Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:42:58 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11709
#KOTW11709
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 31, 2013
காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட - ஆவணங்கள் தயாரிக்க கன்சல்டன்ட் கோரி விளம்பரம் வெளியீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2811 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்ற பிரதான கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது. பஞ்சாயத் தகுதியில் இருந்தப்போது கட்டப்பட்ட இந்த கட்டிடம், தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது.



இக்கட்டிடத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடப்பு பட்ஜெட்டில் (2013-14), காயல்பட்டினம் நகராட்சிக்கு - உள்கட்டமைப்பு மற்றும் இயக்குதல் & வெற்றிடம் நிரப்புதல் (INFRASTRUCTURE GAP FILLING FUND) நிதியில் இருந்து, 1.5 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான நிர்வாக அனுமதியும் (ADMINISTRATIVE SANCTION) - சென்னை நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) அலுவலகத்தில் இருந்து வழங்கபட்டுள்ளது.



இப்பணிக்கு விரிவான திட்ட மதிப்பீடு (DETAILED ESTIMATE) மற்றும் வடிவமைப்பு (DESIGN) போன்றவற்றை தயார் செய்ய தகுதியான கலந்தரிதற்குரியர் (CONSULTANT) நிறுவனத்திடம் ஒப்பந்தப்புள்ளி கோரி இன்றைய தினத்தந்தி நாளிதழில் - காயல்பட்டினம் நகராட்சி சார்பாக - விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 20 வரை பெறப்படும் என்றும் விளம்பரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [31 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29905

நல்ல விஷயம் தான்! என்ன செய்ய...? ஆ...ஊன்னதுக்கெல்லாம் வெளிநடப்பு செய்கிற உறுப்பினர்களுக்கு ஓட்டு கட்டிடம்னா என்ன? ஓட்டை கட்டிடம்ன்னா என்ன? எல்லாம் ஒன்னுதான்.

எதுக்கும் இந்த ஐந்து வருடம் பூர்த்தியாகட்டும் அப்புறமா புது உறுப்பினர்கள் புது கட்டிடம்ன்னு அசத்தலாமே...?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [31 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29907

ஓமந்தூரார் கட்டிடமே நூலகமான கதைதான். எப்படி அமைத்தாலும் நகரமன்ற கூட்டத்தை பார்க்க பார்வையாளர் இருக்கை அதிக மக்கள் கலந்துகொள்ள தோதுவாக இருத்தல் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அடுத்த கட்டிடம் மாநகராட்சி ஆனபிறகுதான்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [01 September 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29908

பஞ்சாயத்து தகுதியில் இருந்தப்போது கட்டப்பட்ட பழைய கட்டிடம், நகராட்சி ஆன பிறகு இப்போதுதான் மாற்றப்பட இருக்கிறது. கட்டப்படவுள்ள இந்த புதிய கட்டிடம் , நம் ஊர் மாநகராட்சி ஆகும் வரை தாக்குபிடிக்கும்விதமாக, நன்கு தரமானதாக அமைக்கவும். ஏனெனில் அடுத்து ,நம் ஊர் மாநகராட்சி ஆனபிறகுதான் வேறு புதிய கட்டிடம் கட்டுவோம்.அதுவரை இது ஓடனும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...புதிய கட்டடம் மட்டும் மக்கள் குறை தீர்க்குமா
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29909

அது பெரிய பங்களா.

நண்பன் புதிதாக சொகுசாக கட்டி முடித்து, தன நண்பனை புதுமனை புகு விழாவுக்கு அழைத்தான். நண்பனும் சென்றான். விருந்துபசாரங்கள் முடிந்து வீட்டை பார்வை இட்டான். எல்லா சொகுசுகளும் நிறையவே உள்ளன. வீட்டின் பெயர் பலகையை பார்த்தான்.அது தங்கத்தால் மின்னியது, வீட்டின் பெயர் "அன்னை இல்லம்".

நண்பன் கேட்டான். இவ்வளவு பெரிதாக கட்டி முடித்து, உன் அன்னையின் பெயரையும் கூட எழுதாமல் எவ்வளவு கண்ணியமாக உன் வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறாய். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க உன் தாயை நான் பார்க்க வேண்டுமே என்றான். வீட்டின் உரிமையாளன் நண்பன் சொன்னான், அன்னை இங்கே இல்லை, அவளை முதியோர் இல்லத்தில் ஒப்படைத்து இருக்கிறேன். எந்த கவலையும் குறையும் இல்லாமல் அவளை அவர்கள் பாதுகாப்பார்கள். நண்பனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

வீட்டின் பெயரோ "அன்னை இல்லம்". ஆனால் அன்னை இருப்பதோ "முதியோர் இல்லம்".

இப்போது வாருங்கள், நமது நகர் மன்றம் சகல வசதிகளுடனும் கட்டப் பட்டு முடித்த பிறகு திறப்பு விழா, இங்கு மந்திரிகள் வருவார்கள், மன்ற உறுப்பினர்கள் வருவார்கள், அதிகாரிகள் வருவார்கள், மக்களும் வருவார்கள்.ஆனால் மக்கள் குறை கேட்க அவர்கள் குறை போக்க யார் இருப்பார்கள். வெளி நடப்புகளும் வெட்டி பேச்சுக்களும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசுவதும்தானே தொடரும்....

புதிய கட்டடம் கட்டினால் மட்டும் போதாது, அது மக்கள் குறை தீர்க்கும் மன்றமாக இருந்தால் மட்டுமே அதன் மகிமை உணரப்படும். இல்லா விட்டால் அன்னை இல்லத்தில் அன்னை இல்லை அவள் முதியோர் இல்லத்தில் என்று சொன்ன மாதிரிதான் இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 September 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29911

அரசாங்க விசயங்களைப் பொறுத்தவரை ஆளுபவர்கள் அதிகாரிகளே.

நம் நகராட்சியில் எத்தனை தீர்மானங்கள் போட்டாலும், தலைவி & உறுப்பினர்களுக்கிடையே சுமூக ஒத்துழைப்பு இருந்தாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏட்டில் மட்டும் பதிந்து கொள்ளலாம், இத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்று. அங்கு பணி புரியும் அதிகாரி மனம் இறங்கவில்லை என்றால் கொசு மருந்து கூட அடிக்க முடியாது.

நம்முடைய கவனம் எல்லாம் நகராட்சி கூட்டம், உறுப்பினர்களின் வெளிநடப்பு, ஒத்துழையாமை இதை ஒட்டியே தான் இருக்கின்றது.

செயல்வடிவம் செய்யக்கூடிய அதிகாரிகளைப் பற்றி ஒன்றும் கவலைபடுவது இல்லை. இத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளார்களே, எத்தனை தீர்மானங்களை செயல்வடிவம் கொண்டுவந்துள்ளீர்கள் என்று அதிகாரிகளை வினவுவது இல்லை.

ஆக, நமக்குள் உள்ள மோதலை ரசித்து விட்டு, அவர்களின் பணிக்காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். காரணம், அரசாங்க வேலை கொடுக்கும் "பணி பாதுகாப்பு". எந்த வேலையும் பார்க்காவிட்டாலும், பணியில் ஊழல்/ கையாடல் செய்தாலும், விசாரணை,விசாரணை.. என்றே காலம் ஓடி விடும். ஒரு புல்லையும் புடுங்க முடியாது.. அவ்வளவு பணி பாதுகாப்பு.

வல்ல ரஹ்மான், நம் ஊருக்கு நல்ல அதிகாரிகளையும் கொடுத்து, பணிகள் அனைத்தும் நன்றாக நடைபெற பிராத்திக்கின்றேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Consultancy
posted by கத்தீபு (Doha) [01 September 2013]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 29919

ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிப் பயல்களுக்குத் தான் கொண்டாட்டம்! என்பதை மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோ. ஜியாவுத்தீன்!

உயர்தரமான தரக்கட்டுப்பாட்டு பெறுவதற்காக எதையும் காம்ப்ரமைஸ் செய்யத் துணியாத - நல்லதொரு தரமான திட்ட மேலாண்மைக் கன்சல்டன்சியின் [PMC – Project Management Consultancy] கண்காணிப்பு மூலம் ஒரு அரசுப் பணி நடைபெறுகிறது என்றால், தில்லுமுல்லு செய்யும் காண்ட்ராக்டர்களுக்கு தினம்தினம் ஜுரம் தான்.

ஆனால் இங்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டவரின் பணி, வெறுமனே படம் வரைந்து பாகங்கள் குறித்து அளவீடு செய்வது [Design and cost estimate] மட்டும் தான் என்பது போல் தெரிகிறது.

கட்டுமானக் காலத்தில், அதன் தரம் [quality], கால நிரல் [programme schedule], பாதுகாப்பு [health and safety of workers], செலவினங்கள் [approval of invoices and expenses] இவைகளையும் மேலாண்மை செய்யும் பணி எவரை சேர்ந்தது?

நகராட்சிப் பொறியாளர்கள் மட்டும் இப்பணியை செய்வார்கள் எனில், கணிசமாக ஊழல் நடைபெற வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. கற்பனையாகச் சொல்லவில்லை; வேறு நகராட்சி சார்ந்த கட்டுமானப் பணிகளில் கண்கூடாகக் கண்டவை தான் இக்கூற்றுக்கான சான்று! அதன் பின், மீண்டும் சென்னையிலுள்ள கிங் இண்ஸ்ட்டிடியூட், வேறு டெஸ்டிங் லெபரேட்டரிகளுக்கு தரக்கட்டுப்பாட்டுக்காக நகர் நலத் தன்னார்வலர்கள் அலையாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டால் மகிழ்ச்சி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Vilack SMA (Zibo , Shandong , China) [01 September 2013]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29920

நல்ல விசயம் . யார் டெண்டர் எடுக்க போறது , யார் குழியை தோண்டி ஆழம் பார்க்க போறது ! ஹ்ம்ம் வேலை நடக்கும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் . எங்களுக்கும் நல்லா பொழுது போகும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மக்கள் மன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [01 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29927

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட ஆயத்தமாகிறது நல்ல செய்தி – வாழ்த்துக்கள். விரைவில் புதிய கட்டடம் கட்டி முடித்து அதில் தொடங்குகிற கூட்டங்களும் , செயல்பாடுகளும் மக்களுக்கு நன்மையாக அமைய இறைவனிடம் வேண்டுவோமாக.

----------------------------------------------

புதிய கட்டடம் கட்டுவது முக்கியம் என்றாலும் தேவையான , அவசியமான வசதிகளை திட்டமிட்டு அமைப்பது சிறந்தது. அவசரக்கோலத்தில் ஒழுங்கான திட்டமின்றி , சம்பந்தபட்டவர்களின் ஆலோசனையின்றி யாராவது செயல்பட்டார்களானால் அது பிரயோஜனமற்றதாகிவிடும்.

அதன் பிறகு அவர் செய்தது தவறு, இவர் செய்தது தவறு என்று மற்றவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை – இதில் அதிகாரிகளுடைய ஆலோசனையை பெற்று மக்கள் மன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்.

---------------------------------------------

தூரநோக்கோடு சிந்தித்து கட்டடம் அமைக்க வேண்டும் – அதல்லாது கட்டினால் – நம் நகராட்சியால் இப்பொழுது வாங்கி உபயோகத்தில் இருக்கும் குப்பை தொட்டிக் கதையாகத்தான் இருக்கும் – சுண்டக்கா கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற விதத்தில்.

ஊழல் இல்லாமல் பார்த்துக்கொண்டால் எல்லோருக்கும் நல்லது. இந்த காலத்தில் எதில்தான் ஊழல் இல்லை என்ற முட்டாள்களின் வாதத்திற்கு மயங்கினால் அது யாருக்குமே நல்லதல்ல.

இறைவனின் பயம் உள்ள எவரும் ஊழலுக்கு துணைப்போக மாட்டார்கள் - அப்படி துணைப்போகிறவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் இது இறைவன் விதித்த விதி. இறைவனின் விதியை மீறியவர்களின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved