Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:30:30 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11471
#KOTW11471
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 4, 2013
ரமழான் 1434: ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி! நகர பிரமுகர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3025 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில், இம்மாதம் 03ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ நிகழச்சிக்குத் தலைமை தாங்கினார். குருவித்துறைப் பள்ளி தலைவர் (பொறுப்பு) நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், அதன் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர், முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் கே.எம்.எச்.அப்துல் வதூத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவரைத் தொடர்ந்து, நிகழ்ச்சித் தலைவர் தலைமையுரையாற்றினார்.

மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி (தீனிய்யாத்), ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆகிய கல்விப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து அவர் தனதுரையில் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.

கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.ஏ.அவ்லியா ஸாஹிப் துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

பின்னர், மத்ரஸா மாணவா எஸ்.எச்.அலீ ஃபஹத் மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்க, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது.

அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், பழ வகைகள் துவக்கமாகப் பரிமாறப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மாணவர் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ தொழுகையை வழிநடத்தினார்.

தொழுகை நிறைவுற்ற பின்னர் சிற்றுண்டியுபசரிப்பு நடைபெற்றது. அனைவருக்கும் பிரியாணி கஞ்சி, பழக்கூழ், சிக்கன் 65, மட்டன் கட்லெட், வடை வகைகள், இஞ்சி கலந்த தேனீர் ஆகியன பரிமாறப்பட்டன.

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, குருவித்துறைப் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ, ‘முத்துச்சுடர்’ மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும்,

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், குருவித்துறைப் பள்ளி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.இஸ்மாஈல், தாயிம்பள்ளி - சீதக்காதி நினைவு நூலகத்தின் தலைவர் எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப், ரியாத் காயல் நற்பணி மன்ற நிர்வாகி ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி எம்.ஏ.செய்யித் அபூதாஹிர், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.), ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், புதுப்பள்ளி துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் நூஹ், ஹாஜி என்.டி.பாதுல் அஸ்ஹப், ஹாஜி ஷாஹுல் ஹமீத், குருவித்துறைப் பள்ளி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், கவிஞர் எஸ்.ஏ.நெய்னா, ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், அரிமா சங்க நகர தலைவர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் உட்பட நகரின் பெரும்பாலான ஜமாஅத் நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் இந்நாள் - முன்னாள் மாணவர்களும் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ தலைமையில், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஜி ஹாஜி என்.டி.ஷெய்க் மொகுதூம், ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் லெப்பை, ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, எம்.ஏ.சி.முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஹாமிதிய்யா நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அரசியல் கலக்காத இக்ஹ்லாசான இப்தார்
posted by mackie noohuthambi (kayalpatnam) [04 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29202

நோன்பு வைத்திருப்பவர்களுக்கு நோன்பு திறக்க ஒரு பேரீத்தம் பழம் அல்லது ஒரு மிடர் தண்ணீர் கொடுத்து நோன்பு திறக்க வைப்பவருக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் சொல்லி இருக்கிறார்கள் என்ற செய்தி முழங்கப்படும் மஜ்லிசுல் புகாரி ஷரீப் வளாகத்தில் இயங்கும் ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவத்தின் சேவை பாராட்டுக்கு உரியது.

பறவைகளின் சரணாலயம் வேடந்தாங்கல், ஹாபில்களின் சரணாலயம் காயல்பட்டினம். அந்த சரணாலயத்தில் ஒரே இடத்தில இந்த ஹாமிதிய்யாவில் பல நூறு வானம்பாடிகள் மறை நேசர்களாக மாறி இறை மறையை இந்த 25 நாட்களிலும் பல்வேறு பள்ளி வாசல்களில் தைக்காக்களில் ஓதி தொழுது மக்கள் உள்ளங்களை கவர்ந்து வருகிறார்கள்.. கடல் கடந்தும் இந்த பறவைகள் வாழ்கின்றன, இறைமறை செல்வர்களாக தங்கள் முத்திரையை பதித்து வருகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்.

தாமும் நோன்பிருந்து, நோன்பாளிகளையும் அழைத்து நோன்பு திறக்க உணவளித்து கௌரவிக்கும் உன்னதமான நிகழ்ச்சி தமிழகத்தின் எல்லா இடத்திலும் பரவலாக நடைபெற்று வந்தாலும் ஹாமிதிய்யா ஒரு வித்தியாசமான நடைமுறைக்கு கால்கோள் விழா நடத்தி இருக்கிறது என்ற உண்மையை அங்கு வந்தவர்கள், என் போன்றவர்கள் அவதானிக்க முடிந்தது.

இப்தார் நிகழ்ச்சியே ஒரு அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்ச்சியாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் பள்ளிக்கூடங்களும், இஸ்லாமிய கட்சிகளும் பள்ளிவாசல் ஜமாத்களும் கூட விதி விலக்கு இல்லை. மனித நேயம், மத நல்லிணக்கம் என்றெல்லாம் அதற்கு புதிய பெயர்கள் இட்டு அழைக்கப்படுகின்றன. மனித நேயத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் இஸ்லாம்தான் ஒரு நிதர்சனமான எடுத்துக் காட்டு. ஆனால் எங்கே அது இருக்க வேண்டும், எங்கே அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் இஸ்லாமே சொல்லித்தருகிறது.

பள்ளிவாசலிலே தொழுகைக்கு செல்லும்போது கலிமா சொன்ன முஸ்லிம்கள் மட்டும்தான் செல்ல வேண்டும்.

நோன்பு இருப்பது கலிமா சொன்ன முஸ்லிமுக்கு மட்டும்தான் கடமை.

zakath கொடுப்பதற்கு முதல் நிபந்தனை கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும்.

புனித ஹஜ் கடமை கலிமா சொன்ன முஸ்லிம் மீதுதான் விதியாகிறது..

இங்கே எல்லாம் மத நல்லிணக்கம் என்று கூறி அமாவசை என்ற மாற்று மத தோழரை அப்துல்லாஹ் என்ற அல்லாஹ்வின் நல்லடியார் உள்ளே அழைத்து செல்ல முடியாது. இதே போல்தான் நோன்பு துறக்க நோன்பாளிகளை அழைத்து அவர்களுக்கு உணவளித்தால் மட்டுமே அல்லாஹ் தரும் நற்கூலி, நபிகள் நாயகம் சொன்ன நற்சான்று இதழ் கிடைக்கும்.

அரசியல் தலைவர்களுக்கு தலையில் ஒரு தொப்பியை போட்டு அவர்களையும் நம்முடன் உட்கார்ந்து நோன்பு திறக்க வைப்பதற்கு மத நல்லிணக்கம் என்று பெயரல்ல, அது ஒரு அரசியல் நாடகம்.

இந்த உண்மையை ஹாமிதிய்யா நிறுவன உலமாக்கள் மிக சிறப்பாக கடைபிடித்து இருப்பது பாராட்டுக்குரியது. எதிர்காலத்திலும் எந்த நிர்பந்தம் வந்தாலும் இந்த கலாசார உண்மையை அவர்கள் நிலை நிறுத்த வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அடுத்து ஹாமிதிய்யா மாணவர்களின் வளர்ச்சிக்கு நிதி தேடும் ஒரு நிகழ்ச்சியாகவும் இதை பக்குவமாக கையாண்டு இருக்கிறார்கள். துடிப்பு மிக்க இளைஞர்கள் தேனீக்களாக சுறுசுறுப்புடன் இயங்குவதை காண முடிந்தது.

அனாதைகளின் தந்தை என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட கேம்ப்லபாத் முத்துவாப்பா சாஹிப் அவர்கள்போல் ஹாபில்களின் தந்தையாக விளங்குகின்ற ‘சேவை செம்மல்’ நூருல் ஹக் நுஸ்கி அவர்களை நான் பாராட்ட கடமைபட்டுள்ளேன். அவர் எப்போதுமே அவரை முன்னிலைபடுத்தி பேசாமல் அவர் உருவாக்கியுள்ள ஹாபில்களை பற்றி மட்டும் பேசாமல் இன்னும் வாருங்கள், இன்னும் தாருங்கள். உங்கள் மக்கள் மக்களை ஹாபில்களாக மாற்றி உங்களிடம் திருப்பி தருகிறோம். அவர்கள் பொறி இயல் வல்லுனர்களாக, மருத்துவர்களாக, கணினி சிரோன்மநிகளாக மாற அது ஒரு தடை இல்லை, இன்னும் சொல்லப் போனால் அது சிறப்பான ADDITIONAL QUALIFICATION என்று சொல்லி அப்படி வாழ்ந்து வாழ்வில் ஒளிவீசிக் கொண்டிருப்பவர்களின் பட்டியலையும் தயார் செய்து வைத்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு கல்லில் இரு மாங்காய். ஹாமிதிய்யாவின் இனிய இப்தார் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்து முடிந்தது, ஹாமிதிய்யாவும் கல்லா பெட்டியும் நிறைந்து வழிந்தது.. அல்லாஹ்வின் அருளும் நபிகள் நாயகத்தின் நல்லாசியும் வந்து குவிந்தன. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்க சபையின் சேவைகள் !
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [04 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29204

அல்மத்ரசதுள் ஹாமிதியாவின் இந்த அழகிய "நோன்பு இப்தார் " நிகழ்ச்சி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அளஹம்துளில்லாஹ் .

சன்மார்க்க சபையாம் , ஹாபில்களின் தொழிற்சாலையான இந்த உயரிய சபையின் எந்த ஒரு நிகழ்ச்சியும் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நமது சன்மார்ர்க்க சபையின் சகல சேவைகளும் இறுதி நாள் வரையும் நனிசிறக்க நடைபெற நாயன் நல்லருள் புரிவானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ஆலமரம்
posted by A.S.L.சதக்கத்துல்லா (கதிட்ரல் சாலை/சென்னை_86) [04 August 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 29206

குருவித்துரைபள்ளியில் ஒரு செடியாக நாட்டப்பட்ட ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம் இன்று மஜ்லிசுல் புகாரி சபையில் ஹாமிதிய்யா மார்க்க கல்வி / ஹிப்ளு மதரஸா உடன் ஆலமரம் போல் விழுதுகளுடன் நிமிர்ந்து நிர்பதை கானும் பொழுது. அளவில்லா ஆனந்தம். நானும் ஹாமிதிய்யாவில் பயின்ற முன்னால் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

செடிக்கு நீர்ஊற்றி வழர்த்து இன்று ஆலமரத்திற்கும் நீர்ஊற்றிக்்கொண்டு இருக்கும் எங்களது பாசத்திற்குரிய மாமா நஹ்வி நூருல்ஹக் அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்.

இந்த சிறப்பான இப்தார் நிகழ்சியை கானும் பொழுது உள்ளத்தில் அளவில்லா ஆனந்தம் மேலும் பலவிழுதுகளுடன் ஓங்கி வளர எல்லாம்வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்.

அஸ்ஸலாமுஅலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...உயர் pathavi
posted by drnoordeen (muscat) [05 August 2013]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 29215

ஹாமதிய்யாவின் மூலம் பல ஹாபிழ்களை உருவாக்க காரணமாக இருக்கும் எனது ஆசான் நூருல் ஹக் காக்காவிற்கு அல்லாஹ் உயர் பதவியை கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved