Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:49:27 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 72
#KOTWEM72
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 2, 2013
ஓடிப்போதல்! என்னதான் தீர்வு?

இந்த பக்கம் 4189 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

-- செல் பேசி , இணைய தளம் மூலம் முறையற்ற தொடர்புகள்
-- பள்ளிகூடத்திற்கும் கல்லூரிக்கும் சென்ற வயதிற்கு வந்த பெண் பிள்ளையை காணோம்.
-- வீட்டில் இருந்த குமரிப்பெண்கள் மாயம்
-- கடற்கரையில் கள்ள உறவு ஜோடிகள்

என்ற செய்திகள் நம் செவிகளையும் இதயங்களையும் தாக்கிக்கொண்டே இருக்கின்றது.

முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவைகள் இன்று தினம் தினம் பெருகிக்கொண்டே வருகின்றது. கால் நடைகள் காணாமல் போனால் நமக்கு ஏற்படும் சலனம் கூட ஊரில் பிறர் வீட்டைச்சார்ந்த வயதிற்கு வந்த பிள்ளைகள் ஓடிப்போகும்போது ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் கூட அந்த உணர்வானது தற்காலிகமானதாக மட்டுமே இருக்கின்றது. இதில் குற்றவாளிகள் யார் ?

பழியை பிறர் மீது சுமத்தி எளிதாக தமது கடமையிலிருந்து தப்ப முயற்சிப்பதும் ஒரு வகையான குற்றம்தான். இந்த ஒழுக்க சீர்கேட்டிற்கு சம்பந்தபட்ட பிள்ளைகளை மட்டும் பழி சுமத்துவது பிரச்சினையை தீர்க்க உதவாது. குழந்தைகளின் முதல் உலகமாக ஆசானாக கல்விக்கூடமாக திகழ்வது அதன் பெற்றோர்கள்தான். அவர்களின் இரண்டாம் பெற்றோர் பள்ளிக்கூடத்து நிர்வாகிகளும் , ஆசிரியர்களும் ஆவார்கள்.
இவர்கள் இருவரிடத்தில்தான் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தையும் , அறிவையும் உலகத்தையும் சுருக்கமாக சொல்வதானால் மொத்த வாழ்வைப்பற்றிய அறிமுகத்தையும் பெறுகின்றனர்.

நமதூரைப்பொறுத்த வரை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்விக்கூட நிர்வாகிகளும் கடமையிலும் கண்காணிப்பிலும் தவறும்போதுதான் குழந்தைகளிடம் ஒழுக்க சீர் கேடு துளிர் விடத்தொடங்குகின்றது. இதற்கு அண்மையில் நடந்த இணைய தளம் மற்றும் பள்ளி மாணவி + ஆசிரியை நிகழ்வுகளும் சாட்சி.

முதன்மை பொறுப்பில் இருக்கக்கூடிய பெற்றோரும் ஆசிரியரும் பள்ளி நிர்வாகிகளும் கடமை தவறும்போது உறவினர்கள் மீது அந்த பொறுப்பு சாரும். அவர்களும் தங்கள் கடமையை மறக்கும்போது இந்த நெறிப்படுத்தும் பொறுப்பு ஜமா அத்தையும் , ஆலிம்களையும் சாரும். இவர்கள் எல்லாரும் தங்கள் கடமையிலிருந்து நழுவும்போது அது இறுதியாக பொது நல அமைப்புகள் மீதுதான் விழும். ஆனால் நமதூரைப்பொருத்தவரை மேற் சொன்ன அனைத்து பிரிவினரும் அதாவது ஒட்டு மொத்த சமூகமும் தனது கடமையில் இருந்து தவறியிருக்கின்றது.

ஓடிப்போகும் சம்பவங்கள் ஏதோ ஒரு தனிப்பட்ட வீட்டில் தனியொருத்திக்கு நடப்பதாக நாம் நினைப்பதால்தான் இந்த கடமையை எளிதாக புறக்கணிக்கின்றோம். அடுத்ததாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது பொது தளத்தில் விவாதிப்பதையே ஒரு அவமானமாக கருதும் போக்கும் நம்மிடையே உள்ளது.

முதலில் இந்த எண்ண போக்குகளிலிருந்து நமதூர் மக்கள் விடுபட வேண்டும். தீக்கோழி போல் தலையை மட்டும் மண்ணுக்குள் புதைத்து கொள்வதால் சமூக அவலங்களை உலகத்தின் பார்வையை விட்டும் மறைக்க இயலாது என்கின்ற கசப்பான உண்மையும் நமக்கு புரிய வேண்டும்.

பின்னர் இந்த ஒழுக்க சீர்கேட்டின் ஆணி வேரை கண்டு பிடித்து தீர்க்கும் வகையில் ஜமா அத்துகள் ,ஆலிம்கள் , கல்வி நிறுவனங்கள் , சமூக நல அமைப்புகளின் பிரதி நிதிகளை உள்ளடக்கிய ஒரு அவையில் விவாதங்களும் கலந்தாலோசனைகளும் நடைபெற வேண்டும்.. இப்பிரச்சினைக்கு ஆன்மீகம் & தனி நபர் ஒழுக்கம் , குழந்தை வளர்ப்பு , உளவியல் , மன நலம் , ஆண் பெண் தொடர்பாடல் , பெற்றோர் புறக்கணிப்பு ,வறுமை , உரிய வயதில் திருமண தொடர்புகள் அமையாமை ,பெண் கல்வி , பெண்கள் உரிமை , நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகை , உலக மயமாக்கம் , நுகர்வியம், மத மாற்றம் , ஃபாசிச இயக்கங்களின் செயல்பாடு என பல பக்கங்கள் உண்டு.

இந்த விவாதங்களில் பிரச்சினையை துண்டு துண்டாக பார்க்காமல் மேற்குறிப்பிட்ட பல பக்கங்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாகத்தான் அணுக வேண்டும். அப்போதுதான் தீர்வின் வாசலையாவது பார்க்க முடியும். தவறும் பட்சத்தில் உலகெங்கிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் பெருமையாக நினைவு கூறப்படும் நமதூரின் வரலாற்று பாரம்பரியம் இது போன்ற சிறுமைகளால் மங்கி விடும் சங்கடமும் உண்டு

சீர்திருத்த முயற்சிகள் அவசர கதியில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் ஓடிப்போதலும் தவறான உறவுகளும் தினசரி காலண்டரின் தாளைக்கிழிப்பது போன்று எளிதில் மறக்கக்கூடிய அன்றாட நிகழ்வாகவும் இயல்பான விஷயமாகவும் மாறி விடும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஆசிரியர் எந்த உலகத்தில் இருக்கிறார்?
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 03 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24866

ஆசிரியருக்கு தெரியாதா, "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்லே ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கல்லாமா" என்ற பாடல் ஹிட்டான பாடல். எல்லா பெண்களும் முனுமுனுக்கும் பாடல்.

வெள்ளித்திரையும் சின்னத்திரையும் நமது வீடுகளில் ஆட்சி செய்வதும் நம் உள்ளங்களை ஆட்டி வைப்பதும் அரங்கேறி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. அலைபேசிகளும் மடிக்கணினியும் நம் பெண்கள் மடிகளில் தவழ்ந்து இன்ப ராகம் பாடுகின்றன. ஒரு கிளிக் போதும் அதன் உள்ளே புகுந்து முக நூல் டுவிட்டேர் என்றெல்லாம் தேடினால் கிடைப்பதற்கு அரிய பொக்கிஷங்களாக ஆபாசங்கள் அருவியாக வந்து கொட்டி நமது ஆடைகளை நனைக்கின்ற அசிங்கத்தை யாரிடம் சொல்வது

சரி அவற்றை மூடி விட்டு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் உலமாக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாப்போம் என்று அந்த இணையதளங்களுக்குள் போனால் அங்கு ஒரே குழப்பம். இஸ்லாமிய நெறிகளை, அல்லாஹ் சொன்னதை, நபிகள் வாழ்ந்ததை அவர்கள் வாக்குகளை சரமாரியாக விவாத பொருளாக விவகாரங்களாக ஆக்கி உலமாக்கள் பேசுகிறார்கள். சுன்னத் ஜமாஅத் உலமாக்கள்- தப்லீக் ஜமாஅத் உலமாக்கள்- தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் என்று பலர் பல கோணங்களில் இஸ்லாத்தை விளக்குகிறார்கள். சாமான்யர்கள் திகைத்து நிற்கிறார்கள்.

விஷயம் இப்படி இருக்க ஓடிப்போன கதையை யாரிடம் சொல்ல, இங்கு உலமாக்கள் சபையுமில்லை, ஷரீஅத் கோர்ட்டும் இல்லை, உலமாக்கள் ஒற்றுமையும் இல்லை ஊர் ஒற்றுமையும் இல்லை. குடும்பங்களில் மட்டு எப்படி ஒற்றுமை வரும்.

கல்லூரி செல்லும் இளம் பெண்களை சொல்வதா, கந்தூரி தர்காக்கள் என்று அலை அலையாய் ஹதீத்கள் கேட்க அங்கே நடக்கும் பாட்டு கச்சேரியை கேட்க செல்லும் பெண்கள் கூட்டத்தை சொல்வதா, பெண்ணுரிமை, வரதட்சணை கொடுமை, இட ஒதுக்கீடு என்று தெருவில் இறங்கி போராட பெண்களுக்கு அழைப்பு விடும் அமைப்புகளை சொல்வதா? கொலை கொள்ளை தற்கொலை பாலியல் பலாத்காரம் என்று தினம் நடக்கும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கும் அரசுகளை சொல்வதா? வேதனைகளை வெளியிடும் கட்டுரை ஆசிரியர் இதற்கு வேலிஇடும் ஒரு மந்திரத்தை சொல்லி தரவேண்டாமா? சிக்கலான பிரச்சினை.

நமதூரில் இப்படி ஒரு சம்பவம் நடக்க அதை யாரோ இரண்டு புண்ணியவான்கள் தட்டி கேட்க போனபோது அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட அநியாயமும் நடந்ததாக அறிந்தேன். பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை விதிப்பதற்கே நீதி மன்றங்கள் மாதங்கள் தவணை கேட்கின்றன. மனம் வேதனைபடுகிறது.

ஓடிப்போன செய்தி கேட்டால் அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது, யாரை அணுகுவது என்ன செய்வது என்று புரியாமல் பெற்றோர் தடுமாறுகிறார்கள். உலமாக்கள் சபை இல்லை, ஷரீஅத் கோர்ட் இல்லை, உலமாக்கள் இடையே ஒற்றுமை இல்லை. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் வேறு வழி தெரியவில்லை.

ஆனாலும் ஆசிரியரின் உணர்வுகளை புரிந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இளைஞர் இதற்கு களம் அமைக்கவேண்டும். புதிய தலைமுறைகள் இதற்கு வியூகம் வகுக்கவேடும் பெரியவர்கள் இதற்கு பாதை அமைக்க வேண்டும் இதயங்கள் ஒன்று பட வேண்டும். இதற்கு ஒரு தனி இயக்கம் yerpaduthi செயலாற்ற இளைஞர்களே வாருங்கள். நமக்கு அல்லாஹ் துணைவருவான்.லா தவ்பீக இல்லா பில்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உணவு ஹலாலாக இருந்தால்...
posted by: N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) on 03 January 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24867

சகோதரர் சாளை பஷீர் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கட்டுரையை படிக்கும்பொழுது மனம் வேதனை அடைகிறது.

இதற்கு தீர்வு காண்பது என்பது மக்களின் நடைமுறை வாழ்க்கையை திருத்திக்கொண்டால் மட்டுமே சாத்தியப்படும் அதல்லாது தீர்வு இல்லை.

--------------------------------

“ஹயா” என்னும் வெட்கம் மிகுதமானவர்களிடம் இல்லை. மார்க்கம் போதிக்கிறபடி வெட்கத்தை பேணிக் கடைப்பிடித்தோமானால் ஆணாயினும் சரி , பெண்ணாயினும் சரி ஓடிப்போகிறதற்கோ!, ஒழிந்து நடப்பதற்கோ!! சந்தர்ப்பம் கிடைக்காது

ஆடைகள் அணிவதிலே ஒழுக்கத்தை, வரையறையைப் பேணினால் , ஆபத்துக்களும், அகம்பாவமும் ஏற்படாது.

-----------------------------------

பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக நம்மூரைப் பொறுத்தவரை தாய்மார்கள் என்றாலும் தந்தையும் பிள்ளைகளை வளர்ப்பதிலே மிகவும் கண்டிப்புடன் செயல்பட வேண்டும்.

எங்க பிள்ளை அப்படியெல்லாம் இல்லை – நாங்கள் அப்படி ஒன்றும் மோசமாக வளர்க்கவில்லை என்ற பழையக்காலத்து பல்லவியை பாடாமல் கவனத்துடன் வளர்க்க வேண்டும்.

பிள்ளகளானாலும் சரி , பெரியவர்களானாலும் சரி யாரும் கெட்டுப்போவதற்கு பாரம்பரிய குடும்ப செயல்களோ அல்லது வளர்ப்பு மட்டுமோ காரணம் அல்ல.

சேர்க்கையும் , சந்தர்ப்ப சூழ்நிலையுமே காரணமாக அமையும் என்பதை மறந்திடலாகாது.

----------------------------------------

எல்லாவற்றுக்கும் மேலாக உண்ணும் உணவு ஹலாலாக (நேர்மையான வழியில்) இருந்தால் எந்த ஒரு மானக்கேடான செயலும் ஏற்படாது.

ஆகவே நடைமுறை வாழ்க்கையை நேர்வழிப்படுத்த முயற்சித்து அதன்படி நடக்க வல்ல அல்லாஹ்! நம் மக்களுக்கு ஹிதாயத்தை தந்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஓடிப்போதல்! மார்க்கம் ஒன்று தான் தீர்வு-1
posted by: Zainul Abdeen (DUBAI) on 03 January 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24869

எழுத்தாளர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படையாகவும் மிக தெளிவாகவும் எடுதுரைதுள்ளார்.

ஆம் ! ஓடிபோதல் என்ற இந்த ஒழுக்க சீர்கேட்டிற்கு சம்பந்தபட்ட பிள்ளைகளை மட்டும் பழி சுமத்த முடியாது அவர்களின் போற்றோர்களும் இதற்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருகின்றார்கள் என்று சொன்னால் மிகையாகது. இந்த கேவலமான செயல் அந்தந்த குடும்பத்துக்கு மட்டும் இழி செயலாக அமையாது மாறாக இந்த ஊருக்கும் ஏன் இந்த சமுதயதுக்குமே ஒரு நீங்காத கரும்புள்ளியாக அமைந்துவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதை பற்றி பொது மேடைகளில், இணையதளங்களில் கலந்துரையாடி தீர்வு காண்பது தவறன்றோ ???

இதை தடுப்பதற்கான பொறுப்பு ஜமாஅத் பெரியவர்கள், ஊர் நலவிரும்பிகள் என்று அனைவர்க்கும் மேலாக பிள்ளைகளின் பெற்றோர்களுக்கே சாரும்.

ஓடிப்போதல் என்ற இந்த கேவலமான செயல்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம் , எனக்கு உதித்த சில,

1. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் போனில் தங்கள் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது.

7. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது..

இப்படி பல பல என்று சொல்லிகொண்டே போகலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஓடிப்போதல்! மார்க்கம் ஒன்று தான் தீர்வு-1
posted by: Zainul Abdeen (DUBAI) on 03 January 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24870

தொடர்ச்சி..,,

நமது பெண்களை இதிலிருந்து காப்பாற்ற இஸ்லாம் போதித்ததை அன்றி வேறொன்றும் இல்லை.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம் இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

நம்மதூரை பொறுத்தவரை இந்த சீர்கெடுக்கு முக்கிய காரணமாக இருப்பது செல் பேசி (Mobile phone ) என்று சொன்னால் மிகையாகது. wrong call ல் தொடங்கி, missed call ல் தொடர்ந்து, முறையற்ற, நாகரீகமற்ற உரையாடலில் வந்து முடியும்.

தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது,அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற நாகரீகமற்ற , ஒழுக்க கேடான பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

எழுத்தாளர் சொன்னதை போன்று ஊரு பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இதற்கு முற்றுபுள்ளி வைக்க முன்வர வேண்டும். அவர்களும்தான் என்ன செய்வார்கள் , பெற்றோர்களுக்கு அடங்காத பிள்ளைகள் எப்படி ஊருக்கு அடங்கும்.

இப்படிதான் ஒரு முறை சில பள்ளி மாணவர்கள் தங்களின் இரு சக்கர வாகனத்தை வைத்து கொண்டு sea customs road (YUF ) அருகில் தார் மாறாக ஓட்டி (பெண்களை கவரும் எண்ணத்தில்) பந்தா காட்டி வந்தனர் இதை தடுக்க முற்பட்ட அந்த தெரு சமுதாய ஆர்வலர் ஒருவரை ஆள் வைத்து அடித்ததை நாம் மறந்திருக்க மாட்டோம்.

ஒழுக்கங்களையும், நற்பண்புகளையும் கற்று கொடுக்க வேண்டிய பள்ளி கூடங்களே , சினிமா படங்களையும், பாடல்களையும் பட்டி மன்றம் என்ற பெயரில் ஊக்குவிகின்றன. அதை எதிர்த்து கண்டனம் தெரிவித்தும் அதற்கு இன்றுவரை மன்னிப்பும் கேட்ட தாக தெரியவில்லை.

இதற்கெல்லாம் ஒரே வழி மார்க்க கல்வி மட்டும் தான். மார்க்கத்தை பற்றி அடிபடையாவது தெரிந்து இருக்க வேண்டும். வாரம் இருமுறை நடக்கும் மார்க்க கல்வி கூடங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி இந்த சீர்கேடில்லிருந்து காப்பற்றி நம் பிள்ளைகளை நன் மக்களாக்கி ரசூலே கரீம் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நாமும் நம் மக்களும் நடந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிவானாக ... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பெற்றோர்- பிள்ளை கலந்துரையாடல்
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 03 January 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24872

குழந்தைகளுக்கு மிக சிறந்த நண்பராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது முழு நம்பிக்கை வரும் வகையில் தாய் தந்தை நடக்க வேண்டும்

"என் பிள்ளைகள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம்", "அடிக்கடி என் பெண்ணிடம் பேசிக்கொண்டுதானே இருக்கிறேன்" என்று சொல்பவர்கள், தாங்கள் என்ன லெவெலில் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். "சாபிட்டாயா", "எத்தனை மார்க் எடுத்திருக்கிறாய்?", "உனக்கு என்ன வேண்டும்?" , "நான் அனுப்பிய பொருள் நல்ல இருக்கா?" என்பதெல்லாம் CLICHE, LOOKING FOR FACTS லெவெலில் உள்ள உரையாடல்

இவைகளையும் தாண்டி, நம் பிள்ளைகளின் ஆசைகள், ஐடியாக்கள், உணர்வுகள் (exchanging ideas, thoughts and feelings, Empathy) பற்றிய கலந்துரையாடல்கள் வேண்டும். அவர்கள் எதனை சொன்னாலும், உடனே அதனை குறை கூறுதல், தட்டி கழித்தல், "முட்டாள்தனமானது" போன்ற வார்த்தைகள் - இவைகளை எல்லாம் பெற்றோர் நிறுத்த வேண்டும். உங்களிடம் பரிவு, பாசம், புரிந்துணர்வு கிடைக்காமல் வேறு எங்கோ உங்கள் மகனும் மகளும் அவைகளை தேடுகிறார்கள்

நீங்கள் குரான் தர்ஜுமா படிக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடக்கின்றீர்களா? நீங்கள் நல்ல, சாலிஹான நண்பர்களை வைத்திருக்கின்றீர்களா? உங்கள் வீட்டில் ஹலாலான பொழுபோக்கு / வீடியோ (YUSUF ISLAM, ZAIN BHIKA, etc.) உள்ளதா?

இவைகளை சரிசெய்யாமல் செல் போன் மற்றும் லேப்டாப் , ஆலிம்கள், சமூக அமைப்புகள் மீது எவ்வளவு பழி போட்டாலும் அது பிரச்சனையை தீர்க்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. விழிப்புணர்வு & பாரேன்டிங் !!
posted by: Salai.Mohamed Mohideen (USA) on 04 January 2013
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 24885

நல்லதொரு கட்டுரை. இவைகளை பளிச்சென்று பொட்டில் அறைந்தாற்போல நம் பசீர் காக்காவால் மட்டும்தான் நமக்கு உணர வைக்க முடியும். அவர் வைத்த புள்ளிக்கு எனக்கு தெரிந்த கோலம் (தீர்வுகள்).

இதற்கு ஒட்டுமொத்த சமுதாயமுமே பொறுப்பு. இன்றுவரை இதனை ஒரு தனிமனித / குடும்ப பிரச்சனையாகவே கருதுகின்றோம். ஆரம்பத்திலேயே இதனை ஒரு சமுதாய பிரச்சனையாக அணுகி... பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்து, மூல காரணத்தை கண்டறிந்து அதனை களைவதற்கான - தடுப்பதற்க்கான ஒரு கூட்டு முயற்சியை எடுத்திருப் போமேயானால் இன்றைக்கு இந்தளவுக்கு புலம்பி கொண்டிருக்க மாட்டோம்.

இக்காலகட்டத்திலும் கூட இது போன்ற அவலங்களை சமூக அக்கறையுடன் ஒரு விவாத தளத்துக்குள் கொண்டுவந்து வெளிப்படையாக சீர்படுத்த தயங்கு கின்றோம். காலம் ஒன்றும் கடந்து விடவில்லை... முயற்சி எடுப்போம் சமூக மாற்றத்தை உருவாக்குவோம்.

1. முதலில் 'அவ / அவர் மகள் ஓடிப்போயிட்டாலாம்' என்று ஆல்-இந்தியா ரேடியோ போல் செய்தியை ஊரெல்லாம் (காது கண் வைத்து... டமாரம் தட்டாத குறையாக) தம்பட்டம் அடிக்கும் (குறிப்பாக பெண்கள்... மன்னிக்கவும் !) பழக்கத்தை கைவிடுவோம்.

2. டிவி-செல்-இன்டர்நெட் மனித வாழ்வின் அடிப்படை ஒன்றாகிவிட்டது. மேற்கத்திய உலகத்தில் இவைகளனைத்தும் எப்பவோ மிகச்சாதாரண எளிதான ஒன்றாகி விட்டது. நமது நாட்டிலும் - ஊரிலும் அதே கதை தான். இவைகளை தாண்டிதான் நம் சமூகம் முன்னேற வேண்டும் என்பதனை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

LED டிவி, இன்டர்நெட், Iphone என்று அனைத்து நவீனங்களையும் அள்ளித்தந்த நாம்... இந்த நவீன யுகங்கள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த படுகின்றது & parental control tools செட் பண்ணி தவறாக பயன்படுத்துவதை எப்படி தடுப்பது என்ற அடிப்படை அறிவை (educate ) - விழிப்புணர்வை (awareness ) நம்மில் எத்தனை பேர் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லி தந்திருக்கின்றோம்... ?

நவீனங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க - கறாராக கண்காணிக்க ... ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான விழிப்புணர்வை & கலியுகத்தில் பிள்ளை வளர்ப்பு (parenting) பொது நிகழ்ச்சிகளை அவ்வப்போது சமூக அமைப்புகள் - காயல் நல மன்றங்கள் நமதூரில் நடத்தினால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை சமூக விசயங்களில் நமதூர் காணும் என்பது மட்டும் நிச்சயம்.

பெற்றோர்கள் - குடும்ப பெரியவர்கள் மட்டும் விழிப்புணர்வை பெற்று விட்டால்... சமூக அவலங்களின் எண்ணிக்கை பாதியாகி விடும். மீதி பாதியை ஊர் அமைப்பு - ஆர்வலர்கள் கொண்டு சரி படுத்தலாம்.

3. இது ஒரு சென்சிட்டிவான ஊர் - சமூக பிரச்சனை. இதனை ஒரு வலுவான 'ஊர் அமைப்பை' கொண்டு தான் சரிபடுத்த இயலும். இது போன்ற அனைத்து சமூக அவலங்களையும் துணிவுடன் எதிர்கொள்வதற்கு (சமூக ஆர்வலர்கள் - இளைகர் பட்டாளம்) களத்துக்குள் நுழைந்து விட்டார்கள். சமீபத்திய போராட்ட களங்களே இதற்கு சாட்சி.

இவர்களை போன்றோருக்கு (அடுத்த தலைமுறையினருக்கு) கண்ணியமிக்க நம் பெரியவர்கள் வழிவிட்டு - முன்னிலைபடுத்தி வழிநடத்துவார்களானால்... நல்ல பல சமூக மாற்றங்களை காண இயலும். நம் பேரவை வலிமை படுத்த - சீரமைக்க படவேண்டும். அப்படி ஒருவேளை நடந்து விட்டால் இவ்விடயத்தில் அல்லது இது போன்ற பொது பிரச்சனைகளில் நாம் பாதி கடல் தாண்டி விடலாம்.

4. கடைசியாக நம் கை விட்டு போன சகோதர- சகோதரிகளின் (10 samples - Confidential ) பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசி இச்சமூக அவலத்திற்கான உண்மையான நேரடி - மறைமுக காரணங்களை (Root cause ) ஊர் அமைப்பினர் கண்டறிந்து அதனை எப்படி தடுப்பது அல்லது எப்படி மக்களை பாதுகாப்பது என்று எல்லோருக்கும் கூறுங்கள்.

5. தவறான முடிவினால் தன் வாழ்வை கனவுகளை கயவர்களிடம் தொலைத்து நம்பி ஏமாந்த பலரின் கடந்த கால நிகழ்வுகளை நிதர்சனங்களை பகிர்ந்து பருவ வயதினரை விழிப்புணர்வு செய்யுங்கள்.

6. பருவ வயதினருக்கான மாதமொருமுறை 'ஹலக்கா - தர்பியா' க்கள் ஒவ்வொரு பெண்கள் தைக்காவிலும் - பொது இடங்களில் நடத்தலாம்.

7. அசர் நேரங்களில் வெட்டியாக எதையாவது நண்பர்களிடம் (பெற்றோர்கள்) பேசுவதை விட, பிள்ளைகளின் எதிர்காலம், படிப்பு, நடவடிக்கைகள் பருவ மாற்றங்கள் போன்றைவைகளை டிஸ்கஸ் பண்ணி எண்ணங்களை - அறிவை பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.

சக மனிதனுக்கு ஏற்படும் சமூக அவலங்களை வேடிக்கை பார்க்கும் கைகொட்டி சிரிக்கும் புறம் பேசித்திரியும் அற்ப மனிதர்களாய் காலத்தை தள்ளாமல், 'தான்.. தன் குடும்ப பாதுகாப்பு மட்டுமே பெரிது' என்ற குறுகிய வட்டத்துக்குள் (சுயநலம்) அடைந்து கொள்ளாமல்... சமூக அக்கறையுடன் ஒன்று கூடி தேரிழுப்போம். சமூக அவலம் துடைப்போம் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: abubacker (dammam) on 06 January 2013
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24927

இது போல் இன்னும் நிறைய ஆலோசனைகளை சமூகத்திற்கு பலரால் வழங்கப்பட வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கல்வி மட்டும்தான் வழி
posted by: M Sajith (Dubai) on 13 January 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25009

இது ஏதோ பெண்களுக்கான பிரத்தியோகப் பிரச்சனையாகத்தான் சமூகத்தில் கருதப்படுகிறது.. கருத்து பதிந்த பலரும் மொபைல் காரணம் லேப்டாப் காரணம் என்றெல்லாம் விவாதித்து இருப்பது எதோ இவ்வளவு காலம் சந்தர்ப்பம் இல்லாததால் ஊர் உருப்படியாக இருந்தது என்பது போல ஒரு கருத்தை உருவாக்குகிறது...

விஞ்சானமும், தகவல் சாதனக்களும் சராரரிமக்களின் கேள்வி / கல்வி வளர்சியும், ஒரு சிலரை நம்பித்தான் வாழவேண்டும் என்ற சூழ்நிலைகள் இல்லாமல் போனதும் - நிதர்சனம். நாட்டாமைகளும் ஊர்கட்டுப்பாடுகளும் 'தள்ளி வைப்பதும்' எல்லாம் மலையேறிவிட்டது...

உலமாக்கள் சபையும், தற்காலிக பத்வாக்களும் இல்லாத கட்டுப்பாட்டை ஒன்றும் கொண்டுவந்துவிடவும் முடியாது...ஆலிம்களுக்குள் ஒற்றுமை எந்தகாலத்தில் இருந்தது புதிதாக வர...

நவீனப்பிரச்சினைகளுக்கு பரிகாரம் கல்வி ஒன்றுதான்.!! சரியையும் தவறைவும் ஆய்வு செய்து பிறிந்துணரும் கல்வி...

இதையும் மார்க்ககல்வி உலககல்வி என்று தமது வசதிக்காக - தன் பாண்டித்துவ பெருமை பேசிக்கொள்ள பங்குபோட்டு வைத்தன் விளைவு - சரி தவறை விவாதிக்கவிடாமல் சமுகத்தை பொத்திவைத்திருக்கிறது.

ஒரு காலத்தில் பள்ளி சதுக்கைகளும் சங்கங்களும், பெண்கள் தைக்காக்களும் ஒரே பொழுதுபோக்காக இருந்திருக்கலாம் ஆனால் இன்றோ நல்ல பொழுதுகளையும் ஆர்வத்தை சீர்கெடுக்க ஆயிரமாயிரம் வழிகள்...

நம் கண்களை மூடிக்கொள்வதால் உலகம் இருள்வதில்லை என்பதை உண்ருங்கள். இளைய தலைமுறைகளுக்கு சரியையும் தவறையும், அதன் அளவுகோள்களையும் புரியவைக்க முதலில் ' நாலையும் கேட்டு முடிவெடு' என்று சொல்லித்தாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved