Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:49:57 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12242
#KOTW12242
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 4, 2013
கடற்கரையில் பெண்ணிடம் குடி போதையில் தகராறு செய்த இளைஞர் கைது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3297 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தீபாவளியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில், இம்மாதம் 02, 03ஆம் தேதிகளில் (நேற்றும், நேற்று முன்தினமும்) மாலை வேளையில் மக்கள் திரள் அதிகளவில் காணப்பட்டது.

02ஆம் தேதி சனிக்கிழமையன்று கடற்கரையில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த - பேயன்விளை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சில இளைஞர்கள் குடி போதையில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணுடன் இருந்த அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் தடுக்க முயன்றபோது - இரு சாராருக்கிடையிலும் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, கடற்கரையில் ஆங்காங்கே கூட்டங்கூட்டமாக அமர்ந்திருந்த அனைவரும் ஓரிடத்தில் திரளத் துவங்கினர்.

இது இரு சமூகங்களுக்கிடையில் விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்திவிடும் என்றஞ்சிய சமூக ஆர்வலர்கள் சிலர் உடனடியாக ஆறுமுகநேரி காவல்துறைக்குத் தொடர்புகொள்ளவே, அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறையினர், இப்பிரச்சினையில் தொடர்புடைய காயல்பட்டினம் சுலைமான் நகர் (மாட்டுக்குளம்) பகுதியைச் சேர்ந்த ஹனீஃபா என்ற இளைஞரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, கூட்டம் களைந்து சென்றது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இது தாண்டா போலீஸ்..
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [04 November 2013]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 31183

போலீஸ் அடிலாம்... சும்மா... சூப்பராதான் இருக்கு. இதுபோன்ற விழா நாட்களில் மக்கள் கூட்டம் வரும் என்பது நன்றாக தெரியும். அது போன்ற நாட்களில் காவல் துறையை முற்கூட்டிய அந்த இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டியது அந்த பொறுப்பில் இருபவர்களின் கடமை. வரும் காலங்களில் அந்த முறையை கடைபிடித்தால் யாவருக்கும் நன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2.
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [04 November 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 31186

இதை ஒருவராகப் பண்ணியிருக்க முடியாது. ஒரு குரூபாக சேரும்போதுதான் துணிச்சல் வருகிறது.

ஒருவர் செய்ததாகக் சொல்லப்பட்டு குற்றம் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளி என்று நீதியரசர் தீர்ப்பு சொல்லும்வரை அவர் குற்றவாளியல்ல. மாறாக குற்றம் சுமத்தப் பட்டவரே. அவருடைய அடையாளங்கள் (முகம்) பொது மக்களுக்கு காட்டப்படுவது தவிர்க்கப் படவேண்டும் என்பதே நீதியின் நியதி. அதில் எனக்கு உடன்பாடுள்ளது. அதே நேரத்தில் பெண்களை கேலி, கிண்டல், பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் சம்பவத்தை கண்ணால் கண்டவர்களால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அடையாளம் காட்டப்படுவதில் தவறில்லை என்பது என் கருத்து. காரணம் ஒரு புள்ளியல் படி இந்த மாதிரி குற்றங்களைக் செய்பவர்களில் அதிக விகிதாச்சாரத்தினர் திரும்பத் திரும்ப அதே குற்றத்தை (வாடிக்கையாக) செய்பவர்களாக இருப்பவர்களே..

பெண்ணை கேலி பண்ணியவர் இவர்தான் என்றால் இந்த படத்தை பெரிதாக்கி (Flex board ) புதிய பேருந்து நிலையம், அஞ்சலலுவலகம், கடற்கரை போன்ற இடங்களில் வைக்கவேண்டும்.

This can act as a "Deterrent".

இது கடற்கரையில் அடிக்கடி நடக்கக் கூடியதாகிவிட்டது. சட்டமும் இருக்கிறது, சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சட்டத்தால் அக்குற்றத்தை குறைக்கவியலாது என்பதே அதன் பொருள்.

---------------------------------

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன் வெளியூர் இளைஞ்சர்கள் சிலர் நமதூர் பெண்களை கேலி கிண்டல் பண்ணுவதாக எனக்கு (நன்கு அறிமுகமானவரிடமிருந்து) போன் வந்தது. வீட்டில் ஒரு விருந்தாளியுடன் இருந்த நான் கடற்கரைக்கு உடனே சொல்ல முடியாமல் போனதால் என்னுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து எனக்கு கிடைத்த தகவலைக் கூறி உடனே கடற்கரைக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தேன். அவரும் தான் கடற்கரையில்தான் இருப்பதாகக் சொன்னார். எனக்கு போன் செய்தவரையும் நான் போன் செய்தவரையும் சந்திக்கும்படி செய்துவிட்டு நான் சில நிமிடங்களுக்குப் பின் கடற்கரைக்கு விரைந்தேன்.

அங்கு சென்றபின்தான் எனக்கு தெரியவந்தது பெண்களை கேலி செய்ததாக குற்றம் சாற்றப்பட்டவர்கள் வெளியூர் இளைஞ்சர் அல்ல. அவர்கள் ******* சார்ந்த சில இளைஞ்சர்கள் என்று. அவர்களை விசாரித்ததில் அவர்கள் அதை செய்யவில்லை என்று மறுத்துவிட்டனர். எம்மிடம் சரியான ஆதாரமில்லாததால் எனது நண்பர் அவர்களை கண்டித்து அனுப்பிவிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் முன்வராத காரணத்தினால் எம்மால் போலிஸ் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டது.

--------------------------------------------

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nahvi.s.a.ishak lebbai (abudhabi) [04 November 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31190

கடற்கரை அழகு படுத்தும்போது நமது ஊரின் பாரம்பரியம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது பெண்களுக்கு தனி இடம் என்ற காலமும் போய் இப்பொழுது ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் அமரும் காலம் இதை முதல் தடுத்தால் போதும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வருத்தமே!!!!
posted by salih.sma (sakaka , KSA) [04 November 2013]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31191

வருத்தமே!!!!

பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் திரை இன்றி ஒன்று கூடும் இடத்தில அல்லாஹ்வின் ல'நத் இறங்கும் என்பதை ஏன் நம்மவர்கள் மறந்தார்கள்...

பாரம்பரியம் காக்க படை திரட்டுவர் யாரோ ???

அழகோடு அமைதியும் பாரம்பரியமும் இருப்பதே சிறந்தது!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [04 November 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31208

அஸ்ஸாமு அலைக்கும்.

நமது ஊரின் கண்ணியமும் & நமது ஊர் கடற்கரையின் கண்ணியமு + கட்டுக்கோப்பும் .....மரியாதையும் ...நிச்சயமாக பாதுகாக்க படவேணும் என்றால் ....இது போன்ற தகாத நபர்களை விட்டு விடாது ....நமது காவல் துறையின் ...கவனிப்பு ..... பெண்களிடம் விளையாடும் இது போன்ற கயவர்கள் மீது கடுமையாகவே இருக்கவேணும் .......

நமது ஊரின் கண்ணியத்தை & ....மரியாதையும் ....நம் ஊர் மக்களின் நம்பிக்கையும் .....முழுமையான நம்பிக்கையுடன் நம்பிதான் நமது ஊர் கடற்கரைக்கு வெளியூர் மக்கள் வருகிறார்கள் ...

அந்த நம்பிக்கையை நாம் ஏமாற்ற கூடாது ......பாதுகாக்க பட வேணும் .....

vassalaam

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved