Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:24:56 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 51
#KOTWEM51
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 7, 2012
குடிநீரும், குழம்பிய மக்களும்!

இந்த பக்கம் 4669 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

குடிநீர் கிடைக்காது அவதிப்படும் மக்களின் ஆதங்கத்தை , கஷ்டத்தை, சிரமத்தை பார்த்ததன் , கேட்டதன் விளைவே இந்த கட்டுரை. மேலும் அல்லாஹ்வின் தண்டனையை நமது மக்கள் அனுபவிக்கக் கூடாது என்பதும் எனது ஆசை - அதனாலேயே திருக்குர்ஆன் மற்றும் ஹதீதை குறிப்பிட்டிருக்கிறேன். எனவே தயவு செய்து எவரேனும் குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பவராக இருந்தால் அதை இந்நிமிடமே நிறுத்தி விடுங்கள் அல்லாஹ்! உங்களுக்கு ரஹ்மத் செய்வான்.

குறிப்பு: குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுவதை நிறுத்துவதற்கான தீர்வு காண்பதற்கு நல்ல கருத்துக்களை எழுதும் வாசகருக்கு ரூபாய் ஓர் ஆயிரம் பரிசு தரப்படும். வஸ்ஸலாம். - கட்டுரை ஆசிரியர்.


இன்று பரவலாக குடிநீர் பஞ்சம் நாடு முழுவதும் இருக்கிறது , அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை அரசும் மேற்கொள்வதில்லை - மக்களும் அதற்கு முறையாக ஒத்துழைப்பதில்லை. நம்ம ஊரைப் பொறுத்தவரை 19 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் இருந்தும் தேவையான அளவுக்கு நமதூருக்கு தண்ணீர் வழங்கப்பட்ட போதும் , முறையான பராமரிப்பு, முறையான விநியோகம் இல்லாத காரணத்தினால் என்றும் குடிநீருக்கு பஞ்சமாகவே இருந்து கொண்டிருக்கிறது. தினமும் எவ்வளவு தண்ணீர் நமதூருக்கு வருகிறது , எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது நகராட்சியில் உள்ளவர்களுக்கு சரியாகத் தெரியாது. அதை தெரிந்து கொண்டு மக்களுக்கு குடிநீரை முறையாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் நகர் மன்றத்திற்கு இருப்பதாக தெரியவில்லை - நகர் மன்றம் வலுவிழந்து கிடக்கின்றது.

ஊரிலே ஏறத்தாழ எண்ணாயிரம் குடிநீர் இணைப்புகள் இருக்கின்றதாக அறியப்படுகிறது. முறையாக இணைப்புகள் பெற்று , அதற்கான கட்டணங்களையும் ஒவ்வொரு மாதமும் செலுத்துபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தண்ணீர் கிடைக்கச் செய்யவேண்டியது நகராட்சி நிர்வாகத்தினுடைய கடமையாகும். அவர்கள் கடமையை செய்ய தவறினால் - அந்த கடமையை தூண்டி செயல்படுத்தச் செய்ய வேண்டியது நகர் மன்றத்தின் பொறுப்பு. நகர் மன்றத்தினர் பெரும்பாலோனோருக்கு அதில் அக்கறை இல்லை அவர்களை தட்டிக்கேட்க மக்களும் தயாராக இல்லை. காரணம் குடிநீர் திறந்து விடக்கூடிய நேரத்தில் மக்களில் பலர் மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்ற சுயநல செயலே.

இப்பொழுது நகரில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது . 4 - 6 நாட்கள் என்ற இடைவெளியில் திறந்துவிடப்பட்ட குடிநீர் இப்பொழுது 8 - 10 நாட்களுக்கொருமுறை திறந்து விடப்படுகிறது என்பது மட்டுமில்லாமல் தண்ணீர் வரும் நேரமும் குறைக்கப்பட்டு விட்டதால் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீர் திறந்து விடக்கூடிய நேரங்களில் நமது பெண்கள் குடங்களுடன் அங்குமிங்குமாக சென்று அலைந்து திரிந்து தண்ணீர் பிடிப்பதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு காலம், நேரம் இல்லை. இரவு, பகல், விடியற்காலை என்று பல நேரங்களிலும் ஒரு முறையின்றி திறந்து விடுவதால் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

மக்களை மேலும் , மேலும் அவதிக்குள்ளாக்குவது மின் மோட்டார் வைத்து குடிநீரை கள்ளத்தனமாக உறிஞ்சும் செயல்தான் - மின் மோட்டார் வைத்து உறிஞ்சாதிருந்தால் ஓரளவு எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஊர் முழுக்க பரவலாக மின் மோட்டார் வைத்து குடிநீரை கள்ளத்தனமாக உறிஞ்சுகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இதை சிலமுறை அடியேன் உணர்ந்திருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும்போது திடீரென வேகமாகவும், அதிகமாகவும் வரத் தொடங்கியது - காரணத்தை ஆராய்ந்தபோது , அப்போதுதான் மின்சாரம் " கட் " ஆனது தெரிய வந்தது. சில சமயம் மின்சாரம் இல்லாத நேரத்தில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள் அப்போதும் தண்ணீர் வேகமாகவும் , அதிகமாகவும் வருகிறதை உணர முடிகிறது.

குடிநீரை மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக உறிஞ்சுவது என்பது ஏதோ அறியாத , தெரியாத நபர்கள் செய்யவில்லை, விவரம் அறிந்தவர்களே செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த ஈனச்செயலை செய்பவர்கள் பணக்காரர் - ஏழை , படித்தவர் - படிக்காதவர் , ஆசிரியர் - மாணவர் , அறிஞர் - அரசியல் வாதி என்று மட்டுமல்லாமல் ஊருக்கு உழைப்பவர்கள் என்றும் பொது நலவாதிகள் என்றும் சொல்லி திரிபவர்களிலும் பலர் இருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரியதாகும்.

இப்படி மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவது தவறல்ல என்று சிலர் நினைக்கின்றனர் அது மிகவும் தவறாகும். ஆரம்ப காலத்தில் சிலபேர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவது கண்டுக்கொள்ளப் படவில்லை. அது படிப்படியாக அதிகரித்து பல டஜன் கணக்கானபோது அது தவறல்ல " தப்பு " என்றே பலரால் சுட்டிக்காட்டப்பட்டது, உணர்த்தப்பட்டது. இதை சிலர் உணர்ந்திருந்தும் மின் மோட்டார் உபயோகித்து குடிநீர் உறிஞ்சுவதை குற்ற உணர்வோடு தொடர்ந்தே செய்து வந்தனர்.

அவர்களுடைய இதயம் (மனசாட்சி) சொன்னது இப்படி செய்வது தப்பு, அடுத்தவருக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தடை பெறுகிறதே என்று - ஆனால் அவர்களுடைய மூளை (குறுகிய புத்தி ) சொன்னது மின் மோட்டார் வைக்காவிட்டால் நமக்கு தண்ணீர் கிடைக்காது , அவர்களுக்கு தேவை என்றால் அவர்களும் மின் மோட்டார் வைத்துக்கொள்ளட்டுமே என்று. ஆக மக்கள் மனசாட்சியை மறந்து குறுகிய புத்திக்கு மதிப்பளித்ததால் இன்று பல நூற்றுக்கணக்கானவர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீரை கள்ளத்தனமாக உறிஞ்சுவது பெருகிவிட்டது. அதன் காரணமாக மற்ற மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

பரவலாக அதிகமானோர் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் அந்த செயல் " ஒக்க சிரித்தால் வெட்கமில்லை " என்ற பழமொழிக்கொப்ப மக்கள் மத்தியில் தவறாக கருதப்படவில்லை. இருந்தபோதிலும் இரக்கம் உள்ளவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் இந்த ஈனச்செயலை செய்ய விரும்புவதில்லை. பல சிரமங்களையும் சகித்துக்கொண்டு , பணம் கொடுத்து வெளியில் தண்ணீர் வாங்கினாலும் வாங்குவோமே தவிர இந்த ஈனத்தனமான செயலை செய்ய மாட்டோம் என்று நம்மிலே பலர் உள்ளனர் - அவர்களை அல்லாஹ்! ஈருலகிலும் மேன்மையாக்கி வைப்பானாக ஆமீன்.

இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவேறி விட்டால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று மக்கள் மனப்பால் குடிக்கின்றனர். இரண்டாவது பைப் லைன் என்ன மூன்றாவது , நான்காவது பைப் லைன் திட்டங்கள் வந்தாலும் பிரச்சனை தீரப்போவதில்லை. முதலில் அடிப்படை செயல்கள் சரியாக இருக்க வேண்டும். இப்பொழுது நமக்கு வருகின்ற தண்ணீர், எவ்வளவு வருகிறது , எப்போது வருகிறது என்ன முறையில் விநியோகிக்கப்படுகிறது என்பது திட்டவட்டமாக புள்ளி விவரத்தோடு யாருக்கும் தெரியாது. மொத்தம் எத்தனை இணைப்புகள் அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி எத்தனை இணைப்புகள் இருக்கிறது என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. மின் மோட்டார் வைத்து குடிநீரை கள்ளத்தனமாக உறிஞ்சுபவர்களை தடுத்து நிறுத்தியபாடில்லை. முதலில் இந்த அடிப்படையான செயல்கள் சரியாக இருந்தால்தான் இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவேற்றபட்டால் பலன் கிடைக்கும். அதல்லாமல் எத்தனை புதிய திட்டங்கள் வந்தாலும் அது பயனளிக்கப் போகிறதில்லை.

இறைவனருளால் இரண்டாவது பைப் லைன் திட்ட வேலைகள் இப்பொழுது தொடங்கினால் அது முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர எப்படியும் இன்னும் 2 வருடங்களை கடந்து விடும். இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவடைந்து உபயோகத்திற்கு வந்தபின் , இப்போது உபயோகத்தில் உள்ள பைப் லைன் ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் - அதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உண்டு - இயற்கையாக எங்கும் நடைபெறுகிற ஒன்றுதான். ஆக ஏதாவது ஒரு விதத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து கொண்டேதான் இருக்கும். காரணம் நகராட்சி நிர்வாகமும் பெரும்பாலான மக்களுடைய மனோபாவமும் சீராக இல்லை.

குடிநீர் ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் சீராக கிடைக்க வேண்டுமென்றால் அவசியம் எல்லா இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்தப்பட வேண்டும். இதை மக்கள் எதிர்த்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி கண்டிப்பாக மீட்டர் பொருத்தியே ஆக வேண்டும். ஏனோ , தானோ என்றில்லாமல் தரம் உயர்ந்த மீட்டர்களை வாங்கி பொறுத்த வேண்டும். அதுவும் நகராட்சி பணத்திலேயே வாங்கிப் பொறுத்தப்பட வேண்டும் அதற்கான செலவு இரண்டு கோடியல்ல மூன்று கோடி ரூபாயானாலும் கூட பாதகமில்லை. மீட்டர் பொருத்திய ஓரிரு வருடத்திலேயே , அந்த தொகையை உபரியாக உபயோகிக்கின்ற தண்ணீர் கட்டணம் மூலம் வசூலித்து விடலாம். இப்படி மீட்டர் பொருத்துவதன் மூலம் அதிகமாக தண்ணீர் பெறக்கூடிய (மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு அருகில் வசிக்கக் கூடிய ) நாங்களும் உபரியான தண்ணீர் கட்டணத்தை கட்டுவோம், மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக தண்ணீரை உறிஞ்சுபவர்களும் அதிக கட்டணம் கட்டுவார்கள் அல்லது தானாகவே மின் மோட்டாரை வைத்து குடிநீரை உறிஞ்சுவதை நிறுத்தி விடுவார்கள்.

பொதுவாக மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி அதை குளிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் உபயோகித்து பழக்கப்பட்டவர்களுக்கு வேறு எந்த தண்ணீரையும் உபயோகிக்க எளிதில் மனம் இடம் தராது. டிவியில் சீரியலை பார்த்து பழக்கபட்டவருக்கு அதை எளிதில் மறக்க முடியுமா? - இல்லை தொடர் புகைப் பழக்கம் உடையவருக்கு புகைப்பதை உடனே நிறுத்தத்தான் முடியுமா?. ஆகவே மின் மோட்டார் வைத்து பழக்கப்பட்டவரும் குடிநீரை அதிகமாக உபயோகித்து , உபரியாக தண்ணீர் கட்டணம் கட்டுவர். தண்ணீர் கிடைக்காமல் அவதிபட்டவர்களும் எளிதில் தண்ணீர் கிடைப்பதால் உபரியாக தண்ணீர் எடுப்பர் . உபரியாக எடுக்கும் தண்ணீருக்கு அதிக பணம் கொடுப்பதில் கவலைப்பட மாட்டார்கள்.

மீட்டர் பொருத்துவது நடைமுறை சாத்தியமில்லை என்று தயவு செய்து சொல்ல வேண்டாம். தரமான மீட்டர்களை வாங்கி வைத்து , தகுதி வாய்ந்த , நேர்மையானவர்கள் மூலம் கண்காணித்தால் நிச்சயம் சாத்தியப்படும். தரம் கெட்டவர்களும் , மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக குடிநீரை உறிஞ்சுபவர்களுமே மீட்டர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்த மீட்டர் முறை இரண்டாவது பைப் லைன் வரும்வரை என்றல்ல அதற்கு பிறகும் சீரான உபயோகத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக குடிநீரை உறிஞ்சுபவர்கள் அடுத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை உறிஞ்சவில்லை அடுத்தவர்களின் குருதியைத்தான் உறிஞ்சுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளட்டும். அரசு அதிகாரிகள் வரும்போது அவர்களின் கண்களை நீங்கள் மறைக்கலாம் அல்லது அவர்களுக்கு நீங்கள் இலஞ்சம் கொடுக்கலாம் ஆனால் இறைவனின் பார்வையிலிருந்து நீங்கள் மறைய இயலாது - இறைவனுக்கு நீங்கள் இலஞ்சமும் கொடுக்க இயலாது என்பதை மறந்து விடாதீர்கள்.

"( தேவைக்கு மேல் ) எஞ்சியுள்ள தண்ணீரை தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால் அதை சுற்றியுள்ள புல் பூண்டுகளை ( மேய விடாமல் கால்நடைகளைத் தடுத்ததாகிவிடும் " என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்ற ஹதீதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹீஹுல் புகாரியில் அறிவிக்கிறார்கள்.

நீர் நிலையின் உரிமையாளர் தம் தேவைக்கு மேல் உள்ள தண்ணீரை தடுத்து வைக்காமல் புல் பூண்டுகளை விளையச்செய்யவும் , கால் நடைகளுக்கும் கொடுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நம்மில் பலர் என்ன செய்கிறார்கள் அடுத்தவர்களுக்கு உரிமையான குழாய் தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்து உபயோகிக்கிறார்கள் - இப்படி அடுத்தவர்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கி எடுக்கப்படும் தண்ணீர் " ஹராமா " இல்லையா என்பதை மக்களே! சிந்தித்துப் பாருங்கள்.

" மனிதனை நீரிலிருந்து படைத்தான் " என்றும், " தண்ணீரின் மூலம் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் உண்டாக்கினோம் " என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

மருத்துவ ரீதியாக பார்த்தால் மனிதனின் உடலின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான் என்கிறது.

போரில் இறப்பவனும் தண்ணீர், தண்ணீர் என்கிறான் - வெயிலில் சுற்றுபவனும் தண்ணீரைத் தேடுகிறான் - ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் கிடப்பவனும் உணர்வு வந்ததும் தண்ணீரைத்தான் முதலில் கேட்கிறான்.

மேலும் நாம் குடிக்கும் தண்ணீர் நேரிடையாக , சிறுநீராக வெளியாவதில்லை , கிட்னிக்கு சென்று கிட்னியை சுத்தம் செய்துவிட்டுதான் சிறுநீராக வெளியேறுகிறது.

மொத்தத்தில் தண்ணீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக, மிக முக்கியானது. அந்த தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மனிதனின் நிலை என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

மனித உயிருக்கு முக்கியம் வாய்ந்த தண்ணீர் நேர்மையான வழியில் பெறப்படாமல் , மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக உறிஞ்ச ப்பட்டதாக இருந்தால் அந்த தண்ணீர் எங்ஙனம் மனிதனுக்கு சுகத்தையும், நிம்மதியான வாழ்வையும் தரும். சிந்திக்கக் கூடிய மக்களே சிந்தியுங்கள். இதுவரை மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியது போகட்டும் இனிமேலாவது அந்த தவறை செய்யாதிருங்கள்.

ஓன்று மட்டும் நிச்சயம் " என்று ஒரு ஹராமான பொருள் உடலின் உள்ளே சென்று விடுகிறதோ அப்பொழுதே அந்த உடலுக்குரியவர் ஹராமான செயல்கள் மீது ஆர்வம் கொண்டு படிப்படியாக ஹலாலானவைகளை மறக்கத் தொடங்குவார் " அதன் காரணமாக அவர்கள் வாழ்விலே பல துயரங்களை அனுபவிக்கின்றனர் - இது பல நபர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்.

சிலர் நினைக்கலாம், " நாம் மட்டுமா குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுகிறோம் இன்னின்ன ஆட்கள் 15 , 20 வருடங்களாக குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சுகிறார்களே அவர்களெல்லாம் கெட்டாபோய் விட்டார்கள் " என்று, மக்களே அப்படி நினைப்பது தவறு. அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், கிருபை உடைவன் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நேரம் வைத்திருக்கிறான் அந்த நேரம் வந்து விட்டால் அதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. அந்த நேரம் வரும் முன்பே நாம் நம்மை திருத்திக்கொண்டு அவனுடைய தண்டனையிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் - குடிநீரால் மக்கள் குழம்பித் திரிய வேண்டாம்.

" நிச்சயமாக ( இஸ்லாம் எனும் ) நேர்வழியின் மீது அவர்கள் உறுதியாயிருந்தால், தாராளமாக ( மழை ) நீரை அவர்களுக்கு நாம் புகட்டுவோம் " என்று அல்லாஹ்! அருள் மறை குர்ஆனிலே கூறுகிறான்.

அதன்படி நேர்வழியின்மீது நாம் அனைவரும் உறுதியாயிருந்து இறைவனின் வாக்குப்படி தாராளமாக நீரை அவன் புறத்திலிருந்து பெறுவோமாக ஆமீன்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Vilack SMA (Nha Be , Vietnam) on 07 September 2012
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21938

குடிநீர் வரும் சமயம் மின்சாரத்தை நிறுத்துவதுதான் ஒரே வழி , சிறந்த வழி . மின்சாரத்தை நிறுத்துவதில் சில வழிமுறை சிக்கல்கள் இருக்கிறது என்று நகராட்சி சொல்கிறது . அரசின் எந்த ஒரு முறைகளை பின்பற்றும்போதும் சில வழிமுறைகள் இருப்பது உண்மைதான் என்றாலும் இந்த இடத்தில் நம் நகராட்சி போர்க்கால நடவடிக்கையில் இறங்க வேண்டும் . பார்க்க வேண்டியவர்களை பார்த்து நம் நிலைமையை சொன்னால் நிச்சயம் விரைவில் தீர்வு கிடைக்கும் . பூகம்பத்தால் , தீ விபத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் வீடின்றி , உணவின்றி தவிக்கும்போது , நிவாரணத்திற்காக அரசின் நடைமுறைகள்படி அமைச்சர் கையெழுத்து போட வேண்டும் , அதிகாரி வரவேண்டும் என்று காத்திருந்தால் முடியுமா ?

அடுத்து எல்லோர் வீட்டிலும் மீட்டர் மற்றும் வாழ்வு பொருத்தப்பட வேண்டும் . மக்கள் குடிநீரை குடிப்பதற்கும் , சமையல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எடுத்துவிட்டு வாழ்வை மூடும் பழக்கம் வரவேண்டும் .

ஒருசில வீடுகளில் மோட்டார் வைத்தும் உறிஞ்சவில்லை . தண்ணீரும் சரியாக வரவில்லை . அவர்கள் அடிபைப் வைத்து தண்ணீர் எடுக்கின்றனர் . இது போன்றவர்கள் வீடுகளுக்கு , அவர்கள் வீட்டிற்கு வரும் குழாய் சரியான மட்டத்தில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .

இறுதியாக , மழை வேண்டி இறைவனிடம் கையேந்துங்கள் . இறைவனின் அருள்மழைதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...தண்ணீர் தண்ணீர் ....
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 07 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21944

சகோதரர் மஹ்மூத் அவர்கள் தனது ஆதங்கத்தை அள்ளிகொட்டிவிட்டீர்கள்.

உலமாக்கள் நிறைந்த ஊர். ஹராம் ஹலால் பற்றி அதிக உபதேசங்கள். வருடத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாட்கள் ஹதீதுகள் இறைநேசசெல்வர்கள் வாழ்ந்து காட்டிய வழிகள் பற்றி நசீஹத்து செய்யப்படும் ஊர். பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள்,மதரசாக்கள்,பொது நல நிறுவனங்கள் நிறைந்து காணப்படும் ஊர். இப்படி பட்ட ஊரில் வாழும் மக்கள் உலகின் பல் வேறு பகுதிகளில் தொழிலில் கொடிகட்டி பறப்பவர்கள் சுபுஹானல்லாஹ்.

இந்த ஊரிலேயே குடி நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பது பாவம் என்று சொல்ல வேண்டுமா, இதை தடுக்க ஒரு ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கவேண்டுமா?

அந்த காலத்தில் அரசனின் சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தபோது அதற்காக ஆசைப்பட்டு கவிதை எழுதிக்கொடுத்ததை தருமி என்ற புலவன் வாசித்தபோது, அங்கிருந்த நக்கீரன் என்ற அறிஞர் சொன்னாரே...நீரே முக்கண் முதல்வரும் ஆகுக...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...என்று. அதேபோல் இந்த மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது ஹராம் என்று எந்த ஜும்மாவிலாவது எந்த ஹதீத் மஜ்லிசிலாவது உலமாக்கள் சொன்னதுண்டா, மது அருந்துவது பாவம், களவெடுப்பது பாவம். கற்பழிப்பது பாவம் என்று சொல்பவர்கள் அதற்கு இணையான இந்த பாவத்தை பற்றி வாய் திறந்து பேசியதுண்டா...நாம் நடத்தும் கூட்டங்களில் இதை பற்றி வாய் திறந்ததுண்டா.....எனவே இந்த கொடும் குற்றத்துக்கு நாம் எல்லோரும் ஒரு வகையில் உடந்தையாக இருந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

இப்போது நகர்மன்றம் அவற்றை அகற்றுவதில் முழுமுயற்சியுடன் களம் இறங்கி இருக்கிறது. இதற்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். எல்லா ஜமாதார்களும். பொது நல அமைப்புகளும் ஐக்கிய பேரவை உள்பட எல்லா பெரியவர்களும் இதற்கு உதவ வேண்டும். எல்லா கட்சியினரும். எல்லா சங்கங்களும் இந்த பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க களம் இறங்க வேண்டும், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு போராட்டம் செய்து கொண்டு இருப்பதால் பிரச்சினை தீர்ந்து விடாது.

"IF YOU CANNOT SOLVE A PROBLEM,THEN YOU ARE PART OF THAT PROBLEM" என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள்.

எனவே ஒன்று பட்டு இந்த மோட்டார் வைத்து உறிஞ்சும் போக்கை இல்லாமல் செய்வோம். வாருங்கள்.அல்லாஹ் நம் முயற்சிக்கு நல்ல பலனை தருவான். எல்லோருடைய கண்களையும்இதய கதவுகளையும் திறக்கும் கட்டுரையாக உங்கள் கட்டுரை அமையட்டும். நாளை புதிதாய் பிறப்போம்.

1000 ரூபாய் பரிசு எல்லோருக்கும் வேண்டும். ஊரில் 40 ,000 மக்கள் ஜனத்தொகை என்கிறார்கள். உங்களுக்கு அது பெரிய தொகை இல்லை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...குடிநீரும், குழம்பிய மக்களும்!
posted by: M.A.K.JainulAabideen,President,Kaakkum Karangal Narpani Mantram, (Kayalpatnam) on 07 September 2012
IP: 49.*.*.* India | Comment Reference Number: 21948

அஸ்ஸலாமு அலைக்கும்.நமதூரின் குடிநீர் பற்றாக்குறைக்கு மிக முக்கியக் காரணம் நம் நகர்மன்ற தலைவியின் நிர்வாகத் திறமையின்மையே.

காரணம், ஒரு மாதங்களுக்கு முன்பே உள்ளாட்சித் துறை அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், இனி தண்ணீர் தர இயலாது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்த எச்சரிக்கையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததுதான்.

மழை இல்லை, பாபநாசம் அணையில் தண்ணீர் இல்லை, தாமிரபரணியும் தென்காலும் வறண்டு விட்டன என்ற கதையை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நமதூரின் சொந்த திட்டமான குரும்பூர், சேதுக்குவாய்த்தான் திட்டம் காப்பாற்றப்பட்டிருந்தால் தண்ணீர் தட்டுப்பாடே இருந்திருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. குடிநீர் இணைப்பா? குளிக்கும்நீர் இணைப்பா?
posted by: Abdul Wahid S. (Kayalpatnam.) on 07 September 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21951

குடிநீரா அல்லது குளிக்கும் நீரா? என்பதுதான் இங்கு கேள்விக்குறி. அந்நீரை குடிநீர் என்று மட்டுமே கருதி மோட்டர் போட்டு உறிந்தாலும் அனேகமாக எல்லோருக்கும் அது கிடைக்கும். மீதமும் இருக்கும். உதாரனத்திற்க்கு, சராசரி ஐந்து நபர்கள் இருக்கும் ஒரு வீட்டிற்கு குடிப்பதற்கும், சமையலுக்கும் சுமார் இரண்டு குடம் குடிநீர் ஒரு நாளுக்கு போதுமானது. பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதால் இருபது குட நீர் தேவைப்படும். அது சேமிக்கப்பட வேண்டும். ஆனால் அதை குளிக்கும் நீராக பயன்படுத்தும் நோக்கத்துடன் அது (5 x 10 = 50 குளியலுக்கு)௦ சேமிக்கப்படும் போதுதான் சுயநலம் மேலோங்குகிறது.

இது குடிநீர் மட்டுமே. குளிக்கும்நீர் அல்ல. இது பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தால்தான் இந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு வரும்.

மின்சாரம் தடை சாத்தியமல்ல. காரணம், தண்ணீர் ஒரே நேரத்தில் எல்லோர்களுக்கும் திறந்து விடப்படுவதில்லை. பகுதி பகுதியாக திறந்து விடப்படுகிறது. மின்சாரமும் அவ்வாறு அந்தந்த பகுதிகளுக்கு தடை செய்யப்படும் பட்சத்தில்தான் இந்த முறை சாத்தியமாகும். அதற்க்கு இரண்டு வாரித்தின் (குடிநீர் - முனிசிபாலிட்டி & மின்சார வாரியம்) ஒருங்கினப்புத்திறன் (coordination between the two government departments) மிகவும் அவசியம். நமது அரசாங்க வாரியங்களுக்கிடையே ஒருங்கினப்புத்திறன் எவ்வாறு இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் நன்றே தெரியும்.

----------------------------------

"இந்த மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது ஹராம் என்று எந்த ஜும்மாவிலாவது எந்த ஹதீத் மஜ்லிசிலாவது உலமாக்கள் சொன்னதுண்டா", (copy & Paste from Comment Reference Number 21944)

பல முறை அல்-ஜாமிஉல் அஸ்கர் ஜும்மா மஸ்ஜிதில் மௌலவி அப்துல் மஜீத் அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: hasbullah mackie (Dubai) on 08 September 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21954

தண்ணீர் கிடைக்க வழி தெரிவித்தற்கு ரூபாய் ஆயிரம் கொடுத்தால் என்ன ?? கொடுக்கால் விட்டா என்ன?

ஒரு ஹதீது வருகிறது.... நாம் விரும்புகின்ற பொருள் நம்ம சகோதரருக்கும் கிடைப்பதை விரும்புவனே உண்மையான முமின் அதன் அடிப்படையில் உணர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டிய விதத்தில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் நகராட்சி மூலம் மீட்டர் பொருத்தி குடும்ப உறுப்பினர்களின் தண்ணீர் உபயோகத்தை ஒரு ஆளுக்கு இத்தனை லிட்டர் என்று கணக்கெடுத்து வழங்கினால் போதும். மக்களால் அடித்து எடுக்கிறார்கள்,, அல்லது மோட்டார் போட்டு உறிஞ்சினார்கள் என்றெல்லாம் பிரச்சினைகள் வராது.

பவர் கட் பண்ண வேண்டிய பிரச்சினைகளும் இல்லை .

ஊரில் எத்தனையோ விஷயங்கள் பயான் மூலம் அறிவுறுத்தப்படுகின்றது.. யார் வீட்டில் நடைமுறைபடுத்த படுகிறது,?

ஆகையால் ஒன்று மக்கள் பிறர்களின் நிலையையும், அல்லாஹுவின் அதாபையும் நினைத்து மோட்டார் போட்டு உறிஞ்சாமல் இருக்கணும்... அல்லது நகராட்சி மீட்டர் பொருத்தப்பட்டு பிரித்து வழங்கப்பட வேண்டும்...இது ஒன்றே தீர்வு.... .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இலவச தண்ணீர் (மோட்டார்) பம்பு திட்டம்- 2012 .அரசு ஆணை எண்: 307/2. இப்படி எப்ப வரும்?
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) on 08 September 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21955

சிறந்த கருத்துக்குப் பரிசுன்னு வேறெ சொல்லிட்டீங்க...நம்ம தளத்தில் கருத்தாளர்களுக்குப் பஞ்சமே இல்லை! சாளையார் மௌனமாக இருக்கின்றார் என்றால் புயல் வீசப் போகின்றதுன்னு அர்த்தம்.அவர்தான் கருத்துப் புயலாச்சே! கவிமகன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..ப்ளீஸ்!

இதோ ஆய்ரம் ரூபாய்க்கான கருத்து. (இப் பணத்தில் எவ்வளவுக்கு தண்ணிர் வாங்க முடியுமோ அவ்வளவுக்கு வாங்கி தட்டுப்பாடுள்ள பகுதிகளுக்கு விநியோகம் செய்யவும்).

மோட்டர் வைத்து தண்ணீர் உறியும் பிரச்சனை தீர வேண்டுமெனில் நம்ம அரசாங்கம் அல்லது நகராட்சி இலவச தண்ணீர் மோட்டார் அனைத்து வீடுகளுக்கும் வழங்க முன் வர வேண்டும்! மின்சாரம் இல்லத வீடுகளுக்கு மட்டும் தண்ணீர் லாரி சப்ளை! ஆக, யாரும் உறியிறாங்கன்னு குறை சொல்லவும் மாட்டாங்க...மின்சாரத்தை தடை பண்ணச் சொல்லவும் மாடாங்க! இது ஓர் நல்ல திட்டம்! முதல்வர் காதுலெ ஏதுக்கும் போட்டு வையுங்க! நடை முறைக்கு வந்தாலும் வரும். இது வரும் போது வரட்டும். இப்போதைக்கு தண்ணீர் லாரி வருதான்னு பார்ப்போம். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 08 September 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21957

1 திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.

2 அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது

3 திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது.

இந்த காலத்தின் குற்றவாளி நமது இரண்டாமவரே! இல்லையென்றால் பறித்த மோட்டரை திருப்பி கொடுப்பாங்களா? இது எங்காவது நடக்குமா?

இங்கே மனதாபிமானம் பற்றி பேச நமக்கு அவசியம் இல்லை. இதில் லஞ்சம் விளையாடி இருக்குமா? ஆம் இல்லை என்று நமக்குள் விவாதம் தேவை இல்லை!

எங்கள் அரபு நாடுகளில் கடற் தண்ணீரை குடிநீராக்கி எங்களுக்கு தருகிறார்கள்.இதில் மீட்டர் வைத்து மக்கள் பயன் படுத்துகிறார்கள்.( போக ஃ பில்ட்டர் தண்ணீர் வேறு)

நமக்கு தேவை வளர்ந்து வரும் வல்லரசு என்று பீத்திகொள்ளும் நம் இந்தியா ஏன் இது போன்றதிட்டத்தை மக்களுக்கு செய்து கொடுக்காது இருக்கிறது என்பது தான்.

இதனால் கடல் தண்ணீர் மூலம் மின்சாரம் மற்றும் சுத்தமான குடி தண்ணீரும் நமக்கு கிடைக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. திட்டம் நிறைவேறாது இருக்கக் காரணம் ஊழல் ஊழல் ஊழல். இது மாறும் போது வரும் சாரல் சாரல் சாரல் .!

மச்சான் அவர்களே நீங்கள் ஊர்மேல் எவ்வளவு அக்கறை கொண்டு உள்ளீர்கள் என்பது மற்றவர்களை விட எனக்கு மிகவும் தெரியும். உமது ஆயிரம் பொற்காசுகள் வேண்ட்டாம் எமக்கு! உமது மனம் திறந்த இதுபோன்ற கட்டுரையின் ஆதிக்கமே எப்போதும் வேண்டும் எமக்கு!

நீங்கள் போகிற போக்கில்,,,,,,,,,,,,,,,,,,,,,.எப்பவும் ----------------------------------.

சொல்லி வையுங்கள் நம் பஞ்சாயத்தில் ஒற்றுமையை! [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

வாழ்த்தி விடை பெறுகிறேன்!
நன்றி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: ishak ibnu nahvi (abu dhabi) on 08 September 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21958

மக்கி நூஹு தம்பி காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் மின் மோட்டார் மூலம் குடி நீர் உருஞ்சுவது தவறு என்பதை புனித மஜ்லிசுள் புகாரிஷரீப் சபை யில் கண்ணிய மிகு பாஜுல் அஸ்ஹப் ஆலிம் அவர்கள் மக்களுக்கு உரை நிகள்தினார்கள். ஹாமிதிய்ய மார்க்கக்கல்வி நிறுவனத்தில் மார்க்க விழாவில் மாணவர் நகழ்ச்சியில் இது பற்றி சொல்லபட்டுள்ளது.

இஸ்ஹாக் இப்னு நஹ்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 08 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21959

அல்ஜாமிஉல் அஸ்கர் ஜூம்மாவில் மோட்டார் வைத்து உறிஞ்சுவது ஹராம். இது பற்றி பலமுறை கதீப் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்ற செய்தி சகோதரர் அப்துல் வாஹிது அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். தகவல் தந்தமைக்கு நன்றி. ஆலிம் பெருந்தகை அவர்களுக்கும் நன்றி. தொடர்ந்து சொல்லிவாருங்கள்.அல்லாஹ் தவ்பீக் செய்வான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by: JAHIR HUSSAIN VENA (Bahrain) on 08 September 2012
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 21960

"குறிப்பு: குடிநீரை ............தீர்வு காண்பதற்கு நல்ல கருத்துக்களை எழுதும் வாசகருக்கு "ரூபாய் ஓர் ஆயிரம்" பரிசு தரப்படும். வஸ்ஸலாம். - கட்டுரை ஆசிரியர்"

Copy and paste

Dear mahmood kaka,
Asslamu Alaikum…
Please reconsider your prize…
1st and Best Price should be One Tanker Water ...(Approx 12000 Ltr) .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by: P.S.ABDUL KADER (KAYAL PATNAM) on 08 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21962

நமதூர் நகரமன்றக்கு சொந்தமாக 15 தொட்டிகள் உள்ளன,இதில் 14 தொட்டிகளில் தண்ணீரே (தொட்டிக்கு ) ஏறுவது இல்லை. ஏன் தண்ணீர் தொட்டிக்கு வருவது இல்லை ? ஒருவேளை மோட்டார் பழுது அடைந்ததா? பொருத்தப்பட்ட பைப்பு பழுதாகி இருக்கா? என்பதை ஆராயாமல் நகரமன்ற ஊழியர்கள் மக்களின் மீதுதான் அன்றும் இன்றும் பலி சுமத்துகிறார்கள். ஏதோ ஒருவர் செய்த குற்றத்திற்கு ஊர் மக்களே தவருசெய்கிரர்கள் என்று சொல்லாமல். நகரமக்கள் யாவரும் பழுது அடைந்த 14 தொட்டிகளை செப்பம்மிட நகரமன்றதை நோக்கி கோரிக்கை வைக்க முன்வரவும். தொட்டியில் தண்ணீர் இல்லாமல் ஏப்படி அடிபம்ம்பில் வரும் ?

Administrator:
நகராட்சியில் 19 தொட்டிகள் உள்ளது. அதில் 2 (ஜலாலியா மற்றும் மக்தூம் பள்ளி) இன்னும் இயக்கப்படவில்லை. 17 தொட்டிகள் இயக்கப்படுகின்றன. 17 லும் - வெவ்வேறு தினங்களில் - தண்ணீர் ஏற்றப்படுகிறது. ஏற்றப்படும் அளவிலும், விநியோக முறையிலும் தான் குளற்படிகள் உள்ளன. சுத்தமாக 14 தொட்டிகள் இயங்கவில்லை என்பது சரியான தகவலாக தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by: NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) on 08 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21963

மொத்தத்தில் தண்ணீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக, மிக முக்கியானது. அந்த தண்ணீர் கிடைக்கவிகுடிநீம், குழம்பிய மக்களும்! மாஷா அல்லாஹ் !மிகஅருமையான கட்டுரை . லட்ச கணக்கில் எச்சமாய் மறையும் குடிநீரை க்கள்ளத்தனமாக கடத்தும் கும்பல் களை திருத்தி எடுக்கும் கருத்துச்சொரிவு மிக்க சுவையான கட்டுரை . திருக்குருஆனையும் , திருநபி அவர்களின் வாக்கையும் ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட இந்த கட்டுரையை சிந்தித்து செயல் பட்டால் இந்த மாதிரியான இழிநிளைகளை விட்டும் நீங்கி இறைக்கோபத்தில்இருந்தும் ,இறை அடியார்களின் சாபத்தில் இருந்தும் விடுபடலாம் . இல்லையேல் ஈருலகிலும் தண்டனை என்பது நிச்சியமே. தப்பு செய்பவர்கள் தலைவர்களாக இருந்தாலும் சரி !மக்களாக இருந்தாலும் சரி ! தண்டனை தண்டனையாக நிறைவேற்ற பட வேண்டும் . திருடியது எனது மகள் பாத்திமா வாக இருந்தாலும் சரி .அவளது கரத்தை துண்டிக்க தயங்கவே மாட்டேன் ,என்று கூறிய தாஹா நபியின் தீர்ப்பை உற்று கவனியுங்கள் .

குடிநீர் ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் சீராக கிடைக்க வேண்டுமென்றால் அவசியம் எல்லா இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்தப்பட வேண்டும். இதை மக்கள் எதிர்த்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி கண்டிப்பாக மீட்டர் பொருத்தியே ஆக வேண்டும். ஏனோ , தானோ என்றில்லாமல் தரம் உயர்ந்த மீட்டர்களை வாங்கி பொறுத்த வேண்டும். அதுவும் நகராட்சி பணத்திலேயே வாங்கிப் பொறுத்தப்பட வேண்டும் அதற்கான செலவு இரண்டு கோடியல்ல மூன்று கோடி ரூபாயானாலும் கூட பாதகமில்லை. மீட்டர் பொருத்திய ஓரிரு வருடத்திலேயே , அந்த தொகையை உபரியாக உபயோகிக்கின்ற தண்ணீர் கட்டணம் மூலம் வசூலித்து விடலாம். என்று ஆசிரியர் கூறி இருப்பது நூறுக்கு நூறு உண்மையே!

இந்த வழியை பின்பற்றினாலும் குழம்பிஇருக்கும் மக்களுக்கு குறையில்லா குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது . எங்கள் வீட்டு டைல்ஸ் தரை கரை படுகிறதே !என்று கவலைப்படும் நெஞ்சம் எல்லாம் ஏனோ ;குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்களின் தொண்டை கறைப்படிவதை யோசிக்க தவரிவிடுகிரார்களோ ?என்பது புரியா புதிராக வே இருக்கிறது .மின் மோட்டார் வைத்து கள்ளத்தனமாக குடிநீரை உறிஞ்சுபவர்கள் அடுத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை உறிஞ்சவில்லை அடுத்தவர்களின் குருதியைத்தான் உறிஞ்சுகிறார்கள். தாகத்தால் நாவரண்டு தவித்திடும் தருணத்தில் தங்க நிகர் ஹவ்லின் தண்ணீர் வேண்டுமா ?அல்லது இந்த அற்பதுன்யா சொர்ப்பவாழ்வின் . தண்ணீர் தான் வேண்டுமா ? லிமனில் முல்குள் எவ்ம் ,லில்லாஹில் வாஹிதுள் கஹ்ஹார் .அந்தநாளில் அரசாட்சி என்பது இறைவன் ஒருவனுக்கே !

இவ்வுலகில் லஞ்ச ம் மூலம் எதையும் சாதித்து விடுவதைப்போல் நாளை மறுமையில் இது போன்ற குற்றங்களுக்காக இறைவனிடத்தில் எந்த லஞ்சமும் கொடுத்து தப்பிக்கலாம் என்று மாத்திரம் கனவிலும் கூட நினைத்து விடாதீர்கள் .இல் லை என்றால் மனிதனின் நிலை என்ன என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே தண்ணீர் திருட்டை தடுப்போம் !அனைவருக்கும் தட்டுப்பாடில்லா தண்ணீர் கிடைக்க துணை நிற்ப்போம் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by: suhail (dubai) on 08 September 2012
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21965

குடிநீர் பிரச்சனையை தீர்க்க..

1. ஒவ்வொரு வீட்டிலும் meter அமைக்கப்பட்டு அவர் அவர்கள் உபயோகிக்கும் அளவிற்கேற்ப கட்டணம் வசூலிக்கலாம்,இதனால் குடிநீர் வீணாவது குறையும்,மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதும் இருக்காது.

2. Reverse Osmosis(RO) முறையை பயன்படுத்தி கடல் நீரை குடிநீர் ஆக்கும் முயற்சியில் ஈடுபடலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Name and Shame !!
posted by: M Sajith (DUBAI) on 08 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21967

ஆதங்கம் ஆத்திரம் இவையெல்லாம் தாண்டி எப்படியாவது சரிசெய்துவிட இயலாதா என்ற ஏக்கம்தான் தெரிகிறது கட்டுரையில்...

மீட்டர் பொருத்துவதும், வருமானம் பெருக்குக்குவது குடிநீர் ஆதாரத்தை (ஆர்.ஓ போன்றவற்றின் உபயோகத்தால்)அதிகரிப்பதும்தான் நீண்டகாலத்தீர்வாக இருக்கமுடியும்.

மின்சாரத்துன்டிப்புக்கும் மற்றவைகளுக்கும் மாற்றுவழிகளை ஏற்கனவே சிந்தித்துவைத்திருப்பார்கள், 'திட்டம் போட்டு...' படலைக்கூட ஒரு சகோதரர் மேற்கோளிட்டிருந்தார் உண்மையும் இதுதான்.

ஜும்மா மேடைகளிலும், மற்றவைகளிலும் பலமுறை சொன்னதாக சிலர் குறிப்பிட்டும் உள்ளனர் - அதனால் என்ன பயன்? நமதூர் கலாச்சாரமே சொல்வது யார் என்று பார்ப்பதுதனே அவர் என்ன சொல்கிறார் என்று யோசிப்பதுதான் வழமையுமில்லையே..

இது ஒருபுறமிருக்க தற்போது நகரா நிலைக்குள்ளாக்கப்பட்ட நகரவை, அடுத்தக்கூட்டதிற்கு வீடியோ வேண்டுமா வேண்டாமா என்பதை சிந்திக்கவும் அதுக்கு சாதக பாதகமாக அறிககைகளும் , விளக்கங்களும் தயாரிப்பதில் தலைமையும் உறுப்பினர்களும் பிஸியாக இருக்கிறது - ஆக நடவடிக்கைகளுக்கு அவர்களை நம்புவதும் வெறும் வேஸ்ட்...

ஒரே ஒரு வழி தான் தெரிகிறது, மோட்டார் போட்டு தண்ணீர் எடுப்பது யார் என்பதை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பிருப்பது அன்டை அயலாருக்குத்தான்.

இது குறித்த தகவலை தர ஒரு நம்பரை அறிவிக்கலாம், (தகவல் தந்தவர் விபரம் ரகசியம் காக்கப்பட வேண்டும்)- மக்களை திரட்டி மின்மேட்டர் நீக்கும் வரை வீட்டை முற்றுகையிட்டு தர்ணா செய்யவேண்டும்.

இதுதான் ஒரே வழி - பாதிக்கப்படுபவர்களை ஒன்று திரட்ட வழிகளைத்தேடுங்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...நீரின்றி அமையாது உலகு
posted by: M.S.MAHMOOD RAJVI (DAMMAM) on 08 September 2012
IP: 37.*.*.* | Comment Reference Number: 21973

அஸ்ஸலாமுஅலைக்கும் ,

இனி ஒரு உலக யுத்தம் வருவதாக இருந்தால் அது தண்ணீருக்காகவே இருக்கும் என்பது அறிஞர்களின் கருத்து. இப்போது சமீப காலமாக நமது ஊரின் விரிவாக்கத்திற்கு ஏற்ப குடிநீர் விநியோகம் செய்வதற்கு முறையான திட்டங்கள் ஒன்னும் சரிவர இயற்றவும் இல்லை, அதை பற்றி யாருக்கும் கவலையுமில்லை அக்கறையுமில்லை அதைப்பற்றி யாராவது கேட்டால் வேலை வெட்டி இல்லாத பயல் என்று பட்டம் சூட்டிவிடுவதும் நடைமுறை ஆகிவிட்டது.

மார்க்கம் ஒழு செய்வதற்கே வரைமுறை வைப்பதுடன் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் விரும்புவதில்லை என்று இருக்க குடிக்கவே நீரின்றி பலர் தவிக்கும் போது மின் இறைப்பான் கொண்டு நீரிறைக்கும் (அடுத்தவர்களின் குருதி குடிக்கும் மனித அட்டைகள் ) இறையச்சம் இல்லாதவர்கள் தங்கள் உடுப்பு முதற் கொண்டு வீட்டின் பளிங்கு தரைவரை கழுவுவதும் குடிநீரைகொண்டே என்பது வேதனையும் வெட்கமும் படவேண்டிய செயல்.

குடிநீர் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்க வேண்டும் எனில் முதலில் நமது ஊருக்கு ஒதுக்கும் நீரின் அளவு சரியான முறையில் வருகின்றதா என்பதை அளவிட டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய மானி (மீட்டர் ) பொறுத்த வேண்டும் . வழியில் தண்ணீர் திருடுவதை கண்காணிக்கவும் எங்கேனும் குழாய் உடைந்தோ அல்லது அடைப்பு இருப்பினோ அதனை கண்காணிக்க GSM TRACKING போன்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இணையம் வழியாக கணினி மூலம் கண்காணிக்க இயலும்.

நம் நாட்டின் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தினை பலநாடுகளும் பயன்படுத்துகின்றன . எனவே இது ஆரம்பத்தில் செலவு அதிகம் எனினும் ஒரு அரசாங்கத்தால் ஆகக்கூடியதே . மேலும் நம் ஊரின் அனைத்து வீடுகளும் குடிநீர் மேல்நிலை தொட்டிகளைவிட தாழ்வாகவே இருப்பதால் குடிநீர் விநியோக சமயத்தில் வேகத்தை கூட்டி திறந்தால் அனைத்து வீட்டிற்கும் தானாகவே தண்ணீர் கிடைக்கும் இதற்கு வழியில் அமைக்க பட்டு இருக்கும் வால்வுகள் தரமானதாகவும் பழுது இல்லாமலும் இருக்கும்.

மேலும் கிணறுகளில் சுவையான நீர் இருப்பின் அதனை பயன்படுத்துவது சிறந்தது ஏனெனில் அது சுத்திகரிக்கப்பட்ட நீர் .

இறுதியாக தவறிழைப்பவர்கள் திருந்தி தவ்பா செய்து அதில் இருந்து மீளுங்கள் , நமது வாழ்வாதாரத்தை (தண்ணீரை) வீண் விரயம் செய்யாதீர்கள். வல்ல அல்லாஹ் நமக்கு நீரின் அவசியத்தை அறிந்து அதை நல் வழியில் செலவு செய்து இறைபொருத்ததை பெறுவோமாக ஆமீன்.

"யா -அல்லாஹ் எங்கள் ஊரை குடிநீர் தட்டுப்பாட்டை விட்டும் காப்பாற்று ! எங்கள் யாவருக்கும் உன் அருள் மழையை பொலிந்தருள்.

மஹ்மூத் ரஜ்வி(AYWA )
தம்மாம், சவூதி அரேபியா
00966507866703
msrajvi @gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by: sulaiman (abudhabi) on 08 September 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21977

அஸ்ஸலாமு அழைக்கும்,

கட்டுரையாளர் சகோதரர் N .S .E .மஹ்மூது அவர்கள் தன்னுடைய கட்டுரையில் மோட்டார் வைத்து தண்ணீரை உருஞ்சுபவர்களை மார்க்கத்தின் பெயரால் எச்சரிக்கிறார். பெரும்பாலான கருத்தாளர்களும் இதேபோன்ற எச்சரிக்கை செய்கிறார்கள்.மோட்டார் வைத்து தண்ணீரை உறுஞ்சுவது தவறான செயல்தான் இதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை.ஆனால் இந்த தவறை மக்கள் செய்வதுக்கு தூண்டிய காரண காரியம் என்ன என்பதை எழுதவோ,பேசவோ மறுக்கிறார்கள்.அது ஏன் என்பதுதான் புரியவில்லை . காரண காரியங்களை பார்ப்போம்:

முன்பும் ,இப்பொழுதும் அது ஐந்து அல்லது பத்து நாளைக்கு ஒரு முறை வருகிற தண்ணீராகட்டும் முறையாக விநியோகம் செய்கிறார்களா?? தண்ணீர் அழுத்தம் சீராக இருக்கிறதா?? WATER PRESSURE VERY LOW CONDITION . இது மற்றவர்கள் மோட்டார் வைத்து உருஞ்சுவதால் மற்றும் உள்ள பிரச்னை இல்லை .சில நேரங்களில் தண்ணீர் வரும்போது மின்சாரம் நிறுத்த பட்டதும் உண்டு .அப்பொழுதும் இதே LOW WATER PRESSURE PROBLEM இருக்கத்தான் செய்கிறது.

ஒரு மணிநேரம் தண்ணீர் வரும்மென்று எதிர்பார்த்தால் பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.30 ,40 ,45 நிமிடங்களில் தண்ணீர் நின்று விடுகிறது.

நமது பெண்கள் மிகுந்த பரபரப்புடனும்,எதிர்பார்ப்புடனும் அடி பம்பை அடி ,அடி என்று அடித்து கலைத்துபோனதுதான் மிச்சம்,அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவது இல்லை.இதனால் பெண்கள் இடையே விரக்தி. இது இப்படியே தொடர்கதையாகிறது.

இதை பற்றி வெட்டையில் தோழி களுடன் பேசும்போது அடியா அவவீட்ல மோட்டார் வச்சுகாலம்,இவ வீட்டில் மோட்டார் வச்சுகாலம்.இப்படியே பேசி பேசி இப்பொழுது இந்த தவறை சர்வசாதாரணமாக எல்லோரும் செய்ய துணிந்து விட்டார்கள். இந்த செயலுக்கு முதல் குற்றவாளி நமது நகராச்சி இன் முறையல்லாத தண்ணீர் விநியோகமும்,கையாலாகாத தன்மையும்தான் கரணம்.

சரி மக்கள் மோட்டார் வச்சி தண்ணீர் உருஞ்சுவதை கடுமையாக எச்சரிபவர்கள்.அதே மக்கள் ஒரு மாததுக்கு வெறும் மூன்று மணி நேரத்துக்கும் குறைவாக தண்ணீரை பெற்றுக்கொண்டு முழு கட்டணத்தையும் செலுத்துகிறார்களே இது தவறு இல்லையா ?பாவம் இல்லையா ? இப்படி ஒழுங்காக பெறாத பொருளுக்கு முறையாக,முழுமையாக தண்ணீர் கட்டணத்தை கட்டி ஏமாற்ற படுகிறார்களே.இது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிதானே.இந்த அநீதியை மட்டும் ஏன் மார்கத்தின் பெயரால் எச்சரிக்க மறுகிறீர்கள்.

ஒரு பக்க தவறை மட்டும் சுட்டிகாட்டும் நீங்கள்.இந்த தவறையும் சேர்த்துதானே சுட்டிக்காட்டவேண்டும்.இது தானே சமநீதி. நம்முடைய எழுத்தும் ,பேச்சும் நமது மக்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் சகோதரர்களே .

இப்பொழுது நமது ஊரு தண்ணீர் பிரச்சனை தீர சிலவழிகள்.

1 . நமது ஊரில்சீரான WATER PRESSURE கிடைப்பதுக்கு சிறிய அளவிலான PUMPING STATION அமைக்க வேண்டும்.

2 .நமது ஊரின் MAIN WATER LINE மிகவும் பழமையானது இதனால் சிறிய அளவில் வாட்டர் லீக் ,வாட்டர் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே இந்த pipe line புதுபிக்க வேண்டும்

3 .இரண்டு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்யவேண்டும்.30 நிமிடம் குடுத்தால் கூட போதும்.இப்படி இரண்டு நாளைக்கு ஒரு முறை குடுத்தால் மக்கள் நீண்ட நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைப்பதில் இருந்து விடுபடுவார்கள்.தண்ணீர் பயன் பாடு குறையும் .

இதை எல்லாவற்றையும் விட அல்லாஹ்வின் கருணையும் ,உதவியும் இருக்கவேண்டும்.இவைகள் அனைத்தும் நிறைவேறுமானால் நமது மக்கள் தண்ணீர் தட்டுபாட்டில் இருந்து இன்ஷாஅல்லாஹ் விடுதலை அடைவார்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...தேவை இறை அச்சம்
posted by: Ruknudeen Sahib (China) on 09 September 2012
IP: 116.*.*.* China | Comment Reference Number: 21989

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசிரியர் அவர்களின் இந்த சிறிய முயற்சிக்கு பெரும் பாராட்டுக்கள். ஆசிரியர் அவர்களுக்கு கூறும் வழி இரண்டு.

ஒன்று ஊரில் உள்ள அணைத்து வீட்டின் நீர் இணைப்புகளையும் துண்டித்து விட்டு சாலை ஓரங்களில் (இன்றைய நம் ஊரின் சந்துகளின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருப்பதால்) ஒவ்வொரு ஐம்பது அடிக்கு (வீடுகளின் நெருக்கதிற்கேற்ப தூரத்தை கூட்டி குறைத்து) ஒரு நீர் குழாயே பொருத்தி ஆண்களுக்கு ஒரு குழாய் பெண்களுக்கு ஒரு குழாயாக வைத்து ஒற்றுமையாக நீர் பிடிப்போமேயானால் எந்த வீட்டாரையும் குறை சொல்வதற்கு வாய்ப்பன்றி போய் விடும்.

மற்றொரு முறையாகிய இன்றைய முறையவேயே பின் பற்ற முனைவோமேயானால் நமக்கு தேவை இறை அச்சம் அல்லாஹ் தனது அருள் மறையாம் திருக்குரானில் பல இடங்களில் நம்மை அச்சமூட்டி எச்சரிக்கிறான்.எனவே அவனுடைய எச்சரிக்கைக்கு பயந்தவர்களாகவும் மறுமை நாளை எண்ணி பயந்தவர்களாகவும் மன சாட்சிக்கு பயந்து அடுத்தவர்களின் நலனில் சிறிதளவேனும் அக்கறை கொண்டவர்களாக இல்லாத வரை இரண்டாவது முறை பயனற்றதாகிவிடும்.

இவை எல்லா வற்றிற்கும் மேலாக வல்ல ரஹ்மானாம் அல்லாஹ்வின் கருணை பார்வை நம் ஊரின் மீது மென் மேலும் பட்டு நம் தண்ணீர் கஷ்டம் மட்டும் இல்லாமல் நம் அனைவர்களின் எல்லா வித கஷ்டமும் நீங்க நாம் அனைவரும் வல்ல நாயனிடம் இறைஞ்சிடுவோம் ஆமீன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. மாத்தி யோசி
posted by: S.A.Muhammad Ali Velli (Dubai) on 11 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22018

பொதுவாக மோட்டார் வைத்திருப்பவர்கள் சொல்லும் காரணங்கள்.

1 தங்கள் வீட்டில் வயதான/ நோயுற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் அடிபம்பு மூலம் தண்ணீர் அடிக்க முடிய வில்லை.

2 தங்கள் வீடு மேடாக அமைந்திருப்பதால் தண்ணீர் மேலே ஏறி வருவதில்லை.

இதற்கு என்ன தான் தீர்வு?

முதலில் மெயின் பைப்லைனில் உள்ள அணைத்து இணைப்புகளையும் மாற்றி முறைப்படி சிறிய பைப்பில் கொடுக்க வேண்டும்.

இரண்டாவதாக ஒரு தெருவில் ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் எவ்வளவு தண்ணீர் பயன்படுமோ அதே அளவு தண்ணீரை ஒரு இருபது நிமிடத்தில் எல்லா வீடுகளுக்கும் சென்று அடையும் அளவில் மோட்டார் வைத்து அதிக பிரஷரில் அனுப்பினால் பைப் வைத்து அடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

மூன்றாவதாக அனைத்து வீடுகளிலும் நல்லி வைத்து தேவையான நேரம் மட்டும் திறந்து மூடுமாறு பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மோட்டார் வைத்திருப்பவர்களுக்கு 20 நிமிடத்தில் எவ்வளவு தண்ணீர் கிடைக்குமோ அதே தண்ணீர் மோட்டார் இல்லாதவர்களுக்கும் கிடைக்கும்.

இது எனக்கு தோன்றிய சிறிய யோசனை. சரியாக வரும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved