Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:16:41 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10567
#KOTW10567
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 8, 2013
ஏப். 06, 07 தேதிகளில் காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா! 50 ஆயிரம் பேர் திரண்டனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7896 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (32) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 21)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா நிகழ்ச்சிகள் இம்மாதம் 06, 07 தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற்றது. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தையொட்டிய பரந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த இஜ்திமா - ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 50 ஆயிரம் ஆண்கள், பேருந்துகளிலும், வேன், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களிலும் வந்து நிகழ்விடத்தில் திரண்டனர்.







திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களிலிருந்து காயல்பட்டினத்தை நோக்கி வந்த பேருந்துகள் அனைத்திலும், இஜ்திமாவில் கலந்துகொள்வதற்காக முஸ்லிம் மக்களே நிறைந்து காணப்பட்டனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திடுவதற்காக, தூத்துக்குடியிலிருந்து வந்த பேருந்துகள் காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. காயல்பட்டினத்திலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும், வழமை போல ஆறுமுகநேரி - காயல்பட்டினம் நெடுஞ்சாலை வழியே சென்றன.

பேருந்து, வேன், கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே வாகன நிறுத்தங்கள் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஜ்திமாவில் கலந்துகொள்வோருக்காக பந்தலிலேயே - மாவட்ட வாரியாக தனித்தனி மெஸ்களில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இஜ்திமாவில் பங்கேற்க வருவோரிடம் 100 ரூபாய் கட்டணமாகப் பெற்று, முதல் நாள் இரவு உணவு, இரண்டாம் நாள் காலை, மதியம் மற்றும் இரவு உணவு வினியோகிக்கப்பட்டது.

06.04.2013 சனிக்கிழமையன்று மாலை 06.30 மணியளவில் மஃரிப் தொழுகையுடன் இஜ்திமா நிகழ்வுகள் துவங்கின. மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரவு 09.00 மணியளவில், இஷா தொழுகையுடன் நிறைவுற்றது.

















இரண்டாம் நாளான ஏப்ரல் 07ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இஜ்திமா நிறைவில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயல்பட்டினத்திலுள்ள இஜ்திமா நிகழ்விடத்திற்கு கூட்டங்கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரவு 08.30 மணியளவில் சிறப்புப் பிரார்த்தனை - துஆ மஜ்லிஸுடன் நிறைவுற்றது. உலக அமைதி, சகோதரத்துவம், சமுதாய ஒற்றுமை, நோய் நிவாரணம், சமய நல்லிணக்கம், மனித நேயம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்த இஜ்திமாவில், அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர், இஜ்திமா நடைபெற்ற இரண்டு நாட்களிலும் நிகழ்விடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இஜ்திமா நிகழ்வில் காணக்கிடைத்தவை:

>> வழமையாக இதுபோன்று மக்களை ஓரிடத்தில் திரளச் செய்வதற்கு கையாளப்படும் பரப்புரை வழிமுறைகளான சுவரொட்டி, தொலைக்காட்சி விளம்பரம், சுற்றறிக்கை, தட்டிப் பலகை, பதாகைகள், துண்டுப் பிரசுரம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிவாசல்களிலும், தனிநபர்களை தனித்தனியாக சந்தித்தும் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதைத் தவிர வேறெந்த பரப்புரை நடைமுறையும் கையாளப்படவில்லை

>> இஜ்திமாவுக்காக, யாரிடமும் நன்கொடையாக எதுவும் ஏற்பாட்டாளர்களால் வசூலிக்கப்படாத நிலையில், தன்னார்வத்துடன் பலர் பலவற்றுக்கு பொருளாதார அனுசரணை அளித்திருந்தனர்

>> சுமார் 50 ஆயிரம் பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வில், பேச்சாளர்கள் யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை. பிரம்மாண்டமான மேடையோ, ஆடம்பர தோரணங்களோ எதுவுமில்லை

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தும், காவல்துறையினருக்கோ, உளவுத் துறையினருக்கோ சிறிதும் வேலை வைக்கவில்லை. யாருக்கிடையிலும் வாக்குவாதங்களோ, தர்க்கங்களோ, சண்டை - சச்சரவுகளோ சிறிதளவு கூட நடைபெறவில்லை

>> “வாழ்க, ஒழிக” முழக்கங்கள் எதுவுமில்லை

>> எந்த அமைப்பையோ, இயக்கத்தையோ - போற்றியோ, தூற்றியோ எதுவும் பேசப்படவில்லை. மாறாக, இறையச்சம், இஸ்லாமிய வாழ்வியல் உள்ளிட்டவை குறித்தே இரு நாட்களிலும் மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர்

>> பேருந்து, வேன், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தனித்தனியே வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை பல நாட்களுக்கு முன்பாகவே முறைப்படி முன்பதிவு செய்து, அவற்றிலேயே பயணம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது

>> தீ விபத்து நேர்ந்தால் பாதுகாப்பதற்காக, திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திலிருந்தும், காயல்பட்டினம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் முகாமிட்டிருந்தன



>> யாருக்கும் உடல் நலன் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையிலிருந்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) காயல்பட்டினம் நகர கிளையிலிருந்தும் ஆம்புலன்ஸ் வாகனம் ஆயத்த நிலையிலிருந்தது



>> இஜ்திமாவையொட்டி நடைபெற்ற பல்வேறு ஏற்பாட்டுப் பணிகள் அனைத்திலும், அதற்கென நியமிக்கப்பட்டிருந்த தன்னார்வலர்கள், தமக்குக் கொடுக்கப்பட்ட பணியை மட்டும் கவனம் சிதறாமல் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்

>> இஜ்திமா பந்தலையொட்டி, தொழுகைக்காக பொதுமக்கள், இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தண்ணீரில் சுத்தம் செய்வதற்கும் (உளூ) எளிமையும் - பிரம்மாண்டமுமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.







>> இஜ்திமா பந்தலைச் சுற்றி ஏராளமான விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உரிமையாளர்கள் தம் கடை விற்பனைப் பொருட்களை நியாயமான விலையிலேயே விற்றனர். யாரும், எங்கும் பேரம் பேசியதையோ, சர்ச்சையில் ஈடுபட்டத்தையோ காண முடியவில்லை























































>> ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வளவு பெரிய மக்கள் திரட்சியையும், போக்குவரத்து வழித்தட மாற்றத்தையும் கருத்திற்கொண்டு, இஜ்திமா பந்தலுக்கு நேரடியாக வந்து செய்தி சேகரிக்க வந்த ஊடகங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வழங்கப்படவில்லை

>> நிலைப்படம் (ஸ்டில் ஃபோட்டோ), அசைபடம் (வீடியோ) உள்ளிட்ட எதுவும் அனுமதிக்கப்படவில்லை

>> பெரும்பெரும் செல்வந்தர்களும், ஏராளமான தொழிலாளர்களுக்கு ஊதியமளிக்கும் தொழிலதிபர்களும் இந்த இஜ்திமாவில் கலந்துகொண்டு, மக்களோடு மக்களாக மண் தரையில் விரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் விரிப்புகளில் அமர்ந்ததும், படுத்ததும், பொது கழிப்பறையைப் பயன்படுத்தியதும், வரிசையில் நின்று உணவு டோக்கனைக் காண்பித்து உணவுண்டதும் அவர்களை முன்னரே அறிந்தவர்களுக்கு வியப்பூட்டிய அம்சங்கள்

>> இஜ்திமா நடைபெறுவதையும், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பரந்து விரிந்த பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் கேள்வியுற்று, இஜ்திமாவுக்கு முந்திய நாளான ஏப்ரல் 05ஆம் தேதியன்று, நேரில் பார்க்க வந்திருந்த பெண்களுக்கு, இருபாலர் ஓரிடத்தில் கலந்திருப்பது இஸ்லாமிய முறையல்ல என்று எடுத்துரைக்கப்பட்டு, திரும்பிச் செல்ல பொறுப்பாளர்களால் வலியுறுத்தப்பட்டது. பலமுறை எடுத்துக்கூறியும் அப்பெண்கள் திரும்பிச் செல்ல தாமதமானபோது, பந்தலின் ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டு இருள்மயமாக்கப்பட்டது. பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்

>> இஜ்திமாவுக்காக பகுதி வாரியாக உணவு வினியோகம் செய்ய தனித்தனியாக 11 மெஸ்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்திலும் சராசரியாக 3,500 டோக்கன்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது

>> 40 ஆயிரம் மக்கள் மட்டுமே இஜ்திமா ஏற்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டதாக அறிய முடிகிறது எனினும், பெறப்பட்ட உணவு டோக்கன்கள் கணக்கீட்டின்படி சுமார் 40 ஆயிரம் பேர், உணவு டோக்கன் பெறாமல் கலந்துகொண்ட உள்ளூர் – வெளியூர் மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் என்ற கணக்கில் சுமார் 50 ஆயிரம் ஆண்கள் கலந்துகொண்டதாக கணக்கிடப்பட்டது.

>> உணவு ஏற்பாடுகள் சில வேளைகளில் சுவை நிறைந்தும், சில வேளைகளில் சுவை குன்றியும் காணப்பட்டது. எனினும், உணவுண்டவர்கள் யாராலும் அது சர்ச்சையாக்கப்படவில்லை

>> எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவில் மக்கள் கலந்துகொண்டதால், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கீற்றுப்பந்தலையொட்டி சாமியானா - துணிப்பந்தலும் அமைக்கப்பட்டது

>> இஜ்திமாவுக்கு வருவோர் தங்குவதற்காக, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் திறந்தே வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பள்ளிவாசல்களில், பொதுமக்கள் கழிப்பறை செல்வதற்கும், குளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது

>> காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்த இஜ்திமாவையொட்டி, சில கேள்விகளைக் கேட்டும், விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும் நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. அவற்றில், தொடர்பு எண்களாக 4 கைபேசி எண்களும் அச்சிடப்பட்டிருந்தது. அந்த எண்களுக்குத் தொடர்புகொள்ள முயன்றபோது, அனைத்து எண்களும் செயலிழந்து இருந்ததை அறிய முடிந்தது

>> இஜ்திமா நடைபெற்ற இரண்டு நாட்களிலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆண்கள் கருத்து வேறுபாடின்றி, கூட்டங்கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர்











>> இஜ்திமாவில் பாதுகாப்புப் பணிக்காக முகாமிட்டிருந்த காவல்துறையினருக்கு குறிப்பிடும் அளவில் பணிகள் எதுவுமில்லாதிருந்தமையால், அவர்களும் பொதுமக்களுக்கு வழிகாட்டி உதவும் பணிகளைச் செய்தனர்.



>> இஜ்திமாவுக்கு பேருந்துகளில் வந்தோர், பேருந்து நடத்துநருக்கு சிரமம் அளிக்காமல், நிகழ்விடம் வந்திறங்கிய பிறகு பயணியர் எண்ணிக்கை விபரங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டனர்.



>> இஜ்திமா நடைபெற்ற நாட்களில், காயல்பட்டினம் கடற்கரை தொழுமிடத்தில், மஃரிப் - இஷா கூட்டுத் தொழுகைகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்ஹம்து லில்லாஹ்..
posted by M.A.C.AHAMED THAHIR (NEW DELHI) [08 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26752

அல்ஹம்து லில்லாஹ்.. அல்ஹம்து லில்லாஹ்.. அல்ஹம்து லில்லாஹ்..

அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டும்.. ஆமீன். இதை பார்க்க பார்க்க மனம் கொள்ளை கொள்கிறது மாஷா அல்லாஹ். நம்ம ஊரா இப்படி இருந்திருந்தது என்று நினைத்து பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாகவும், வியப்பாகவும் உள்ளது. நம் அருமை மக்கள் எவ்வளவு ஆசை ஆர்வத்துடன் இதில் பங்கெடுத்துள்ளார்கள். எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இந்த மாபெரும் இஜ்திமா நடைபெற்றுள்ளது என்று நினைக்கையில் உள்ளம் மிகவும் பூரிப்பு அடைகிறது.. எல்லையில்லா மகிழ்ச்சி என் மனதை அலங்கரிக்கிறது.. இதை பற்றி மேலும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்றே என்ன தோன்றுகிறது.. மாஷா அல்லாஹ்..

மேலும் இந்த அருமையான நிகழ்வை மிக அழகாக, விலாவாரியாக விளக்கி, தொகுத்து வெளியிட்டுள்ள நம்ம KAYAL WEBSITE-ய் நான் மனதார பாராட்டுகிறேன்.. ஜசாக்குமுல்லாஹு ஹைரா.. இந்த KAYAL WEBSITE - ன் நடுநிலையான செய்தித்தன்மை மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.. பாராட்டத்தக்கதாகும்.. மாஷா அல்லாஹ்..

அல்லாஹுத்தாஆலா இந்த இஜ்திமாவின் மிகப்பெரும் பரகத்தால் நம்ம ஊருக்கு ரஹ்மத் செய்வானாக.. இதன் மூலம் தீனின் ஒளிச்சுடர் உலகம் முழுவதும் பரவட்டுமாக.. ஆமீன்...

அல்லாஹ்வே நம் யாவருக்கும் மிக பெரியவன் & போதுமானவன்...

அன்புடன்..
M.A.C.அஹ்மது தாஹிர்,
புதுடெல்லி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இதுவும் ஒரு பரப்புரை நடைமுறை தான் ..
posted by Mohamed Salih (Bangalore) [08 April 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 26754

>> வழமையாக இதுபோன்று மக்களை ஓரிடத்தில் திரளச் செய்வதற்கு கையாளப்படும் பரப்புரை வழிமுறைகளான சுவரொட்டி, தொலைக்காட்சி விளம்பரம், சுற்றறிக்கை, தட்டிப் பலகை, பதாகைகள், துண்டுப் பிரசுரம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிவாசல்களிலும், தனிநபர்களை தனித்தனியாக சந்தித்தும் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதைத் தவிர வேறெந்த பரப்புரை நடைமுறையும் கையாளப்படவில்லை

இதை நான் மறுக்கிறேன் .. என்னக்கு ஈமெயில் மூலம் சுற்றறிக்கை வந்தது . இதுவும் ஒரு பரப்புரை நடைமுறை தான் ..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...எல்லாமே அல்லாஹ்வுக்காக
posted by mackie noohuthambi (kayalpatnam) [08 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26756

எல்லாமே அல்லாஹ்வுக்காக என்ற உணர்வின் வெளிப்பாடு வெள்ளிடை மலையாக தெரிகிறது.

நடைபெற்ற இந்த மாபெரும் இஜ்திமாவை ஏற்பாடு செய்ய பொதுக்குழு கூட வில்லை, செயற்குழு இல்லை, தலைவர் துணைத்தலைவர் செயலாளார் யாரும் நியமிக்கப் படவில்லை. ஒவ்வொரு நாள் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு யாசீன் ஓதி து ஆ கேட்கிறார்கள். அதன் பிறகு ஆலோசனை. யார் யார் என்ன பொறுப்பை எடுக்கிறீர்கள், யாரிடம் ஒப்படைக்கலாம். எல்லோரும் தனித்தனியாக அவர்கள் அபிப்பிராயங்களை கூறலாம். கடைசியில் அமீர் என்ற அப்போதைய ஆலோசனை தலைவர் அந்த குழுவை அறிவிப்பார். எல்லோரும் சம்மதித்து கொள்கிறார்கள். எல்லோரும் இரண்டு ரக அத சுன்னத் தொழுதுவிட்டு தனக்கு இட்ட பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதற்கு எனக்கு வலுவை தா என்று அல்லாஹ்விடம் கை ஏந்தி கேட்டு விட்டு அவர்கள் வேலையில் ஈடுபடுவது. அல்லாஹு அக்பர், என்ன ஒழுக்க விதி முறை, எவ்வளவு கட்டுப்பாடு... காவல் துறைக்கு வேலையே இல்லை, இல்லை உளவு துறை ரிப்போர்ட் நமது முதல்வருக்கு போகும். அவர் இனி நடக்கும் தனது மாநாட்டுக்கு இவர்களை வியூகம் வகுத்து தர அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வந்தவர்கள் கண்டிப்பாக ஐவேளை ஜமாத்துடன் தொழுதே ஆகவேண்டும் என்ற கடமை உணர்வு... ஆசிரியர் எடுத்து எழுதியிருப்பது முற்றிலும் சத்தியமானது.

நோட்டிஸ் விநியோகித்தவர்கள் இவ்வளவு செலவு செய்திருக்க தேவை இல்லை. 7ம் திகதி கூடிய சுமார் 300 பேர் கொண்ட உலமாக்கள் சபைக்கு சென்று அவர்கள் கோரிக்கைகளை வைத்திருந்தால் விடை கிடைத்திருக்கும். கை புண்ணை பார்க்க கண்ணாடி தேடி இருக்கிறார்கள். ஒரு நிபந்தனை, இந்த கேள்விகளுடன் உலமாக்கள் சென்று உலமாக்களை சந்தித்திருக்கவேண்டும்.ஏதோ நோட்டிஸ் பிரியர்கள் நோட்டிஸ் வெளியிட்டு தங்கள் அற்ப ஆசையை தீர்த்துக் கொண்டார்கள் என்றே மக்கள் நினைக்கிறார்கள். அந்த வகையிலும் இந்த இஜ்திமாவின் வெற்றிக்கு அவர்களும் உதவி இருக்கிறார்கள். அல்லாஹ் எல்லோர் உள்ளங்களிலும் ஈமானின் ஜோதியை பிரகாசிக்க செய்வானாக

." தப்பத் யதா அபூ லஹப்" என்ற சூராவை ஒரு சஹாபி அடிக்கடி ஓதுவதை கேட்ட நபியவர்கள். அவரை கூப்பிட்டு, சகோதரரே, குர் ஆனில் எத்தனையோ சூராக்கள் இருக்கிறதே அதை விட்டு விட்டு இந்த சூராவையே ஒதுகின்றீர்களே எனக்கு மன சங்கடமாக இருக்கிறது, என்ன செய்வது என்று சொன்னார்களாம் காருன்ய நபிகள் நாயகம். பகைவர்க்கும் அருள்வாய் நன் நெஞ்சே என்று சற்குணம் பொற் குணம் கொண்ட நாயகத்தின் மீது அதிகம் அதிகம் சலவாத் சொல்வோம். யாராயிருந்தாலும் நாம் எல்லோரும் அவர்கள் உம்மத் அல்லவா என்ற எண்ணம் மேலோங்கி நிற்க, எல்லோருக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பானாக. ஆமீன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Ahamed Mustafa (Dubai) [08 April 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26757

அல்ஹம்துலில்லாஹ் ! நல்ல இஸ்லாமிய நிகழ்வு.. It would have been more apt & useful if a Live stream Broad casting, atleast Audio been made available.. Appreciate the efforts of this great Movement that focusses on the Akhirah to deliver the basic principles of Islam to the grass root levels cutting across opinion & ideological differences.. Differences of opinions & ideologies are always there & People amongst us should learn to co-exist & take whatever they feel right & to discard & keep away from Evils & Big sins..

The discipline & organized ways are a lesson to all parties.. A Live stream broad cast would have made a big difference.. The message can be delivered to the World & an opportunity for people who were not able to attend. This is my humble suggestion, if there will be any future chances. Wassalam ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...புதுமை காயல்!!!
posted by M.S.ABDULAZEEZ (Gz) [08 April 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26758

இப்படி ஒரு வித்தியாசமான காயலை காண கிடைக்கவில்லை!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சத்திய மார்க்கத்தினர் தம் காலடியோசை நம் வீதிகளில்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [08 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26759

கிழக்கில் அலையாடும் வங்கக்கடல் மேற்கில் இடம் பெயர்ந்ததோ? இல்லை! அக்கடல் நாணும் அளவிற்கு மக்கள் வெள்ளம் காயலில் கரைபுரண்டோடியதோ? எனும் விதத்தில் இஜ்திமா எனும் ஓர் மௌனப்புரட்சி ஓசையின்றி காயல்பட்டினத்தில் இரு தினங்கள் அரங்கேறி முடிந்தது ஆச்சரியத்திற்குரியதே!

வீதியெங்கும் மக்கள் கூட்டம். அவர்தம் காலடி சப்தம் தவிர வேறேதும் கேட்டறியேன். எங்கிருந்து? எப்படி? எவர் அழைப்பின் பெயரில்? இப்படி ஒரு மகா சங்கமம் பொங்கி வழிந்தோடியது? தீன் எனும் பெயரில் வேடிக்கை வினோதங்கள், வீதியெங்கும் தோரணம், கண்ணொளி காட்சி, கரக்கோஷம், வானவேடிக்கை, யானைகள் அணிவகுப்பு என மக்களை கவர மாரடிக்கும் இவ்வுலகில் மௌனமாக மார்க்கப்பணிகளுக்கு மார்க்கம் செய்து தந்த பெருமை அந்த அமைப்பினருக்கே சாரும்!

என் வாழ்நாளில் நமதூரில் இப்படி ஒரு மக்கள் கூட்டம் திரண்டதாக நினைவில்லை! காவல்துறை, உளவுத்துறை, மற்றும் ஊடத்துறையினர் மூக்கில் விரல் வைத்து வியக்கும் அளவிற்கு கட்டுக்கோப்புடன் கன்னியமாக இப்படியொரு நிகழ்ச்சியை செம்மையாக நடத்திக் காட்டி இஸ்லாமியர்கள் மீது தினிக்கப்பட்ட அல்லது தெளிக்கப்பட்ட தீவிரவாத சாயத்தை வெளுத்து சமாதானத்தின் வெள்ளை வெளேரெனும் தூய்மை நிறத்தைக் காட்டியுள்ளனர்.

கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கும் கனிசமான வியாபாரம். காலை ஆறு மணிக்கெல்லாம் வீதிகள் முழுவதும் மக்கள் வெள்ளம். அவர்கள் தம் காலைக்கடனை கழிக்க சில பள்ளி நிவாகத்தினர் தாம் சார்ந்த கொள்கையைக்கூட சற்றே தளர்த்தி சன்மார்க்க நெறிகளை ஏற்றுக்கொண்ட ஒரேக் கூட்டம் எனும் கண்ணோட்டத்தில் தமது மஹல்லாவின் பள்ளி வாயில்களை மனமுவந்து திறந்து வைத்திருந்தது ஆச்சரியமே!

செய்தியில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று சுவரொட்டி, துண்டு பிரசுரம், வானளாவிய கட் அவுட்டுக்கள், வசூல் வேட்டை மற்றும் உண்டியல் இப்படி எதுவுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி இப்படி ஒரு உருப்படியான கூட்டத்தை தங்களால் நடத்திக்காட்ட இயலும் என்பதை இந்த தப்லீக் ஜமாஅத்தினர் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நிரூபித்துக்காட்டியுள்ளனர். அல்ஹம்ந்துலில்லாஹ்! வாழ்த்துக்கள்...! பாராட்டுக்கள்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. எப்படி ??? எப்படி ???
posted by Salai Sheikh Saleem (Dubai) [08 April 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26761

மாஷாஅல்லாஹ் !!!

அழைப்பு பணிகளுக்காக கூட்டம் கூடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் கடற்க்கரையிலே மனித அலைகளை கட்டுக்கோப்பாய் ஒரு தலைமையின் கீழ் கூடிய இறைப்பணியாளர்கள் ஒரு சாதனையே நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நிகழ்வுகள் ஏற்ப்பட்டு புகைப்படங்கள் காணும்போது பெரிய ஆச்சர்யமாக உள்ளது. எல்லாப்புகழும் இறைவனிர்க்கே.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் நமது ஊரில் நடைபெறும்போதுதான் நமக்கு தெரியாத பல மார்க்க விஷயங்கள் தெரிய வரும், நிறைய வெகுஜன தொடர்பு, விழிப்புணர்வு, கலாச்சார மேம்பாடுகள் போன்றவை ஏற்ப்படும்.

ஒரே ஒரு நெருடல், ஊரில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நேரமல்லவா, நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் இதனை கருத்தில் கொண்டிருக்கலாமே என்பதுதான்.

மற்றபடி, இந்த நிகழ்வின் இத்துணை ஏற்பாடுகள் எப்படி ? எப்படி ? என்று வியந்த வண்ணம் உள்ளேன், மாஷா அல்லாஹ்.

சாளை ஷேக் ஸலீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. உண்மை செய்தியா என்ற சந்தேகம்
posted by Muhammad Abubacker (Chennai) [08 April 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26763

"காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்த இஜ்திமாவையொட்டி, சில கேள்விகளைக் கேட்டும், விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும் நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. அவற்றில், தொடர்பு எண்களாக 4 கைபேசி எண்களும் அச்சிடப்பட்டிருந்தது. அந்த எண்களுக்குத் தொடர்புகொள்ள முயன்றபோது, அனைத்து எண்களும் செயலிழந்து இருந்ததை அறிய முடிந்தது"

மேலே குறிப்பிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானதா என்ற சந்தேகம் எழுகிறது. அதில் உள்ள 7299758698 என்ற என்னை நானே தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவும், விவாதத்திற்கு ஏற்பாடு செய்யவும் ஆயத்தமாக உள்ளதாக சொன்னார்கள். மேலும் அவர்களின் அனுமதியுடன் தான் அவர்களின் அலைபேசி எண்ணை இங்கு பதித்துள்ளேன். தயவு செய்து மறுபடியும் தொடர்புகொண்டு பாருங்கள், உங்கள் செய்தியில் மாற்றம் செய்யுங்கள். நியாயமான பதிலை எதிர் பார்த்தவனாக. இங்கு நான் விவகாரம் செய்ய பதிவு செய்யவில்லை, ஒரு நடுநிலையானவனாக, உங்களில் ஒருவனாக. செய்வீர்களா???

முஹம்மது அபூபக்கர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re: காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா!
posted by S S Abdullah (Dubai) [08 April 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26764

செய்தியில் கூறப்பட்டுள்ளதுபோல் பரப்புரைகள் நிச்சயமாக இல்லை என அறிய முடிகிறது. சாலிஹ் அவர்களுக்கு தப்லீக்கில் ஈடுபாடுள்ள நண்பர் or உறவினர் மூலம் மெயில் வந்து இருக்கலாம். கமிட்டி மூலம் வந்திருக்க வாய்ப்பு இருக்காது என்பது என் எண்ணம். எனக்கும் (துபாய்) என் உறவினர் மூலம் போன் அழைப்பு வந்தது. இதெல்லாம் தனிப்பட்டவர்களின் விருப்பம். எனவே இதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை. இஜ்திமா சிறப்பாகவும் வெற்றியாகவும் நடை பெற்றதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும். இந்த நல் அமல்கள் மூலம் நமதூருக்கு வளமும் செழிப்பும் சிறக்க பிரார்த்திப்போமாக ஆமீன்!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. உங்களுக்கு நீங்களே சாட்சி, இதுவும் ஒரு விளம்பரம் தான்
posted by Muhammad Abubacker (Chennai) [08 April 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26769

>> வழமையாக இதுபோன்று மக்களை ஓரிடத்தில் திரளச் செய்வதற்கு கையாளப்படும் பரப்புரை வழிமுறைகளான சுவரொட்டி, தொலைக்காட்சி விளம்பரம், சுற்றறிக்கை, தட்டிப் பலகை, பதாகைகள், துண்டுப் பிரசுரம் எதுவும் இங்கு இல்லை. பள்ளிவாசல்களிலும், தனிநபர்களை தனித்தனியாக சந்தித்தும் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதைத் தவிர வேறெந்த பரப்புரை நடைமுறையும் கையாளப்படவில்லை

உங்களின் இந்த செய்தியே ஒரு விளம்பரம் தான். http://kayalpatnam.com/shownews.asp?id=10555 விளம்பரம்:- ஒரு செயல் நடைபெறுவதற்கு முன் அதை பற்றி முன் அறிவிப்பு செய்வது. உங்களின் செய்தி தலையங்கம் இதோ "காயல்பட்டினத்தில் இன்றும், நாளையும் தப்லீக் இஜ்திமா! 50 ஆயிரம் பேர் திரள்வர் என எதிர்பார்ப்பு!!"

செய்தி:- ஒரு செயல் நடை பெற்ற பின் அதை பற்றி சொல்வது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by abubacker (dammam) [09 April 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26770

நபி (ஸல்) அவர்களின் தலைமையில் ஹஜ்ஜில் கூடிய ஒரு இலட்சம் சஹாபிகள் இஸ்லாத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை நிறைவு செய்தார்கள். அரை இலட்சம் மக்கள் ஒன்று கூடி சென்றுள்ளார்கள். இனி அவர்களின் செயல்பாடுகள் இந்த மனித சமூகத்திற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வந்தால் இஸ்லாமிய சமூகம் பயன் பெரும்.

மாற்றத்திற்கான திட்டங்களுடன் கலந்து கொன்டவர்கள் களைந்து சென்று இருப்பார்கள். இன்ஷாஅல்லாஹ் நல்ல மாற்றம் உண்டாகட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. கண்ணியத்திற்குரிய மக்கி நூஹு தம்பி ஹாஜியார் அவர்களுக்கு,
posted by Muhammad Abubacker (Chennai) [09 April 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26773

@ மக்கி நூஹு தம்பி.

"நோட்டிஸ் விநியோகித்தவர்கள் இவ்வளவு செலவு செய்திருக்க தேவை இல்லை. 7ம் திகதி கூடிய சுமார் 300 பேர் கொண்ட உலமாக்கள் சபைக்கு சென்று அவர்கள் கோரிக்கைகளை வைத்திருந்தால் விடை கிடைத்திருக்கும். கை புண்ணை பார்க்க கண்ணாடி தேடி இருக்கிறார்கள். ஒரு நிபந்தனை, இந்த கேள்விகளுடன் உலமாக்கள் சென்று உலமாக்களை சந்தித்திருக்கவேண்டும்."

காக்கா நல்லா எழுதி இருக்கீங்க. இந்த கேள்வியெல்லாம் அவங்க மார்கஸ்கு சென்று தப்லீக்கில் மிக முக்கியிமான ஒரு நபரிடம் சொன்னோம். அவங்களும் மஹ்லரா, இரட்டை குளத்து பள்ளிக்கு வந்து இதை பற்றி எல்லாம் தெளிவு படுத்துறதாகவும், உலமாக்களை வைத்து பேச செய்வதாகவும் சொன்னார்கள். பாவம் அவங்களுக்கு முகவரி தெரியாது என்று நினைகிறேன். நீங்க முடிஞ்சா அவங்களுக்கு முகவரி கொடுங்கள். அவங்க பெயர நீங்க கேட்டா நா சொல்றேன்.

நீங்களே ஒரு விவாதத்திற்கு, நாகரீகமா சொன்ன ஒரு கலந்துரையாடல் அல்லது கருத்து பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யலாமே? செய்வீங்களா ஹாஜியார்?

உங்களின் இந்த முயற்சிக்கு எனது மனதார பாராட்டுக்கள்.

குறிப்பு:- அந்த சுவரொட்டிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எனக்கும் அந்த சந்தேகங்கள் எல்லாம் இருக்கிறது. 300 உலமாக்கள் தமிழ்நாட்டில் ஆதரிக்கும் போது ஒரு உலமா கூட ஆதரிப்பதற்கு நமதூரில் இல்லையா என்ன? அவர்கள் விடை சொன்னாலே போதும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by shaik sinan (BANGKOK) [09 April 2013]
IP: 61.*.*.* Thailand | Comment Reference Number: 26774

விவாதம் chaivthaal யார்க்கு என்ன லாபம்?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. கமிட்டி ஒரு சுட்டரிக்கை தயாரிக்கவ இல்லை என்பதா ????
posted by Mohamed Salih (Bangalore) [09 April 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 26775

செய்தியில் கூறப்பட்டுள்ளது போல் பரப்புரைகள் நிச்சயமாக இல்லை என அறிய முடிகிறது.

கமிட்டி ஒரு சுட்டரிக்கை தயாரித்து அதை தப்லீக்கில் ஈடுபாடுள்ள நண்பர் or உறவினர் மெயில் மூலம் எல்லோருக்கும் அனுப்பி இருகிறார்கள் என்பது உண்மை.. அப்படி என்றால் கமிட்டி ஒரு சுட்டரிக்கை தயாரிக்கவ இல்லை என்பதா????

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. கிடைத்த பாக்கியம்
posted by NIZAR (KAYALPATNAM) [09 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26777

இஜ்திமாவின் ஒவ்வொரு அசைவையும் அழகான செய்தாகி தந்துள்ள இணையதளத்துக்கு இனிய வாழ்த்துக்கள். எடுக்கபட்ட புகைப்படங்கள் படங்களின் அழகையும் உயர்த்தி இருக்கிறது.

இந்த இஜ்திமா நம் ஊருக்கு கிடைத்த பாக்கியம் என்பதினால் நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தும் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சகோதரத்துடன் அனைவரும் கலந்து கொண்டது நெஞ்சை தொடுவதாக இருந்தது. எந்த ஒரு விளம்பரமும் இன்றி இத்தனை மக்கள் பெருவெள்ளம் காயல் மக்களை மலைக்க வைத்தது எனலாம்.

இந்த நிகழ்ச்சயில் நடைபெற்ற பயான்கள், நம்மிடையே இருக்கும் அமல்களின் குறைபாடுகள், குழந்தை வளர்ப்பு, தொழுகையின் சிறப்புகள், குரான் ஓதுவதின் சிறப்பு போன்றவற்றை பற்றி இருந்தது. எதிர்பார்க்காத வெளியூர் விருந்தாளிகளின் கூட்டம் காயலை மூச்சு முட்ட வைத்தது. இப்படி ஒரு கூட்டத்தை காயல் இதுவரை சந்தித்ததில்லை என பெரியவர்கள் சொன்னார்கள்.

விழா முடிந்ததும் திருநெல்வேலி டிப்போவில் புக் பண்ணி இருந்த 250 பஸ்களின் அணிவகுப்பு காயல்பட்டினத்தில் ஒரு கோயம்பேடு பஸ்டாண்ட் வந்து விட்டதா என தோன்றியது. இஜ்திமா பந்தலில் இருந்து கடற்கரைக்கு சாரை சாரையாக மக்கள் சென்றது புதுமையாக இருந்தது. இஜ்திமாவின் கட்டமைப்பு ஏற்பாடுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

இஜ்திமாவில் போடப்பட்ட சாப்பாடு பசிக்கு தானே தவிர ருசிக்கு இல்லை என்று பயான் செய்தவர் குறிப்பிட்டது குறிப்பிடதக்கது.

வெளியூரில் இருந்து விருந்தாளிகளாக நம் சமுதாய மக்கள் வந்திருக்கும் சமயம் இஜ்திமாவை குறிப்பிட்டு சில கேள்விகள் என்ற வால்போச்ட்டை சிறிதும் கண்டுகொள்ளாமல், அதை பற்றிய செய்தியை போடாமல் சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட காயல் பத்தனம் இணையத்தளம், காயலின் அனுபவம் பெற்ற முதல் இணையத்தளம் என்பதை நிரூபித்து உள்ளது.

இஜ்திமாவில் கேட்கபற்ற துஆவை இறைவன் கபூல் செய்து நம் ஊர் மக்களை நிலை குழைய வைக்கும் உயிர்கொல்லி நோயை நம் ஊரை விட்டும் இல்லாமல் ஆக்கிவிடுவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Disable comments section ...
posted by Moosa Sahib (Kayalpatnam) [09 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26778

அஸ்ஸலாமு அலைக்கும் ...

அட்மின் அவர்களுக்கு, குற்றம், குறை காண்பதற்கே ஒரு கூட்டம் செயல் பட்டு கொண்டிருக்கிறது. தயவு செய்து சர்ச்சை உண்டாகும் செய்தி என்று தெரிந்தால் கமெண்ட்ஸ் option ய் disable செய்து விடவும். இதன் மூலம் வீண் vaathangalai தவிர்க்கலாம்.

Other wise provide two buttons ( Like , Dislike) for every news.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Mohideen (Jeddah) [09 April 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26779

//////////////அவற்றில், தொடர்பு எண்களாக 4 கைபேசி எண்களும் அச்சிடப்பட்டிருந்தது. அந்த எண்களுக்குத் தொடர்புகொள்ள முயன்றபோது, அனைத்து எண்களும் செயலிழந்து இருந்ததை அறிய முடிந்தது"

மேலே குறிப்பிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானதா என்ற சந்தேகம் எழுகிறது. அதில் உள்ள 7299758698 என்ற என்னை நானே தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவும்,////////////////////

எங்கையௌ இடிக்குதே. அணைத்து எண்களும் செயலிழந்து இருப்பதாக சொல்லுகிறார்கள். ஆனால் அடுத்த பத்தியில் தொடர்பு கொண்டதாக சொல்லுகிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by K M .Abdul Hadhi (Jeddah) [09 April 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26781

இஜ்திமா சிறப்பாகவும் வெற்றியாகவும் நடை பெற்றதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும். இந்த நல் அமல்கள் மூலம் நமதூருக்கு வளமும் செழிப்பும் சிறக்க பிரார்த்திப்போமாக ஆமீன்!

அப்துல் ஹாதி .ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. நிழல் படம் கிடைத்தது உங்கள் பார்வைக்கு
posted by Muhammad Abubacker (Chennai) [09 April 2013]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 26785

">> நிலைப்படம் (ஸ்டில் ஃபோட்டோ), அசைபடம் (வீடியோ) உள்ளிட்ட எதுவும் அனுமதிக்கப்படவில்லை"

This news is also seems to be partly not true. News agents may not be allowed. Photos taken from facebook in the album "65000 & MORE PEOPLE GATHERED @ GREAT KAYALPATNAM IJTHIMA-2013"

Please check the following link.

https://www.facebook.com/media/set/?set=a.3079162273494.1073741826.1696897070&type=1

Whether the total count is around 50000 or 65000? Small doubt please clarify.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. பிரிவினையை களையும் எண்ணம்...
posted by Umar Rizwan Jamali (Singapore) [09 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26788

இந்த அமைப்பிற்கு பரப்புறையோ வால்போஸ்டரோ தேவை இல்லை காரணம் அதிலுள்ள ஒவ்வொருவரும் பரப்புரையாளர்கள் தான் ஒவ்வொரு பள்ளியும் வால்போஸ்டர்கள்தான். அதையெல்லாம் பாராட்டுகிறோம். ஒவ்வொரு அமைப்பிடம் ஏதாவதொரு கவர்ச்சி இருக்கும்.

ஒரு பிரிவார் வால்போஸ்டர்கள் அடித்ததை சரியா தவறா என்பதை விவாதிக்க வரவில்லை. ஆனால்; அதிலுள்ள முக்கிய கருத்துக்கள் ஏற்கனவே விவாதிக்க முனைந்து தோல்வியில் முடிந்தது. அதன் ஏற்பாட்டாளர்களும் அதன் பின் மறு முயற்சியை எடுக்கவில்லை.

இந்த பதிவுகளில் மக்கி நூஹு தம்பி காக்கா சுட்டியதை பாராட்டுகிறேன். உண்மையிலேயே உங்களுக்கு பிரிவினையை களையும் எண்ணம் இருக்கும் என நினைக்கிறேன்.

தயவுசெய்து நீங்கள் அந்த முயற்ச்சியை எடுக்க தயார் என்றால் நானும் உங்களுடன் கை கோர்க்கிறேன்.

தொடர்புக்கு : smsumer@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. மாஷா அல்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் .
posted by Hafil Ahamed (Singapore) [09 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26789

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) , மாஷா அல்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் . யா அல்லாஹ் , எந்த மக்கள் இந்த இஜ்திமாவுடைய வெற்றிக்காக உயிராலும் உடலாலும் உள்ளத்தாலும் , பாடுபட்டார்களோ அவர்கள் அத்தனை பெயருக்கும் அதற்குடைய கூலியை இம்மையிலும் மறுமையிலும் முழுமையாக கொடுத்து மேலான ஜனத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தில் அவர்களோடு எங்கள் எல்லோரையும் சேர்த்தருள்புரிவாக ! ஆமீன்.

Moderator: செய்தியின் தொடர்பைத் தாண்டிய வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26791

சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கு நன்றி. எனது விமர்சனங்களை ஆசையுடன் படிக்கும் உங்களுக்கு எனது நன்றி.

நோட்டிசில் யார் பெயரும் விலாசமும் இருக்கவில்லை, வெறும் தொலைபேசி நம்பர் மட்டுமே இருந்தது. இன்ஷா அல்லாஹ் நீங்கள் சொல்லும் கண்ணியத்துக்குரிய உலமாக்கள் பெயரையும் விலாசத்தையும் எனது முகவரிக்கு அறியத்தந்தால், நான் தப்லீக் ஜமா அத உலமாக்களுடன் பேசிப் பார்க்கிறேன். பேசி அவர்கள் பதிலையும் உங்களுக்கு அறிய தருகிறேன்.

மற்றப்படி விவாதங்கள், எதிர்வாதங்கள், முபாஹலாக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் கற்றறிந்த மார்க்க மேதையுமல்ல.. ஒரு சராசரி குறைகள் நிறைந்த இறைவனின் படைப்பு. அவ்வளவுதான். எனினும், அவரவர்கள் செய்வதை அவரவர்கள் சரி என்று சொல்கிறார்கள். யார் சொல்வது சரியென்று அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

திரு மறையில் ஒரு ஆயத் படித்தேன். QUL KULLUN YAUMALU ALAA SHAAKILATHIHEE, FA RABBUKUM AULAMU BI MANN HUVA AHDHAA SABEELAA....(SADHAKALLAAHUL ALEEM)

மக்கி நூஹுதம்பி,
51 புதுக்கடை தெரு
காயல்பட்டினம்.
(தொலைபேசி / அலைபேசி தவிர்க்கவும்) மின் அஞ்சல்
mackiealim97@yahoo.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. புரியாத புதிர்கள் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [09 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26793

நடைபெற்ற இந்த தப்லீக் இஜ்திமாவில் இந்த இயக்கத்தின் தலைவர்கள் அவர்களின் நூற்களில் எழுதி வைத்திருக்கும் தவறான கொள்கை பற்றி "அஹ்ளுசுன்னாஹ் வல் ஜமாஆ " அறிந்சர்கள் கூறிய குற்றத்க்சாட்டுக்களுக்கு ஒரு தெளிவான விளக்கங்களை , மறுப்புரைகளை மாநாட்டின் இறுதியில் தீர்மானமாக அறிவிப்பார்கள் என அதிகம் பேர்கள் எதிர்பார்திருந்தார்கள் . ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது !

ஏன் ? இந்த இயக்கத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தே வருகிறார்கள் என்பது இன்னும் புரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. மிக மிக எளிமையான (இஜ்திமா) நேர்வழி அழைப்பு மாநாடு...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [10 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26799

நகரில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமா வரவேர்க்கப்படவேண்டியது - இஜ்திமாவிற்க்கு வந்த பல ஆயிரம் நமது சகோதரர்களுக்கு ஒரு சிரமமும் இல்லாமல் அணைத்து அடிப்படை வசதிகளையும் அமைத்து கொடுத்து மார்க்கத்தின் அழைப்பு பணியை மிக தெளிவாக கூறி நேர்வழிக்கு அழைத்தார்கள்... மிக மிக எளிமையான (இஜ்திமா) நேர்வழி அழைப்பு மாநாடு... இந்த நேர்வழி அழைப்பு (இஜ்திமா) மாநாடுக்கு எல்லா வகையிலும் உடலாலும் - பொருளதரதாலும் உதவிகள் செய்த அணைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் அருளும் கிடைக்கட்டுமாக... ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. வீடியோ தாவா
posted by Aarif O.L.M (IJTHIMAVOOR) [10 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26806

இன்ஷா அல்லாஹ் நமதூரில் பெரும் மாற்றத்தையும், ஒற்றுமையையும் காணலாம்.

JAZAKALLAH KHAIRA

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...WONDERS
posted by SEYED ALI (ABUDHABI) [10 April 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26809

ஆஹா என்ன ஆச்சர்யம் எவ்வளவு கூட்டம். ஒரு வி ஐ பி க்கு கூடும் கூட்டத்தை விட மார்க்க விஷயங்களை கேட்க்க இவ்வளவு ஆர்வமாக ஒன்று கூட நம்மால் முடிகிறதே. மிக்க மகிழ்ச்சி.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. இஜ்திமா
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Kayalpatnam) [10 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26810

இறையுதவியாலும், மிகச் சரியான திட்டமிடலுடனும் நெறிப்படுத்தப்பட்ட இந்த இஜ்திமா, நம் ஊரில் பலரையும் வியக்கவும், மெய் சிலிர்க்கவும் வைத்தது. நிறைய மக்கள் திரள்; கட்டுக்கோப்பான வழி நடத்தல்; எளிமை என்றாலும் அவசியத் தேவைகள் அனைத்தும் பேணப்பட்டமை என்று நிறைய ஆச்சரியங்கள்! இஜ்திமாவுக்குத் திரண்டு வந்து நற்செய்திகளைப் பெற்றுக் கொண்டவர்கள், செல்லும் இடங்களிலெல்லாம் நன்னெறி வாழ்ந்திடும் நடமாடும் முன்மாதிரிகளாய் பரிணமிக்க இறையோனை இறைஞ்சுவோம்!

‘90களில், (சென்னை மண்ணடி செம்புதாஸ் தெரு) மஸ்ஜித் மகுதூமியை மையமாகக் கொண்டு கண்ணியத்திற்குரிய தாவூத் ஷரீஃப் சாஹிப் [தப்லீக் சம்பந்தப்பட்ட பல நூற்களை உருதுவிலிருந்து தமிழாக்கம் செய்தவர்கள்] அவர்களை அமீராக ஏற்று அவர்களின் சீரிய வழி நடத்தலில் ஒருமுறை சென்றது; கல்லூரி நண்பர்கள் இணைந்து தாம்பரம் ஜமாஅத்தின் தலைமையில் பிறிதொரு முறை சென்றது, கல்லூரியின் வாராந்திர கஷ்த் பணியில் அவ்வப்போது பங்குபெற்றது, ஒன்றிரண்டு முறை அபுதாபி மஷாஃபா மர்கஸ் வாராந்திர மொழிவாரி ஒன்றுகூடலில் கலந்து கொண்டது, அன்பு நண்பருடன் ஓரிரு வாரங்கள் ஆத்தூர் ஜூமாராத்துக்கு சென்றது என்று நன்மையை ஏவும் இவ்வியக்கத்துடனான நற்பணியில் என்னுடைய தொடர்பு மிக மிகக் குறைவானதே- சொற்பமானதே என்றிருப்பினும், இவர்கள் மீதான உள்ளார்ந்த அன்பும் கண்ணியமும் என்றும் நிலைத்திருக்கும் படி இவர்களின் உழைப்பின் தூய்மை என் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

“உத்’வூ இலா சபீலி ரப்பிக்க பில் ஹிக்மத்தி வல் ம’வுஇதத்தில் ஹஸனா’ என்னும் இறைவாக்குக்கேற்ப அறிவார்ந்த முறையில் தேர்ந்தெடுத்த அழகிய வார்த்தைப் பிரயோகங்களுடன் - ஒரு நேர்த்தியான வலைப்பின்னலுக்குள் - [6 நம்பர்] இபாதத்களின் பக்கம் விளிம்பு நிலை மக்களை இவர்கள் அழைக்கும் பாங்கு சிறப்புக்குரியது.

‘தலைவனும் தொண்டன் தான்!’ என்னும் அண்ணல் நபிகளாரும், அவர்தம் தோழர்களும் காட்டி தந்த நெறிமுறைகளை - வாழ்வியல் ஒழுக்க விழுமியங்களை - வழுவாது பின்பற்றும் நல்லோர்கள் நிறைந்த ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு. துவக்கக் காலம் முதல் சூஃபியிஸவாதிகளால் மட்டுமல்ல; நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பிளவுண்ட பல்வேறு இயக்கவாதிகளாலும் (அவர்கள் தத்தமது இருப்பினை நிலைபடுத்திக் கொள்வதற்காக, தப்லீக் நூற்களின் நம்பகத்தன்மை, தீமைகளைத் தடுப்பதில் முன்னணி வகிக்காமை உட்பட) இவ்வமைப்பின் மீது முன் வைக்கும் எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் இருப்பதும் மீள்பார்வைக்குரியவையே! மறு பரிசீலனைக்கு உட்பட்டவையே!

நிறைவானவன் அல்லாஹ் ஒருவனே! தவறிருப்பின் தயை கூர்ந்து திருத்தி அமைக்கவும் இறையுதவியை வேண்டுகிறேன்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. கண்ணியத்திற்குரிய மக்கி நூஹு தம்பி ஹாஜியார் அவர்களுக்கு,
posted by Muhammad Abubacker (Chennai) [11 April 2013]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 26822

இங்கே என்னுடைய கமெண்ட்ஸ் விவாதம் தவிர்ப்பு காரணம் காட்டி போஸ்ட் செய்யப்படவில்லை. அட்மின் அவர்களின் முடிவில் தலையிட விரும்பவில்லை.

தயவு செய்து என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டியது.

Email:- abu_kmn@yahoo.co.in
Find me in Facebook:- https://www.facebook.com/abu.kmn


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Dubai) [11 April 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26824

இந்த தப்லீக் இஜ்திமா நல்ல முறையில், சிறப்பான ஏற்பாடுகளுடன், வல்ல அல்லாஹ்வின் உதவியால் நிறைவு பெற்றுள்ளது. மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். வல்ல அல்லாஹ், இதில் குறை இருந்தால், மன்னித்து, அவனுக்கு உகப்பான அமல்களாக இருந்தால், அதை கபூல் செய்வானாகவும் ஆமீன். இதற்காக அல்லும் பகலும் தமது உடலாலும்,பொருளாலும், நல்ல ஆலோசைனைகளாலும் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு, அல்லாஹ் தனது பேரருளையும், பரக்கத்தையும் செய்வானகவும் ஆமீன்.

இந்த இஜ்திமா நிகழ்வுகளை நல்லமுறையில் coverage செய்த இந்த இணையதளத்திற்கு நன்றி. jazaakallam khair. நம் அனைவருக்கும், அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக, ஆமீன்.

சாளை. அப்துல் ரஸ்ஸாக், துபாய்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by K S muhamed shuaib (Kayalpatinam) [12 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26832

உண்மையாகவே பிரமாண்டமான எற்ப்பாடுதான். மக்கள் திரள் திரளாக வந்து குவிவதை காண முடிந்தது. சுவரொட்டி, துண்டுபிரசுரம் போன்ற ஏற்பாடுகள் இல்லாவிடினும் நீண்ட நாட்களுக்கு முன்பே வாய்மொழி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பிரம்மைகளை களைவதற்கு முதலில் தப்லீக இயக்கத்தினர் முன்வரவேண்டும். யாருக்குமே யாருமே சொல்லாவிட்டால் பிறகு எப்படி இவ்வளவு கூட்டம் சேர்ந்தது..?எல்லோரும் ஒரே சமயத்தில் கனவு கண்டார்களா....என்ன...!

அரங்கு நிறைய மக்கள் அமர்ந்திருக்க ..எங்கே மேடை இருக்கிறது... அதில் யார் பேசுகிறார்கள் என்று எதுவும் புரியவில்லை. நீண்ட முயற்சிக்கு பிறகுதான் ஒருவாறு மேடை இருக்கும் திசையை யூகித்து உணரமுடிந்தது...

மேடைக்கு ஆடம்பர அலங்காரம் எதுவும் தேவையில்லைதான். ஆனால் மேடை தனித்து தெரியுமாறு அமைந்திருக்கவேண்டும். அதுபோல யார் பேசுகிறார்கள் என்று அறிவித்தால் என்ன குடிமுழுகி போய்விடும்..? இதையெல்லாம் ஆடம்பர அனாவசியம் என்று நினைத்தால் பெரும் பொருட்செலவில் மக்களை கூட்டியிருக்கும் இந்த மாநாட்டையும் கூட நாம் அப்படியே சொல்லிவிட்டு போய்விடலாம்.

எனவே தப்லீக் இயக்கத்தினர் காலத்துக்கு பொருந்தாத இது போன்ற சில நடைமுறைகளை இனியாவது கைவிடவேண்டும்.

மற்றபடி தப்லீக் மாநாடு நமதூர் வரலாற்றில் ஒரு மைல்கல்தான்... அதில் சந்தேகமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by கே.எஸ் .முஹமத் ஷூஐப் (காயல்பட்டினம் ) [12 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26836

மாநாடு குறித்த எனது தனிப்பட்ட கருத்து இது. தப்லீக் இயக்கமே ஒரு பிரசார இயக்கம்தான். அவர்களின் முழு நேரப்பணியே கூட அதுதான். இரண்டு பேர் ,நான்கு பேராக அழைப்பு பணியில் ஈடுபடும் -அதையே தனது வாழ்நாள் நோக்கமாகக கொண்டிருக்கும் ஒரு இயக்கத்துக்கு ஏன் இது போன்ற பிரமாண்டமான மாநாடுகள்....?

பொதுவாக மாநாடுகள் என்பதே கூட்டத்தைக்கூட்டி தனது ஆள் வலிமையை பிறருக்கு உணர்த்தும் ஒன்றாக போய்விட்டது. மற்றபடி எல்லா இடங்களிலும் பேசுவதைத்தான் மாநாட்டிலும் பேசுகிறார்கள்.

இதை உணர்ந்துதான் முதல்வர் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் மாநாடு போடுவதையே நிறுத்திவிட்டார்.

அனாவசியமான பொருட்செலவும் வீணாகும் மனித சக்தியையும் தவிர இது போன்ற மாநாடுகளால் வேறு எந்த பலனும் இல்லை.

இது தப்லீக இயக்கத்துக்கு மட்டுமல்ல பிற எல்லா இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பொருந்தும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. இஜ்திமாவுடைய வெற்றி
posted by அஹமத் (சிங்கப்பூர்) [13 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26843

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தப்லீக் இஜ்திமாக்களின் நோக்கம் வெறும் கூட்டத்தை கூட்டுவதற்காக அல்ல. ஒவ்வொரு நபரும் அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதற்காக ஆர்வமூட்டி தன்னுடைய நேரத்தையும் தன்னுடைய பொருளையும் தியாகம் செய்து தங்களுடைய ஈமானை தாங்களே சரி செய்வதற்கும் ,பலப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த இஜ்திமாக்களே தவிர வேறில்லை.

இஜ்திமாவுடைய வெற்றி எத்தனை நபர்கள் கூடினார்கள் என்பது முக்கியமல்ல மாறாக எத்தனை ஜமாஅத்கள் அல்லாஹ்வுடைய பாதையில் சென்றார்கள் . என்பதை பொருத்துதான்.

அல்ஹம்துலில்லாஹ் இந்த இஜ்திமாவின் மூலம் ஏறக்குறைய 25 ஜமாஅத்கள் புறப்பட்டு சென்றிருக்கின்றனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் யார் யாரெல்லாம் உன்னுடைய பாதையில் தங்களுடைய ஈமானை சரிசெய்வதற்காகச் சென்றார்களோ அவர்களுடைய தூய எண்ணத்தை நீ கபூல் செய்வாயாக ! ஆமீன் . எங்களுக்கும் அந்த வாய்ப்பினை தந்தருள்வாயாக ! ஆமீன் .

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved