Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:01:03 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11467
#KOTW11467
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 3, 2013
ரமழான் 1434: நோன்புப் பெருநாளுக்குப் பிறகு காயலர்களுக்கான விடுதி செயல்படும்! இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3900 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வேலைவாய்ப்பு தேடி பெங்களூரு நகருக்கு வரும் காயலர்கள் தங்குவதற்காக, கொடை வள்ளல் மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி அவர்களின் குடும்பத்தாரால் பிரத்தியேகமாக வாங்கப்பட்ட கட்டிடத்தில், எதிர்வரும் நோன்புப் பெருநாளுக்குப் பிறகு, காயலர் தங்கும் விடுதி செயல்படவுள்ளதாக, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பெங்களூரு காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கூட்ட நிகழ்வுகள் குறித்து, பெங்களூரு காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.எம்.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால், எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் 10ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம - இஃப்தார் நிகழ்ச்சி, 28/07/2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.

குடும்ப சகிதம் உறுப்பினர்கள் நிகழ்விடம் வருகை:

மன்ற அங்கத்தினர் தம் குடும்பத்தினருடன் மாலை 04.00 மணி முதல், தம் சொந்த வாகனங்களிலும், பொது வாகனங்களிலும் நிகழ்விடம் வந்து சேர்ந்தனர். துவக்கமாக கலந்துகொண்டோரிடம் பெயர்பதிவு செய்யப்பட்டது.



துவக்கமாக அஸ்ர் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டம்:

மாலை 05.15 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. வணிகப் பெருந்தகை ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜியின் மகனும், மன்ற உறுப்பினருமான அப்துர்ரஹ்மான் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.



வரவேற்புரை:

மன்ற உறுப்பினர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுகவுரையாற்ற, ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



சிறப்பழைப்பாளர்கள் உரை:

பின்னர், சிறப்பழைப்பாளர்களின் வாழ்த்துரை நிகழ்ச்சி துவங்கியது. துவக்கமாக, ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன் உரையாற்றினார்.



தான் கலந்து கொள்ளும் இரண்டாவது கூட்டம் இது என்றும், சென்ற கூட்டம் போல் இந்த குடும்ப சங்கம இஃப்தார் நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர், மன்றத்தின் அனைத்து முயற்சிகளும் சீரோடும் சிறப்போடும் வருங்காலங்களிலும் தொடர்வதற்கு உறுப்பினர்களின் முழுமையான வருகையும், மேலான ஆதரவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், சந்தாவை நிலுவையின்றி சரியான நேரத்தில் செலுத்தி ஒத்துழைக்க வேண்டுமென்றும் கூறினார்.

அடுத்து, மற்றொரு சிறப்பழைப்பாளரான அப்துர்ரஹ்மான் புகாரீ உரையாற்றினார்.



வேலைவாய்ப்புக்காகவும், இதர காரணங்களுக்காகவும் பெங்களூரு நகருக்கு வருகை தரும் காயலர்கள் சிரமமின்றி தங்குவதற்காக, துவக்க காலத்தில் தனதில்லத்தை - தன் தந்தையவர்கள் தந்துதவியதாகவும், இவர்களுக்காக தங்கும் விடுதியொன்றை அமைக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கனவாகவே இருந்ததாகவும் கூறிய அவர், அந்த அடிப்படையில் வரும் நோன்புப் பெருநாளுக்குப் பிறகு விடுதி கட்டிடம் செயல்படத் துவங்கும் என்றும் தெரிவித்தார்.

அடுத்து, ‘மைக்ரோகாயல்’ மற்றும் ‘ஷிஃபா’ அமைப்புகள் குறித்து சாளை முஹம்மத் முஹ்யித்தீன் விளக்கிப் பேசினார்.



தலைமையுரை:

பின்னர், மன்றத் தலைவர். பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



கடந்த பிப்ரவரி மாதம் நம் மன்றத்தின் சார்பில் முதன்முறையாக குடும்ப ஒன்று கூடல் நிகழ்ச்சி இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

அதுபோல இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த குடும்ப சங்கம இஃப்தார் நிகழ்ச்சியும் முதன்முறையாக மிகச் சிறப்பான முயற்சியில் அழகஹா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.. இவ்வளவு பெரிய ஏற்பாட்டை, நம் மன்றத்தின் 4 அல்லது 5 உறுப்பினர்கள் மட்டும் களப்பணியாற்றி செய்திருக்கின்றனர்.

இவ்விரு குடும்ப சங்கம நிகழ்ச்சியும் - இவ்வுறுப்பினர்களின் அயராத முயற்சி காரணமாக இறையருளால் முழு வெற்றி கண்டுள்ளது என்பதை இங்கே பெருமிதத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதே நேரத்தில், எல்லாக் காலங்களிலும் நாம் இவர்களுக்கு நிந்தனை கொடுக்கக் கூடாது.. மற்ற உறுப்பினர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு சிற்சிறு பொறுப்புகளையேனும் பகிர்ந்தெடுத்துக் கொண்டால், அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க முடியும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆர்வத்துடன் முன்வர வேண்டுமாய் இந்த நல்ல நேரத்தில் அன்போடு வேண்டுகிறேன்...

அடுத்ததாக இங்கு 58 ஆண் உறுப்பினர்கள், 20 பெண்கள் 10 குழந்தைகள் சங்கமித்து இருக்கிறார்கள்... அதில் 10க்கும் அதிகமாக, புதியவர்கள் நம் மன்றத்தின் உறுப்பினர்களாக புதிதாக இணைந்துள்ளனர் - அல்ஹம்துலில்லாஹ்! அதுபோல, நம் மன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த 7 பேர் - ஹாங்காங், சிங்கப்பூர், ஓமன், சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் பணியாற்றுவதற்காக மாறிச் சென்றுள்ளனர். நம் மன்றத்தின் துவக்க காலம் தொட்டு உறுப்பினர்களாக இருந்து, தற்போது பிரிந்து சென்றுள்ள இவர்களை இந்த நல்ல நேரத்தில் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.

நம் மன்றத்தின் உறுப்பினர் சந்தா தொகையை - உறுப்பினர்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு சேகரிக்க, பகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர். உங்களுங்கள் பகுதி பொறுப்பாளரிடம் தயவு செய்து உங்கள் சந்தா தொகைகளை நிலுவையின்றி உடனுக்குடன் செலுத்தி - மன்றப் பணிகள் நிறைவாக நடைபெற்றிட முழு ஒத்துழைப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று போல் என்றும் நம் மன்றத்தின் எல்லாக் கூட்டங்களிலும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டு, நம் மன்றத்தின் வளர்ச்சிக்கும், நம் ஊரின் வளர்ச்சிக்கும் உங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறும், உங்களது ஊக்கமிக்க செயல்பாடு மூலம் மன்ற நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை அளித்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொண்டு எனதுரையை நிறைவு செய்கிறேன்.


இவ்வாறு மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் பேசினார்.

செயலர் உரை:

பின்னர், கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து, மன்றச் செயலாளர் எம்.என்.சுலைமான் விளக்கிப் பேசினார்.



அடுத்து, மன்றத்தில் புதிதாக இணைந்துகொண்ட 5 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவர் முன்னிலையில், சுய அறிமுகம் செய்துகொண்டனர்.



உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:

பின்னர், கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நகர்நலன் குறித்த பல்வேறு அம்சங்கள் இந்நேரத்தில் விவாதிக்கப்பட்டது.

தீர்மானங்கள்:

அதனைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - மறைந்தோருக்கு இரங்கல்:

அண்மையில் காலமான - காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாமும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் துணைத்தலைவருமான ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவர்களின் மறுமை நல்வாழ்விற்காக மனதார பிரார்த்திக்கிறது.

தீர்மானம் 2 – சாதனையாளர்களுக்கு வாழ்த்து:

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற அல்ஜாமிஉல் அஸ்ஹர் என்றழைக்கப்படும் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில், ‘மவ்லவீ’ பட்டச் சான்றிதழ் பெற்றுள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் ஹாஃபிழ் கே.எம்.செய்யித் இஸ்மாஈல், இவ்வாண்டு நமது ஊரில் ஆலிம் - ஆலிமா, ஹாஃபிழ் - ஹாஃபிழா பட்டம் பெற்றோர்,

THAILAND GEM AND JEWELRY TRADERS ASSOCIATION (TGJTA) துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்,

நமது நல மன்றத்தின் உறுபினர்கள் சுமார் 30 பேர், பெங்களூரில் ஆதார் அடையாள அட்டை பதிவு செய்வதற்கு, களப்பணியாற்றி சேவை செய்த
ஜனாப் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன்,
ஜனாப் முஹ்யித்தீன் தம்பி,
ஜனாப் முஹம்மத் முஹ்யித்தீன் பிக்தால்,
ஆகிய மன்ற உறுப்பினர்கள்,

காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சியை சிறப்புற நடத்தி முடித்துள்ள - காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர்

ஆகிய அனைவருக்கும், பெங்களூரு காயல் நல மன்றம் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.

தீர்மானம் 3 - புதுமண தம்பதியருக்கு வாழ்த்து:

விரைவில் புது மணவாழ்வு காணவுள்ள - மன்ற உறுப்பினர்கள் முஹம்மத் உமர் மற்றும் அவரது சகோதரர் காதர் மீராஸாஹிப் ஆகியோருக்கு மன்றம் தனது மனமார்ந்த முன் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது. புது மணவாழ்வு காணும் இவர்களுக்கு வல்ல அல்லாஹ் குறைவில்லா நல்வாழ்வையும், இருலோகத்திற்கும் பயன்தரும் கண்குளிர்ச்சியான மக்கட்செல்வங்களையும் நிறைவாகத் தந்தருள இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.



தீர்மானம் 4 – ஜக்காத் நிதி சேமிப்பு:

மன்ற உறுப்பினர்களிடமிருந்து சுமார் 20,000/- தொகை ஜகாத் நிதியாக சேகரிக்கப்பட்டது. இத்தொகையை,
1. துளிர் பள்ளிக்கும்,
2. மைக்ரோகாயல் அமைப்பிற்கும்
சரிசமமாகப் பிரித்தளிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.



தீர்மானம் 5 - வெப்சைட் அட்மின்

நமது மன்றத்தின் வெப்சைட் அட்மின் ஆக செயல்பட ஜனாப் முஹம்மத் ஷிஹாபுத்தீன் மற்றும் ஜனாப் புகாரீ மவ்லானா ஆகியோரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.



தீர்மானம் 6 - விடுதி செயல்திட்டங்களுக்காக தனிக்குழு:

பெங்களூருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும் காயலர்களுக்காக, வரும் ஆகஸ்ட் மாதம் புதிதாக இயங்கவுள்ள தங்கும் விடுதிக்கான செயல்திட்டங்களை வடிவமைத்திட,
ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர்
மூஸா ஸாஹிப்
ஷேக்னா லெப்பை
எம்.என்.முஹம்மத் சுலைமான்
முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத்
கே.ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ
அபூபக்கர் ஆலிம்
ஆகியோரடங்கிய குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது. இக்குழு முறையான அறிக்கையை ஆயத்தம் செய்து, எதிர்வரும் நோன்புப் பெருநாள் கழித்து சமர்ப்பிக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7 – அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:

மன்றத்தின் அடுத்த கூட்டத்தை ஒருங்கிணைக்க,
கே.எஸ்.எம்.எல்.முஹம்மத் உமர்
ஷேக்னா லெப்பை
வாவு முஹம்மத்
டூட்டி செய்யித் முஹம்மத்
ஆகியோரிடம் பொறுப்பளித்தும், அவர்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மன்ற நிர்வாகக் குழு முறைப்படி செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

பொறுப்பளிக்கப்பட்ட இக்குழுவினர் சிறப்புக் கூட்டம் நடத்தி, அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர், கூட்ட தேதி, நிகழ்விடம் குறித்து இறுதி முடிவு எடுக்க இக்கூட்டம் அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:

மஃரிப் வேளையானதும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது.





இதில், பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், சிக்கன் சமூசா, பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.





தொழுகை & இரவுணவு:

இஃப்தார் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நடைபெற்றது. பின்னர், இரவுணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் கபாப், இனிப்பு பலகாரம், டீ ஆகியன அனைவருக்கும் பரிமாறப்பட்டது.











கூட்ட நிறைவு:

நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள், அவர்கள்தம் குடும்பத்தினர் என சுமார் 85 பேர் கலந்துகொண்டனர்.








கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை, https://plus.google.com/photos/107528015060439646064/albums/5907476323214679825 என்ற இணைப்பில் சொடுக்கி, தொகுப்பாகக் காணலாம்.

இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.சுலைமான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தியாக்கம்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
(துணைத்தலைவர்)
ஹாஃபிழ் மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான்
மற்றும்
இப்றாஹீம் நவ்ஷாத்
(ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள்)

படங்கள்:
மக்கீ இஸ்மாஈல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லாஹ்...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [04 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29189

மாஷா அல்லாஹ்...! பெங்களூரு கா.ந.மன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது. எனது அருமை நண்பர் சாளை-முஹம்மது முகிய்யதீன், அருமை சகளை மஹ்பூப் சுப்ஹானி மற்றும் தம்பி நோனா உமர் ஆகியோரைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! இன்ஷா அல்லாஹ் வரும் பெருநாளைக்கு ஊரில் நேரில் காணும் வாய்ப்பை வல்ல நாயன் தந்தருள்வானாக!

தம்பி உமர் மற்றும் அவரது சகோதரர்க்கு எனது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்! கண்டிப்பா தாளஞ்சோறு உறுதி! இன்ஷா அல்லாஹ்! உங்களது மண வாழ்வு மகிழ்வோடும், மக்கள் பாக்கியத்தோடும் இறவனின் அருளோடும் இனிய இல்லறம் காண வாழ்த்துகின்றேன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மன்னிக்கவும்...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [04 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29190

மன்னிக்கவும்.. விடுபட்ட கருத்து,

இந்நிகழ்வில் பூத்திருந்த பட்டு ரோஜாக்களின்(மழலைகளின்) மந்திரப்புன்னகை மனதைக் கொள்ளை கொண்டது. மாஷா அல்லாஹ்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...பெங்களூர் எங்களூர்
posted by mackie noohuthambi (kayalpatnam) [04 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29194

செய்திகள் படிப்பதற்கும் படங்கள் பார்ப்பதற்கும் மன நிறைவை தருகின்றன. உயர்ந்த உள்ளங்கள்.

பெங்களூர் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறதே, இவர்கள் எப்படி நம்மூர் மக்களுக்கு ஒரு தங்கும் விடுதி அமைத்து தருகிறார்கள் என்று சிந்தித்தபோது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

அதுதான் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். வாடிய பயிரை கண்டபோதெலாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் பிறந்த தமிழகம். வாரி வாரி வழங்கிய சீதக்காதி வள்ளலையே வாரி வழங்கிய வள்ளல் மண் தமிழகத்தின் இஸ்லாமிய தலைநகர் காயல்பட்டினம் மண்ணின் மைந்தர்கள் இப்ப்படித்தான் எல்லா காலத்திலும் சிந்தித்திருக்கிறார்கள் என்பது சரித்திர சான்றுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆரம்பத்தில் சென்று குடியேறியவர்கள், அங்கே பள்ளிகளை கட்டினார்கள், தைக்காக்களை கட்டினார்கள், முத்து சாவடி போன்ற அமைப்புகளை ஏற்படுத்தினார்கள். வெளிநாட்டில் செயல்படும் காயல் நல மன்றங்கள்தான் இப்படி நலத்திட்டங்களை வாரி வழங்க முடியும் என்ற எண்ணத்தை பொய்ப்பித்து இருக்கிறார்கள் பெங்களூர் எங்களூர் நண்பர்கள்.

பூமியில் நடப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே."உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் அங்கே".என்பார்கள். அது இங்கே இமயமாக உயர்ந்து நிற்கிறது.. கண்கள் பனிக்கின்றன, இதயம் இனிக்கிறது. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [04 August 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29195

மாஷா அல்லாஹ்..மாஷா அல்லாஹ்.!!

அருமையான ஒன்று கூடல்.

சொந்தங்களை காண்பதில் அளவில்லா மகிழ்ச்சி.

மனது நிறைந்த சந்தோசம், வயிறு நிறைய சூப்பர் உணவு, முகம் முழுவதும் சிரிப்பு, வல்ல ரஹ்மானிடம் அழகான நன்மை வரவு கணக்கு.. வேறு என்ன வேண்டும் இந்த உலகில். இன்ஷா அல்லாஹ் இது தொடரட்டும்.

ஊரில் முதல் ஆடிட்டர் என்றால் அது புல்லாலி மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி அவர்கள் தான். கம்பீர தோற்றம், சிம்மக் குரல், சிறந்த ஆளுமை, அனைவர்களையும் கட்டிப்போடும் பேச்சு திறமை, அனைவர்களுக்கும் உதவனும் என்ற குழந்தை மனது.. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

தற்போது நம் ஊரில் உள்ள அதிகமான ஆடிட்டர்கள் இவர்களின் குருகுலத்தில் படித்து கற்றவர்கள் தான். அவர்களின் மறைவுக்கு பின்பு நம் ஊரில் ஆடிட்டர் உருவாக்கம் குறைந்து விட்டன.

நான் பெங்களூர் NAL இல்( National Aerospace Laboratory ) பணி புரிந்த சமயம், டூட்டி முடிந்து இவர்களின் PRIME ROSE வீட்டுக்கு தான் செல்லுவேன். அங்கு நம் ஊர் சகோதரர்கள் கூ.. ஹூ.. என்று நிறைந்து இருப்பார்கள். அந்த காலமே யார் பெங்களூர் வந்தாலும் இறங்கும் இடம் அது தான். காயலர்களின் வேடந்தாங்கல் என்றே சொல்லலாம்.

அதை இவர்களின் மகன்கள் தொடர்ந்து வேடந்தாங்கலை புதுப்பித்து கொடுக்க இருக்கின்றார்கள். " புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்" என்ற பழமொழி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்து-லில்லாஹ். ஐந்து நட்சத்திர பாராட்டுக்கள்.

* ஜகாத் நிதி சேமித்து மைக்ரோ காயலுக்கும், துளிருக்கும் கொடுத்த நல்ல மனதிற்கு மீண்டும் ஒரு நட்சத்திர பாராட்டுக்கள்.

தொடரட்டும் உங்களின் மக்கள் பணிகள். இன்ஷா அல்லாஹ்.

புகைப்படத்தில் சகோதரர் முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத் எங்கு இருக்கின்றார்..?

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [04 August 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29196

அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த கூட்டத்தின் கதாநாயகன் KKS சாலிஹை விட்டுவிட்டு என்னை தேடுவதில் என்ன நியாயம் (காரணம்)?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [04 August 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29198

வ-அலைக்கு-முஸ்ஸலாம்

என்ன போட்டு தள்ள தான்...!!

அது ஒன்றும் பெரிய காரணம் இல்லை, அவர்களை எல்லாம் பார்த்து இருக்கின்றேன், பார்க்காதவரை பார்க்கத்தான்.

சாளை S.I.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by s.e.m. abdul cader (bahain) [04 August 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 29201

அஸ்ஸலாமு அல்லைக்கும் , எங்கும் காயலர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி . என் மதிபுகுரிய நண்பர் அப்துல் காதர் ஆலிம் - bahrain, saudi and at present bangalore? well!

salam to my friend abdul rahim. abdul cader aalim - please note my mbile no; 00973-39872275, please give me a "miss call " inshallah, i will call you back

i wish you all best to all. wassalam.

s.e.m. abdul cader,
manama , bahrain.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Fantastic Iftaar Meet !!
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [04 August 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 29207

நலமன்றத்தின் ஜகாத் நிதியை நான் சார்ந்துள்ள மைக்ரோ காயலுக்கும் பகிர்ந்தளித்தமைக்காக முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்! எல்லாபுகழும் இறைவனுக்கே!!

நான்கு வருடங்களுக்கு முன் இக்காயல் நலமன்றம் தொடங்கிய புதிதில் அவர்களின் பொதுக்குழு கூட்டத்தில் ஒரு முறை கலந்து கொண்டேன். அதற்கு பின்னர் இப்போதுதான் இப்தார் ஒன்றுகூடலில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்! மிகவும் அருமையான ஏற்பாடு... அனவைரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் போன்றதொரு உணர்வு!!

பெங்களூர் காயல் நல மன்றம் ஆரம்பிபதற்கு நண்பர்களான KKS ஸாலிஹ், குலாம், ஹாபில் அப்துல்லாஹ் , ஷேக்னா போன்றவர்களின் கடின உழைப்பு வீணாகவில்லை. அதற்கு சாட்சியே அம்மன்றத்தின் அருமையான செயல்பாடுகளும் & ஒருங்கினைப்புகளும் !!

மைக்ரோ காயலின் சேவைகளை பற்றியும், கூடிய விரைவில் மலர இருக்கும்... மலர்ந்து சேவை எனும் நறுமணத்தை காயல் எங்கும் பரப்ப இருக்கும் 'ஷிபா'விற்கு மன்றத்தின் பங்களிப்பின் அவசியம் பற்றியும் மற்றும் கடந்த வருடங்களில் ஊடகங்கள் வாயிலாக நான் அவதானித்த மன்றத்தின் சேவைகள் மென்மேலும் சிறப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் (Suggestions) பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட்டியது.

மன்றத்தின் தலைவர் ஜெய்த் அவர்கள் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றார் என்று மன்றத்தின் செயல்பாடுகள் வாயிலாகவும், மன்றத்தினர் பலர் கூறக் கேட்டாலும்... அதனை கண்கூடாக நானும் அவதானித்தேன்.

இந்த ஒன்று கூடலில் நான் அதிக நேரம் செலவழித்தது... மர்ஹூம் ஆடிட்டர் புகாரி அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் அவர்களிடம்தான். அதுவும் முதல் சந்திப்பு... அருமையானதொரு சமூக கருத்து பரிமாற்றம்.

அதற்கு காரணம், தனது தந்தையை (காயல் நல மன்றம் உதயாமவதற்கு முன்னரே பெங்களூரை நோக்கி படையெடுக்கும் நமதூர் மக்களுக்கு வேலைகளில் உதவி & தங்குவதற்கு இடம் என தந்துதவி சேவையாற்றியவர்) போல் தானும் சமூக சேவைக்கு சளைத்தவர் அல்ல என்ற உயரிய எண்ணமும், மன்றத்திற்கு பல வகையிலும் அவர் அளித்து வரும் தொடர் ஆதரவும் மற்றும் நிமிடத்தை காசாக்க நினைக்கும் இப்பூலகத்தில் மன்றத்திற்கு அடுத்தது என்ன (எதை) செய்யலாம் என்ற கருத்து பரிமாற்றமும்தான் !!

KCGC யின் “இவரைப்போல் நீங்களும் சாதிக்கலாமே...?" நிகழ்ச்சியின் கதாநாயகரை தன்னகத்தே கொண்டே இம்மன்றம்... பாசமிகு சகோ. இப்ராஹிம் அவர்களை முழமையாக பயன்படுத்தி நம் இளைய சமுதாயத்திற்கு நல்லதொரு ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் தொடர் நிகழ்சிகளின் வாயிலாக ஏற்படுத்தி தர வேண்டுகின்றேன்.

இம்மன்றத்தின் இன்னொதொரு சிறப்பு... பெரும்பாலானோர் நன்கு படித்து பல துறைகளில் உயர்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர் பட்டாளம். இவர்களில் பத்துக்கும் மேற்ப்பட்டோர் ஹாபிழ்கள் (கூடுதல் தகுதி) வேறு. இவர்களிடம் அளப்பரிய ஆற்றல் கொட்டிக் கிடக்கின்றது... இவைகள் முறையாக முழுமையாக அறுவடை செய்யப்பட்டால் வளமிக்க நாளைய (காயல்) சமுதாயத்தை உருவாக்க இவர்களின் பங்களிப்பும் அற்புதமாக இருக்கும் !!

தொடரட்டும் உங்கள் சேவை... வாழ்த்துக்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Shaik Abdul Cader.S.M (germany) [05 August 2013]
IP: 79.*.*.* Germany | Comment Reference Number: 29209

Masha allah..good to see all you guys..

hope this meet really went well..i missed it mainly biryani...salih bhai promised me to make such biryani once i reach back bangaloe..lets see insha allah...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved