Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:35:59 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 113
#KOTWEM113
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 18, 2013
ஒளியின் ஒலி...

இந்த பக்கம் 3010 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அல்லாஹு அக்பர் ... அல்லாஹு அக்பர் ...

ஒலி... ஒலி... ஒலி
ஒளியின் ஒலி ...

ஊரின் கூரை மேல் படர்ந்து
உறங்குபவரின் உள்ளத்தை
ஊடுருவும் அதிசய ஒலி.

காற்று சுமந்து வரும் காந்த சப்தம்....

இருட்டு இதயத்திற்கான
வெளிச்ச வீரியம்...
எப்போதும் கேட்டிராத
மண்ணுக்குப் புதியதும்
மனசுக்கு இனியதுமான மகத்துவம்

என் பாட்டனின் பாட்டன்
முப்பாட்டனின் முப்பாட்டன்
முப்பாட்டனின் மூதாதையன்
மூதாதையனின் மூத்தவன் - முனுசாமியை
காற்று அழைத்து வந்து - கடற்கரையில் நிறுத்தியது.

கொற்கை துறைமுகத்தில்
குதிரைகளின் கொட்டாரத்தில்
தோளோடு தோள் உரச
குனிந்து எழும்புகிறதே ஒரு கூட்டம்.

இதில் ஆண்டான் யார்? அடிமை யார்?

மனிதனை மனிதாய் கொள்ளும்
மகத்துவம்.

நாய்கள் கூட நடக்க நடுங்கும்
உச்சி வெயிலில் கடந்து போகும்
உயர்ந்த குலத்தினருக்காய்
கக்கத்தில் செருப்பையும்
பாதத்தில் மானத்தையும்
அணிந்து செல்லும் - தரித்திர பூமியில்
ஒற்றுமையை உரக்கச்சொல்லும்
ஒரு புதிய நாகரீகம்.

யார் இவர்கள் ... ?

கேள்வியாய்த் தொடங்கியது ...

விரியும் எல்லாம் சுருங்கும் என்றால்
வானம் இல்லை கடவுள் ...
உதிப்பன எல்லாம் மறையும் என்றால்
உதயன் இல்லை கடவுள்...
கரையை மீற கட்டளை வேண்டும்
கடலும் இல்லை கடவுள்.
நீரில் தன்னை நீர்த்து விடும்
நெருப்பும் இல்லை கடவுள்...
அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு-
புதுப்பிக்கப்படும் பூமியும் இல்லை கடவுள்.


மறைந்து போவதும்
மரணித்துப் போவதுமாய்
வெற்றுப் பிம்பங்கள் என
சுற்றித் திரியும் கடவுள்கள்
முடிவுகளின் எல்லையில்
தன்னையே காக்க முடியாமல் கதறியவை.

காக்கும் என வணங்க சொன்ன
கற்கள் எல்லாம் கடலுக்குள்
காப்பான் எனப் பாடச் சொன்ன -
அரசன் எல்லாம் மண்ணுக்குள்


எல்லாம் படைப்புகள்
தேவைகள் தேடும் அனைத்தும் படைப்புகள்.

நான் தொழுதவை எல்லாம் தொழுதவை.

பின் யார் காப்பான் ...?
யார் கடவுள் ...?


ஆரம்பங்களற்ற அரசனவன் ...
முடிவுகளற்ற முதலாமவன் ...

எவரையும் தொழாதவன்.. எவரும் தொழாமல் விடாதவன்.
தேவையற்றவன்... தேடுபவர்களுக்கு உற்றவன்.
எவனோ அவனே வணக்கத்திற்குரியவன்.

அப்படியாயின்...

பதிலின் பாதியிலேயே
முனுசாமி முஹம்மதாய் மாறி
முஸ்லிமானான்...

லாயிலாஹா இல்லல்லாஹ்
முஹம்மதுர்ரசூலுல்லாஹ்...


வார்த்தை புரிந்து சொன்னான்...

வாழ்க்கை புரிந்து கொண்டான்...

இறைவனின் வார்த்தைகளை வாசிக்கத் துவங்கினான்...
இறைத்தூதர் போதனைகளை நேசிக்கத் தொடங்கினான்...

இங்கே இருந்தவர்கள் இருட்டில் தான்
இருந்தார்கள்.

வந்தவர்கள் ஏற்றி வைத்த
இஸ்லாமிய வெளிச்சத்தில் தான்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
இந்திய இஸ்லாமிய நகரங்கள்...

இனியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்
ஒளியின் ஒலி...

அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒரு மகத்தான கவிதையை நண்பர் முஷ்தாக் வடித்துள்ளார்.......!!!!!!
posted by: S.K.Shameemul Islam (Chennai) on 18 October 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30846

காலத்திற்கு மிகவும் தேவையான மிகவும் பிரயோசனமான இதுவன்றி வேறு எதவும் முக்கியத்துவம் பெறாத பெற முடியாத ஒரு மகத்தான கவிதையை நண்பர் முஷ்தாக் வடித்துள்ளார். கூடவே கவிஞ்சர்கள் பற்றி குர்ஆன் எதிர் மறையான பார்வையையே வைக்கிறது. நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளும் அவ்வாறே உரைக்கின்றன. ஆனால் இது போன்ற கவிதைகள் தவிர.

அதாவது எழுதியவன் யார் என்பதை விட எழுதப்பட்ட செய்தியில் அர்த்தம் இருக்க வேண்டும். கருத்து இருக்க வேண்டும். அறியாமை என்னும் இருளிலிருந்து அறிவதற்கான கண்களைத் திறந்திடவேண்டும்.

அல்லாஹ்வை அவன் உள்ளான் என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். அதைச் சொல்ல வந்தவர்தான் அல்லாஹ்வின் தூதர் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

26:224 وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ

இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.

26:225 أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ

26:225. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?

26:226 وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

26:226. இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.

26:227 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ مَا ظُلِمُوا ۗ وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ

26:227. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...அல்லாஹ் பெரியவன்
posted by: mackie noohuthambi (colombo) on 18 October 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30847

இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான், இல்லை ஒரு தெய்வம் என்று சொல்லவில்லை என்றான்.

இறைவன் என்பவன் இனி அல்லாஹ் இல்லை என்று ஒரு நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஆம் இறைவன் வேறு அல்லாஹ் வேறு. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டுமே சொல்லி அல்லாஹ்வை புகழ்வோம் மேன்மை படுத்துவோம்.

காதலன் கணவன் இவர்களுக்கும் இறைவன் என்றே தமிழில் சொல்லப்படுவதால் இனிமேலும் நாம் அல்லாஹ்வை இறைவன் என்று அழைப்பதை தவிர்ப்போம். அல்லாஹ் என்ற திருநாமம் வேறு எந்த இணை பெயராலும் துணை பெயராலும் அழைக்கப்படக் கூடாது என்று இந்த நல்ல நாளில் சபதம் ஏற்போம்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா வல் ஹம்து லில்லாஹி கதீரா.சுபுஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முஸ்தாக் அவர்களின் முத்தான கவிதை!
posted by: kavimagan (doha-qatar) on 18 October 2013
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 30851

மாஷா அல்லாஹ்! நீண்ட நாட்கள் கழித்து ஓர் அருமையான கவிதையை சுவாசிக்கும் வாய்ப்பு.....

தெள்ளிய நீரோட்டமாய் பயணிக்கும் கவிதை
உள்ளத்தின் பள்ளத்தில்
நீண்ட நாட்களுக்கு நிறைந்திருக்கும்...

அழுத்தம் திருத்தமான அழகான கவிதையைத் தந்த நண்பர் முஸ்தாக் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் ஒரு வேண்டுகோள்....
தொடரட்டும் உங்கள் கவிதைகள்... இன்ஷா அல்லாஹ்.....

குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கவிஞர்களை எதிர்மறையாகவே பார்க்கிறது என்ற, நீண்ட பல வருடங்களுக்கு முன்பே அறிஞர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு வாதத்தை முன்னிறுத்தி நண்பர் சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் அவர்கள் மீண்டும் வந்திருக்கின்றார்கள்.

இந்தத் தலைப்பிற்குள் நுழைந்தால், அடிப்படை பொருளில் இருந்து, நம்மை வேறு ஒரு தளத்திற்கு, களத்திற்கு அழைத்துச் சென்று விடும்..

சகோதரர் அவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், தயவுசெய்து நீங்கள் இங்கே சுட்டிக் காட்டியிருக்கும் இறை வசனங்கள் எந்த சூழ்நிலையில்,எதற்காக சொல்லப்பட்டது என்பதனையும் மார்க்கம் அறிந்த நீங்கள் எடுத்து வைத்தால், நீங்கள் முன்வைத்த வாதங்களுக்கு அதுவே பதில் ஆகிவிடும் என்பது எனது பணிவான கருத்து..... எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்துவானாக! ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Abbas (Los Angeles) on 18 October 2013
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 30852

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோ முஸ்தாக் அவர்களின் இன்னொரு அருமையான படைப்பு.......

தொலைந்து போன சுவனத்தின் முகவரி மாதிரி இன்னொரு கட்டுரை எழுதுங்க ஊருக்கு இப்ப ரொம்ப முக்கியமான தேவை ஒற்றுமையை வலியுறுத்தும் எழுத்துக்கள்....

எல்லோரும் சந்தோசமா இருக்க வேண்டிய நாட்களில் நிம்மதி இழந்து மன வேதனையோட.... உம்மா வீட்டில் ஒரு நாள் மனைவி வீட்டில் ஒரு நாள் அவ்வளவு ஏன் கணவனுக்கு ஒரு நாள் மனைவிக்கு வேறொரு நாள்..... இதுதான் நபி காட்டிய வழியா? இப்படி தான் நபி வழியை பின்பற்றுவதா?... சிந்தியுங்கள் பொறுப்பில் உள்ளவர்களே....

இன்றைய இளைஞர்கள் நினைத்தால் நிச்சயம் இதுக்கு அழகான முடிவு காணலாம் பல நாட்களாக இருந்த இந்த பெருநாள் இப்ப ரெண்டு நாலுன்னு ஆயிடிச்சு Insha அல்லாஹ நாம் முயற்சித்தால் அது ஒரு நாளில் உண்மையான பெருநாளாக மாறும்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...பிரயோசனமான கவிதை..
posted by: Ismail (Dammam) on 19 October 2013
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30857

மாஷா அல்லாஹ்.. நண்பனின் கவிதை அருமை..

கவிதைகளில் பல விதங்கள்.. அதில் இது போன்ற கவிதைகள்தான் வாசிப்பவருக்கம், எழுதியவருக்கும் பிரயோசனம்..

பொதுவான கவிதைகளை எழுதுவதற்கு ஏராளாமானவர்கள் இருக்கிறார்கள்.. இது போன்ற கவிதைகளை எழுதுவதற்கு ஆட்கள் கம்மி.. மார்க்கப் பற்றுள்ளவர்கள்தான் முன் வர வேண்டும்..

நண்பன் முஸ்தாக் வருடத்துக்கு ஒரு கவிதை எழுதாமல், அவ்வப்போது எழுதலாம், தரமாக..

(முயற்சிக்கவும்.. முடியாததல்ல எனபது உனக்குத் தெரியும்..)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: ALS IBUNUABBAS (Kayalpatnam) on 20 October 2013
IP: 106.*.*.* India | Comment Reference Number: 30862

அஸ்ஸலாமுஅழைக்கும்

மழை இல்லா காயல் நகருக்கு கவிதை மழை தந்து நனைய வைத்தமைக்கு நன்றி.

உங்கள் ஒளி இன் ஒலி கவிதை சூப்பர்
கொற்கை துறைமுஹதில்
குதிரைகளின் கொட்டாரத்தில்
தோளோடு தோல் உரச
குனிந்த
என்ற வரி காயலின் பழமையை கண் முன் கொண்டு நிறுத்திய கோவா உல்லாசபுரியில் வாழ்ந்து தொழில் செய்து வரும் உங்களுக்கு எங்களது நன்றி.

நான் எழுதவே முடியும் இதில் எழுத பிறர் உதவியை நாடுவதால் அணைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கு பதில் தர ஆசை அனால் முடியவில்லை . முடிந்த வரை பதில் தர சில நல்ல உள்ளங்களை அல்லாஹ் தந்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ்.......

ALS .MAMA
தலைவர் - நூலகர்
SIDAKATHI MEMORIAL LIBRARY
மஜ்லிஸ்-உல்-கௌத் சங்கம்
தாயம்பள்ளி வளாகம்
காயல்பட்டணம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: k m shaik dawood (chennai) on 31 October 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31098

அஸ்ஸலாமு அலைக்கும்

என் இனிய நண்பா

அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

ஒளியின் ஒலி
உன் இஸ்லாமிய கவிதை வாசித்தேன்
அருமையான நடையில் ஆழமான
கருத்துகள் ஒளிர்கின்றன

அல்லாஹுவின் பண்புகள் மகத்துவம் வல்லமையை

அழகாக உன் கவிதை சொல்லுகிறது

வணங்கதகுதியானவன் அவனைத்தவிர யாரும் இல்லை

என்று அழகாய் மாற்றானை அழகாய் அழைக்கிறது

கொற்கை கடற்கரையில்
ஒன்றாய் குனிந்து எழும்பிய கூட்டம்
இன்று இருவேறு கூட்டமாய் இரு வேறு நாட்களில்
குனிந்து எழும்புவது ஒற்றுமையை பிளகிறதே
ஒற்றுமையை ஒரக்க சொன்ன புதிய நாகரிகம் எங்கே
காற்று அழைத்து வருமா முனுசாமியை
வந்தவர்கள் ஏற்றி வைத்த இஸ்லாமிய வெளிச்சம்
என்றிராமல் திருகுரான் 3.110 இல் கூறியபடி
நீங்கள் மனித சமுதயதிற்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த
சமுதாயமாக இருகிறிர்கள் நன்மையை ஏவுகிரிர்கள் தீமையை தடுகிரிர்கள் அல்லாஹுவை நம்புகிறிர்கள்
என்ற வசனதுகேற்ப ஒரு கூட்டம் அழைப்புபணியை அழகாய் செய்கிறது

வந்தவர்கள் ஏற்றி வைத்த இஸ்லாமிய வெளிச்சத்துக்கு மெருகூட்டுகிறது

முனுசாமிக்கள் முஹம்மத் ஆக மாறு கிறார்கள்

மாறுவது தொடரட்டும்

அல்லாஹுஅக்பர்
இன்ஷால்லாஹ்
ஒன்றாய் ...ஒரே ,,நாளில் ..ஒலிக்கட்டும்

உன் முப்பது வருட நண்பன்
தாவூத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வளர்பிறை!
posted by: கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா-கத்தார்) on 03 November 2013
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 31166

சகோ. முஸ்தாக் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் இந்த இணையத்தளத்தின் எழுத்து மேடை பகுதியில் எழுதிய “தொலைக்கப்பட்ட சுவனத்து முகவரி!” என்ற கட்டுரை சில நேரங்களில் நினைவுக்கு வந்து என் நெஞ்சைப் பிழியத் தான் செய்கின்றன. சகோதரரின் எழுத்து வரிகளைப் படித்து முடித்ததும், ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு மனதில் தோன்றி பிசைகிறது. அழகான எழுத்து வடிவம்!

வியாபாரிகளாய் வந்த எளிய தொண்டர்களான அவர்களின் நீதி, நேர்மை, வாய்மை, செயல்பாடு, சமத்துவம் - இவை கண்ட முனுசாமிகள் அலை அலையாய் முஹம்மதுகளாகவும், முஹ்யித்தீன்களாகவும், முஸ்தாக் களாகவும் ‘”லாயிலாஹ இல்லல்லாஹ்” என்னும் ஒற்றைச் சொற்றொடரை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களாய் பரிணமித்தனர். அது ஒரு வளர்பிறை காலம் தான்!

அல்லாஹ்வின் ஒளியை எவராலும் ஊதி அணைத்து விட இயலாது! இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்! வாழ்ந்து காட்டுவோம்!

பாருங்கள்!
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி திரண்டு வரும் மக்கள் திரளைக் கண்டு நம் வாய் தொடர்ச்சியாக “சுப்ஹானல்லாஹ்””அல்ஹம்து லில்லாஹ்” “அஸ்தஃபிருல்லாஹ்” என்று மொழிந்த வண்ணம் இறைத்துதியில் ஈரப்பதமாகவே இருப்பதைக் கண்கூடாகப் பாருங்கள்! இன்ஷா அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved