Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:32:30 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 38
#KOTWEM38
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 28, 2012
மாடித்தோட்டம்... பயண அனுபவங்கள்!

இந்த பக்கம் 3607 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சுவரிலும் காகிதத்திலும் வரையும் சித்திரங்களும், கோட்டோவியங்களும் எழுத்துக்களும் நாம் ஏங்கும் காண விரும்பும் ஒரு உலகின் கற்பனைப் பதிவுகள். அவை உடல் பெற்று இந்த நிலவுலகில் உலா வர துடிக்கும். ஆன்மாக்கள். பல வேளைகளில் அந்த ஆன்மாக்களின் கனவுகள் நெடுங்கனவுகளாகவே நீடித்து விடுவதுண்டு. சில வேளைகளில் மட்டுமே அந்த ஆன்மாக்கள் குருதியும் சதையும் கொண்ட மனித உடல் பெற்று இந்த பூவுலகில் கால் பதித்து குதூகலிக்கும் பேற்றைப் பெறுகின்றன.



அந்த வகையில் வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டம் பற்றிய எழுத்துப்பதிவுகள் 18 பேரின் வடிவில் உருவம் பெற்றன. இம்மாதம் 17ஆம் தேதியன்று 18 பேரையும் வெயிலை எதிர்கொள்ள குடிநீர் & மோர் பொட்டலங்களையும் ஏற்றிக்கொண்டு காலை 08:00 மணிக்கு முன்னரே புறப்பட்ட எங்களது வாடகை ஊர்தி பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகங்களுக்கு எதிரே அமைந்துள்ள அன்னபூர்ணா உணவகத்தில் போய் நின்றது.

சுடச்சுட பூரித்து நின்ற பூரி, வடை, உண்மையிலேயே நெய் மணத்த நெய் ரோஸ்ட், பொங்கல், காஃபி என பசியாறே கனமாக இருந்தது. வந்த கட்டணமும் கனமாகத்தான் இருந்தது . இந்த உணவகத்தில் நாங்கள் டிப்ஸ் வாங்குவதில்லை என்ற அறிவிப்பு வேறு ஒட்டப்பட்டிருந்தது. “யானை வாங்கினால் துறட்டி இலவசம்” யாரோ முணுமுணுத்தார்கள்.

காலை 10:00 மணிக்கு முன்னதாகவே, பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டரங்கம் எதிரிலுள்ள வேளாண் அலுவலகம் வந்து சேர்ந்தோம். எங்களை இன்முகத்துடன் வரவேற்றார் வேளாண் மைய பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் ப.நயினார் . வந்தோரின் பெயர், முகவரி பதிவு முடிந்து, கட்டணத்தைச் செலுத்திய பின் ஆளுக்கொரு பேனாவும், குறிப்பேடும் தந்தனர். அதன் பின்னர் வகுப்பு தொடங்கியது.

நமதூர் குழுவின் வருகையால் 4 வருடங்களுக்குப் பிறகு காய்கறித் தோட்டம் பற்றிய வகுப்பு உயிர் பெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்த பேராசிரியர், நாம் ஒரே அணியாக வந்தது குறித்தும் சிலாகித்துப் பேசினார் . பவர் பாயிண்ட் (ஒளித்திரை) மூலம் வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்தன. இடையில் தேனீரும், வடையும் தந்தனர். வகுப்பினிடையே மின்சாரம் தடைப்பட்டதால் நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு மின்சாரமின்றியே வகுப்புகள் மீண்டும் தொடங்கின. இம்முறை பவர் பாயிண்ட் விளக்கத்திற்கு மின்சாரம் இல்லாததால் எழுத்துப்பலகை மூலம் வகுப்புகள் நடந்தன. எனினும் அந்த பவர் பாயிண்டின் துலக்கம் இதில் இல்லை. பாடத்தின் இறுதியில், ஒரு வழியாக மின்சாரம் வந்து சேர்ந்தது.

அதன் பிறகு மதிய உணவிற்கான இடைவேளை விடப்பட்டது. ஊர்தி ஓட்டுநர் எங்கோயோ வண்டியை கொண்டு சென்று விட, கடைசியில் சண்டை போடாத குறையாக அவரை வரவழைத்து, பக்கத்திலுள்ள மஸ்ஜிதிற்கு சென்று தொழுகையை நிறைவு செய்து விட்டு மீண்டும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம். உணவிற்காக நாங்கள் எடுத்த நேரம் கூடுதலாகி விட்டபடியால் மீண்டும் வகுப்புக்குள் நுழையும்போது மின்சாரம் போய்விட்டது. எங்களது தாமதத்தாலும், மின் வெட்டினாலும் சில பாடங்கள் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

பாடங்களின் இடையேயும், முடிவாகவும் நமதூர் பெண்கள் கேட்ட முடிவுறா அய்யங்கள், கேள்விகள் அவர்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் காட்டியது. அது மட்டுமின்றி நமது நோக்கமும், முயற்சிகளும் அதன் இலக்கை எட்டியதையும் சுட்டியது. வந்த பெண்களில் பலர் வீட்டுத்தோட்டமும், மாடித்தோட்டமும் வைத்து பராமரித்து வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அனைவருக்கும் தேனீரும் வடையும் பறிமாறப்பட்டது . வயிறு நிரம்பியிருந்ததால் தேனீரை மட்டும் அருந்தி விட்டு வடையை பொட்டலமாக கட்டிகொண்டோம். பங்கேற்றவர்களில் சிலர் தம் வீட்டுத்தோட்டங்களுக்கு மண்புழு உர சிப்பங்களை வாங்கினர். ஒரு சிப்பத்தின் விலை ரூ.35/=. ஆகும். வேளாண் மைய பேராசிரியர்களிடமும், ஊழியர்களிடமும் நன்றி கூறிய கையோடு - வந்த வாகனத்தில் ஊருக்குக் கிளம்பினோம். எதிர்காலத்தில் இவ்வகுப்புகளில் பங்கேற்க விழைவோரின் வசதிக்காக சில குறிப்புகள்:

## மாடித்தோட்டம்/ வீட்டுத்தோட்டம் தொடர்பாக ஏற்படும் அய்யங்களை திங்கள்-- வெள்ளி வரை காலை 9:30--மாலை 5:00 மணி வரை தொலைபேசி வாயிலாகவும் (0462--2575552) பாளையங்கோட்டையில் உள்ள வேளாண் அலுவலகத்தை நேரடியாக அணுகியும் கேட்கலாம்.

## புதிய வகுப்புகள் ஏற்பாடு செய்வதற்கும் மேற்கண்ட முகவரியையே அணுகலாம்.

## இம்மையத்தில் காளான் வளர்ப்பு, மண் புழு உரம் தயாரிப்பு பற்றியும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

## நமதூரிலேயே இந்த பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டுமெனில் நாம் அதற்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டிய முகவரி:

முதல்வர்,
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
கிள்ளிகுளம், வல்ல நாடு----- 628252.
தொலை பேசி எண்: 04630---261226
## இக்கல்லூரியில் இளமறிவியல் வேளாண்மைப்பட்டப்படிப்பு (bsc, agri) உட்பட பல வேளாண் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. ஆர்வமுள்ளவர்கள் கல்லூரி முதல்வரை அணுகலாம்.

## இக்கல்லுரியிலும், திருச்செந்தூரில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வேளாண்மை விற்பனை நிலையத்திலும்,குரும்பூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள தனியார் கடைகளிலும் விதைகளையும்,ஊட்ட உரங்களையும்,பூச்சி மருந்தையும் வாங்கிக்கொள்ளலாம்.

*** வீட்டுத்தோட்ட பயிற்சி வகுப்பிற்காக தனி ஊர்தியில் செல்பவர்கள் 17 பேராக செல்வது நலம். 18 பேர் செல்லும்போது ஊர்தியில் இட நெருக்கடியும் அசௌகரியமும் உண்டாகும்.

*** மின் தடை இல்லாத காலமாக பார்த்து சென்றால் வகுப்புக்களை முழுமையாக அனுபவிக்கவியலும்.

*** பயீற்சி வகுப்பிற்காக செல்பவர்கள் மதிய உணவை ஊரிலிருந்தே ஆயத்தம் செய்து கொண்டு சென்றால் உணவிற்கென நல்ல விடுதியைதேடி அலையும் அலைச்சலும், நேரமும்,காசும் மிச்சமாகும்.

*** நமதூரில் வகுப்புக்களை ஏற்பாடு செய்வதைவிட பாளையங்கோட்டையில் நேரடியாக போய் பயிற்சி பெறுவதில்தான் பலன் கூடுதல் கிடைக்கும்.காரணம் அங்கு மாதிரித்தோட்டத்தையும் பார்வையிடலாம், மண்புழு உரத்தையும் வாங்கலாம். அத்துடன் கல்வியை தேடிச்செல்வதுதான் சிறந்தது.

மொத்தத்தில் நாங்கள் பங்கெடுத்த இந்த வகுப்பு ஒரு நல்ல அனுபவமாக் இருந்தது. வெறும் எழுத்து செயலாக மாற உதவி செய்த வல்ல ரஹ்மானுக்கே துதிகளும், நன்றிகளும்!!!

நமது இணைய தளத்தில் இக்கட்டுரை வந்தவுடனேயே இந்த வகுப்பினை ஏற்பாடு செய்யுங்கள் செலவுகளை நான் ஏற்கத்தயார் என முதன்முதலில் உற்சாகமூட்டி அனுசரணையளித்த அன்பு காக்கா - கரூர் ட்ரேடர்ஸ் எம்.எஸ்.ஸெய்யத் முஹம்மத் அவர்களுக்கும்,

தனது பரபரப்பான சமூக நலப் பணிகளுக்கு நடுவேயும் இந்த வகுப்பில் கலந்து கொண்ட பயணத்தலைவர் என்.எஸ்.இ மஹ்மூது காக்காவிற்கும்,

போட்டி போட்டுக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் இந்த வகுப்பில் கலந்து கொண்ட தாய்குலத்திற்கும்,

இணையதளத்தில் இது தொடர்பான கட்டுரையும், செய்திகளும் வெளியானபோது ஈடுபாட்டுடன் பின்னூட்டமும் எழுதி தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்ட நேயர்களுக்கும்,

இந்த பயணமும் வகுப்பும் சாத்தியமாக துணை நின்ற அருமைத் தோழர்கள் ஹாஃபிழ்.எஸ்.கே.ஸாலிஹ், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!

நம் அனைவரையும் வல்லோன் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
நன்மையான செயல்கள் அனைத்திலும் நம்மனைவரையும் ஒன்று சேர்ப்பானாக! ஆமீன்!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்ஸ்டன்ட் தோட்டம் !!
posted by: M Sajith (DUBAI) on 28 May 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20793

பஷீர் காக்கா,

படத்த பார்த்ததும் மாடித்தொட்டம் அதற்குள் இப்படி பச்சைபசேல் என இப்படி இன்ஸ்டண்டா வளர்ந்து விட்டதா என அசந்துட்டேன்.... மேல படிச்சதும்தான் புரிந்த்தது படம் சுட்டதுன்னு...

வழமைபோல நிறைய தகவல்கள், ஒரு பயிற்சி முகாம் காயலில் நடத்தினால் நிறைய மக்கள் பயனடையலாம் முயற்சி செய்யலாமே...

அப்படி ஒரு முகாம் நடத்த நேர்ந்ததால், இன்வேர்ட்டர் அல்லது ஜெனரேட்டர் ஏற்பாடு செய்ய மறக்கவேண்டாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மாடித்தோட்டம்... பயண அனுப...
posted by: ஹிஜாஸ் மைந்தன். (????? ?????.) on 28 May 2012
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20794

முயற்சி திரு வினையாக்கும் என்பது போல் முதலில் கட்டுரை பின்னர் களப்பணி என முழு முயற்சி எடுத்து சுமார் பதினெட்டு பேர் கொண்ட குழுவுடன் பாளையங்கோட்டை சென்று படிப்பினை பெற்று வந்தது சாதாரண விஷயமல்ல! சாதிக்கத் துடிக்கும் சாளை-பஷீர் அவர்களின் இம் முயற்சி பாராட்டுக்குரியதே! அவரது பயண அனுபவங்களை நம் வாசகர் வட்டத்தோடு பகிர்ந்திருக்கும் விதம் அருமை! இக் கட்டுரையின் துவக்க வரிகளில் அவரது எழுத்தாற்றல் மிளிர்கின்றது. இம் முயற்சியின் பலனாக ஒருசிலராவது மாடித்தோட்டத்திற்கு முன்வந்து செயல்படுத்தினால் அதுவே அவருக்கு கிடைத்த வெற்றி! படிபடியாக பலரும் இத் திட்டத்தில் சேர்ந்து பயனடைவார்கள் என்பது நிச்சயம்.இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மாடித்தோட்டம்... பயண அனுப...
posted by: ALS mama (Kayalpatnam) on 30 May 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20797

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாடித்தோட்டம்... பயண அனுபவங்கள்!
ஆசிரியர்: சாளை பஷீர் ஆரிஃப்

எழுத்தாளர் / சமூக பார்வையாளர் , எழுதிய பயண அனுபவங்கள் பயன் நிறைந்தது. நமதூரில் மொட்டை மாடி கேட்பாரற்று கிடக்கிறது. மொட்டை மாடியை விவசாய அமைப்பில் ஆலோசனை பெற்று அல்லது நமதூரில் விவசாய படிப்பு படித்து தெரிய மாணவர்களிடம் கேட்டு நமது மொட்டைமாடியை அழகான பூங்காவாக ஆக்க முடியும். இதனால் கீழ் பகுதியில் உள்ள அறைகள் AC வைத்ததுபோல் இக்கோடைகாலத்தில் குளுகுளு என்று இருக்கும்.

முதல் அரைமுதல் சமையல் அறைவரை சென்று வரும் இடத்தை பூங்காவாக மாடியில் முழுவதும் அமைத்தால் நடப்பதற்கு வெளியிடம் போக தேவை இல்லை. இதையே நடக்க பயன்படுத்தி கொள்ள முடியும். வீட்டிற்கு வரும் தோழிகளை, அல்லது விருந்தாளிகளை இந்த மொட்டைமாடி பூங்காவிற்கு அழைத்து வந்து காலை மாலை ஏன் இரவில் கூட அமர்ந்து பேசி மகிழலாம்.

நான்குபக்கமும் கண்ணுக்கு குளுர்ச்சியான செடி கொடிகள் பச்சைபசேலென காட்சிதரும், மனமும் அதைகண்டு பூத்துக் குலுங்கும். சென்னை மண்ணடி பகுதியில் யுள்ள எங்களது சொந்தமான மூன்றாம் அடுக்கு கட்டிடத்தின் நாகாவது மொட்டைமாடியில் எனது தம்பி மனைவி 'Z' அவர்கள் செடிகளையும், கொடிமலர்களையும், மருதாணி மரத்தினையும் வைத்து வளர்த்து வந்தார்கள். வீட்டிற்கு தேவையான ரம்பைஇலை ஐம்பதிற்கும் மேற்ப்பட்டு இருந்தது காலை மாலை அதில் தண்ணீர் விடும்போது பிரியாணி வாடை வரும். அக்கம் பக்கத்து வீட்டார்கள் பாய் வீட்டில் எப்போதும் பிரியாணி தான் என்று கூறிக்கொள்வார்கள்.

இதேபோல் நமதூரில் எனது பேத்தி ஆலிமா ஒருத்தி வீட்டு மாடியில் பப்பாளிகள் பல நான் வளர்த்து வந்தேன். அவள் அக்காவின் ஆலோசனைப்படி அத்தனை பப்பாளி செடியையும் பிடிங்கிவிடும்படி கூறியதால், பில்டிங் உடைந்துவிடும் என்று பயம்காட்டியதால் அவைகளை பிடுங்கி என் வீட்டு தோட்டத்தில் வைத்திருக்கிறேன். பூப்பூக்கும் பருவத்தில் அது இருக்கிறது.

புரியாத சில குடும்பதலைவிகள் எனது பேத்திகள் போல இருப்பார்கள். அவர்களுக்கு இந்த மாடி தோட்டம் அமைக்கும் செய்தியை படித்த பின்னராவது புரிந்துகொள்வார்கள். எனது வீட்டிற்கு மொட்டைமாடி வசதி இல்லை, இருந்தால் நான் மொட்டை மாடி தோட்டம் அமைத்து ஊர் மக்களுக்கு முதல் உதாரணமாக இருந்திருப்பேன் .

சிலர் வீட்டு தோட்டத்தை பார்க்க போவதில்லை, மரம்வைத்தால் அது பயன்தரும். சுகம்தரும்.மனசுக்கு இதம் தரும். குனிந்து மரம் செடி கொடி இவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவது ஓர் ஆரோக்கியம், அதன்பின் நமக்கு தேவையான காய் கனி கிடைக்கும். இதை புரிந்து வரும்காலத்தில் தோட்டத்தை மொட்டை மாடியை பயனுள்ளதாக ஆக்குங்கள்.

உங்கள் வீட்டு தோட்டங்களில் தேக்கு மரங்களை விவசாய பண்ணைகளில் வாங்கி வைத்து வளர்த்து வந்தால் இருபது வருடங்களுக்கு பின் உங்கள் பிள்ளைகள் தராத வருவாயை கோடிக்கணக்கில் அது தரும்( இன்ஷா அல்லா). தேக்கு மரங்களை பஞ்சாயத்து ரோடு பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. தேக்குக்கு தினமும் குறிப்பிட்ட காலம் வரை தண்ணீர் ஊற்றி வந்தால் போதும். அவை பின்னால் நல்ல பலனை தர இருக்கிறது.

வீட்டு தோட்டத்தில் விவசாயம் செய்துவரும் S.E ஹசன் ஹாஜி அவர்கள் (பஞ்சாயத்து ரோடு) செல் நம்பர் - 99652 19785, அவர்களை தொடர்புகொண்டு வீட்டு தோட்டத்தில் என்ன என்ன செடி வளர்ப்பது பற்றி கேட்கலாம் அல்லது பசுமை விகடன், உழவர் உலகம் போன்ற விவசாய சம்பந்தமான பத்திரிக்கைகளை நூலகங்களில் சென்று படித்து அறிந்து கொள்ளாம்.

எழுத்தாளர்,சமூக ஆர்வலர்,
ALS மாமா,
ஓவியர், கல்விவளர்ச்சி குழு ஆலோசகர் - ரஹ்மானியா பள்ளி,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved