Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:52:16 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14534
#KOTW14534
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 18, 2014
ஊர்க் காதலர்கள்: காயல்பட்டினம் குறித்து தி இந்து நாளிதழில் சிறப்புக் கட்டுரை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5682 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தி இந்து தமிழ் நாளிதழின் இன்றைய பதிப்பில் காயல்பட்டினம் குறித்து - ஊர்க் காதலர்கள் என்ற தலைப்பில் - அப்பத்திரிக்கையின் மூத்த எழுத்தாளர் சமஸ் எழுதிய சிறப்புக் கட்டுரை வெளிவந்துள்ளது.



ஊர்க் காதலர்கள்!

காயல்பட்டினத்தைப் பற்றிக் கேள்விப்பட கேள்விப்பட… ஆச்சரியம் அதிகமாகிக்கொண்டே போனது. சொந்த ஊர்க் காதல் நம்மூரில் விசேஷம் இல்லை. என்றாலும், காயல்பட்டினக்காரர்களின் ஊர்க் காதல் அசரடிக்கிறது.

காயல் கலாச்சாரம் தனிக் கலாச்சாரம்

“தமிழ்நாட்டுல உள்ள பாரம்பரிய முஸ்லிம்கள் ஊர்கள்ல ஒண்ணு காயல்பட்டினம். மத்தியக் கிழக்குலேர்ந்து கடல் வாணிபத்துக்காக வந்தவங்க மண உறவு கொண்டு தங்குன ஊருங்கள்ல ஒண்ணு இது. காயல்பட்டினத்துக்குன்டு தனிக் கலாச்சாரம் உண்டு. தமிழ்க் கலாச்சாரமும் அரபுக் கலாச்சாரமும், கடலோடிகளோட வாணிபக் கலாச்சாரமும் ஒண்ணுகூடி உருவான கலாச்சாரம் இது. கடக்கரையை அலைவாய்க்கரைன்டு சொல்லுவோம். காலைச் சாப்பாடு முடிஞ்சுட்டுதாங்கிறதைப் பசியாறிட்டீங்களான்டு கேப்பம். பழைய சோத்தைப் பழஞ்சோறும்பம். ரசத்தைப் புளியானம்பம். இப்பிடிச் சீர்ப்பணியம், போனவம், வெல்லளியாரம், சர்க்கரைப்புளிப்புன்டு எங்களோட சீர் பலகாரங்கள்ல ஆரமிச்சு, நாங்க அன்டாடம் பயன்படுத்துற பல சொல்லுங்க பழந்தமிழ்ச் சொல்லுங்க. இயல்பா எங்க மக்கள்கிட்ட இருக்கு. காலங்காலமா இங்கே காவல் நிலையம் கெடையாது. மதுக்கடை கெடையாது. வட்டி கெடையாது. வரதட்சிணையையும் ஒழிச்சுட்டோம். இங்கெ பொறந்தவங்களுக்கும் புகுந்தவங்களுக்கும் வேற எந்த ஊரும் ருசிக்காது” என்கிறார் கலாமி. ‘காயல்பட்டினம் வரலாறு’ நூலாசிரியர்.

“இது தாய்வழி சமூக மரப கடைப்பிடிக்குற ஊர். கல்யாணம் முடிச்சதும் மாப்பிள்ளதான் பெண் வீட்டுக்கு வாழப் போகணும். பெரும்பாலான ஆண்கள் கடல் தாண்டி வாணிபத்துல இருக்கிறவங்கங்கிறதால, இயல்பாவே எல்லா நிர்வாகமும் பெண்கள் கையிலதாம் இருக்கும். பெண்களுக்குச் சொத்துரிமையைப் பத்திப் பேசுற காலத்துக்கெல்லாம் முன்னாடியே, இங்கெ பெண் பிள்ளைங்களுக்குச் சொந்த வீட்டைச் சீதனமாக் கொடுக்குற வழக்கம் வந்துருச்சு. ஒவ்வொரு வீட்டையும் ஒட்டிப் பெண்கள் பயன்படுத்துறதுக்குன்னே ஒரு முடுக்கு இருக்கும். அது வழியாவே பூந்து ஊரோட எந்தப் பகுதிக்கும் போய்ட்டு வந்திரலாம். அந்தந்த வீட்டை ஒட்டியிருக்குற ஆண்களைத் தவிர, வேற ஆண்கள் இந்த முடுக்கைப் பயன்படுத்தக் கூடாது. ஆனா, பெண்கள் முடுக்கையும் பயன்படுத்தலாம்; வீதியையும் பயன்படுத்தலாம்” - காயல்பட்டினம் வீடுகளைப் பற்றிய சுவாரசியங்களை அடுக்குகிறார் ஷேக்ணா.

ரத்த உறவு நல்லிணக்கம்

“அந்தக் காலம் தொட்டே இங்கெ பொறந்த ஒவ்வொருத்தரும் தாயா, புள்ளயா பழகுற மரபைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்ங்கிற வேறுபாட்டுக்கெல்லாம் இங்கெ எடம் கொடுக்குறதில்ல. எங்களுக்குள்ள பால்குடி உறவு உண்டு. தாய்ப்பால் இல்லாத எத்தனையோ முஸ்லிம் பிள்ளைங்களுக்குத் தன்னோட பால் தந்து ஊட்டின தலித் பெண்கள் இங்கெ உண்டு. அவங்களை இன்னொரு தாயா பாவிச்சு, பராமரிக்குற பிள்ளைங்களும் உண்டு. மகாத்மா மேல எங்களுக்கு இருக்குற மரியாதையைக் காட்ட, அவருக்கு ஒரு வளைவு கட்டினம். கால்பந்துன்னா எங்க ஊர்க்காரங்களுக்கு உசுரு. எங்க பிள்ளைங்களுக்கு வெளயாட்டு கத்துக் கொடுத்த கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பீட்டர் இறந்தப்போ, விளையாட்டரங்கம் கட்டி அதுக்கு அவரொட பேரையே வெச்சோம். இங்கெ இருக்குற சமய நல்லிணக்கத்துக்கு உயிரோட நிக்கிற சாட்சியம் அது” - சந்தோஷத் தகவல்களைப் பரிமாறுகிறார் தமிழன் முத்து இஸ்மாயில்.

“ஆர்எஸ்எஸ், பிஜேபிகாரங்ககூட இங்கெ எங்கெகூட ஒண்ணோட மண்ணாதாம் கெடப்பாங்க. நீங்க பண்டாரம் அண்ணனைக் கேட்டுப் பாருங்க. இந்த ஊர்ல இந்து அமைப்புங்களோட பெரிய பிரதிநிதி அவருதான்” என்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் கட்டியணைத்து வரவேற்கும் பண்டாரம், டீ சொல்கிறார். “ஆயிரம் அரசியல் செய்யலாம், எல்லாமே சக மனுசன் நல்லா இருக்கணும்கிற அக்கறயிலதாம் முடியணும். இங்கெ சாதி, மத வேத்துமைக்கெல்லாம் எடமே கொடுக்குறதில்ல சார்” என்கிறார் பண்டாரம். டீக்கடை சபாவில் அஞ்சல் துறை ஊழியர் சந்திர சேகரும் சேர்ந்துகொள்கிறார். “பெருமைக்குச் சொல்லல. சார், எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்க பலரை அவங்க தூக்கி விட்ருக்காங்க. பல கல்யாணங்களுக்குத் தாலி எடுத்துக் கொடுத்துருக்காங்க. பழக்கம் வழக்கமுன்னா சும்மா இல்ல, எங்கள்ல அவங்க ஒருத்தர், அவங்கள்ல நாங்க ஒருத்தர்...”

திசையெட்டும் ஒற்றுமைக் குரல்

காயல்பட்டினக்காரர்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறார்கள். எங்கெல்லாம் பத்துப் பேருக்கு மேல் சேர்கிறார்களோ, அங்கெல்லாம் உடனே உருவாகிவிடுகிறது காயல் நல மன்றம். இலங்கை, அரபு அமீரகம், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா என்று செல்லும் இடங்களிலும் மன்றங்கள் தொடங்கி, ஊர் உறவைப் பேணுகிறார்கள். ஊருக்கு உதவுகிறார்கள். “எந்த ஊர் போனாலும், எங்காளுங்களுக்கு ஊர் பாசம் போவாது. ஊருல என்ன நடக்குதுன்னு விடிஞ்ச உடனே தெரியணும். இந்தச் சின்ன ஊரோட சேதியைப் பரப்ப ஒன்பது இணையப் பத்திரிகைங்க இயங்குதுன்னு சொன்னா நம்புவீங்களா?” என்று வரிசையாகக் காயல்பட்டினம் இணையப் பத்திரிகைகளைப் பட்டியலிடும் சாலிஹ், காயல்பட்டினம் டாட் காம் இணையப் பத்திரிகையை நடத்துபவர்.

“ஊரவுட்டு எங்கெ போனாலும் ஊர் மேல அக்கற கொறயுறது இல்ல. நூறு வருஷத்துக்கு முன்னாடியே இங்கெ தங்களோட சொந்த காசப் போட்டு பள்ளிக்கூடம் கட்டிக் கற்பிச்சாங்க எங்க ஊர் முன்னோருங்க. அந்தப் பாரம்பரியம் இன்னைக்கும் தொடருது. கல்விக்கு, மருத்துவத்துக்கு, சுற்றுச்சூழலுக்கு, விளையாட்டுக்குன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் உதவ ஒவ்வொரு சங்கம் இருக்கு. எந்த ஊருல இருந்தாலும் எங்க வருமானத்துல ஒரு பகுதியக் கொடுத்துருவோம். மத்தவங்க கஷ்டப்படுறத வேடிக்க பாக்குறதில்ல. மன வளர்ச்சி குறைவான குழந்தைங்களப் பராமரிக்கக்கூட இந்தச் சின்ன ஊர்ல ‘துளிர்’னு ஒரு சிறப்புப் பள்ளிக்கூடம் உண்டு. எல்லாமே சக மனுஷம் மேல உள்ள அக்கறதாம்” என்று சொல்லும் புஹாரி, இலங்கையில் வாணிபம் செய்பவர்.

சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷமும் அதுதானே?

(அலைகள் தழுவும்...)


- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

தி இந்து (தமிழ்) - செப்டம்பர் 18, 2014 பதிப்பு




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஊர்க் காவலர்கள்....
posted by mackie noohuthambi (chennai) [18 September 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37344

"ஊர்க் காவலர்கள்" என்ற விருதை காயல்பட்டினம் மக்களுக்கு அளித்து நம்மைப் பெருமைப் படுத்தியிருக்கிறார் திரு சம்ஸ் அவர்கள். ஒரு தனி மனிதன் நமக்களித்த அங்கீகாரம் என்பதை விட தி ஹிந்து குழுமமே நமதூரை கௌரவப் படுத்தி இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

முதலாவது ஆண்டை முழு மன நிறைவுடன் மக்கள் உள்ளங்களில் ஊடுருவி சென்று எல்லா துறைகளிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்து நாளிதழ் நமதூருக்கு இப்படி ஒரு விருதை வழங்கி இருப்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.

எங்கள் இஸ்லாமிய இன்சுவை சமையலில் உப்பு சேர்த்த கலை நகரம். இங்கே கிடப்பது புளுதியல்ல, மக்கமா மலரின் மகரந்த பொடிகள். அரபு மொழியால் தமிழ் வளர்த்து அரபு தமிழ் என்ற ஒரு புது மொழியை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதமான அறிவு தீபங்களை அள்ளி தந்த ஊர் இது. செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளலையே வாரி வழங்கிய வள்ளல் மண் இது. இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும், மழலைகள் வாயும் நபி மொழி பேசும். நாமெல்லாம் யார்..தசாவதானி சேகுதம்பி பாவலரின் சின்னதம்பிகள். பீரப்பாவின் பேரப் பிள்ளைகள்

என்று கவிக்கோ அவர்கள் புகழாரம் சூட்டிய பெருமை மிக்க ஊர் இது. திரு சம்ஸ் அவர்களே, நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த ஊருக்கு வாருங்கள், உங்கள் இலக்கிய பசிக்கு தீனி போடும் அற்புத கல்வெட்டுக்கள், கலாசார சின்னங்கள், மத நல்லிணக்க சான்றுகள் இங்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. "எங்கள் பகைவன் எங்கோ மறைந்தான் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாகக் கண்டே" என்ற பாரதிதாசனின் வைர வரிகளுக்கு செயல் வடிவம் கொடுப்பவர்கள் வாழும் ஊர் இது.

இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி. தமிழால் இணைவோம் என்ற உங்கள் திருவாசகத்துக்கு மறுவாசகம் இது. மதங்களை கடந்து மனங்களால் இணைவோம்...வாருங்கள். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. காயலும், தமிழும்...!
posted by arabi shuaib (jeddah) [18 September 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 37345

சரியான தருணத்தில் பிறந்த தரமான பதிவு.

சகோ.சமஸ்… நாம் பேசும் காயல் தமிழிலேயே தனது ஆக்கத்தை தந்துள்ளார்.

"டு டு டு டு டூடு டுண்டுடூ
செக கின செக கின சேகு செந்தரி
கனமுறு லு லு லு லு லூலு லுல்லுழு
நிறைவானே..."

மேற்காணும் வரிகள் திருப்புகழுக்கு மறுப்புகள் பாடிய வரகவி காசிம் புலவர் (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக) அவர்களின் "திருப்புகழ்" நூலில் உள்ள வரிகள்.

மேற்கண்ட வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று எனது உம்மும்மா (வரகவி காசிம் புலவர் வழிவந்த ஏழாவது தலைமுறை இவர்) விடம் நான் சிறுவனாக இருக்கும்போது வினவினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையை இந்த வரிகள் பேசுவதாக சொன்னார்கள் (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக).

தமிழ் ஒற்றை எழுத்துக்களின் வீரியத்தை அன்றே தனது நூலில் நிறைவாகத்தந்த வரகவி காசிம் புலவர் அவர்கள் பிறந்த மண் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

மேலும்; வரகவி காசிம் புலவர் வழி வந்த கவிஞர் S.M.B.மஹ்மூது ஹுசைன் (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக) அவருடைய ஒரு சுத்தமிழ் பாடல் வரி...

"தட்டல் என்றும் தடவல் என்றும் தத்துவத்தை கூறிய
பொட்டல் போன்ற நெஞ்சத்திலே பதிஞான மழை தூவிய..."

இதுபோன்று தமிழுக்கு நம் முன்னோர் கொடுத்த முக்கியத்துவும் குறித்து நிறையவே கூறலாம்.

திருச்செந்தூர் கோயிலில் அடக்கமாகியிருக்கும் திருமுருகனும், தைக்காதெருவில் அடக்கமாகியிருக்கும் ஷெய்கு அப்துல் காதிர் தைக்காஸாஹிபு அவர்களும் உற்ற நண்பர்கள் என்று எனது முன்னோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். இதை இங்கு நினைவூட்டக்காரணம், பன்னெடுங்காலந்தொட்டே மதமாச்சர்யங்களை வீழ்த்தி சகோதர உணர்வோடு மாற்று மத நண்பர்களோடு பின்னி பிணைந்து அன்பை பொழிந்து வாழ்ந்த முன்னோர்களின் பாசமிகு நகரம் நம் காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved