Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:25:10 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10130
#KOTW10130
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 5, 2013
புதிய சாலை அமைப்புப் பணிகள் முறைப்படி இல்லை! ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2878 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் புதிதாக நடைபெற்று வரும் சாலைப்பணிகள் முறைப்படி நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து தாசில்தார், லஞ்ச ஒழிப்புத் துறை, உயர்மட்ட அதிகாரிகள் குழுவைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் 04.02.2013 திங்கட்கிழமையன்று நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது முறையிடப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், துணைத் தலைவர் எஸ்.அப்துல் வாஹித், செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.புகாரீ, செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரடங்கிய குழு, நேற்று காலை 11.30 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுகுறித்து முறையிட்டது.

காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பாபள்ளித் தெரு ஆகிய பகுதிகளில், புதிய சாலை அமைப்புப் பணிக்காக பழைய சாலை - நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தோண்டியகற்றப்படவில்லை என்றும், மிகக் குறைந்த அளவிலேயே பழைய சாலை தோண்டப்பட்டுள்ளதால், புதிய சாலை அமைப்பதற்குத் தேவையான கலவைகளும் குறைந்த அளவிலேயே போடப்பட்டு, சாலையின் தரம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் அக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் அச்சம் தெரிவித்தனர்.

புதிய சாலைகளின் தரம் குறித்து சந்தேகம் தெரிவித்து - நடவடிக்கை கோரி, நகரின் பொதுநல அமைப்புகள் நகராட்சியிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், நம்பிக்கையிழந்துவிட்ட காரணத்தாலேயே மாவட்ட ஆட்சியரகம் வந்து முறையிடுவதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.

தோண்டப்பட்ட சாலைகளின் பழைய மணற்பொருட்கள் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படாமல், தனியார் நிலத்தில் கொட்டப்பட்டுள்ளதாக முறையிட்ட அக்குழுவினர், கடந்த மழைக்காலத்தின்போது காயல்பட்டினம் மாட்டுக்குளம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் தடுப்பதற்காக பல லட்சம் ரூபாய் தொகை - மக்கள் பணமான நகராட்சியின் பொதுநிதியிலிருந்து செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற பழைய மணற்பொருட்களை நகராட்சி அத்தாழ்வான இடங்களில் நிரப்பி, பொதுப்பணத்தை விரயமாக்காமல் தவிர்க்கலாம் என்றும் கூறினர்.

இம்முறையீடு குறித்து, அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாரிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரித்தார். நகராட்சியிடம் செய்யப்பட்ட முறையீடு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று ஆட்சியர் கேட்டபோது, இனிமேல்தான் ஆய்வு செய்ய உள்ளதாக ஆணையர் கூறினார்.

அவரைக் கண்டித்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக்குழு புதிய சாலைகளை ஆய்வு செய்ய வரும் என்றும், சாலை அமைப்புப் பணிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய சாலை அமைப்புப் பணிக்காக தோண்டப்பட்டு, தனியார் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள மணற்பொருட்களை, ஒப்பந்தக்காரர் அவர் செலவிலேயே நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடுமாறும், அவர்கள் அதைச் செய்யாவிடில் அவர்களது பணி உத்தரவையும், ஒப்பந்த உரிமத்தையும் ரத்து செய்யுமாறும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உத்தரவிட்டார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by salai s nawas (singpaore) [06 February 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25408

ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பாராட்டுகள் பல.

- மண்ணின் மைந்தன்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. புகார் மீதான நடவடிக்கை என்னவென்று அறிவோம் விரைவில்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [06 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25409

இந்த இயக்கத்தின் கிளை நமது நகரில் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் சிலர் இந்த இயக்கத்தை கொச்சை படுத்தி கேலியும் கிண்டலுமாக மக்கள் மத்தியில் பரப்ப செய்தார்கள்...

எந்த இயக்கமும் ஆரபித்த உடனேயே எதையும் செய்து விட முடியாது. அதற்கான நேரமும் சூழ்நிலைகளும் அமையவேண்டும் என்பதை நிரூபித்துள்ளார்கள் இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சகோதரர்கள்... பாராட்டுகள்....

பொறுத்து இருந்து பார்போம் இந்த இயக்கத்தின் சார்பாக ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட புகார் மீதான நடவடிக்கை என்னவென்று அறிவோம் விரைவில்...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nizam (india) [06 February 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 25412

இதில் இருவழி பாதை பற்றிய புகாரையும் சேர்த்திருக்கலாம். குறிப்பாக நெசவு தெரு மூப்பனார் ஓடை மற்றும் ஜாமிவுல் அஷர் பள்ளி அருகே ரோடுகளை பார்க்கும் போது கற்காலத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Hameed Rifai (Yanbu KSA) [06 February 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25415

பயனுள்ள பல அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் மூலம் தங்களால் இயன்ற அளவுக்கு நல்ல பணிகளைச் செய்துகொண்டிருக்கும் அன்பிற்குரிய சகோதரர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இதுநாள் வரை புதிய சாலைகள் போடப்படும்போது, ரோடு ரோலர் வாகனத்தையும், வேலை செய்யும் பணியாளர்களையும் பராக்கு பார்ப்பதையும், ரோடு போட்டு முடிந்ததும், தூசி படாத புது ரோட்டைப் பார்த்துப் பார்த்து ரசிப்பதையும், மழைக்காலங்களில் அந்த ரோடுகள் பெயர்ந்தெழும்போது போட்டவனையும், பொறுப்பிலிருப்பவர்களையும் திட்டுவதையும் மட்டுமே வழமையாகக் கொண்டிருந்த எங்களுக்கு, இன்று ஒரு ரோடு இப்படித்தான் இருக்க வேண்டும், அதற்கு இப்படித்தான் தோண்ட வேண்டும் என்ற விபரங்கள் எல்லாம் உள்ளது என்பதே இப்போதுதான் விளங்குகிறது.

என்ன செய்ய பொருளாதாரத்தை ஈட்டுவதற்காக நாங்கள் கடல் கடந்து வந்துவிட்டோம். ஊரில் இருக்கும் ஒரு சிலரோ தம் சக்திக்கு மிஞ்சி பணியாற்றுவதைப் பார்க்கையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் அவர்களுடன் நானும் களத்தில் நிற்க முடியவில்லையே என்று ஆதங்கமாகவும் உள்ளது.

இந்த நல்லவர்கள் எடுக்கும் நன்முயற்சிகளுக்கு வல்ல அல்லாஹ் நிறைவான பலனையும், அதில் ஈடுபடுவோருக்கு நற்கூலிகளையும், எதிர்ப்போருக்கு உண்மையை உணரும் பாக்கியத்தையும் வழங்கியருள்வானாக..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நடவடிக்கை? சந்தேகம் இல்லை.
posted by Mauroof (Dubai) [06 February 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25416

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டமைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ள படி உயர்மட்ட அதிகாரிகள் அவர்களது கடமையை உணர்ந்து நேர்மையாக ஆய்வு செய்வார்களேயானால்! நகராட்சி ஆணையர், ஒப்பந்தக்காரர்/கள் மற்றும் தொடர்புடையவர்கள் மீதான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

சகோ. ஹமீத் ரிபாய் கூறியது போல், நம்மில் பெரும்பாலானோர் இதுவரை சாலை போடும் விதத்தை "பராக்கு" பார்த்தோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அது ஒரு தொடர்கதையாக இனி இருக்காது என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

ஒரு சாலை அமைக்கப்படும்போது என்ன என்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை சமீபத்தில் (News ID # 10086) அறியத்தந்த இவ்விணையதளத்திற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வெற்றிக்கனி விழத்தயாராகி விட்டது
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [06 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25417

மாங்காயை போட்டவுடன் மாமரமாக வந்திடாது, எந்த இயக்கமும் தோன்றியவுடன் நாம் நாடும் பயனை பட்டென்று தந்துவிடவும் முடியாது.

பலதையும் ஆராய்ந்து அதன் சாத்தியக்கூறுக்கேற்ப ஆக்கப்பூர்வமாக, மக்களுக்கு பயனாகும் நற்பணிகளை செய்ய முன்வரும் எந்த புதிய இயக்கத்தையும் வரவேற்று உற்ச்சாகப்படுத்துதல் வேண்டும்!

தயவு செய்து அனுபவத்திலுள்ள பழமையான இயக்கத்தோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டாம்! பிறந்த பிள்ளை தவழ்ந்து பின் நடைபழகி பிறகுதான் நிலையாக நிற்கமுடியும்!

எந்த செயலுக்கும் பொறுமை காட்டி அவர்களுக்கு பக்கபலமாக இருந்தால், எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்தையும் வெற்றியாகித் தருவான்!

புண்ணிய காரியங்களை கையில் எடுத்திருக்கும் கண்ணியவான்களே, உங்கள் உண்மையான உழைப்புக்கு பக்கபலமாக பக்கத்தில் இல்லாவிட்டாலும் படைத்தாளுபவனிடம் பிரார்த்தித்தவனாகவே இருக்கிறேன்!

வெற்றிக்கனி விழத்தயாராகி விட்டது கைகளில் அடைய கனபொழுது காத்திருந்தாலே போதும்!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved