Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:21:56 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10763
#KOTW10763
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 9, 2013
காயல்பட்டினத்தில் சென்ட்ரல் வங்கி ஏடிஎம் திறப்பு விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2622 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில், அதன் காயல்பட்டினம் கிளை வளாகத்திற்கருகில் நிறுவப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரம் திறப்பு விழா இன்று (மே 09) மாலை 04.30 மணியளவில் நடைபெற்றது.









காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில், வங்கியின் மதுரை மண்டல துணைப் பொது மேலாளர் சி.பெரியதம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி, ஏ.டி.எம். இயந்திரத்தைத் திறந்து வைத்ததுடன், வங்கி ஏ.டி.எம். அட்டையை இயந்திரத்தில் இட்டு, பணப்பரிமாற்றத்தையும் துவக்கி வைத்தார்.





வங்கி மதுரை மண்டல உதவி துணைப் பொது மேலாளர் பி.ஆர்.விஜயகுமார், வங்கியின் மதுரை அலுவலக தலைமை முலாளர் ஆர்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். வங்கியின் காயல்பட்டினம் கிளை அலுவலக கட்டிட உரிமையாளர் நவாஸ் உட்பட திரளான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

அனைவருக்கும் வங்கியின் காயல்பட்டினம் கிளை சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.









விழா ஏற்பாடுகளை, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா காயல்பட்டினம் கிளை மேலாளர் டி.புஷ்பராஜ் செய்திருந்தார்.

காயல்பட்டினத்தில், இது 5ஆவது ஏ.டி.எம். இயந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சார்பில், அவ்வங்கி வளாகத்தில் ஒன்றும், அப்பாபள்ளி தெரு - ஸீ கஸ்டம்ஸ் சாலை முனையில் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அவ்வங்கி வளாகத்தில் ஒரு ஏ.டி.எம். கருவி நிறுவப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில், காயல்பட்டினம் அஞ்சலகம் எதிரில் ஒரு ஏ.டி.எம். கருவி நிறுவப்பட்டுள்ளது.

தகவல்:
ஆசிரியர் M.A.புகாரீ


படங்களில் உதவி:
A.K.இம்ரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள்....வாரி வழங்குங்கள் எங்கள் சேமிப்பிலிருந்து...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [09 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27335

வாழ்த்துக்கள்...! நாளுக்கு நாள் வளர்ச்சி காணும் காயலில் இது போன்ற சேவை அவசியமான ஒன்றே! ஆனால் ஒரு ஆதங்கம் பல ஏடிஎம் மெஷின்லெயும் நான் பணம் எடுத்துள்ளேன். இதுவரை IOB மெஷின்லெ மட்டும் எடுத்ததே இல்லை! எப்ப போனாலும் Cash Out, அல்லது Out of service, மன்னிக்கவும் வங்கி மேளாளரைத் தொடர்பு கொள்ளவும் இப்படியே அலைக்கழிக்கப்ப்ட்டுள்ளேன்.

வங்கியில் கேட்டால், “எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லீங்க...அது தூத்துக்குடிக்கு உட்பட்டது நாங்க என்னங்க பண்ண முடியும்?” இது தான் பதில்! நானும் கஜ்னி முகம்மது போல பதினாறு முறை படையெடுத்தேன்....படு தோல்விதாங்க...! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ATM
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27336

அதிக தேவையான மறுமலர்ச்சி. (A T.M ) சேவை. ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலக சேமிப்பில் போட்ட பணத்தை எடுப்பதற்கு நாங்கள் பட்ட பாடு. கையெழுத்து சரி இல்லை, தலை எழுது சரி இல்லை ஆள் நேரில் வரவேண்டும் என்றெல்லாம் அலைக்களிப்பார்கள். ஊரில் முதல் முதலில் அந்த தொல்லையில் இருந்து விடுபட சென்ட்ரல் பேங்க் தான் ஊரில் உதயமாகியது. நாளடைவில் அதன் சேவை பின்னடைவை சந்தித்தால் அந்த இடத்தை மதுரை வங்கி பிடித்து கொண்டது. பின்னர் அது ICICI பேங்க் ஆக பரிணாம வளர்ச்சி பெற்று மக்கள் சேவையில் முதலிடத்துக்கு வந்தது. பின்னர் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்..இப்போது மீண்டும் சென்ட்ரல் பேங்க் அதன் முதலிடத்துக்கு தன்னை முன்னெடுத்து செல்வதற்கு துணையாக ATM சேவையை ஆரம்பித்துள்ளது பாராட்டுக்கு உரியது.

வெளி ஊர்களில் பேருந்து நிலையத்தில். ரயில் நிலையத்தில் உள்ளதுபோல் இங்கும் ஒரு ATM அமைந்தால் நல்லது. இதுவரை 6 ATM கள் ஊரில் உள்ளன. ஒரு சிறிய கிராமத்தில் இந்த அசுர வளர்ச்சி அதிர வைக்கிறது. கூடிய விரைவில் நாம் எதிர்பார்க்கும் பேருந்து நிலைய வளாகத்திலும் ஒரு ATM அமைக்க ஏதாவது ஒரு வங்கி முன்வரவேண்டும். வாழ்த்துக்கள். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மத்திய காயலில் ATM - கவனிப்பார்களா?
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [09 May 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 27338

நம் ஊரின் முதல் வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் ATM அமைந்ததற்கு வாழ்த்துக்கள்.

இதுவரை 5 ATM மெஷின்கள் உள்ளன. அப்பா பள்ளி தெரு ATM ஒன்றைதவிர மற்ற 4 ATM களும் பஜாரிலேயே அமைந்துள்ளன. எதாவது ஒரு வங்கியின் ATM மத்திய காயலில் ( பெரிய சதுக்கை அருகே ) அமைந்தால் எம்மை போன்றோருக்கு உதவியாக இருக்குமே. கவனிப்பார்களா?

ICICI வங்கியின் ATM ஆக இருந்தால் நன்று. ICICI வங்கியின் சேவைதான் இந்தியாவில் சிறப்பாக உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDH) [09 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27339

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்.....நம் ஊர் மக்களின் நெடு நாளைய கனவு தான் ....இந்த C.B.I. ATM .....இனிமேல் நம் ஊர் பெண் மக்களுக்கு ரொம்பவும் வசதியாகவே இருக்கும் ......நம் ஊரின் அசுரமான வளர்ச்சியை நாம் எண்ணி பெருமை படுவதோடு .......மன வருத்தமும் படவேண்டிய சூழ் நிலைமையும் உள்ளது ....தான் ....நம் ஊரின் தற்போதைய ''' ஒற்றுமை இல்லா .....சூழ் நிலைமைதான் .........நம் ஊர் வளர்ச்சியோடு ....இந்த ஒற்றுமையும் நம்மோடு சேர்ந்து இருந்தால் ....இன்னும் நம் ஊருக்கும் பெருமை + நமக்கும் மன திருப்தி தான் .....

எங்கள் மத்திய காயல் பகுதியில் ஒரு '''' ATM ''' மிசின் ....நிறுவ நம் ஊர் வங்கி உயர் அதிகாரிகள் மனது வைத்தால் ...இந்த பகுதி + கோமான் தெருவு / அருணாசலபுர ...மற்றும் பகுதிகளுக்கும் ரொம்பவும் உபயோகமாகவே இருக்கும் ....இந்த பகுதி பெண்கள் / வயதான பெரியவர்களுக்கும் ரொம்பவுமே '''' யுசாகவே '' .....இவர்களின் கஷ்டத்தை நாம் பார்க்கிறோம் அல்லவா ......இன்ஷா அல்லாஹ்....நாங்கள் கூடிய சீக்கிரமே நம் ஊர் வங்கி உயர் அதிகாரிகளின் நல்ல பதிலை .....எதிர் பார்த்து உள்ளோம் ...........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved