Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:36:02 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10761
#KOTW10761
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 9, 2013
காயல்பட்டினம் குடிநீர் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக முதல்வர் இன்று துவக்கி வைத்தார்! வீடியோ காட்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3600 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று (மே 9) காயல்பட்டினம் குடிநீர் திட்டம் உட்பட பல நகராட்சி நிர்வாகத்துறை திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அடிக்கல்நட்டி துவக்கி வைத்தார்.





அவ்வேளையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.முனுசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் IAS, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கே. பனிந்திர ரெட்டி IAS , நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே IAS, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஏகாம்பரம் IAS ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வின் வீடியோ தொகுப்பை காண இங்கு அழுத்தவும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (9.5.2013) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருநெல்வேலி மாநகராட்சியில் 22 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை காணொலிக் காட்சி (VIDEO CONFERENCING) மூலமாக திறந்து வைத்தார்கள். மேலும், 265 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 29 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களை துவக்கி வைத்தார்கள்.

நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், பெருகி வரும் நகர்ப்புற மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை நிறைவேற்றிடவும், அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி மாநகராட்சியில் 78,600 மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 22 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் மேம்பாட்டுத் திட்டம்; சேலம் மாநகரத்தில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகக் கட்டடம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவாக்குடியில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்; நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு கட்டடம்; காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகர் நகராட்சியில் 1.5 ஏக்கர் பரப்பளவில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; வேலுhர் மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரி எரிவாயுக் கூடம், என மொத்தம் 27 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகராட்சியில் 76 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்; தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம்; தேனி மாவட்டம் - கம்பம், சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி; திருப்பூர் மாவட்டம் - தாராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் - வந்தவாசி; நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு; சேலம் மாவட்டம் - ஆத்தூர் ஆகிய 8 நகராட்சிகளில் 189 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், என மொத்தம் 265 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், கரூர் மாவட்டம், புஞ்சைபுகளூர் பேரூராட்சியில் 20,300 மக்கள் பயனடையும் வகையில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நாமக்கல் நகராட்சியில் 22 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [09 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27342

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ....நமது ஊருக்கு ஏற்கனவே பல நல்ல ....நல்ல ...திட்டங்களை .....தந்து தான் உள்ளார்கள் ....ஆனால் எங்கே நம்மிடம் தான் '''ஒற்றுமை ;; என்கிற ..வார்த்தையும் சரி ....செயல் பாடும் சரி .... இல்லாமல் நாம் படும் அவஸ்தைனால்.....நம் ஊருக்கு வர வேண்டிய எல்லா நல்ல திட்டங்களும் ....ஒரு மூளையில் தூங்குகிறதோ அல்லது வேறு ஊருக்கு சென்று விட்டதோ ...........

நம் ஊருக்கு நல்ல திட்டங்களை தருகின்ற ..தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி சொல்ல கூட ..நம் நகர் மன்ற தலைவி அவர்கள் அழைத்தும் ..... நம் உறுப்பினர்கள் முன்பு வராததே.... சரியானது அல்ல ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. true dreams
posted by syedahmed (GZ, China) [09 May 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 27346

It is a proudness scheme plan that our KPM has attained well achievements not only this water plan, but also several beneficial schemes provides with full effort done by our honourable CM.

There is no doubt that our native will be get more and more some other benefits very soon with miracally reflection in her green revolutionery regime. We profound our sincere core of thanks from our hearts to our honourable CM and extend the gratitude that shows the strengthen the bonds of affection with buoquent warm gift .

Also, our CM always put in her mind the solidarity planning decided by her , and she should make the planning what to do, where to do, when to do and how to do with successful implementory solutions.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்தி பெருமிதம் அடைகிறேன்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [10 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27357

காயல்பட்டினம் குடிநீர் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் மேலும் எனது 13 வது வார்டு மக்கள் சார்பாகவும் வாழ்த்தி பெருமிதம் அடைகிறேன்...

விரைவில் நகரில் குடி தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் செழிப்பாக அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கவும் இத்திட்டம் எந்த தடங்களும் இடையில் ஏற்படாமல் நல்ல முறையில் நடந்தேற பிராத்திப்போமாக. ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved