேன். எவ்வளவு உண்மையான செய்தி.

அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் நாமம் வாழ்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
சிங்கம்லே... (?!)  (17/10/2014) [Views - 3103; Comments - 1]
யாருக்காக இந்த விளக்கம்?  (16/10/2014) [Views - 3482; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (16/10/2014) [Views - 2445; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved