Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:01:35 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 95
#KOTWART0195
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 11, 2015
முஸ்லிம்களால், தமிழர்களால் தோற்றேன் என்று புலம்புவதில் பலன் உண்டா?
இந்த பக்கம் 2764 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிரிட்டனின் பொது தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் நாடுகளின் வம்சா வழியினர் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் இனத்தவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறவில்லை. பெரும்பான்மையினரும் இவர்களை ஆதரித்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று. ஆனால் போட்டியிட்ட ஒரு இலங்கை தமிழரும் வெற்றி பெறவில்லை. இது சிந்திக்கத்தக்கது. ஒரு வேளை இவர்களது ஆர்பாட்ட அரசியலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அன்று ஆயுத பலத்தில் நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் இன்று ஜனநாயக வழியில் அவர்களை ஆள நம்மவர்களைத் தெரிவு செய்துள்ளனர். காலத்தின் மாற்றம். ஆனால் இலங்கை அரசியலில் இன்னும் இனவாதம் பேசி பேசியே பதவிக்கு வர முனைகிறது ஒரு கூட்டம். அதற்கு மேலாக சிறுபான்மையினர் ஏன் என்னை ஆதரிக்கவில்லை என்று தெரியவில்லை என்று போலிக் கண்ணீர் வடிக்கிறார் தலைவர்.

'எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல' என்று இப்போது கூறத் துவங்கியுள்ளார். இது என்ன பேச்சு? நானே ராஜா என்று சகல அதிகாரமும் கொண்ட ஒருவர், தான் பொறுப்பல்ல என்றால் வேறு யார்தான் பொறுப்பு? அதையாவது கூற வேண்டாமா?

அணித்தலைவர் தன் வீரர்களின் துர்செயலைத் தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவர் பதவி விலகி இருக்கவேண்டுமல்லவா ? செய்யவில்லை. ஆனால் மக்கள் அவரைப் பதவி நீக்கம் செய்தனர். இருந்தாலும் ஒட்டகம் கூடாரத்தில் நுழைவது போல் அவர் மீண்டும் பதவிக்கு வர முனைவது அவரது பதவிப் பற்றையே காட்டுகிறது.

'கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து கவலையடைகிறேன். இது தொடர்பில் நான் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். (?) எதிர்காலத்தில் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற இடமளிக்க மாட்டேன்' என்று அவர் கூறிய அதே வேளை அவருக்காக கூட்டம் நடத்தி தொண்டை கிழிய கத்துபவர்கள் 'சிங்கள பௌத்தம்' என்று துவேசம் கக்குகிறார்கள். சிறுபான்மை இனத்தவர்கள் இங்கு விருந்தாளிகள், உரிமையாளர்கள் அல்ல என்கிறார்கள்.

இவர்களின் இனவாதத்தை அவர் தடுக்கவில்லை. அப்படியானால் நாளை இதன் மூலம் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டால், கவலை அடைகிறேன் ஆனால் நான் பொறுப்பல்ல என்று கூறுவாரா? 2005இல் பதவி ஏற்பு வைபவத்தின் பொது " நான் ஒரு கட்சியினருக்கோ, ஓரினத்திற்கோ ஜனாதிபதி அல்ல. இந்த நாட்டின் சகலருக்குமான ஜனாதிபதி" என்று கூறியதை அவர் மறந்து விட்டாரா?

பிரிட்டனின் தொழில் கட்சி தலைவர், தன் கட்சியின் தோல்விக்கு முழுப் பொறுப்பும் ஏற்று தான் பதவி விலகுவதாகக் கூறியுள்ளார். வெற்றி பெற்ற பிரதமர், தான் அனைத்து மக்களையும் மதிப்பேன், பாதுகாப்பேன் என்று கூறியுள்ளார். தம்மை மதிப்பவர்களையே மற்றவர்கள் மதிப்பர். ஆனால் இலங்கையில் சிலர் சிறுபான்மையினர் மீது பொறுப்பற்ற அரசியலையே நடத்த முனைகிறார்கள். இத்தகையினரை எப்படி சிறுபான்மையினர் ஆதரிப்பர்? அடிக்கிற கையை அணைப்பவர்கள் அறிவிலிகள் அல்லவா? பின்பு முஸ்லிம்களால், தமிழர்களால் தோற்றேன் என்று புலம்புவதில் பலன் உண்டா?

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: A.L.S. Ibnu Abbas (Kayalpatnam) on 13 October 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41993

A.L.S. இப்னு அப்பாஸ்; (ALS மாமா) தாயிம் பள்ளி ஜமாஅத் கல்வி (வைத்திய) பிரிவு அறக்கட்டளை தலைவர் (சமூகநல ஆர்வளர் & ஓவியர்) அஸ்ஸலாமு அலைக்கும்,

காவாலங்கா தலைவர் எம்.எஸ் ஷாஜஹான் துரை எழுதும் கட்டுரைகளில் புரட்சி கருத்துகள் வெடிக்கும். அவர்கள் கட்டுரையை ஒன்றுக்கு மேற்பட்டமுறையில் படித்தால்தான் புரிந்து கொள்ளமுடியும். ஒவ்வொருவருக்கும் பல்வேறு சிந்தனைகள் தோன்றும், எழுத்தாளர் மக்கள் மனதில் உள்ள கருத்தை வெளிப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அந்த வரிசையில் நமது எம்.எஸ் ஷாஜஹான்துரை சிறப்பிடம் வைப்பர்கள். அவர்கள் கட்டுரையை நான் படித்ததும் பதில் தர நினைப்பது உண்டு. நமதூர் தட்டச்சி அலுவலகம் சென்றால் வேலை அதிகம் நாளைக்கு வாங்களேன் என்று கூறியதின் காரணத்தால் அவை எனது பொது தொண்டின் காரணமாக மறதி ஏற்பட்டு என்னால் பதில் தர முடியால் போனதே உண்மை.

எழுத்தாளர் ALS மாமா

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved