Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:55:51 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13952
#KOTW13952
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 25, 2014
DCW தொழிற்சாலையை மூடக் கோரி, கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம்! தாயிம்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை மக்கள் திரட்சி!! விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரை!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4259 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலையை மூடக் கோரி காயல்பட்டினத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம் மற்றும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரையாற்றியுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-

மனித சங்கலி போராட்டம்:

சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மனித உயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் வகையில், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையை மூடக் கோரி, மனித சங்கிலி போராட்டம், இம்மாதம் 20ஆம் நாள் வெள்ளிக்கிழமை 17.15 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் தாயிம்பள்ளி சந்திப்பில் துவங்கி, கே.டி.எம். தெரு, பிரதான வீதி, தைக்கா பஜார் வழியாக பேருந்து நிலையம் வரை - நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த - அனைத்து மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இடைவெளியின்றி கைகோர்த்து நின்றனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டம் 18.15 மணிக்கு நிறைவுற்றது.















எதிர்ப்பு முழக்கம்:

மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும், கருப்பு பேட்ஜ்களை அணிந்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தியதுடன், பொதுமக்களின் எதிர்ப்புணர்வுகளை மதிக்காமல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருவதைக் கண்டித்தும், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அனுமதியை ரத்து செய்யக் கோரியும், பொதுமக்களின் அனைத்து அச்சங்களையும் முழுமையாகப் போக்கும் வரை தொழிற்சாலையை மூடக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

















முழக்க வாசகங்கள் வருமாறு:-

போராடுவோம்! போராடுவோம்!!
இறுதி வரை போராடுவோம்!!!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க
சுறுசுறுப்புடன் போராடுவோம்!

எமது நகரின் சுற்றுச்சூழல்
எவராலும் மாசுபட
ஒருபோதும் அனுமதியோம்!

DCW தொழிற்சாலையே!
பொதுமக்களை பாதிக்காதே!!

DCW தொழிற்சாலையே!
சுற்றுச்சூழலை நாசமாக்காதே!!

DCW தொழிற்சாலையே!
கடலில் அமிலத்தைக் கலக்காதே!!

DCW தொழிற்சாலையே!
சுவாசிக்கும் காற்றை நாசமாக்காதே!!

DCW தொழிற்சாலையே!
நிலத்தடி நீரை நாசமாக்காதே!!

DCW தொழிற்சாலையே!
பெருநோய்களைப் பரப்பாதே!!

DCW தொழிற்சாலையே!
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை
மதிக்காமல் செயல்பட
ஒருபோதும் விட மாட்டோம்!!

DCW தொழிற்சாலையே!
நீ கோடிகள் சம்பாதிக்க
நாங்கள் என்ன பலி கிடாக்களா?

DCW தொழிற்சாலையே!
ஊரை நாசப்படுத்திவிட்டு
நல்லவன் வேடம் போடாதே!!

மத்திய அரசே! மாநில அரசே!!
மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும்
ஆலைகள் மீது நடவடிக்கை எடு!!

மாசு கட்டுப்பாட்டு வாரியமே!
சுற்றுச்சூழல் அமைச்சகமே!!

உன் குடும்பத்தைக் காப்பாற்ற
ஊரை அழிக்க முனையாதே!

ஏமாற்றாதே! ஏமாற்றாதே!!
பொதுமக்களை ஏமாற்றாதே!!!

மாசு கட்டுப்பாட்டு வாரியமே!
பொதுமக்களின் எதிர்ப்புணர்வுகளை
புதைகுழியில் போட்டுவிட்டு
பிச்சைக் காசு பெறுவதற்காக
சட்டத்தை மீறாதே!!

உங்கள் குடும்பம் சொகுசாய் வாழ
நாங்கள் மடிந்து சாவதா?

இயற்கை வளத்தைப் பாதுகாப்பதை விட
உனக்கு வேறு என்ன வேலை?

போயே போச்சு! போயே போச்சு!!
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்
நேர்மை, உண்மை, நாணயத்தின் மீது
எங்களுக்கிருந்த நம்பிக்கையெல்லாம்
போயே போச்சு! போயே போச்சு!!

கோடிகளைக் கொள்ளையடிக்க
கோரிக்கைகளைக் குப்பையில் போட்ட
மாசு கட்டுப்பாட்டு வாரியமே!
நீ என்ன ஆலையின் பிரதிநிதியா?

மூடிடு மூடிடு
DCW தொழிற்சாலையை மூடிடு!!

போதும் போதும்
உயிர் பலிகள் போதும்!

போதும் போதும்
சுற்றுச்சூழல் மாசுபடுவது போதும்!

போதும் போதும்
மக்கள் நில அபகரிப்பு போதும்!

வேண்டாம் வேண்டாம்
விரிவாக்கம் வேண்டாம்!

வேண்டும் வேண்டும்
நஷ்ட ஈடு வேண்டும்!


ஊரின் அனைத்து தரப்பினரும் திரண்டிருந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தால் பேருந்து போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.















விளக்கப் பொதுக்கூட்டம்:

அதே நாளன்று 19.00 மணிக்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார். அதன் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா - டி.சி.டபிள்யு. தொழிற்சாலை தொடர்பாக, அமைப்பின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.



சிறப்புப் பேச்சாளர்கள் உரை:

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் போராளிகளான - பூவுலகின் நண்பர்கள் குழுமத்தைச் சேர்ந்த ஜி.சுந்தராஜன், பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, விழிப்புணர்வுரையாற்றினர்.





டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள், பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த ஆலை செய்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசிய அவர்கள், இந்தியாவில் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடுக்கப்படும் அனைத்து ஆலைகளும் தமிழகத்தில் தாராளமாக நிறுவப்படுவதாகவும், அதற்கு தமிழக மக்களிடம் உள்ள விழிப்புணர்வின்மையே மிக முக்கிய காரணம் என்றும் அவர்கள் பேசினர்.

பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடாதிருப்பதற்காக அரசு இயந்திரங்கள் மேற்கொண்டு வரும் சதி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசிய அவர்கள், இப்போராட்டம் வெறுமனே காயல்பட்டினத்திற்கு மட்டுமானதல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்பிற்குமானது என்பதால், இந்த ஆலைக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாங்களும், தாங்கள் சார்ந்த அமைப்புகளும் உறுதுணையாக இருக்கப் போவதாகவும் உறுதியளித்தனர்.

ஒருவருக்கொருவர் துணை நிற்க உறுதி!:

தொடர்ந்து பேசிய KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், டி.சி.டபிள்யு. ஆலைக்கெதிரான போராட்டங்கள் அனைத்திலும் துணை நிற்கப் போவதாக பேச்சாளர்கள் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, அண்மையில் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டனப் பேரணியில், KEPA அமைப்பின் சார்பிலும், காயல்பட்டினம் நகரின் அனைத்து அமைப்புகள் சார்பிலும் 25 பேர் வரை கலந்துகொண்ட தகவலைத் தெரிவித்து, மக்கள் நலன் காக்கும் இதுபோன்ற அம்சங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.



இறப்புச் சான்றிதழுக்காக பதிவு செய்வோர், இறப்பிற்கான காரணம் புற்றுநோய் எனில், “புற்றுநோயால் இறந்தார்” என தவறாமல் குறிப்பிடுமாறும், வேறு நோய்களால் இறந்திருப்பின் - அந்தந்த நோய்களை தயங்காமல் குறிப்பிடுமாறும், இவ்வாறு குறிப்பிடப்படும் தகவல்கள் அடிப்படையிலேயே அரசு ஆவணங்கள் அமையும் என்பதால், மக்கள் நலன் கருதி இதைத் தவறாமல் செய்யுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, சிறப்பு விருந்தினர்கள் இருவர் குறித்தும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோர் அறிமுகவுரையாற்றினர்.



காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைத்தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கூட்ட தீர்மானங்களை முன்மொழிய, அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதை வழிமொழிந்தனர். (தீர்மானம் தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)



எம்.ஏ.புகாரீ நன்றி கூற, புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்காகவும், அதன் காரணிகளைக் களைவதற்காகப் போராடுவோர் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்ட பின், ஸலவாத் - கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.



ஏற்பாட்டுப் பணிகள்:

மனித சங்கிலி போராட்டம், விளக்கப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்குமான ஏற்பாடுகளை, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைத்தலைவர்களான டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், நிர்வாகிகளான தமிழன் முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, எம்.எல்.ஹாரூன் ரஷீத், பி.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், யு.நவ்ஃபல், சாளை நவாஸ், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.







பங்கேற்ற பிரமுகர்கள்:

அனைத்து நிகழ்வுகளிலும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைத்தலைவர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, அதன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, நகரப் பிரமுகர்களும் - ஜமாஅத் நிர்வாகிகளுமான ஆர்.எஸ்.அப்துல் காதிர், கே.எம்.தவ்லத், ஏ.கே.யாஸீன் மவ்லானா, எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, பல்லாக் லெப்பை, எஸ்.இப்னு ஸஊத், எஸ்.எம்.அமானுல்லாஹ், எல்.கே.கே.லெப்பைத்தம்பி, வி.பி.எம்.இக்பால், வாவு சித்தீக், வாவு எஸ்.அப்துல் கஃப்பார்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான வாவு நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மன்னர் பாதுல் அஸ்ஹப், எம்.எச்.அப்துல் வாஹித், தமுமுக நிர்வாகிகளான ஜாஹிர் ஹுஸைன், முர்ஷித் முஹ்ஸின், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ஷம்சுத்தீன்,

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், மார்க்க அறிஞர்களான பந்தே நவாஸ் மிஸ்பாஹீ, முத்துச்சுடர் ஸாலிஹ் மஹ்ழரீ, எஸ்.ஐ.காதர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன்,

காக்கும் கரங்கள் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ஷம்சுத்தீன், நிர்வாகி ஜப்பான் சுலைமான், சாளை முஹம்மத் அப்துல் காதிர், அரிமா சங்க நகர நிர்வாகி ஏ.எல்.முஹம்மத் நிஸார், காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் எஸ்.ஐ.அபூபக்கர், ஐ.ஐ.எம். நிர்வாகக் குழு உறுப்பினர்களான எம்.ஏ.அப்துல் ஜப்பார், எஸ்.எச்.லுத்ஃபீ, மதிமுக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ஜாவியாவைச் சேர்ந்த இப்றாஹீம் கலீல்,

ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ, மவ்லவீ ஹாஃபிழ் அப்பாஸ் காஷிஃபீ, ஊழல் எதிர்ப்பு இயக்க நகர தலைவர் பாளையம் அப்துர்ரஹ்மான், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களான கலாமீ யாஸர், ஏ.எஸ்.முஹ்யித்தீன், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், ரியாத் காயல் நற்பணி மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன்,

எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நகர நிர்வாகி கண்டி ஸிராஜ், வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

இரவு நடைபெற்ற விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்த ஜி.சுந்தராஜன், மாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு தானாக முன்வந்து கலந்துகொண்டதுடன், ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்.





கருப்புக் கொடி:

போராட்ட நாளான ஜூன் 20 அன்று, டி.சி.டபிள்யு. ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதியளிக்கப்பட்டதைக் கண்டித்து - காயல்பட்டினத்தின் முக்கிய வீதிகளில் ஜூன் 20ஆம் நாளன்று கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.













பாதுகாப்பு ஏற்பாடுகள்:

மனித சங்கலி போராட்டம், விளக்கப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ


காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லாஹ்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [25 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35589

மாஷா அல்லாஹ் புகைப்படங்களைப் பார்க்க பெருமையாக இருக்கிறது.கண்ணியமிகு காயலர்களின் கரங்கள் மட்டும் கோர்க்கப்படவில்லை,கட்டுக்கோப்பானகருத்தொற்றுமையும் கோர்வையாகியுள்ளதை உணரமுடிகிறது!

அன்பு நண்பர் சாமுஹாஜிஅவர்களே,இருபுரமுள்ளவர்களின் கரங்களைப்பிடிப்பதற்க்கு பதிலாக,உணர்ச்சி வசப்பட்டு உங்கள் கரத்தை உயர்த்தி வீர வசனம் பேசும் உங்கள் அசைவு நிழற்படத்தில் நேரடி அறைகூவல்போல் அமைந்துள்ளது!

தன்னால் முடியாவிட்டாலும் மூன்றாவது கோல் துணையுடன் இம் மனித சங்கிலியில் கலந்து கொண்ட மரியாதைக்குறிய முத்து ஹாஜியைப்பார்க்கும் பொழுது எந்த அளவிற்கு இந்த ஆலைக்கழிவுகளால் பாதிக்கப்பட்டவர் களால் இவரின் உள்ளம் பதபதைப்புக்கு ஆளாகி இருக்கும், இதற்க்கு எப்படியும் ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் தங்களால் முடியாத நிலையிலும் முன்னின்று முத்து ஹாஜியைப்போன்ற பல முத்தான இதயமுடைய முதியவர்களை புகைப்படத்தில் பார்த்து பூரிப்படைகிறேன்.அல் ஹம்திலில்லாஹ்!

காயல்பட்டணத்தை கருமைநிற கொடித்தோரணங்கள் ஆர்பரித்து அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறது.அடியெது முடிவெது என்று தெரியாமல் முழு ஊரையும் வலம் வரும் அந்த ஒருங்கிணைந்த காட்சியைக்கண்டு இதயம் சற்று கனத்தாலும் காலத்தின் கட்டாயமே!

பொதுமேடை திடல் கூட்டத்தில் சில இருக்கைகள் காலியாக கிடப்பதைப்பார்த்து என் போன்றோர்களின் நெஞ்சங்கள் சற்று நெருடலாகியது! இது கட்சி கூட்டமோ, கச்சேரி கூட்டமோ அல்ல.ஒவ்வொரு காயலருடைய உயிர் பாதுகாப்புபற்றியது இந்த ஏற்பாட்டை எவ்வளவு சிரமப்பட்டு "KEPA " மற்றும் அதற்க்கு ஆதரவான அன்புள்ளங்கள் ஏற்பாடு செய்திருப்பார்கள், அவர்களுக்கு ஆதரவும்,அரவணைப்பும் அளிக்கும் முகமாக முண்டியடித்துக்கொண்டு கூட்டம் மொயந்திருக்கவேண்டாமா?

அரபு நாட்டில் A /C யில் உட்கார்ந்துகொண்டு இலகுவாக எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று எவரும் எள்ளளவும் எண்ணிவிடவேண்டாம்.என் போன்றவர்களின் உடல்தான் இங்கிருக்கிறதே தவிர உயிரோ உங்களோடுதான் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மையுடைய உணர்வு.

என்போன்றவர்கள் பொருளாதார தேட்டதிற்க்காக பல் ஆயிரம் மையில்களுக்கப்பால் வந்து குடும்பம்,உறவினர் ,நண்பர்களைப் பிரிந்து பொருளீட்ட வந்திருக்கும் துர்பாக்கியவதி நாங்கள். என் போன்றவர்கள் ஊரில் இருந்தால் இப்போராட்டத்தில் முதன்மை பிரிவில் எங்கள் பதிவு இருந்திருக்கும்! . .

வல்ல அல்லாஹ்வின் உதவியால் குடும்ப சரிதமாக தங்கள் நாட்டிலேயே சிறப்புடன்வாழும் உங்களைவேண்டிக் கொள்வது எங்களுடைய கடமை இல்லையா?

இவ்வாலை நட்சிக்கிருமியினால் பரவிய உயிர் கொல்லி நோயின் காரணமாக நம்மில் பலர் தங்கள் குடும்பத்தார் களையும்,உறவுகளையும்,அன்பு நண்பர்களையும் இழந்து தவித்துக் கொண்டிருகின்ற அந்த கொடூரத்தின் காரணமாகத்தான் இந்த வேண்டுகோளை இங்கிருந்து உங்களுக்கு வைக்கிறோம்.இந்த அதி பயங்கர அவலத்தை எண்ணி ஒவ்வொரு வீட்டிலுள்ளவர்களும் தங்கள் தங்கள் மனதிற்குள் ஓசையின்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

குதிததுக் கிளம்பும் கண்ணீரை கட்டுப்படித்தியவனாக,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed salih (chennai) [25 June 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35590

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ..

நாம் எதற்காக கூடிநமோ அதற்கான வெற்றியை வல்ல இறைவன் கூடிய விரைவில் வழங்குவானாக ஆமீன் .

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 5 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர்கள்வரை மிக உற்சாகத்தோடு பங்கு கொண்டார்கள்.அவர் களுக்கு வாழ்த்துக்கள் .

இது போல் எல்லா விசயங்களிலும் நாம் ஒற்றுமையாக கை கோர்ந்து வெற்றி பெற வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

சென்னை இல் இருந்து ,
குளம் . முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [26 June 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35592

அல்ஹம்துலில்லாஹ். இந்த ஒற்றுமையின் பிரதிபலிப்பு நிச்சயம் நம் கோரிக்கையை நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை.

தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் இந்த கொடுமை நமது வாரிசுகளை தாக்காமல் காக்க இதே ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடி வெற்றிபெறுவோம். இன்ஷா அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கொடிய ஆலை மூட மனித சங்கிலி,,,
posted by NIZAR (kayalpatnam) [26 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35593

.குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் உப்பு உற்பத்திக்காக DCW என்ற ஆலையை நிறுவினர். காலப்போக்கில் இது கெமிக்கல் தயாரிக்கும் ஆலையாக மாற்றப்பட்டது. எனவே இதை கெமிக்கல் என்றே மக்கள் அழைத்தார்கள். இதன் நிர்வாகத்தால் ஒரு CBSE பள்ளிக்கூடம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் ஆங்கிலவழி பள்ளிகளில் தலைசிறந்த பள்ளியாக இன்னும் இருந்து வருகிறது. இங்கு படிக்கும் குழந்தைகளை கெமிக்கலில் படிப்பதாகத்தான் சொல்லுவார்கள்.

50 வருடத்துக்கு மேலாக செயல்படும் இந்த ஆலையின் அமில கழிவுகள் சுத்திகரிப்பு செய்யாமல் நேரிடையாக காயல்பட்டினம் கடலில் கலந்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் கடல் இந்த அமில கழிவுகளால் செங்கடல் போன்று காட்சிஅளிக்கும். சிறு பிள்ளைகளில் இதைபற்றி பெரியவர்களிடம் கேட்கும்பொழுது கெமிக்கலில் இருந்து கேசை திறந்துவிட்டதாக சொல்லுவார்கள்.

இப்படி காயல்பட்டினம் கடலை, காற்றை மாசுபடுத்தி வருடத்துக்கு 1500 கோடிக்கு மேல் இலாபம் அடைகின்றனை. இந்த ஆலையின் விசக்கழிவால் காயல்பட்டினம் மக்கள் புற்று நோயால் மட்டுமின்றி ஆஸ்துமா போன்ற பல நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். எங்கிருந்தோ வந்து இவன் கோடி கோடியாய் சம்பாதிக்க 500 மேற்பட்ட நம் ஊரு மக்கள் கொடிய நோய்களால் இறந்துள்ளனர்.

இதன் ஆலையின் ஆபத்தை உணர்ந்து ஊரு மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று இந்த ஆலையை மூடவேண்டும்.நம் வருங்கால சந்ததியினர் வளமான வாழ்வை பெறுவதற்கு வழி வகுப்போமாக,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பாதிக்கப்பட்ட மக்களின் படையெடுப்பு...!
posted by முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [26 June 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 35594

டிசிடபிள்யூ வில் தூசி படியும் நாள் விரைவில் வரும். இன்ஷா அல்லாஹ்!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கூட்டு முயற்சி வெற்றியை தரும்... இன்ஷா அல்லாஹ்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [26 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35595

இந்தியாவின் புனித நதியாக போற்றப்படும் கங்கை நதியில் குளிப்பவர்கள் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடம் என்று பாபா அணு ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கங்கை நதி நீரின் தூய்மை குறித்து பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் புற்று நோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்ஸ் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் கங்கை நதி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு அதிகமாக குரோமியம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது வீரியமுள்ள நச்சுப் பொருள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக கங்கை நதியில் கலப்பதே தண்ணீர் இந்த அளவுக்கு மாஸ் அடைவதற்கு காரணம் என அவர்கள் தெரிவிகின்றனர். கங்கை நதி நீரை தூய்மை படுத்த ப்ளுரைடு சோதனை முறையை தாங்கள் கண்டுப்பிடித்ததாகவும், குறைந்த செலவிலான இந்த முறை துல்லியமான முடிவுகளை தரும் என்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் என்.சி.சி.எம் என்ற அமைப்பு கூறியுள்ளது. இந்த முறையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி மத்திய அரசு கங்கை நதியை தூய்மை படுத்தலாம் என்றும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் - http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=98060

நமது நகரில் இயங்கும் DCW இரசாயன ஆலையின் நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் பல லட்ச லிட்டர் மெர்குரி அமிலங்களை ஆற்று நீரோடை வழியாக நமது கடலில் கலக்க செய்து இருக்கிறது.. அப்போதெல்லாம் விரல் விட்டு என்ன கூடிய ஒரு சிலரை தவிர நாம் யாரும் இது விசியமாக அக்கறை (விழிப்புணர்வு) கொள்ளவில்லை என்பது வேதனையான செய்தி - DCW நிர்வாகம் அன்று வெளியேற்றிய மெர்குரியின் பாதிப்பை இன்று உணருகிறோம்.. மெர்குரியின் வீரியம் அதனால் உடலில் ஏற்படும் (புற்று நோய் மற்றும் பல கொடிய நோய்) நோயால் இன்று நகரில் பல சகோதர - சகோதரிகளை குழந்தை செல்வங்களை இழந்து இந்த அமில ஆலையால் கேள்விக்குறியாக்க பட்டுள்ளோம் -

இன்ஷா அல்லாஹ்... அமில ஆலைக்கு எதிரான நமது கூட்டு முயற்சி நகரின் அணைத்து மக்களுக்கும் நன்மை அடையும் முகமாக வல்ல இறைவன் ஆக்கி வைப்பானாக..ஆமின்.

நாளைய நமது தலைமுறையினர் நமக்காக துவா செய்யட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. எதிலும் ஒரு நன்மை , இதிலும் ஒரு நன்மை
posted by Abdul Razak (Chennai) [26 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35599

அல்ஹம்துலில்லாஹ் , அல்லாஹ்வுடைய தனிப்பெரும் உதவியினால் மட்டும் இன்றைய காயல் கரங்கள் கை கோர்த்துள்ளன.. இந்த கொள்கை அந்த கொள்கை அவனை பார்த்து காபிர் , முனாபிக் என்று சொல்லி அவரை பார்த்தால் சலாம் சொல்ல மாட்டேன் , இவனை பார்த்தால் பேசவே மாட்டேன் என்று மார்க்கத்தின் பெயரால் தங்களையே ஏமாற்றி கொண்ட காலம் எல்லாம் மலை ஏறி விட்டது அல்ஹம்துலில்லாஹ் .

இதற்கான காரணங்கள் மக்கள் மார்க்கத்தை படிக்க புரிய ஆலிம்களை மதித்து அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை நல்ல முறையில் ஒற்றுமையாக செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்பது உண்மையானாலும் இது போன்ற(KEPA etc) நல்ல இயக்கங்களும் காரணம் என்பது மறக்க/மறைக்க முடியாத உண்மை .

வாழ்த்துக்கள் KEPA . தொடரட்டும் உங்கள் சேவை .. அல்லாஹ்வின் தனிப்பெரும் உதவியினால் வெற்றி நம்மை தேடி வரும் இன் ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மேலும் சில
posted by Abdul Razak (Chennai) [26 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35600

பார்க்க மிக அருமையாக இருந்தால் \ இனி வரும் காலங்களில் இது போன்ற கூட்டங்களுக்கு ஒற்றுமையாக ஒரு uniform ,நமதூரில் எல்லோரிடமும் இருக்ககூடிய வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை (முடியுமானால் வெள்ளை தொப்பி) யுடன் இருந்தால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக ஒற்றுமையை வெளிப்படுத்தலாமே ..

எல்லா நேரங்களிலும் கை கோர்த்து இருப்பது(போன் கால் , வேறு தேவைகளினால்) முடியாது என்றாலும் மக்களுக்கு/அரசிற்கு எடுத்துக்காட்டும் நிழல் படங்களின் போது கை கோர்த்தே இருந்தால் நம் பலம் பறை சாட்டப்படலாம் ,

இருப்பினும் வெற்றி அல்லாஹ்விடமிருந்து மட்டுமே ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நீங்கள் செய்வீர்களா......? நீங்கள் செய்வீர்களா?
posted by s.s.md meerasahib (TVM) [26 June 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35622

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களே....... சுற்று வட்டார எல்லா வித இயற்க்கை வளம்களையும், உயிர்களையும் காவு கொல்லும். DCW ஆலையை இழுத்து மூட காயல் மக்களோடு ஒத்துழைப்பு தாருங்கள். பாசகரமும், நேசகரமும், எங்களுக்கு நீட்டாவிட்டாலும்....... நாசகரம் நீட்டி DCW க்கு ஆதரவு கொடுக்காதீர்கள்.

செய்வீர்களா.....? நீங்கள் இதை செய்வீர்களா......?

அன்பு KEPA அங்கத்தினர்களே.... இனி ஆலையின் நுழைவு வாயிலில் ஜனநாயக ரீதியில் அறப்போராட்டத்தை அறிவியுங்கள். ஆலை ஆட்டம் காண ஆரம்பிக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [29 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35677

DCW தொழிற்சாலையை மூடக் கோரி, வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை வாயில் முன் போராளிகளை திரட்டி கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம், கண்டன பொதுக்கூட்டம் வைத்தால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved