Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:02:26 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 122
#KOTWEM122
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 21, 2013
காயலின் பழமை: ஒரு கண்ணோட்டம்!

இந்த பக்கம் 3813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இணைபிரியாத இணையதள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹிஜாஸ் மைந்தன் எழுதிய சொந்த மண் சொல்லும் கதை தொடர் ஒன்றை படித்து கருத்தை எழுதினேன். இன்னும் பல கருத்தை அதில் எழுதிக் காட்ட முடியவில்லை. ஓர் கட்டுரையாக வடிக்கும் அளவு அது நீண்டதாக இருப்பதால் ஹிஜாஸ் மைந்தனிடம் அனுமதி பெற்று இதை எழுதுகிறேன்.

அவர் அன்றைய வணிகக் கடை குறித்து எழுதப் போவதாய் சொன்னதால் பழமை வாய்ந்த கடைகள் பட்டியலை அவரிடம் கொடுத்துள்ளேன். நமதூர் பஜார் வீதி அன்று எப்படி இருந்தது என்பதைப் பற்றி மட்டுமே இதில் குறிப்பிட விரும்பினேன். அன்று அங்காடிகள் இருந்த இடம் இன்று என்ன இருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளது நீங்கள் புரிந்து கொள்ளவே இதை இணைத்துள்ளேன்.

நமது பஜாரில் முதல் அங்காடி கடை இருந்த இடம்:

நமது பஜாரில் 1944 ல் கட்டப்பட்ட முதல் வணிக வளாகம் 8 கடை சாகுல் ஹமீது காக்கா கட்டிய கட்டிடம்தான். அது இன்று ஜெயந்தி சுவீட் கடை இருக்கும் பகுதி கட்டிடமாகும். அந்த கட்டிடம் இன்றும் உள்ளது. அந்த புகைப்படம் காணலாம்.



அதற்கு பின் மஹலறா தங்கும்விடுதி கட்டிடம். 1947ல் அதிலுள்ள கடைகள் மேல்தள அலுவலகம் குறித்து ஹிஜாஸ் மைந்தன் குறிப்பிட்டு உள்ளார். அதில் படிக்கவும். அந்த கட்டிடத்திற்குப் பின் வாரச்சந்தை வியாழன் கூடும். ஊரில் உள்ள ஆண்கள் அங்கு வந்து காய்கறி, பழங்கள், ஜவுளி, மண்பாண்டங்கள் வாங்குவார்கள். குறிப்பாக பெண்கள் தூரத்தில் நின்று கொண்டு சிறுவர் மூலம் சோற்றுப் பானை, மீன்சட்டி, கொமஞ்சான் சட்டிகளை வாங்கிச் செல்வார்கள். இந்தக் காலம் போல ஆண்களுடன் சேர்ந்துத பெண்கள் சந்தை (மார்க்கெட்) யில் ஒன்றும் வாங்க வரமாட்டார்கள். அது வெட்கமாக கருதும் காலம். மீன் சட்டியில் மீன் ஆக்கிய அடுத்தநாள் மீன் ஆணம் கட்டியாக மீன் சட்டியின் ஓரத்தில் படிந்து இருக்கும். அதை ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையோ தனியாக இருக்கும். நினைத்துப் பாருங்கள்.

பெண்கள் கூடும் கொள்ளைக்கடை இரண்டு:

வியாழன் வாரச் சந்தைக்கு மேற்குப் புறம் நீண்ட அகலமாக வெட்டை இருக்கும். இதை பெண்கள் கொள்ளைக் கடை என்பார்கள். இதுபோல் அலியார் தெரு ஓட்டைப்பள்ளிக்கூடம் (ஊராட்சி ஒன்றிய ஸ்கூல்) எதிர்புறம் முடுக்கு வழியாக பரிமார் தெருவைச் சேர்ந்த பெண்கள் கொள்க்ளைகடை இருந்தது. இரு பெருநாட்களிலும் பெருநாள் கந்தூரி கடை என்ற பெயரால் பெண்கள் பலர் கூடுவார்கள். பெண்கள் நடத்தும் வணிக அங்காடிகள் நிறைய இருக்கும். வடை, சர்பத், மஞ்சள் மிட்டாய் தட்டு தட்டாக செய்து விற்பார்கள். ஆண்கள் யாரும் வரமாட்டார்கள்.

அக்காலத்தில் பெண்கள் கடற்கரை போவது கேவலமாக கருதப்பட்டது. தெருக்கடைகளில் தொண்டுவாசல் பக்கம் மறைந்து நின்று மளிகைப் பொருட்களை வாங்குவார்கள். எல்லாத் தெருக்களிலும் முடுக்குப் பக்கம் திரை இருக்கும். நீண்ட முடுக்காக இருந்தால் முடுக்கில் இடையிடையாக இருபக்கமும் இடைவெளியிட்டு அரை தட்டி தகரம் அடித்து முடுக்கில் பெண்கள் நடமாடுவது தெரியாது. அந்தமாதிரி கண்ணியமான பொற்காலம் திரும்ப காண முடியாது. நமதூர் கலாச்சாரம் மாறுவதற்கு வெளியூர்க்காரர்கள் குடியேறி அவர்கள் இஸ்டத்திற்கு நடப்பதினால் நமது பழைய கலாச்சாரம் சிறுக சிறுக அழிந்து போய்விட்டது.

பஜாரில் செய்யிது ஆலிம் பட்டறை:

பஜாரில் அன்று செய்யிது ஆலிம் பட்டறை கம்பி போட்ட கடையாகும். அங்கு அவர்கள் மச்சினன் பட்டறை சாலிஹான் காக்கா பழைய தங்கம் வாங்குவார்கள். நகை செய்து தருவார்கள். ஊரிலும் சென்னையிலும் நிலம் கட்டிடம் வாங்கி தருவது தொழில்.

இந்த பட்டறையில்தான் தைக்காத் தெரு, புதுக்கடைத் தெரு, மகுதூம் தெரு பிரமுகர்கள் மற்றும் எல்.கே. அப்பா (எனது தந்தை வாவு அப்பாஸ் அவர்கள்) எம்.டி.எஸ்., எஸ்.ஓ. மற்றும் எஸ்.ஏ. போன்றோர் காலை மாலையில் வந்து பொழுதைக் கழிப்பார்கள். எல்.கே. அப்பா அவர்களின் ஜனநாயக சபை ஊர்க்கட்சிப் பிரமுகர்கள் சந்திக்கும் இடமாகவும் இருந்து வந்தது. இதற்கு எதிர்புறம் 8 கடை வளாகத்தில் ஆத்தூர் ஆசாரி தங்கப்பட்டறை செயல்பட்டுவந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கு இருக்கும் இடத்தில் சூயஸ் கார்னர் டீ ஹோட்டல் இருக்கும். தைக்காத் தெரு பிள்ளைகள் அங்கு அதிகம் வருவார்கள்.

பஜாரில் இருந்த வண்டிச் சாப்பு:

இன்றைய தாஹா காம்ப்ளக்ஸ் இருக்கும் இடம் முழுவதிலும் சேர்த்து சின்ன நெசவு தெரு திரும்பும் வளைவு முழுவதிலும் 8 கடை சாகுல் ஹமீது அவர்களுக்கு சொந்தமான தோட்டம் வண்டிச் சாப்பு என்று அன்று கூறுமிடம் இருந்தது. ஊரில் யாரு வீடு கட்டினால் இங்கு மலையாளத்திலிருந்து பெரிய தடி வரும். தடியை அறுக்க நீண்ட குழி தோண்டப்பட்டு குழியின் குறுக்கே நடுவில் இரு வைரம் பாய்ந்த அரை பனைமரக்கட்டை இடைவெளியிட்டு போடப்பட்டு தடியை அதில் ஏற்றி மலையாள ஆசாரிகள் 10 அடி நீளமுள்ள பெரிய வாளால் தடியை அறுப்பார்கள். ஆசாரிகள் கதவு, ஜன்னல், கதவு நிலைகளை இங்கு இருந்தவாறு செய்வார்கள். 8 கடை சாகுல் ஹமீது அவர்களிடம் வட்டவடிவில் குதிரை வண்டி, காளைமாடு வில்வண்டி, தண்ணீர் பீப்பாய் வண்டிகளும், ஆடு மாடு கோழி கூஸ்வாத்துகளும் இருக்கும். அரசமரம், வேப்ப மரம் மற்றும் பல மரங்கள் இந்த வண்டிச்சாப்பு தோட்டத்தில் நிறைய நிற்பதால் நந்தவனம் போல் காணப்படும்.

இவர்கள் வட்ட வண்டியில் காலையில் ஓடக்கரை அருகிலுள்ள (பனங்கற்கண்டு ஆராய்ச்சி நிலையம் இருந்த இடம்) தென்னந்தோப்பும் குளிக்குமிடமும் அதனுள் இருந்தது. கிழக்குப் பகுதி மக்கள் தொட்டியில் குளிக்க இங்கு வருவார்கள். பத்து தொட்டிகள் கட்டி இருந்தார்கள். நாகப்பழம் சீசனுக்கு இவர்கள் தோட்டத்தில் நாகப்பழம் கிடைக்கும். இவர்கள் எங்கு போவதாக இருந்தாலும் வட்ட குதிரை வண்டியில்தான் போவார்கள். ஊரில் யாரிடமும் கார் வசதியில்லை. பலரும் குதிரை வண்டி வைத்திருந்தார்கள். இவர்கள்தான் காயல்கடற்கரை முழுவதுமுள்ள நிலங்களில் சவுக்கை தோப்பை ஏற்படுத்தி அதன்மூலம் நல்ல வருமானமும் பெற்ற ஊரின் முதல் விவசாயி எனக் கூறலாம். இவர்களின் வணிக வளாகம் எல்லாம் 8 கடைகளாகவே இருக்கும். அதனால்தான் 8 கடை வீடு என்ற பெயர் வந்தது. இவர்களின் மகன் தாஹா ஹாஜி ஆவார்கள்.

நேரம் அறிய ஊதிய சங்கு:

பஜாரிலுள்ள சம்மர் ஹவுஸ் (எல்.கே. அப்பா) கட்டிடத்தின் மாடியின் மீது மின்சாரம் மூலம் இயங்கும் சங்கு இருக்கும். ஊர் மக்கள் நேரத்தை அறிய விடியற்காலை 6 மணி, காலை 9 மணி, பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 9 மணி, நள்ளிரவு 1 மணி அளவில் சங்கு ஓதும் நேரத்தை அமைத்திருந்தார்கள் எல்.கே. அப்பா. இதுவும் ஊருக்கு ஒரு சேவைதான்.

மத்ரஸாவில் குர்ஆன் ஓதும் சிறுவர்கள் 6 மணி சங்கு ஊதி விட்டது மத்ரஸாக்கு நேரமாகிவிட்டது என்று தாய் துரத்துவார்கள். காலை 9 மணி சங்கு ஊதி விட்டது ஸ்கூலுக்கு நேரமாகிவிட்டது, மாலை 4 மணியாச்சு மகன் ஸ்கூலிலிருந்து வருவான் என்று காத்திருக்கும் பெற்றோர். பொதுக்கூட்டம் இரவில் நடந்தால் 9 மணி சங்கு சப்தம் கேட்டால் மக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். இப்படி நேரம் அறிய மக்களுக்கு அன்று மிகப்பெரிய உதவியாக இருந்தது.

முதல் சைக்கிள் கடை

பஜார் ஆரம்பிக்கும் இடம் மாஸ்டர் கம்பியூட்டர் மாடியின் கீழ் பகுதியில் ஸலீம் சைக்கிள் கடை 1942 ல் பரிமார் தெரு சாகுல் ஹமீது காக்கா நீண்ட நாட்களாக நடத்தி வந்தார்கள். அவர்கள் நற்குணத்திற்காக அப்பாபள்ளி-மரைக்கார் பள்ளி தெரு பிரமுகர்கள் இந்த கடையில் காலை மாலை இரவு 9 மணி வரை பொழுது போக்க வருவார்கள்.

அல் ஜாமிஉல் அஸ்ஹர் இருந்த இடத்தில் என்ன இருந்தது?

அல் ஜாமிஉல் அஸ்ஹர் இருக்கும் கே.டி.எம். தெரு-ஸி கஸ்டமஸ் சாலை இரு பகுதியாக அன்று நூஹ{ காக்கா அவர்களால் இறைச்சிகடை பெரிதாக டானா வடிவத்தில் நடந்தது. ஊரின் எல்லாப் பகுதி தெரு மக்களும் இந்த கடைக்கே இறைச்சி வாங்க வருவார்கள். இன்றைய பெரிய நாடான் இவர்களிடம் கறிக்கு ஓலையை சுத்தம் செய்து தரும் சிறுவனாக வேலை செய்தார். அந்தக்காலத்தில் பனை ஓலையில் கறியை வைத்து மேல் நோக்கி மடித்து ஓலை ஈக்கால் கட்டித் தருவார்கள். மாட்டு இறைச்சிக் கடை எங்கும் இருக்காது. எல்லாம் செம்மறி ஆட்டுக் கறி மட்டுமே. நூஹு காக்கா விற்பார்கள்.

மீன் கடையில் நீண்ட (ஒரு ஜான் அகலம்) வாய் கூடையில் மீன் தருவார்கள். இது குருத்து ஓலையில் செய்யப்பட்டிருக்கும். பரிமார் தெரு பெண்கள் ஒன்னரை அடி நீளமுள்ள மீன் கூடையை தயாரிப்பார்கள். இதன்விலை கால் அனா (6 பைசா) மீன் வாங்கிவிட்டு மீண்டும் கழுவி காய வைத்து பயன்படுத்தலாம். இன்றைய 25 பைசா அளவு நிறைய துவாரம் இருக்கும். காற்றுப் போகும். மீனும் கீழே விழாதவாறு பாதுகாப்பாக இருக்கும். மீன் கூடை.

சதுக்கைகள்

ஊரில் முக்கிய பிரமுகர்கள் கூடும் இடம் சதுக்கைத் தெரு சதுக்கையாகும். இங்கு வடபகுதி மக்கள் சேவா சங்க உட்கட்சி பிரமுகர்கள் கூடுவார்கள். காலை மாலையில் இந்த இடம் ஓர் பொழுதுபோக்கு இடமாகவும் அன்று முதல் இன்றுவரை உள்ளது. நெய்னார் தெரு, பெரிய ஜும்ஆப் பள்ளி வளாகத்தில் வட்ட சதுக்கை உள்ளது. வடபகுதி மக்கள் அனைவருமே ஆந்திரா பூராவும் தோல் பதனிடும் தொழிற்சாலை விற்பனைக் கூடம் அமைத்து தொழிற் செய்து வந்தார்கள். அதனால் இந்த வடபகுதி மக்கள் தெலுங்கு மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்து இருப்பார்கள். அத்துடன் ஹிந்தி மொழியையும் பேசுவார்கள். ஊரைப் பற்றி இன்னும் நிறைய தகவல்கள் உள்ளன. ஹிஜாஸ் மைந்தனின் அனுமதி பெற்று எழுதுகிறேன். ஏனெனில் அவர் ஊரைப் பற்றி எழுதுகிறார். அவரை முந்தி நான் சொல்லக் கூடாது என்பதே என் எண்ணம்.



சதுக்கைத் தெரு சதுக்கை இப்பகுதி பெரியவர்கள் காலை, மாலை, இரவு வேளைகளில் அமரும் இடம் மட்டுமல்ல. வடபகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. இந்த சதுக்கையில் அன்று ஆதம் ஹாஜி அவர்கள், எம்.கே.டி. அபூபக்கர் அப்பா அவர்கள் போன்றோர் மாலைப் பொழுதில் அமர்வதுண்டு. பொழுதுபோக்கு இடம் மட்டுமல்ல. ஊரில் நல்லது கெட்டதை கலந்தாய்வு செய்து வரும் இடம் என தெரிகிறது. இந்த சதுக்கையின் ஓர் பகுதியில் காயல் நகரின் உதவி அரசு தபால் நிலையமும், அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றமும் உள்ளது.



பெரிய ஜும்மா பள்ளி வளாகம் உள்ளே புகழ்பெற்ற வட்ட சதுக்கை உள்ளது. இதில் 14+2ஸ்ரீ16 தூண்கள் இருந்தது. தமிழ் சங்கங்களுக்கு அன்று 16 தூண்கள் வைத்துக் கட்டப்பட்டதாகவும் இந்த வட்ட சதுக்கையில்தான் முத்தமிழ் சங்கம் இயங்கி வந்ததாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் திரு ராமச்சந்திரன் அவர்கள் இங்கு வந்து இதைக் கண்டு கூறியதாக இப்பகுதி இளைஞர் பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் கூறினார். கல்வெட்டுகள் பல ஆய்வு செய்து வருவதாகவும் சொன்னார்கள். தற்போது இவர் துபாய் பயணம் மேற்கொள்வதால் அடுத்தமுறை சபர் திரும்பும்போது அவரிடம் காயல் கல்வெட்டுகள் குறித்து இன்ஷா அல்லாஹ் நான் செய்தி சேகரித்து அனுப்புகிறேன். இந்த வட்ட சதுக்கை தற்போது 13 தூண்கள் உள்ளது. இதன் அருகில் காயிதேமில்லத் சமூக அமைப்பு பொது சேவை சங்கமாக இயங்கி வருகிறது.

குறிப்பு: இடம்பெற்ற மூன்று போட்டோக்கள் எடுத்து தந்தவர் ஹிஜாஸ் மைந்தன். அவர்களுக்கு நன்றி.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: komanbabu (Singapore) on 22 November 2013
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 31624

வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அன்றும்... இன்றும்...
posted by: Mohamed Omar(Babu) (Chennai) on 22 November 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31628

அஸ்ஸலாமு அலைக்கும்

சிறந்த முறையில் எங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறையை கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி.

பெண்கள் கடற்கரைக்கு செல்வது கேவலமாக கருதப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இப்படி இருந்த நமது பெண்கள் இன்று இரவு 11 மணி வரை கடற்கரையில் கூடி இருப்பது வேதனையே.

தொண்டு பகுதியில் மட்டுமே பெண்கள் சென்று பொருட்கள் வாங்குவார்கள் நான் சிறுவனாக இருக்கும் பொழுது, ஆனால் இப்பொழுது super market கலாச்சாரம். ஆண்களும்,பெண்களும் ஒன்றாக.

இவ்வளவு குறைந்த காலத்தில் இப்படி ஒரு கலாச்சார சீரழிவு.இதற்கு மேலும் சீரழியாமல் இருப்பதற்கு பெற்றோர்களே கவனம் எடுக்க வேண்டும்.

சங்கங்களில் இன்றும் பெரியவர்களே இருந்துகொண்டு சிறுவர்கள் வந்தால் விரட்டி விடுகிறார்கள். பெரியவர்களின் பொழுது போக்கிற்காக சங்கங்கள் இருந்தாலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களையும் அங்கே வரவைத்து அவர்களுடன் உரையாடுங்கள். சிறுவர்களாக இருக்கும் பொழுது சேட்டை பண்ணுகிறார்கள் என்று நீங்கள் விரட்டினால் அவர்கள் வளர்ந்த பிறகும் அங்கு வராமல் வேறு எங்கெங்கோ போய் சீரழிவதை பார்த்து கொண்டு இருக்கிறோம்.

அல்லாஹ் நமது ஊரின் கலாச்சாரத்தை மேலும் சீரழியாமல் பாதுகாப்பானாக.

சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: netcom buhari (chennai) on 22 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31631

அழகாக பழைய உண்மை கதைகளை எடுத்து சொன்ன மாமா அவர்களுக்கு ஒரு சல்யுட்டு. கொஞ்சம் தி famous அப்பபள்ளி அண்ட் மரைக்கார் பள்ளி சடுகை பற்றியும் கொஞ்சம் எழுதவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Ibrahim Ibn Nowshad (Bangalore) on 22 November 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31634

ALS மாமா அழகாக என் சிறுவயதை கண்முன்னே கொண்டு வந்துள்ளார்கள். இதில் ஒரு சில நான் பிறபதற்கு முன்னால் உள்ளவையே..

கடற்கரையில் வட்ட வடிவில் இப்பொழுது மின்கோபுரம் உள்ள இடத்தில ஒரு வட்ட விளையாட்டரங்கம் போல காட்சி தரும் இடம் இருந்தது.

என் அப்பாவுடன் கடற்கரைக்கு சென்று அதில் உள்ள படிகளில் மேல ஏறி விளையாடிய நியாபகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: உதுமான் (சிங்கப்பூர்) on 22 November 2013
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 31635

எனது பூட்டி அப்பாவின்(எட்டு கடை. செ.இ.சாகுல் ஹமீது) அவர்களின் சரித்திரம் பற்றிதெளிவாக எழுதி உள்ளீர்கள். அவர்களை நானும் பார்த்ததில்லை. அவர்கள் இலங்கை நகரத்தில் நகை வியாபாரத்தில் நல்ல முறையில் இருந்த போதே விவசாயம் செய்வதற்காக வேண்டி ஊர் வந்தார்கள் என்று எனது கம்மா விடம் இருந்து அறிந்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் அனைவரும் அவர்களின் மகபிரதிற்காக துஆ செய்யவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) on 22 November 2013
IP: 5.*.*.* | Comment Reference Number: 31636

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை மாமா அவர்களின் இக் கட்டுரை நம்மை அப்படியே பழைய காலத்துக்கு அழைத்து சென்று விட்டது .......மாமா அவர்களின் கட்டுரையை படிக்க ,,படிக்க ,, நம்மை அறியாமலே நமது உள் மனது '' வானில் '' சிறகடிக்க '' நம் மனது ரொம்பவும் ஆனந்தமாக உள்ளது ....

மாமா அவர்கள் சொன்ன அனைத்தையும் நாம் நினைக்கும் போது ...அந்த காலமே இன்று வரை இருக்காத ...என்றும் நம்மை நினைக்க தோன்றுகிறது ....அந்த காலத்தில் நமக்கு ....முழு மன நிம்மதியும் ,, மற்றற்ற மன மகிழ்ச்சியும் ,,அனைவர்களிடமும் செழிப்பும் ,,அனைவர்களிடமும் ஒற்றுமையும் ,,பாசத்தோடு கலந்த நெருக்கமும் ,, நேர்மையும் , ,ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் நெருக்கமும் ,,ஒற்றுமையின் நெருக்கமாக சம்பந்தம் எடுக்க கூடிய மன தன்மையும் ,, நாம் இப்போது கோசம் குட நினைத்து பார்க்க முடியாத காலம் ....

அருமை மாமா அவர்கள் குறிப்பிட்டது 100 % உண்மையானதே .....நமது ஊருக்கு வெளி ஊர் நபர்கள் மொத்தமாக வர போய் தான் நமது ஊரின் கட்டு கோப்பும் ....ஒற்றுமையும் சீர்குலைந்து போய் விட்டது தான் சரியானதே .......

அந்த சங்குவின் ஒலி ,,யும் ....ஜனாப் . செய்து ஆலிம்சா அவர்களின் பட்டறையின் முன் முகப்பான அந்த கம்பி போட்ட வடிவமும் எம் கண் முன் தோன்றுகிறது .......& நமது மரியாதைக்குரிய . சலீம் காக்காவின் சைக்கிள் கடையின் முகப்பும் இப்போதும் எங்கள் கண் முன் நன்றாக தோன்றுகிறது ....நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது ... வெள்ளி கிழமைகளில் சினிமா படம் பார்க்க நாங்கள் ஒரு குருப்பாகவே போவதற்காக சைக்கிள் வண்டி முற்கூட்டியே எடுக்க செல்லும் எங்களின் காலத்தையும் நாங்கள் நினைத்து புன்முறுவல் செய்து கொள்கிறோம் .........அது ஒரு பசுமையானதோர் ....கவலைகள் இல்லாத ...... மகிழ்ச்சிகரமனதோர் பொற்காலம் தான் ......

மாமா அவர்கள் கூறியதை போன்று நாங்கள் இன்று நாள் தொட்டு '' பெரிய சதுக்கையில் '' பலபேர்கள் காலை ....மாலையில் அமர்ந்து உரையாடி வருகிறோம் ...........

அந்த காலத்தில் கையில் பணத்துடன் சந்தோசமாக இருந்த பொன்னான பொற் காலம் ... இக்காலம் கையில் பணம் நிறையவே அனைவகளிடமும் இருந்தும் நாம் ....மன நிம்மதியையும் ...சந்தோசத்தை இழந்து விட்டோமே...........

அன்பு மாமா அவர்கள் இது போன்ற நமது ஊரின் பழைய சம்பவங்களை எங்கள் கண் முன் தாங்கள் கொண்டு வருவதை நாங்கள் எதிர் நோக்கி உள்ளோம் ...........

>>>> தொடரட்டும் தங்களின் எழுத்து வடிவும் <<<<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: Vilack SMA (Hetang , Jiangmen , PRC) on 23 November 2013
IP: 121.*.*.* China | Comment Reference Number: 31637

மாமாவின் கட்டுரை பசுமையான நினைவலைகள் . மத்திய காயல் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள் . இந்த பகுதியின் பெரும்பாலானவர்கள் தோல் வியாபாரிகள் . ஆனால் , தனது வாரிசுகளுக்கு , இந்த தொழில் பற்றிய முறையான தொழில்நுட்ப கல்வி அறிவை கொடுக்காததால் இந்த தொழில் நமதூர் மக்களிடம் தற்போது இல்லை . ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், ஒன்றிரண்டு பேர் இந்த தொழில் செய்கின்றனர் .

கத்தீபு உமர் கம்பெனி , LMS கம்பெனி , M M கம்பெனி போன்றவைகள் நாட்டின் மிகப்பெரிய தோல் கம்பெனிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வந்த கம்பெனிகள் . குடும்பங்கள் பெருகியதாலும் , வாரிசுகளுக்கு தொழில் நுட்ப அறிவை கொடுக்காததினாலும் இன்று இந்த கம்பெனிகள் அடியோடு அழிந்துவிட்டது.

எனது மாமனார் மர்ஹூம் S A ஆதம் ஹாஜி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் . அன்று , ஆதம் ஹாஜி வருகிறார் என்றால், பெண்கள் தெருவில் தலை காட்டவே மாட்டார்கள் . ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ் . பெண்களை கண்டு ஆண்கள் ஒதுங்கும் நிலை .

மேலும் அன்று இருந்த ஊரின் பெரியவர்கள் , கண்ணியத்திற்கு உரியவர்கள் பலரையும் குறிப்பிட்டுள்ளீர்கள் . நன்றி .

8 கடை , .. பெயர் காரணம் சொல்லுங்க மாமா .

சங்கு ஊதுதல் ... ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு காரணம். நள்ளிரவு 1 மணி சங்கை பற்றி சொல்லவில்லையே .

Vilack SMA , ஹேதாங், ஜியான்க்மேன் , சீன மக்கள் குடியரசு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: V D SADAK THAMBY (Guangzhou, China) on 23 November 2013
IP: 119.*.*.* China | Comment Reference Number: 31638

------------------------நமதூர் கலாச்சாரம் மாறுவதற்கு வெளியூர்க்காரர்கள் குடியேறி அவர்கள் இஸ்டத்திற்கு நடப்பதினால் நமது பழைய கலாச்சாரம் சிறுக சிறுக அழிந்து போய்விட்டது.-----------------

மிக மிக சரியாக சொன்னீர்கள். காலாச்சார விஷயங்கள் சீரழிவு மட்டுமில்லாமல், இன்னும் பல விஷயங்களிலும் இந்த சீர்கேடு தலைதூக்குகிறது. நமது ஊரின் ஒற்றுமை குறைவுக்கு இது முக்கிய காரணம். வெளியூர்காரகள் படிப்படியாக குடியேறி , இப்போது மண்ணின் மைந்தர்கள் மைனாரிட்டி ஆகிவிட்டார்கள் என்பதே உண்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: Rilwan (Austin, TX) on 24 November 2013
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31648

அருமையான கட்டுரை என்றாலும் பெண்கள் பஜாருக்கு வருவதால் கண்ணியக்குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பஜாருக்கு வரும் பெண்களில் சிலர் கண்ணியக்குறைவாக நடக்கிறார்கள் அல்லது ஆண்கள் அவர்களிடம் கண்ணியக்குறைவாக நடக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம்.. நிறைய பெண்களுக்கு பொது இடத்தில எப்படி கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது.. அப்படி பட்ட பெண்களை பாராட்டத்தான் வேண்டும்.

குடும்பத்தை காப்பாற்ற கண்ணியமாக சேலை, இட்லி, மீன் போன்ற வியாபாரம் செய்து கண்ணியமாக வாழும் பெண்களை பாராட்டுங்களேன்..

இவர்கள் வீடு மட்டும் முடுக்கு என்று இருப்பதால் தான் கண்ணியம் பாதுகாக்கப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது..

பெண்ணே.. எங்க ஊர் கலாச்சாரத்தில் உனக்கு ஏற்ற இடம் உன் வீடு என்ற சிறைச்சாலைதான்.. ஏற்றுக்கொள்!! என்றால் ஆண்களை விட அதிகம் படிக்கின்ற, சிந்திக்கின்ற பெண்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதற்கு விடை தேட ரெம்ப யோசிக்கவேண்டியது இல்லை.

காலம் மாறுகிறது... கண்ணியம் எதில் இருக்கிறது என்பதை சரியாக புரிந்துகொண்டால் சமுதாயத்தின் கண்ணியம் காலமாற்றத்துடன் காக்கப்படும்.. அதை விட்டுவிட்டு எங்கள் பெண்கள் பழையமாதிரி இருக்க வேண்டும் என அர்த்தமில்லாத முட்டுக்கட்டைகள் போட்டால் கண்ணியக்குரைவுகள் நடைபெறுவதை தவிர்க்க முடியாது.. காயலில் நடந்த.. நடக்கின்ற.. பல கண்ணியக்குரைவுகள் பஜாரில்தான் நடக்கிறதா?? கொஞ்சம் பின்னோக்கி யோசித்து பாருங்களேன்?

அதுமட்டும் இன்றி.. வெளி ஊர் கார்களால் சமுதாயம் பதிக்கிறது என்றால், நமக்கு அறிவில்லையா? நம் செயலுக்கு நாம்தான் காரணம். ஊரில் எதனை சிறுவர்கள், இளஞ்சர்கள் சரியான வழிகாட்டுதல் இன்றி இருக்கிறார்கள் என்பதை தான் கண்ணிய குறைவுகள் காட்டுகின்றன.

கால மாற்றத்தை ஆரோக்கியத்துடன் அலசினால் பதில்கள் கிடைக்கும்... அதை விட்டு விட்டு.. முன்னாடி நல்ல இருந்திச்சி... இப்போ எல்லாம் கேட்டு போச்சுன்னு சொன்னா... வர்ற சமுதாயம் என்ன விஷயம் இல்லாதவர்களா?

இந்த மாதிரியான சிந்தனை புதிதா? ஏன், இப்போது வயதானவர்களாக இருப்பவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது இந்த சிந்தனை இருந்ததே? அதனால் தானே பள்ளிக்கூடம் அனுப்ப பயப்பட்டார்கள்? அதனால் தானே ஆங்கிலகல்வி வேண்டாம் என்று பாத்வா விடப்பட்டது?

சமுதாயம் போகும் பாதை போயி கொண்டு தான் இருக்கும். நிறுத்த முடியாது.. நம் ஆயுள் தான் நின்று போகும். அடுத்த சந்ததியினர் வருவார்கள். அவர்கள் பார்வையில் உலகை பார்ப்பார்கள்.. அவர்களுக்கு அர்யோக்கியமான முற்போக்குடைய கண்ணியமான சிந்தனை பழக்கத்தை கற்று தரவேண்டியது இப்போது உள்ளவர்களின் கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved