Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:31:00 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 112
#KOTWEM112
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 12, 2013
கல்விக் கண்ணைத் திறந்தவர்கள், திறப்பவர்கள்!

இந்த பக்கம் 2802 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இணையதள இணைபிரியாத வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வரலாற்றை நாம் பாதுகாத்தால்தான் நமது பாரம்பரிய பெருமையை நாம் அறிய முடியும். நாம் எகிப்திலிருந்து வந்தோம் என்றும் சொல்லிக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது. இந்த காயல் நகரை எகிப்தில் உள்ள காஹிர் நகர் மக்கள் எந்தளவு உணர்ந்து இருக்கிறார்கள்?

நமது தமிழகத்தின் அருகாமையிலள்ள பாண்டிச்சேரி ஒருகாலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. இன்று கூட பாண்டிச்சேரியில் பிறந்து பாஸ்போர்ட்டில் பாண்டிச்சேரி பிரதிநிதி என்றாகிவிட்டால் பிரான்சில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் காயல்வாசிகளின் முன்னோர்கள் எகிப்திய மக்களின் வழிவந்து குடியேறியவர்கள் என்ற உணர்வு எகிப்திய மக்களுக்கு உள்ளதா? – நம்மில் யாராவது அதை எகிப்திய அரசுக்கு எடுத்துரைத்தோமோ? எண்ணிப் பார்க்க வேண்டும்.

வரலாற்றை பாதுகாக்க வேண்டாமா?

நமதூரின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் யார்? நமதூரின் மேன்பாட்டுக்கும், மார்க்க ஞான வளர்ச்சிக்கும் உதவிய ஆலிம்கள் யார்? யார்? அவர்கள் எந்தத் தெருவில் பிறந்தார்கள். அவாக்ள் செய்த மார்க்க சேவை என்ன? என்பதை அறிந்து வைப்பதும் இணையதளம் மூலம் முழு உலகுக்கே எடுத்து வைக்கும்போதுதான் கல்வியின் கண்ணை திறப்பவர்களின் பட்டியலில் இடம் பெறுகிறோம். வரலாற்றை தேடுவதும் ஒருவகை ஆய்வுக் கல்வியாகும். கண்டிப்பாக ஒவ்வொரு மனிதருக்கும், ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. அதை காலத்தோடு மங்கி மறைந்து போகாமல் எடுத்து வைப்பது நமது ஊரின் இணையதளங்களின் கடமையாகும்.

இணையதளங்கள் என்ன செய்ய வேண்டும்?

நமதூரின் இணையதளங்கள் செய்திகள் கட்டுரைகளை வெளியிடுகிறது. செய்திகளை மட்டும் வெளியிடும் இரண்டு இணையதளம் உண்டு. செய்தி என்பது படித்ததோடு சரி. கட்டுரை என்பது காலாகாலம் பாதுகாக்க வேண்டியவைகளாக கருதப்பட வேண்டும். ஒரு கட்டுரை ஆசிரியர் அல்லது தொகுப்பாசிரியர் பலநூல்களைப் படித்து கட்டுரைகளை தருகிறார். இதுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். கற்பனை கட்டுரை சிலகாலத்தில் மங்கி மறைந்து விடும்.

நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் இரண்டு நபித்தோழர்கள் (ஸஹாபிகள்) எப்போதும் இருப்பார்கள். ஒருவர் அபூஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள். அதிகம் நினைவாற்றல் உள்ளவர்கள். நபிகளாரின் போதனையை மக்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டுபவர்கள். மற்றவர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள். ராவி –நபிகளார் சொன்னதை பதிவு செய்பவர்கள் அன்றைய காலகட்டத்தில் மிருகத்தோலில் அல்லது ஒட்டக எலும்புகளில் எழுதி வைப்பதாகக் கூறுவதுண்டு. நமதூர் இணையதளங்கள் அவர்களின் இணையதளத்தில் வெளியாகும் கட்டுரையாளர்களின் கட்டுரைகளை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மலராக வெளியிடலாம்.

இதனால் கட்டுரையாளர்களின் கருத்து, ஆய்வுநிலை எல்லா மக்களுக்கும் சென்றடையவும் பல்கலைக்கழகங்கள், எழுத்தாளர்கள், அரசு தனியார் நூலகங்களுக்கு இணையதளம் வெளியிடும் கட்டுரை, மலர்களை அவர்களுக்கு அனுப்பியும் வைக்கலாம். இப்படி செய்யும்போது இணையதளங்களை பார்க்காத மக்களுக்கு இது காலத்தால் பிரயோஜனப்படும். கட்டுரையாளர்களை நம் ஊரும் நாடும் அறிந்து கொள்ள முடியும். இந்த முறையை இணையதளங்கள் பின்பற்றுவார்களா?

முந்தைய பழைய நூல்களை பாதுகாப்பீர்:

நமதூரில் அரபுத் தமிழ்நூல்கள் ஏராளமாக இருந்தது. அரபித்தமிழ் நூல்களைத் தந்த பெருமை நமதூரைச் சாரும். நமதூரின் பழைய காப்பியங்கள், பாமாலைகள் கடல்கடந்த நாட்டைச் சார்ந்த பேரறிஞர் டாக்டர் உவைஸ் அவர்கள் பாதுகாத்து வைத்து அவற்றிலிருந்து பல கட்டுரைகளைத் தந்தார். எம்.ஆர்.எம்.அப்துர்ரஹீம், ஆர்.பி.எம். கனி அவர்கள், காரைக்கால் சாஹிபு மரைக்காயர் போன்றவர்கள் நமதூர் புலவர்களின் நூல்களை தேடி பாதுகாத்து அதன்மூலம் பல தகவல்களை இஸ்லாமிய தமிழ் இலக்கிய தமிழ் இலக்கிய மாநாடு வரும்போது அங்கு வெளியிட்டு பெருமை தேடிக் கொள்வார்கள்.

நமதூரின் மிகப் பழமையான நூல்களை தேடிப் புதுப்பிக்க வேண்டும். வான்புகழ் காயல்பட்டினம் 1951ல் எழுதிய எம்.கே. செய்யத் அஹமது (தீவுத் தெரு) அவர்கள் தேடிய இஸ்லாமிய நூட்கள் அவர்கள் மறைவுக்குப் பின் என்ன ஆனது? முஸ்லிம் லீக் முத்துகாக்கா தேடிய பழைய நமதூர் நூல்கள் எங்கே போனது? நன்மார்க்க பதிப்பகம் மூலம் சிறு நூல்களை வெளியிட்ட கே.டி.எம். தெரு ஹஸன் காதிரி அவர்கள் நூல் என்ன ஆயிற்று? பாவலர் அப்பா பாவலர் யூசுப் அவர்கள் தேடிய அரிய நூல்கள், கவிஞர் S.M.B. மஹ்மூது ஹூ ஸைன், M.L. சாகுல் ஹமீது(S.K.) ஆகியோர்கள் தேடிய நூல்கள் அவர்களின் மறைவுக்குப் பின் எங்கே போனது?நாம் இப்படியே எதையும் காணாமல் இருந்தால் அந்த அரிய காப்பியங்கள், பாமாலைகள், அரபுத்தமிழ் நூல்கள்,முனாஜாத்துகள் தேடி வைக்காவிட்டால் பழைய பேப்பர் கடைக்குப் போய் வீணாகிவிடும் என்பதை ஊர் மக்கள் அனைவரும் உணர வேண்டும். அத்துடன் நம்ம ஊர் செல்வந்தர்கள் ஆர்வம் காட்டி ஓர் இடத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும். நமது பழைய நூல்களை இணையதளத்தில் ஏற்றி வைக்கலாம். இதுவும் ஓர் கல்வி பயணம்தான். கூடவே பயனள்ள காரியமாக இருக்கும்.

நமதூரில் இன்று வாழக்கூடிய L.S. இப்றாஹீம் காக்கா ஓர் இலக்கியப் பிரியர். அவர்களிடம் மூட்டை மூட்டையாக நமதூர் பழைய நூல் இருக்கலாம். அவர்கள் மக்கள் யாரும் இலக்கியப் பரியர்களாக இருப்பது போல தெரியவில்லை. அவற்றை ஓர் இலக்கிய அமைப்பு ஏற்படுத்தி பணம் கொடுத்து வாங்கி நூலின் பெயர், நூலாசிரியர்கள் காலம், அதன் நடைகள் குறித்து இணையதளத்தில் பதிவு செய்து வைக்கப்பட வேண்டும். இதுபோல் காயல்பட்டணம் வரலாறு தமிழில், ஆங்கிலத்தில் எழுதிய R.S.. அப்துல் லத்தீப் அவர்களிடம் எந்த நூல்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு இணையதளத்தில் ஏற்றும் முயற்சி செய்யலாம். சாமுசிஹாபுத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் பாமாலை அனைத்தும் மார்க்க அமைப்புக்கு உட்பட்டது. அவைகளை மீண்டும் புதுப்பித்து வெளியிடலாம். தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கம் முயற்சியில் ஈடுபட செல்வந்தர்கள் முன்வரவேண்டும்.

காசீம்புலவர் அவர்களின் திருப்புகழ் பாடலை கூட தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இதுவரை கொண்டுவரும் முயற்சியை ஏன் எடுக்கவில்லை.? சீறாபுராணம் எழுதிய உமறுப்புலவர் மட்டும்தான் முஸ்லிம் புலவர்கள் வரிசையில் வைத்துள்ளார்கள். நியாயம்தானா? தமிழகம்எங்கும் குறிப்பாக காயல்பட்டினத்தில் அனேக புலவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்கள் நூல்களை முதலில் தேடிவைப்போம். அதன்பின் பாடநூலில் ஏற்றும் முயற்சியை மேற்கொள்வோம்.

அப்துல் ஹை ஆலிம் அவர்களின் கல்விப் பயணம்:

காயல்பட்டினத்தில் ஆங்கிலக் கல்வி கற்கக்கூடாது என்று கூக்குரல் போட்ட காலத்தில் உலமாக்களை எதிர்த்து போராடிய ஒருவர் 17-2-1898 ல் காயல்நகரில் பிறந்தார்கள். இலங்கையில் படித்தார்கள். ஆங்கில அறிவும், தமிழ் ஞானமும் பெற்றவர்கள். இலங்கை கண்டி மற்றும் காலிப்பகுதியில் இலங்கைவாழ் காயல் நகர மக்களுக்காக தமிழ் ஆங்கில சிங்கள பள்ளியை சிலகாலம் நடத்தினார்கள். ஊருக்குவந்தார்கள். 15-01-1927ல் காஹிரா பாடசாலையை சித்தன் தெரு ஸிகஸ்டம்ஸ் சாலை சந்திக்கும் இடத்தில் ஆலிம்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அப்துல்ஹை ஆலிம் அவர்கள் துவங்கினார்கள். இப்பள்ளியில் தமிழ், ஆங்கில மொழி தவிர குர்ஆன் காலை மாலை ஓதும் மத்ரஸாவையும் இணைத்தே இருந்தார்கள். பல ஹாபிழ்களையும், உருவாக்கினார்கள்.

இடவசதி குறைவின்காரணமாக 1932ல் மஹ்லறா வடபகுதி தோட்டத்தில் சிலகாலம் காஹிரா பள்ளியை அங்கு நடத்தினார்கள். இலங்கை வாழ்காயல்வாசிகளிடம் நிதிஉதவி பெற்று 1933ல் கருத்தம்பி மரைக்காயர் தெருவில் (இன்று ஐ.ஐ.எம். நூலகம் இயங்கும் பகுதியில்) விசாலமாக காஹிரா பாடசாலையை ஆரம்பித்தார்கள். திறமையாக குர்ஆன் ஓதிக் கொடுத்து பெருமை தேடினார்கள். இந்தப் பள்ளியில் அன்று 85 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் பணி செய்தார்கள். தனது காஹிரா பாடசாலையின் முன்பகுதியில் தந்தையின் பெயரால் நூஹிய்யா நூலகத்தையும் மகள் பெயரில் ஹவ்வா வாசகசாலையையும் கூடவே துவங்கி தமிழ், ஆங்கில நாளேடு வார மாத இதழ்களை காயல்நகர் மக்கள் படித்து மகிழ அறிமுகம் செய்தார்கள். ஊரிலுள்ள அனைவர்களும் உலகைப் புரிந்து கொள்ள நூஹிய்யா நூலகம் மூலம் நல்ல நூல்களை படிக்கத் தூண்டினார்கள். காலப்போக்கில் குடும்ப நெருக்கடியால் பணப்பற்றாக்குறையால் 1944ல் L.K. லெப்பைத் தம்பி அவர்களிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தார்கள்.

அதன்பின் சிலகாலம் அப்பபாபள்ளித் தெரு தனது வீட்டிலும் சிலகாலம் காஹிரா பள்ளி இருந்த பழைய இடத்திலும் குர்ஆன் மட்டும் ஓதிக்கொடுக்கும் இடமாக மாற்றி கொண்டார். அப்துல் ஹை ஆலிம் அவர்கள் 31-07-1984 ல் வபாத் (மரணம்) ஆனார்கள். L.K. லெப்பைத் தம்பி அவர்கள் 1901 ஜனவரி 26ல் பிறந்தார்கள். இலங்கை எஹிலியா கொடையில் ஆரம்ப கல்வி கற்று சென்னை வந்து முத்தியாலு பேட்டை உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். முதல் மெட்ரிக் படித்த காயல் மாணவர் என்ற சிறப்பை டு.மு. லெப்பைத் தம்பி என்ற L.K. மாமா பெற்றார்கள். தனது தொழிலில் சம்பாதித்த பணத்தை L.K. பள்ளிக்கே செலவழித்தார்கள். இவர்கள் வபாத் 16-01-1983 ஞாயிறுமாலை 5 மணி L.K. மாமா ஜனநாயக சபை என்ற ஊர்கட்சியின் தலைவர் ஆவார்கள்.

வடபகுதியில் முஸ்லிம் ஸ்கூல் ஆரம்பம்:

காயல்நகரின் வடபகுதியில் அந்தக் காலத்தில் மக்கள் சேவா சங்கம் என்ற ஊர் கட்சியின் கோட்டையாக இருந்தது. அங்கே உள்ள மாணவர்கள் கிழக்குப் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு படிக்க வர மாட்டார்கள். வடபகுதி மக்களுக்காக முஸ்லிம் ஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டதே அதற்கு காரணம் ஆகும். 1933ல் பெரிய ஜும்ஆப் பள்ளி வளாகத்தின் எதிர்புறம் மறைந்த பெரியவர்களான வெ. முகம்மது முகைதீன் அவர்கள் சி.மு.க. சேகு முஹம்மது அவர்கள் கோமான் தெரு அம்பலம் அஹ்மது ஹசன் அவர்கள் போன்றோரின் முயற்சியால் முஸ்லிம் மகாஜன சார்பில் முஸ்லிம் ஸ்கூல் ஆரம்பமானது. இதுவே காலபோக்கில் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியாக சதுக்கைத் தெருவில் இயங்க ஆரம்பித்தது. வடபகுதியின் ஊர் கட்சியின் பெயர் மக்கள் சேவா சங்கம். இதன் தலைவர் M.K.T. முஹம்மதுஅபூபக்கர் அவர்கள் ஆவார்கள்.

ஆதார நூல்கள்:

1. முத்துச்சுடர் ஜனவரி 1985ல் பாவலர் யூசுப் அவர்கள் எழுதிய காயல் பெரியவர்களுக்கு புகழ் மாலை 9 (கவி வரியிலிருந்து) அப்துல் ஹை ஆலிம் குறித்து தகவல் சேர்த்தேன்.

2. L.K. அப்பா சிறப்பு மலர் (சென்னை இலட்டு மாத இதழ் 15-02-83)

குறிப்பு:
1927 ல் தங்கத்தின் விலை 10 கிராம் ரூபாய் 18.
1932-33 ல் 10 கிராம் தங்கம் விலை 30 ரூபாய்.
1944 ல் 10 கிராம் தங்கத்தின் விலை 62 ரூபாய்.
(ராணி வார இதழில் இருந்து சென்னை பாலம் கையேடு 1994ல்)

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Mohamed Thaha (Saudi Arabia) on 12 October 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30680

சீனா தேசம் சென்றாலும் சீரிய கல்வியை தேடுங்கள் என்ற கண்மணி நாயகத்தின் நபிமொழிக்கொப்ப கல்வியை தேடுவதும் அது மற்றவர்களுக்கு கிடைக்க தூண்டுகோலாக இருப்பதும் அதனால் ஒரு குடும்பம், அதன் தலைமுறைகள் நன்றாக வாழ்ந்தால் அந்த குடும்பத்தின் துஆக்கள் அவற்றின் நன்மைகள் காலமெல்லாம் அதை ஆரம்பித்து வைத்தவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

அதை விட மேலாக, இறை அருளால் பொருளாதாரத்திலும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலும் உறுதியோடு இருக்கிற நாம் நம்முடைய உலமாக்கள் துணையோடு இந்த தீனுக்காக ஏதாவது செய்து விட்டு போக வேண்டும் (நாம் நம்முடைய குடும்பம் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் இருந்து விடாமல்). இந்த தீனுக்காக என்ன செய்தாய் என்று நாளை மறுமையில் நம்மிடம் கேட்கப்பட்டால் அதற்கு நாம் பதில் சொல்லவேண்டும் அல்லவா? அல்லாஹ் தஆலா அந்த நல்ல நசீபை நம் அனைவர்களுக்கும் தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Abbas (Los Angeles) on 23 October 2013
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 30923

Assalamu Alaikkum

மாமா உங்களின் ஆராய்ச்சி தொடரட்டும் இந்த கட்டுரையில் முக்கியமாக Abdul ஹை ஆலிம் அவர்களின் வாழ்க்கை குறித்த விஷயங்கள் அறிந்தது ரொம்ப சந்தோசம் அவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் அவர்கள் நடத்திய அந்த பள்ளியை அந்தகால செல்வந்தர்கள் யாரும் தொடர்ந்து நடத்த ஆதரவு கொடுக்காமல் போனது வருத்தம் தான் அவர்களிடம் குரான் ஓத கற்ற மாணவனில் நானும் ஒருவன் என்பதில் பெருமை இந்த மாதிரி அறிய பொக்கிஷமான தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள் மாமா

குட்டியா பள்ளியில் உள்ள ஓடையில் நாங்கள் சின்ன வயசா இருக்கும் பொது நீங்களும் உங்கள் நண்பர்களும் மாணிக்க கற்கள் தேடுவதை பார்த்திருக்கிறோம் அதோட பின்னணி என்னன்னு எங்களுக்கு சொல்லலாமே

இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மகா புருஷன்...! ALS மாமா.
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 02 November 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31158

நேற்றிரவே நானும், எனது நண்பர் எழுத்தாளர் சாளை பஷீரும், மெகா நூஹு காக்காவும் ALS மாமா (காயல் இப்னு அப்பாஸ் எனும் லெப்பை சாஹிப்) அவர்களின் வீட்டிற்கு போவது என முடிவு செய்து கொண்டோம். சொன்ன நேரத்திற்கு செல்ல இயலவில்லை எனினும் மாமா தெருவில் எங்கள் வருகைக்காக காத்திருந்தார். முகமன் கூறி வீட்டிற்குள் சென்றோம். பழைய வீடு சுவரெங்கும் சித்திரங்கள், சொல் வாக்கியங்கள், அறிவுரைகள் இப்படி ஒரு அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த உணர்வு.

ALS மாமா அவர்களின் நீண்டகால சேமிப்புக்களான அரிய வகை நூல்கள், புத்தகங்கள், உருவமற்ற ஓவியங்கள், புகைப்படத் தொகுப்புக்கள் இப்படி காணக்கிடைத்த நாங்கள் கடந்தகாலத்திற்கே சஞ்சரித்து விட்டோம். அந்தகாலத்திலேயே அருமையான ஒரு புகைப்படக் கலைஞனான ALS மாமாவை பார்த்து பிரம்மித்துப் போனோம்.

இந்த முதிர்வயதிலும் தளராமல் இன்றைய இணையதளங்களில் தொடர்ந்து எழுதிவரும் அவர்களது எழுத்தாற்றல் போற்றுதலுக்குரியதே!

பல வருடங்களுக்கு முன் அவர் வெளியிட்டு வந்த பாலம் எனும் கையெழுத்துப் பத்திரிக்கை பல்வேறு செய்திகளையும் சமுதாய சிந்தனைக்குரிய கார்ட்டூன்களையும் உள்ளடக்கியதாதவே இருந்தது. தனக்கென ஒரு தனித்தன்மையை வகுத்துக்கொண்டு அதை இம்மியளவும் பிசகாமல் வாழும் இது போன்ற பெரியவர்கள் சிலர் மட்டுமே!

அனைத்து துறைகளிலும் அத்துப்பிடியான ALS மாமா அவர்கள் ஒரு பல்கலைக்கழகமாக நம்மோடு வாழ்ந்து வரும் சிறந்த மனிதர். அந்த மகா புருஷன் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதை எண்ணி பெருமைப்படுகின்றேன்.

எல்லாம் வல்ல இறைவன் அவரது ஆயுளை நீடித்து வைத்து சரீர சுகத்தையும் வழங்கியருவானாக...ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved