Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:59:02 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 121
#KOTWEM121
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 18, 2013
கம்பங்கூழும், கரட்டு மேடும்! (பாகம் 2)

இந்த பக்கம் 7345 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இத்தொடரின் முதல் பாகத்தை காண இங்கு அழுத்தவும்

* * * * * * * * * * * * * * *

13.11.2013 புதன்கிழமை அதிகாலை 04.30 மணிக்கு கண்விழித்தோம். ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைகளை பயணியருக்கு இஸ்லாம் வழங்கிய சலுகைப்படி நாங்கள் கூட்டாக இணைந்து தொழுதோம். எங்களுடன், வேறு சில ஊர்களிலிருந்து வந்திருந்த இரண்டு முஸ்லிம் நண்பர்களும் தொழுகையில் இணைந்துகொண்டனர். தொழுகையை முடித்துவிட்டு, குடிலுக்குத் திரும்புகையில், அங்கிருந்த மாடுகளின் சாணத்தை ஒரு முதியவர் தன் கைகளால் சேகரித்துக் கொண்டிருந்தார். முந்தைய நாளில் வெளியூர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த அப்பெரியவர்தான் நம்மாழ்வார் அய்யா.



பூச்சி விஷமில்லா இயற்கை விவசாயம்; எளிய வாழ்க்கை முறை என்று முழங்கி, தமிழ் கூறும் உலகையே தன்னை நோக்கி புருவமுயர்த்தச் செய்யுமளவுக்கு புகழ்பெற்றவர். எங்களனைவரையும் குடிலில் சந்தித்து முகம் மலர அவர் வரவேற்றபோது, புகழ்பெற்ற மனிதருக்குரிய எந்த அடையாளத்தையும் அவரிடம் காண முடியவில்லை. “இவரா அவர்?” என வியப்புற்றோம் நாங்கள்.

மெலிந்த உருவம்... அடர்ந்த மீசை... நீண்ட தாடி... கீழங்கியும், பச்சை நிற மேல்துண்டும், தலைப்பாகையுமே அவரது நிரந்தர உடை! சட்டை அணிவதில்லையாம். வயதுதான் 76 ஆக இருந்ததே தவிர, அவரது பேச்சும், செயலும் – துடிப்புமிக்க - இன்றைய 26 வயது இளைஞனையும் விஞ்சியிருந்தது.

ஆம்! இத்தனை வயதிலும் அவருக்கு ஒரு பல் கூட விழவில்லை. கண்ணாடி அணியவில்லை. ஏற்கனவே அணிந்திருந்த கண்ணாடியையும் இயற்கை மருத்துவத்தின் மூலம் கழற்றி விட்டாராம்.

பொறுப்பாளர் ஒருவர் அவருக்கு இயற்கை உணவைத் தட்டில் வைத்துக் கொடுக்க, அதை வாங்கி உண்டவாறே எங்களுடன் பேசினார். எல்லோரையும் தன்னறிமுகம் செய்யச் சொன்னார். அறிமுகப்படுத்திக் கொண்டோம்.





>> நான் இறக்கும் முன் இன்ன செயலை செய்து முடிக்க வேண்டும்... 13.11.2015 அன்று நான் இச்செயலை செய்து முடித்திருக்க வேண்டும்... என ஒரு குறிப்பேட்டில் அன்றாடம் இரவு உறங்குமுன் எழுதி வைக்கச் சொன்னார் அவர். இலக்கு இல்லாத வாழ்க்கை நேர விரயம் என்பதே அவர் சொல்ல வந்த கருத்து.

>> ‘படிப்பது’, ‘கற்பது’ இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?

படிப்பது - பிறர் அனுபவத்தை உள்வாங்கல்; கற்பது -- நம் பட்டறிவை ஆய்வுக்கு உட்படுத்தல்.. ஆகா! எத்தனை தத்துவங்கள்...!! அய்யா பேசப்பேச தத்துவங்கள் பொங்கி வழிந்தன. அது உரையல்ல! எங்களுடனான உரையாடல். எமது உரையாடலில் வீணாக ஒரு சொல் உதிர்க்கப்பட்டாலும், அதைச் சுட்டிக்காட்டி விளக்குவார்.

ஒரு பங்கேற்பாளர் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு அய்யா விளக்கமளித்தார். மற்றொருவர் கேள்வி கேட்கும்போது, “அதேபோல...” என்று துவங்கினார். “அது என்ன அதேபோல...? உங்க கருத்தை நீங்க சொல்லுங்க!” என்றார்.

மற்றொருவர் தெளிவின்றி கேள்வி கேட்டார். அய்யா அதை தெளிவுறக் கூறுமாறு கூறியதும், வேறொருவர், “அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால்...” என்று கூற முற்பட்டபோது இடைமறித்த அய்யா, “அவருக்கு நீங்க வக்காலத்தா...? அவர் மனதில் பட்டதை அவர் கேட்கட்டும்” என்றார். அனைவருமே சிரித்துவிட்டோம்.

அவர் எங்களுடன் உரையாடிய முழுப்பொழுதும் நகைச்சுவை நிறைந்து காணப்பட்டது. நேரம் போனதே தெரியவில்லை.

“சனி நீராடு” என்று ஆத்திச்சூடியில் அவ்வையார் சொல்லியிருக்கிறாரே... அதன் பொருளென்ன?” இது அய்யாவின் கேள்வி.

“சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கனும்...” இது எங்கள் விடை.

“தவறு! சனி என்பது மிகக் குளிர்ச்சியான கிரகம். சனி நீராடு என்றால், குளிர்ந்த நீரில் குளி என்று பொருள்” - இது அய்யாவின் விளக்கம். முதல் வகுப்பில் படித்த ஆத்திச்சூடிக்கு அன்றுதான் விளக்கம் கிடைத்தது போங்க!

“சோம்பித் திரியேல்” என்ற ஆத்திச்சூடிக்கு விளக்கமளித்தார் அய்யா.

சோம்பலின் அடையாளங்கள் 3 உள்ளனவாம்.

(1) காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருத்தல்

(2) இலக்கற்ற பயணம்

(3) தன்னால் கூடுதலாக முடியும் என்ற நிலையிலும் குறைவாக வேலை செய்தல்

“இலக்கு நிர்ணயித்து வாழ்ந்தால், நம்மால் பிறர் பயனடைவர்; அவர்களால் நாம் சிதைய மாட்டோம்... ஒவ்வொரு பொருளும் அருகிலுள்ள பொருளைப் பாதிக்கும் என்பது பௌதீக விதி”

“மனிதனுக்கு பிறந்த நாள் முக்கியமல்ல! அவன் இறக்கும் நாளில் எவ்வாறு இறக்கிறான் என்பதே முக்கியம். அதற்கு அவன் வாழ்நாள் முழுதும் சிந்தித்து செயல்பட வேண்டும்...”

“24 மணி நேரத்தைக் கொண்ட ஒரு நாளில், ஓய்வு - உறக்கம் - நம் தேவைகளுக்காக 8 மணி நேரமும், செய்யும் பணிக்காக (அது கல்வி, வேலை எதுவாகவும் இருக்கலாம்) 8 மணி நேரமும் கழிகிறதெனில், எஞ்சிய 8 மணி நேரம் நம்முடையது. அதை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அவ்வளவு கூட வேண்டாம். வாரத்துக்கு நான்கரை மணி நேரத்தையாவது அதற்கு ஒதுக்கலாம்.”

- இவையெல்லாம் அய்யாவின் கருத்துப் பொழிவில் கிடைத்த அருஞ்செய்திகள். கேட்டுக்கொண்டேயிருக்கலாம். நேரம் இடம் தர வேண்டுமே...? “சலிப்பு தட்டினால் சொல்லிடுங்க! நிறுத்திக்கிறேன்...” என்றார் அய்யா. எங்கே சலிப்பு தட்ட...? மதிய உணவு வேளை வந்ததால், உரையை நிறுத்திக்கொண்டார் அய்யா.

* * * * * * * * * * * * * * *

சிறிது நேரத்தில் ஒருவர் வந்து, “நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இன்று சமைக்காத உணவு தரப்படவுள்ளது” என்று கூறிச் சென்றார். “அது என்ன சமைக்காத உணவு...?” அந்நேரத்தில் எங்களுக்குப் புரியவில்லை.

வழமை போல 4 பொறுப்பாளர்கள் 5 பாத்திரங்களுடன் காத்திருக்க, நாங்கள் தட்டேந்தி உணவைப் பெற வரிசையில் நின்றோம். என் முறை வந்தது. ஒருவர் என் தட்டில் ஒரு வாழைப்பழத்தை வைத்து, நான் கையில் வைத்திருந்த டம்ளரில் - நம்மூரு ‘பாலும் பழமும்’ பானத்தில், கைக்குத்து அவலை ஊறப்போட்டு அவல் பாயசம் தந்தார்.

துண்டு துண்டாக நறுக்கி, எழுமிச்சைச் சாறில் தோய்த்தெடுத்த சுரைக்காயில் ஒரு கைப்பிடி...

கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் கொண்டு அரைக்கப்பட்ட துவையல் ஒரு விழுது...

ஊறப்போட்ட கைக்குத்து அவலுடன் பீட்ரூட், அச்சு வெல்லம் கலந்து இனிப்பு அவல் ஒரு கைப்பிடி...

ஊறப்போட்ட கைக்குத்து அவலுடன் துண்டுகளாக்கப்பட்ட கேரட், வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத் தூள் கலந்து கார அவல் ஒரு கைப்பிடி... - இவைதான் சமைக்காத உணவு.



“ஐயே... கொஞ்சமாத்தானே இருக்கு...? இது எப்படி நம்ம வயித்தை நிறைக்கும்...?” தட்டில் கை வைக்குமுன் நான் நினைத்தேன் .இப்படி. சாப்பிடத் துவங்கி, நிறைவு செய்ய எனக்கு 30 நிமிடங்கள் பிடித்தது.

இவற்றைக் கொஞ்சங்கொஞ்சமாக அரைத்து, சுவைத்துதான் சாப்பிட முடியும். சமைத்த உணவு போல அரைகுறை அரைப்பில் உள்ளே தள்ள முடியாது என்பது புரிந்தது. வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிடச் சொன்னார்கள்... சாப்பிட்டோம்.

“சரி, டேஸ்ட் எப்படீ”ன்னு கேட்கிறீர்களா...? – ஆகா... என்ன ஒரு சுவை தெரியுமா...? ரசித்து, சுவைத்து சாப்பிட்டு எழுந்தோம்.

* * * * * * * * * * * * * * *

மதியம் 02.30 மணிக்கு, பயிர்களுக்கான பூச்சு விரட்டி செய்து காண்பிக்கப்பட்டது. வழமையாக பயிர்களுக்கு அடிக்கப்படுவதை, ‘பூச்சி மருந்து’ என்று சொல்லக்கூடப் பொறுக்கவில்லை அய்யாவுக்கு. “அத பூச்சி விஷம்ன்னு சொல்லுங்க! மருந்து யாரையாவது சாகடிக்குமா? விஷம்தானேய்யா சாகடிக்கும்...?” என்றார்.

“ஒடிச்சா பால் வரனும்; சுவைத்தால் கசக்கனும்; முகர்ந்தால் நாறனும்” இந்த வரைவிலக்கணப்படி, பப்பாளி, வேம்பு, வேலிகாத்தான் போன்ற மரங்களின் இலைகளைச் சேர்த்து, துண்டு துண்டாக நறுக்கி, மாட்டு சிறுநீருடன் கலந்து ஊற வைத்து காண்பிக்கப்பட்டது.



அதைப் பயிர்களுக்குத் தெளித்தால், வழமையான வாசனையை எதிர்பார்த்து அதை உண்ண வரும் பூச்சிகள், வேறு வாசனை வருவதை உணர்ந்து அங்கிருந்து திரும்பிச் சென்றுவிடுமாம். இதுதான் பூச்சி விரட்டியின் தத்துவம்.

அதுபோல, பழக்கழிவுகளைக் கொண்டு ‘பழக்காடி’ என்றொரு கரைசல், மீன் கழிவுகளைக் கொண்டு ‘மீன் அமிலம்’, பசு அல்லது ஆட்டின் சாணம் - சிறுநீரைக் கொண்டு, கூடுதலாக நெய், தயிர், வாழைப்பழம் போன்ற பொருட்களைச் சேர்ந்து ‘பஞ்சகாவ்யா’, பசு அல்லது ஆட்டின் சாணம் - சிறுநீரைக் கொண்டு அமிர்த கரைசல், தேங்காய் பால் - புளித்த மோரைக் கொண்டு ‘தேமோர் கரைசல்’ ஆகியன செய்து காண்பிக்கப்பட்டது.







இவையனைத்தும் பயிர்களுக்கு ஊட்டம் கொடுப்பனவாகவும், தொல்லை தரும் பூச்சிகளை விரட்டுவனவாகவும் செயல்படுமாம்.

பயிர்களுக்கு இடுபொருள் இடுதல், பஞ்சகாவ்யா தயாரித்து தெளித்தல், சவுக்கு விளைச்சல் செய்தல், வட்டப்பாத்தி அமைத்து பல்வேறு செடிகளுக்கான விதைகளை நட்டல், மழைநீரை பயிர்களுக்காக எளிய முறையில் சேகரித்தல் உள்ளிட்டவற்றைக் கொண்டு, மதிய உணவுக்கு முன்பு 3 செயல்திட்டம், மாலை 04.30 மணிக்கு 3 செயல்திட்டம் என மொத்தம் 6 செயல்திட்டங்களை, பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலுடன் பயிர் வளர்ந்த இடங்களில் பங்கேற்பாளாராகிய நாங்கள் நேரடியாகச் சென்று செய்தோம்.













இதில் ஒரு வேடிக்கையும் உண்டு. இந்த செயல்திட்டங்களை ஒவ்வொன்றாகச் செய்வதற்காக பங்கேற்பாளர்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். வட்டமாக அமர்ந்திருந்த எங்களை 1 முதல் 6 வரை அடுத்தடுத்து சொல்லச் சொல்லி, 1 சொன்னவர்கள் தனியாக, 2 சொன்னவர்கள் தனியாக என அனைவரும் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். “இதிலென்ன வேடிக்கை?” நான் இன்னும் சொல்லவேயில்லை.

நான் 1ஆம் எண் குழுவில் இருந்தேன். நமதூரைச் சேர்ந்த மற்ற மூவரும், அய்யாவின் இந்த எண் தந்திரத்தில் வெவ்வேறு குழுக்களில் பிரிக்கப்பட்டனர்.

‘மெகா’ நூஹ் காக்கா 5ஆம் எண் குழுவிலிருந்தார். அக்குழுவின் பொறுப்பாளர், அவர்களனைவரையும் ‘பஞ்சகாவ்யா’ செய்ய அழைத்தார். “இன்னாலில்லாஹி... மாட்டு மூத்திரத்தில் கை வைக்கச் சொல்றாங்களே...” என்று நினைத்த ‘மெகா’ நூஹ் காக்கா, நைஸாக எனது 1ஆம் நம்பர் குழுவில் வந்து இணைந்துகொண்டார்.

தனது புத்திசாலித்தனத்தை என்னிடம் மகிழ்ச்சியாக அவர் சொன்னபோது, “காக்கா, இந்த 6 குழுவினரும் சுழற்சி முறையில் 6 செயல்திட்டங்களையும் செய்தேயாகனும்... நாங்க இப்ப இரண்டாவது செயல்திட்டத்தில் இருக்கிறோம்... அடுத்து, நீங்க ஆசைப்பட்ட பஞ்சகாவ்யாதான்...” என்றேன். அப்போது அவர் அசடு வழிந்ததைக் காண நூறு கண்கள் வேண்டும்... :-)





செயல்திட்டங்களை நிறைவு செய்த பின்னர், மருந்தடிக்காமல்... ஓ மன்னிக்கனும்! விஷமடிக்காமல் விளைவிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு – அதாங்க... நம்மூரு ஏழல கிழங்கு ஓர் அகன்ற பாத்திரம் நிறைய வைக்கப்பட்டிருந்தது.

மூலிகைத் தேனீரை அருந்தியவாறு கிழங்குகளை விரும்பிய மட்டிலும் சாப்பிட்டு மகிழ்ந்தோம். ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு...? மறுநாள் காலையில் அந்தக் கிழங்குப் பாத்திரத்தில் கைவிட்டேன்... அதே கிழங்கு... அதே ருசி! பிசுபிசுப்பு எதுவுமேயில்லை. நான் சாப்பிடுவதைப் பார்த்து இன்னும் இரண்டு பேர் பாத்திரத்திற்குள் கை விட்டனர்.

காலையில் இதுகுறித்து அய்யா பேசுகையில், “அய்யா இந்த கிழங்கு சாப்பிட்டீங்களே... சுவையா இருந்திச்சா...? இப்ப கூட அதை நேற்று போலவே சாப்பிடலாம்... பிசுபிசுப்பே இருக்காது அய்யா... அந்த பிசுபிசுப்பிற்குக் காரணமே பூச்சி விஷம்தான்.

நம்மளது இயற்கை விவசாயத்தில் வந்ததல்லவா? தைரியமா சாப்பிடுங்க...” என்றார். இப்படிச் சொன்னதுதான் தாமதம்... அனைவரும் ஆளுக்கொரு துண்டு எடுத்து சாப்பிடத் துவங்கிவிட்டனர்.

* * * * * * * * * * * * * * *

இப்படியாக இரவு எங்களை வந்தடைந்தது... குடிலுக்கு வெளியே நிலவொளியில் அய்யா நாற்காலியில் அமர்ந்தார். அனைவரும் தரையில் பாய் விரித்து அமர்ந்து கதை கேட்டோம்... பேசினார்... பேசினார்... நிறைய தகவல்களைச் சொன்னார்...



இம்முறை, விவசாயத்தையும் தாண்டி அய்யாவிடம், இலங்கை தமிழர் பிரச்சினை, உலக பயங்கரவாதம், குறைந்த செலவில் நிறைவான வாழ்வு, அய்யாவின் தன் சரிதம் என பலவற்றைப் பற்றியும் கேள்விகளை எழுப்பினோம்... அழகாகவும், எளிமையாகவும் அவர் விளக்கமளித்த பாங்கு - கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்கும் விதம் குறித்து பாடம் நடத்துவது போலிருந்தது.

கூடவே அய்யாவின், ஆங்கிலப் புலமை, உலக - தேசிய - மாநில அரசியல் அறிவு, அறிவியல் அம்சங்களில் தெளிவான பார்வை, இயற்கை விவசாயத்திற்கு இலக்கணம், நகைச்சுவை உணர்வு, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா – கர்மவீரர் காமராசர் - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என பல புகழ்பெற்றவர்களின் குரல்களைப் போல் பலகுரலில் பேசி எங்கள் கவனத்தை முழுமையாக ஈர்த்தது என பல அம்சங்கள் அவரது பேச்சில் வெளிப்பட்டது.

நம்மாழ்வார் அய்யாவுடன் உரையாடுகையில் இயற்கை வேளாண்மையின் பரவலுக்காக இந்த முதிய வயதில் தனது குடும்ப வாழ்வை அர்ப்பணித்ததை மிகவும் சாதாரணமாகவும், மேலோட்டமாகவும் சொல்லிக் கடந்து சென்றார்.

“அய்யா! குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கவில்லையா?“ எனக் கேட்கப்பட்டதற்கு, “மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டேன்... மனைவிக்கு எனது பொது வாழ்வு பிடிக்கவில்லை... அதனால் இந்த வாழ்க்கை முறைக்கு அவர்கள் வரவில்லை... ஒன்றை அடைய வேண்டுமானால் ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும்... எனக்கு நாடு முழுக்க குடும்பங்களும் உறவுகளும் இருக்கின்றன“ என அவர் சொல்லி முடிக்கும்போது எங்கள் கண்கள் பணித்தன.

நம்ம ஊரில் உள்ள புற்றுநோய் பரவல் தொடர்பாக அய்யாவிடம் கேட்டோம். “மனித உடல் இயற்கையாகவே அதன் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கிறது... அனைவரின் உடம்பிலும் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியும் உள்ளது... அது வரையறுக்கப்பட்ட அளவுக்கு இருப்பது தேவையான ஒன்றே... அளவு கூடினால்தான் அது புற்றுநோயில் போய் முடிகிறது... நமது உடல் மாசடைவதே புற்று நோய்க் கிருமியின் அளவு அதிகமாவதற்கு முக்கிய காரணம்...

நீர், நிலம், காற்று அனைத்தும் மாசுபட்டுள்ளது... அவற்றைத்தான் நாம் உள்வாங்குகிறோம்... பற்றாக்குறைக்கு, நாம் உண்ணும் உணவும் இன்று விஷமில்லாத ஒன்றைக் காண்பதே அரிது என்றாகிவிட்ட பிறகு, இந்த மாசு எல்லாம் சேர்ந்துதானய்யா அந்த புற்றுநோய்க் கிருமிக்கு தீனி போடுது...” என்றார்.

புற்றுநோயை இயற்கை முறையில் குணமாக்க வாய்ப்புண்டா என இயற்கை உணவியல் நிபுணர் மாறன்ஜியிடம் கேட்டபோது,

“அவங்க இயற்கை உணவுக்கு முழுமையாக மாறனும்... புற்றுநோய்க் கிருமிகளுக்கு இயற்கை உணவில் எந்தத் தீனியும் கிடைக்காது என்பதால் அவை செத்துப் போகும்...

கீமோ கொடுத்தாச்சா...?” என்று கேட்டார். “கொடுக்கப்பட்டவர்களும் உண்டு; கொடுக்கப்படாதவர்களும் உண்டு” என்றோம்.

கொடுக்கப்பட்டவர்களின் உடம்பு ஏற்கனவே நாசப்படுத்தப்பட்டுவிட்டது... அந்த உடம்பில் இயற்கை உணவு வேலை செய்ய பெரும்பாடு படும்... முயற்சிக்கலாம்! இதுவரை கீமோ கொடுக்கப்படவில்லையெனில், அவர்கள் முழுமையாகக் கட்டுப்பட இசைந்தால், இயற்கை உணவைக் கொண்டே குணப்படுத்த முடியும்” என்றார் நம்பிக்கையூட்டும் விதமாக!

* * * * * * * * * * * * * * *

இவ்வாறாக இரண்டாம் நாள் இரவு எங்களிடமிருந்து விடைபெற்று, 14.11.2013 வியாழக்கிழமையன்று மூன்றாம் நாள் விடிந்தது... சிற்சில செயல்திட்டங்களும், யோகா – மன வலிமைக்கான செய்முறைப் பயிற்சிகளும் - அவற்றுக்கென வந்திருந்த நிபுணர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

பயிர்கள் வளர்ந்துள்ள பகுதிகளுக்குச் சென்று, அவற்றின் மீது இருக்கும் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வருமாறு பணிக்கப்பட்ட நாங்கள், காலை 07.00 மணியளவில் உற்சாகமாக வெளியிறங்கினோம் - பூச்சி பிடிக்க.



இலைகளின் மீது அமர்ந்தும், இலைகளைச் சுருட்டித் தனக்குப் போர்வையாக்கிக் கொண்டும், கிளைகளின் மீது தவழ்ந்தும், வேர்களையொட்டியும் அலைந்து திரிந்த பல வகையிலான பல வண்ணப் பூச்சிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்தோம். கடைசி வரை பிடி தராத தட்டாம்பூச்சியை (அதாங்க... நம்மூரு தும்பியை) இளைஞர்கள் பறந்து பறந்து பிடிக்க முயற்சித்து, இயலாமல் மண்ணைக் கவ்விய காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. நிறைவில், பிடிபட்ட பூச்சிகளைக் கொண்டு ஒரு செயல்திட்ட அறிக்கையை தயாரித்து, வானகம் நடுவ பொறுப்பாளர்களிடம் சமர்ப்பித்தோம்.



முகாமில் கடந்த இரண்டு நாட்களாக ஓரளவுக்கே பழகியிருந்த நாங்கள், இந்த பூச்சி வேட்டையின் மூலம் நெருங்கிய நண்பர்களானோம். ஆம்! பல ஊர்களிலிருந்தும் இன்று எங்களுக்கு ஏராளமான பசுமைத் தோழர்கள் உள்ளனர்.

நிறைவாக, அய்யா குடிலுக்கு வந்தமர்ந்தார். “இந்த 3 நாட்கள்ல நீங்க பெற்ற பட்டறிவு குறித்து ஒரு பத்து பேரு சொல்லுங்கய்யா...” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கருத்துக்களைக் கூறினோம்.

அய்யா கேட்டுக்கொண்டதோ பத்து பேரை மட்டும் பேச! பேசியதோ 20 பேர் வரை!! அனைவருமே இந்த முகாம் தங்களுக்கு இயற்கை விவசாயம் - எளிய வாழ்க்கை முறை குறித்து மிகுந்த ஆர்வத்தையும், வேகத்தையுமே ஏற்படுத்தியுள்ளதாகவும், விஷம் கலந்த அனைத்தின் மீதும் அளவிட முடியாத வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆதங்கத்துடன் கூறக்கேட்ட அய்யா, அனைவருக்கும் சில அறிவுரைகளை வழங்கினார்.

அந்தக் கலந்துரையாடலில் தமிழகம் முழுக்க இயற்கை வேளாண்மையின் பக்கம் மக்கள் திரும்புவதற்கான ஏராளமான சான்றுகள் தென்பட்டன. தஞ்சையில் வேளாண்மை உள்ளிட்ட வாழ்வியல் கல்விகளை கற்பிக்கும் பல்முனைக் கழகம் (multiversity) உட்பட சில நிறுவனங்கள் தொடங்க உள்ளதாகவும் அய்யா தெரிவித்தார்.

வானகத்தில் இயற்கை வேளாண்மையைக் கற்று - பின்பற்றி - பரப்பிடும் நோக்கில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பணியாற்றும் பட்டதாரிகளையும், விவசாயிகளையும் அங்கே காண முடிந்தது. அய்யா நம்மாழ்வார் தன் வாழ்நாள் இலக்கை எட்டிவிட்டதாகவே எங்களுக்குப் பட்டது.

வானகம் நடுவத்தில் அரைபட்ட - மிதிபட்ட வைக்கோல்களும், மர இலை - கிளைகளும் சிதறிக் கிடந்தன. அய்யாவின் போராட்டப் பயணத்தில், மிதிபட்ட அவை - நுகர்வு வெறி, லாப வெறி, கார்ப்பரேட் பண்பாடு, ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் சருகுகளாகவே கண்களுக்கு தென்பட்டன.

முகாமில் பங்கேற்ற எங்கள் அனைவருக்கும் அய்யா தன் கைச்சான்றிட்ட சான்றிதழ்களை வழங்கினார். பங்கேற்பாளர் அனைவரின் சார்பிலும் ஐயாவுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தியதோடு, வானகம் நடுவ வளர்ச்சிக்காக எங்கள் சிறிய நன்கொடையையும் கையளித்தோம். பின்னர், அனைவரும் ஆவல் தீருமளவுக்கு அய்யாவுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டோம்.







உங்களுக்கு கண்டிப்பா ஒரு விஷயத்தை சொல்லியே ஆகனும்... முதல் நாளிரவில் “பக்கத்து ஊர்ல ரூம் போட்டு தங்குவோம்” என்று சொன்ன என்.எஸ்.இ. மாமா இரண்டாம் நாளிலிருந்து, முகாம் நிறைவு வரை அவ்வாறு சொல்லவே இல்லை என்பது மட்டுமின்றி, எங்களோடு இணைந்து முகாமில் முழுமையாக ஒன்றிப் போனார். அடுத்த நாளுக்கு என்ன செய்வது என்ற திட்டங்கள்தான் அவர் என்னிடம் பேசும்போது வெளிப்பட்டது. “ஓ... மாமா இந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள் போலும்!” எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

* * * * * * * * * * * * * * *

மதிய உணவுண்டோம்... பெட்டியைக் கட்டினோம்..

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த – இயற்கை விவசாயம், எளிய வாழ்க்கை முறை, நோயற்ற வாழ்வு, சுவையான இயற்கை உணவு, சமையல் குறிப்பு குறித்து பல்வேறு தலைப்புகளிலான அருமையான நூற்களையும், பூச்சிக்கொல்லி விஷம் கலக்காமல் விளைந்த தினை, சாமை, குதிரைவாலி, வரகரிசி போன்ற சிறு தானியங்களையும் பணம் கொடுத்து வாங்கி வைத்துக்கொண்டோம்.

அனைவரும் இணைந்து குடிலை விட்டும் விடைபெற்றோம்.







தெரியுமா உங்களுக்கு...? நேற்று மதியம் என் வீட்டில் சமைக்காத உணவுண்டோம். சோற்றுக் கற்றாழையை உடல் முழுக்கத் தேய்த்துக் குளிக்கிறோம்... அப்பாபள்ளி கோட்டைக்குள் நிற்கும் ஆலமரத்தின் விழுதுகளை வெட்டியெடுத்து, அதைக்கொண்டு பல் துலக்குகிறோம்... எங்கள் வீட்டில் சேரும் குப்பை எனும் உரச் சொத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம்.

இந்த சிறிதளவு மாற்றத்தைக் கூட நான் செய்யவில்லையெனில், மூன்று நாட்கள் அங்கிருந்ததில் பயன் என்ன இருக்கப்போகிறது...?

[முற்றும்]

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கானகத்தை காணும் வாய்ப்பு கிடைக்கணுமே !!
posted by: Salai.Mohamed Mohideen (Bangalore) on 19 November 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 31537

இந்நால்வரும் 3 நாள் முகாமில் கலந்துக்கொள்ள போகின்ற விடயத்தை பஷீர் காக்கா வாயிலாக அவர்கள் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு அறிந்தேன். கட்டுரையாக இது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஸாலிஹ் காக்கா அவர்கள் தனது அழகிய எழுத்து நடையில் பதிந்து விட்டார். இரண்டு பாகமும் தொடர்ந்து வந்திருந்தாலும் படிப்பதற்கு சலிப்பு தட்டவில்லை. மனம் அதில் ஒன்றிவிட்டது. நல்லதொரு பயனுள்ள கட்டுரை !!

பூச்சி விரட்டியின் தத்துவம், பூச்சுக்கொல்லி கலக்காத இயற்கை விவசாயம், சமைக்காத உணவு (தட்டில் உள்ளது), இயற்கை உணவு முறைகள் என பல சுவாரஸ்யமான தகவல்களையும் தாண்டி செயற்கையான வாழ்விலிருந்து வாழ்வுமுறையிலிருந்து இது போன்று ஓரிரு நாட்களாவது முழுமையாக விடுபட்டு எளிமையான இயற்கை வாழ்வில் தவழ்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை இக்கட்டுரையை படிப்போர் மனதில் ஏற்படுத்திவிட்டது.

"சிறிதளவு மாற்றத்தைக் கூட நான் செய்யவில்லையெனில், மூன்று நாட்கள் அங்கிருந்ததில் பயன் என்ன இருக்கப்போகிறது" - வாழ்த்துக்கள். நல்லதொரு மாற்றம். மாற்றம் ஒன்றே மாறாதது. அனைத்தையும் நம்மால் மாற்ற / கடைபிடிக்க முடியாவிட்டாலும் கூட அதில் உள்ள முக்கியமான அல்லது சிலவற்றையாவது நிச்சயம் கடைபிடிக்க முடியும் என்றே எண்ணுகின்றேன்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இயற்கை உணவில் நாட்டமுள்ளவர்கள் வட்டம் நமதூரில் விரிவடையட்டும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Husain Noorudeen (Abu Dhabi) on 19 November 2013
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31539

ஸாலிஹ், குடுத்து வச்சவன்பா நீயும் உன்னோடு இந்த பயணத்துல கலந்து கொண்டவங்களும். ஆதங்கமா இருக்கு.

புறப்படுறதுக்கு முன்னால NSE மாமா தாங்கும் எடத்த பத்தி கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்கன்னு சொன்னியே, கடைசி வரைக்கும் அதப்பத்தி சொல்லவே இல்லியே, முக்கியமா காலை கடன் கழிக்கல்லாம் என்ன ஏற்பாடு இருந்ததுன்னு சொல்ல வேணாமா, அப்புறம் அடுத்த மாசம் நாங்களும் வர்றத பத்தி யோசிப்போம்ல.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இயற்கையோடு இணைந்தோம்!
posted by: Firdous (Kayalpatnam) on 19 November 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 31543

நண்பன் சாலிஹ்,

எழுத்தோடு ஒன்றுவது என்று கேள்விபட்டுள்ளேன். ஆனால் அனுபவபூர்வமாக 3 நாள் வாழ்ந்து விட்டேன். அருமையான வரிகளும், அற்புதமான நிழற்படங்களும் என்னையும் உங்களுடன் பயணிக்க செய்தது. அல்ஹம்து லில்லாஹ்!

நிறைவில் கண்கள் பனித்தன. அது ஆதங்கத்திலா, ஆனந்திலா uஎன்று தெரியவில்லை. நான் வராது போனது கைசேதமோ என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் உனது வாழ்வியல் மாற்றத்திற்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: NAHVI (CHENNAI) on 19 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31544

அழகான, சிந்திக்க வேண்டிய அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி ஸாலிஹ். உன் பணி தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இயற்கை விவசாயம்
posted by: K.S.Seyed Mohamed Buhary (uae) on 19 November 2013
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31545

ஆச்சர்யம் அனால் உண்மை நான் பார்பது வுன்மையான படங்களா அல்லது போட்டோ எடிட் செய்ததா என்று எனக்குள் சந்தேகம் (100% வுன்மைதான்). ஏனனில் நம்ம வூர் மக்களுக்கும் இதில் ஆர்வம் இருக்கிறதா என்றுதான் சந்தேகம்.

நான் அபுதாபியில் இரும்கும் காயல் room met மற்றும் பிரிஎண்ட்ஸ்களிடமும் நம்மாழ்வார் குறித்தும் வானகம் இயற்கை விவசாயம் குறித்தும் பேசும் போதல்லாம் தட்டி களிப்பதகவே இருந்தது இப்போது காண்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது வானகம் என்ற இவ்வமைப்பின் இயற்க்கை விவசாய கொள்கையை நம்மோர் மக்கள் கடைபிடிப்பர்கலனால்

1. நோயற்ற வாழ்வு
2. நல்ல வுணவு,நீர்
3. 2ம் வுலகபோரின் முடிந்தததால் மிஞ்சிய அந்த வெடிமருந்துக்களை செயற்கையாக மாயைகளை ஏற்ப்படுத்தி வுரமாக விற்பனை செய்தது மேற்கத்திய நாடுகள். இன்று வரை அப்படியே தொடர்கிறது. கான்செர் போன்ற கொடிய நோயை தந்தும் நமது செல்வங்களி அள்ளியும் கொள்ளையிட்ட வர்களின் தந்திர வலையில் நாம் அகப்படாமல் இருக்க வுதவுகிறது.

4.டப்பாக்களில் அடைத்து வருகிறதே அவை ஹலால் தானா என்றெல்லாம் இனி இருக்காது.

5.கோகோகோலக்கு பதில் இளநீர் தான்.

6.நிலா வளம் நீர் வளம் மேம்படும்

இப்படி எவ்வளவோ நமை இருக்கிறது. நம்மாழ்வார் organic farming என்று பற்றி செய்து பாருங்கள் youtub லிங்கயும் போய் பாருங்களேன் எல்லாம் புரியும்.

http://www.youtube.com/watch?v=Vlo67iVcykk

இவ்வாறாக எவ்வளவோ irukkiradhu


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தொடர்ச்சி எதிர்பர்க்கிறேன்
posted by: K.S.Seyed Mohamed Buhary (uae) on 19 November 2013
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31546

தொடர்ந்து இயற்கை குறித்து வுங்களது பாங்கை தொடருங்கள் எங்களையும் இணையுங்கள் அடுத்த விடுப்பில் நாங்களும் வரலாம் வானகதிர்க்கு (ஹுசைன் நூர்தீன் காகாவையும் சேர்த்துதான் சொல்றேன்) என்று நினைக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...அருமையுளும் அருமை
posted by: netcom buhari (chennai) on 19 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31551

படிக்க படிக்க , நானும் உங்களுடன் கேம்ப் வந்த மாதுரி பீலிங் உண்டு பன்னும் அளவுக்கு கட்டுரை எழுதி உள்ளார், எங்களையும் உங்களுடன் அடுத்த முறை சேர்த்து கொள்ளுகள். NSE மஹ்மூத் மாமா ஏதோ சொன்ன தாக சொன்னீர்களை அது என்ன கதை, சாலை பஷீர் வண்டி தள்ளும் விததை பார்த்தல் , நகராச்சிக்கு ரோடு போடா உதவியாக இருக்கும் எண்டு நீனைகின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: S.M.I.Zakariya (chennai) on 19 November 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31554

சகோதரர் சாலிஹின் கட்டுரை மிக அருமை. தன்னுடைய பயணம் ஆரம்பித்த இடத்திலிருந்து முடியும் வரைக்கும் எதையும் தவற விடாமல் அதே நேரம் அனைவரும் ரசிக்கும் வண்ணம் எழுதி உள்ளார். வாழ்த்துக்கள்.

நான் facebook ல் இவரின் சில விசயங்களை படிக்க நேரிடும்போது இவர் ஏன் இன்னும் kayalpatnam .com ல் கட்டுரை எழுத வில்லை என எண்ணியதுண்டு. அந்த ஏக்கத்தை தற்போது பூர்த்தி செய்து விட்டார் நண்பர் சாலிஹ் . மேலும் இவருடைய கட்டுரைகளை எதிர் பார்க்கிறேன்.

இயற்கை முறையில் விவசாயம் பண்ணும்போது சில பிரச்சினைகள் வருவதை நான் கேள்விபட்டிகிருகிறேன். சில நேரங்களில் பூச்சிகள் பயிர்களை தாக்கும் போது இயற்கையாக செய்யப்படும் பூச்சி கொல்லி மருந்து பெரிய அளவவில் உதவியாக இல்லை என நான் கேள்விபட்டிருக்கிறேன்.

ஏக்கர் கணக்கில் விவசாயம் பண்ணும்போது தலையில் துண்டை போட்டுகொண்டு நல்லது நடக்கும் என நாம் இருக்க முடியாது. இதற்கு நண்பரிடம் இருந்து பதிலை எதிர் பார்க்கிறேன்.

சித்தர்கள் பொதுவாக அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதை அந்த பெரியவருடைய கருத்தில் நீங்கள் கண்டீர்களா என்பதை பற்றியும் விளக்கவும் ஒட்டகத்தின் சிறுநீரை பருகுவது சம்பந்த மாக நம்முடைய மார்க்கத்தில் நாம் கேள்வி பட்டு இருக்கிறோம் . ஆடு மற்றும் மாட்டின் சிறு நீரை நாம் பருகலாமா என்பதை விளக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அருமை மச்சான், அருமை.
posted by: ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) on 19 November 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31555

அருமையான எழுத்து நடை. முழு மூச்சா படித்து முடித்தேன். எல்லா மாதமும் இப்படியான முகாம் இருக்குமா? இன்ஷா அல்லாஹ் கோழிக்கோட்டில் இருந்து ஒரு பயணத்திற்கு மனதளவில் நான் தயார் ஆகிவிட்டேன்.

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சில கேள்விகளுக்கு விளக்கம்!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 19 November 2013
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31557

சகோதரர் ஜக்கரிய்யா அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம்:

(1) (மருந்திற்காக) ஒட்டகத்தின் சிறுநீர் பருகப்பட்டுள்ளதாகக் கேள்வியுற்ற தகவலை மேற்கோள் காடடி ஆடு - மாடு ஆகியவற்றின் சிறுநீர் குறித்து கேட்டிருந்தீர்கள். இதுகுறித்து மார்க்க அறிஞர்களிடம் கேட்டு விடை தருகிறேன்.

(2) நம்மாழ்வார் அய்யா அசைவம் குறித்து என்ன கூறினார் என்று கேட்டீர்கள்.

அவர் சைவம் செரிமானத்திற்கு பிரச்சினையில்லாத உணவு என்பதை வலியுறுத்தத் தவறவில்லை. ஆனால், அசைவமே கூடாது என்ற கருத்தில் அவர் பேசியதாக உணர முடியவில்லை. காரணம், கப்பைக் கிழங்கு (ஏழல கிழங்கு) குறித்து அவர் சிலாகித்துக் கூறுகையில், “கேரளா காரங்க கப்பைக் கிழங்கும், மீனும் வச்சி சாப்பிடுவாங்க... அது அருமையான சுவை மிகுந்த உணவு” என்று கூறக் கேட்டோம்.

பசுவைக் கொல்வது குறித்து கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியே பேசினார். அது எல்லா வகையிலும் விவசாயத்திற்கு பக்கபலம்; அதன் கழிவுகளால்தான் நிலம் பயிர் முளைக்கும் தகுதியில் உயிர் பெறுகிறது என்பதால், அது கிழட்டுப் பசு, காளை, எருமை என எதுவானாலும் அதைச் சும்மாவாவது விட்டு வைக்கவேண்டும் என்பது அவர் கருத்து.

ஜைன சமயத்தவர்களின் கூற்று குறித்தும் மேலோட்டமாகப் பேசினார். “அவங்க பசுவைக் கொல்ல விட மாட்டாங்க... ஆனா, எருமையைப் பாதுகாக்க பிடித்து வந்தால், இதை ஏன் புடிச்சிட்டு வந்தீங்க...? என்பார்கள். அவங்களுக்கு பசு முக்கியம். எனக்கு அந்த இனமே முக்கியம்” என்றார்.

அதிலிருந்து, இன்று பரப்புரை செய்யப்படும் பொதுவான பசுவதை எதிர்ப்பு பரப்புரையை ஒத்ததாக அவரது கூற்றை என்னால் உணர முடியவில்லை. விவசாயம், அதற்கான நிலம் உள்ளிட்டவற்றுக்கு எது எதுவெல்லாம் வளம் தருமோ அனைத்தும் நிலைக்க வேண்டும், பெருக வேண்டும் என்பதே அவரது ஆதங்கமாக இருந்தது.

அங்கு தங்கும் குடிலில் மாட்டப்பட்டிருந்த அறிவுரைப் பலகையொன்றில், “இறைச்சியைக் குறைவாக உண்” என்று இருந்ததைப் பார்த்திருப்பீர்கள். (அந்த அறிவிப்புப் பலகை படத்தை பெரிதுபடுத்தியும் காணலாம்.)

நல்ல மனதுடன் நமக்கு சரியெனப் பட்டதை நாம் எடுத்துக்கொள்வோம்.

(3) பூச்சு விரட்டி குறித்து நீங்கள் கேட்ட அதே கேள்வி அங்கும் கேட்கப்பட்டது. அதற்கான விளக்கம்...

சில பூச்சிகள் பயிர்களை சாப்பிடத்தான் செய்யும். அதைச் சாப்பிடவென சில பூச்சிகள் வரும். அது பார்த்துக்கொள்ளும் என்றார்.

“ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்ய ஏராளமான பொருளை செலவழித்துவிட்டு, பூச்சிக்குக் கொடுப்பதும் இழப்புதானே, அதற்கு அதை மருந்தடித்து அழித்து விடலாமே...?” என்றும் கேட்டோம்.

“சரி அய்யா! நீங்க இட்ட பூச்சி விஷத்தால நிலம் சில வருடங்கள்லயே நிலம் செத்துப் போச்சே... எந்த விஷத்தைத் தெளிக்க பரிந்துரைத்தார்களோ அதே விஷம் அந்தப் பூச்சியை சாகடிக்கவில்லை; வேலை செய்யவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொண்டார்களே...? கொஞ்சம் பூச்சிக்கும் கொடுத்து, எல்லாக் காலத்திலும் விவசாயம் செய்வது சிறந்ததா அல்லது மொத்தமா சில வருடங்களுக்கு மட்டும் விவசாயம் பண்ணிட்டு, நிலத்தைச் சாகடித்து எதுக்கும் உதவாத நிலைக்குக் கொண்டு வருவது நல்லதா? இந்த பூச்சி விஷங்களால் நிலங்கள் பாழ்பட்டதைத் தவிர வேறென்ன இன்று நடந்துள்ளது?” என்றும் அவர் கேட்டார்.

ஐதுரூஸ் ஆதில் மச்சான் அவர்களுக்கு,

மாதந்தோறும் 3 நாட்கள் முகாம் நடைபெறுகிறது. எனினும், மீத்தேன் வாயு எடுப்பதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கெதிராக பரப்புரை செய்யச் செல்லவுள்ளதாகவும், எனவே டிசம்பர் மாதம் மட்டும் முகாம் கிடையாது என்றும் அங்கு அறிவிக்கப்பட்டது.

அடுத்த முகாமுக்கான தேதி நிச்சயிக்கப்படும்போது, இன்ஷாஅல்லாஹ் அவசியம் தகவல் தருகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அட...அதுக்குள்ளே முடிஞ்சு போச்சே....?
posted by: ராபியா மணாளன். (காயல்பட்டினம் ) on 19 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31559

படிக்கும் போதே இன்னும் எத்தனை பாரா உள்ளது என திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே படித்தேன். காரணம் முடிந்து விடுமோ எனும் அச்சம். படித்தேன் என்பதை விட லயித்தேன் என்பதுதான் பொருத்தம்.

வயல்வெளிகள், விளைநிலங்கள் யாவும் நிகத்தப்பட்டு மனைகளாக்கி கலர் கலராய் கல்லை நட்டு வச்சு, வேலி போட்டு இந்தா அம்பது மீட்டர்லெ ஆஸ்பத்திரி இருக்கு, அந்தா அறுபது மீட்டர்லெ ரயில்வே ஸ்டேஷன் இருக்கு, 24 மணி நேரமும் போக்கு வரத்து இருக்குன்னு ஒரு டுபாக்கூர் நடிகையை வெச்சு இளிச்சு இளிச்சு டிவியிலெ பேச வெச்சு பணத்தை புடுங்கி பத்து வருஷமானாலும் வீடு கட்ட முடியாம அல்லோலப்படும் மக்கள் நிலை பரிதாபத்திற்குரியதே!

இன்றைய காலகட்டத்தில் இயற்கையான உணவு இயற்கை மருத்துவம், இயற்கை உரம் இப்படி காணக் கிடைப்பதே அரிது. மைதா மாவு புரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டங்கள், நாட்பட்ட டின் உணவு, இன்னும் ஒரு ஐட்டம் பாக்கியில்லாமெ அனைத்தும் பாக்கெட்டில் அடைத்து விற்பனையாகும் போது அதை தவிர்த்து எப்படி வாழலாம் என்பதற்கு இந்த முகாம் ஒருவழிகாட்டி.

சரி அடுத்த டூருக்கு ஆள் சேர்ந்தாச்சு...!

நம்ம ஊரு சித்தன் அதாங்க மலைப்பாடகன், ஆடு வாழ்க்கை, பூவுலகின் நண்பன் என நாங்கள் செல்லமாக அழைக்கும் இயற்கை மைந்தன் யப்பா.... சாளை பஷீர் இப்ப உமக்கு சந்தோஷம்தானே...?

போற போக்கை பார்த்தால் இனி நம்மளையும் இலை, தழைகளை தின்ன வெச்சுடுவார் போலெ! இதுலெ இயக்குனர் அமீர் அப்பாஸ் வேறெ சேர்ந்துட்டாரா...? போதுமே... பொழுது போக? அந்தா ஆளுகிட்டெ அரை மணி நேரம் பேசினாலே அப்படி ஒரு சிரிப்பு வரும். சிரிக்கவும் சீரியஸா சிந்திக்கவும் நிறைய விஷயம் அவர் கிட்டெ இருக்கு.

நல்ல அரோக்கியமான வாழ்விற்கு நம் கைவிரல் பிடித்து அழைத்துச் செல்லும் அருமையான பதிவு...! கட்டுரையாளருக்கு மனமுவந்த நன்றி...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. கேன்சர் நிவாரணி
posted by: B.S அஹ்மது ஸாலிஹ் (HK) on 19 November 2013
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 31564

C&P:
=============

புற்றுநோயை இயற்கை முறையில் குணமாக்க வாய்ப்புண்டா என இயற்கை உணவியல் நிபுணர் மாறன்ஜியிடம் கேட்டபோது,

“அவங்க இயற்கை உணவுக்கு முழுமையாக மாறனும்... புற்றுநோய்க் கிருமிகளுக்கு இயற்கை உணவில் எந்தத் தீனியும் கிடைக்காது என்பதால் அவை செத்துப் போகும்...

கீமோ கொடுத்தாச்சா...?” என்று கேட்டார். “கொடுக்கப்பட்டவர்களும் உண்டு; கொடுக்கப்படாதவர்களும் உண்டு” என்றோம்.

கொடுக்கப்பட்டவர்களின் உடம்பு ஏற்கனவே நாசப்படுத்தப்பட்டுவிட்டது... அந்த உடம்பில் இயற்கை உணவு வேலை செய்ய பெரும்பாடு படும்... முயற்சிக்கலாம்! இதுவரை கீமோ கொடுக்கப்படவில்லையெனில், அவர்கள் முழுமையாகக் கட்டுப்பட இசைந்தால், இயற்கை உணவைக் கொண்டே குணப்படுத்த முடியும்” என்றார் நம்பிக்கையூட்டும் விதமாக!

====================================

"உணவே சிறந்த மருந்து" (முது மொழி)

கீமோ மற்றும் ரேடியேஷன் தவிர்த்து உணவை மட்டுமே வைத்து கேன்சரை குணப்படுத்த முடியிமெனில், வெறும் தியரியில் மட்டும் இல்லாமல் அதற்கான வழி முறைகளையும் கண்டறிந்தால் நம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by: rilwan (Austin, TX) on 24 November 2013
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31655

அருமையான விஷயம்.. காயல் இயக்கங்கள் இதுபோன்ற இயற்கை விவசாயத்தில் இளைஞ்சர்களை ஈடுபடுத்த வேண்டும்.

விவசாயம் அருமையான தொழில் .. ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதின் பெருமை புரியும். நல்ல உணவுகள் இருக்கே, சில சமயங்களில் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளின் உணவு பழக்கங்களை நாசம் செய்கின்றார்கள். பெப்சி கோக் மற்றும் அதுமாதிரியான கார்போநேடட் ட்ரிங்க்ஸ் மற்றும் மெக்டோனல்ட், மால் களில் இருக்கும் விரைவு உணவாக சாப்பாடுகளை பழக்கப்படுத்தி... அப்படி சாப்பிட்டால்தான் எதோ முற்போக்கானவர்கள் என்பதை போன்ற மாயையில் சில பெற்றோர்களும் இருக்கின்றனர்.

இவை உடலை எவ்வளவு பாதிக்கிறது என்று யோசிக்கும் பக்குவம் இல்லை .. ஏதோ எலிகள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல ஓடிக்கொண்டிருப்பவர்கள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by: RamMohan R (Chennai) on 03 December 2013
IP: 196.*.*.* India | Comment Reference Number: 31794

அழ்கான கட்டுரை. செம்மையான பிரதிபலிப்பு. ஆழ்ந்து ரசித்தேன். மிக்க நண்றி. இராம்மொஹன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved