Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:50:20 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11096
#KOTW11096
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 24, 2013
அரசு மருத்துவமனையிலுள்ள குறைகள் சரிசெய்யப்படாவிடில், உண்ணாவிரதப் போராட்டம்! சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3615 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலுள்ள குறைகள் 15 நாட்களுக்குள் சரிசெய்யப்படாவிடில், நகர்மன்ற அங்கத்தினர் மற்றும் நகர பொதுமக்களுடன் கலந்து பேசி, மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்கப்படாதது மற்றும் போதிய கருவிகள் இருந்தும் அவை இயக்கப்படாதது குறித்து, பொதுமக்கள் பலர் முறையிட்டதன் பேரில், இன்று காலை 09.30 மணியளவில், திடீரென மருத்துவமனை வளாகத்திற்கு வருகை தந்தார் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.



மருத்துவமனையில், வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டார்.





உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மகப்பேறு பிரிவில் குழந்தை பெற்றுள்ள மகளிர் ஆகியோரை சந்தித்து, சத்துணவுப் பொட்டலங்களை அவர் வழங்கினார்.







பின்னர், மருத்துவமனையின் நடப்பு நிலவரம் குறித்து, தற்காலிகமாக அங்கு மருத்துவராகப் பணியாற்றி வரும் டாக்டர் பாவநாச குமாரிடம் சட்டமன்ற உறுப்பினர் விபரங்களைக் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது:-



காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்களுக்கான பணியிடங்கள் இருந்தும், ஒரு மருத்துவர் கூட பணியமர்த்தப்படாமலிருப்பதால், பொதுமக்கள் பெரிதும் அல்லலுற்று வருகின்றனர்...

இங்கு மின் தடையை சமாளிப்பதற்காக, சுமார் 7 மாதங்களுக்கு முன் ஜெனரேட்டர் கருவி வாங்கி வைக்கப்பட்டும், இன்றளவும் அது இயக்கப்படவில்லை...

இந்த மருத்துவமனைக்கென்று சொந்தமாக தரப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தற்போது இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது, தேவைக்கு 108 ஆம்புலன்ஸை வரவழைத்துக்கொள்ளுமாறு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 108 ஆம்புலன்ஸ் என்பது பொதுமக்களின் அவசர தேவைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்று. ஆனால் மருத்துவமனைகளைப் பொருத்த வரை நாள்தோறும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் தேவை உள்ளது.

இக்குறைகள் குறித்து, இப்பகுதி மக்கள் - அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் முறையிட்டுள்ளனர். இவற்றை சரிசெய்யக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடவுள்ளேன்... அடுத்த 15 நாட்களுக்குள் இக்குறைகள் சரிசெய்யப்படாவிடில், காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர் மற்றும் நகர பொதுமக்களைக் கலந்தாலோசித்து, மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அல்லது அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலான போராட்டம் ஒன்றை அறிவித்து, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானே முன்னின்று நடத்துவேன்...


இவ்வாறு, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, ரெங்கநாதன் என்ற சுகு, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகிய - காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களும், நகர திமுக செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் உள்ளிட்ட கட்சியினரும் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இதற்க்கு யார் உண்ணாவிரதம் இருப்பது...?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [24 June 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 28261

அரசு மருத்துவமனையிலுள்ள குறைகள் சரி செய்யப்படாவிடில் உண்ணாவிரதப் போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு... வரவேற்கிறேன்...

M L A அவர்களே நீங்கள் திறப்பு விழா நடத்திய மொகுதும் பள்ளி மையவாடியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டிக்கு இது வரை நீர் நிரப்பபடவில்லையே...! இதற்க்கு யார் உண்ணாவிரதம் இருப்பது...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [24 June 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28262

இவங்க தான் நம்ம MLA வா.

முகம் மறந்து விடப்போகின்றது, இது மாதிரி அடிக்கடி வந்து போங்க, அண்ணாச்சி.

முத்து இஸ்மாயில் காக்கா, அதான், MLA விற்கு முன்பாக தான், நம் நகராட்சி அதிகாரி அவர்கள், இன்னும் மூன்று மாதத்தில் மொகுதூம் பள்ளி நீர் தொட்டில் நீர் நிரப்பப்படும் என்று உறுதி அளித்தார்களே, அதற்குள் நீங்க உண்ணாவிரதம் யார் இருப்பது என்று வினவுகின்றீங்க..!!

குழப்பமே, அந்த மூன்று மாதம் எது என்று தான் தெரியவில்லை.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...அதிகாலை ஆரம்பித்து..அந்திநேரம்....
posted by OMER ANAS (DOHA QATAR..) [25 June 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 28264

ஹா ஹா..!. அண்ணாச்சி, உங்க போராட்டத்தினை, வரும் ரமலான் முதல் நாளில் தொடங்கி வையுங்கோ... நோன்பு திறக்க அரசு மருத்துவ மனையில் கஞ்சிக்கு ஏற்பாடு செய்யுங்கோ..! உங்கள் போராட்டம் வெற்றி அடைந்திட வாழ்த்துக்கள்..! மக்களே...! உங்களுக்காக கொஞ்சமாவது சேவை செய்த மருத்துவர்,,பாவநாச குமாரும்,இனி அம்மாவின் புண்ணியத்தாலே அம்பேல்தான்.....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [25 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28266

தேர்தல் நெருங்குகிறது, சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் நகர குறைகளை எடுத்து சொல்லாமல் காயல் மக்களின் வாக்குகளை வாங்கும் நோக்கத்துடன் விசிட்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by nizam (india) [25 June 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 28272

அப்துல் காதர் அவர்களின் கருத்தை மறுக்கிறேன். நானும் இந்த தொகுதியில் அரசியல்வாதிகள் வியாபாரிகள் சாதாரண பாட்டாளி மக்கள் வரை எல்லோரோருடைய வாயையும் கிளரிபார்த்து விட்டேன். எல்லோரும் அனிதாவை பற்றி சொல்வது இவரைப்போல மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய யாரும் கிடையாது. இந்த தொகுதி மக்களின் இரத்தத்தோடு கலந்து விட்டார் எனபதே சரியான சொல்.

வியாதி என்பது பணக்காரன் ஏழை நடுத்தவாதி எல்லோரையும் தாக்கும். ஒரு பணக்காரனுக்கு எந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் கிடைக்குமோ அதே சிகிச்சை அரசாங்க மருத்துவ மனையில் ஒரு ஏழைக்கு கிடைக்க வேண்டும் என்பதே ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய குறிக்கோளாகும். ஏனெறால் இந்த நாட்டின் ஆட்சசியை நிர்ணயிப்பது இந்த நாட்டின் ஏழைகள்தான்.

நமதூர் அரசாங்க மருத்துவமனையில் திருப்திகரமான சேவை இல்லை என்பது பலருடைய கருத்து. அதே சமயத்தில் மருத்துவர் பாவநாசம் குமார் அவர்கள் தன்னால் முடிந்த அற்பணிப்பை செலுத்துகிறார்கள். அனிதா அவர்களின் இந்த விசிட் கொஞ்சல் மாறுதல்களை உண்டாகும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. சரி ஆளுங்கட்சி இது போன்ற நடவடிக்களை எடுக்க காணோமே? அவர்கள்தான் முன்னின்று நடத்த வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [28 June 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28296

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் தொகுதி M.L.A. அனிதா ராதா கிருஷ்ணா அவர்களின் இந்த கடமையை நாம் என்ன வேண்டு சொல்லுவது ....நம் ஊர் பொது மக்கள் அனைவர்களும் மனதார பாராட்டியே ஆகணும் .....

பொதுவாகவே நம் MLA அண்ணாச்சி அவர்களுக்கு நம் ஊர் மக்கள் என்றாலே தனி ஒரு அலாதியான அன்பும் / பாசமும் ...பிரியமும் .....உண்டு + .நம் ஊருக்கு பல நல்ல செயல் திட்டங்களும் செயல் படுத்தனும் என்கிற மனதில் எண்ணமும் எப்போதும் உண்டு .............

நமது அருமை அண்ணன் M.L.A. அனிதா ராதா கிருஷ்ணன் அவர்களின் இந்த யாருமே எதிர் பார்க்காத திடீர் அரைவல் சோதனை .....தொடரட்டும் .....அப்பத்தான் நமது ஊர் அரசு மருத்துவமனையும் சரி ....நமது அரசு அதிகாரிகளும் சரி ரொம்பவும் கவனமும் / சுத்தத்துடனும் இருந்து வரலாம் ......

நமது அருமை அண்ணன் M.L.A. அனிதா ராதா கிருஷ்ணன் அவர்களின் இது போன்ற தீடீர் சோதனைகள் தொடரட்டும் ............

தாங்கள் எங்கள் ஊர் பொது மக்களுக்கு வேண்டி நல்ல காரியத்துக்காக .... போராட்டம் என்று சொன்னால் எங்கள் மக்கள் ஒரு அணியில் தங்களுடன் தொடர்வார்கள் ...

நம் சகோதரர் நிஜாம் அவர்களின் வார்த்தை 100 % சரியானதே ......நம் அண்ணாச்சி அவர்கள் நம் ஊர் பொது மக்களின் மன எண்ணத்தோடு ஒட்டி விட்டார்கள் ....... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தாலாட்டுதே வானம்... (?!)  (24/6/2013) [Views - 3896; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved