Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:54:12 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13820
#KOTW13820
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 26, 2014
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடரப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4103 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது DCW தொழிற்சாலை. 1958 ஆம் ஆண்டு இப்பகுதியில் துவக்கப்பட்ட இத்தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக புகார்கள் உள்ளன.

இதற்கிடையே, இத்தொழிற்சாலை - தனது உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசின் - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் (MINISTRY OF ENVIRONMENT AND FORESTS) - 2010ம் ஆண்டில் - விண்ணப்பித்திருந்தது.

அதன்படி - அந்நிறுவனத்தின் Poly Vinyl Chloride (PVC) உற்பத்தி ஆண்டுக்கு 90,000 டன் அளவில் இருந்து 1,50,000 டன் என உயர்த்தப்படும். Tri Chloro Ethylene (TCE) உற்பத்தி ஆண்டுக்கு 7,200 டன் அளவில் இருந்து 15,480 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்படும். புதிதாக ஆண்டுக்கு 14,400 டன் கொள்ளளவில் Chlorinated PVC (CPVC) என்ற பொருள் உற்பத்தி செய்யப்படும். மேலும் - நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தி, தற்போதைய 58 MW அளவில் இருந்து, 108 MW அளவிற்கு உயர்த்தப்படும்.

இந்த விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து, காயல்பட்டினம் மக்கள் சார்பாக - 2011ம் ஆண்டு நடந்த மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் உட்பட பல தருணங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் - மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இவ்வாண்டு பிப்ரவரி 24 அன்று - DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் (ENVIRONMENTAL CLEARANCE) வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், ஏப்ரல் 16 அன்று அத்தொழிற்சாலையின் PVC பிரிவின் விரிவாக்கத் திட்டங்களுக்கு Consent To Establish (CTE) என்ற முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையே, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கியுள்ள ஒப்புதலை எதிர்த்து - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA) சார்பாக, சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் (NATIONAL GREEN TRIBUNAL) தெற்கு கிளையில் (SOUTHERN BENCH) வழக்கு தொடரப்பட்டுள்ளது.





அவ்வழக்கு (APPEAL NO.37/2014 [SZ]) இன்று அனுமதிக்காக - நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாணையம், வழக்கை அனுமதித்து, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் வழக்கை ஜூலை 10, 2014 தேதிக்கு ஒத்திவைத்தது. (இடைப்பட்ட காலம் பசுமைத் தீர்ப்பாணையத்தின் விடுமுறை நாட்களாகும்.)

காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக - மூத்த வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் அவர்களின் குழும வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.

இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக - மத்திய அரசு (அதன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர்), தமிழக அரசு (அதன் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர்), DCW தொழிற்சாலை (அதன் நிர்வாக இயக்குனர்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (அதன் உறுப்பினர் - செயலாளர்), இத்திட்டத்திற்கு - DCW தொழிற்சாலை சார்பில் ஆவணங்கள் தயாரித்த PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED மற்றும் CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:50 pm / 26.05.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்ல செயலுக்கு நாம் என்றும் KEPA விற்கு துணை நிற்ப்போமாக..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 May 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35105

நல்ல ஒரு ஏற்பாடு KEPA அமைப்பிற்கு பாராட்டுக்கள்.. மேலும் நகர் மக்கள் மத்தியில் நீதி மன்றம் மீது நம்பிக்கை துளிறுடுகிறது..! பொறுத்து இருந்து இறுதி வரை ஒற்றுமையுடன் KEPA உடன் இணைந்து நாம் போராடுவோம் நமக்காகவும் - நமது அடுத்த தலைமுறைக்காகவும்..!

நல்ல கருத்தக்களை பயன்னுள்ளதாக KEPA விற்கு ஆலோசனைகளாகவும் - களபணியாளர்களாகவும் - பொருளாதார ரீதியாகவும் நாம் வழங்குவோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விடியலை நோக்கி ஒரு சட்டப் பயணம்
posted by Mauroof (Dubai) [27 May 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35106

நச்சுக்களை அன்றாடம் அசராமல் கக்கி இயற்கை, மனித வளம், நீர்வளம் & மண்வளம் என அனைத்தையும் பாழ்படுத்தி வரும் இந்த நாசகார DCW தொழிற்சாலையை மூட வேண்டும் என அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வர, இந்த வந்தேறி நாசக்காரர்களோ தங்களது பணபலம் மற்றும் இவர்களால் சொகுசு வாழ்வை அனுபவிக்கும் மக்கள் நலனில் கிஞ்சிற்றும் அக்கறையில்லாத அரசியல்வியாதிகள் பலரின் துணையோடு நச்சு ஆலையின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் பெற்று வருகிறார்கள். அப்பேற்பட்ட அரசியல்வியாதிகளை நாம் இன்னும் அடையாளம் காண மறுக்கிறோம்/மறக்கிறோம்/மறந்தோம்.

KEPA மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அளிக்கப்பட மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

நிற்க, KEPA தற்போது சட்டத்தின் வாயில்களை தட்டியுள்ளது வரவேற்க்கத்தக்கது. நீதி இன்னும் செத்து விடவில்லை என்று நிரூபிக்கும் வகையில் பசுமைத் தீர்ப்பாயம் ஒரு பசுமையான தீர்ப்பு ஒன்றை இந்த வழக்கில் அளித்திட வேண்டும். மேலும் அது இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தாலும் உறுதிப்படுத்தப் படவேண்டும்.

KEPA -வின் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு காயலின் மண்ணின் மைந்தர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான வகையில் தோள் கொடுக்க வேண்டும். அவர்கள் சீன தேசம் வாழ் காயலர்களாக இருப்பினும் சரியே. வளர்ச்சி என்ற மாயை நம் கண்களையும் நம் கண்மணிகளையும் குருடாக்க விடக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. KEPA வின் முயற்சி வெற்றிபெறட்டும்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [27 May 2014]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 35107

நல்ல முயற்சி , வரவேற்க்கதக்க விஷயம். எதையும் நாம் சட்டரீதியாக அணுக வேண்டும். நீதிமன்றங்களின் வாயிலாக நாம் சட்ட உரிமையை பெற முடியும். இதைதவிர நமக்கு வேறு வழியில்லை.

ஏனெனில் மத்தியில் புதியதாக குஜராத்தியரின் அரசு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. புதியவர் தொழிற்ச்சாலைகளின் ஆதரவாளர். நமது ஊர் தொழிற்சாலையின் உரிமையாளரும் குஜராத்தியர்தான். எனவே அரசு இயந்திரங்களில் நம் தொழிற்ச்சாலை அதிபரின் கை மேலோங்கியே இருக்கும். எனவே நமக்கு நீதிமன்ற அணுகுமுறையை தவிர வேறு வழியில்லை.

KEPA வின் முயற்சி வெற்றிபெறட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நல்லதைப் பேசுவோம்! அல்லது வாய் மூடி இருப்போம்!!
posted by Hameed Rifai (Jeddah) [27 May 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35110

“சட்டத்தின் உதவியை நாடினால் என்ன?” “வழக்குப் பதிவு செய்தால் என்ன?” என வெளியூர்களில் இருக்கும் நம்மில் பலர் இலகுவாகக் கருத்துப்பதிவு செய்துவிட்டோம். நான் கேட்டறிந்த தகவல்கள்:-

(1) முதலில் மக்களுக்கு இந்த ஆலையினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஆபத்து விளங்க வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(2) மத்திய மாநில அரசு நிர்வாகங்களுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களுக்கு, சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளுக்கு முறையான கோரிக்கைகள் அனுப்பப்பட வேண்டும். அதுவும் தேவைப்படும்போதெல்லாம் செய்யப்பட்டுள்ளது.

(3) மக்கள் ஒருங்கிணைந்த நிலையில் - ஒரே குரலில் இந்த நச்சு ஆலைக்கு எதிராகப் போராட வேண்டும். அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளும் செய்யப்பட்டு, போராட்டங்களும் இறையருளால் ஒற்றுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

(4) நிறைவாக தற்போது நீதிமன்றத்தின் கதவை KEPA தட்டியுள்ளது.

கொள்கை வேறுபாடுகளை மறந்து, ஊர் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தம் சொந்த அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இதற்காக தமது அறிவையும், பொன்னான நேரத்தையும், உழைப்பையும், பொருளையும் தியாகம் செய்துகொண்டிருப்பவர்களை - அவர்களிடமும் விசாரிக்காமல், அவர்களைப் பற்றி அறிந்தவர்களிடமும் விசாரிக்காமல், அல்லது விசாரித்த பின்பும் ஏற்க மனமில்லாமல், தங்கள் உள்ளத்துக்குள் ஏதோ சில கெட்ட எண்ணங்களை தாங்களாகவே வைத்துக்கொண்டு, வாய்க்கு வந்த படி விமர்சிப்பவர்கள் குறைந்தபட்சம் செய்ய வேண்டியவை:-

(1) என்ன தவறு இவர்கள் மீது இருப்பதாகக் கூறுகின்றனரோ, அந்தத் தவறை இவர்களிடம் நேரடியாகக் கூற முன் வர வேண்டும். அல்லது பொதுமக்களுக்கு பகிரங்கமாகக் கூற வேண்டும்.

(2) தற்போது KEPA எனும் பெயரில் நமதூர் மக்கள் இணைந்து செய்யும் இந்தச் சேவைகளில் குறையிருப்பதாகக் கருதினால், அதை விட சிறப்பாக இப்பணிகளைப் பொறுப்பேற்று முன்னின்று செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு வேலை இருக்காது என்பதோடு, இந்தப் பணியைச் செய்யும் விமர்சகர்களுடன் என் போன்றவர்களும் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

(3) ஆகக் குறைந்தது, நமது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது போல, “அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியவர், நல்லதைப் பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்!!” என்ற பொன்மொழிக்கு ஏற்ப, தமது திருவாய்களை மூடியாவது இருக்கட்டும்.

இத்தனையையும் தாண்டி, “நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க! நாங்க எங்க வாயை மூட தயாராக இல்லை” என்ற போக்கில் செயல்பட்டால்... ஹயாத், மவ்த் அனைவருக்கும் உள்ளது. மரணிக்கும்போது நல்லவர்களாக இறைவனிடம் செல்ல வேண்டும்.

தாங்கள் செய்த விமர்சனங்களால் இந்த நல்ல காரியங்களுக்கு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்பட்டு, அதன் விளைவாக நம் மக்களுக்கு பாதிப்பு உண்டானால், அவை அனைத்திற்கும் அல்லாஹ்விடம் இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அல்லாஹ் நம் யாவரையும் காப்பாற்றுவானாக, ஆமீன்.

இதுவரை ஆதரவாகவோ, எதிராகவோ விமர்சித்த நாம், இந்தப் பணிகள் நமக்கானவை என்று இப்போதாவது உணர்ந்தால், நமது உழைப்பை, ஆதரவை, பொருளாதார ஒத்துழைப்பை நம்மால் இயன்ற அளவுக்கேனும் வழங்கிடுவோம் - இந்த நல்ல காரியங்களுக்காக!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நாசக்கார தொழிற்சாலைக்கு எதிராக நாம் KEPA வை வலுப்படுத்துவோம் வாருங்கள்.
posted by syed ahamed (chennai ) [27 May 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35115

அன்பார்ந்த காயல் மண்ணின் மைந்தர்களே.. இறைவன் வழங்கி இருக்கும் நமது பொருளாதரத்தில் ஒரு சிறிய தொகையை நமக்காக போராடும் கெபா அமைப்பிற்கு வழங்கி அவர்களின் நீதி மன்ற செலவிற்கு வாரி வழங்க முன் வருவோம், நாசக்கார தொழிற்சாலைக்கு எதிராக நாம் KEPA வை வலுப்படுத்துவோம் வாருங்கள்.
நாம் இந்நகரில் சுகாதாரமாக நோயின்றி வாழவே இது நாம் நமக்காக நாம் செய்யும் செலவு. நமது சகோதரர்கள் நமக்காக அவர்களின் அன்றாட சொந்த பணிகளை இதற்காக அர்ப்பணித்து நீதி மன்றம் வரை சென்று நமது சந்ததிகளுக்காக களம் இறங்கி உள்ளார்கள். நாமும் நம்மால் இயன்ற உதவியை நாம் செய்ய கடமைபட்டு இருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved