Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:30:57 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 52
#KOTWEM52
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 12, 2012
மலிவாகிப் போன மனித உயிர்கள்!!

இந்த பக்கம் 3354 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்தை மறப்பதற்குள் அடுத்ததொரு மனித உயிர் பேரிழப்புகள் சிவகாசி பட்டாசு ஆலையில். லஞ்சம் வாங்கிவிட்டு FC/லைசன்சை தரும் அதிகாரிகளினால், பெருகி வரும் சாலை விபத்துகள், அரசாங்கத்தின் அலட்ச்சியத்தால் இரயில் விபத்துகள், அதிகார வர்க்கத்தால் பட்டாசு கோர விபத்துகளினால் எண்ணிலடங்காத விலை மதிப்பற்ற உயிர்களை நாள்தோறும் இழந்து வருகின்றோம். பத்தாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றிய இப்பட்டாசு தொழில்1960 களில் மேற்கு வங்கம் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு சிவகாசியை தன் தொழில் கூடமாக அமைத்து கொண்டது.

பெரும்பாலான நாடுகளில் பட்டாசு விற்பதற்கும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கும் கடும் நிபந்தனைகள் தடைகள் உள்ளன. கிராமப் புறங்களில் வெடிக்காத வெடிகளை வெடிப்பதற்கும் அனுமதியளித்தாலும் நகர்புறங்களில் வெடிகள் வெடிப்பதற்கு எக்காலத்திலும் அனுமதி கிடையாது. அது சட்டப்படி குற்றமாக அங்கு கருதப்படுகின்றது.

மிக முக்கியமான தினங்களில் (சுதந்திர தினம்) நகர்ப்புறங்களில் உள்ள வெட்ட வெளிகளில் (பூங்கா அல்லது ஏரிகளில்) அந்நகர்ப்புற நிர்வாகமே பொதுமக்கள் பார்வைக்காக சில நிமிடங்கள் தகுந்த பாதுகாப்புடன் பேன்சி ரக பட்டாசுகளை வெடித்து (Fireworks) அத்தினத்தை கொண்டாடுகின்றனர். அதுதான் அந்நாட்டு மக்களுக்கு தெரிந்த பட்டாசு கலாச்சாரம். ஆனால் நமது நாட்டில் பண்டிகைகள் / கொண்டாட்டம் என்றாலே பட்டாசு வெடித்தல் என்று மாறிப் போனது.

மகிழ்ச்சியை தெரிவிப்பதற்கு எத்தனையோ நல்ல பல வழிகள் இருந்தும்… பண்டிகைகளாகட்டும், கிரிக்கெட், தனி மனித வெற்றியாகட்டும், கட்சி மாநாடு ஊர்வலம் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளாகட்டும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் பழக்கம் நம்மிடையே புரையோடி கிடக்கின்றது. ஒரு சில நிமிடங்களில் கரியாகப்போகும் கூத்துக்காக கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கி வெடிக்கப்படுகின்றன.

பெருநாளைக்கும் பட்டாசுக்கும் என்ன சம்பந்தம்? மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றுவதோடு மட்டுமன்றி பட்டாசு வெடித்து வீண்விரயம் செய்பவர்கள் இன்று வரை நமதூரில் நமது சமுதாயத்தில் உள்ளனர். சமீபத்தில் கூட இலங்கையில் உள்ள நுரைச்சோலை என்ற ஊரில் நோன்பு பெருநாளன்று பட்டாசு கொளுத்தி ஒரு பள்ளிக்கூடம் தீக்கிரையானது.

நமதூரில் பெருநாட்களின் போது பட்டாசுகள் மிக ஜோராக விற்கவும் வெடிக்கவும் படுகின்றன. முந்தைய காலங்களில் கூடுதல் ‘கிக்’ (அதிபயங்கர சப்தம்) வேண்டும் என்பதற்காக செரட்டைக்குள் (கொட்டாங்குச்சி) ஆட்டம் பாமை வைத்து வெடிப்பார்கள். பட்டாசு வெடித்ததும் செரட்டை பறந்துபோய் யார் தலையிலாவது விழுந்து மண்டையை ஒடைத்த சம்பவங்களும் உண்டு.

ஆட்டம் பாம், சர வெடிகளை வெடிக்கச் செய்து அந்த தெருவில் உள்ளவர்கள் / வயதானவர்களின் காதுகள் கிழியும் வரை விடுவதில்லை. வெடித்த வெடிகளில் ஒன்றிரண்டு சரியாக வெடிக்காமல் இருந்தால் அது ஏன் வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து பார்க்கையில் ‘டமார்’ என்று வெடித்து கைகளை கை கால் ஊனமானவர்கள் கூட சிலர் உண்டு. ராக்கட் போன்ற வெடிகளால் கூரை வீடுகளை தீக்கிரையாக்கிய நிகழ்வுகளும் உண்டு. பட்டாசுகள் வெடித்து முடித்துப் பார்த்தால் அந்த பகுதி முழுவதும் குப்பைக் காடாக கிடக்கும்.

பேன்சி ரக பட்டாசுகளுக்கு மக்களிடம் ஏற்பட்ட அதிக கிராக்கியால் பட்டாசு / மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட காற்றை மாசுபடுத்தும் வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன.

125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்திருந்தும் நாம் வெடிக்கும் ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி – 142 டெசிபல். இவைகளினால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் காற்று மாசுபாட்டால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றது.

பழைய சிரித்த படத்தையும் சிதறிப்போன உடல்களையும் காண்பித்து பத்திரிக்கைகள் எக்ஸ்க்ளூசிவ் ரிபோர்ட் தருவதும், நமது அரசு இயந்திரங்கள் தூக்கத்திலிருந்து சட்டென்று விழித்துக்கொண்டு ஆழ்ந்த அனுதாபத்தையும் நிவாரண நிதி, விசாரணைக் குழு என்று அறிவித்துவிட்டு மீண்டும் நித்திரைக்குச் சென்றுவிடுவதும் வழமையாகி போன ஒன்றாகி விட்டது.

நூற்று பத்து கோடியில் ஏதோ சில உயிர்கள் இது மாதிரி போய்விட்டால் கணக்கில் தெரியவா போகின்றது என்ற அலட்சிய பொடுபோக்கா? விலை மதிப்பற்ற உயிர்களின் மதிப்பு நிவாரணமாக தரப்படும் சில லட்சங்கள் தானா?

மரணங்கள் துயர சம்பவங்கள் இயற்கையினால் நடந்தால் கூட மனதை தேற்றிக் கொள்ளலாம்... ஆனால் தனி நபரின் விதிமீறல்களால் / பணப் பேராசையால் அரசாங்கத்தின் அஜாக்கிரதையால் தொடர்ந்து மற்றவர்களுடைய வாழ்வை பறிக்கின்றதே அதுதான் மிகக் கொடுமை.

ஒவ்வொரு வருடமும் இது போன்று ஏதாவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பாவி மக்களின் உயிர்களும் கருகி கொண்டு தான் இருக்கிறது. ஐம்பது ரூபாய் ஜேப்படி திருடனுக்கு ஆறு மாதம் ஜெயில். ஆனால் இது போன்று பல உயிர்களை குடிக்கும் பணக்கார முதலைகள் சுதந்திரமாக உலாவிக்கொண்டுத்தான் இருக்கின்றார்கள். இவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனைகள் பாயாதவரை இது போன்ற விபத்துக்களை குறைப்பது மிகக் கடினம்.

ஷேர் மார்க்கெட் சரிவிற்கும், பன்னாட்டு வியாபாரத்திற்கும், பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசுகிற அமைச்சரவைக் கூட்டம் உடனடியாக பொது மக்கள் உயிரிழப்பு விஷயத்திற்கும் அமர்ந்து பேசி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.

வளர்ந்த நாடுகளை போல், ஒரு உயிரிழப்பு ஏற்பட்டால் அதை அரசு கடுமையானதாக கருதி தடுக்க முனைய வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும். என்றைக்கு மனித உயிரின் மதிப்பை நமது அரசாங்கமும் உணருகின்றதோ & பாதுகாப்பு விதி முறைகளை வியாபார சுய நலன்களுக்காக மீறுபவர்களும் உணருகின்றார்களோ கடுமையாக தண்டிக்கப் படுகின்றார்களோ அன்றுதான் இதற்க்கு ஒரு விடிவுகாலம் வரும்.

‘ரிஸ்க் எடுப்பது ரஸ்க் தின்பது மாதிரி’ என்ற டயலாக்குகள் கேட்பதற்க்கும் சொல்வதற்க்கும் வேண்டுமென்றால் இனிமையாக இருக்கலாம் ஆனால் அவைகள் தரும் (உயிர்) ஆபத்துகள் நேரும்வரை!!

பட்டாசைக் கொளுத்துவது பணத்தைக் கொளுத்துவதற்கு சமம் என்றுணர்ந்து பட்டாசுக்கு செலவு செய்யும் பணத்தை பண்டிகைகள் (பெருநாள் / தீபாவளி) தினத்தன்று நம்மைச் சுற்றியுள்ள ஏழை எளியவர்கள், நல்ல உடை / உணவுடன் சந்தோஷமாக நம்மை போன்று அந்நாளை அவர்களும் கொண்டாட செலவு (உதவி) செய்வோம்.

பட்டாசுகளுக்காக காசை கரியாக்காமல் குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், அறிவூட்டும் புத்தகங்களை வாங்கித் தருவதை பழக்கமாக கொள்ள வேண்டும்.

நம்முடைய பொழுது போக்கிற்காக நம் உயிர் மட்டுமன்றி பிற உயிர்களை பதம் பார்க்கும் அதிலும் குறிப்பாக இத்தொழில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த பாதுகாப்பற்ற பட்டாசுக் கலாச்சாரம் எத்தருணத்திலும் தேவையா என்பதனை சிந்திக்கவேண்டும்.

தமிழகத்தில் சில கிராமங்களில் பட்டாசின் நெடியைக் கூட தங்கள் ஊர் பக்கம் நெருங்கக் கூட விடுவதில்லை. அது போன்று பட்டாசு வெடிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக புறக்கணிப்போம்… நமதூரை விட்டு முழுமையாக விரட்டுவோம் !!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Excellent line
posted by: Riyath (HongKong) on 12 September 2012
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 22033

Excellent line and wants to repeat here. It would be great if include what needs to done for not reoccuring similar incident.

பழைய சிரித்த படத்தையும் சிதறிப்போன உடல்களையும் காண்பித்து பத்திரிக்கைகள் எக்ஸ்க்ளூசிவ் ரிபோர்ட் தருவதும், நமது அரசு இயந்திரங்கள் தூக்கத்திலிருந்து சட்டென்று விழித்துக்கொண்டு ஆழ்ந்த அனுதாபத்தையும் நிவாரண நிதி, விசாரணைக் குழு என்று அறிவித்துவிட்டு மீண்டும் நித்திரைக்குச் சென்றுவிடுவதும் வழமையாகி போன ஒன்றாகி விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...பிணமும் பணமும்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 12 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22034

காலத்தின் கட்டாயம் இந்த கட்டுரை. உரக்க சொல்ல வேண்டிய செய்தி.

ஆனால் நன்னெறிகளை அமுல்படுத்த வேண்டிய அரசுகளே இதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து நெய்யூற்றி வளர்க்கும்போது இவற்றை எங்ஙனம் ஒழிக்க முடியும்?

குடி குடியை கெடுக்கும் என்ற விளம்பரம், உள்ளே சென்றால் வகை வகையான மதுபானங்கள் பரிமாறப்படுகிறது. புகைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற விளம்பரம். கடைகளில் கேட்டால், இழுக்கு இழுக்க இறுதி வரை இன்பம் தரும் என்ற இன் சொல்லுடன் விதவிதமான சிகரெட்டுக்கள். இன்னும் விபசார விடுதிகளை இந்த அரசு தொடங்காமலிருக்கிறதே, யாராவது சொல்லவேண்டாமா பம்பாயில் சிவப்பு விளக்கு ஏரியா இதற்கென ஒதுக்கப்பட்டு அதற்கு அரசு அங்கீகாரமும் கொடுக்கப்பட்டு அரசுக்கு வருமானம் அபரிமிதமாக கிடைக்கிறதே, தமிழக அரசு பாராமுகமாக இருக்கிறதே, எத்தனை கோடி வருமான இழப்பு இந்த அரசுக்கு உடனடியாக அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்குண்டான அறிவிப்பு வந்தால் நல்லதே!

இப்படி வருமானத்தை மட்டும் மனதில் கொண்டு இயங்குகின்ற அரசுகள் பட்டாசு தயார் பண்ணுவதை தடை செய்யுமா..கனவு காண்கிறீர்களா...

இஸ்லாத்துக்கும் பட்டாசுக்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள். பெருநாளை விடுங்கள். கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை பைத்து சொல்லி அழைத்து வரப்படுகிறார், அந்த இடத்தில் வெடி போட்டு அழைத்துவருகிறார்கள். வெளியூரில் அல்ல, நமதூரில்தான் இது நடக்கிறது.

வரவே வராது, ஆபத்தே இல்லை என்று மத்திய அரசும் மாநில அரசும் விஞ்ஞானிகளும் உறுதியாக சொன்ன பிறகும் நீதி மன்றம் எல்லா சாதக பாதகங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிய பிறகும் கூடங்குளம் வீதியிலே வந்து போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆலவட்டம்போடும்,அரசியல் மேதாவிகள் வாழும் தமிழகத்தில். பட்டாசு தொழிலில் தினசரி மாண்டுபோகும் தீயில் கருகிபோகும் உயிர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. காரணம் இங்கே கருகி பிணமானால் உயிருக்கு விலையாக 5 லட்சம் கொடுத்து விட்டு அடுத்த வேலையை பார்கிறார்கள். அரசுக்கு கற்பக தருவாக அட்சய பாத்திரமாக , கோடிக்கணக்கில் வருமானம் தரும் பட்டாசு தொழிலை நிறுத்துவதா...மனித உயிருக்கு விலையாக இப்படி சில லட்சங்களை கொடுத்து சமாளிப்பதில் என்ன நஷ்டம் ஏற்படப்போகிறது.

பிணத்தையும் பணமாக்கும் மந்திர சக்தி அரசுகள் கையில் இருக்கும் வரை இந்த மனித உயிர்கள் மலிவாகிவிட்டதை யாரும் தவிர்க்க முடியாது.

குறைந்த பட்சம் நமதூரில் மட்டுமாவது, பிளாஸ்டிக்கை ஒழிக்க முயற்சி எடுத்ததுபோல் இந்த பட்டாசு வெடிகளை தடை செய்ய நகர்மன்றம் முயற்சி செய்யலாம். ஆனால் ஊரில் எல்லா ஜமாஅத்தார்களும் பொது நல நிறுவனங்களும் இதற்கு ஒத்துழைத்து களம் இறங்கவேண்டும். உங்கள் கட்டுரை அதற்கான தலைவாசலை திறந்து விடுமா...

.IT IS A MILLION DOLLAR QUESTION!

சில நேரம் பகல் கனவும் நனவாகும் என்பார்களே....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) on 12 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22044

பிணத்தையும் பணமாக்கும் மந்திர சக்தி அரசுகள் கையில் இருக்கும் வரை இந்த மனித உயிர்கள் மலிவாகிவிட்டதை யாரும் தவிர்க்க முடியாது.

பணத்தைக்கண்டால் பிணமும் வாயைபிளக்கும் . அந்தவகையில் இங்கு பிணத்துக்கு விலை பேசப்படுகிறது .எவ்வளவுதான் அள்ளிக்கொடுதாலும் மனித உய்ருக்கு ஈ டாகுமா ? மனித உயிர் விலை மதிப்பற்றது ..

நம்முடைய பொழுது போக்கிற்காக நம் உயிர் மட்டுமன்றி பிற உயிர்களை பதம் பார்க்கும் பட்டாசுக் கலாச்சாரம்முழுமையாக ,முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டும். மனித உயிர் புனித உயிர் !பட்டாசைக் கொளுத்துவது பணத்தைக் கொளுத்துவதற்கு சமம் என்றுணர்த்தி ,பட்டாசுகளுக்காக காசை கரியாக்கக்கூடாது !

பணத்தின் அருமையையும் ,மனித உய்ரின் மகத்து வத்தையும் மக்களுக்கு புரியும் விதமாக உணர்த்தி ஒரு சக்கண்டு என்ஜாய் மறு சக்கண்டில் நமது உய்ரையை யே பதம் பார்த்து விடும் இல்லையா ?!......மரணங்கள் துயர சம்பவங்கள் இயற்கையினால் நடந்தால் கூட மனதை தேற்றிக் கொள்ளலாம்..... ஆனால் அஜாக்கிரதையால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மனித உயிர் வீண் அநியாயமாக பறிக்கப்படுகிறதே அதுதான் மிகக் கொடுமை...

மனித உயிர்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்பட வேண்டும் .... மனித உயிர்கள் மலிவாகிப் போகாமல் மாண்புடன் காக்க பெற வேண்டும்.

அதைபோன்றே.போதயுடனும் ,போன் பேசிக் கொண்டும் வாகனம் ஓட்டுவதை ஓட்டுனர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் ...படியில் பயணம் நொடியில் மரணம் ...என்பதை யும் மனதில் கொண்டு பயணிகளும் பாது காப்புடன் பயணம் செய்ய வேண்டும் ....ஆகவே ,,,இது போன்று பட்டாசு வெடிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக புறக்கணிப்போம்… நமதூரை விட்டு முழுமையாக விரட்டுவோம் !!என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்றுசிந்திப்போம் ! செயல் படுவோம்............!

மலிவாகிப் போன மனித உயிர்கள்!!என்ற தலைப்பில் அமெரிக்காவில் பணி புரியும், காயல் பூர்விக சமூக ஆர்வலர் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அவர்கள் எழுதிய இந்த மிக அருமையான கட்டுரை யை அனைத்து உள்ளங்களும் படிப்பதோடு படிப்பினையும் பெற வேண்டும் .என ஆசிக்கும் அன்பின் காயலர் என்.எம் .இசட் .அஹ்மத் முஹைதீன் .வஸ்ஸலாம் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved