Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:21:47 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14697
#KOTW14697
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 15, 2014
பள்ளிக்கூடம் செல்லும் சிறாருக்காக சதுக்கைத் தெருவில் புதிய மக்தப் துவக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4968 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பள்ளிக்கூடம் செல்லும் சிறாருக்கு இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.முஹம்மத் பாதுல் அஸ்ஹப் அவர்களின் மகன் ஹாஜி எம்.பி.ஏ.காஜா முஹ்யித்தீன் இல்லத்தில், பாஸ் கல்விக் குழுமத்தின் சார்பில், ‘மக்தப் செய்யித் ஹலீமா’ என்ற பெயரில், புதிய மக்தப் இன்று துவக்கப்பட்டுள்ளது.




இன்று (அக்டோபர் 15 புதன்கிழமை) 17.15 மணியளவில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு, ஹாஜி வேனா முஹம்மத் அலீ என்ற அலியப்பா தலைமை தாங்கினார். ஹாஜி டீ.வி.செய்யித் அஹ்மத், ஹாஜி எம்.பி.ஏ.ஹாஜா முஈனுத்தீன், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஹாஃபிழ் கிஸார் முத்துவாப்பா, ஹாஜி பீ.எம்.எஸ்.ஹல்லாஜ், ஹாஜி பிரபு நூஹ் நெய்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர் எம்.பி.ஏ.ஹாஜா முஈனுத்தீன் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மக்தப் செய்யித் ஹலீமா ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான பிரபு எம்.என்.ரியாஸுத்தீன் மக்தப் மற்றும் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.



இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் உட்பட - உலகின் 32 நாடுகளில் - ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இந்த மக்தப் மத்ரஸாக்கள் செயல்படும் விதம் குறித்தும், பாடத்திட்டங்கள் குறித்தும், தீனிய்யாத் மக்தப் மத்ரஸாக்களின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ விளக்கவுரையாற்றினார்.



மக்தப் மத்ரஸாக்களின் அவசியம், அவை இல்லாவிட்டால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்தப் செய்யித் ஹலீமா பொறுப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ சொற்பொழிவாற்றியதோடு, இந்நிறுவனத்தில் பயில்வதற்காக புதிதாக மாணவ-மாணவியருக்கு திருமறை குர்ஆனின் முதல் அத்தியாயத்தை ஓதிக்கொடுத்து, பாடங்களை முறைப்படி துவக்கி வைத்தார்.









உரையாற்றிய அனைவருக்கும் மக்தப் நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.



ஹாஃபிழ் எச்.பி.என்.ஷாஹ்ஜாத் அல்புகாரீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாஃபிழ் பிரபு மஹ்மூத் மஃபாஸ், ஹாஃபிழ் பிரபு மஹ்மூத் முபாரக், பிரபு செய்யித் அத்னான், அஹ்மத் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.



இப்புதிய தீனிய்யாத் மக்தப் மத்ரஸாவில், 12 மாணவ-மாணவியர் துவக்கமாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், அவர்கள் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.



[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 08:09 / 16.10.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...maa sha allah
posted by k.M.seyed ibrahim (chennai) [16 October 2014]
IP: 107.*.*.* | Comment Reference Number: 37767

மாஷாஅல்லாஹ்! நம்ம ஊரு சிறார்களுக்கு அல்லாஹ் நல்ல இல்மை வழங்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...பள்ளிக்கூடம் முதல் பல்கலை கழகம் வரை..
posted by mackie noohuthambi (chennai) [16 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37775

மதரசாக்களுக்கு போன பிறகுதான் ஞானம் வந்தது ஒரு காலத்தில். ஆனால் இப்போது பள்ளிக் கூடங்களே பல்கலைக் கழகங்களாக மாறி வரும் காட்சியை பார்க்கிறோம். இளம் சிறுசுகள் இன்று இந்த மகதப் தோற்றத்தால் புது எழுச்சி பெறுகிறார்கள். சுபுஹ் தொழுகையை ஜமாத்துடன் தொழுகிறார்கள். பள்ளிக் கூட படிப்பு பாதிக்காமல் 60 நிமிட பாட திட்டம் எல்லா இடங்களிலும் ஒரு அற்புத சமுதாய மாற்றத்தை சத்தமில்லாமல் செய்து வருகிறது. காலை மாலை துஆக்கள் அவர்கள் கேட்கும்போது அவர்கள் பெற்றோர் காதுகளில் அது தேனாக இனிக்கிறது.

சினிமா பாடல்களுக்கும் கொட்டு குழல்களுக்கும் பின்னால் போய்க் கொண்டிருந்த இளவல்களை இசைக் கருவிகள் இல்லாத இஸ்லாமிய இன்னிசை பைதுக்களுடன் நடை போட வைத்த பெருமை ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனத்துக்கு உண்டு. ஹாபில்களை உருவாக்கி ஊர்வலம் சென்று ஊர் மக்களெல்லாம் என் மகனும் ஹாபிலாக வேண்டும் என்ற வேட்கையை பெற்றோர்கள் மனங்களில் கொழுந்து விட்டு எரிய செய்தவர்களும் அவர்களே.

இப்போது, மக்தப்களை ஆரம்பித்து, தொலைக் காட்சிகளுக்கும் சின்ன திரைகளுக்கும் முன்னால் உட்கார்ந்து தங்கள் பொழுதுகளை கழிக்க ஆரம்பித்த இளவல்களை மீட்டெடுத்து மக்தப் என்ற அறிவகத்தில் மார்க்க விஷயங்கள் குர் ஆன் ஓதும் முறைகள், தொழுகை இபாததுக்களில் உள்ள இன்பங்கள் இவற்றின்பால் ஈர்க்க செய்துள்ளவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். இதற்கு முதன் முதலாக காய் நகர்த்தியவர்கள் மொகுதூம் ஜும்மா பள்ளி ஜமாத்தார்கள். ஊர் முழுவதும் பரவலாக இந்த மக்தப்கள் ஆரம்பிக்கப் படுவது ஒரு நல்ல அறிகுறி. சமுதாயத்தில் ஓர் பெரிய அமைதிப் புரட்சி நடக்க ஆரம்பித்திருக்கிறது. அல்லாஹ் இந்த மக்தபை கபூல் செய்வானாக.

பெரியவர், தள்ளாத வயதிலும் சுறுசுறுப்புக்கு - காலம் தவறாமைக்கு - குடும்ப ஒற்றுமைக்கு - ஒரு தலைமைக்கு கட்டுப் படவேண்டும் என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தி - தொழில் புரட்சி மட்டுமல்ல சமுதாய நல்லிணக்க புரட்சியையும் ஏற்படுத்தி நமக்கு வழி காட்டி சென்றுள்ள பாதுல் அஸ்ஹாப் ஹாஜி அவர்கள் குடும்பத்தினர் இந்த மக்தபின் தலைவராக இன்னொரு பாதுல் அஸ்ஹாப் ஹாஜி ஆலிம் அவர்களை தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. பள்ளிக் கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை சென்றாலும் இந்த இளவல்கள் மார்க்கப் பற்றுடன் இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல முன்மாதிரி..

LA QADH KAANA LAKUM FEE RASOOLILLAHI USWATHUN HASANAA......அல்லாஹ் கபூல் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
யாருக்காக இந்த விளக்கம்?  (16/10/2014) [Views - 3492; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (16/10/2014) [Views - 2452; Comments - 0]
அதிகாலையில் சாரல்!  (15/10/2014) [Views - 2737; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved