Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:10:58 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10577
#KOTW10577
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 11, 2013
காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4241 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் உள்ள 24 நகராட்சிகளில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் (BIO-GAS PLANT) அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.

சட்டமன்ற விதி எண் 110 ப்படி நேற்று (ஏப்ரல் 10, 2013) - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை குறித்து முதல்வர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கட் தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை உயர்ந்த அளவில் நிறைவேற்றிக் கொடுப்பதும், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும் உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமை என்றாலும், மாநில அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. இதனை உணர்ந்த எனது தலைமையிலான அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துவதிலும், பொது சுகாதாரத்தை பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் எனது ஆட்சிக் காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 3.80 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற முடியும். இதே போன்று, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் வடிவமைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் உள்ளூர் நீராதாரங்களின் தரமும், நம்பகத்தன்மையும் தற்போது குறைந்து வருவதால், இம்மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.

எனவே, சென்னை மாநகரத்தின் நீர்த் தேவையை சமாளிக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது போல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிலவும் நிலத்தடி நீரின் நிலையற்ற தன்மை மற்றும் குடிநீர் தர பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலங்களிலும் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் பொறுத்த வரையில், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் என்ற இலக்கை எய்த வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, காவேரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சாணார்பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை, திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,342 குடியிருப்புகளைச் சேர்ந்த 5,62,000 மக்கள் பயன் பெறுவர்.

இதே போன்று, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேராவூரணி, பெருமகளூர், அதிராம்பட்டினம் பேரூராட்சிகள் மற்றும் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஓரத்தநாடு மற்றும் திருவோணம் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 1,153 குடியிருப்புகளில் வசிக்கும் 5,76,000 மக்கள் பயன் பெறும் வண்ணம் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 125 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, தென்கரை, வேடப்பட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 1,55,000 மக்கள் பயன் பெறும் வகையில் பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 114 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம், குண்டடம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள 1,262 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் 2,80,140 மக்கள் பயன்பெறும் வண்ணம் காவேரி ஆற்றினை நீராதாரமாகக்கொண்டு 76 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 177 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 1,27,720 மக்கள் பயன்பெறும் வண்ணம் காவேரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். ஆக மொத்தம் 797 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடப்பாண்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், திருநெல்வேலி மாநகராட்சி, ஆரணி, திருவத்திபுரம், மற்றும் பெரியகுளம் ஆகிய 3 நகராட்சிகளில் 2013-14 ஆம் ஆண்டில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதி ஆகியவற்றின் கீழ் 227 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகளில் 40 முதல் 60 விழுக்காடு திடக் கழிவுகள் மக்கும் தன்மை உடையதாக உள்ளன. அதிக அளவில் திடக் கழிவுகள் உற்பத்தியாகும் காய்கறி அங்காடிகள், உணவகங்கள், திருமணக்கூடங்கள், இறைச்சி கூடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுகளை தினசரி சேகரித்து அவற்றிலிருந்து உருவாகும் உயிரி எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யலாம். 5 டன் எடை கொண்ட மக்கும் கழிவிலிருந்து நாளொன்றுக்கு 440 யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்வதன் மூலம் சுமார் 750 தெரு விளக்குகளை 12 மணி நேரம் ஒளிரச் செய்ய இயலும்.

எனவே, திடக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 200 சதுர மீட்டர் பசுமை பகுதி உள்ளிட்ட 625 சதுர மீட்டர் பரப்பரளவில் திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாநகராட்சிகளிலும், கும்பகோணம், பள்ளிப்பாளையம், ஓசூர், பூந்தமல்லி, காயல்பட்டினம், மேட்டூர், திருத்தணி, ஆவடி, காஞ்சிபுரம், கடலூர், பல்லவபுரம், திருவண்ணாமலை, கரூர், திருச்செங்கோடு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், உதகமண்டலம், ராஜபாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், நாகர்கோவில் மற்றும் பழனி ஆகிய 24 நகராட்சிகளிலும் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் சொந்த நிதி மூலமாகவும் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடனும், உலக வங்கி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி போன்ற அயல் நாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து பெறப்படும் நிதி மூலமாகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், நகராட்சிகளின் நிதி வளர்ச்சியானது பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, நகராட்சிகளின் கணக்குகளை இன்றைய தேவைக்கேற்ப பராமரிக்கவும், நிதி மேலாண்மையை திறம்படுத்தவும், “தமிழ் நாடு நகராட்சி கணக்கு பணி” என்ற பணியமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வருவாய், பணிகளின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும் காரைக்குடி மற்றும் சிவகாசி நகராட்சிகள் தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.


இவ்வாறு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா உரையாற்றினார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by salai s nawas (singapore) [11 April 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26817

நமது நகர்மன்றத்தில் பெருபான்மையாக அதிமுக உறுப்பினர்கள் இருப்பதால், இந்த வேலை கண்டிப்பாக சுலமமாக முடியும்.

அப்புறம் என்ன நீங்களும் " தலைவி" ஆள ஆய்டீங்க. இனி ஊருக்கு உழைப்போம். உங்களோடு யாவரும் தோல் கொடுப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இத்திட்டத்திற்கு தவறான தகவலை நமது நகராட்சி ஆணையர் அரசின் மேலிடத்திற்கு அனுப்பியதாக ஒரு பெரும் குற்றசாட்டு
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26818

நமது நகரில் (BIO-GAS PLANT) அமைக்க பெரும் முயற்சி எடுத்த நகரமன்ற தலைவர் திருமதி ஆபிதா சேக் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களுக்கும் மேலும் இத்திட்டத்திற்கு அதிக அக்கறை செலுத்திய நமது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்...

குறிப்பு:- காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் (குப்பைகள்) திடக் கழிவுகள் மிக மிக குறைவான அளவிலேயே சேருகின்றன ஆகையால் இத்திட்டம் காயல்பட்டின நகராட்சிக்குள் வருவது சரியாக இருக்காது என்று (இத்திட்டம் நமது ஊருக்கு வர தடையாக) இத்திட்டத்திற்கு தவறான தகவலை நமது நகராட்சி ஆணையர் அரசின் மேலிடத்திற்கு அனுப்பியதாக ஒரு பெரும் குற்றசாட்டு நகரில் பலரால் பேசபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:... திட்ட கிடப்பு !
posted by Shahul Hameed (Hong Kong) [11 April 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 26819

எல்லாம் என்னுடைய ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டம், பின்பு நிறைவேற்றப்பட்டது இருக்கட்டும், உங்களுக்கு முந்திய ஆட்சி காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை ஏன் கிடப்பில் போடுகிறீர்கள்? அதையும் மக்களுக்கான திட்டம்தான் என்று நிறைவேற்றினால் தமிழ் நாடு வளம் பெரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!!
posted by HAFIL AMEER A (DUBAI) [11 April 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26820

இதுவரைக்கும் நகராட்சியில் ஒரு வேல கூட உருப்படியா நடக்கல. இந்த லட்சணத்துல நமக்கு தேவையா?

நகராட்சி மன்றமே ஒழுங்கா நடக்கல...இதுல எரிவாயு என்ன வேண்டி கடக்குன்னு தெரியல........

மக்களின் அடிப்படை வசதியைக்கூட ஒழுங்கா செய்யாத நகராட்சி, இத மட்டும் எப்படி செய்யப்போகுது?

எப்படியும் மக்களின் பணம் வீணாக போகுது என்பது மட்டும் நிச்சயம்.

குறிப்பு : இந்த திட்டத்தை நமது நகராட்சி எடுத்து நடத்தினால் கண்டிப்பாக நடக்காது. இதை தமிழக அரசோ அல்லது ஒரு தனியார் company யோ எடுத்து செய்தால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி கூறி பாராட்டுகிறேன்...! வாழ்த்திகிறேன்....!
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [12 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26826

நகரின் தேவையை அறிந்து காயல்பட்டினம் நகராட்சிக்கு திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் அமைக்க சட்டசபையில் அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி கூறி பாராட்டுகிறேன்...! வாழ்த்திகிறேன்....!

மேலும் காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான பல திட்டங்கள் விரைவில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சட்டசபையில் அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது...

இத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் எடுத்து காயல்பட்டினம் நகராட்சிக்கும், நமது நகர மக்களின் குறைகளின் மீதும் (புகார் மனு) சிறப்பு கவனம் செலுத்தும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றி..!. உங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துகிறேன்...!

அன்புடன்...
M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by OMER ANAS (doha qatar.) [12 April 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26827

பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு! நமதூருக்கு நல்லது எது நடந்தாலும் பாராட்டித்தானே ஆகணும். அந்த வகையில் தம்பி நவாஸ் உனது பெருந்தன்மையை பாராட்டுகிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by SEYED ALI (ABUDHABI) [13 April 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26839

எதோ நல்லது நடந்தால் சரிதான் பாராட்டத்தான் வேண்டும். திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றால் அது ஏமாற்றம்தான். எனது தலைமை நான் என்ற அகங்காரத்துடன் எக்கச்சக்கமான் நிலைமைக்கும் மீறிய பட்ஜெட்டுகளுடன் திட்டங்களின் பட்டியலை, அம்மா அறிவிப்பதை பார்த்தால் மொட்டைகளின் மண்டையில் தேங்காய் அரைப்பது மாதிரிதான் இருக்கு.

காவேரி பிரச்சினையில் நடுவர்மன்றத்தின் தீர்ப்பை அம்மாவின் தலைமையில் மத்திய அரசை நிர்பந்தித்து அரசிதழில் வெளியிட்டு வெற்றிவிழா கொண்டாடியாச்சு.ஆனால் மேட்டூர் வரண்டதுதான் மிச்சம்.

கேசும் அராபிய இரவுக்கதைகள் மாதிரி,ஒண்ணுக்குள் ஒன்னு என்று முடிவற்று போய்க்கொண்டேதான் இருக்கிறது.அதற்க்கு ஆகும் செலவே அறிவித்த அத்தனை திட்டங்களையும் தூக்கி சாப்பிட்டு விடும். பிறகு முல்லைபெரியார் தொடர் சீரியல் வெயிட் பண்ணுது. இந்த லக்ஷணத்தில் இவர் அறிவிப்பதை எல்லாம் எப்படி நம்புவது?

எல்லாம் செல்லத்திட்டம் மோனோவின் கதிதான்..பிறகு அம்மா போய் அப்பா வந்துவிடுவார்.அவர் பங்குக்கு தமிழன் மண்டையில் மீண்டும் மிளகாய் அரைப்பு. மண்டையை கொடுக்கும் நமக்கு வெட்கம் என்பதும் இல்லை. சலிப்பும் இல்லை.விதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
படம் தரும் பாடம்...!  (13/4/2013) [Views - 3758; Comments - 11]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved