Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:48:22 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14500
#KOTW14500
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 14, 2014
காயல்பட்டினத்தில் கோவிலுக்கு தீவைப்பு உட்பட பல சம்பவங்கள் தொடர்பாக மூவர் கைது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4393 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த மாதம் கோவிலிற்கு தீவைப்பு மற்றும் பீடத்திற்கு சேதம் விளைவித்த வழக்கில் ஆறுமுகனேரி போலீஸார் சனிக்கிழமை மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

காயல்பட்டினத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி மங்களவிநாயகர் கோவில் தெருவில் இசக்கி அம்மன் கோவில் பீடம் சேதப்படுத்தப்பட்டது.

அதே மாதம் 23ஆம் தேதி காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில் ஓடக்கரை அருகிலுள்ள இசக்கிஅம்மன் கோயில் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.

மேலும் - இதே காலகட்டத்தில், இந்து இயக்கப் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் வழக்கு பதிவாகியது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி சேதுராஜா தெரு அப்துல் அன்சார் மனைவி ஆயிஷாபீவி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக கே.எம்.டி.மருத்துவமனை அருகில் சந்தேகப்படும்படி பதுங்கி இருந்ததாக கூறப்படும் அக்பர்ஷா 3வது தெருவைச் சேர்ந்த அப்துல் காதிர் என்பவர் மகன் சாகுல்ஹமீது (27) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் காயல்பட்டினம் சீதக்காதிநகர் முகம்மது நுர்தின் என்பவர் மகன் தாஜிதின் (32), காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெரு செய்யது முகம்மது என்பவர் மகன் கௌஸ்மொய்தீன் (30) ஆகியோருடன் இணைந்து கோயிலுக்கு தீவைப்பு, பீடம் உடைப்பு, இந்து இயக்கப் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

சாகுல் ஹமீது கைதானதை தொடர்ந்து தாஜிதின், கவுஸ்மொய்தீன் ஆகியோரை ஆறுமுகனேரி ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோயிலுக்கு தீவைப்பு, பீடம் உடைப்பு, இந்து இயக்கப் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பு கூறுகிறது. இதனையடுத்து சனிக்கிழமை மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் - தாஜீதின் 2010ல் மின்னல் மீனா என்ற சேக் அலி என்ற திருநங்கை கொலை வழக்கிலும் மற்றும் 2009ல் பட்டரை முகம்மது கொலை செய்ய முயன்ற வழக்கிலும் கைதாகியிருந்தார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திசை திருப்பும் முயற்சி
posted by M.S.SAYYID MOHAMMED (Hongkong) [15 September 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 37254

கோயில் பீடம் உடைப்பு மற்றும் கோயில் தீவைப்பு நிகழ்வுகளில் ஈடுபட்டதாக வழமையாக காவல்துறை பழைய குற்றவாளிகளைக் கைது செய்து வழக்கின் தன்மையை மாற்றவும், உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்கவிடவும் வழி செய்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

கோயில் கட்ட முன்னோட்டம்தான் வேறொரு இடத்தில் உடைப்பு, பிறகு தீ வைப்பு நடத்தப்பட்டது.

தீ எறிந்த இரண்டு மணி நேரத்திலேயே, அதுவும் அதிகாலையிலேயே கல், மணல்,சிமெண்ட், தண்ணீர், வேலையாட்கள் என குவிந்தது எல்லாம் பல நாட்கள் முன்னேற்பாடு இல்லாமல் சாத்தியமா?

காவல் துறை காவித் துறையாக உள்ளது என்பதுதான் தெளிவாகிறது.

M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [15 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37256

குற்ற நிகழ்வுகளுக்கு முன்னரும் பின்னருமான குறிப்பிட்ட சிலரின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு திசையில் குவிகின்றது. ஆனால் காவல்துறை அந்த கோணத்தில் விசாரணையை நடத்தவே இல்லை.

காவல்துறையின் நடவடிக்கையை பார்க்கும்போது உண்மையான குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான முயற்சியாகவே தெரிகின்றது.

இது கண்டிக்கத்தக்கது. சிக்கினவன் மேல் எல்லா வழக்குகளையும் சுமத்தும் காவல்துறையின் வழமையான நடைமுறையாகவே தெரிகின்றது.

உண்மையான குற்றவாளிகளை விசாரித்து கண்டு பிடிப்பதற்கு காவல்துறையினருக்கு தடையாக இருப்பது சோம்பேறித்தனமா ? அல்லது ஃபாஸிச இயக்கங்களின் அழுத்தமா ?

உண்மையான குற்றவாளிகளை சிறை பிடியுங்கள் . அதை விட்டு விட்டு யாரை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு போவதற்கு காயல்பட்டினம் ஒன்றும் கேள்வி கேட்பாரற்ற இடம் இல்லை.

நகரின் அனைத்து அரசியல்சமுதாய மார்க்க பண்பாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி இந்த பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Javed Nazeem (Chennai) [15 September 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 37260

நிர்பந்தத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் தோன்றுகிறது. பதட்ட சூழ்நிலையின் போது வெளிப்படுத்திய ஒற்றுமையை, அனைத்து அமைப்புகளும், பொது மக்களும் தொடர வேண்டும். ஒரு பொது அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் கைது செய்யப் பட்டவர்களுக்காக வாதாட வேண்டும். உண்மை வெளிவரும் இன் ஷா அல்லாஹ். இல்லையேல் உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப் படாமல், போகவும், இது போன்ற சூழ்நிலைகள் தொடரவும் வழி வகுக்கலாம்.

இது போன்ற சூழ்நிலைகளில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப் பட்ட பிறகு உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப் பட்டு இருக்கிறார்கள். சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் தம் முகநூலில் பதிந்த ஒரு கட்டுரை இங்கே குறிப்பட தகுந்தது:

https://www.facebook.com/aloor.shanavas/posts/678780485509365 //

நாகையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி முனீஸ்வரன் சரண் அடைந்தார்.

வேலூரில் பா.ஜ.க மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான உதயா, சந்திரன், ராஜா, தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடியில் நகராட்சி முன்னாள் பா.ஜ.க கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் ராஜபாண்டி, மனோகரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு கொலை வழக்கில், ராமச்சந்திரன், சண்முகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இப்படி கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, பெண் தொடர்பு, ரியல் எஸ்டேட், சொத்து தகராறு, மணற்கொள்ளை என சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காரணத்தாலேயே பலரும் கொல்லப்பட்டனர். கொலை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அந்த வரிசையில் சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் கொலை வழக்கில் அவரது முதல் மனைவி அய்யம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து, குடித்து விட்டு தன்னை கொடுமைப் படுத்தியதாலேயே கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே நடைபெற்ற தொடர் கொலைகளுக்கு காரணமானவர்கள் இதுபோல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போதே, பரோட்டா சூரி பாணியில் மொத்த கோட்டையும் அழித்துவிட்டு, அத்தனைக்கும் காரணம் போலீஸ் பக்ருதீன் - பன்னா இஸ்மாயில் - பிலால் மாலிக் ஆகியோர்தான் என்று சொல்லி ஃபைலை குளோஸ் செய்ததுபோல், ஜீவராஜ் கொலையிலும் ஏதாவது ஒரு முஸ்லிமை சிக்க வைக்காமல் இருந்தால் சரி. //


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved