Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:45:45 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12013
#KOTW12013
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 6, 2013
தென்மேற்கு பருவ மழை காலம் முடிவுக்கு வந்தது! இயல்பான வடகிழக்கு பருவமழை காலம் என கணிப்பு வெளியீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 7801 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவின் இரண்டு முக்கிய மழை காலங்கள் - தென் மேற்கு பருவமழைக்காலம் (SOUTH WEST MONSOON) மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலம் (NORTH EAST MONSOON) ஆகும். தென் மேற்கு பருவமழை - ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும்.

வானிலை ஆராய்ச்சி நிலையம் - மழை பொய்த்ததா, இல்லையா என முடிவு செய்ய அளவுகோல் ஒன்றினை கையாளுகிறது. அதன்படி - சராசரியை விட + அல்லது - 19 சதவீதம் மழை பெய்தால் அதனை சாதாரண (Normal) முடிவாக எடுத்துக்கொள்கிறது. - 20 முதல் - 59 சதவீதம் வரை குறைவாக பெய்த மழையை, குறைப்பாடு (Deficient) என்றும், - 60 முதல் - 99 சதவீதம் வரை குறைவாக பெய்த மழையை மிகவும் குறைந்த மழை (Scanty) என்றும் - வானிலை நிலையம் முடிவுசெய்கிறது.



இந்த அளவுகோல்படி - தமிழகம், இவ்வாண்டு இயல்பான மழையை பெற்றது. தமிழகத்தின் இயல்பு மழை அளவு 321.2 mm என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பருவ மழை காலத்தில் பெய்த மழை அளவு 318.9 mm ஆகும். இது இயல்பைவிட 1 சதவீதம் குறைவாகும். இயல்பிலிருந்து 19 சதவீதம் வரையில் கூடுதல் அல்லது குறைவான மழை சாதாரண (NORMAL) மழை அளவு என வானிலை துறை வல்லுனர்களால் கருதப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இயல்பான மழை என்ற நிலை இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நிலை இருந்தது. உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இக்காலக்கட்டத்தில் இயல்பு மழை அளவு 74.9 mm என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பருவ மழை காலத்தில் பெய்த மழை அளவு 13.8 mm ஆகும். இது இயல்பைவிட 82 சதவீதம் குறைவாகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இக்காலக்கட்டத்தில் இயல்பு மழை அளவு 142.4 mm என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பருவ மழை காலத்தில் பெய்த மழை அளவு 236.9 mm ஆகும். இது இயல்பைவிட 66 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு (2012) தென் மேற்கு பருவமழை அளவு

தென் மேற்கு பருவ மழையை பொறுத்தவரை - இந்தியாவின் ஆண்டொன்றின் 75 சதவீத மழை - இக்காலக்கட்டத்தில் தான் பெய்கிறது. தமிழகம் தனது பெருவாரியான மழையை (48%), வடகிழக்கு பருவ மழை காலத்தில் பெற்றாலும், கடந்த ஆண்டு (2012) தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் பொய்த்ததால் - விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.





பொய்த்த தென் மேற்கு பருவமழையை தொடர்ந்து வந்த - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட - வடகிழக்கு பருவமழையும் கடந்த ஆண்டு - பொய்த்தது. இரு பருவ மழையும் பொய்த்ததால் இவ்வாண்டின் இயல்பான தென் மேற்கு பருவ மழை, பலதரப்பினர்க்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஏறத்தாழ அனைத்து நீர்தேக்கங்களிலும் நீர்வரத்து அதிகமாக இருந்தது.

அதிகாரப்பூர்வமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 30 அன்று முடிவுற்ற நிலையில் - நாடு, வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பருவமழை துவங்கிய தேதியினை காண்போம்:

2001 - அக்டோபர் 16
2002 - அக்டோபர் 25
2003 - அக்டோபர் 19
2004 - அக்டோபர் 18
2005 - அக்டோபர் 12
2006 - அக்டோபர் 19
2007 - அக்டோபர் 22
2008 - அக்டோபர் 15
2009 - அக்டோபர் 29
2010 - அக்டோபர் 29
2011 - அக்டோபர் 24
2012 - அக்டோபர் 19

வடக்கிழக்கு பருவ மழை காலம் - தென் இந்தியாவின் தென் பகுதி பெரும் மழையைப் பெறும் காலம். தமிழ்நாடு, புதுச்சேரி, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதிகள் இந்த பருவமழை மூலம் பயனடைகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டு மழையில் 48 சதவீதம் இந்தக் கால கட்டத்தில் பெறப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் ஆண்டு மழையில் 60 சதவீதமும், உள் மாவட்டங்கள் ஆண்டு மழையில் 40 முதல் 50 சதவீதம் வரையும் பெறுகின்றன.



உள் கர்நாடகம், கேரளா மற்றும் லச்சதீவுகள் தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் பெரும் மழையைப் பெற்றாலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஆண்டு மழையில் 20 சதவீதம் மழையைப் பெறுகின்றன.

தென்மேற்குப் பருவ மழை முடியும் தருவாயில் உள் மாவட்டங்களே கடலோர மாவட்டங்களை காட்டிலும் அதிக மழையைப் பெறும். இது பொதுவாக மாலை இரவு நேரங்களில் நிகழும். நாட்கள் செல்லச் செல்ல, கடலோர பகுதிகளில் மழை நிகழ்வு அதிகமாகி உள் மாவட்டங்களில் குறையும். தமிழக ஆந்திர கடற்கரைப் பகுதிகளில், அக்டோபர் மத்தியில் மழை அதிகமாவதையே வடகிழக்குப் பருவ மழைத் தொடக்க காலமாகக் கொள்ளப்படும்.

பொதுவாக இந்த மழை இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நிகழும். அதிக மழை என்பது பொதுவாக இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நிகழும். பொதுவாக பின் இரவு முதல் காலை வரை மழை என்பது வடக்கிழக்குப் பருவ மழையின் குணாதிசயம்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவை அருகாமையிலுள்ள காலங்களில் நாள் முழுவதும் தொடர் மழை நீடிக்கும்.

வடகிழக்குப் பருவமழை என்பது தொடர்மழையாக மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். நான்கு நாட்களுக்கு மேல் தொடரும் நிகழ்வுகள் என்பது 20 சதவீதத்திற்கும் குறைவாக நடக்கும் நிகழ்வுகள் ஆகும். வறண்ட வானிலையோ / குறைந்த அல்லது மழையோ இல்லாத நீண்ட தொடர் நாட்கள் என்பது சாதரணமாக இந்தக் காலக் கட்டங்களில் நடக்கும் நிகழ்வுதான்.

2004 ஆம் ஆண்டு முதல் 2011 வரை இயல்புக்கு அதிகமாகவே வடக்கிழக்கு பருவ மழை தமிழகத்தில் பெய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு - தென்மேற்கு பருவமழை போல், வடகிழக்கு பருவமழையும் பொய்த்தது. ஆண்டுவாரியாக - இயல்பை விட எத்தனை சதவீதம் - அதிகமாக மழை, கடந்த ஆண்டுகளில் பெய்தது என்பதை காண்போம்:

2004 - +1%
2005 - +79%
2006 - +15%
2007 - +21%
2008 - +31%
2009 - +13%
2010 - +42%
2011 - +23%

தமிழகத்தில் - வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் - இவ்வாண்டு சராசரியை விட கூடுதலான மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.



கடந்த ஆண்டும் - வானிலை மையம், இயல்பான வடகிழக்கு பருவ மழை காலம் இருக்கும் என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மழை வேண்டி காத்திருக்கின்றோம்.
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [06 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30559

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; (அல்-குர்ஆன்: 24:43)

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்)மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள். (அல்குர்ஆன்: 30:48)

இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்-குர்ஆன்: 24:43)

எங்கள் இரட்சகனே...நீ நாடிய இடங்களுக்கு மேகத்தை ஓட்டிச்சொன்று சூழ் கொண்ட கார்முகிலால் மழை பொழிவிக்கும் படி செய்கிறாய். எங்கள் இறைவா...! நீ அந்த மேகங்களை சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தால் மழை இன்றித் தவிக்கும் எங்கள் பகுதியில் இழுத்து வந்து உன் அருள் மழையைப் பொழியச் செய்வாயாக...! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved