Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:57:27 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12816
#KOTW12816
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 19, 2014
“சிறுபான்மையினர் பகுதி என்பதால் அதிகாரிகள் மெத்தனமோ...?” காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் குறித்து அப்துல் ரஹ்மான் எம்.பி. செய்தியாளர்களிடம் கேள்வி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2768 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி என்பதால் - காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளதாக, இன்று காலையில் காயல்பட்டினம் வருகை தந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. - அவரது வருகையையொட்டி அங்கு வந்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் இன்று காலை 07.30 மணியளவில், செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலம் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தனர்.

கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் - சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார்.





தொடர்வண்டி நிலைய நடைமேடை பகுதிகளைச் சுற்றிப் பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர், அவரது வருகையையொட்டி அங்கு வந்திருந்த செய்தியாளர்களிடம் பேசியதாவது:-



தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தென்னகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழும் இந்நகர், சர்வதேச தொடர்புள்ள ஊராகும். இதன் காரணமாக, வெளிநாடு மற்றும் வெளியூர்வாசிகள் இந்நகருக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நகரில் அமைந்துள்ள ரெயில்வே நிலையத்தை இந்நகர பொதுமக்களும், சுற்றுவட்டார ஊர்களான ஆறுமுகநேரி, பேயன்விளை, அடைக்கலபுரம், அம்மன்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களும், சுற்றுலாப் பயணியரும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆறுமுகநேரியில் ஒரு தொடர்வண்டி நிலையம் இருக்கின்றபோதிலும், அது சற்று தொலைவிலிருப்பதால், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தையே அவர்களும் பயன்படுத்தும் நிலையுள்ளது. இதன் காரணத்தால், இங்கு அடிப்படை வசதிகளை சிறப்பான முறையில் செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில், அனைத்து ரெயில் பெட்டிகளும் நிற்கும் அளவிற்கு நடைமேடையை விரிவாக்கியும், உயர்த்தியும், மேற்கூரை அமைத்தும் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கியமான கோரிக்கை. தற்போது இவ்வசதி இல்லாத காரணத்தால், ரெயில் பயணிகள் ரெயிலில் ஏறவும், இறங்கவும் முடியாமல் கீழே விழுந்து விபத்திற்குள்ளாவது அன்றாடக் காட்சியாகிவிட்டது. ஏறவும், இறங்கவும் முடியாதவர்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக திருச்செந்தூர் ரெயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில், இந்த ரெயில் நிலையத்தைப் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு மிகவும் இருட்டாக உள்ளது. இதனால், சமூக விரோத செயல்கள் இந்த ரெயில் நிலையத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன.

குடிநீர், சுகாதார வசதிகள், இந்த ரெயில் நிலையத்தில் பயணியருக்கும் இல்லை; இங்கு தங்கி பணிபுரியும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இல்லை. இந்த ரெயில் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளரும் இல்லை.



கடந்த 29.12.2009 அன்று - அன்றைய மத்திய ரெயில்வே துறை இணையமைச்சர் இ.அகமது அவர்கள் இந்நகருக்கு வருகை தந்து, ரெயில்வே நிலையத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, இங்கு நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பணிகள் சிலவற்றை நிறைவேற்ற டெண்டர் விடப்பட்டது. அடுத்த சில மாதங்களில் அமைச்சர் அவர்களின் துறை மாற்றப்பட்டு, அவர் வெளியுறவுத்துறை இணையமைச்சாரானார்.

இந்நிலையில், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக விடப்பட்ட டெண்டர், நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டு, சில பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல பணிகள் இதுவரை தொடங்கப்படவேயில்லை. நாங்கள் விசாரித்து அறிந்த வரையில், ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தக்காரருக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றும், மற்ற பணிகளுக்கு பண ஒதுக்கீடே செய்யப்படவில்லை என்றும் பலவாறான தகவல்கள் தரப்படுகின்றன.

இடைநின்று போன மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக செய்து தருமாறு கட்சியின் சார்பில் ரெயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நானே கூட தென்னக ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். இப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி. அவர்களும் ரெயில்வே அமைச்சரிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இருந்தும் கூட தென்னக ரெயில்வே அதிகாரிகள் இன்றளவும் இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

காயல்பட்டினம் சிறுபான்மையினரை உள்ளடக்கிய பகுதி என்பதால், இங்குள்ள தொடர்வண்டி நிலையத்தை அதிகாரிகள் புறக்கணிக்கும் வகையில் பணிகளில் மெத்தனம் காட்டுகிறார்களோ என்று கூட எங்களுக்குக் கருதத் தோன்றுகிறது.

ஓர் அரசுக்கு நல்ல பெயரும், கெட்ட பெயரும் ஏற்படுவது - அதன்கீழ் செயல்படும் அதிகாரிகளால்தான். அந்த வகையில், இவர்களது இச்செயல் மத்திய அரசின் மீது இங்குள்ள மக்களை விரக்தியடையச் செய்துள்ளது.

எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி - எதிர்வரும் 2014 - பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல், காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஏற்பாடு செய்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற - நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் ஊர் நலக்கமிட்டிகளின் நிர்வாகிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை நடத்துவதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து கலந்தாலோசிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டே இன்று நான் காயல்பட்டினம் வந்துள்ளேன். இனியும் கோரிக்கை கண்டுகொள்ளப்படாவிட்டால், இன்னும் பல விதங்களில் போராட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமுள்ளது.

செய்தியாளர்களாகிய நீங்களும், இங்குள்ள மக்களின் பிரச்சினையை உரிய முறையில் அரசு மற்றும் தொடர்வண்டித் துறை நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைவில் பணிகள் முடிக்கப்பட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர மாணவரணி அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.ஏ.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, எம்.எல்.ஷேக்னா லெப்பை, பெத்தப்பா சுல்தான், என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எம்.இசட்.சித்தீக் மற்றும் கட்சியினர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [19 January 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32581

அஸ்ஸலாமு அழைக்கும்,
பாராளுமன்ற உறுப்பீனர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்களை காயலுக்கு வரவேட்பத்தில் மகழ்ச்சி நடை மேடைக்காக குரல் கொடுக்கும் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பீனர் முன்பு ஜெயதுறை இன்னும் எத்தனை உறுப்பீனர்கள் குரல் கொடுக்கும் நிலை வரும் என்று யார் அறிவர்.

நடையாக நடந்தால்தான் நடை மேடைகூட நமக்கு கிடைக்கும் . உறுப்பீனர் பரீந்துந்துரைகள் எல்லாம் ஒரு அளவுதான் எடுபடும் மக்கள் களத்தில் முறைபடி இறங்க வேண்டும் அப்போதுதான் விரைவாக திட்டங்கள் நகரும்.

இந்த முஸ்லிம் லீக்கின் பிறை மேடை காயலுக்கு நடை மேடை கொண்டுவந்தால் சந்தோசம்தான்.

நம் முஸ்லிம் கட்சிகள் ,மக்கள் ,அமைப்புகள் ,தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்புகள் , கிருஸ்துவ அமைப்புகள் ,நடு நீலையான் ஹிந்து மக்கள் , நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் ஒற்றுமையாக இருந்து வரும் பாராளுமன்ற களத்தில் போராட வேண்டும் நம் முஸ்லிம் அமைப்புகளின் ஒற்றுமை மிகவும் முக்கியம். இறைவன் அனைவரையும் ஒற்றுமையாக போதுமானவன் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [19 January 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 32586

"காயல்பட்டினம் சிறுபான்மையினரை உள்ளடக்கிய பகுதி என்பதால், இங்குள்ள தொடர்வண்டி நிலையத்தை அதிகாரிகள் புறக்கணிக்கும் வகையில் பணிகளில் மெத்தனம் காட்டுகிறார்களோ என்று கூட எங்களுக்குக் கருதத் தோன்றுகிறது".

"ஓர் அரசுக்கு நல்ல பெயரும், கெட்ட பெயரும் ஏற்படுவது - அதன்கீழ் செயல்படும் அதிகாரிகளால்தான். அந்த வகையில், இவர்களது இச்செயல் மத்திய அரசின் மீது இங்குள்ள மக்களை விரக்தியடையச் செய்துள்ளது".

மேல் கூறப்பட்ட கருத்துகள் உண்மையே.

என்னதான் இருந்தாலும் அதிகாரிகளை கொஞ்சம் தான் குறை சொல்ல முடியும் ,

ரயில்வே துறையை மண்டலங்கள் வாரியாக பிரித்தபோது நமது மண்டலம்(மதுரை வரை ) பக்கத்திலிருக்கும் மாநிலத்தோடு தான் இருந்தது அப்போது இங்கிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் மண்டலம் தன்னுடைய தலைமை பீடத்தை கூடுதலாக கவனிக்க தவறியதில்லை , இதேபோல் தான் சேலமும், இப்போது தான் விடிவெள்ளி சேலத்திற்கு கிடைத்திருக்கிறது.

இப்போது இருக்கும் நிலையில் ஒருசில தொடர் வண்டியின் இணைப்புகள் கூட அவர்களுக்கு கிடைத்தது போக மீதம் தான் நமக்கு கிடைக்கிறது- நீண்ட தூர ஒரு சில வண்டிகள் கூட நெல்லையிலிருந்து புறப்பட்டு அது பக்கத்திலிருக்கும் மாநிலத்தின் முழு தேவையை பூர்த்தி செய்து சென்றடைகிறது . அதுவும் அதிகாரிகளின் குறை என்று சொல்ல முடியாது.

எதுவுமே யார் செய்தாலும் மக்களுக்கு நன்மையில் முடிந்தால் சரிதான் - வல்லோன் துணை உண்டாகட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பசியெடுத்திருக்கும்... (?!)  (19/1/2014) [Views - 3708; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved