Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:01:21 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14276
#KOTW14276
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 8, 2014
நகராட்சிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் “அம்மா மக்கள் சேவை மையம்” நடக்கும்! முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3404 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வாரத்தில் ஒரு நாள் மாநகராட்சிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் பிறப்பு இறப்பு சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சான்றிதழ் ஆகியவை கோரும் விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், “அம்மா மக்கள் சேவை மையம்” நடத்தப்படும்.

இன்று காலை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகம் துறைக்கான விவாதத்தின் போது, தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா இதனை அறிவித்தார்.

முதலமைச்சரின் உரையின் முழு விபரம் வருமாறு:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களிலும் தரமான குடிநீர், குழாய் மூலம் கிடைக்கப்பட வேண்டும் என்ற நிலையை எய்துவதையும், திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு, அதற்கேற்ப குடிநீர் மற்றும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தக் குறிக்கோளை எய்தும் வகையில், கீழ்க்காணும் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை, இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சி மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 60 ஊரகக் குடியிருப்புகளுக்கு, வைகை அணையினை நீர் ஆதாரமாகக் கொண்டு 72,945 மக்கள் பயன்பெறும் வகையில் 20 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, கண்டனூர், நாட்டரசன்கோட்டை, கோட்டையூர், புதுவயல், கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மற்றும் 2,297 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவேரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு, 5 லட்சத்து 7 ஆயிரத்து 775 மக்கள் பயன்பெறும் வகையில் 1,160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், பத்மநாபபுரம் மற்றும் காட்டாத்துறை கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 570 மக்கள் பயன்பெறும் வண்ணம், 169 கோடி ரூபாய் மதிப்பில், பொதுவான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 9 ஊராட்சிகளைச் சார்ந்த 185 ஊரகக் குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றினை, நீர் ஆதாரமாகக் கொண்டு 80,997 மக்கள் பயன்பெறும் வகையில் 42 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மற்றும் நம்பியூர் ஒன்றியங்கள், காரப்பாடி மற்றும் 5 ஊராட்சிகளைச் சார்ந்த 88 ஊரகக் குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு 18,731 மக்கள் பயன்பெறும் வகையில் 11 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி நகராட்சிகளிலுள்ள 2 லட்சத்து 81 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், 267 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். ஆக மொத்தம், 6 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 1,672 கோடியே 2 ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. இதே போன்று, பேரூராட்சிகளுக்கு என காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் மற்றும் கருங்குழி பேரூராட்சிகளுக்கு 11 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 47,502 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், திருச்சி மாவட்டம் கல்லக்குடி, புள்ளம்பாடி மற்றும் முசிறி பேரூராட்சிகளுக்கு 15 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57,800 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் பொத்தனூர் பேரூராட்சிகளுக்கு 7 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 35,600 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள், கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு 2 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12,020 மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சிகளுக்கு 16 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 49,000 மக்கள் பயன்பெறும் வகையிலான குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், என மொத்தம் 53 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. கோயம்புத்தூர் மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்வதற்கு முன்பிருந்த பகுதிகளுக்கென 159 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு பில்லூர் இரண்டாவது தனி குடிநீர்த் திட்டத்தினை நான் துவக்கி வைத்தேன். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 125 எம்.எல்.டி. மற்றும் சிறுவாணி குடிநீர் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 75 எம்.எல்.டி. குடிநீர் கிடைத்துக் கொண்டு இருப்பதை கருத்தில் கொண்டு, சீரான அழுத்தத்துடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், குடிநீர் விநியோகத் திட்டம் 451 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

4. கழிவு நீரை மறு சுழற்சி செய்து குடிநீர் அல்லாத பிற தேவைக்கு பயன்படுத்துவதை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து ஊக்குவிக்கிறது. வட சென்னையை ஒட்டியுள்ள மணலி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 2030 ஆம் ஆண்டிற்கான தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் என கண்டறியப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில், மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்து வட சென்னை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின்சார வாரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்குவதற்கு கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் 255 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

5. கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவிலேயே நான்காவது மிகப் பெரிய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது. இவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க, சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தினை அறிவித்து கடந்த மூன்று ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மழைக் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் சிறந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினைத் தடுக்க ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக 4,034 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு விரிவான திட்ட மதிப்பீடு 3 தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இத்திட்டத்தின் மூலம், சிறிய கால்வாய்களில் உள்ள மழைநீர் பெரிய கால்வாய்களை சென்றடைந்து இயற்கை நீர்வழித் தடங்கள், கால்வாய்கள் மற்றும் நதிகள் வழியாக வங்காள விரிகுடா கடலை சென்றடையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 1,101 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வடிநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்படும்.

6. திடக்கழிவு மேலாண்மை நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் திடக் கழிவு மேலாண்மையை அறிவியல் ரீதியாக செயல்படுத்த தேவையான நிலம் கிடைப்பதில் பல்வேறு தடைகள் உள்ளன. தற்பொழுது உள்ள குப்பை கிடங்குகள் நிரம்பி அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை கருத்தில் கொண்டு, இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஒரு புதிய முயற்சியாக மண்டல அளவிலான ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் முதற்கட்டமாக நடப்பாண்டில் திருச்சிராப்பள்ளி, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாநகராட்சிகளிலும் நாகர்கோவில் நகராட்சியிலும் மண்டல அளவிலான ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், 631 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

7. அலுவலர்கள் அலுவல் நிமித்தமாக வெளி இடங்களுக்கு சென்றுவிடும் நேர்வில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலுவலர்களை சந்திக்க இயலாமல் போய்விடுகிறது. இந்த இடர்பாட்டை தவிர்க்க, வாரத்தில் ஒரு நாள் மாநகராட்சிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் பிறப்பு இறப்பு சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சான்றிதழ் ஆகியவை கோரும் விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், “அம்மா மக்கள் சேவை மையம்” நடத்தப்படும்.

இந்த மையத்தில் ஒவ்வொரு புதன் கிழமையிலும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முறையே உதவி ஆணையாளர்கள், ஆணையர்கள், செயல் அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது ஆய்வு செய்து, மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறைக்கு ஏற்ப ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.

அனைத்து விண்ணப்பங்களையும் கணினியில் பதிவு செய்து, ஒவ்வொரு கோரிக்கை மனுவிற்கும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான பதில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இப்பணி முறையாக நடப்பதை உறுதி செய்ய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அந்தந்த துறை தலைவர்கள் வலைதளம் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு காலவிரயம் இன்றி குறைந்த செலவில் சென்றடைவது உறுதி செய்யப்படும்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், மக்களின் அடிப்படை வசதிகள் மேலும் மேம்படவும், பொதுமக்களின் குறைகள் தீரவும் வழி வகுக்கும்.


இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மக்கள் நலத் திட்டம்.
posted by abdul wahid S. (Kayalpatnam) [09 August 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36306

அம்மாவின் சென்ற ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணரமுடிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நண்பகலில் குறுமழை!  (8/8/2014) [Views - 2912; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved