Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:31:31 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 150
#KOTWEM150
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014
எதிரிகளை உருவாக்கலாமா?

இந்த பக்கம் 6500 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரலாற்றுப் புகழ்மிக்க நமதூர் காயல்பட்டினம் - சமய நல்லிணக்கத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் பேரூராகும். இங்கு முஸ்லிம்கள் செறிவாகவும், இந்துக்களும், கிறிஸ்துவர்களும் குறிப்பிடத்தக்க அளவிலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதை நாமறிவோம்.

இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால், அவர்களைக் காக்க தன்னைப் பணயம் வைக்கத் துணிந்த இந்துக்களும், கிறிஸ்துவர்களும் ஏராளம். அதுபோல, இங்குள்ள முஸ்லிமல்லாதோருக்கு ஏற்படும் சோதனையான காலகட்டங்களில், முஸ்லிம்களின் அரவணைப்பும், அன்பும் என்றென்றும் நிறைவாக வழங்கப்பட்டு வருகிறது.

ஜாதி அடிப்படையில் பல பிரிவுகள் நம் நாட்டில் உண்டு. அந்தப் பாகுபாடு பெரும்பாலும் எல்லாப் பகுதிகளிலும் இன்றளவும் நடைமுறையில் உள்ள நிலையிலும், நமதூர் காயல்பட்டினத்தில் தாழ்த்தப்பட்டவர் என்று காரணங்காட்டி யாரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ, தான் உயர்ந்தவர் என்ற மிடுக்கில் யாரும் செயல்பட்டதாகவோ நானறிந்ததில்லை (விதிவிலக்குகள் இருக்கலாம்).

இத்தனை நற்குணங்களும் நம்மிடையே நிறைந்திருப்பதால்தான், நம் நாட்டின் பல பகுதிகளிலும் - ஏன், அமைதிப்பூங்கா என்று கருதப்படும் நம் தமிழகத்தில் கூட வன்முறைகளும், மதங்களின் பெயரால் கலவரங்களும் நடைபெற்ற காலகட்டங்களிலெல்லாம் நமதூர் அமைதியாகவே இருந்து வந்திருக்கிறது.

அப்படியான காலகட்டங்களில், இந்த ஊரின் முஸ்லிம் காக்கா, லாத்தாமாருக்கு எதுவும் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு நாம் சொல்லாமலேயே முஸ்லிமல்லாதோருக்கும், அவ்வாறான இக்கட்டான காலகட்டங்களை அவர்கள் சந்திக்கையில், அவர்கள் சொல்லாமலேயே நமக்கும் இயற்கையாகவே எழும். இந்த எண்ணம் நாம் பிறக்கும்போதே நம் உடலுடன் ஒட்டாமல் சேர்ந்த உறுப்பு போன்றது.

அப்பேர்பட்ட நமதூரிலும், சமூக நல்லிணக்கத்தை விரும்பாத சிலரின் தவறான செயல்பாடுகளால் அவ்வப்போது ஒற்றுமை கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகிறது. ஆனாலும், இதே போன்றதொரு நிலை பிற இடங்களில் நடந்திருக்குமானால், சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும்... குறைந்தபட்சம் சிறிதளவு இரத்தமேனும் சிந்தப்பட்டிருக்கும். நமதூரிலோ வாய்ச்சவடால்களோடு நின்று போவதை, வருத்தத்திலும் ஒரு மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம்.



நமதூர் காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில், கே.எம்.டி. மருத்துவமனைக்கு அருகில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜியாருக்குச் சொந்தமான நிலம். அந்த நிலத்தின் சாலை முகப்பில், சில ஆண்டுகளுக்கு முன்னர், திடீரென சிறிய அளவில் கோவில் ஒன்று உருவானது. காலப்போக்கில் - பூஜைகள் செய்யப்பட துவங்கின. ஓலைக்கூரை வந்தது. ஆண்டுக்கு ஒருமுறை கொடை விழாக்களும் நடக்கத் துவங்கியது. அந்த நிலத்தில் வீடுகள் கட்டப்பட்ட பின், கோட்டைச் சுவரும் சாலையோரமாக திடீரென உருவான கோவிலை அணைத்தாற்போல் எழுந்தது.

சர்ச்சைக்குரிய இடம் தனியாரின் இடமா, புறம்போக்கா என இது குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது ஒரு புறமிருக்க, இப்பிரச்சனைக்கு வேறு வழிகளில் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுவதுண்டு. பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளில் சில சட்டப்பூர்வமானவை. சில - கேள்விக்குரியவை. அவற்றை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய பொருத்தமான தருணம் இதுவல்ல.

என்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள் இனியேனும் நடைபெறாமலிருக்க, சிறிது காலம் கழித்தேனும் இவை குறித்து மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பது எனது பணிவான கருத்து.

இப்பிரச்சனை நீடித்த - நீண்ட காலத்தில், இந்த கோவிலில் தீ எரிப்பு நிகழ்வுகள் அவ்வப்போது நடந்ததுண்டு. ஆனால் இறையருளால் அவை பெரிய பதட்டங்களை ஏற்படுத்தவில்லை.

மத்தியில் புதிய ஆட்சி. அதனை தொடர்ந்து காயல்பட்டினத்தில் அண்மையில் நடந்த வெளிவந்த / வெளிவராத சில நிகழ்வுகள் குறித்த தகவல்களைப் பார்க்கையில், யார் என்று இதுவரை அறியப்படாத ஒரு சிலர் (அவர்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று இதுவரை எந்த நிரூபணமும் இல்லை) நகரில் அமைதியைச் சீர்குலைக்க திட்டமிட்டு செயல்புரிந்து வருகின்றனர் என்பதை ஊடகத்துறையில் இருப்பதால், காதில் விழும் செய்திகள் மூலம் கணிக்க முடிகிறது.

இந்தப் பின்னணியில் - ஆகஸ்ட் 23 அதிகாலை ஏற்பட்ட தீ எரிப்பு நகரில் மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது உண்மை. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்திருந்தால், காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தடயங்களை சேகரித்து, விசாரணை செய்திருக்கும். அத்தீய செயலுக்கு காரணமானவர்களை அடையாளங்காண வாய்ப்பும் கிடைத்திருக்கும்.

ஆனால் அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உடனடியாக ஹிந்து முன்னணியினர், ஹாலோ ப்ளாக் கற்கள் கொண்டு சுவர்களை எழுப்பத் துவங்கியது - முந்தைய நிகழ்வுகளில் இருந்து மாறுபட்ட புதிய நிகழ்வு. இதுவே பதட்டத்திற்கு முக்கிய காரணம் எனலாம்.

இவ்விசயம் கேள்விப்பட்டவுடன் - செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றேன்... கையில் நிழற்படக் கருவியுடன் கண்ணில் பட்டவற்றையெல்லாம் படப்பதிவு செய்தேன்.



ஓலைக் கூரையால் அமைக்கப்பட்ட கோயில் கல்லால் கட்டப்படுவது அறிந்து நமதூரின் முஸ்லிம் மக்கள் திரண்டு வந்துவிட்டனர். கே.எம்.டி. மருத்துவமனை வாயில் அருகில் ஓடக்கரையைச் சேர்ந்த நமதூர் மக்களும், திடீர் கோயிலில் துவங்கி, தாயிம்பள்ளி வரை நமதூரின் முஸ்லிம் மக்களும் திரண்டு விட்டனர்... காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். என்ன நடக்குமோ என்ற அச்சம் எல்லோர் உள்ளத்திலும் இருந்தது.

இவ்வளவு நாள் கட்டிக்காத்து வந்த சமய நல்லிணக்கமெல்லாம் சுக்குநூறாகிவிடக் கூடாதே என்ற கவலை சமூக அக்கறை உள்ளவர்களுக்கு இருந்தது.

எல்லா தரப்பிலும் சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்வர்; அதற்கு நாமும் விதிவிலக்கில்லை என்பது போல, பக்குவமற்ற சிலரின் விரும்பத்தகாத பேச்சுக்களை இரு தரப்பிலும் கேட்க முடிந்தது.

ஒரு கட்டத்தில், ஓடக்கரை சார்பில் வந்திருந்த ஹிந்து முன்னணி மாநில நிர்வாகி ஒருவர், முஸ்லிம்கள் நின்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த காவல்துறையினரிடம் தன் தரப்பு வாதங்களை முன்வைத்து வேகமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதையும் படமாக்கியபோது, அவர் ஏதோ என்னை நோக்கிக் கூறிவிட்டதாகக் கூறி, அருகிலிருந்தவர்கள் அவரை எதிர்க்க முனைந்தனர். இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன்... அவர் என்னைப் பார்த்து என்ன சொன்னார் என ஒரு சொல் கூட என் காதில் விழவில்லை. என் கவனமெல்லாம், நிகழ்வுகளைப் பதிவு செய்வதிலேயே இருந்தது. எனக்காக எதிர்க்க முனைந்தவர்களை நான் தடுத்து, “விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர முனையுங்கள்... பெரிதாக்க வேண்டாம்...!” என்று நான் கூற, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அவரும் கண்ணியமாகத் திரும்பிச் சென்றுவிட்டார்.



சரி, ஒரு செய்தியாளராக நாம் ஒரு தரப்பில் மட்டுமே நின்றுகொண்டிருப்பது சரியில்லை என்று கருதிய நான், ஓடக்கரையைச் சேர்ந்த நமதூர் மக்கள் அருகில் சென்று, எனக்கு அறிமுகமான சிலரை அழைத்துப் பேசினேன். உணர்வு பொங்க நின்று கொண்டிருந்த அவ்வேளையிலும், என் அழைப்புக்கு மதிப்பளித்து அவர்கள் என்னை நெருங்கி வந்தனர்.

“என்னண்ணே பிரச்சினை...? உங்கள் கோரிக்கைதான் என்ன?”

“பிரச்சினைன்னு என்ன...? ஆக்கிரமிப்பு இடத்தில் கோட்டைச் சுவர் உள்ளது... எனவே கோயிலும் இருக்கும்...”

“சரிண்ணே... கோட்டைச் சுவரை இடிக்க அவர்கள் இசைந்தால், உங்கள் முடிவு என்ன...?”

“அது மட்டும் தீர்வாகாது... ஊரிலுள்ள எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்... அது வரை கோயில் இருக்கும்...”

“அது தனிப்பிரச்சினை அண்ணே... ஊரிலுள்ள எல்லா ஆக்கிரமிப்புகளும் முறைப்படி அகற்றப்படத்தான் வேண்டும்... அதற்கான கோரிக்கையை நாம் யாவரும் இணைந்தே முன்வைப்போம்... இப்போதைய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாமே...? இன்று நமக்குள் தேவையற்ற சில உணர்வுகள் மேலோங்கியிருப்பது உண்மைதான்! இதுவே எப்போதும் இருக்கப் போவதில்லையே...? நாளை உங்கள் முகத்தில் நாங்களும், எங்கள் முகத்தில் நீங்களும் எதிர்படாமலா இருந்து விடப் போகிறோம்...? இத்தனை நாள் நாம் பேணிக்காத்து வரும் நல்லிணக்கம் ஒரு நொடிப்பொழுதில் இல்லாமலாவது உங்களுக்கு விருப்பமானதுதானா...?”

“.......(மவுனம்!).......”

“இப்போதைக்கு இந்த இடத்திலுள்ள ஆக்கிரமிப்பு பற்றி மட்டும் பேசுவோம்ணே... அது கோயிலாக இருக்கட்டும்! அல்லது கோட்டைச் சுவராக இருக்கட்டும்!! அரசு அளவீட்டின் படி எது ஆக்கிரமிப்பிற்குள் இருந்தாலும், அதை அகற்ற நாம் இணைந்து முன்வரலாம்தானே...?

ஆக்கிரமிப்பில் கோட்டைச் சுவர் இருந்தால், அதை அகற்றக் கூறுங்கள்... அவர்கள் இணங்கத்தான் செய்வார்கள்... ஒருவேளை மறுத்தால் உங்கள் குரலோடு நானும் இணைந்து குரல் கொடுக்கிறேன்...

ஒருவேளை ஆக்கிரமிப்பில் கோயில் இருந்தால் உங்கள் கருத்து என்ன?”

“ஆக்கிரமிப்பு என்று வந்தால் எல்லாவற்றையும் அவர்கள் அகற்றும்போது, நாங்களும் கோயிலை அகற்றுவதை எதிர்க்க மாட்டோம்...”

இப்படி அவர்கள் சொன்னதும், அவர்களது உள்ளுணர்வுகளை அறிந்ததால் எனது உள்ளத்தில் அந்நேரத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை அளவிட முடியாது.



சிறிது நேரத்தில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மா.துரை அவர்களது தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து அவர்களின் குரல்களை மட்டும் என்னால் அவதானிக்க முடிந்தது. துவக்கத்தில் இரு தரப்பினரின் குரல்களும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்தன. தத்தம் தரப்பு நியாயங்களை அவர்கள் முன்வைக்கையில், உணர்வுகள் மேலோங்கி நின்றதை உணர முடிந்தது.

ஆனால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுக் கூர்மையான வழிநடத்தல், கோட்டாட்சியர் - வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் பொறுப்புணர்ந்த செயல்பாடுகளால் அவர்களின் குரல்களில் இருந்த வேகம் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து, நிறைவில் மறைந்தே போனது.

பிரச்சினைக்குரிய இடத்தில், ஆக்கிரமிப்பிலிருக்கும் கோட்டைச் சுவரையும், கோயிலையும் நெடுஞ்சாலைத் துறை உதவியுடன் இடித்தகற்ற இரு தரப்பினரும் சுமுகமாக ஒப்புக்கொண்டு, கைச்சான்றிட்டது புண்பட்ட நெஞ்சில் மயில் தோகையால் தடவிக்கொடுத்த அனுபவத்தைத் தந்தது.



கோயிலோ, கோட்டைச் சுவரோ... அவற்றைக் கட்டியது சரியோ, தவறோ... அதற்குள் நாம் செல்லத் தேவையில்லை. ஓடக்கரை மக்களுக்கு அது வழிபாட்டுத்தலம். கட்டிட உரிமையாளருக்கு அது தன் உரிமைக்குட்பட்ட இடம்.

இவ்வளவு வலிமையான எண்ணங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், இரு தரப்பு நல்லுறவுகளுக்கு எவ்வித பங்கமும் வந்து விடக்கூடாது என்று அந்த சில நிமிடங்களில் அவர்கள் கருதியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆம்! இந்நிகழ்வு நிச்சயம் நமதூர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட வேண்டியது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

இப்படியாக, இரு தரப்பினரின் செய்கைகள் இருந்துகொண்டிருக்க, நேற்றிலிருந்து முகநூலிலும், மொபைல் ஃபோனில் வாட்ஸ் அப், புதிதாக முளைத்திருக்கும் டெலிக்ராம் உள்ளிட்ட அப்ளிகேஷன்களிலும் - விவரமற்ற மக்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது நம் நெஞ்சம் கணக்கிறது...

எவ்வளவு பாடுபட்டு - இறையருளால் பல்லாண்டு கால பிரச்சினை ஒன்று சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரின் உள்ளங்களையும் காயப்படுத்தும் வகையிலான இவர்களின் பக்குவமற்ற சொற்கள் - எங்கே இந்த அமைதியைக் குலைத்துவிடுமோ... என்ற அச்சம் இப்போது நிலவிக் கொண்டிருக்கிறது.

வெற்றி – தோல்வியை அளப்பதற்கு இங்கே பலப்பரீட்சை ஒன்றும் நடந்துவிடவில்லை. எதிர்பாரா நிலையில் கொதித்தெழுந்த இரு தரப்பு மனங்கள், எப்போதும் போல இணக்கத்தைக் கண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

இருந்த இடத்தில் எதையும் எழுதிவிடலாம். ஆனால், இங்கே ஊரில் அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது ஊரிலிருப்பவர்களுக்கு மட்டுமல்ல; அவ்வாறு எழுதியவர்களுக்கும் சேர்த்துதான் என்பதை அது தொடர்பானவர்கள் மனதிற்கொள்ள வேண்டும்.

“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் யார் நம்பியிருக்கிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்!!”

“கோபம் வரும்போது எதிரியை சாய்ப்பவன் சிறந்த வீரனல்ல; மாறாக, தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன்!”

என்றெல்லாம் நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகள் இருப்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில் நமதூரில் யாரும் இல்லை. இப்பொன்மொழிகளை இத்தனை காலம் நாம் கண்களால் படித்தும், வாயால் மொழிந்தும், காதுகளால் பிறர் கூறக் கேட்டும் இருக்கிறோம். உள்ளத்தால் ஏற்று செயல்படுத்த இதுவே சரியான தருணம். இத்தருணத்தை சரியாகப் பயன்படுத்தாது விட்டுவிட்டால், அதன் பிறகு இந்த நபிமொழிகளைப் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன?

பொறுப்புணர்ந்து செயல்படுவோம்! நம் பொறுப்பற்ற செயல்பாடுகளால் ஏதேனும் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு இவ்வுலகிலும், மறுவுலகிலும் விடை சொல்லியே ஆக வேண்டும்!!!

இறைவன் நம் யாவரையும் பாதுகாப்பானாக...

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Ibrahim Ibn Nowshad (Bangalore) on 25 August 2014
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36623

அல்லாஹ் தான் அகிலதாற்கெல்லாம் பாதுகாவலன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒற்றுமை விரும்பும் உள்ளம்
posted by: musthak ahamed (குவைத் ) on 25 August 2014
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 36628

ஒற்றுமை விரும்பும் உள்ளம் இப்படித்தான் யோசிக்கும் அருமையான பதிவு ஆழமான கருத்துக்கள் ஒரு வேளை இந்த நிகழ்வுகள் எதாவது பின் விளைவுகளை யஏற்படுதுமாயின் அது நல்ல நிகழ்வாக மாற இந்த எழுத்துக்கள் போதுமானதாக இருக்கும். சில தருணங்களில் சப்தம் நல்லது..

பல தருணங்களில் மெளனம் நல்லது.

ஆனால் எந்த தருணத்திலும் அழிவை உண்டாக்கும் சபதம் நல்லதல்ல...

இது யாருக்கும் வெற்றி தோல்வி அல்ல

நம் சகோதரத்திற்கான சான்று மற்றுமே ....

இங்கே சகோதரம் என்பது எல்லோரையும் சேர்த்துத்தான் .....

முஸ்தாக் அஹமத்.
குவைத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:.matured thinking
posted by: ismail (jeddah) on 25 August 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36629

தம்பி சாலிஹ் அவர்களின் வயதுக்கு மீறிய பக்குவப்பட்ட சிந்தனையும் எழுத்துக்களும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது

எந்த பிரச்சனையும் உணர்வுபூர்வமாக சிந்திக்காமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் எல்லோருக்கும் இணக்கமான முடிவு கிடைக்கும் ,அதற்காக கோழையாக இருக்க வேண்டியதில்லை ,நம் உரிமைக்காக நாம் போராடித்தான் ஆகவேண்டும்

அதே நேரத்தில் வெறும் வேகம் மட்டும் பலன் தராது விவேகத்துடன் கூடிய வேகம் என்றைக்கும் பலன் தரும் .

எல்லாம் வல்லாஹ் நாயன் நம் அனைவரையும் நமதூரையும் என்றென்றும் பாதுகாப்பானாக மேலும் நோய் இல்லாத ஊராகவும் ஆக்கி வைப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: சாளை பஷீர் (கோல்கத்தா) on 25 August 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36633

1990 களில் நடந்த இன மத முறுகல்கள் விளைவித்த விபரீதங்கள் இன்னும் நம் நெஞ்சில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கின்றது.

பெரும் மதக்கலவரமாக வெடித்திருக்க வேண்டிய நிகழ்வு மிக அமைதியாகவும் எளிதாகவும் தீர்ந்ததற்கு அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் !!

இந்த நிகழ்வானது ஊரின் அனைத்து சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. பிளவு எற்படுத்த நினைத்த ஃபாஸிஸ்டுகளுக்கு கிடைத்த தோல்வி.

இதற்காக உழைத்த நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் நிறைய கூலிகளைக் கொடுப்பானாக !!

ஒரிரண்டு விரும்பாத நிகழ்வுகளை தவிர நினைவு தெரிந்த காலம் முதல் நமதூரில் முஸ்லிம்களும் , நாடார்களும் , தலித்துகளும் ,தேவர்களும் , பரதவர்களும் , ஆசாரிமார்களும் மிகவும் இணக்கப்பாட்டுடனும் சகோதர வாஞ்சையுடனுமே வாழ்ந்து வருகின்றனர்.

நடுவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நாடெங்கும் உள்ள ஃபாஸிஸ சக்திகளுக்கு புதிய ஊக்கம் வந்திருப்பதை காண முடிகின்றது.

அண்மைக்காலத்தில் பொது வாழ்க்கையில் தனது தகிடுதத்தங்களால் செல்வாக்கிழந்த ஒரு ஆளுமை இழந்த தனது செல்வாக்கை மீட்க ஃபாஸிஸ்டுகளுடன் கைகோர்த்திருப்பதற்கான தடயங்கள் நிறையவே தென்படுகின்றன.

நடந்து முடிந்த இரு நிகழ்வுகளிலும் முஸ்லிம் , த்லித் , நாடார் மக்கள் பலிகடாக்களாக ஆக்கப்பட நடந்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது.

கடந்த ஒரு மாத காலத்திற்குள் நமதூரில் நடந்த நிகழ்வுகளை { ரத்தினபுரி , திடீர் கோவில் } இணைத்துப் பார்க்கும்போது ஒரு பெரிய சதியின் தொடக்க புள்ளிகளாகவே படுகின்றது.

ரத்தினபுரி , திடீர் கோவில் பிரச்சினகள் நடந்த சில நிமிடங்களில் ஹிந்து முன்னணியும் அதனைச்சார்ந்த பரமன்குறிச்சி வி.பி.ஜெயக்குமாரும் நிகழ்விடத்தில் வருகை தருவது பலவித அய்யங்களைக் கிளப்புகின்றது.

வைத்த வேட்டு சரியாக வெடிக்கின்றதா என்பதை உறுதிப்படுத்தத்தான் இந்த வருகையோ என ஆழ்ந்த எண்ணம் ஏற்படுகின்றது.

இது உளவுத்துறையாலும் நமது ஊரின் அனைத்து சமுதாய மக்களாலும் உணரப்பட வேண்டும். தீவிரமாக ஆராயப்படவேண்டும்.

காயல்பட்டினம் = முஸ்லிம் , நாடார் , தலித் , பரதவர் , தேவர் , ஆசாரிமார் என அனைத்து மக்களுக்கும் சொந்தமான மண். இங்கு ஹிந்து முன்னணி போன்ற ஃபாஸிச சக்திகளுக்கு வேலையில்லை.

ஒரு வேளை நமது உறவுகளில் சிக்கல்கள் வந்தாலும் அது நிதானம் , பொறுமை , சகிப்புத்தன்மை . விட்டுக்கொடுத்தல் , உரையாடல் போன்ற வெளிகளின் வாயிலாகத்தான் தீர்க்கப்பட வேண்டுமே தவிர உணர்ச்சிவசப்படுதல் , வன்முறை வாயிலாக தீர்க்கப்படகூடாது.

ஹிந்து முன்னணி நடத்தவிருக்கும் விநாயக சதுர்த்தி ஊர்வலத்திலும் கலவரத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் இருக்கலாம். ஊர்மக்கள் இந்த சதிவலையில் விழுந்து பலியாகி விடக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) on 25 August 2014
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36636

தம்பி (எஸ்.கே.)எஸ்.ஹெச். சாலிஹ் அவர்களின் கருத்துக்கள் அற்புதமானவை. முதிர்ச்சியின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நல்லுபதேசம்...
posted by: Shaik Dawood (Hong Kong) on 25 August 2014
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 36637

அருமையான் அழகான கட்டுரை...

நம் ஊர் மக்களுக்கு நல்லுணர்வை பற்றிய நல்லுபதேசம் அதிகம் தேவை...

பொது சொர்ப்போழிவுகளின் போது மாற்று மதத்தவர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்? பிரச்சனைகள் வரும் சமயத்தில் அதை எவ்வாறு கையாள வேண்டும்? உணர்ச்சிவசப்படும் சமயதில் நம் உணர்வுகளை எவ்வாறு அடக்கி ஆரோக்கியமான முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பன போன்ற அவசியமான அவசரமான அறிவுரைகளை மக்கள் ஒன்றுகூடும் ஒவ்வொரு கூட்டங்களிலும் குறிப்பாக... ஜுமுஆ உரையில்... பொதுக்கூட்டங்களில்... இளைஞ்ர்களுக்கான கருத்தாய்வு கூட்டங்கள் (சிறப்பு கூட்டங்கள் ஏற்ப்பாடு செய்து..) என அனைத்து உபன்னியாசங்களிலும் மிக முக்கியமாக எடுத்துரைக்க வேண்டும்...

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நல்லெனத்தை தந்து அதன்படி நடக்க நல்லருள் புரிவானாக ... ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...ALLATHEENA UNFIQOONA FIS SARRAAYI...
posted by: mackie noohuthambi (chennai) on 25 August 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36638

மருமகன் சாலிஹ் அவர்கள் - அவர் மருமகன் என்பதற்காக அல்ல அவருடைய கருத்துக்கள் ஒரு சமாதான் தூது என்பதற்காக அவர் கருத்துக்களுடன் 100 விழுக்காடுகள் நான் உடன்படுகிறேன். எனது அன்றைய கருத்து பதிவிலும் வாவு சம்சுதீன் மாமா அவர்களுக்கு அனுப்பிய குருன்செய்தியிலும் இதை குறிப்பிட்டுள்ளேன்.

எவ்வளவு பெரிய நெருப்புக் குண்டத்தை சமாதான் தண்ணீர் ஊற்றி அணைத்திருக்கிறார்கள் .வெற்றி பெற்றிருக்கிறார்கள் நம் பெரியவர்கள். இதை ஊதி பெரிதாக்க நினைத்தவர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

இளைஞர்கள் ஆவேசப் படும்போதெல்லாம் இந்த மாதிரி பெரியவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 1993இல் நடந்த மீன் கடை போராட்டத்தில் சிறை சென்று மீண்டவர்களில் நானும் ஒருவன். அந்த வலியும் வேதனையும் இன்னும் என் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது. மாறாத வடுவாக என் உடலில் தழும்புகளாக காணப்படுகிறது. வாவு மொகுதூம் ஹாஜி போன்ற பெரியவர்கள் அப்போது சமாதானக் குழுவை ஏற்படுத்தி எங்களை மீட்டெடுத்த செய்தி நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?

இறை அச்சம் கொண்டவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் இரத்தின சுருக்கமாக சொல்கிறான். ALLATHEENA YUNFIQOONA FIS SARRAAYI VAL LARRAAYI VAL KAALIMEENAL GHAILA VAL AAFEENA ANIN NAAS. வேதம் புதிதா? இல்லை. 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்லாஹ் இதை சொல்லி நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டி வெற்றி கனிகளைப் பறித்து நமக்கும் வழி காட்டி சென்ற அற்புத வாழ்க்கை திட்டம் அது. இதை நம் இளைஞர்கள் நன்கு கற்றறிந்திருக்கிரார்கள். நம் இளைஞர்களுக்கு சில நேரம் ஏற்படும் சபலங்கள் சலனங்கள் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி யோசிக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதில்லை. அது ஷைத்தானின் ஊசலாட்டம். இளமையின் வேகம் அது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நம் அடையாளம் - நமது இந்திய திருநாட்டின் அடையாளமும் பெருமையும் அதுதான். மதுவிலக்கு வேண்டும் எனக்கேட்டு நடைப் பயணம் வந்த வைகோ அவர்கள், "காயல்பட்டினம் போல் இந்த தமிழகமே மாறாதா" என்று ஏக்கப் பெருமூச்சு விட்டார், நா தழு தழுக்க தன் சந்தோஷத்தை வெளி இட்டார்.

குளிரூட்டப் பட்ட அறையில் இருந்து கொண்டு விலைமதிப்பு மிக்க மடிக் கணினியில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது மட்டுமல்ல, முகநூல் என்ற ஒரு முசீபத்தில் தங்கள் முகங்களை புதைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சம்பவ இடத்தில என்ன நடக்கிறது, உயிர்கள் உடைமைகள் எவ்வளவு விலை மதிப்பத்றது - அங்கே எவ்வளவு பதட்டம் நிலவுகிறது என்பதை உணர முடியாது.

உணர்வு என்பது வேறு உணர்ச்சி என்பது வேறு. போர்க் குணம் என்பது தீப் பந்தம் போல் எப்போதும் எரிந்து கொண்டே இருப்பது அல்ல. தீக்குச்சி போல் தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது உரசி அணைக்கப் படவேண்டும் என்பதை நம் இளைஞர்களுக்கு இந்த கட்டுரை மூலம் சாலிஹ் அவர்கள் நன்கு எடுத்து காட்டி இருக்கிறார்கள்.

மத நல்லிணக்கம் விரும்பும் நம்மவர்களுக்கும் மாற்று மத சகோதரகளுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மதங்களை கடந்து மனங்களால் இணைவோம்.. .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 25 August 2014
IP: 113.*.*.* China | Comment Reference Number: 36640

எதிரிகளை உருவாக்கலாமா என்று கேட்டால் 'உருவாக்கக்கூடாது ' என்பதுதான் பதில் .

எதிரிகள் உருவாகிவிட்டால் என்னசெய்வது , அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் இப்போது நம் முன் உள்ள பிரச்னை.

நம் ஊரில் திடீர் கோயில்கள் அவ்வப்போது உருவாவதும் , பிறகு சிலகாலத்திற்கு பிறகு மறைவதும் வாடிக்கையாவிட்டது. இந்துக்கள் வழிபடுவதற்கு கோவில் வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது இந்துக்களுடைய பகுதியில் அவர்களுக்கு உட்பட்ட சொந்த நிலத்திலேயே அமையப்பெறவேண்டும். மாறாக முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமித்தோ அல்லது முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிள் அரசு ஆக்கிரமிப்பு நிலங்களிலோ மதநல்லினக்கத்திற்க்கு கேடு விளைவிக்கும் முறையில் அமையப்படக்கூடாது. அரசு இம்மாதிரியான சட்ட ஒழுங்கீனங்களை முளையிலேயே கில்லிஎறியவேண்டும்.

காயல்பட்டணத்தில் இன்னும் இரண்டு இடங்களில் இதுபோன்ற நில ஆக்கிரமிக்கப்பட்ட திடீர் வழிபாட்டுத்தலங்கள் உள்ளதாக அறியமுடிகிறது. அவற்றிற்கும் இதுபோன்ற சுமுக தீர்வு எட்டப்படவேண்டும்.

இது பொது வலைத்தளம் என்பதால் 'இந்த பிரச்சனை எங்கிருந்து துவங்கியது அல்லது யார் இதை செய்ய ஊக்கம் கொடுத்தது' போன்றவற்றை விரிவாக எழுதமுடியவில்லை. எனினும் சுருக்கமாக எழுதுகிறேன்.

காயல்பட்டனத்தை தனி தாலுகாவாக அறிவித்து நம் ஊரிலேயே தாலுகா அலுவலகம் அமைவதற்கு நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் ஊர் அனைத்து அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் அதற்க்கான முயற்சிகளில் இன்றே துவங்கவேண்டும். இப்போதே ஈடுபடவேண்டும். சற்றும் தாமதிக்கக்கூடாது. இதுபோன்ற பிரச்சனைகளுக்க் இது ஒன்றே தீர்வு.

இப்மாதிரியான சலசலப்புகள் பெரும் கலவரமாகாமல் தடுத்த பெருமை ஒருசில காவல்துறை அதிகாரிகளையே சாரும். அன்று முன்னாள் DGPவால்டர் எஸ் தேவாரம் அவர்களும் . இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு துறை அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) on 25 August 2014
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36645

தம்பி சாலிஹின் கட்டுரை அருமை. மறைந்த உவைஸ் ஹாஜியார் அவர்கள் நமதூர் K.M.T .மருத்துவமனையில் விரும்பத்தகாத நிகழ்வு நடந்த போது பொறுமையுடன், அதே சமயத்தில் சாதுரியமாக காய் நகர்த்தி மிகப்பெரிய பூதகரமாக வெடிக்க சில புல்லுருவிகள் நினைத்த போது சுலபமாக தீர்த்தார்கள். இதற்கு தான் பெரியவர்களின் வழிகாட்டுதல் அவசியம் என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். சில விஷமிகள் குளிர் காய நினைப்பார்கள். அதற்கு எல்லாம் வலி வகுத்திட கூடாது. நம்மிலும் புல்லுருவிகள் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவைக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூரை எத்தகைய தீயவர்களின் சகவாசங்களிலும் இருந்து காப்பாற்றுவானாக. இந்த தருணத்தில் நமதூர் ஐக்கிய பேரவை புதுபொலிவுடன் நடைபோட நல்லருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அற்புதமான கட்டுரை
posted by: Ahmed Mohideen (Jeddah) on 25 August 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 36679

மிகச் சரியான தருணத்தில் வரையப்பட்டுள்ள கட்டுரை. நான் நேற்று தம்பி கே.ஏ.எம்.அபூபக்கரோடு பேசும்போது பொது தளங்களில் எழுதும் சிலரது பக்குவமில்லா வார்த்தை பிரயோகங்களை பற்றி ஆதங்க பட்டேன். தம்பி ஸாலிஹ் அருமையாக சொல்லவேண்டியதை சொல்லியிருக்கிறார்.

நண்பர்களே நமக்குள்ள பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வது மிக முக்கியம் என்பதை உணர்த்தி இருக்கிறார். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். பொறுப்பில்லாத எழுத்துக்கள் தேவைக்கில்லாத பிரச்சனைகளை உண்டாக்கும்.

தம்பி ஸாலிஹ் இது போன்ற பல கட்டுரைகள் வடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள்பாளிப்பானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...அனைத்தும் நன்மைக்கே..!!
posted by: சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) on 25 August 2014
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36687

எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே.

அருமையான உபதேசம் செய்யும் கட்டுரையும் கூடவே நிகழ்வை நேரில் பார்த்த உணர்வை கொடுத்த கட்டுரை.

சம்பவம் நடைபெற்றதும் பலரும் பல வித செய்திகளை பரவவிட்டனர். முதல் நியூஸ், கட்டும் கோயிலை படம் பிடித்த செய்தியாளரை அடித்து விட்டார்கள் என்று. எவ்வளவு பொறுப்பற்ற தனமாக செய்திகளை பரப்புகிறார்கள்.

கட்டுரையாளர், செய்தியாளர் (நிருபர்), புகைப்பட நிருபர் , சமூக சிந்தனையாளர் என்று குறிப்பிட்ட சகோதரர் எஸ்.கே.ஸாலிஹ், இவை அனைத்தையும் நிரூபித்து விட்டார். வெல்டன் தம்பி.

இந்த நிகழ்வை சுமூகமாக முடித்த வல்ல அல்லாஹ்விற்கும், அதிகாரிகள், சகோதரர்கள், மாற்று மத சகோதரர்கள் அனைவர்களுக்கும் நன்றிகள் பல கோடி.

சாளை S.I. ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by: netcom buhari (chennai) on 25 August 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36688

தான் பார்த்ததையும் இரு தரப்பிலும் பேசியதையும் எழுத்து மேடை மூலம் தெரவித்த sks என் நன்றி யை தெரிவித்து கொள்கிறேன்.

அலஹுவின் உதவியால் இரு புறமும் பிரச்சனை இல்லாமல் முடிந்தது. அதை வேலையில் இனி மேலும் இதை போண்டு பிர...”ச்சனை வராமல் இருக்க

“அது மட்டும் தீர்வாகாது... ஊரிலுள்ள எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்... (Copy & paste )

நாம் தெரிந்தோ , தெரியாமலோ நிலத்தை ஆக்ராமிப்பு செய்து இருதால் , நம் மார்க்க சட்டபடி உரியவர்களிடம் ஒப்படைத்தால் இரு உலகிலும் அலஹுவின் தண்டனை இல் இருந்து தப்பிக்கலாம். சமுதாயத்துக்கு நல்லது செய்தால் மக்கள் தலை நிம்ருந்து பார்ப்பார்கள், மாற்றி பண்ணினால் சொந்த பிள்ளைகளே மதிக்காது இது தான் உலகம். மக்களே அல்லாஹு கு பயந்து கொள்ளுகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:.இறையே நீயே காப்பு!! ...
posted by: A.R.Refaye (Abudhabi) on 25 August 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36693

உண்மைலேயே காயல்பட்டணத்தில் பதட்டம் என்ற முதல் செய்தியை காலையில் பணிக்கு செல்லும் நேரத்தில் FB கண்டவுடன் அலுவலகத்தில் இருப்புக்கொள்ளாமல் தொடர் அலைபேசி தகவல் சேகரிப்பு மட்டுமல்லாது காட்டு தீயாய் பரவப்பட்ட, பறப்பபட்ட செய்தியால் மீண்டும் ஒரு வக்கிரக கலவரம் கயவர்களால் கட்டவிழ்த்து படுமோ என்ற பயமும்,பட படப்பும் உள்ளபடியே என் போன்ற வெளி நாடு வாழ் காயலருக்கு அனைவருக்கும் எற்பட்டிருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

எங்களின் உணர்சிகள் இவ்வாரிருக்க, இடர் தரும் இக்கற்சிலை நீக்கியே ஆகவேண்டும் என்று நம் இளைய தலைமுறை உணர்ச்சி பெருக்கால் தகாத வார்த்தைகளால் தாம் சார்ந்துள்ள அமைப்புகளையெல்லாம் மறந்து நம் மண்ணின் மாண்பு காக்கபடவேண்டும் என்ற எண்ணத்தில் சாடியிருக்க கூடும் இதை சரியென்று நினைத்தாலும் நம் பெருந்தகைகளின் பரந்த எண்ணமும், நினைவும் ஒற்றுமையின் நோக்கி மையம் கொண்டிருந்ததால் தான் இருவருக்கான சுமுக ஒப்பந்தம் இத்திடீர் தீய்க்கு தீர்வாய் அமைந்தது,இறையருளால் இது போன்ற நிகழ்வுகள் இனி ஒருபோதும் நம்மண்ணில் ஏற்படாமல் இறையே நீயே காப்பு!! .

சிறந்த பாடத்தை உம் கட்டுரையால் உணர்தோம் ,உம் போன்ற உயர்ந்த உள்ளங்கள் நம் மண்ணில் உலவுவதால்தான் நாங்கள் கடல்கடந்து நிம்மதி நித்திறையில் நிம்மதி அடைகிறோம். என்போன்ற என்னற்ற சகோதரர்களின் நன்றியும் ,பாராட்டுகளும் உங்கள் அனைவர்களுக்கும் உண்டாகட்டும்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. காலத்திற்கு ஏற்ற அவசியமான கட்டுரை!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) on 25 August 2014
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 36711

நமதூரைப் பொருத்த வரையில் அனைத்து சமுதாய மக்களும் அண்ணன் தம்பிகளாகவே பழகி வருன்றனர். அதற்கோர் உதாரணம் மெகா கூட்டமைப்பைச் சொல்லலாம். மாற்று மதத்திலும் நமதூர் நன்மைக்காக பாடுபட்டு வரும் எத்தனையோ நல்ல மனிதர்கள் உள்ளனர். அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே மெய்சிலிர்த்தேன்.

காயலின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்க எண்ணும் சிலர் பல்வேறு குழப்பங்களை உருவாக்க நினைக்கின்றனர். அதில் முதன்மையாக எளிதில் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு முட்டி மோதச் செய்யும் மதக்கலவரத்தை தூண்டினால் மட்டுமே காயலின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கலாம், இந்து முஸ்லிம் என வேறுபடுத்தி வேண்டத்தகாத பல அசம்பாவிதங்களை நிகழச் செய்து அதன் மூலம் பற்றி எரியும் கலவரத் தீயில் குளிர்காய நினக்கும் கேவலமான புத்தியைக் கொண்ட சில பாஸிஸ்ட்டுகளுக்கு பாடம் கற்பிக்கும் அற்புதமான கட்டுரை இது!

நாங்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி ஒற்றுமையை உருக்குலைக்க ஒருபோதும் துணை போக மாட்டோம். சூழ்ச்சிகளை எமது சமயோசித சிந்தனையால் எதிர் கொண்டு சகோதர சமுதாய மக்களுடன் கை கோர்த்து முறியடிப்போம். இதற்கெதிராக இந்து முன்னணி அல்ல வேறு எந்த முன்னணி வந்தாலும் காயலைக் காயப்படுத்த விட மாட்டோம். எதிரிகளை உருவாக்கவும் மாட்டோம், உருவாக விடவும் மாட்டோம். அனைத்து மதத்தினரோடும் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் பலப்படுத்துவோமாக…!

-ஹிஜாஸ் மைந்தன். சிங்கப்பூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது! .
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 25 August 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36716

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். என தருமை மருமகனாகிய (என்னை மாமா என்றுதான் அழைப்பார்) S.K.சாலிஹின் சிந்தனையின் ஆக்கப்பூர்வமான அறிவூற்றின் அனுபவ அறிக்கையை பார்த்து அசந்து விட்டேன். அல்ஹம்திலில்லாஹ்! யாருடைய வித்து, கத்துக்கொடுக்கத் தேவையில்லை.

அரிவாளை தூக்கி ஆவேசமாக வருபவனின் வெறியுணர்வைக்கூட அன்பு சாலிஹின் அமைதிக்குறிய செயலால் அப்படியே அசந்து விழுந்து விடுவான். அந்த அளவிற்கு மிக, மிக முதிர்ச்சியான முன் உதாரண சிந்தனைச் சுரங்கம்!

ஒரு மீன்கடை விவகாரத்தால் ஊரே பத்திஎரிந்து ஜென்ம பகையாய் மாறிவிட்ட சூழ்நிலைபோல் இரு சமூகத்தார்களும் எதிரியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்வோமோ என்ற அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சகஜ நிலை வந்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் அவர்கள் வழிபாட்டுத்தள கோயிலை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை எளிதில் தீர்வாகக்கூடியதா?ஆனால் ஹம்திலில்லாஹ், எவரும் எதிர்பார்க்கா வண்ணம் எல்லாம் வல்ல அல்லாஹ் எதிரியின் இதயத்திலும் இலகுவான எண்ணத்தை உதயமாக்கி எல்லோரும் மகிழும்வண்ணம் உன்னத தீர்ப்பை தந்திட்டான்!

இணக்கமான ஒரு நிலைக்கு ஒத்துவந்த அப்பகுதி அத்தனை அன்பு சகோதரர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அதே நேரத்தில் அவர்கள் கேட்கும் கேள்வியானது, எங்கள் கோயில் ஐந்தடி அகலமுள்ளது ஆக்கரமிப்பு நிலத்தில் இருக்கிறது ஒத்துக்கொள்கிறோம், ஆனால் ஐந்நூறு அடிக்குமேல் நீளமுள்ள ஆக்கிரமிப்பு கோட்டை சுவர் கட்டப்பட்டுள்ளதே அது உங்கள் ஊரிலுள்ள ஒரு நடுநிலை ஆளுக்கு கூடவா தெரியாமல் போய்விட்டது. நீங்கள் சரியான நேர்மையானவர்களாக இருந்தால் அந்த ஐநூறு அடி ஆக்கிரமிப்பு சுவரை இடித்துவிட்டு தனியாக நிற்கும் அந்த ஐந்தடி கோயிலை இடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் நீதவான்களாகிய உங்களின் நேர்மை பாராட்டுதலுக்குறியதாய் ஆகி இருக்குமே! அப்படி ஏன் நீங்கள் செய்ய முன்வரவில்லை? ஒருவேளை கோயில் மட்டுமே இடிபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பா? என்ற கேள்விகளுக்கு நம்மால் பதில் தரமுடியாமல் வெட்கித் தலைகுணிய வேண்டியது நமது நிலையாக மாறிவிட்டது !

எது எப்படியோ என்ன நடக்குமோ என்று பதறிதுடித்த நம் அனைவர்களின் நெஞ்சத்திலும் பாலைவாற்றியது மாதிரி நல்லதொரு முடிவைத்தந்தான் நமதிறைவன்!

ஆகவே அன்பு நெஞ்சங்களே இனிஇந்த சம்பவத்தை யொட்டியுள்ள எந்த பதட்டமான, பாதகமான செய்திகளை முற்றிலும் உண்மையறியாமல் ஊர் மக்களுக்கு முகநூல் முதற்கொண்டு மற்றைய அனைத்து ஊடகங்களிலும் பரப்பிட யாரும் உணர்ச்சிவசத்தால் தெரியாமல் துணை போக வேண்டாம் என்று அன்புடனும், ஒற்றுமையை விரும்பும் ஒரே நோக்கத்துடனும் விரும்பி கேட்டுக்கொள்கிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிநிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 25 August 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36721

அடுத்த வீட்டு நண்பனோடு முரண்பட்டு கோபத்தோடு தாயாரிடம் வரும்போது நம் கோபத்தை தணிக்க தயார் தரும் ஆறுதல் போன்றுள்ளது. தம்பி குறிப்பிட்டுள்ளது போல் வரும் காலத்தில் நமது முன்னோர்கள் காட்டித்தந்த தர்மத்தை கடைபிடிப்பது நம் அனைவர் மீதும் கடமை!

நமதூரை பொறுத்தவரை பூகோள அமைப்பிலும், வியாபார அமைப்பிலும் பாதுகாப்பு குறைவே! அதிலும் நமது சமுதாய ஆண்களில் அதிகம்பேர் வெளிநாடு மற்றும்வெளியூர்களிலே பொருளீட்ட ஊரை விட்டு அதிக நாட்கள் வெளியிலேயே உள்ளோம். இதனால் நாம் வேகத்தை விட்டு விவேகத்துடனேயே செயல்பட வேண்டும். இதுவும் நம் முன்னோர்கள் பல விசயங்களில் கற்று தந்த பாடம்.

இந்த பிரச்சினையில் கோவில் முதலில் வந்ததா? கோட்டைச்சுவர் வந்ததா என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஏதோ சாக்கு சொல்ல வேண்டும் என எதிர்தரப்பு சொல்லியிருக்கலாம். இந்த நேரத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு வெளிவரக்கூடாது. நமது ஒற்றுமையே முக்கியம். அல்ஹம்துலில்லாஹ் அதுவெளிப்பட்டது.

இனியும் இது போன்ற பிரச்னைகள் வராமல் இறைவன் காப்பானாக - ஆமீன். நம் ஓற்றுமையை நிலை நிறுத்துவானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இனிமேலும் கேள்விகள் வேண்டாம்
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 25 August 2014
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36722

அன்பர்களே,

நல்லவிதமாக இவ்விஷயம் முடிவுற்றது. நம்மில் பலருக்கும் சில கேள்விகள் எழும். ஆனால் அவை ஒரு சாராரை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம்.

அன்பின் ஆதம் சுல்தான் காக்கா அவர்களுக்கு,

"ஐநூறு அடி ஆக்கிரமிப்பு சுவரை இடித்துவிட்டு தனியாக நிற்கும் அந்த ஐந்தடி கோயிலை இடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் நீதவான்களாகிய உங்களின் நேர்மை பாராட்டுதலுக்குறியதாய் ஆகி இருக்குமே! அப்படி ஏன் நீங்கள் செய்ய முன்வரவில்லை?" -- இந்த கேள்விக்கு என்னிடம் பதில் உள்ளது. அது சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். ஆனால், சில விடயங்களை பொது இடத்தில அலசுவது எனக்கு நல்லதாக படவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by: thanga thamby kadersahib (Saudi Arabia Riyadh) on 25 August 2014
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36723

Dear thamby congratulations nice br


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by: Vilack SMA (Kayalpatnam) on 26 August 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36728

இந்த ஊர் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஊர் . மூன்று சமுதாய மக்கள் , சகோதர பாசத்துடனும் , ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் , வியாபார விசயங்களில் உதவி புரிந்தும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகிறோம் . வேண்டாத ஒருசில விசமிகளே , தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் . அவர்களை இனம்கண்டு , அவர்கள் சமுதாயத்தினர்மூலமே அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி , மனம் திருந்த செய்வோம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. கட்டுரை மிக அருமை...! இக்கட்டுரை மூலம் நான் சில தெளிவுகளை உணர்ந்தேன்...!
posted by: தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 26 August 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36731

அறவழியில் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை சகோதரர் தம்பி எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் மிக தெளிவாக இளைய தலைமுறைகளுக்கு கட்டுரையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்..!

வீம்பு தனமும் - வம்பு தனமும் - ஈகோ வும் இருசாராரையும் பகையை தான் வளர செய்யும்..

காலகாலமாக நமதூரில் கட்டிக்காத்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க காயல்பட்டினத்தின் சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் என்றும் தொடரவேண்டும் - மேலும் இப்பேரூரின் சமூக ஆர்வலர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் போன்றோரின் சமூக அக்கறை பணியும் தொடரவேண்டும்... வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 26 August 2014
IP: 113.*.*.* China | Comment Reference Number: 36740

++++++++++++++++++++++++++
எங்கள் கோயில் ஐந்தடி அகலமுள்ளது ஆக்கரமிப்பு நிலத்தில் இருக்கிறது ஒத்துக்கொள்கிறோம், ஆனால் ஐந்நூறு அடிக்குமேல் நீளமுள்ள ஆக்கிரமிப்பு கோட்டை சுவர் கட்டப்பட்டுள்ளதே
+++++++++++++++++++++++++++++++

ஏன் இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா உங்கள் ஆக்கிரமுப்பு கோவில் கட்டுவதர்க்கு ? காயல்பட்டனத்தில் இவ்வாறு எத்துனை இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளன, அங்கெல்லாம் நீங்களும் ஆக்கிரமிப்பு கோவிலை கட்ட வேண்டியதுதானே ? உங்கள் செய்கைகளை நியாயப்படுத்துவதற்கும், உங்களுக்கு பல்லக்கு தூக்கி பாலாபிஷேகம் செய்வதற்கும் எங்கள் ஊரில் எளிதாக ஆட்கள் கிடைப்பார்கள் .

காயல்பட்டணத்தில் ஒற்றுமை என்பது வெறும் ஐந்து நிமிடம்தானோ?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 26 August 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36750

அஸ்ஸலாமு அலைக்கும்,

காயல்பதி மொத்த இந்தியாவுக்கும் , குறிப்பாக தமிழகத்துக்கு மத ஒற்றுமையை காக்க பாடமாக என்றும் திகழும் என்பது கண்டிப்பாக உண்மை இதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக ஆமீன் .

மாநில அரசு , மாவட்ட நிர்வாகம் , காவல் துறை மற்றும் வட்டாசியர் அனைவரும் சரியான நல்ல பணியை செய்து தேவையற்ற அசம்பாவித நிகழ்வுகளை நல்ல முறைகளில் நிறுத்தி நல்ல சூழ்நிலையை நிலைபடுத்தியுள்ளனர் அவர்கள் அனைவர்க்கும் குறிப்பாக தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி .......

எல்லாவற்றையும் தாண்டி நம் ஊர் அணைத்து தரப்பு மக்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் இந்த ஊரில் எந்த விதமான மத , ஜாதி , இன , நிற மற்றும் எந்த விதமான சச்சரவுகளும் நிகழாது .

சில மனித குல துரோகிகள் எல்லா தரப்பிலும் உலகம் முடியும் வரை இருந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை இனம் கண்டு பொதுவாக மனித நேயம் கொண்டவர்கள் அனைவரும் கவனமாக இருந்து அமைதியை நிலைநிறுத்த வேண்டும் . இது மனித குலத்தில் பிறந்த அனைவரின் கடமை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. விபரம் அறிய விளைகிறேன்!.
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 26 August 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36751

தம்பி இபுராஹிமுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்!

திடீர் கோவில் முளைத்த அன்றே இதுபோன்ற ஒட்டுமொத்த ஒற்றுமையான எதிர்ப்பை நாம் காட்டியிருந்தால் அன்றே தீர்வு கண்டிருக்கலாம்!ஆனால்,

அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் பொடுபோக்காக விட்டு விட்டும் அதற்காக சிறு பணத்தொகையை செலவழித்து தீர்வு காண முன்வரும் தருணத்தில் அந்த மிக சிறு தொகையைக் கூட தர மனமில்லாமல் மறுத்தாலும் இப் பிரச்னை முற்றிவிட்டது. அப்படி முற்றிய காலம் வருடங்களாக வளர்ந்து அது அந்த இடத்தில இருக்கக்கூடிய உரிமையைப் பெறக்கூடிய அளவிற்கு காலங்கள் வருடங்களாக உருண்டோடி விட்டது!

இந்த நேரத்தில் நமக்கிருக்கின்ற ஒரே வலுவான ஆயுதமான ஆதாரம் நெஞ்சாலை ஆக்கிரமிப்பில் அது அமைந்திருக்கிறது என்ற நிலையைத்தான் வலியுறுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதால், அதே ஆக்கிரமிப்பு விவகாரத்தை அவர்களும் கையிலெடுக்கிறார்கள் என்ற அவர்களின் கேள்வியத்தான் நான் குறிப்பிட்டேன்,அவர்கள் கேட்டதை அப்படியே எழுதிய நான், என் நடுநிலை நெஞ்சத்தினுடைய ஒரு நெருடலின் வெளிப்பாட்டையும் சற்று வெளிப்படுத்தி இருக்கிறேன். அவ்வளவுதான். என் நெருடலுக்கு தாங்களிடம் தக்க விபரம் இருக்குமாயின் அதை என் e -mail லில் தெரிவித்தால் திருப்தி அடைவேன்!

இதற்குமேல் இதுபற்றி இதில் நாம் கருத்துபரிமாரத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். மேலும் தாங்கள் விளக்கம் கூற முன்வந்தமைக்கு நன்றி கூறி ஏனைய விபரம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. நாமார்க்கும் பகையல்லோம்!
posted by: Javed Nazeem (Chennai) on 26 August 2014
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36752

பக்குவமான கட்டுரை. வார்டு தேர்தலில் நீ வென்றிருந்தால் உனது சேவை அனேகமாக ஒரு வார்டோடு நின்றிருக்கலாம். இப்போது முழு சமுதாயத்திற்க்கும் உனது பஙளிப்பைத் தடையின்றி வழங்கமுடிகிறது. எல்லாம் நன்மைக்கே. جزاكم الله خيرا

கருத்து கூறும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என பெரியவர்கள் சொல்வார்கள். நமது கருத்தை எங்கு வெளிப்படுத்தினாலும் பின் விளைவுகளை உண‌ர்ந்து செயல் பட வேண்டும்.

நம்முடைய நாட்டின் சூழ்நிலைகள் மாறி இருக்கின்ற‌து. ஆங்கிலேயனிடம் கருணை வேண்டி நின்ற (Read more at: http://goo.gl/qHI1n5, http://goo.gl/NqdbrN) கொள்கைவாதிகளின் வழி வந்தவர்கள் முன்னேற்றத்தின் பெயர் சொல்லி அதிகாரத்திற்க்கு வந்திருக்கின்றார்கள். யார் அதிகாரத்திற்க்கு வந்தாலும் இந்தியா நமது நாடு என்கிற‌ உணர்வு வேண்டும். அச்சமோ, தயக்கமோ தேவையில்லை. ஏனெனில் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு அளவிட முடியாதது. தங்களுடைய உயிரையும் பொருட்களையும் மட்டும் அல்ல தங்கள் முன்னேற்றத்தையே தியாகம் செய்ய முன் வந்தார்கள்.

தன்னுடைய வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைப்பதில்லை என்று சகோதரர் சாளை பஷீர் சொல்வதுண்டு. சுதந்திரப் போருக்கு வித்திட்ட கேரள மாப்பிள்ளாக்கள், நேதாஜியுடன் தோளோடு தோள் நின்று போராடிய ஷா நவாஸ் கான், ஹபீபுர் ரஹ்மான், கப்பலோட்டிய தமிழனுக்கு கப்பல் வாங்க பொருள் உதவி செய்த ஹாஜி பக்கீர் முஹ‌ம்மது சேட் போன்றோரின் தியாகங்கள் மற்றும் நம் முன்னோர் செய்த‌ எண்ணற்ற தியாகங்கள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். நம்மைத் தூண்டி விட்டு கலகம் செய்து கட்சி வளர்க்க விரும்பும் ஃபாசிஸ‌ சக்திகளுக்கு நம்மை அறியாமலும் துணை போய் விடக் கூடாது. நம் முன்னோர்களின் தியாகங்கள் வீணாகிட அனுமதிக்கக் கூடாது.

அமிட்ஷா தென்னகத்தில் கட்சி வளர்க்க விரும்புவதால், இது போன்ற சூழ்நிலைகள் தொடர வாய்ப்புள்ளது. உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், இவற்றை பக்குவத்தோடும் அறிவோடும் எப்படி அணுகுவது என்கிற கல்வி நம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். KEPA போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது பற்றி ஒரு சகோதரர் கருத்து கூறி இருந்தார். நிச்சயமாக அப்படி ஒரு அமைப்பு தேவை. இரண்டு சமுதாயத்திலும் உள்ள நல்ல தலைவர்களைக் கொண்டு ஒரு நல்லுறவு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

பா.ஜ.க தமிழகத்தில் வள‌ர்ந்தால் அது அ.தி.மு.க.வின் வாக்குகளை பெருவாரியாக எடுத்துக் கொள்ளும். எனவே அ.தி.மு.க. வினர் இரட்டிப்பு கவனத்தோடு இது போன்ற கலகம் விளைவிக்கும் செயல்களை அணுக வேண்டும்.

நடைபெற்ற சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மா.துரை, கோட்டாட்சியர் - வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிக‌ளின் நடவடிக்கைகள் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது. உங்களைப் போன்ற நியாயவான்கள் இருப்பதால் தான் தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது.

இறுதியாக ஒரே ஒரு கருத்தை கூறி இந்த நீண்ட பதிவை நிறைவு செய்கிறேன். “இந்த உலகம் இறை நம்பிக்கையாளர்களுக்கு சிறைச்சாலைப் போன்றது” என்று இறைத் தூதர் சொன்னார்கள். திருமறையில் இறைவன் கூறுகிறான் "உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)" (2:214)

பொது வாழ்விலோ, தனி வாழ்விலோ சோதனைகள் ஏற்படும் போது தளர்ந்து விடவோ, வரம்பு மீறவோ வேண்டாம். இந்த உலகின் வெற்றி தோல்விகள் நிரந்தரமானது அல்ல. எந்த ஒரு செயலிலும் இறைவனின் பொருத்தத்தை மட்டுமே எண்ணி செயல் படுவோம். அப்படிப் பட்ட நன்மக்களாக நாம் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சமூக ஒற்றுமை
posted by: கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (காயல்பட்டினம் ) on 28 August 2014
IP: 223.*.*.* India | Comment Reference Number: 36789

சகோ. ஸாலிஹ்

மிகவும் முதிர்ச்சியான கட்டுரை!

பயண முனைப்பில் இருந்ததனால், உடனடியாக இதனை வாசிக்கவில்லை. இப்போது வரி வரியாக வாசித்தேன்; மகிழ்ந்தேன்.

குறிப்பாக, உம்மைப் போன்ற ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக இறையச்சமுடையோர், சமுதாயப் பிரச்சினைகளை பக்கச்சார்பின்றி, நேரிய தராசுடன் நீதமாக, நியாயமாக, நிதானமாக அளவிடும்போது சமூக ஒற்றுமை மிளிரும்; வேற்றுமையாளர்களின் எண்ணங்கள் தவிடு பொடியாகும்

well done
Keep it up


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. காலத்துக்கேற்ற நடுநிலையான கட்டுரை.
posted by: சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) on 28 August 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36794

தம்பி SK ஸாலிஹ் அவர்கள், இரு தரப்பாரின் கருத்துகளை மிக அழகாக விளக்கியுள்ளார். ஊரில் இல்லாதவர்கள், தங்களுக்கு கிடைத்த, ஆதராமில்லாத, மிகைப்படுத்தப்பட்ட தகவல்களால் (முகநூல் & வாட்சப்) குழம்பியவர்களுக்கு, உண்மையான ஒரு நேரடி வர்ணனையாக இருந்திருக்கும். தம்பிக்கு பாராட்டுக்கள்.

சகோதரார் ஆதம் சுல்தான் காக்கா அவர்களின் பதிப்பில், பிரச்சனைக்குரிய, ஆக்கிரமிப்பு சுவர் பற்றி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களின் கருத்தை கேட்டு பதிந்திருந்தால், அவரும் விளக்கம் பெற்றிருப்பர், நமக்கும் கிடைத்திருக்கும். அவசரப்பட்டிருப்பர் என்று நினைக்கிறேன்.

எப்போதுமே, நமது உள்ளக் கருத்துக்களை, பொது தளங்களில் அனைத்தையும் எழுதி விட முடியாது. சில விஷயங்களை போது தளங்களில் பதியாமல் இருப்பது நம் யாவருக்கும் நல்லது.

ஆக்கிரமிப்பு, அது யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியது. நமது வீட்டை, தெருவில் ஆக்கிரமித்தாலும் சரி, முடுக்குகளில் (நமக்கு உரிமை உள்ளதாக இருந்தாலும்) ஆக்கிரமித்தாலும் சரியே. ஆக்கிரமிப்பு வழக்குகளில் நீதி மன்றங்களுக்கு சென்றாலும், ஆதரவான தீர்ப்பு கிடைக்காது.

இந்த சர்ச்சைக்குரிய- ஆக்கிரமிப்பு சுவர் பற்றி நான் விசாரித்த வகையில், நீள சுவற்றுக்கு வெளியே, சுமார் 18 அடி அகலம் வரை, உரிமையாளர்களின் நிலம் சுற்றுச் சுவருக்கு வெளியே (அதாவது வெளி சாலையில்) உள்ளது.

நீங்கள் ஊருக்கு வந்தால், அதன் உண்மையை அறிந்து கொள்வீர்கள்.

அல்லாஹ் உதவியால், எல்லாம் நன்மையாக முடிந்தது. இனிமேல் இதை போல், நமது நிலங்களில் அசம்பாவிதம் நடைபெறாமல், முளையிலே கிள்ளி எறிய வேண்டும். மொத்தத்தில், ஒரு அசம்பாவிதம் ஏற்படுத்தி, அதில், இந்த கோயிலை நிரந்தரமாக வைக்க எத்தநித்தவர்களின் சூழ்ச்சியை, சூழ்சியாலர்களுக்கு எல்லாம் மகா சூழ்ச்சியாலன் அல்லாஹ், முறியடித்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...“Children must be taught how to think, not what to think.”
posted by: Eassa Zakkairya (Jeddah) on 03 September 2014
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36967

“Children must be taught how to think, not what to think.”

அன்பின் S.K மாமாவை நன்றியுடன் நினைவுகூறுகிறேன் "மகன் தந்தையின் ரகசியமாக இருக்கிறான்"

வெகு சிலரே சமூகத்தின் "நியாய தராசுகளாக தங்களை செதுகிறர்கள் - சரியாக நியாயம் செய்கிறார்கள் - உணர்வுகளை சரியாக படம்பிடித்து அதற்கு தீர்வும் காண்கிறார்கள் - வல்ல நாயனும் ஒரு சிலர்களை மட்டுமே தெரிவும் செய்கிறான் போலும்.

"விவேகம் மானுடத்தின் உயிர் நாடி"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved