Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:32:43 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14069
#KOTW14069
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 12, 2014
ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2014: 12 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர்! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4245 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட மார்க்க விழாக்களில், 12 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டம்) பெற்றுள்ளனர். நிகழ்ச்சிகள் அனைத்திலும் திரளான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-

மார்க்க விழாக்கள்:

பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிக்கவும், இளம் மாணவர்களுக்கு திருமறை குர்ஆனை மனனம் செய்விக்கவும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கட்டிடத்தில் இயங்கி வரும் நிறுவனம் அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யா.

இக்கல்வி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்க்க விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழாக்கள், இம்மாதம் 21, 22, 23 நாட்களில் (சனி, ஞாயிறு, திங்கள்) நடைபெற்று முடிந்துள்ளன.

முதல் நாள் நிகழ்ச்சிகள்:

21.06.2014 சனிக்கிழமையன்று மாணவர் முதற்கட்ட நகர்வலத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. நகர்வலம் சென்ற வழியில், நெய்னார் தெரு, தீவுத்தெரு ஜமீல் ஹாஜி திடல் ஆகிய பகுதிகளில், முன்னாள் மாணவர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.









காலை 09.00 மணியளவில் நகர்வலம் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து, காலையில் மத்ரஸா உள் வளாகத்திலும், மாலை, இரவு வேளைகளில் வெளி மேடையிலும் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. இவ்வாறாக, முதல் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 06.00 மணியளவில் மாணவர் இரண்டாம் கட்ட நகர்வலத்துடன் துவங்கியது. இதன்போது, அப்பா பள்ளித் தெரு முத்துச்சுடர் ஆலிம் திடல், சொளுக்கார் தெரு நஹ்வி அப்பா திடல் ஆகிய பகுதிகளில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.





முதல் நாள், இரண்டாம் நாள் வரவேற்பு நிகழ்ச்சிகளில், மத்ரஸா நலனுக்காக அந்தந்தப் பகுதி பொதுமக்களின் சார்பில் நிதி வழங்கப்பட்டது. பகுதி பிரமுகர்கள் நிதியை வழங்க, மத்ரஸா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ பெற்றுக்கொண்டார்.

காலை 09.30 மணியளவில் நகர்வலம் நிறைவுற்றது. இரு நாட்களில் நடைபெற்ற நகர்வல நிகழ்ச்சிகளின்போது, ஆங்காங்கே அலங்கரிக்கப்பட்ட மழலைக் குழந்தைகளை முன்னிறுத்தியும் வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



அதனைத் தொடர்ந்து, காலையில் மத்ரஸா உள் வளாகத்தில் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.

தஃப்ஸ் நிகழ்ச்சி:

மாலையில் மத்ரஸா மைதானத்தில் தஃப்ஸ் நிகழ்ச்சியும், மாணவர் அணிவகுப்பும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்குரைஞர் அஜ்மல் கான், நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சாபு ஜெயசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

















இந்நிகழ்ச்சியின்போது, பல வண்ண அலங்காரங்களுடன் மாணவர் தஃப்ஸ் நிகழ்ச்சியும், அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. சிறப்பு விருந்தினர் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வழக்குரைஞர் அஜ்மல் கான் கொடியேற்ற, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிறைவில் அவ்விருவரும், மற்றொரு சிறப்பு விருந்தினரான டாக்டர் சாபு ஜெயசேகரனும் வாழ்த்துரை வழங்கினர்.







அன்றிரவு அமர்வு வெளிமேடையில் நடைபெற்றது. அதில், பல்சுவை சன்மார்க்கப் போட்டிகள் இடம்பெற்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த மத்ரஸாவின் பெயர் காரணரான மஹான் ஹாமித் லெப்பை வலிய்யுல்லாஹ் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையாற்றினார்.

இவ்வாறாக இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

பட்டமளிப்பு விழா:

மூன்றாம் நாள் காலை 09.00 மணியளவில், ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த 12 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) வழங்கும் பட்டமளிப்பு விழா, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமையில், மத்ரஸா உள் வளாகத்தில் நடைபெற்றது.

நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், குளச்சல் ரிஃபாஈ மஸ்ஜித் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.அப்துஸ்ஸலாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற மாணவர்கள்:

இவ்விழாவில், பின்வருமாறு காயல்பட்டினத்தைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது வழங்கப்பட்டது:-

(01) ஹாஃபிழ் என்.ஏ.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ
த.பெ. ஏ.எல்.நூருல் அமீன் - மரைக்கார் பள்ளித் தெரு

(02) ஹாஃபிழ் எம்.எல்.ஸதக்கத்துல்லாஹ்
த.பெ. மர்ஹூம் எஸ்.டீ.மஹ்மூத் லெப்பை - பஞ்சாயத் வீதி

(03) ஹாஃபிழ் எஸ்.எச்.அலீ ஃபஹத்
த.பெ. எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீத் - மகுதூம் தெரு

(04) ஹாஃபிழ் எம்.எல்.ஹிழ்று முஹம்மத் ஹல்லாஜ்
த.பெ. மர்ஹூம் எஸ்.டீ.மஹ்மூத் லெப்பை - பஞ்சாயத் வீதி

(05) ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹுஸைன் அஹ்மத்
த.பெ. எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் (நகர்மன்ற உறுப்பினர்) - தைக்கா தெரு

(06) ஹாஃபிழ் ஓ.ஏ.கே.முஹம்மத் ஆதம்
த.பெ. எஸ்.ஏ.கே.உமர் அப்துல் காதிர் - நெய்னார் தெரு

(07) ஹாஃபிழ் எம்.ஆர்.அர்ஷத் அஹ்மத்
த.பெ. எச்.எம்.முஹம்மத் ரஈஸுத்தீன் - மகுதூம் தெரு

(08) ஹாஃபிழ் எம்.டபிள்யு.முஹம்மத் ரஸூல்
த.ப. எஸ்.ஏ.முத்துவாப்பா - பரிமார் தெரு

(09) ஹாஃபிழ் ஜெ.எஸ்.செய்யித் அஹ்மத்
த.பெ. எஸ்.ஏ.ஜாஃபர் ஸாதிக் - தைக்கா தெரு

(10) ஹாஃபிழ் எம்.ஏ.சி.மஹ்மூத் முன்ஸிஃப்
த.பெ. எஸ்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் - தீவுத்தெரு

(11) ஹாஃபிழ் எம்.ஓ.முஹம்மத் உதுமான்
த.பெ. எம்.எஸ்.முஹம்மத் உமர் - நெய்னார் தெரு

(12) ஹாஃபிழ் ஏ.அப்துர்ரஹ்மான் அல்தாஃப்
த.பெ. பி.கே.அஸ்மத்துல்லாஹ் - கொச்சியார் தெரு







[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]

மத்ரஸா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ - மத்ரஸா குறித்து அறிமுகவுரையாற்றியதோடு, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை - மத்ரஸா முதன்மைப் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் மிஸ்பாஹீயுடன் இணைந்து வழங்கினார்.

மத்ரஸாவின் கவுரவ ஆசிரியர் மவ்லவ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஸனது விளக்கவுரையாற்றினார். மத்ரஸா ஆசிரியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

புதிய கல்வியாண்டில் மத்ரஸாவில் திருக்குர்ஆன் மனனம் செய்வதற்காக இணைந்துள்ள மாணவர்களுக்கு முறைப்படி பாடம் துவக்கிக் கொடுக்கப்பட்டது.

இவ்விழாவின்போது, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, நகரின் தனியார் நிறுவனங்கள், மத்ரஸா அபிமானிகள் சார்பில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை, ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ ஆகியோர் நெறிப்படுத்தினர். 13.00 மணியளவில் பட்டமளிப்பு விழா நிறைவுற்றது.

பல்சுவை நிகழ்ச்சிகள்:

அன்று மாலையிலும், இரவிலும் மத்ரஸா வெளிமேடையில் மாணவர் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாடல்கள், அரபி - ஆங்கிலம் - தமிழ் உரையாடல்கள், பல்வேறு தலைப்புகளிலான கலந்துரையாடல்கள் என அனைத்தும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்களது பங்கேற்பில் நடைபெற்றன.





பரிசளிப்பு:

சிறப்பு விருந்தினர் குளச்சல் ரிஃபாஈ மஸ்ஜித் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.அப்துஸ்ஸலாம் வாழ்த்துரை வழங்கினார்.



சிறப்பு விருந்தினரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், மத்ரஸா சார்பில் நடத்தப்பட்ட போட்டிகள், தேர்வுகள், ஹிஃப்ழு மத்ரஸா தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மத்ரஸாவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுகள் அனைத்தையும், நகரப் பிரமுகர்கள் வழங்கினர். ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ துஆவைத் தொடர்ந்து ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.









பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வழியனுப்பு:

மறுநாள் 24.06.2014 செவ்வாய்க்கிழமையன்று மாலையில், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற மாணவர்களை மத்ரஸா வெளிமேடையிலிருந்து நகர்வலமாக அவர்களது இல்லங்களுக்கு பைத் பாடி அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் புதுப்பள்ளி, கடைப்பள்ளி ஆகிய பள்ளிவாசல்களில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.







சிங்கை காயல் நல மன்றத்தின் ஊக்கப் பரிசு:

நிறைவில், காயல்பட்டினம் மத்ரஸாக்களில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட ‘ஹாஃபிழ் மாணவர்கள் ஊக்கத்தொகை வழங்கும் திட்ட’த்தின் கீழ், 12 மாணவர்களுக்கும் தலா ரூபாய் 2 ஆயிரத்து 500 தொகை வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் ஊக்கத்தொகையை மாணவர்களிடம் வழங்கினார்.


[இப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]

அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும், எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரது ஒருங்கிணைப்பில் மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், முன்னாள் - இந்நாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

படங்களுள் உதவி:
ஃபாஸில் ஸ்டூடியோ
A.M.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா

மற்றும்
A.S.அஷ்ரஃப்


ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட மார்க்க விழாக்கள் தொடர்பான செய்திகளை பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்:-

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4

ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Congradulations Hafizhul Quran....
posted by Muhammad Sulaiman (Chennai) [15 June 2015]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 40991

Masha Allah.... I Congradulate all the Hafizhul Quran who got the sanadh in the Hamidhiyya Madharasha. You are the flowers of the Paradise. May Allah increase your Memorizing power and enhance your fluency in reciting the Quran without any mistakes. Recite the Holy Quran Continuously for performing the ramadhan Prayers. I request you all to intercede for me in the last day of Judgement. Aameen.

With Best Regards & Salam,
Muhammad Sulaiman
Software Testing Engineer -Team Lead,
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
கடையில்லை, குடியுண்டு?!  (13/7/2014) [Views - 3818; Comments - 9]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved