Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:08:08 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14527
#KOTW14527
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 17, 2014
கே.எம்.டி. மருத்துவமனை அருகில் விபத்து! ஒருவர் பலி!! ஒருவருக்கு காயம்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 9019 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், கே.எம்.டி. மருத்துவமனை அருகில் இன்று 13.00 மணியளவில், தனியார் பள்ளி வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் பலியானார். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-

அடைக்கலபுரத்தைச் சேர்ந்த சூசைநாதன் என்பவரது மகன் ஜிப்ஸன் (வயது 38). அடைக்கலபுரம் ஜோஸப் மேனிலைப்பள்ளியில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் தாஸ் என்பவரது மகன் ராஜா (வயது 20).

இவ்விருவரும், காயல்பட்டினத்திலிருந்து திருச்செந்தூர் சாலை வழியே திருச்செந்தூரை நோக்கி, ‘ஹீரோ ஹோன்டா ஸ்ப்ளெண்டர்’ வாகனத்தில் பயணித்துச் சென்றுள்ளனர். ஜிப்ஸன் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

கே.எம்.டி. மருத்துவமனை நுழைவாயில் அருகே சென்றபோது, எதிரில் வந்த - காயல்பட்டினம் தனியார் பள்ளி வாகனம் திடீரென வலது புறத்தில் திரும்புகையில், பள்ளி வாகனமும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.











இதில், ஜிப்ஸன் இரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பலியானார். உடன் சென்ற ராஜாவுக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார்.

தகவலறிந்ததும், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் நிகழ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்திற்குள்ளான வாகனங்களை ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்த அவர்கள், இறந்த ஜிப்ஸனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இறந்த ஜிப்ஸனின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறியழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

அடிக்கடி விபத்து நிகழும் இப்பகுதியில், போதிய போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.

படங்கள்:
நியாஸ்
மற்றும்
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்


[சிறு திருத்ததம் செய்யப்பட்டது @ 23:09 / 17.09.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வேகத்தடை அவசியமே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்.) [17 September 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37301

சாலை விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்வதால். அதைத் தடுக்கும் விதத்தில் போக்குவரத்து துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை இருப்பதால் சாலையின் இருபுறமும் நன்றாக தெரியும்படி அகலமான வேகத்தடை போட வேண்டும். சுமார் 100 மீட்டருக்கு முன்னால் இறு புறமும் மருத்துவமனையை அடையாளப்படுத்தும் தகவல் பலகை நாட்ட வேண்டும்.

உள்ளூர் சமூக நல அமைப்புகள் இதற்கான முயற்சியை மேற்கொள்ளலாமே? உயிர் என்பது விலைமதிப்பற்றது. இழப்பை சந்திக்கும் போதுதான் அதன் ஆழமும், வேதனையும் புரியும். இனி வருங்காலங்களில் வரும்முன் காப்போம் என சில ஏற்பாடுகளை மக்கள் நன்மை கருதி செய்தே தீர வேண்டும்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அரசு செவி சாய்க்குமா..! அல்லது மக்களின் போராட்டத்தின் மூலம் செவி சாயக்கப்படுமா..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37305

பள்ளி வாகனத்தை ஓட்டுபவர் குறைந்தது பத்து வருட அனுபவம் இருக்க வேண்டும் என்று சமீபத்தில் அரசு உத்தரவிட்டதாக நாளிதழ் / தொலைக்காட்சி செய்திகளில் படித்த / பார்த்த நினைவு வருகிறது...

இப்பள்ளியின் வாகன ஓட்டி எத்தனை வருட அனுபவம் கொண்டவர் என்பது தெரியவில்லை... விபத்து என்பது விதி அதை மறுக்கவில்லை..! இதில் தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் அரசு விதிகளை பின்பற்றுகிறது என்பது சந்தேகமே...! / கேள்விக்குறியே...!

இப்பள்ளியின் வாகனத்தை மட்டும் குறிப்பிடவில்லை ஊரின் உள் அமைந்துள்ள தெருவில் அணைத்து பள்ளி வாகனமும் தனது பள்ளியின் நேரத்தை பின்பன்ற வேகத்தை அதிகரிக்கிறார்கள்...

சகோதரர் ரபீக் அவர்களின் கருத்து ஏற்றுகொள்ள கூடியவை பல மாதமாக பல சமூக ஆர்வலர்கள் மருத்துவமனையின் முகப்பில் இடதுபுறம் / வலது புறம் வேகத்தடை அமைக்க வேண்டி பேசி வருவதாகவும் மனுக்களும் கொடுத்ததாக அறிவேன் ஆனால் நெடுஞ்சாலை துறையின் அனுமதி / ஒப்புதல் கிடைக்க காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறினார்கள்..

அரசு அதிகாரிகளுக்கு மருத்துவமனை சார்பில் அழுத்தம் கொடுப்பது மிக அவசியம்..

மேலும் நமது நாட்டில் கோரிக்கை மனுவின் மீது தீர்வு ஏற்பட வாய்ப்பே இல்லை என கருதுகிறேன் / மக்கள் சாலை மறியல் / போராட்டம் என கொந்தளித்தால் மட்டுமே அரசின் கவனம் திரும்புகிறது..

அரசின் இந்த மெத்தன போக்கினால் இன்னும் எத்தனை எத்தனை நமது சகோதரர்களின் / சகோதரிகளின் உயிர்களை கட்டுப்பாடு இல்லாத அதிவேகத்தின் மூலம் பலி வாங்குமோ..!

அரசு செவி சாய்க்குமா..! அல்லது மக்களின் போராட்டத்தின் மூலம் செவி சாயக்கப்படுமா..!

தற்போது இந்த இடத்தில் விபத்து வாடிக்கையாகி விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37309

அஸ்ஸலாமு அலைக்கும்

ரொம்பவும் மனவருத்தமான செய்தி தான்.....விபத்தில் உயிர் இழந்து தவிக்கும் இக் குடுமபத்தினர்களுக்கு எம் மனம் தாழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதுடன் .......இது போன்ற விபத்துக்கள் இன்ஷா அல்லாஹ்....மேலைக்கு ஏற்படாமல் தவிர்க்கும் விதமாக நமது ஊர் பொது நல அமைப்பினர்களும் .......நம் மரியாதைக்குரிய நம் காவல் துறைனர்களும் தக்க நடவடிக்கை எடுக்க வேணும் ......

இப்பகுதியில் 100 MTR & 50 MTR இரு பகுதியாக முன் வேகதடை அவசியம் இரு பக்கமும் போட வேணும்....அத்தோடு மருத்துவ மனை குறி ஈடுக்கான அறிகுறியும் ( நிலை போடு ) வைக்க வேணும் ...+..பள்ளி வாகனம் ஓட்டுபவர்களின் முழு கவனம் & பக்குவமும் பற்றியும் நம் காவல் துறை அடிக்கடி கண்காணிக்க வேணும் ......நன்கு பக்குவபட்ட ஓட்டுனர்களை தான் பள்ளி நிவாகம் அமர்த்த வேணும் ....

நமது ஊரில் பள்ளி வாகனம் ஓட்டுனர்கள் நம் ஊருக்குள்ளும் ரொம்பவும் தரம் அற்ற ( மோசமான ) முறையில் தான் ஓட்டுகிறார்கள் .....இதை நம் ஊர் பொதுநல அமைப்பினர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தி கண்காணிக்க வேணும் .......

நமது ஊரில் உள் பகுதிகளில் குழந்தைகளும் / வயதானவர்களும் அதிகம் போய் வந்து இருப்பதால் தான் நாம் பயப்பட வேண்டி உள்ளது ....

தயவு செய்தி ஆட்டோ & இரு சக்கர வாகன ஓட்டுனர்களும் நிதானமான முறையில் வாகனத்தை ஓட்டுவதும் அவசியமே .....

காலை / மாலை இரு நேரங்களிலும் பள்ளி வாகனம் வந்து போவதால் அந்த சமையம் நாம காவல் துறை கண்காணிப்பு ( பாதுகாப்பு ) அவசியம் நம் ஊருக்கு தேவையே ......இந்த கோரிக்கையை நம் ஊர் பொது நல அமைப்பினர்கள் நம் காவல் துறை இடம் முறை இட வேணும் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [17 September 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 37321

இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

செய்தியில் ஜஸ்டின் வாகனத்தை ஓடினார் என்று உள்ளது. இறந்தது ஜிப்சன் மற்றும் காயமடைந்தது ராஜா என உள்ளது.. ??(!)

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...cற்ற்ல்+
posted by h.akbar ali (Riyadh) [18 September 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37325

இந்த சம்பவம் இப்பெளுடு அல்லே பள வருடங்கள் நடக்கிறது இதை தடுக்க அந்த பகுதியல் ஹக்சிடன் நடந்த விளம்பர பலகைய மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டோ வேண்டாம் .பலகை ஓர் அஹிரம் உயர் காப்பாற்றலாம் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...உடன் செய்யலாமே
posted by செய்யிது அப்துல் பாரி (riyadh) [18 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37343

இந்த விபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தார்களுக்கு எங்களின் அனுதாபத்தைதெரிவித்து கொள்கிறோம்.. இந்த இடத்தில் அடிக்கடி நடக்கும் போது உடனே உடனே வேகத்தடைகள் அமைக்கனும்.

உரிய நடவடிக்கை எடுக்கனும் என்று சொல்வதை நிறுத்தி விட்டு இன்றே அதை செய்தால் இப்படி இன்னொரு விபத்து நடக்காமல் தவிர்க்கலாம்.இதுபோக நம் ஊரில் மக்களும் சரி பைக்கை பைக்கா நிணைத்து ஓட்டாமல் அதிக வேகமாக ஓட்டுவதையும் தவிர்கனும்.

இவன்
அப்துல்பாரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [18 September 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 37346

Inna Lillahi we Inna Ilaihi Raajioon...

My deepest Condolences to the Family of the Victim. It is very shocking that these kind of Life-Taking accidents are happening quite often in Our Town Nowadays :( Mostly, The Drivers/Riders do not Slow down or use the indicators while taking such a quick turn.

The Van Driver should have been more cautious since he was turning to his unfavorable Side (To the Right). This could also be the Mistake of the Victim (ALLAH Knows the Best),But it claimed a Life :(

Whatever is the situation might be, The Life once gone can never be Acclaimed.

I request all my brothers to drive safely and follow the clean Traffic Policy to avoid any Minor or the Major Accidents.

Also, All the Organizations that owns Vehicles should Compulsorily have Speed-Governing Devices attached to the Vehicles to avoid Rash Driving..

May the Almighty ALLAH save all of us from the death comes through accidents.

Wassalam...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mohammed thambi (jeddah) [19 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37351

To avoid such accidents, sensors can be installed at front and rear.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved