Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:32:13 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 94
#KOTWART0194
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 18, 2015
பாரம்பரியத்தை பேணிக்காக்கிறதா சஹன் சாப்பாடு?
இந்த பக்கம் 6327 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாரம்பரியம்.... அந்தந்த பகுதியில் உள்ள கலாச்சாரங்களை பிறதிபளிப்பது. அறிவியல் மாற்றங்கள் என்று எத்தனை வந்தாலும் பாரம்பரியம் என்ற பழக்கவழக்கங்கள் மட்டும் என்றென்றும் மாறாதது. இந்த வகையில் நமதூரிலும் ஒருசில பாரம்பரியங்கள் இன்றளவிலும் உள்ளது . உதாரணத்திற்கு சஹன் சாப்பாடு, கல்யாண சீர் (பூச்செப்பு) போன்றவை.

இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் என்னவென்பதை பார்ப்போம்...

சஹன் சாப்பாடு நமதூரிலும், இலங்கை, அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவலாக உள்ளது. பிற நாடுகளில் இருந்துதான் நமதூருக்கும் இந்த கலாச்சாரம் பரவியது என்கிறார்கள். பொதுவாக நமதூரில் கல்யாண விருந்தில்தான் சஹன் சாப்பாடு இருக்கும். வீட்டில் அப்படி இல்லை.

சஹன் சாப்பாட்டினால் என்ன பயன்?

நமதூரில் உள்ள பெரியவர்களும், பழமைவாதிகளும் சொல்கிறார்கள் - சஹன் சாப்பாட்டில் சமத்துவமும், சகோதரத்துவமும் உள்ளதாம்! ஏழை - பணக்காரன் பாகுபாடின்றி ஒரே சஹனில் அமர்கிறார்களாம். உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா...? ஒருவேளை இருந்திருக்கலாம் முன்னொரு காலத்தில்! ஆனால் தற்போது அப்படியில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

எப்படி?

பாரம்பரியம் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் கல்யாணப் பந்தலுக்கு வந்து, அங்கு யாரை முதலில் பார்கிறார்களோ அவரோடு சேர்ந்து சஹனில் அமர வேண்டும். ஆனால் அப்படி நடக்கிறதா என்றால் இல்லை. தனக்குத் தெரிந்த நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ அல்லது தனது அந்தஸ்திற்கு சமமானவர்களுடனோதான் அமர்கின்றனர். அறிமுகம் இல்லாதவருடனோ, தகுதியில் குறைந்தவருடனோ அல்லது ஏழைகளுடனோ அமர மாட்டார்கள்.

ஏதோ முக்கியமான ஃபோன் பேசுவது போல் வெளியில் நின்று நேரத்தைக் கடத்தி, தகுதியானவர் வந்ததும் அவருடன் அமர்வர் .அல்லது திருமண வீட்டாரிடம் தனக்கு தரையில் அமர முடியாது, மூட்டு வலி, இடுப்பு வலி என்று பொய்யான காரணத்தைச் சொல்லி டேபிள் - சேரில் தனி தாளத்தில் சாப்பிட அமர்வர். இதுவா சகோதரத்துவம்?

ஒருமுறை விருந்தொன்றில் எனது தெருவாசி ஒருவருடன் அமர நேரிட்டது. இதற்கு முன்பு அவருடன் பழகியதில்லை. மிகவும் அருவருப்பாக சாப்பிட்டார். இது போன்றவர்களுடன் அமர்வதால் சகோதரத்துவம் வளருமா?

நோய் பரப்பும் காரணி:

முன்பு நமதூரில் மக்கள்தொகை குறைவு. அனைவருக்கும் சத்தான உணவு கிடைத்தது. ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் தற்போதைய நிலையோ தலைகீழாக உள்ளது. பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு குறை. ஒருவேளை தொற்று நோயாகக் கூட இருக்கலாம். நம்மிடம் உள்ள குறை அவருக்கும், அவரிடம் உள்ளது நமக்கும் தெரிய வந்தால் ஒன்றாக அமர மனம் வருமா? அல்லது தெரியாமல் உட்கார்ந்து விட்டு வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் கஷ்டம் யாருக்கு?

தனி நபர் சாப்பாடு ஏன்?

சுத்தம்.... இதுதான் பிரதான காரணியாக இருந்தாலும் தற்போதைய உண்மையான காரணியை ஆராய்வோம். முன்பு ஒரு சஹனில் மூன்று பேர் அமர்வர். இரண்டு சிட்டி கறி. ஆனால் தற்போது இரண்டு நபருக்கு இரண்டு சிட்டி கறி. ஆக, ஆளுக்கு ஒரு சிட்டி கறி. இதற்கு ஏன் இரண்டு பேர் சேர்ந்து அமர வேண்டும்? தனியாகவே அமரலாமே?? செலவு ஒன்றுதானே???

சாப்பிடும் இடம்:

நமதூர் பாரம்பரியப்படி பனை ஓலையில் நெய்த பாயில்தான் அமர்கிறோம். முதல் பந்திக்கு எல்லாமே புதுப் பாய்களாக இருக்கும். அடுத்தடுத்த பந்திகளுக்கும் அதே பாய்தான். பாயை மாற்ற மாட்டார்கள். முதல் காரணம் ஒவ்வொரு பந்திக்கும் புதுப் பாயைப் போட்டால் செலவு அதிகம். அடுத்த காரணம், தற்போதைய சூழ்நிலையில் பனை மரங்கள் அழிந்து வருவதால் பனை ஓலை பொருட்களுக்கு தட்டுப்பாடு. விலையும் அதிகம். மேலும் உபயோகப்படுத்திய பாயில் அமர்வதால் வேட்டியில் அழிக்க முடியாத எண்ணெய்க் கறைகள். இதற்கு டேபிள் சேர் போட்டு தனித்தனியாக பரிமாறுவதே சிறந்தது.

மேலும், நமதூரில் தற்போது பெரும்பாலான விருந்துகளில் வெளியூர் விருந்தாளிகளுக்கென்று தனிப் பந்தல் போட்டு டேபிள் சேர் போட்டிருப்பார்கள். ஆனால் அதில் அமர்வது யாரென்று பார்த்தால், உள்ளூர்காரர்களில் அந்தஸ்தானவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள்தான். இவர்கள் பொதுப் பந்தலில் தரையில் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். திருமண வீட்டார்களும் இது போன்றவர்கள் தனிப் பந்தலுக்கு வரும்போது ஒன்றும் சொல்ல முடியாத தர்மசங்கடமான நிலை. ஆக, சஹன் சாப்பாடு என்பது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து விடும். இதனால் எந்த நன்மையும் இல்லை.

அன்பர்களே! சமத்துவம், சகோதரத்துவம் என்பது ஒரே பிளேட்டில் தெரிந்தவரோடு அமர்ந்து சாப்பிடுவதில் இல்லை. தனித்தனியாக, தன் மதம் சாராதவருடனோ அல்லது தனக்கு நிகரானவர் அல்லாதவரோடோ அருகருகே அமர்ந்து சாப்பிடுவதில்தான் உள்ளது.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தீர்வுகளை சொல்லுங்கள்
posted by: mackie noohuthambi (colombo) on 18 March 2015
IP: 103.*.*.* | Comment Reference Number: 39685

ஆசிரியரின் ஆதங்கம் புரிகிறது. எல்லோருக்கும் சஹன் சாப்பாட்டில் ஒரு வித ஆசை இருந்தாலும் நடை முறையில் உள்ள குறைகளை களைய முடியவில்லை.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொன்ன பிறகுதான் சாப்பிடவே ஆரம்பிப்போம். அந்த ஒரு நடை முறை கூட நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொண்டது.

திருமண மேடைகளில் உலமாக்கள் சில சுலோகங்களை வழக்கமாக சொல்வார்கள். ஆனால் பந்தியில் சாப்பிடும் முறைகளை சொல்ல மாட்டார்கள். நபிகள் நாயகம் சாப்பிட ஆரம்பிப்பது - அதற்காக உட்காரும் முறை - சாப்பிடும்போது சக நண்பர்களுடன் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை எல்லாம் விலாவாரியாக சொல்லி தந்து இருக்கிறார்கள். தப்லீக் ஜமாத்தில் மூன்று நாட்கள் போகிறவர்களுக்கு இந்த நபி வழியில் உணவு உண்ணும் முறை பற்றி போதிக்கப் படுகிறது. உணவு உண்பதற்கு பந்தலில் உட்காரும்போது இந்த ஹதீதுகளை சொல்ல முடியாது. ஒரு நோட்டிஸ் அடித்துக் கொடுத்தால் அதில் கை துடைத்து விட்டு கீழே போட்டு விடுவார்கள். இந்த முறையை மாற்றவும் முடியாது. ஏனெனில் சஹனில் உட்கார்ந்து கூட்டாக சாப்பிடுவதை நபிகள் நாயகம் அவர்கள் வற்புறுத்தி சொல்லி இருக்கிறார்கள்.

நமதூரில் நடக்கும் திருமணங்கள் மற்ற ஊர்களிலிருந்து வேறுபட்டது. ஒரு நாள் மாலை வரவேற்பு. அடுத்த நாள் காலை கல்யாணம்.

கல்யாணத்துக்கு அழைக்கப் பட்டவர்களுக்கெல்லாம் சாப்பாடு இல்லை. கல்யாணத்துக்கு சொல்ல அடாப்பு போட்டால் 3000 பேர் வரும். ஆனால் கல்யாணத்துக்கு வருபவர்கள் 800 பேர்தான். அடாப்பு போட்டு சொல்லிவிடாமல் பள்ளிவாசலில் "அடாப்பு இல்லை இதுவே அடாப்பு" என்று எழுதி போட்டால் சம்பந்தப் பட்டவருக்கு கோபம் வருகிறது. நேரில் கண்டு சொன்னால் வரமாட்டார்கள். அடாப்பு சொல்லவில்லை என்று குறை சொல்வார்கள். அடாப்பு சொன்னால் நேரில் கண்டானே ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்பார்கள். சாப்பாட்டுக்கு சொல்லவில்லையே என்று கருவுவார்கள்.

இவ்வளவு பிரச்சினைகளையும் ஆசிரியர் தனது இரண்டாவது பாகத்தில் சொல்லுங்கள். ஆனால் பிரச்சினைகளை பேசினால் போதாது குறைகளை சுட்டிக் காட்டினால் போதாது. அதற்கான மாற்று வழியையும் சொல்ல வேண்டும்.குறைந்த பட்சம் நமது இல்ல திருமணங்களில் அதை அமுல் படுத்த முடிகிறதா..நமது மனைவி மக்களை திருப்தி படுத்த வேண்டி உள்ளது. மனைவி சொல் கேட்டால் வீடு மதுரை என்கிறார்கள். மனைவியை எதிர்த்து நின்றால் வீடு சிதம்பரம் என்கிறார்கள்.மவத்ததன் வரஹ்மா என்று மனைவியை பார்த்து அல்லாஹ் சொல்கிறான். அப்படிப் பட்டவளின் மனம் கோணும்படி நடக்க நமக்கு தைரியம் இல்லை.என்ன செய்வது,

இதை ஜீரணித்துக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான். சீர் திருத்தும் செய்ய முற்படும் ஒரு சிலரையும் ஏதாவது சொல்லி ஓரம் கட்டி விடுகிறோம். அவர் நொந்து நூலாகி எப்படியும் ஒழியுங்கள் என்று சொல்லி விட்டு போய் விடுகிறார்.

பழைய காகம் புதிய காகம் படம் போட்டிருக்கிறது. அந்தஐந்து அறிவுள்ள காக்கைகளுக்கு இப்போது தண்ணீர் குடிக்கும் முறை தெரிந்து விட்டது. புரிந்து விட்டது தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொண்டது...ஆனால் ஆறறிவு உள்ள மனிதன்....

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய அறிவிருக்கு

எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. மாற்றம்என வந்துவிட்டால் அதற்குப் பெயர் பாரம்பரியமில்லை!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) on 19 March 2015
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 39687

ஒரு குறிப்பிட்ட இனத்தவர், ஊரார், அல்லது நாட்டுமக்கள் பன்னெடுங்காலமாக ஒரு வழக்கத்தை தொடர்ந்து தொய்வின்றி கடைபிடித்து வருவதைத்தான் பாரம்பரியம் என்பர். இதற்கொத்த கருத்தையே கட்டுரையாளர் தமது கட்டுரையின் துவக்கத்தில் கூறியுள்ளார். நன்று.

இவ்வாறு வாழையடி வாழையாக வழமை படுத்தி வரும் பழக்கத்தில் புதிய உக்திகளைச் சேர்த்துவிட்டால் அதற்குப் பெயர் பாரம்பரியமல்ல. கலவைக் கலாச்சாரம் அல்லது மருவிய வழக்கம் எனலாம். ஒரு எழுத்தாளனை பிற எழுத்தாளன் விமர்சிப்பது அழகல்ல! இருப்பினும் இது காயலின் பாரம்பரியத்தை உரசிச் செல்வதால் கட்டுரையாளனாக இல்லாமல் ஒரு காயலன் எனும் உரிமையில் இதை நான் பதிக்கின்றேன்.

காயலில் திருமண வீட்டில் நடக்கும் விருந்து சமபந்தி எனக் கூற இயலாது. ஆனால் அது கூட்டு விருந்தோம்பல் என்பதே சரி! டேபுள் சேர் என்பது சிக்கன் குனியா வருகைக்குப் பின்னர் ஏற்பட்டது. படிப்படியாக சஹன் சாப்பாட்டுக் கலாச்சாரம் மாறி விடும் எனும் கூற்று ஏற்பதற்கில்லை!

இதில் மிகுந்த மன வருத்தம் என்னவெனில் நபிகளார் நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒரு சுன்னத்தான செயலை, ஊரில் பெரும்பாலானோர்க்கு வியாதி எனவே தொற்று நோய் பரவும், சுத்தம் இல்லை, ஆளுக்கு ஒரு சிட்டிக்கறி செலவு கூடுதல், பாயை மாற்றவில்லை, வேஷ்ட்டியில் தாலஞ்சோற்று அடையாளம், வெளியூர்க்கார்களுக்கான பந்தியில் உள்ளூர் வாசிகள் படையெடுப்பு, என கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் அபத்தங்களாகவே படுகின்றது.

“அவரிடம் (தொற்றுநோய்) உள்ளது நமக்கும் தெரிய வந்தால் ஒன்றாக அமர மனம் வருமா? அல்லது தெரியாமல் உட்கார்ந்து விட்டு வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் கஷ்டம் யாருக்கு?”(C&P) எனும் வாசகத்தை ஏனோ மனம் ஒப்ப மறுக்கின்றது.

இதுதான் கட்டுரையாளரின் முதல் கட்டுரை என நினைக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே கலாச்சாரத்தில் கை வைப்பது ஓர் ஆரோக்கியமான எழுத்திற்கு உகந்ததல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. தொடர்ந்து நிறைய பயனுள்ள ஆக்கங்களைத் தர வாழ்த்துக்கள்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Vilack sma (jeddah) on 19 March 2015
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39690

ஆரோக்கியமான இரண்டு கருத்துக்கள் . நன்றி . மக்கீ காக்கா அவர்கள் குறிப்பிட்ட விசயங்களை கவனத்தில் கொண்டு அடுத்த கட்டுரை எழுத முயற்சிக்கிறேன் . இன்ஷா அல்லாஹ் ..

பாரம்பரியம் என்றால் என்றும் , எதிலும் மாற்றம் செய்யக்கூடாதது . ஆனால் தற்போது அப்படி இல்லை .

நடைமுறையில் உள்ள குறைகளை களைய முடியவில்லை என்று மக்கீ காக்கா குறிப்பிட்டது , அதை குறை என்று சொல்லாமல் காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்று எண்ணுங்கள் . ( நீங்கள் குறிப்பிட்ட பிஸ்மில்லாஹ் கருத்தை தவிர்த்து ) சமத்துவம் , சகோதரத்துவம் இவை தவிர்த்து மற்ற விசயங்களை ஆராய்ந்தால் சஹன் விருந்தில் மாற்றமே காணாதது கலரி சாப்பாட்டின் சுவை ஒன்றுதான் . மற்றபடி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .

மண் சிட்டி சில்வர் கிண்ணமாகவும் , களைய தண்ணீர் பாக்கெட் தண்ணீராகவும் மாறியது . மண் பாண்டங்கள் செய்யும் தொழிலார்கள் குறைந்து வருவதே காரணம் . களைய தண்ணீரில் சுத்தம் பேனப்படாததும் காரணம் . முன்பு பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க மண்சிட்டியில் கஞ்சி. தற்போது அதுவும் மெலமின் கோப்பையாக மாறி இருக்கிறது .

கறி கத்திரிக்காய் புளியாணம் என்று ஒவ்வொன்றாய் வைத்து பரிமாறுவதில் ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்து ஒரே வேலையாக இருக்கட்டுமே என்று கருதி கலரி சோறு பிரியாணியாக மாறியது .

பனை ஓலை தட்டுப்பாட்டினால் பாய் , டேபிள் சேறாக மாறியது.

தனி பிளேட்டில் சாப்பிட எண்ணுவது பாடாய்ப்படுத்தும் அந்தஸ்து.

ஆக , பாரம்பரியமே சிறந்தது என்று எண்ணுபவர்கள் , மேலே குறிப்பிட்ட மாற்றங்கள் எதனால் வந்தது என்று எண்ணினால் ஒருவேளை அதை ஆமோதிக்கலாம் .

தரையில் அமர்ந்து பாரம்பரியமாக சாப்பிட்டாலும் , டேபிள் சேரில் அமர்ந்து தனி ஆளாக சாப்பிட்டாலும் கூட்டாக பிஸ்மில்லாஹ் சொன்னபிறகு உண்ண ஆரம்பிப்பது ஒன்றுதானே. மக்கீ காக்கா சொன்னது போல் இந்த பாரம்பரியத்தை மறந்தது வருத்தமான விசயம்.

சஹன் சாப்பாட்டு முறைகள் நிச்சயமாக மாறும் . காரணம் , அது காலத்திற்கு தகுந்தாற்போல் உள்ள மாற்றமே .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: Vilack sma (jeddah) on 19 March 2015
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39691

கட்டுரையாக பதிவதுதான் முதல்முறையே தவிர , இதே எண்ணங்களை பிற இடங்களில் கருத்துக்களாக பதிந்துள்ளேன் . பார்க்கவும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. நோக்கம் நன்றாகவே உள்ளது!
posted by: S,K.Salih (Kayalpatnam) on 19 March 2015
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39692

சில நாட்களுக்கு முன் ஒருநாள் கட்டுரையாளர் கடற்கரையில் எங்களுடன் அமர்ந்து கதைத்துக்கொண்டிருக்கையில் இந்த விஷயத்தைச் சொன்னார். உடன் அமர்ந்திருந்த நாங்கள் யாவரும் எமது ஒத்த - மாற்றுக் கருத்துக்களையும் அவரிடம் சொன்னோம். நிறைவில், “இதை ஒரு கட்டுரையாக எழுதுங்கள்... உங்கள் ஆதங்கம் நியாயமானது... அது பொது தளத்தில் விவாதிக்கப்பட வேண்டும்” என்று அவரிடம் நான் கேட்டுக்கொண்டதையடுத்து இக்கட்டுரை அவரால் தரப்பட்டுள்ளது.

ஸஹன் சாப்பாட்டு முறையையே அவர் குறை சொல்வதாகக் கருத முடியவில்லை. நமதூரில் ஸஹன் சாப்பாடு பரிமாறப்படும் முறையைத்தான் குறை சொல்வதாகக் கருதுகிறேன். (‘தொற்று நோய்’ போன்ற விளக்கங்களைத் தவிர்த்திருக்கலாம்.)

சிறு பிள்ளைகளை வீட்டில் சாப்பிட வைக்கும்போதே, அது ஏதாவது வேண்டாத செயலைச் செய்துவிட்டால், “வாப்பா... இப்டியெல்லாம் செஞ்சா உன்னை யாரும் ஸஹனில் சேர்க்க மாட்டாங்க...” என்று சொல்லும் பழக்கம் நம் முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்தது. ஆனால் நாம் நல்ல முன்னோராக இருந்து நம் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதேயில்லை. ஏனெனில், நாம் அவசர உலகத்திலல்லவா வாழ்கிறோம்...?

அடுத்து, நமதூரில் அனைவருமே ஆள் பார்த்து ஸஹனில் அமர்வதாகக் கூறுகிறார். இதுகுறித்து சற்று விரிவாகக் கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

வெளியூர்களிலிருந்து காயல்பட்டினம் வந்து இங்கு நடைபெறும் திருமண விருந்துகளில் பங்கேற்போர் முதலில் வியப்புற்று, “அது எப்படிங்க ரெண்டு பேரு ஒரே தட்டுல சாப்பிடுறீங்க...?” என்று கேட்காமல் இருப்பதில்லை. அவர்களைப் பொருத்த வரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே தட்டில் சாப்பிடுவதே வியப்பிற்குரிய அம்சம்தான்.

அடுத்தது, கட்டுரையாளர் கூறியிருப்பது போல, ஆள் பார்த்து ஒரே தட்டில் உட்காரும் பழக்கம் எல்லோரிடமும் இருக்கிறது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அதற்கு நானே நடமாடும் சாட்சி.

குறித்த நேரத்தில் உணவுக்குச் செல்ல வேண்டும். அந்த நல்ல பழக்கம் எனக்கு இன்னும் சரியாக வரவில்லை. சற்று தாமதமாகப் போகும் நான், அங்கு யாரோடு அமரச் சொன்னாலும் அமர்வேன். இது நான் மட்டுமல்ல! என்னைப் போல தாமதமாகச் செல்லும் பெரும்பாலோர் அவ்வாறே செய்வதை நான் தொடர்ந்து அவதானித்திருக்கிறேன்.

அவ்வாறு ஒருமுறை, இங்கிதம் தெரியாத ஒருவருடன் ஒரே தட்டில் என்னை அமர வைத்துவிட்டனர். நானும் பெருந்தன்மையுடன் அமர்ந்தேன். எங்கே நான் நுரையீரலை இஸ்த்தி விடுவேனோ என்று கருதிய அவர், சுமார் ஐம்பது கிராம் கொண்ட நுரையீரல் துண்டை முழூசா லபக்கிட்டார். இரண்டு நிமிடம் கூட சென்றிருக்காது. அப்படியே தட்டில் திரும்ப அதை கக்கிவிட்டார். (இப்போது சொல்லுங்கள்! எல்லோருடனும் உட்கார இயலுமா? சற்று நாகரிகம் பார்க்க வேண்டிய நிலை இருக்கத்தான் செய்கிறது.)

ஸஹனுக்கு தனக்கொரு துணையுடன் வருவோரெல்லாம் அப்படி வரக்கூடாது, அங்கங்கு யாரைக் காண்கின்றனரோ அவரோடுதான் அமர வேண்டும் என்று சட்டமா இயற்ற முடியும்?

ஒரு விருந்தில் தவிர்க்கப்பட வேண்டியவை:

(1) ப்ளாஸ்டிக் கோப்பைகள்

(2) பயன்படுத்தப்பட்ட பாய்களையே மீண்டும் பக்கம் மாற்றிப் பயன்படுத்தல். (அதற்குப் பகரமாக, டேபிள் முறையில் ஸஹன் வைக்கலாம். ஆனால், நாற்காலி வைப்பது உடல் நலனுக்கு நல்லதல்ல. ஒரு பெஞ்ச், டேபிள் வைத்து, அனைவரும் சம்மணமிட்டு அமரச் செய்யலாம். எதிரெதிர் திசைகளில் அமரச் செய்து, ஸஹன் தட்டைப் பரிமாறலாம்.

(3) அனைவருக்கும் ஸஹன் பரிமாறப்பட்ட பின், உரத்த குரலில் ‘பிஸ்மி’ சொல்லும் பழக்கம் மீண்டும் வர வேண்டும். (பல ஆண்டுகள் கழித்து, அண்மையில் என் மாமா கத்தீப் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மக்களின் திருமண விருந்து மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில் நடைபெற்றபோது, அந்த முறை பேணப்பட்டது குறிப்பிடத்தக்கது.) இது விருந்து ஏற்பாட்டாளர்கள் கைகளில்தான் உள்ளது.

(4) பாக்கெட் தண்ணீர் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். Hygene என்ற பெயரில் நாம் கடுமையாக மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம் என்பதை நம்மில் பெரும்பாலோர் உணரும் வரை இதுபற்றி விரிவாகப் பேசுவதில் பயனில்லை.

(5) கறிக்கு கிண்ணம், கத்திரிக்காய்க்கு கிண்ணம், சோற்றுக்கு தட்டெல்லாம் வைக்கும் நாம், கை துடைக்க ஒரு நியூஸ் பேப்பரையாவது கிழித்துக் கொடுக்க வேண்டும்.

மொத்தத்தில், ஒரே தட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற ஒன்றைத் தவிர எந்த நாகரிகமும் நமதூர் விருந்தில் இல்லை என்றே நான் கூறுவேன். கட்டுரை ஆசிரியருடன் 95 சதவிகிதம் ஒத்துப் போகிறேன்.

மக்கீ நூஹுத்தம்பி மாமா கூறியுள்ளது போல, பிரச்சினைகளை மட்டும் முன்வைக்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும் கட்டுரை சொல்லுமானால், அது முழுமையானதாக இருக்கும். (வருங்காலங்களில் அவ்வாறு எதிர்பார்க்கலாம்.)

வாழ்த்துக்கள் Vilack SMA காக்கா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) on 19 March 2015
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39700

அஸ்ஸலாமு அலைக்கும்

மஷ அல்லாஹ்...தம்பி உன்னுடைய இந்த கட்டுரை நேர்தியானதே ....பாராட்டுக்கள் தொடரட்டும் உன்னுடைய பயன் உள்ள நல்ல கட்டுரைகள் ....

உன்னுடைய ஆதங்கள் முற்றிலும் நியமனதே ..முலைக்கு உன்னுடைய இந்த ஒரு சில குறைகளை களைய வேணும் ....ஆனால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கூடிய சீக்கிரமே கால போக்கில் களைய படும் ....

தம்பி ஒரு காலத்தில் நமது ஊரில் சம்பாதிக்க துப்பு இல்லாதவன் எல்லாம் கை கூலிஎன்கிற பணத்தை '' கை நீட்டி மனதாரவே வாங்க வில்லையா .... காலபோக்கில் அந்த கொடுமையான ''கை கூலி '' என்கிற படுபாவம் ,, என்கிற பாவ பட்ட மோசமான செயல் ஒழிக்க பட வில்லையா .....

இப்போதைய காலத்தில் சொந்தமாக ஒரு பைசாவும் சம்மதிக்காதவனை எல்லாம் நம் ஊரில் நல்ல குடும்பத்தில் மாப்பிள்ளையாக சுத்தமாகவே எடுக்கவே மாட்டார்கள் .....என்பது தான் குறிப்பட தக்கது ....

பணம் பெறாமல் மனம் முடித்த நல்லவர்களும் நம் ஊரில் உண்டு என்பது குறிப்பிட தக்கது ......

இன்ஷா அல்லாஹ் ...கை கூலி ,போன்று ,, இந்த மாற்றம்அருமை தம்பி உன் மூலமாகவே நமது ஊரில் ஏற்படும் ......

முன்பு நம் சகன் சாப்பாட்டில் கலையத்தில் ...தண்ணீர் / கறி / கத்திரிக்கா / புளியாணம் ...எல்லாம் வைப்பார்கள் அந்த ருசியும் ...மனமும் ,, தனி தான் ......அதுவும் இப்போ குறைந்து விட்டது .....

ஒரு பகுதியில் சகன் வைத்ததும் ...பெரியவர்கள் '' பிஸ்மி '''சொல்வார்கள் ....அதன் பின்புதான் மக்கள் முறையாக சாப்பிட துவங்குவார்கள் ...இப்போ அந்த சொல்லையே காணோம் ....

இந்த கட்டுரை எழுத்தாளரின் நல்ல எண்ணத்தை நாம் புரிந்து கொண்டு ...இன்ஷா அல்லாஹ் மேலைக்கு கொஞ்சம் ,,கொஞ்சமாக ,, நிறையை ,, ..கொண்டு வந்து நிவர்த்தி செய்வோமாக .... நம் ஊர் அனைத்து மக்களின் எண்ணத்திலும் ,, ஒற்றுமையிலும் தான் இதன் '' பிரதி பழிப்பும் ,, நல்லதோர் பலனும் உண்டு ....

தம்பி உண்மையான உன்னுடைய இந்த எழுத்து வடிவம் ...எம் யாவர்களின் மனதை தொட்டு விட்டது .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:...
posted by: Vilack sma (jeddah) on 19 March 2015
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39703

அஸ்ஸலாமு அழைக்கும் . ஆரோக்கியமான கருத்துக்களை மேலும் வரவேற்கிறேன் .பாரம்பரியத்தை நான் குறைகூறவில்லை . காலங்கள் மாறும்போது அதற்க்கேற்றார்போல் நாமும் மாறினால் தவறில்லையே என்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

மக்கீ காக்காவின் எண்ணப்படி , எதையாவது தவறு என்று சொன்னால் அதற்கான சரியான மாற்றுவழி என்னவென்பதையும் யோசிக்க வேண்டும் . நியாயமானதே . இதையும் பரிசீலிப்போம்.

தம்பி SK சொன்னதுபோல் , வெளியூர்காரர்கள் நம்முடைய சஹன் முறையை பார்த்து , " ஆஹா ... பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே " என்று சொல்லி ஆச்சரியத்துடன் வியப்பது உண்மைதான் . நானும் பலமுறை இதை கேட்டிருக்கிறேன் . அவர்களுக்கு ஒரு கேள்வி .இவ்வாறு வியந்து ஆச்சரியப்பட்டு பாராட்டிய அவர்கள் அதே இடத்தில் தங்களது உறவினர்களுடனோ , தெரிந்தவர்களுடனோ ஒரே சஹனில் அமர்ந்து சாப்பிட தயாராக இருப்பார்களா என்றால் நிச்சயம் மாட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை . ஆக , சமத்துவம் சகோதரத்துவம் பாராட்டுக்கள் போன்றவைகள் வெறும் உதட்டளவில்தான் .

தம்பி SK சொன்னதுபோல் , பொதுவாக பந்திக்கு லேட்டாக சென்றால் அங்கே யார் இருப்பார்கள் ? வசதி உள்ளவனும் , அந்தஸ்தில் உயர்ந்தவர் என்று நினைத்துகொள்பவரும் அங்கே இருக்க மாட்டார்கள் . பிறகு ,யார் இருப்பார்கள் என்பதை ஊகித்துகொள்ளுங்கள். ஆக , வேறு வழியில்லாமல் இவர்களுடன்தான் உட்கார்ந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் . நிற்பந்தமும்கூட . ஒருவேளை கொஞ்சம் முற்கூட்டியே சென்றால் இதுபோன்றவர்களுடன் அமர்வாரா என்பது சந்தேகமே . பொதுவாகத்தான் சொல்கிறேன் . கோபிக்க வேண்டாம் .

பாரம்பரியத்தை துளி பிசகுகூட இல்லாமல்தான் நாம் கடைப்பிடித்து வருகிறோமா ? இல்லையே ! எப்படி மண் சிட்டி சில்வர் கிண்ணமாகவும் , கலையம் பாக்கெட் தண்ணீராகவும் மாறியதோ அதேபோல் அமர்விலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் . டேபிள் சேர் போட்டு தனித்தனி பிளேட்டில் பரிமாறும்போது அனைவரும் பாகுபாடின்றி ஒரே இடத்தில் அமரும் சூழ்நிலைதான் . அனைவருக்கும் ஒரேமாதிரிதான் பரிமாறுவோம் . இதுவும் ஒருவகையில் சமத்துவம் , சகோதரத்துவம்தான் .

சாப்பாட்டு பந்தியில்தான் சகோதரத்துவம் காண வேண்டும் என்பதில்லை . நம் அருகே வந்து போகும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் சலாம் சொல்ல பழகுவோம் . இதுவும் சகோதரத்தை வளர்க்கும் .

கலாச்சாரம் கெடாதவாறு மாற்றங்கள் செய்ய வேண்டும் . கல்யாண சீரில் ( பூச்செப்பு ) அன்று வீட்டுக்கு தேவையான அத்தனை சாமான்களும் கொடுத்தோம் . ஆனால் இன்றோ நாம் கொடுக்கும் சாமான்கள் அத்தனையும் அவர்கள் வீட்டிலும் உள்ளதே என்று சீர்கொடுப்பதை நிறுத்தாமல் அதற்கு மாற்றாக பணமாகவோ , நகையாகவோ , சொத்தாகவோ கொடுக்கும் பழக்கம் சமீபத்தில் பரவி வருகிறது . ஆக , சீர் கொடுக்கும் கலாச்சாரம் காலத்திற்கு ஏற்றாற்போல் ஒருசில மாற்றங்களுடன் தொடர்கிறது அவ்வளவுதான் .

ஆக , அன்பர்களே , காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றங்கள் வேண்டும் . அதற்கு ஏற்றாற்போல் நம்மை தயார்படுத்த வேண்டும் .

பாக்கெட் தண்ணீர் , பிளாஸ்டிக் கப்புகள் , இதனால் திருமண மண்டபத்திற்கு அருகில் சேரும் குப்பைகள் பற்றி தனியாக விவாதிப்போம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. இது வழக்காடு மன்றமல்ல!
posted by: S,K.Salih (Kayalpatnam) on 19 March 2015
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39704

ஆரோக்கியமான ஒரு தலைப்பில் கட்டுரையாளர் விவாதத்தைத் துவக்கியிருப்பதால் எனது கருத்தையும் பதிவு செய்தேன். ஆனால், அவர் வரிக்கு வரி பதில் கொடுப்பதிலேயே குறியாய் இருக்கிறார் போலும்.

என்னைப் பற்றி நான்தான் கூற வேண்டும். எல்லா விருந்துக்கும் நான் தாமதமாகப் போனதாகச் சொல்லவில்லை. அவ்வாறு தாமதமாகச் சென்ற காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடக்கும். நான் போனது போல சுமார் 20 முதல் 25 பேர் வரை அவ்வாறு வந்திருப்பார்கள். அவர்களுள் யாரையேனும் நான் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது தனித்தட்டில் (ஒத்தால் ஸஹன்) சாப்பிட்டிருக்கலாம். இருந்தும் நான் அவ்வாறு செய்யவில்லை என்பதையே சொன்னேன்.

குறித்த காலத்தில் நான் விருந்துக்குச் செல்லும்போது கூட துணைக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு செல்லும் வழமை எனக்கு இருந்ததில்லை. நண்பர்கள் இணைந்து சென்றால், இரண்டிரண்டு பேராக அமர்வோம். தனியாகச் சென்றால், யார் இணைகிறாரோ அவருடன் அமர்ந்துகொள்வேன்.

இதுவும் எனது அனுபவம் மட்டுமல்ல. பலரது அனுபவங்களே!

கட்டுரையாளருக்கு ஸஹன் சாப்பாடு முறையே பிடிக்கவில்லை என்பதை (எனது இந்தக் கருத்துக்கு முந்திய) அவரது கருத்தின் மூலம் அறிய முடிகிறது. அது அவரது தனிப்பட்ட விருப்பம். அதை ஊருக்கான பொதுவிதியாக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்து, ஸுன்னத்தான ஸஹன் முறையைப் பேணுவதே சரியாக இருக்கும்.

பழத்தின் ஒரு பகுதி அழுகிவிட்டால், அதை மட்டும் தவிர்த்துவிட்டு சாப்பிட நாம் நினைப்போம். கட்டுரையாளரோ பழத்தையே வீசச் சொல்கிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:...
posted by: UMMUHANI KAREEM (kayalpatnam) on 19 March 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39708

நீங்கள் சஹன் சாப்பாட்டை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆண்கள் வேண்டுமானால் கடைசி நேரத்தில் போகும் போது யார் இருக்கிறார்களோ அவர்களுடன் இருந்து கொள்வீர்கள். ஆனால் பெண்களின் நிலைமை கண்டிப்பாக யாரையாவது துணைக்கு கூட்டிக்கொண்டே போக வேண்டும் துணை இல்லாவிட்டால் போக முடியாது.

அடுத்து சீர் கொடுப்பது மாறி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் கட்டுரையாளர் அவர்கள். இப்போது தான் மோசமான நிலைமையில் இருக்கிறது பெண் பேசி சீர் கொடுப்பதற்காக 50 தட்டு 41 தட்டு என்ற நிலைமையில் போய்கொண்டிருக்கிறது நடுத்தர வாதிகள் என்ன செய்வார்கள்? நிக்காஹ் நடந்தால் தானே அது திருமணம் ஆகும் இடையில் ஏதாவது ஒரு காரணத்தால் தடங்கலாகி விட்டால் என்ன செய்ய முடியும்?

அடுத்து முக்கியமான ஒரு விஷயம் எப்படியம் திருமணம் என்றாலே அந்த குடும்பத்துக்குள்ளே கண்டிப்பாக 3 அல்லது 4 விருந்தாவது நடக்கும் அதில் வெளியில் எல்லோரையும் கூப்பிடுவார்களே அந்த விருந்தை தவிர மற்ற அந்த குடும்பத்துக்குள் நடக்கும் விருந்துகளில் சைவ சாப்பாடு . காய்கறி பிரியாணி இரவு நேரமாக இருந்தால் கறி அல்லாத முறையில் நாஷ்டா என்று இந்த மாற்றத்தை கண்டிப்பாக நமதூர்களில் யாராவது ஒருவர் துணிந்து முதன்முறையாக அமல்படுத்த வேண்டும் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது சலிப்படையாமல் சாப்பிடுவதற்கும் ஆர்வம் இருக்கும்

நமதூரில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் தான் இந்த மாற்றம் தான் கண்டிப்பாக தேவை மே டிசம்பர் மாதங்களில் 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கல்யாண சாப்பாடு என்றால் என்ன நிலைமை?

மாற்றம் இதில் தேவை

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. பாரம்பரியமென்பது வெறும்பந்தியில்மட்டுமல்ல
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 21 March 2015
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39719

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக .

பாரம்பரியமென்பது வெறும்பந்தியில்மட்டுமல்ல பழக்கவழக்கங்களிலும்தானிருக்கிறது. ஆசிரியர் வி எஸ் எம் அலீ அவர்களின் கருத்துப்படி நோயென்பது உலகிற்குபுதிதாக அறிமுகமானதில்லை கொள்ளைநோயும்(பிளேக்),காலராவும் (வாந்திபேதி)ஒருகாலத்தில் நம்மையாட்டிப்பைடைக்கத்தான்செய்தது அதனால் இந்தப்பாரம்பரிய பழக்கவழக்கங்களை நாம் கைவிட்டுவிட்டோமா?

இன்றிருக்கும்நோய்கள் அன்றும்தானிருந்தது ஆனால்மருத்துவ உலகம் அதைக்கண்டறியவில்லை இப்போதிருக்குமளவிற்கு வளரவில்லை அவ்வளவுதான் நாளையமருத்துவவளர்ச்சி இன்னும் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்கும் இப்பொழுதுபுதிதாக உலகிற்கு அறிமுகமாகியிருக்கும் ஸ்டெம்செல் மருத்துவமுறை புற்றுநோயையே எளிதில் குணப்படுத்திவிடுமென்றுகருதப்படுகிறது இந்தசிகிச்சைமுறை நோயால்மிகவும் கடுமையாகப்பாதிக்கப்பட்டிருந்த இரண்டுஇஸ்ரேலியர்களுக்கு கொடுக்கப்பட்டு வெற்றியும் கண்டுவிட்டார்கள்

(குறிப்பு: ஸ்டெம்செல் சிகிச்சையென்பது தாயுடன் பிரசவவேளையில் தொப்பூழ் கொடியிலிருந்து சேகரிக்கப்படும் திசுக்களைபதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்படுகிறது இதைசேகரித்துவைக்க மருத்துவவங்கிகள் துவங்கிவிட்டன இன்ஷாஅல்லாஹ் இந்தசிகிச்சைமுறை உலகெங்கிலும் விரைவில்வரத்தான்போகிறது.

(நோய்க்கான மருந்தைப்படைத்துவிட்டுத்தான் இறைவன் நோயைஇறக்குகிறான் இறைவன் மிகப்பெரியன்)

இன்னும் விருந்துக்குவருபவர்கள் தனக்குக்கால்வலி உட்காரமுடியவில்லையென்று பொய்க்காரணம்சொல்வதாக பதிவுசெய்திருக்கிறீர்கள் ஏன்நமதூரை சிக்கன்குன்யாநோய்தாக்கி அதன்பக்கவிளைவாக பாதிக்கப்பட்டோர் இன்னும் எத்தனையோபேர் அமரமுடியாமல் நின்று ஒளுச்செய்கிறார்கள் நாற்காலியில்அமர்ந்து தொழுகிறார்கள், சாப்பிடுகிறார்கள்

அதனால் எப்பொழுதுமே உட்கார்ந்து ஒளுச்செய்வதற்கு அமைக்கப்பட்டிருந்த ஹவ்ளுகள் எத்தனையோபள்ளிவாயில்களில் நின்று ஒளுச்செய்யும்வகையில் அமைக்கப்பட்டுவிட்டன

அப்படியிருக்க நீங்கள்சொல்லும் இந்தமாற்றுக்காரணங்களை எப்படியேற்கமுடியும்?

வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளும், வலிமா விருந்தும் சிந்திப்பதற்கும்,எண்ணப்பரிமாற்றங்கள் செய்துகொள்ளவும், ஒருவருக்கொருவர் முகமன்சொல்லிவாழ்த்திக்கொள்ளவும் வாழ்த்துவதற்கும்தான்!.

உங்கள்கருத்துசரியென்றால் நாம்ஒன்றாக தோளோடுதோள்நின்று தொழும்போது தொற்றுநோய்கள் தொற்றிக்கொள்ளாதென்பதில் என்னவிதிமுறைகளிருக்கிறது?

மனிதம்எப்படிவாழும்?

நமதுகொள்கைகளுக்கும் மாற்றுவழிக்கொள்கைக்காரர்களுக்குமுள்ள வித்தியாசம்தானென்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. பாரம்பரியமென்பது வெறும்பந்தியில்மட்டுமல்ல
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 21 March 2015
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39720

அஸ்ஸலாமு அலைக்கும்

பாரம்பரியமென்பது வெறும்பந்தியில்மட்டுமல்ல (தொடர்ச்சி)

அருவருப்பாகசாப்பிட்டார் என்றுகுறிப்பிட்டிருக்கிறீர்கள் அப்படியானால் அவர்களுக்கு எடுத்தொச்சொல்லி புரியச்செய்யவேண்டும், ஆசிரியரவர்கள் அரபுமக்களோடு ஒரேசகனில் அமர்ந்துசாப்பிட்ட அனுபவமில்லையென்று நினைக்கிறேன் 10நபர்களுக்குமேலாக ஒன்றாகஅமர்ந்து ஒரேசகனில்சாப்பிடுவார்கள் பெரும்பாலானவர்கள் உள்ளங்கையில் சோறூபடாமல் சாப்பிடுவதைப்பார்க்கமுடியாது அதைப்பார்த்தால் என்ன்சொல்வீர்களோ,ஆனால் அங்குயாரும் முகம்சுளிப்பதில்லை இன்னும்அவர்களைப்போல் விருந்தோம்பல்தர யாருமில்லை அதனால் பரக்கத் அபிவிருத்தி அம்மண்ணில் மலிந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!.

"உடையில்கறைபடுகிறதென்பதை குறையாகஎடுத்துக்கொண்டால் நம்மிடமுள்ள மற்றகறைகளை எப்படிக்களைவது"

ஒருசமயம் அந்தக்களறிக்கறியின் மஞ்சள் எண்ணெய்வண்ணமே அடையாளமாகக்காணப்பட்டது அந்தக்கறையையே அக்கறையோடு கல்யாணவீட்டுல சாப்பிட்டுவிட்டுவருகிறாயா என்றுகேட்கவும்தூண்டியது அதுமங்களகரமாகக்கருதப்பட்டது ஆனால்அப்பொழுதெல்லாம் நமதுவீடுகளில் சலவையெந்திரங்களென்று ஒன்றுஇருந்ததில்லை கையால்துவைத்தபோது கையாலானபோது இப்பொழுது இயந்திரங்களிருந்தும் ஏன்கையாலாகமல்போகிறது?

இப்படி ஒருகேள்விவரும்தானே?

ஆனால்தாங்கள் சொன்னமற்றுமொருகருத்தை ஆதரிக்கிறேன் அதாவது தனக்குஅறிமுகமான நபர்களுடனும்,உறவினர்,நண்பர்களுடனும் மட்டுமே அமரும் கொள்கையைமாற்றவேண்டும் அந்தமுறையை நம்குழந்தைகளுக்கு பால்யவயதிலிருந்தே மற்றவர்களுடன் அமர்ந்துசாப்பிடவைத்துப்பழக்கப்படுத்தவேண்டும் அப்பொழுதான் அவர்களுக்குப்புதியபுதிய நட்பும்,பண்புகளும் ஒற்றுமையுணர்வும் புரியும், சகலவிசயங்களிலும் பிரிந்துகிடக்கும்நாம் இதுபோன்ற ஒன்றுகூடலிலாவதுசேரமுடிகிறதே இதனால்பிரிந்திருக்கும் உள்ளங்களையும் சேர்த்துவைக்கமுடியும் இன்னும்நிகழ்ச்சிகள் விருந்துகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படுகிறதோ பந்தியின்போதுமுகம்மலர வருவோரையழைத்து ஒருவரோடொருவரை உடனாக்கி அமரச்செய்யவேண்டும் அதற்குத்தகுதியான வைபவங்கள் நடத்தப்படும் குடும்பஅங்கத்தினர்களே நின்று வழிகாட்டவேண்டும்.

உடலுக்கு தகுந்த உடைகளைவாங்கலாம்
உடைக்குத்தகுந்த உடலைவாங்கமுடியாது

பழக்கவழக்கங்கள் மாறலாம்
பண்புகள் மாறக்கூடாது

குர்ஆனும் ஹதீதுகளும் மாறாதாபோது
அதற்குமாறாகா நாம் ஏன் மாறவேண்டும்?

மனதில்பட்டதைச்சொல்லியிருக்கிறேன் தவறிருந்தால் எடுத்துச்சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:...
posted by: கே எஸ் முகமத் ஷூஐப் (காயல் பட்டினம்...) on 21 March 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39726

விருந்து சஹனில் பாரம்பர்யம் எதுவும் மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. எல்லாம் சிற்சில நடைமுறை மாற்றங்கள்தான். எந்த ஒரு நீண்ட பாரம்பரிய தொடர்புகளிலும் ,அவ்வக்கால நடைமுறை மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை. இவைகளை ஏற்றுக்கொண்டால்தான் அந்தப் பாரம்பரியமும் நீடித்து வாழும்.

உதாரணமாக ,செம்பு தாலம் கிடைத்தால் மட்டுமே நான் வலிமா விருந்து வைப்பேன் என்றால், இப்போது செம்பு தாலத்துக்கு எங்கே போவது...?

தாலத்திலும் விருந்து வைக்கலாம். அல்லது அருகருகே அமர்ந்து சாப்பிடும்படியாகவும் தனித்தனி தட்டுக்கள்,அல்லது வாழை இலைகளையும் வசதி போல பயன் படுத்திக் கொள்ளலாம். எதுவும் தவறில்லை என்பதே எனது கருத்து. எல்லாவற்றிலும் அருகருகே அமர்ந்துதான் சாப்பிடுகிறோம்...இங்கேயும் சமத்துவம் பேணப்படவே செய்கிறது.

இங்கே யாரோ ஒரு நண்பர் அருகருகே நின்று தொழும் போது மட்டும் தோற்று நோய் பரவாதா...?என்று கேட்டிருந்தார். பரவலாம். பரவாமலும் இருக்கலாம். எனினும் சாப்பிடும் ஒரு நிகழ்வு மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் சற்றே தனித்த ஓன்று. அதிலும் சுத்தம்,சுகாதாரம் நோய்த்தொற்று போன்றவைகள் குறித்து அதீத விழிப்புணர்ச்சி பெருகி நிற்கும் காலமிது. எனவே இணையாக சாப்பிட வரும் ஒருவரிடம் சுத்தம் இல்லையெனில் அவரோடு சகனில் அமரவில்லைஎனில்...அது சமத்துவம் மறுக்கும் செயல் என்று தவறாக நினைக்கக்கூடாது.

தம்பி எஸ் கே கூறிய சாப்பிட்டுவிட்டு கை துடைக்க டிஷ்யூ பேப்பர் அவசியம் கொடுக்க வேண்டும். இதில் எனக்குத் தனித்த அனுபவமே உண்டு.

ஏனெனில் ,நான் இதுபோன்ற விருந்துக்குப் போகும்போது ,நியூஸ் பேப்பரைக் கிழித்தால் அது சரியாக வராது என்பதால், என்னிடம் கிடக்கும் பழைய ஜூனியர்விகடன், ரிப்போர்டர் வார இதழ்களின் நடுப்பக்கத்தைத்தான் லேசாக அலுக்காமல் கிழித்துச் செல்வேன். அந்த நடுப்பக்கங்களில் தவறாமல், நமது சினிமா அம்மணிகளின் படம்தான் இருக்கும்.

எனக்கு ஒ கே...என்னோடு இருப்பவருக்கு அதைக் கொடுத்தால், அவர் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்.

எனவே தம்பி எஸ் கே வின் யோசனையை கல்யாண வீட்டார் அமுல்படுத்தி என்போன்ற குஞ்சு -குளுவான்களை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:...
posted by: Mohamed Sathack (Chennai) on 21 March 2015
IP: 121.*.*.* India | Comment Reference Number: 39728

//பாரம்பரியம் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் கல்யாணப் பந்தலுக்கு வந்து, அங்கு யாரை முதலில் பார்கிறார்களோ அவரோடு சேர்ந்து சஹனில் அமர வேண்டும். ஆனால் அப்படி நடக்கிறதா என்றால் இல்லை. தனக்குத் தெரிந்த நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ ....//

இந்த கருத்தில் கட்டுரை ஆசிரியரோடு முழுதாக ஒத்து போக முடியவில்லை. நண்பர்கள் சகிதம் பலர் வருவார்கள். அதை நாம் தடுக்க முடியாது . வரும்போதே அவர்கள் தங்களது நண்பர்களுடன் , அல்லது மாமா மச்சான் சகிதம் தான் வீட்டில் இருந்தே கிளம்புவார்கள் .

//தனது அந்தஸ்திற்கு சமமானவர்களுடனோதான் அமர்கின்றனர். அறிமுகம் இல்லாதவருடனோ, தகுதியில் குறைந்தவருடனோ அல்லது ஏழைகளுடனோ அமர மாட்டார்கள். //

இந்த கருத்திலும் கட்டுரை ஆசிரியரோடு முழுதாக ஒன்றி போக முடியாது . ஆனால் //தகுதியில் குறைந்தவருடனோ// என்ற ஒரு சிந்தனை நமது ஊரில் சிலரது மனதில் இருக்கத்தான் செய்கிறது . இதை சர்க்கரை வியாதி போல தான் மருத்துவம் செய்ய வேண்டும். சீழ் பிடித்த அந்த மனங்களை(அந்தஸ்தில் கூடிய?) வெட்டி ஒதுக்கி விடலாமே தவிர்த்து அதற்காக சஹான் முறை வேண்டாம் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. சஹான் முறை மாறுவது காலத்தின் கட்டாயம் எனில் அது அதுவாகவே நடக்கும் . அனால் அது குறித்து விவாதம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்றே எண்ணுகிறேன்.

//ஒருமுறை விருந்தொன்றில் எனது தெருவாசி ஒருவருடன் அமர நேரிட்டது. இதற்கு முன்பு அவருடன் பழகியதில்லை. மிகவும் அருவருப்பாக சாப்பிட்டார்.//

இது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை . வீட்டில் பிள்ளைகள் வளர்ப்பு முறை குறித்து கற்று கொடுப்பது இல்லை என்று தெளிவாக தெரிகிறது. இதுவும் மாற்றமே. ஆனால் நன்மைக்கான மாற்றம் இல்லை. ஆனால் இது குறித்து பொது தளங்களில் கருத்து தெரிவிக்காமல் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. அப்படி தெரிவிக்க வேண்டிய கட்டாயமிருப்பின் அதற்கான தீர்வையும் சேர்ந்து ஆசிரியர் சொல்லி இருந்தால் இது தவறாக விளங்காமல் இருந்து இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. Re:...
posted by: omar abdulatheef (Riyadh ) on 05 April 2015
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 40009

உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர் !

எப்படிவேண்டுமானாலும் , யாருடனவதும் ,எதில்வேண்டுமானாலும் உண்ணுங்கள் ! அனால் கல்யாணம் என்று தெருவை குறைந்தது 2 நாள் அல்லது 4 நாட்கள் பந்தல்போட்டு அடைத்துக்கொண்டு வாகனங்கள் போகமுடியாமல் இடையூறு செய்யும் இந்த கேவலமான , சுயநலமான , திமிர்புடிச்ச நாகரிகமற்ற இந்த செயலை காயலர்கலான நீங்கள் நிருதபோவது எப்பொழுது ? இதைப்பற்றி யாரவது வாயை திரன்தீர்கள் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
15. சோர்ந்து போகும் மனசு ...
posted by: musthak ahamed (kuwait) on 23 April 2015
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 40244

நீண்ட விவாதத்தை தூண்டும் தலைப்பை பார்த்ததும் கட்டுரையை படிக்க சொல்கிறது மனசு.....

முதல் வரியை படிக்கும் போதே ஒரு அயர்வு ஏற்படுகிறது,.. வேறு அண்டை ஊரார் போல , "சமத்துவமும் சகோதரத்துவமும் உள்ளதாம்" என்று ஆசிரியர் குறிப்பிடுவது அவரின் அந்நியத்தன்மையை காட்டுகிறது.

அதனை தொடர்ந்து அவரின் கருத்துக்கள் எல்லாமே காயல் மண்ணிலிருந்து அவரை தனிமைப்படுத்துகிறது. வாழ்வின் வாழ்க்கை முறையின் கூறுகளை திறன் செய்யாத அல்லது செய்ய விரும்பாத ஒரு பக்க சார்புடைய கருத்தை அதுவும் மேம்போக்காக சொல்லும் பதிவாகவே இருக்கிறது.

என் அனுபவங்கள் ஆசிரியரின் எழுத்துக்கு முற்றிலும் மாற்றமாகவே இருக்கிறது...ஒரு வேளை பார்வையும் கோணங்களும் மாறுபடலாம்

இருப்பினும் தான் சொல்ல முயலும் கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆழமான களப்பணிகள் எதுவும் அவர் செய்ததாக அவர் எழுத்துக்கள் சொல்லவில்லை...

அப்படி அவர் முயற்சி செய்திருந்தால் இந்த கட்டுரைக்கான அவசியம் குறித்தும் ஒரு தீர்வு கிடைத்திருக்கும். காயலின் பாரம்பரியம் சார்ந்த ஒருவரின் கட்டுரையை படித்து முடிக்கும் போது மனதை கிள்ளி தாள முடியா சோர்வை ஏற்படுத்துகின்றன அந்த இரண்டு காகங்களும்...........

முஸ்தாக்
குவைத் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved