Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:10:23 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous EditorialNext Editorial
தலையங்கம் எண் (ID #) 47
#KOTWEDIT47
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 1, 2012
மது விற்பனையும், தமிழக பொருளாதாரமும்!
இந்த பக்கம் 9749 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசின் மொத்த ஆண்டு வருவாயில் பெரும்பங்கு மது விற்பனை மூலம் பெறப்படுகிறது. 2012 -13 ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் மொத்த வருவாய் - சுமார் 100,590 கோடி ரூபாய். அதில் தமிழகத்தின் சொந்த வருவாய் (State's Own Tax Revenue) - 71,461 கோடி ரூபாய். இதில் மது விற்பனையின் பங்கு - 20,000 கோடி ரூபாய்!

இந்திய அளவில் - அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. மது விற்பனை மூலம் பெறப்படும் வருவாய் - தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாக சில வல்லுனர்கள் கூறுவது உண்டு. இது ஒரு வேடிக்கையான கருத்தாகும்.

மது விற்பனை/அருந்துதலை பொருத்த வரை - இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக குஜராத், மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவில் - மது விற்பனை/அருந்துவது முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் - மது அருந்த அனுமதிக்கப்பட்ட வயது கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பஞ்சாபில் அனுமதிக்கப்பட்ட வயது 25. ஆந்திராவில் அனுமதிக்கப்பட்ட வயது 18. தமிழகத்தில் இது 21.

முழுமையான மதுவிலக்கு தமிழகத்தில் பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 1937 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் - 1971-74, 1981-87 மற்றும் 1990-91 ஆகிய ஆண்டுகளை தவிர்த்து, பிற ஆண்டுகளில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு அமலில் இருந்தது. முழு மதுவிலக்கு மாநிலத்தில் அமலில் இருந்த காலகட்டத்தில் - கள்ளச் சாராயத்தை அருந்தி பலர் இறந்ததைக் காரணங்காட்டி, மது விற்பனை மாநிலத்தில் பிறகு அனுமதிக்கப்பட்டது.

1983ஆம் ஆண்டு, மொத்த மது விற்பனைக்கு என தமிழக அரசால் துவக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனம் [TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED (TASMAC)] - தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 7000 சாராயக் கடைகளை நடத்துகிறது. ஒரு தனியார் நிறுவனம் - எவ்வாறு தனது வளர்ச்சியைத் திட்டமிடுமோ (புதிய கடைகள் திறப்பு, அதிக விற்பனை) அது போல - டாஸ்மாக் நிறுவனமும் இலக்குகள் நிர்ணயித்து செயல்படுகிறது.

அரசாங்கங்களை பொருத்த வரை - எவ்வாறு சிகரட் போன்ற அடிமையாக்கும் பொருட்களுக்கு வரி உயர்த்தி - அதிக வருமானம் ஈட்ட முயற்சி செய்கின்றனவோ, அது போல - மது விற்பனையையும், அதன் மீதான வரியையும் அவ்வப்போது உயர்த்தி - அதிக வருமானம் ஈட்ட முயற்சி செய்கிறது. அரசாங்களுக்கு இது எளிதான வழி.

புகைப் பழக்கம் - புற்றுநோயில் முடியும் ; மது பழக்கம் - குடும்பத்தை அழிக்கும் என மேலோட்டமாக விளம்பரங்களைச் செய்யும் தமிழக அரசாங்கம், இவ்வாண்டு - மது அருந்துதலில் உள்ள ஆபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த - ஒதுக்கியுள்ள தொகை 1 கோடி ரூபாய். ஆம், 1 கோடி ரூபாய்தான். இத்தொகையில் ஒரு பூஜ்யமும் தவறாக விடப்படவில்லை. மது விற்பனை மூலம் தமிழக அரசு ஓர் ஆண்டில் பெறும் வருமானம் 20,000 கோடி ரூபாய். ஆம் - 2 க்கு பிறகு நான்கு பூஜ்யங்கள்.

மது விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி - ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறதா? அதுவும் இல்லை. மதுப் பழக்கத்தில் அதிகம் பாதிக்கப்படுவோர் - நடுத்தர மற்றும் பொருளாதரத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களே. அதுபோன்ற மக்களின் குறைந்த வருமானத்தை மதுவுக்கு செலவு செய்ய செய்து - அதுமூலம் பெறும் - பெரும் வருவாய் மூலம், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள அதே மக்களுக்கு - கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் இலவசங்களை அரசாங்கங்கள் அள்ளி வீசுகின்றன.

நடப்பாண்டில் - எடுத்துக்காட்டாக ஃபேன், மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசங்களுக்கு அரசு ஒதுக்கிய தொகை 1250 கோடி ரூபாய். இலவச ௦- சூரிய ஒளியில் இயங்கும் வீடுகள் கட்ட - ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 1080 கோடி. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு 489 கோடி ரூபாய் இலவசம், மணப்பெண்களுக்கு தங்கத் தாலி வகைக்கு - 514 கோடி ரூபாய் இலவசம், இலவச பள்ளி சீருடை வகைக்கு 330 கோடி ரூபாய், இலவச பஸ் பாஸ் - 324 கோடி ரூபாய், இலவச ஆடு விநியோகத்திற்கு 188 கோடி ரூபாய், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வகைக்கு 188 கோடி ரூபாய், இலவச புடவை/வேஷ்டி வகைக்கு 269 கோடி ரூபாய். பட்டியல் மிக நீளம்.

ஒருபுறம் மக்களை மதுவுக்கு அடிமையாக்கும் செயல். மறுபுறம் - அதன் மூலம் பெறப்படும் வருவாயின் பெரும் உதவிகொண்டு மக்களை - இலவசங்களுக்கு அடிமையாக்கும் செயல். இந்த பொருளாதார வளர்ச்சி வழிமுறை மூலம் எவ்வாறு வருங்காலத்தில் வலுவான தமிழகத்தை உருவாக்குவது?

பொதுவாகவே அரசுகள் மக்கள் நல அரசுகளாத்தான் செயல்பட வேண்டும். ஆனால் மதுவினால் குடிமக்களின் உடல் நலம் கெடுவதோடு குற்றச்செயல்களும் பெருகுகின்றன. மக்கள் குடிகாரர்களாகவும், குற்றவாளிகளாகவும், நோயாளிகளாகவும் மாறுவதைப்பற்றி எக்கவலையும் படாமல் - களஞ்சியத்திற்கு காசு வந்தால் சரி என்பது ஒரு நல அரசிற்கு அழகல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை மதுவிலக்கை - பெரிய கட்சிகளில் - பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே ஆதரிக்கிறது. இதர கட்சிகள் - மது விற்பனையை - நேரடியாகவோ, மறைமுகமாகவோ - பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் அம்சமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

இது எவ்வாறு ஒரு தவறான அணுகுமுறை என்பதற்கு குஜராத் ஓர் சிறந்த உதாரணம். தமிழகம் போல - இந்தியாவில் மிக அதிக பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலங்களில் ஒன்று குஜராத். மது விற்பனை மூலம் குஜராத் பெறும் வருமானம் - 0 ரூபாய். ஆம், ஒரு ரூபாயும் அல்ல. அங்கு மது விற்பனையும் கிடையாது, இலவசங்களும் கிடையாது.

தமிழக பொருளாதாரம் தற்போது (மது விற்பனையைப் முதன்மையாக கொண்டு) காணும் வளர்ச்சி, அது ஏற்படுத்தும் - சமுதாயத் தாக்கங்களால் (குடி போதைக்கு அடிமை, இலவசங்களுக்கு அடிமை) நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதில் நியாயமான சந்தேகங்கள் உள்ளன. இப்போக்கில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து - அக்கறையுள்ள கட்சிகளும், பொது நல அமைப்புகளும் - தமிழக பொருளாதாரத்தை போதைக்கு அடிமையாகியுள்ள நிலையில் இருந்து, தெளிவான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Previous EditorialNext Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மது விற்பனையும், தமிழக பொ...

இக்கால சூழ்நிலைக்கு ஏற்ற, ஏற்க வேண்டிய ஓர் அருமையான தலையங்கம்...!

எவன் எக்கேடு கெட்டுக் குட்டிச் சுவாராப் போனா என்ன?எனக்குத் தேவை வருமானம் தான் எனும் மனோபாவத்தில் (குடி)மக்களை சீரழித்து வரும் அரசாங்கம் வருமானம் ஈட்ட கண்டுபிடிச்சா கருமாந்திரவழிதான் டாஸ்மாக். ஆக எது எதுக்கெல்லாமோ குஜராத்தை உதாரணம்காட்டவும்,அம் மாநில முதல்வரைக் குடும்ப நண்பனாகவும் ஏற்று செயல்படும் அம்மா...! ஏழைப் பெண்களின் அடி வயிறு பற்றி எரியுது,அவர் தம் கணவனின் உழைப்பின் ஊதியத்தை ஒரேடியா உரிஞ்சும் நாசமாப் போன ... டாஸ்மாக் ஊத்துற தண்ணியிலே இன்னும் அதிகமா பத்திக்கிட்டு எரியுது?

Administrator: Comment edited


posted by: ஹிஜாஸ் மைந்தன். (????? ?????.) on 01 June 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20469

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதுவிலக்கை ஆதரிக்கிறது என்பதனை மறந்து விட வேண்டாம்..!

மிகவும் உண்மையான நடப்புகளை விவரித்துள்ளீர்கள் இன்று இளைய சமுதாயம் மதுவின் பிடியில் சிக்கி அதில் இருந்து மீண்டு வர வழியில்லாமல் சிதைகிறது... திகைக்கிறது...! அதை பற்றி அரசுக்கு கவலை இல்லை...! அவர்களுக்கு தேவை மதுவின் மூலம் பணம் ஒன்றே..

தமிழகத்தைப் பொறுத்தவரை மதுவிலக்கை - பெரிய கட்சிகளில் - பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே ஆதரிக்கிறது என்று சொல்வது சரி இல்லை... தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான எங்கள் அண்ணன் வீர தமிழன் தொல். திருமாவளவன் M P அவர்களின் தலைமையின் கீழ் செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதுவிலக்கை ஆதரிக்கிறது என்பதனை மறந்து விட வேண்டாம்..! என இந்த கருத்தின் மூலம் தெரியபடுத்துகிறேன்..

மதுவிலக்கை ஆதரிப்போம்...! மனித நேயத்தை காப்போம்..!

நட்புடன் - தொல். திருமா வழி தமிழன் - முத்து இஸ்மாயில். உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.


posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( ????? - 97152 25227) on 01 June 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20470

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மது விற்பனையும், தமிழக பொ...

எவ்வளவு வருமானம் கிடைத்தாலும் சாமான்ய மக்களை பாதிக்கும் மதுவை குடித்து மாள naan ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அவர் மரணித்தபிறகு அவருடைய மண்ணறையில் அவருடைய வாக்குறுதியையும் சேர்த்து புதைத்தார் அவரது வழி நடக்கும் அன்பு தம்பி கலைஞர் கருணாநிதி அவர்கள்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாள் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு அற்புதமான வசனத்துடன் மதுவிலக்குக்கு விடைகொடுத்தார் அவர்.

அதன்பிறகு புரட்சி தலைவர் அவர்களை மதுவின் தீமைகள் பற்றி மக்களுக்கு விளக்கும்படி சொன்னார். புரட்சி தலைவர் முதலமைச்சர் ஆன பிறகும் மது ஒழியவில்லை. புரட்சி தலைவி ஆட்சி அமைந்தபிறகு மது இன்னும் விசுவரூபம் அடைந்து இன்று 20000 கோடி ரூபாய் வருமானம் வரும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இல்லை இல்லை அண்ணா நாமம் உயர்ந்துள்ளது

.இன்னும் லாட்டரி சீட்டு, விபச்சாரம் விடுதிகள் திறந்து அரசே நடத்தினால் இந்த தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை எல்லா பற்றாக்குறையும் நீங்கி உபரி மாநிலமாக, இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே முன்மாதிரி மாநிலமாக திகழலாம். எல்லா நாட்டு மக்களும் இங்கு வந்து விபச்சாரம் செய்ய, மது அருந்த, கொள்ளை அடிக்க கொலை செய்ய நல்ல வசதிகள் நிறைந்த மாநிலமாக மாறலாம். அண்ணா அவர்கள் பெயரும் புரட்சி தலைவர் அவர்கள் பெயரும் கொடிகட்டி பறக்க புரட்சி தலைவியின் ஆட்சியும் பல்லாண்டுகள் தொடர்ந்து நீடித்து நிலைபெறும்.

இதயம் துடிக்கிறது,இரத்தம் கொதிக்கிறது. இப்படி அரசு இருந்தால் கொலை கொள்ளைகளைபற்றி நாம் என்ன சொல்ல முடியும். அரசு எவ்வழி குடிகள் அவ்வழி.. இறைவன்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.


posted by: mackie noohuthambi (kayalpatnam) on 01 June 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20471

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மது விற்பனையும், தமிழக பொ...

ஹீ .... ஹீ ... ஈ ...எஹ ஹீஹ்ஹ்இ... ஹீ ! !! வேறொன்றும் இல்லே .. அடக்க முடியாத சிரிப்புத்தான் வருது .நாங்கள் 5,6 வது படிக்கிற காலத்தில் சரித்திர பாடத்தில் (முஸ்லிம்களின் முகலாய ஆட்சியான ) துக்ளக் அரசரின் ஆட்சி காலத்தில் செய்த சில நல்ல திட்டங்களை கேலியாக வர்ணித்த காபிர் சரித்திர ஆராட்சியாளர்கள் இப்ப இருந்தால் இன்று ஆளும் ஆட்சிகளை பார்த்தால் செய்த தவறுகளுக்கு தற்கொலையே பண்ணிக் கொள்ளுவாங்க

ஏனெனில், மது பாவனைக்கு அனுமதி வழங்கிவிட்டு, அதால் ஏற்படும் உயிர்கொல்லி வியாதி களுக்கு சுகாதார சேவை என்ற பெயரில் , ட்டி. பி ஹாஸ்பிட்டல் , வெனறல் டிசீஸ், கேன்சர்,கண்நோய் ஆஸ்பத்திரிகள் எலும்பு முறிவு (குடித்து விட்டு வாகனம் ஒட்டி ஆக்சிடென்ட் களால் வருபவை) மற்றும் குடியினால் குடும்பம் நடத்தி அங்க ஹீன குழந்தை பெற்று அவற்றிற்கு விமோசன வைத்திய ஆஸ்பத்திரி,இன்னும் எத்தனை வகை ஆஸ்பத்திரி களுக்கெல்லாம் ஏற்படும் செலவுகளை உண்மையான புள்ளி விவரம் எடுத்துப்பார்த்தால் இருபதாய்இ ரம் கோடியல்ல முப்பது – நாற்பது ஆயிரம் கே.க்கு மேலேயே செலவு வரும். மது விலக்குக்கு செலவும் இதுக்குள்ளேயே தான் இருக்கும்.

இப்ப சொல்லுங்கள். துக்ளக் ஆட்சி பைத்தியகார ஆட்சியா? அல்லது இப்பவுள்ள ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் பைத்தியகார . ஆட்சியா?

மேலும் நமது மர்ஹும் மு.க. செயிது இபுராஹிம் (ரஹ்) அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்: தலைப்பா கட்டுவது சுன்னத்து தான் அதற்காக வேட்டியைக களஞ்சு கட்டுறாங்களே? என்று அதுபோல்தான் இருக்குது இந்த டாஸ்மாக்.மது வியாபாரம் .கர்ம்ம்....கர்ம்ம் நாட்டின் தலைவிதி.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: 5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அது மட்டுமா ? நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.:

80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Volume :1 Book :3
80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Volume :1 Book :3 ந் 459. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'பகரா' அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள். Volume :1 Book :8

மேற் சொன்னவை யாவும் புகாரி கிதாபில் உள்ளவை.


posted by: T,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 28085244) on 01 June 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20472

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மது விற்பனையும், தமிழக பொ...

தனி நபர் வருமானமாக இருக்கட்டும் அல்லது ஒரு நாட்டின் வருமானமாக இருக்கட்டும் அது நேர்மையான பிறருக்கு துன்பம் விளைவிக்காத வகையில் ஈட்டவேண்டும் . ஒரு பக்கம் குடி குடியை கெடுக்கும் என கூறிக்கொண்டு மறுபுறம் வருமானத்துக்காக மது விற்பது எவ்வகையில் நியாயம் ? எத்தனை குடிகளை அழித்து பொருளாதார வளர்ச்சி காண்பது ஒரு வளர்ச்சியா? மது விற்பனை மூலம் பெரும் பணத்தில் நாம் அரசு சலுகைகள் பெறுவது ஹலாலா ? ஹராமா?


posted by: Meera Sahib (Kayalpatnam) on 01 June 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20473

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved