Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:13:43 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10430
#KOTW10430
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 14, 2013
பின்ன என்னங்க...? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5721 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ள சாலை முனையில், நீண்ட காலமாக அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்களால் சாலையோரங்களிலும், பள்ளிக்கூடத்திற்கு முன்பாகவும் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இது பலமுறை ஊடகங்களில் செய்திகளாகவும் வெளியிடப்பட்டது. அது மட்டுமின்றி, காயல்பட்டினம் நகராட்சியில் பலமுறை அப்பகுதியின் பொதுநல ஆர்வலர்களால் முறையிடப்பட்டு, நகராட்சியின் சார்பில் குப்பைகள் அவ்வப்போது அள்ளப்பட்டபோதிலும் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டது.



குப்பைகளை மக்கள் தரையில் கொட்டுவதைத் தவிர்த்திடுவதற்காக, நகராட்சியின் சார்பில் குப்பை சேகரிப்பு தள்ளுவண்டியொன்றும் அங்கு நிறுத்தப்பட்டது. எனினும், தள்ளுவண்டி வரை நடந்து சென்று குப்பையைக் கொட்ட மனமில்லாத மக்கள், தொலைவில் நின்றவாறே குப்பைகளை வீசியெறிந்து சென்றனர். பூனைகளும், எலி - பெருச்சாளிகளும் இக்குப்பைகளைக் கிளறுவது வழமையாகிவிட்டதால், சாலையோரங்களில் மனிதர்களால் வீசப்பட்ட குப்பைகள், விலங்குகளால் சாலை மீதே சிதறடிக்கப்பட்டது.

இவ்வளவும் நடந்த பிறகு பொறுமையிழந்த அப்பகுதியின் பொதுநல ஆர்வலர்கள், அவ்விடத்தின் குப்பைகளைத் துப்புரவு செய்யச் செய்துவிட்டு, அப்பகுதி சுவர்களில் எழுதியுள்ள அறிவிப்பு வாசகங்கள் வருமாறு:-













இந்த ஏற்பாட்டிற்குப் பிறகும், இதையறியாமல் “வழமை போல” அப்பகுதியில் குப்பை கொட்ட வரும் ஆண் - பெண்களுக்கு அப்பகுதியின் பொதுநல ஆர்வலர்கள் “வாயார வரவேற்பளித்து” வருகின்றனர்.

படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. படிப்பறிவு இல்லாதோருக்கு மட்டும் விலக்கு அளிக்க படுகிறது.
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்.) [14 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26252

இந்த வாசகத்தை படித்த பின்பும் குப்பையை கொட்டினால் இந்த பிறவிகளை என்னவென்று அழைப்பது...!

இந்த எச்சரிக்கை வாசகத்தின் மூலம் அந்த ஏரியாவில் எவ்வளவு பேர் மரியாதையை இழந்தோர் எவ்வளவு பேர் உள்ளார்கள் என்று ஒரு கணிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்....

குறிப்பு:- படிப்பறிவு இல்லாதோருக்கு மட்டும் விலக்கு அளிக்க படுகிறது.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ahmed Shahul Hameed(AbuSabu) (Kayalpattinam) [14 March 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 26253

Assalaamu Alaikkum.

Romba suuuuper.......!Sabaash.......!Arumai.....! Thodarattum ungal sevai. Adrasakkai,Adrasakkai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...பழக்க தோஷம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26254

சுவற்றில் எழுதுவதிலும் எழுத்து பிழை இருக்கிறதே என்று தான் யோசிப்பார்கள். "எரிகிறவர்கள்" என்பது "எறிகிறவர்கள்" என்று இருக்க வேண்டும்.

இங்கே குப்பை கொட்டாதீர்கள் என்று எழுதினால் அங்கே தான் கொட்டுகிறார்கள். இங்கே சிறு நீர் கழிக்காதீர்கள் என்று எழுதினால் அந்த இடத்தில்தான் சிறுநீர் கழிக்கிறார்கள். ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கழிப்பறை ஆண்கள் பெண்கள் என்று தனி தனியாக எழுதினால் மட்டும் போதவில்லை. ஒரு மீசை வைத்த ஆண் படமும் போட்டு ஒரு சுரிதார் போட்ட பெண் படமும் போட்டால்தான் விளங்குகிறது. அந்த அளவுக்கு படிப்பறிவு, சுற்றுப்புற சூழல் கற்றுக் கொடுக்கும் முறை தலைகீழாக உள்ளது.

வெளி நாடுகளில் வெறும் பேப்பரை கசக்கி ரோட்டில் போட பயம் யாராவது பார்த்து விடுவார்களோ, அதிகாரிகள் பார்த்தால் spot fine போட்டு விடுவார்களே என்ற பயம் இருக்கிறது. அந்த மாதிரி இங்கு செய்ய ஆரம்பித்தால் முதலாவது கட்சிகாரர்கள் வந்து கொடிபிடிப்பர்கள், ஜனநாயகத்துக்கு விரோதம் என்பார்கள், வெட்டு குத்து பழி வாங்குதல் என்று போய் வழக்கு வம்பு என்று நீண்டு கொண்டே போகும். நமக்கெதற்கு வம்பு என்று எல்லோரும் ஒதுங்குவார்கள். இவனுக்கு தேவையா இது என்று சொந்தக்காரர்கள் ஏளனம் செய்வார்கள்.

காயல்பட்டினம் சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு இந்த பொது விஷயங்களிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நாவினால் சுட்டவடு,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [14 March 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 26258

தீவுதெருவை பொறுத்தவரையில் பெரும்பான்மையான மக்கள் நகராட்சி வண்டியிலே தங்கள் குப்பைகளை கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் எங்கள் தெருவை சார்ந்த சில பேரும், சித்தன் தெருவை சார்ந்த சகோதரிகளும் இப்படி பள்ளிக்கூடம் அருகில் தொடர்ந்து குப்பை கொட்டி வந்தார்கள்.

அவர்கள் யார் என தெரிந்து அவர்களிடம் இப்படி செய்யா தீர்கள், குப்பை வண்டிதான் தினம் தோறும் வருகிறதே, அன்றாட குப்பையை வண்டியில் கொடுக்குமாறு வலயுருதினோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? 25 வருசமா கொட்டுகிறோம் இன்றைக்கு என்ன புதுசா? என்பது போல் சொன்னார்கள்.

காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்போம் எனவும் மிரட்டி பார்த்தார்கள். எதுவும் எடுபடவில்லை. அதெல்லாம் செய்யாத வேலையை இந்த வாசகங்கள் செய்துள்ளது குறிப்பிடதக்கது. இப்பொழுது இங்கு குப்பை கொட்டுவது நன்றாக குறைந்து வருகிறது. இதுதான் வள்ளுவன் சொல்லும் நாவினால் சுட்ட வடுவோ என புரிந்து கொள்ள முடிந்தது.

மக்கள் மேலும் ஒத்துழைப்பு அளித்து சுற்றப்புரம் சுத்தமாக இருந்தால் எல்லோருக்கும் நல்லது என்பதை உணர்ந்து, இதனால் வரும் உயிர் கொல்லி நோய்கள் யாருக்கோ வந்த விருந்து என்றில்லாமல் குப்பை கொட்டுவதை அறவே நிறுத்த வேண்டும் என்று தெரு மக்கள், பள்ளி நிர்வாகம் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது எனலாம்.

YOURS,
NIZAR
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Vilack SMA (HCM) [14 March 2013]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 26259

ச்ச .... பார்க்கவே அழகா இருக்கு ... அந்த இடமும் , எழுதப்பட்டுள்ள வாசகங்களும் .

இப்படியெல்லாம் எழுதினாத்தான் திருந்துவாங்கபோல ! நகரின் அத்தனை தெருவாசிகளும் இதையே பின்பற்றலாம் .

இதையும் மீறுபவர்களை என்னத்த சொல்ல .... செவிடன் காதில் ஊதிய சங்கு .... எருமை மாட்டுமேல மழை பெய்ததுபோல... அப்படின்னுதான் சொல்லணும் .

என் வீட்டுக்கு முன்னால் எவனோ " அந்த பாட்டிலை " வீசி எறிந்துவிட்டு சென்றிருக்கிறான் . விசாரித்ததில் அருகில் லைசென்ஸ் இல்லாத இரண்டு BAR செயல்படுவதாக சொல்கிறார்கள் . எங்கு என்று தெரியவில்லை . எப்படி கண்டுபிடிப்பது என்றும் தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பின்ன என்னங்க......... வேற என்னங்க செய்ய முடியும்?
posted by s.s.md meerasahib (kayalpatnam) [15 March 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 26265

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே......... இப்படி ஊரு முழுவதும் எழுதி போடுங்க. ஊரின் பெருமையை நினைத்து வரும் நம்முடைய வெளிவூர் விருந்தாளிகள் பார்த்தால்......! ரெம்ப அழகாக இருக்கும்.

நம் மக்களின் தன்மையை ஒரு பார்வையில் கணிக்கலாம். இப்படி எழுதி போடும் புத்திசாலிகள் நகராட்சியை தட்டிக்கேட்க்க முடியவில்லையா?

குப்பை வண்டிவரும்....... வரும் என்றெண்ணி ரோட்டு வீடுகளுக்கு முன் வைத்துவிட்டு போகிறார்கள். குப்பை வண்டி வந்தபாடில்லை. அப்படியே..... வந்தாலும் அவர்கள் வருவதற்கு முன் காக்கையும்,கோழியும்,பூனையும்,மாடும் குப்பையை ரிசர்ஷ் பண்ணிட்டு போனால் எப்படி இருக்கும் தெருக்கள்....? இப்படி எல்லா தெருக்களிலும் நடந்தால் ஊர் குப்பைக்காடு தான். இப்படி இருக்க யாரைங்க குறை சொல்ல.....? சுத்தமான நகராக மாற்ற நகராட்ச்சிதானங்க திட்டம் வகுக்கனும்?

ஆமாம்....... ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு........? இப்படி எழுதி போட்டுவிட்டு பெயிண்டர் டப்பாவையும், பிரஸ்ஸையும் அங்கேதான் போட்டுட்டு போயிருக்காரு. பின்ன என்னங்க..... நகராட்ச்சியிலா கொண்டு போயி கொடுக்க முடியும்? வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by salai s nawas (singapore) [15 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26270

ஆமாம்பா, மருமகன் மீராசாஹிப் கேள்வியிலும் நியாயம் இருக்கு...

//அப்படியே..... வந்தாலும் அவர்கள் வருவதற்கு முன் காக்கையும்,கோழியும்,பூனையும்,மாடும் குப்பையை ரிசர்ஷ் பண்ணிட்டு போனால் எப்படி இருக்கும் தெருக்கள்....? ? //

இதை படித்து விட்டு சிரிப்பு வந்துவிட்டது.

எங்கள் வீட்டில் மக்கிய குப்பை மக்காத குப்பை என பிரித்து மரத்திற்கு உரமாக போடுகிறோம். இதே வலைத்தளத்தில் நகராட்சி ஆணையர் ஒரு கட்டுரையாக எழுதி இருந்தார், அதையே உங்க தெருவாசிகளும் கடைபிடித்தால் மரங்களுக்கு உரமும் ஆச்சு, சுத்தத்திற்கு சுத்தமும் ஆச்சு.

இதே சிங்கப்பூரில் குப்பை தொட்டியை தேடி தேடி குப்பை போடும் பழக்கத்தை ஊரிலும் கடைபிடிக்கிறேன். எல்லாம் நம்மில் இருந்து ஆரம்பித்தால் ஊரெல்லாம் பசுமையாகவும் சுத்தமாகவும் இருக்குமே!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Vilack SMA (HCM) [15 March 2013]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 26271

மீரா சாஹிப் அவர்களுக்கு ,

நீங்கள் குப்பை வண்டி வரும் வரை காத்திருக்க தேவையில்லை . வண்டி வந்ததும் குப்பையை அவர்களாகவே எடுப்பார்கள் என்று எண்ணி அடுத்தவர் வீட்டுமுன் வைக்கவும் தேவை இல்லை . வண்டி வரும் சமயம் அவர்கள் காது கிழிய ஹாரன் அடித்துக்கொண்டுதான் வருகிறார்கள் . அந்த சமயம் நீங்கள் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் . குப்பையை அவர்களிடமே நேரிடையாக கொடுங்கள் . பிரச்சினையே வராது . இதையும் மீறி உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் உங்கள் வார்டு மெம்பரிடம் முறையிடுங்கள் .

சும்மா எதெற்கெடுத்தாலும் நகராட்சியை , உறுப்பினர்களை குறை சொல்வதை தவிருங்கள் . குப்பை அள்ளும் விசயத்தில் நகராட்சி நல்ல முறையில்தான் செயல்படுகிறது . தேவை .. மக்களுடைய ஒத்துழைப்பு மட்டுமே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...பொறுப்பை உணரனும்....
posted by Mohammed Nooh KA (sarafiyyah, jeddah) [15 May 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27414

விளக்குSMA ன் கருத்து100/100 சரியே.தனிமனித ஒழுக்கமும்,சுத்தமும் எப்பொழுது பேனப்படுகிறதோ அப்பொழுதுதான் அந்தசமூகமும் சீர்படும்.தவறு செய்பவர்கள் தனது தவறை உணர்ந்து தம்மை திருத்திக்கொள்வதுடன் தெரு மக்களுடனும், நகராட்சிஉடனும் ஒத்துழைப்பார்கள் என நம்புவோமாக .நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved