Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:44:00 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11640
#KOTW11640
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013
ஹிஜ்ரா கமிட்டி சார்பில் ஆக.24 அன்று பிறை கருத்தரங்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3418 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமையன்று பிறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், “ஓர் இறை - ஓர் மறை - ஓர் பிறை” எனும் தலைப்பில், இம்மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 04.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை, காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

ஓர் இறை! ஓர் மறை!! ஒரே பிறை!!! ஆனால் முஸ்லிம்களின் பெருநாள் மட்டும் ஏன் மூன்று? என்ற வியப்புக்குறிக்கும்!!! வினாக்குறிக்கும்??? குர்ஆன் சுன்னாவின் ஒளியில் விடை காண்போம்.!

மாற்றங்கள் பல கண்ட, தவறுகள் பல நிறைந்த ஆங்கில நாட்காட்டியை விட இஸ்லாமிய ஹிஜ்hp நாட்காட்டியே பின்பற்ற தகுதி வாய்ந்தது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!

இஸ்லாமிய மாதங்களை சரியாக துவங்கி, சரியான தேதிகளில் நமது அமல்களை செய்து மகிழவும் ஒன்றுபடுவோம்! ஒன்றிணைந்தே செயல்படுவோம்!!

ஒரு மாதத்தின் முதல் நாளுக்குரிய பிறையை எந்த நாளில் எந்த திசையில் பார்க்க வேண்டும்? என்பன போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு மார்க்கம் கூறும் தெளிவை அறிவோம்!

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களை செய்வதற்கு பிறந்த பிறையை புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டுமா? என்பதை குர்ஆன் சுன்னா ஒளியில் அறிந்துகொள்வோம்.

உலக முஸ்லிம்கள் ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமை என்ற ஒரே நாளுக்குள் தொழுவதைப் போல, பொருநாள் தொழுகையையும் பெருநாள் தினத்தில் ஒரே நாளுக்குள் தொழமுடியும் என்பதை தெளிவாக புரிவோம்.

உலமா பெருமக்களே! உயர்ந்த சிந்தனையாளர்களே! பாசமிகு தாய்மார்களே! இளைஞர்களே! யுவதிகளே!

பிறை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த தீர்வுகளை நேரடியாக கேட்டு தெளிவு பெறவும், பிறை சார்ந்த அனைத்து வினாக்களுக்கும் விடை காணவும் கருத்தரங்கத்திற்கு தவறாது வருகை தந்து பயனடைய வேண்டுகிறோம்.

வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

தொடர்புக்கு: 99408 11119, 94471 81884, 94440 43264, 99943 44292, 98421 85917

கருத்தரங்க நிகழ்ச்சியையொட்டி, அன்று காலை 10.00 மணிக்கு சிறப்பு அமர்வும் நடைபெறவுள்ளது. வானவியலில் ஆர்வமுள்ளோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வமர்வில் கலந்துகொள்ள மேற்கண்ட தொடர்பு எண்களில் முன்பதிவு செய்வோருக்காக, மதிய உணவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.


இவ்வாறு, ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[செய்தி திருத்தப்பட்டது @ 22:57 / 20.08.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஹிஜ்ரா கமிட்டி
posted by Ismail Sufi (Muscat) [20 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29593

தமிழ்நாடு ஹிஜ்ரா கமிட்டி சார்பில் ஆகஸ்ட் 24 தேதியில் நமதூரில் பிறை சம்பந்தமாக கருத்தரங்கம் நடக்க இருப்பதாக அறிந்தேன்.

கருத்தரங்கில் கலந்து கொள்ளும் உலமாக்கள் யார் என்ற விபரம் எதுவும் இல்லை. ஹிஜ்ரா கமிட்டியினர் அதையும் அறிவித்தால் நல்லது.

தகவல்
இஸ்மாயில் சூபி
மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஒரு இறை ஒரு மறை ஒரு பிறை ஒரு நபி?
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29594

ஒரு இறை, ஒரு மறை, ஒரு பிறை, ஒரு நபி? இந்த தலைப்பில் ஒரு நபி சேர்க்கப்படவில்லையே? நபி சொன்னதே நமக்கு இறைவன் சொன்னவைகள்தான்.

VA MAA YANTHIQU ANIL HAWAA, ILLAA WAHYUN YOOHA

எனவே, நபியின் சொல்களை அவை சஹீஹானவை, பலஹீனமானவை என்று பின் தள்ளுவதும் தற்போதைய நவீன கண்டுபிடிப்புகளை முன் மாதிரியாக கொள்ளுவதும் ஏற்றுக்கொள்ள தக்கவை அல்ல.

உங்கள் நபியிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்ற இறை வசனம் சத்தியமானது. அது காலத்துக்கு காலம் மாறாதது. அப்படியானால் அவர்கள் காட்டி தந்த வழி, பிறை கண்டு நோன்பு பிடிப்பதும் பிறை கண்டு பெருநாள் கொண்டாடுவதும் மேகம் மறைத்தால்(பிறை வானில் இருக்கிறது என்ற உண்மை தெரிந்தாலும்) 30 நாட்களாக ஆக்கிகொள்வதும்தான் நபியை பின்பற்றும் முறை.

சர்வ தேச பிறையில் நம்பிக்கை உள்ளவர்கள் கூட, உலகில் எங்காவது பிறை கண்டால், நாமும் அதை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்களே தவிர, ஒரு தோராயமான கணக்கு அடிப்படையில் பிறையே பார்க்காமல் வெறும் ARITHMETIC கை வைத்து நோன்பு பிடிக்க சொல்வதில்லை

இந்த பிறை பிரச்சினையை முதன் முதலில் விவாத பொருளாக ஆக்கிய பீ.ஜே. அவர்கள் கூட இப்போது தனது தவறை திருத்திக் கொண்டு, "பிறை ஒரு ஆய்வு" என்று ஒரு நூல் வெளியிட்டுள்ளார்கள். உலகம் முழுவதும் ஒரே பிறை என்பது சாத்தியமல்ல என்று குர் ஆன் வெளிச்சத்தில் ஹதீத்களின் ஆதாரத்துடன் எழுதியுள்ளார்கள்.

தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் மன்னிக்கப்படுவான் . தப்பு செய்தவன் தண்டிக்கப்படுவான். அல்லாஹ் மிக அறிந்தவன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by தேக் (kayalpattinam) [20 August 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29597

இவர்கள் இடத்தில் பலமுறை கேட்டக் கேள்வி..........

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்ன சொல்லை இந்த நூற்றாண்டில் வந்து குரானை மட்டும் வைத்து மக்களை மாற்ற நினைப்பது மார்க்கமாகுமா?

1900. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை" என்று உள்ளது.

1906. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1907. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸுக்கு ஹிஜ்ரி கமிட்டி இன்று வரை சொல்லும் வாதம் இந்த ஹதீஸை இப்படி புரிய கூடாது என்பது மட்டும்தான் இவர்களுடைய பதிலாக உள்ளது சரி ஹிஜ்ரி கமிட்டி சொல்லுவதைப் போல் புரிந்து பிறையை இபாத்ததாக எடுத்தால் கண்டிப்பாக நபி (ஸல் ) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு 2 நாட்கள் வித்தியாசம் வரும்

ஹிஜ்ரி கமிட்டி ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பல கருத்துடையவர்கள் வரலாம் இவர்களுடைய கொள்கைக்கு விளக்கம் சொல்லும்போது தனி மனிதரையோ தனி ஜமாத்தையோ விமர்சிக்காமல் செய்தியை மட்டும் சொல்லகூடிய நிகழ்ச்சியாக இருக்கட்டும் தனி மனிதரை விமர்சிக்கும் நிகழ்ச்சியாக இருந்தால் மக்கள் மத்தியில் தவா சென்றடைய கஸ்ட்டம்

தேக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:.கேள்விகள் கேட்க அனுமதி
posted by ABDUL WADOOD (kayalpatnam) [20 August 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 29599

இந்த ஹிஜ்ரா கமிட்டி சார்பில் கலந்து கொள்பவர்களில் நன்கு அரபி தெரிந்த ஆலிம் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிய தரவும்

அப்துல் வதூத்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [20 August 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 29604

ஓர் இறை! ஓர் மறை!! ஒரே பிறை!!! ஆனால் அந்த பிறை கண்ணுக்கு தெரிவதோ வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறை.

முஸ்லிம்களின் பெருநாள் மட்டும் ஏன் மூன்று? அதில் தப்பில்லை. ஆனால் ஒரே ஊரில் மூன்று பெருநாள் என்பதுதான் தப்பு. அதற்குதான் நாம் வழிகான வேண்டும்.

உலக முஸ்லிம்கள் ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமை என்ற ஒரே நாளுக்குள் தொழுவதைப் போல, எல்லோரும், அந்த வெள்ளிகிழமையில் ஒரே நேரத்தில் தொழ முடியுமா? முடியவே முடியாது. குறைந்த பட்சம் ஒரே ஊரில் உள்ள அனைத்துஜூம்ஆ பள்ளிவாசல்களிளுமாவது நாம் ஒரே நேரத்தில் தொழுகிரோமா என்றால் அதுவும் இல்லை. ஏன்? அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை..அந்தந்த பகுதிகளில் அந்த அந்த வக்துக்குள் தொழுக வேண்டும். அவ்வளவுதான்.

வெள்ளிக்கிழமைதான் ஜும்ஆ தொழுக வேண்டும் என்று இருப்பதுபோல , ஒரு புதன் கிழமையோ அல்லது ஒரு ஞாயிற்றுக்கிழமை யோதான் பெருநாள் தொழுகவேண்டும் என்று இருந்திருந்தால்தான் நீங்கள் நினைக்கும்படி ஒரேநாளில் பெருநாள் வரும்.

எனவே பெருநாள் தொழுகையையும் உலகம் முழுவதும் ஒரே பெருநாள் தினத்தில் தொழுதுதான் ஆகவேண்டும் என்ற அவசியமும் இருப்பதாக நான் எங்கும் கேள்விப்படவில்லை. பிறை தெரிவது கிழக்கு மேற்காக தூரத்திற்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் பிறைபார்த்துதான் பெருநாள் நிர்ணயிக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது.எனவே அந்தந்த பகுதிகளில் பிறைபார்த்துதான் பெருநாள் கடைபிடிக்க வேண்டும்.ஒரே பகுதி என்று நாம் குறிப்பிடுவது எவ்வளவு தூரம்வரை என்பதை ஆலிம்களிடம்தான் கேட்கவேண்டும்.

சிலரின் கூற்றுப்படி மக்கா நேரத்தை மையமாக வைத்துதான் உலக மக்கள் அனைவர்களும் பிறையை கணக்கிடவேண்டும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.அது அறிவுக்கு பொருந்தாத ஒன்று.எனக்கு வயது 60 ஆகிறது. நான் பிறந்தது முதல் எனது 55 வயது வரையிலும் இவ்வாறு செய்ததாக நான் கேள்விப்படவில்லை.சமீபகாலமாகத்தான் இதையெல்லாம் கேள்விப்படுகிறேன். எதனால்? அதுவும் , நம் ஊரில் சமீப காலங்களில் முதலில் 2 பெருநாள் என்று இருந்த நிலை மாறி இப்போது 3 பெருநாள் ஆகிவிட்டது. வரும்காலங்களில் இது 4, 5 , 6 என மாறாமல் இருந்தாலே போதுமானது.

அல்லாஹ் நம் அனைவர்களையும் ஒற்றுமையாக இருக்கசெயவானாகவும்.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Farook (Saduiarabia) [21 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29613

மாற்றங்கள் பல கண்ட, தவறுகள் பல நிறைந்த ஆங்கில நாட்காட்டியை விட இஸ்லாமிய ஹிஜ்hp நாட்காட்டியே பின்பற்ற தகுதி வாய்ந்தது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!
-(கோப்பி பேஸ்ட்)

பிறை சம்பந்தபட்ட விசயத்தில் யாரும் ஆங்கில நாட்காட்டியை பயன்படுத்தவில்லை. எப்படி சூரியன் உதிக்கிறது மறைகிறது உலகத்தில் எல்லா பகுதிகளிலும் மாருபடுகிறதோ, அதுபோல் தான் பிறை தென்படுவதும் மாறுபடும்.

சர்வதேச பிறை என்பவர்கள் கூட சரி இல்லை. உலக அமைப்பு படி நமதூரை கணக்கில் கொண்டால், சவுதியில் தான் முதலில் பிறை தோன்றும், சவுதியில் பிறை தெரிந்ததா என்று ஒவோவ்று வருடமும் ரமலானில் இரவு ஒன்பது மணிவரை காத்திருப்பது இஸ்லாமிய வழியா? நல்லவேளை இரண்டரை மணி வித்தியாசம் இருப்பாதால் இரவு பத்து மணிக்குள் அறிவிக்க முடிகிறது. சவுதியில் பிறை தெரிய தாமதமானால் இன்னும் சிக்கல் தான். இதுவே பலமணி நேரம் சௌதிக்கு near வித்தியாசம் இருந்தால் எப்படி " சவுதி பிறை " சாத்தியமாகும்? ஒரு சாத்திய மில்லாத விசயம் மார்க்கத்தில் இருக்குமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...அப்துல் வதூத் ஆலிம் அவர்களே ஒரு ஆலிம்தானே
posted by mackie noohuthambi (kayalpatnam) [21 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29616

அப்துல் வதூத் ஆலிம் அவர்களும் ஒரு ஆலிம்தானே?

உலமாக்களுக்கு அழைப்பு விடுப்பதே முறை. அதுவும் நமதூரில் உள்ள எல்லா அரபி மதரசாக்களுக்கும் பள்ளி வாசல்களுக்கும் நேரில் சென்று முதவல்லிகளை சந்தித்து பேசி அவர்களையும் இந்த விவாத மேடையில் வீற்றிருக்க செய்து, அவரவர்கள் கருத்துக்களையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர ஹிஜ்ரா கமிட்டி முன்வரவேண்டும்.

அபூ தாவூதில் ஒரு செய்தி வருகிறது. ஒரு விஷயம் சரியானதாக இருந்தாலும் சரிதான், அதற்காக விவாதம் செய்யாமல் விலகி இருப்பவனுக்கு நான் சொர்கத்தின் ஒரு பகுதியில் ஓர் மாளிகை கட்டிகொடுக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.

இது எல்லா ஆலிம்களுக்கும் தெரிந்த செய்திதான். என்ன செய்வது, காலத்தின் கட்டாயம். விவாதம் புரிந்துகொண்டே இருந்தால் எப்போது அமல் செய்வது?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அந்த ஹதீஸ் உடைய நம்பர்?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [22 August 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29627

சகோதரர் மக்கி அவர்கள் குறிப்பிட்டுள்ள

"அபூ தாவூதில் ஒரு செய்தி வருகிறது. ஒரு விஷயம் சரியானதாக இருந்தாலும் சரிதான், அதற்காக விவாதம் செய்யாமல் விலகி இருப்பவனுக்கு நான் சொர்கத்தின் ஒரு பகுதியில் ஓர் மாளிகை கட்டிகொடுக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்."

இந்த ஹதீஸை பற்றி கூடுதலாக நாம் அறிந்து கொள்ள அந்த ஹதீஸ் உடைய நெம்பர் கிடைத்தால் நன்றாக இருக்குமே?

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Don't hate what you don't understand
posted by Abdul Wahid S. (kayalpattinam) [22 August 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 29630

அஸ்ஸலாம் அழைக்கும் (வரஹ்)

பிறை சம்பந்தமாக கேள்விகள் எழுப்பிய சகோதரர்களில் சிலர் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட சில ஹதீஸ்களை மட்டுமே அடிப்படியாகக் கொண்டு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மற்றும் சிலர் விஞ்ஞானம் என்று தாங்கள் நம்பிய (அறிந்த) கருத்தின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இன்ஷா-அல்லாஹ் நடவிருக்கும் கருத்தரங்கில் குர்-ஆன் மற்றும் பலமான ஹதீஸ்கள் அடிப்படையில் இவை அனைத்திற்கும் விளக்கம் கிடைக்கும்.

எவரும் பிறை(கள்) பற்றி பல இடங்களில் குர்-ஆன் கூறுகின்ற வசனங்களை குறிப்பிட்டு உங்கள் கொள்கை குர்-ஆனுக்கு மாறுபட்டிருக்கிறது என்று குற்றம் சாட்ட முன்வரவில்லை. கேள்வியும் எழுப்பவில்லை.

---------------------------------------------------------------------------

"இந்த ஹிஜ்ரா கமிட்டி சார்பில் கலந்து கொள்பவர்களில் நன்கு அரபி தெரிந்த ஆலிம் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிய தரவும்" அப்துல் வதூத் (Copy & paste)

ஆலிம் அப்துல் வதூத் அவர்களுக்கு:

இன்ஷா-அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில் நிகழ்ச் நிரல்கள் வெளியாகும். அதில் யார் யார் கருத்தரங்கில் பேசயிருக்கிறார்கள் அவர்களின் தகுதி என்ன விபரமும் இருக்கும்.

Hijiri Committe Google Mail Group மூலம் தங்களுடைய அரபி புலமையை ஓரளவு தெரிந்துகொண்டவன் என்ற முறையில் தங்களுக்கு அறியத் தருவது, மதரஸாக்கள் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் 7 வருடங்கள் படித்தவர்களே ஆலிம்கள், அவர்களுக்கு நன்கு அரபி மொழி தெரிந்திருக்கும். அவர்கள் மட்டுமே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதற்கு தகுதியானவர்கள். மற்றவர்களெல்லாம் அவாம்கள், மார்க்கத்தை பேசுவதற்கு எள்முனையளவும் தகுதியற்றவர்கள் என்ற புரையோடிப்போன சித்தாந்தத்தின் தாக்கம் தங்கள் கேள்வியில் வெளிப்படுகிறது.

பிறை விஷயம் பற்றி பேசுவதற்கு அரபியில் அதிக புலமைபெற்ற ஆலிமாக இருத்தல் மட்டும் போதாது, அந்த ஆலிம்களுக்கு பிறை பற்றிய விஞ்ஞான ஞனமும் அவசியம்.

சில நாட்களுக்கு முன் நம்மை விட்டும் பிரிந்த மூத்த சகோ.,. அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) 7 வருசங்கள் மதரசாவில் பயின்று பட்டம் பெற்ற ஆலிம்கள் செம்மையாக செய்ய முடியாத வேலையை திறம்பட செய்தவர் . இவர் எந்த மத்ரசாவிலும் பயலவில்லை அவருக்கு அரபி மொழியும் தெரியாது. இருந்த போதிலும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து அழைக்கும் பணியில் தலை சிறந்து விளங்கினார்.

--------------------------------------------------------------------------

மூத்த சகோ. மக்கி நூஹு தம்பி காக்கா அவர்களுக்கு :

இன்ஷா-அல்லாஹ்,

1) நடைபெறவிருப்பது கருத்தரங்கம். விவாத அரங்கம் அல்ல.

2)அனைத்துப் பிறைகளையும் பல வருடங்களாக தொடர்ந்து அவதானித்து வந்ததின் அடிப்படையிலும், துல்லியமாக விஞ்ஞானத்தின் உதவி கொண்டு, குர்ஆன் சுன்னாவின் வழியில்தான் இந்த ஹிஜ்ரி காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். ஹிஜ்ரி காலண்டர் நீங்கள் நினைக்கின்ற மாதிரி யூகத்தின் அடிப்படையிலோ, கணித்தல் அடிப்படையிலோ அல்லது Arithmetic அடிப்படையிலோ தயாரிக்கப்பட்டது அல்ல. மாறாக விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான கணக்கிடுதல் (Scientifically proven calculation) அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

For instance:

1) இந்த விஞ்ஞான கணக்கிடுதல் முறையில்தான் இன்று உலகமுழுவதும் முஸ்லிம்கள் 5 வேளை தொழுகை நேரங்களை கடைபிடித்து வருகின்றனர்.

2) இந்த விஞ்ஞான கணக்கிடத்தல் முறையில்தான் சூரிய - சந்திர கிரகணங்கள் ஏற்படுவதை முஸ்லிம்கள் முற்கூட்டிய அறிந்து வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான கிரகனத் தொழுகைக்கு தங்களை தயார்படுத்துகின்றனர்.

3) இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் (கடிகாரத்தைப் பார்த்து) நோன்பு திறக்கப் படுகிறது. (எந்த முஅத்தினும் சூரியன் மறைவதை கண்ணால் பார்த்து "ம.:ரிப் பாங்கு" சொல்வதில்லை).

இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம். தங்களுக்கு இது போதுமென்று எண்ணுகிறேன்..மேலதிக விபரங்களுக்கு www.mooncalendar.in என்ற இணையதளத்தை தவறாது பார்க்கவும்.

--------------------------------------------------------

" .......சர்வதேச பிறை என்பவர்கள் கூட சரி இல்லை. உலக அமைப்பு படி நமதூரை கணக்கில் கொண்டால், சவுதியில் தான் முதலில் பிறை தோன்றும்,......." posted by Farook (Saduiarabia)

(Copy & Paste)

சகோ., Farook (Saduiarabia) அவர்களுக்கு:

பிறை பற்றிய தங்களுடைய விஞ்ஞான அறிவு நிச்சயமாக வாசகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எவருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

---------------------------------------------------

சகோ., தேக் அவர்களே,

தாங்கள் குறிப்பிட்ட மேகமூட்ட ஹதீஸ்களையும் மறுப்பதற்கில்லை. அனால் தாங்கள் மொழியாக்கம் செய்தது போன்று அந்த ஹதீஸ்கள் எதிலும் "மேகமூட்டம்" என்பதைக் குறிக்கும் அரபி சொல் இடம் பெறவில்லை. மாறாக " உங்களுக்கு மறைக்கப்பட்டால் " என்று பொருள் படும்படியான அரபி சொல்லே இடம் பெற்றுள்ளது.

மேலும் உங்கள் புரிந்துகொள்ளும் தன்மையில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் கீழ்க்கண்ட ஹதீஸ் படி (புஹாரி:1854) வானத்தைப் பார்த்து சூரியன் அடைந்துவிட்டதை கண்ணால் கண்ட பிறகுதான் நோன்பு திறக்க வேண்டும்.

"இரவு வருவதைக் கண்டால் உங்களில் நோன்பாளிகள் நோன்பு திறக்கவும்" - புஹாரி -1854.

நீங்கள் அனைவரும் சுற்றிக் காட்டிய மேகமூட்ட ஹதீஸ்களில் "பிறையை கண்டால்" என்ற இடத்தில் "ரூயத்" என்ற அரபி சொல்தான் இடம்பெற்றுள்ளது. அதே "ரூயத்" என்ற சொல்தான் மேற்கண்ட நான் குறிப்பிட்ட ஹதீஸிலும் (புஹாரி 1854) இடம்பெற்றுள்ளது.

உங்களில் எத்தனை பேர் சூரியன் அஸ்தமித்ததைக் கண்ணால் கண்ட பிறகு நோன்பு திறக்குகிறீர்கள்?.

மேலதிக விபரங்களுக்கு (சகோ., தேக் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும்):

இந்த கருத்தரங்கம் பற்றிய செய்தி இந்த வெளியீட்டில் மிகத்தெளிவாக சொல்லப்பட்ட செய்தியை உங்களுக்காக மீண்டும் வெட்டி ஒட்டியிருக்கிறேன்.

"பிறை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த தீர்வுகளை நேரடியாக கேட்டு தெளிவு பெறவும், பிறை சார்ந்த அனைத்து வினாக்களுக்கும் விடை காணவும் கருத்தரங்கத்திற்கு தவறாது வருகை தந்து பயனடைய வேண்டுகிறோம்". (Copy & Paste )

ஆதலால் எங்கு வந்து என்ன கேள்வி (கள்) கேட்க வேண்டுமோ அங்கு வந்து கேள்வி (களை) கேட்கவும்.

வெளிநாட்டில் அல்லது வெளியூரில் வசிக்கும் சகோதர, சகோதரிகள் தங்கள் நண்பர்களின் மூலம் தங்களின் கேள்வி(களை) எத்திவைத்து இன்ஷா-அல்லாஹ் தக்க பதில் (களைப்) பெறலாம்.

------------------------------------------------

இதுவரையில் தான் கேள்விபடாத செய்தி அல்லது விஷயம் என்பதற்காக அந்த செய்தியை மறுப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உலகில் யாராலும் பதில் (விடை தர) இயலாது.

நாங்கள் அறிந்துகொண்டது/ புரிந்துகொண்டது மட்டும்தான் சரி. நாங்கள் அறியாத விசயங்கள் தவறு என்று அடம்பிடிப்பவர்கள் தூங்குவது போன்று நடிப்பவர்களுக்குச் சமம். அவர்களை தட்டி எழுப்ப முடியாது.

"It's easy to hate what we do not understand". In other words, "Don't hate what you don't understand".

காலையில் கிழக்கே உதிக்கும் சந்திரனை அது மறையும் தருவாயில் அந்தி சாயும் நேரத்தில் மேற்கே பார்த்து மறுநாள் நோன்பு நோற்கும் நமக்குள் (இந்த கருத்தரங்கம் மூலம் இறைவன் நாடினால்) ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது என்று எண்ணுவோர் தவறாமல் கலந்துகொள்ளவும்.

அல்லா யாவற்றையும் நன்கறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பிறை கருத்தரங்கம்!
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [24 August 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29649

மார்க்க அறிஞர்களையும் படித்த மேதைகளையும் உள்ளடக்கிய Fiqh Council of North America [FCNA] இவ்விடயத்தை (ஹிஜ்ரா) பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து ஏற்கனவே இதனை அங்கீகரித்து வட அமெரிக்காவில் பல பள்ளிகளில் நடைமுறையும் படுத்தி விட்டார்கள். இதைபோன்று ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்து விட்டன என்பதனை ஊடங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

நம் இந்திய திரு நாட்டில், மார்க்க விடயத்தை பொறுத்தவரை அது விழிப்புணர்ச்சியாகட்டும் அல்லது குழப்பமா கட்டும் (அவரவர் பார்வையை பொருத்தது) அதன் காலடி எப்பவுமே முதலில் நம் தமிழகத்தில் தான். மற்ற மாநிலங்களில் இது போன்று மார்க்க விழிப்புணர்ச்சியோ கருத்து பரிமாற்றங்களோ நடக்கின்ற மாதிரி அல்லது அதற்க்கான அடிச்சுவடே (?) தெரிய வில்லை.

எது எப்படியோ, தன் பகுத்தறிவை கொண்டு ஒரு விடயம் சரியென்றால் அதனை ஏற்று கொள்ளும் (தவறு என்றால் விலகி நிற்கும்) மன நிலையில் தான் இன்றைய தலைமுறையினர் இருக்கின்றனர்.

ஹிஜ்ரா குழு கடந்த மூன்று வருடங்களாக இதனை நமதூரில் நடைமுறைபடுத்தி வருகின்றார்கள் என்று நினைக்கின்றேன். நம்மில் பலருக்கு ஏன் இந்த சிறு கூட்டம் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் தனியாக பெருநாள் கொண்டாடுகின்றார்கள் என்ற ஐயம் கடந்த சில வருடங்களாக இருந்து வந்துள்ளது. அனேகமாக இந்த பிறை​ கருத்தரங்கம் லேட்டாக வந்தாலும், நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, நம் புரிந்துனர்தல்களை சரிகாண வழிவகுக்கும் என்று நினைக்கின்றேன். ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் தனிநபர் விருப்பம்.

இக்கருத்தரங்கம், குறிப்பாக உலமா பெருமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்களால் அங்கிகரிக்க பட்டு விட்டாலே போதும். ஏனென்றால் நாம் அனைவரும் ஏதோ ஒரு கொள்கையை (ஜமாத்) சார்ந்த உலமா பெருமக்களின் பின்னால் தான் அணிவகுத்து நிற்கின்றோம் ... அதிலும் குறிப்பாக பிறை விடயத்தில்.

ஒற்றுமையை நாடும் நம் அனைவருக்கும் பிறை விடயத்தில் ஒரு தெளிவான பார்வையை வல்ல ரஹ்மான் தருவானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:..Important
posted by Ahamed Mustafa (Dubai) [24 August 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29658

As bro. has rightly mentioned, few weeks ago, It was stated in the Guld news that Various Islamic Councils are now considering to come to a concensus to follow this method. Parts of America, & some other regions are already into it. Time that we focus on this & to come to a concensus & conclusion. In one way the Hijra Calendar also makes sense. Do you have a Live Broad cast on this. If so kindly give a link.

Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மூளை இருக்கா...? (?!)  (20/8/2013) [Views - 3454; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved