Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:14:52 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10138
#KOTW10138
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 6, 2013
மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2264 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



இன்று (பிப்ரவரி 6) காலை - தூத்துக்குடியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் - மாவட்ட ஆட்சியர், திட்டக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகர்மன்றம் சார்பாக தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கலந்துகொண்டார். அதில் - தூத்துக்குடி மாவட்டம்: தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் தெரிவித்திருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் சமீபத்தில் தனது 25 வயதினை பூர்த்தி செய்தது. வெள்ளி விழா கொண்டாட்டங்கள் மாவட்ட அளவில் மக்கள் மனதில் ஒரு ஆரோக்கியமான பெருமையும், நெருக்கத்தையும் உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. நம்ம ஊரு இது என்ற தாரக மந்திரம் நம் அனைவரின் வாய்களிலும் பல நாட்களாகத் தவழ்ந்து வந்தது. இந்த உத்வேகம் தொடர்ந்து நீடிக்க, அதன் மூலம் நமது மாவட்டம் பயன்கள் பல அடைய, மாவட்ட அளவிலான வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று மிகவும் அவசியம்.

2003 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு பிரவசி பாரதீய திவஸ் (Pravasi Bharathiya Divas) என்ற பெயரில் - வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பூர்விகர்கள் ஆகியோர் பங்கேற்கும் மிகப்பெரிய நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் பல நாடுகளிலிருந்து கலந்துகொள்கின்றனர். இந்த சந்திப்பு வாய்ப்பு மூலம் பல பயன்கள் - குறிப்பாக தொழில் வளர்ச்சி, சமுதாய மேம்பாடு திட்டங்களில் தனியாரின் பங்களிப்பு - ஏற்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 9 இல் நடக்கும் இந்த நிகழ்வு காலகட்டத்தில் - தூத்துக்குடி மாவட்ட அளவில், தூத்துக்குடியை பூர்விகமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய பூர்விகர்கள் ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சியை நாம் ஏற்படுத்தலாம். அந்த நிகழ்ச்சி - நம் மாவட்ட திட்டங்களில், தனியார்கள் பெருமளவில் கலந்துகொள்ள ஒரு மேடையாக அமையும்.

நம் மாவட்டத்தின் பிரதான பிரச்சனைகளில் ஒன்று குடிநீர் ஆகும். பெருமளவில் பருவ மழையை நம்பி உள்ள நாம், இல்லங்களில் அமல்படுத்தப்படும் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் (Rain Water Harvesting) போல், மழை நீர் வடிகால்களை (Storm Water Drainage) அடிப்படையாகக் கொண்டு - பல புதிய நீர்தேக்கங்களை உருவாக்குவது மிகவும் அவசியம். வீணாக கடலில் தண்ணீர் சேருவதற்கு பதிலாக, நாம் உருவாக்கும் இந்த நீர்தேக்கங்களில் மழை நீர் போய் சேர்ந்து நமக்கு பயன்கள் பல தரும்.

மாநில மின்சார உற்பத்தியில் நம் மாவட்டம் பெரும் பங்களிக்கிறது. மாநில மின்சார உற்பத்தியில் (சுமார் 10,000 MW) தூத்துக்குடி அனல் மின் நிலையம் மட்டுமே - 10 சதவீதமான சுமார் 1000 MW மின்சாரத்தை வழங்குகிறது. அடுத்த சில ஆண்டுகளில் 3000 MW முதல் 4000 MW வகையிலான மின்சார உற்பத்தி மேம்பாடும் நம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. மின்சாரம் உற்பத்தி அதிகம், தண்ணீர் தட்டுப்பாடும் அதிகம் என்ற நிலையில் உள்ள நம் கடலோர மாவட்டம் - பெரிய அளவில் கடல்நீரை, குடிநீராக மாற்றும் desalination திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். Desalination போன்ற திட்டங்களுக்கு மின்சாரமே மிகவும் முக்கிய மூலதனம். குறிப்பாக தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீரை - Desalination திட்டங்கள் மூலம் பெறச் செய்து, தற்போதைய ஆறுகள் அடிப்படையிலான நீராதாரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

அனல் மின்சாரம் உற்பத்தி நம் மாவட்டத்தில் பிரதானமாக உள்ளது. மின்சார உற்பத்தி நம் மாவட்டத்தில் பெருகப் பெருக, அதன்மூலம் இதர தொழிற்சாலைகளும் பெருமளவில் வருங்காலங்களில் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசும் அதிகரிக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு பகுதிக்கும் தாங்கும் சக்தி (carrying capacity) என்ற அளவு ஒன்றுள்ளது. ஆகவே, நம் மாவட்டத்தில் அனல் அடிப்படையிலான புதிய மின்திட்டங்கள் துவங்கப்படும்போது, இதனையும் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டங்கள் - குறிப்பாக மரம் வளர்ப்புத் திட்டங்களுக்கு - பெருமளவில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தொலைநோக்குப் பார்வையில் நாம் அனைவரும் செயல்பட்டால், நம் மாவட்டத்தை மாநிலத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் முன் மாதிரி மாவட்டமாக நாம் உருவாக்கலாம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தரமான அறிக்கை,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [07 February 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25421

மாவட்ட திட்ட குழு கூட்டத்தில் நம் நகராட்சி தலைவியின் அறிக்கை மிகவும் பயனுள்ளதும் தொலைநோக்கு சிந்தனையும் கொண்டதாகும்.வெள்ளிவிழாவை இந்த மாவட்டம் எட்டி இருந்தாலும் இன்னும் தன்னிறைவு அடையாத நிறைய விஷயங்கள் இருப்பதை மறுக்கமுடியாது.

குறிப்பாக உதாரணத்துக்கு ஒன்றாக குடிநீர் பிரச்சனையை எடுத்து கொள்ளலாம்.நகராட்சி அந்தஸ்தை நம் ஊரு பெற்றும் இன்றும் குடிநீர் விசயத்தில் தன்னிறைவு அடையாத நிலையில் உள்ளது.இப்படி மாவட்டத்தில் வெள்ளி விழாவை கடந்தும் அடிப்படை தேவைகள் கூட நிறைவு பெறாத எத்தனையோ கிராமங்கள் உள்ளன.

எனவே இந்திய அரசு ஒவ்வரு வருடமும் நடத்துகிற வெளிநாடு இந்தியர்கள்,இந்திய பூர்விகர்கள்,தனியார்கள் கொண்ட ஒன்று கூடல் போல நம் மாவட்டத்திலும் வருடம் ஒருமுறை இப்படி ஒரு ஒன்று கூடல் ஏற்படுத்தி அதன்மூலம் தனியார்களை மாவட்ட திட்டங்களில் பங்கெடுக்க வைப்பது என்ற நம் நகராட்சி தலைவியின் கருத்து உள்ளடக்கிய அறிக்கை மாவட்ட ஆட்சியரையும், மற்ற அதிகாரிகளையும் சீட்டின் நுனிக்கு வரசெய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதோடு இல்லாமல் மாவட்டத்தில் நிலவிவரும் குடிதண்ணீர்,மின்சாரம்,மழை வடிகால்,கடல் நீரை குடிநீராக மாற்றுதல்,மின்சார உற்பத்தியை அதிகரித்து தொலிட்சாலைகலுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி மாவட்டத்தை மேம்படுத்துதல் என அணைத்து அம்சங்களையும் கொண்ட நம் நகராட்சி தலைவியின் அறிக்கை மிகவும் பயனுள்ளதும்,நன்கு ஆய்வு செய்து திட்டமிட்டதாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.வேகமாக முன்னேறி வரும் நம் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக அமைய வாழ்த்துக்கள்.

YOURS,
NIZAR
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved