Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:53:06 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12932
#KOTW12932
Increase Font Size Decrease Font Size
சனி, பிப்ரவரி 1, 2014
டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த தந்தி டிவியின் உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சாலை துணைத்தலைவர் பேட்டி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4635 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த ‘தந்தி டிவி’யின் ‘உள்ளது உள்ளபடி’ என்ற தலைப்பிலான நேரலை நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 31) 14.00 மணி முதல் 15.00 மணி வரை ஒளிபரப்பட்டது.

அந்த நிகழ்ச்சியை சென்னையில் இருந்து தந்தி டிவி யின் மூத்த செய்தியாளர் ஆண்ட்ரூஸ், காயல்பட்டினத்தில் இருந்து தந்தி டிவி செய்தியாளர் தெய்வானை ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



அரங்கில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நரசிம்ம ராஜ், தொலைபேசி மூலமாக கடலூரில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள் செல்வம், தொலைபேசி மூலமாக தூத்துக்குடியில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பாத்திமா பாபு, காயல்பட்டினத்தில் இருந்து நேரடியாக - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள், ஆறுமுகநேரி உப்பள தொழில் அதிபர்கள் உட்பட பொது மக்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.



இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தந்தி டிவி சார்பாக டி.சி.டபிள்யு. தொழில் நிறுவனத்திற்கு அழைப்பு விடப்பட்டதாக தெரிகிறது. அவ்வழைப்பினை அந்நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என இந்நிகழ்ச்சியின் போது அத்தொலைகாட்சியின் செய்தியாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் - இந்நிகழ்ச்சி, காயல்பட்டினத்தின் குறுக்கு சாலை அருகே அமைந்துள்ள, இத்தொழிற்சாலையை ஒட்டியுள்ள நீரோடைக்கு அருகில் இருந்து - உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துகளுடன் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் - இத்தொழிற்சாலையின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்கள், பிரச்சனை செய்யவே, தந்தி டிவி குழுவினர்கள் - இந்நிகழ்ச்சியை, நகரின் உள்ளிருந்து நேரடி ஒளிபரப்பு செய்தனர்.



நேரடி ஒளிபரப்பின் போது பங்கேற்க மறுத்த டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகிகள், நிகழ்ச்சி முடிந்தப்பின் தந்தி டிவி செய்தியாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.



DCW தொழிற்சாலை சார்பாக அதன் துணைத் தலைவர்களில் ஒருவரான ஜெயகுமார் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டி - தந்தி டிவியின் செய்தி களம் நிகழ்ச்சியில் நேற்றிரவு (ஜனவரி 31) 9:00 மணியளவில் ஒளிபரப்பாகியது.

அந்த நிகழ்ச்சியின் முழு தொகுப்பு காண இங்கு அழுத்தவும். டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் துணைத் தலைவர் பேட்டி குறித்த செய்தி - அப்பதிவின் 12:39 நிமிடத்தில் இருந்து 14:03 நிமிடம் வரை உள்ளது.

அப்பேட்டியில் டி.சி.டபிள்யு. துணைத் தலைவர் (வேலை) ஜெயகுமார் கூறிய தகவல்களின் சாராம்சம்:

--- அரசு மூலமான தகவல்கள் பார்த்ததில் புற்று நோய் பரவுவதாக இல்லை

--- புற்று நோயெல்லாம் காற்று சுவாசிச்சு எல்லாம் வரவே வராது

--- சில பிரீதிங் டிரபல், காஃபு, கீஃபு எல்லாம் வரலாமே தவிர ... அது மாதிரி இருக்கலாம்

--- இந்த மீனை சாப்பிட்டதால எல்லாம் புற்று நோய் எல்லாம் ...(வார்த்தையை முடிக்க வில்லை)

--- அது தவிர மெர்குரி பற்றி சொன்னாங்க ... DCW நிறுவனம் 2002-2003 ல சிறந்த காஸ்டிக் சோடா நிறுவனம் விருது வாங்கியிருக்கு, அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைந்த மெர்குரி லெவல் தான் இருந்துச்சு

--- 2007 ல நாங்க மெர்குரியை விட்டு மெம்ப்ரேன் செல் முறைக்கு மாறிட்டோம்

--- இவங்களை விட நாங்க அடிக்கடி நீரை டெஸ்ட் பண்றோம். கடலிலே கலககுதானு பார்க்குறோம். அது மாதிரி எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை

--- சமீபத்தில சோழமண்டலம் MS அசோசியேட்ஸ் அறிக்கையெல்லாம் கூட இருக்குது ... வேணும்னா உங்களுக்கு தரோம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai S Nawas (singapore) [01 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 32916

என்ன புலம்புறார் இந்த ஆள். காசு கொடுத்த எப்படி வேண்டும்னாலும் பேசுவாங்க.

இவ்வளவு போராட்டம் நடத்தியும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. அரசே அவர்களிடமிருந்து பிச்சை ஏந்தும் போது, எத்தனை உயிர் போனால் அவங்களுக்கு என்ன?

வேறு வழி இல்லை, தேர்தலை புறக்கணிப்பது தான் சரியான தேர்வு. காயலர்கள் ஒற்றுமையோடு நடந்தால், முடியும்.

அன்புடன்
-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [01 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32920

அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த நச்சு ஆலையுடைய பாதிப்புகள் காயல்பட்டினத்துக்கு மட்டும் அல்ல மாறாக சுற்றுவட்டாறதுக்கும் உள்ள பாதிப்புகள் . இந்த போரட்டத்தில் அணைத்து ஊர்மக்களையும் ஒன்று திரட்டி சடரீதியான ஆலோசனை கூடம் கூட்டி இன்னும் வாழுவான் முறையில் நடத்த வேண்டும் அதற்கு நம் அனைவரின் ஒருகிணைந்த ஆதரவை வழங்கவேண்டும் .

இதுபோன்ற காரியங்களில் தொடர் முயட்சியான் போராட்டம்தான் சிறந்த முடிவை சீக்கிரம் தரும் தந்தி தொலைகாட்சி , இதில் கலந்து கொண்ட அணைத்து மக்கள் ,உள்ளூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களின் அனைதுமகளுகும் நன்றி .

இந்த இடத்தை வீட்டு அந்த நாசகார நச்சு உற்பத்தி கொல்லீச்சாலையை முற்றிலுமாக அகற்றிட அனைவரும் பாடுபட்டு இறைவனின் உதவியுடன் வெற்றியடைவோம் .

நம்முடைய இந்திய நாட்டை பொறுத்தவரை பொதுவாக எந்த விதமான் சுற்றுப்புற சூழலும் சரியாக பாதுகாக்க படுவதில்லை என்பதுதான் உண்மை . மக்களின் எந்த வித உணர்வு பூர்வமான் போராட்டங்களும் அரசால் மதிகபடுவதில்லை மக்கள் செய்யும் அறிவுகலந்த புரட்சி ஒன்றுதான் எதற்கு வழி . ஒருநாள் இந்த போராட்டம் இன்ஷா அல்லா நமக்கு வெற்றியை தரும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fareed (Dubai) [01 February 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32921

Salam

Yes i accept Mr.Nawas comments. This is correct time to take our decision.Pls all the kayal organization meet and discuss about the possibility of boycott the upcoming parliamentary election


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...சுத்தப்பொய் ...
posted by ceylon fancy kazhi (Thiruvalla,Kerala.) [01 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32923

-- இவங்களை விட நாங்க அடிக்கடி நீரை டெஸ்ட் பண்றோம். கடலிலே கலககுதானு பார்க்குறோம். அது மாதிரி எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை (copy & பேஸ்ட் )

என்று இவர் சொல்லுவது சுத்தப்பொய் ..பின்னே ஏன் கடல் நீர் சிவப்பாக மாறுகிறது ?..

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா ,கேரளா ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S,I,ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [01 February 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32926

எவன் தான்,இவ்வுலகில் தான் செய்த தவறை ஒத்துக்கொண்டு இருக்கின்றான்.

ஒரு பத்து ரூபாய் தன்னை விட்டு போய்விடும் என்றாலே, அனைத்து உண்மைகளையும் முழுங்கி விடக்கூடிய இந்த காலத்தில், பலகோடி பெறுமதியுள்ள ஆலையை, இவர் உண்மையை ஒத்துக்கொண்டு மூடு விழாவா எடுத்து விடப்போகிறார்.

ஐயா.. கொஞ்சம் துளிர் சிறப்பு பள்ளிக்கு சென்று பாருங்க ஐயா...!! சுற்று வட்டார குழந்தைகள், அதிக அளவில் குறைபாடுகளுடன் இருப்பதற்கு காரணம் தெரியும்.

ஜெயின் சமூகத்தில் ஒரு எரும்பை கூட கொள்ள மாட்டார்கள் என்ற கொள்கைக்கு மாறாக, ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் வேட்டு வைக்கும் செயலை செய்கின்றீர்களே, நாங்கள் எறும்பை விட கீழானவர்களா..ஐயா.

நீங்க பேட்டி கொடுத்தது " செஞ்சோற்றுக் கடன் தீர்க்க" , நாங்க பேட்டி கொடுத்தது " சோற்றிலும் வாழ்விலும் மண் விழுந்ததால் ".

சகோதரர்களே, தந்தி டிவி குழுவினரை நம் துளிர் பள்ளிக்கும் அழைத்து சென்று இருக்கலாமே.

சாளை S,I,ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஜெயகுமார் அவர்களே...! வேண்டாம் உமது புளுகு பேட்டி ரெம்பவே நெருக்கடி வருகிறது என்பதை மட்டும் உணர முடிகின்றது எமக்கு...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [01 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32929

இப்ப நீர் என்ன சொல்ல வாரீர் சும்மா இந்த பதட்டத்தினால் பொய் புரோடு உளறல்கள் எல்லாம் வேண்டாம்யா..!

உமக்கு மடியில் கனமில்லை எனில் துணிச்சல் தோரணையோடு நீர் வேலை செய்யும் DCW தொழிற்சாலையின் மேலிட அனுமதியை பெற்று (தொலைக்காட்சியின் கேமராவுக்கு முன் நேருக்கு நேர் நாம் உட்காந்து) நேர்முக விவாததிற்கு தொலைகாட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் முன் நீர் சென்னைக்கு வந்து எங்களிடம் விவாதம் பண்ண வர முடியுமா..?

மக்கள் முன் உங்களுடைய (DCW) Vs (KEPA) எங்களுடைய விவாதத்தை பொது மக்கள் பார்க்கும்படியாகவும், கேட்கும்படியாகவும் உங்களை அழைக்கிறேன் - அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உமது கேள்விக்கு KEPA வும் KEPA வின் கேள்விக்கு DCW நீறும் உரையாடலாமா...? அல்லது DCW சார்பில் வேறு யாராவது வர முடியுமா..?

சும்மா நாலு பக்க சுவருக்குள் மட்டும் உடகார்ந்து பேசி உனது தொழிற்சாலையின் தரம் / விருது / தரச்சான்று ஆகாய சான்றுன்னு நீங்களே தனக்கு தானே தரச்சான்று பெற்று கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்க வேண்டும்..!

இது முன்காலத்தில் எமது ஊரில் சில நபர்கள் உமது DCW வின் எலும்பு துண்டை சுவைத்து வந்து இருக்கலாம்..! அது கடந்த காலம் அது மலையேறி விட்டது. இன்னும் அது போல ஆட்களை உமது DCW நிர்வாகம் P R O மூலம் இந்நகரில் தேடியும் நபர் கிடைக்காமல் திணறுகிறீர்கள்.. என்பது எமக்கு மிக தெளிவாகவே தெரியும். நட்புடன்..

மழை நீரோடையில் உனது அமில கழிவு நீரை தாகத்தால் எனது ஆட்டுக்குட்டிகள் பல அருந்தி துடிதுடித்து செத்துப்போன கால்நடைகளின் சொந்தக்காரன்..!

தமிழன் முத்து இஸ்மாயில்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஆகா...சேர்ந்துட்டாங்கையா, சேர்ந்துட்டாங்கோ
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [01 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32931

DCW துணைதலைவரின் பேட்டிக்குக்குறிய பதிலை, பல விளக்கங்களோடும், பல ஆதாரங்களோடும் அவருக்கு அள்ளி வீசக் கூடிய முழுபொறுப்பையும் நம் KEPA விற்கு நாம அளித்திட வேண்டும்!

நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த(DCW) விஷியத்தில் ஒரு குடையின் கீழ் நின்று நம் முழு எதிர்ப்பையும் காட்டிட வேண்டும்! அன்பு சகோதர்களே உங்களின் சீரியஆலோசனைகள் எதுவாக இருந்தாலும் அதை முறைப்படி அந்த(KEPA)அமைப்புக்கு தெறியப்படித்திடுங்கள்! தனித்தனியாக வேறு எங்கும் உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்தைப்பதிவை செய்திடல் வேண்டாம்!

ஒரு ஒழுங்குமுறையாகவும், ஒரு நேர்த்தியாகவும் ஒரு அமைப்பின் கீழும் ஒட்டுமொத்தமாகவும் நாம் செயல்படுகிறோம் என்பதை எதிரி பார்க்கும் பொழுது, ஆகா..சேர்ந்துட்டாங்கையா, சேர்ந்துட்டாங்கோ, இனி இவர்களிடம் நம்முடைய பிரித்தாலும் பாட்சா பலிக்காது என்று பயந்தோட வைக்கவெண்டும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மெல்லக் கொல்லும் விஷம் இந்த ஆலை!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்.) [01 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32953

ஐயா, தந்தி டீவியிலெ ஒளிபரப்பானதும் பதறியடித்துக் கொண்டு அடான்ஸ் உடான்ஸ் ஆதாரங்களை (?) அள்ளி வீசும் குத்தகைக்காரரே...? அப்ப டீவி காரங்க வீடியோ எடுக்க வந்த போது ஓடி ஒளிந்தும் ஆளை வெச்சு மிரட்டியதும் எதுக்கு ஓய்...? கேக்குறவன் கேனையன்னா கேப்பையிலும் நெய் வடியும்முன்னு சொல்லுவாங்க...சொல்லுங்க சொல்லுங்க நல்லா சொல்லுங்க நாங்க கேக்கறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...தேர்தலை புறக்கணிப்பது தான் சரியான தேர்வு
posted by Koos Aboobacker (Riyadh) [01 February 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 32959

சகோதரர் நவாஸ் சொன்னதுபோல் ஊரில் அனைவரும், வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

இந்த உறுதியை இப்பவே பெற ஆரம்பிக்க வேண்டும். அரசின் கவனத்திற்கு இப்பவே கொண்டு செல்லனும்.

கடைசி நேரத்தில் இதற்கான முயற்சிகளை ஆரம்பிப்பது நன்மை பயக்காது. மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் யாராவது அரசியல்வாதி வருவார், வந்து DCW மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதிமொழி தருவார். இதை கேட்ட உடன், பலர் மனம் மாறும். மீண்டும் அனைவரும் ஒட்டு போடுவர். இந்த நிலை மாற வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by செய்து அகமது (சென்னை.) [01 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32960

நகரில் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகள் தங்கி செல்லும் சொகுசான புகலிடம் தான் இந்த DCW. நம் நகர் மக்களின் ஒற்றுமையான போராட்டம் மூலம் மட்டுமே தீர்வு ஏற்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by செய்து அகமது (சென்னை.) [02 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32964

DCW தொழிற்சாலையின் இரசாயன கழிவால் மாசுபடும் நமது கடலின் காட்சிகளை நாம் ஏன்.. சர்வேதச மாசு கட்டுப்பாடு துறையின் பார்வைக்கு எடுத்து செல்ல கூடாது.?

கடல் வளம் என்பது அணைத்து நாடுகளின் பொது உடமை அந்த பொதுவான வளத்திற்கு ஒரு நாட்டில் எந்த பகுதியிலாவது கடல் மாசுபட்டு கடல் தாவரங்கள் உயிரினங்கள் மீது சேதம் ஏற்பட்டால் அது சர்வேதச அமைப்புக்கு அறிய படுத்தலாம். நாம் நமது அணைத்து LAB REPORT நகல் தொழிற்சாலையின் இருந்து வரும் இரசாயன கழிவு கடலில் கலக்கும் Google Satellite Map மற்றும் இரசாயன கழிவால் செத்து கரை உதுங்கிய மீன்கள், தாவர செடிகள் இவை அனைத்தயும் ஆதார சாட்சியாக எடுத்து வைக்கலாம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [02 February 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32976

என்னடா KEPA செய்தி ஏதும் வர்றது இல்லை என்று இருந்தேன். புலி பதுகியத்தின் அருத்தம் இப்போ தான் தெரிகிறது "பாய " என்று. சபாஷ் KEPA அங்கத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பலர் கூறியது போல தேர்தல் புறகணிப்பு செய்தால் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [02 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32983

அஸ்ஸலாமு அலைக்கும்

இப்படி பச்சையாக புளுகிற '' இவரை நாம் என்ன தான் சொல்லுவது ....பணம் பத்தும் செய்யும் என்று அந்த காலத்திலேயே சொன்னது ....இப்பது தான் நமக்கு இவர் மூலம் தெரிய வந்து உள்ளது .......

இந்த மோசமான தொழிற்சாலையின் துணை தலைவரை நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ....சுத்தமாக பொய் சொல்லிய இவர் .....இவர் தன் பதவியை தக்காத்து கொள்ளவேணும் அல்லவா .....பணம் ..+.. பதவி ஆசை உள்ள இவர் திருந்த வேண்டுமானால் நம்மை படைத்த இறைவன் தான் அருள் செய்ய வேணும் ......

நம் ஊர் அனைத்து பொது மக்கள் & நமது ஊர் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ...ஓன்று பட்டு தான் முழுமையாக போராட வேணும் .....முக்கியமாக வரகூட்டிய M.P. தேர்தலை நாம் ஒற்றுமையாகவே இருந்து ....M.P... தேர்தலை புறகணிக்க வேணும் ...அப்போது தான் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் முழு கவனமும் நமது ஊர் மக்கள் பக்கம் திரும்பும் ....அப்போது தான் நம் மக்களின் உயிரை பாது காட்க முடியும் ......நமக்கு ஒரு நல்லதோர் தீர்வும் கிடைக்கும் .....

நம் மரியாதைக்குரிய ....தமிழக முதல்வர் அம்மா அவர்களின் முழுமையான கவனத்துக்கு நாம் தான் மிக துரிதமாக கொண்டு செல்லவேணும் ......அதற்க்கான வழியை நமது >> KEPA << அமைப்பினர்கள் செய்தால் நன்று ......

நம்மை படைத்த அல்லாஹ்.....நம்மை காப்பாற்றி ......நமக்கு நல்லது செய்தருள் வானாகாவும் ஆமீன்.....நம் அனைவர்களின் மனம் உகந்த துவா ....உண்டு .......... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நாம் தூங்கியது போதும் இனி அவர்களை தூங்க வைக்க வேண்டும்........
posted by A.W.ABDUL CADER BUKHARI (Jaipur) [03 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32989

அஸ்ஸலாமு அலைக்கும் எனது அன்பான காயல்சொந்தங்களே!

இது நமக்கு சரியான நேரம் எப்படியெனில் தேர்தலை புறக்கணிப்போம் என பகிரங்கமாக அறிவிக்கலாம் மேலும் நமது KEPA FACE BOOK போன்ற வளைத்தளத்தின் மூலமும் மக்களிடம் ஆதரவை திரட்டலாம்................

நாம் தூங்கியது போதும் இனி அவர்களை தூங்க வைக்க வேண்டும்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved