Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:51:18 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
ஆண்டுகள் 15
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 2
#KOTWART082
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 19, 2013
காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த முன்னாள் 1வது வார்டு காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ. லுக்மான் கட்டுரை!
இந்த பக்கம் 1644 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஆச்சரியமாக இருக்கிறது... ஆண்டுகள் 15 சடுதியில் சென்றுவிட்டது காயல்பட்டணம் டாட் காமிற்கு. 16ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதற்கு முதலில் வாழ்த்துக்கள், வாழ்க! வளர்க!!

ரசமில்லாத கண்ணாடியில் பார்த்தால், அடுத்தவர் குறைதான் தென்படும். ரசம் பூசிய கண்ணாடியில் பார்த்தால்தான் நம் குறை என்ன என்பது தெரியும். பொதுவாக ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் சேவையை - வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்தும்போது, அவர் / அது செய்த நல்ல செயல்களை எடுத்துச் சொல்லி வாழ்த்துவதுதான் சபை மரபு. ஆனால், இந்த வலைதளத்தின் நிர்வாகிகளைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏன் என்றால், இவர்கள் தங்களிடம் உள்ள நிறைகள் என்ன என்பதை விட, குறைகளைப் பற்றிய விமர்சனங்களை வரவேற்கிறார்கள். ஒருவர் சரியான பாதையில் செல்வதற்கு இதுதான் சிறந்த முறை.

ஆண்டுகள் 15 ஆனாலும், நமதூரைப் பொருத்த வரையில், வலைதளங்களை ஒரு வெகுஜன ஊடகமாக அதிகமானோர் பார்ப்பது கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்துதான் என நான் எண்ணுகிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்:

(1) கையடக்க கணினிகளின் வரத்து மற்றும் அலைபேசிகளில் குறைவான செலவில் கிடைக்கும் அதற்கான வசதி.

(2) நகர்மன்றத் தேர்தல்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களுள் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் கடமை - மக்களுக்கு செய்தியைத் தருவது மட்டுமல்ல, மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுவும் கூட. அந்த வகையில் வலைதளங்களின் வருகை - குறிப்பாக, காயல்பட்டணம் டாட் காம், நகர்மன்றத் தேர்தல் சமயத்திலும், அதற்குப் பிறகும் நகர்மன்ற நடவடிக்கைகளிலும், அரசு சார்ந்த செயல்பாடுகளிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற விஷயங்களிலும் நமதூர் மக்களிடம் ஆர்வத்தையும், விழிப்புணர்வையும், எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மையையும் ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரிய செயல்.

ஆனால் துரதிஷ்டவசமாக, நமது நாட்டைப் பொருத்த வரையில் பெரும்பாலான ஊடகங்கள் ஒருசார்பு நிலையில் இருப்பதைத்தான் காண முடிகிறது. அதற்கு காயல்பட்டணம் டாட் காமும் விதிவிலக்கல்ல என கருதுகிறேன்.

நகர்மன்றத் தேர்தல் சமயத்தில் பூடகமாகவும், தேர்தலுக்குப் பிறகு வெளிப்படையாகவும் - நகர்மன்றத் தலைவர் சார்பு நிலையில் தாங்கள் எழுதி வருவது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இதை கூடவே கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. அதே நேரத்தில், நாம் ஆதரிப்பவர்களிடம் காணப்படும் குறைகளையும், எதிர்ப்பவர்களிடம் காணப்படும் நிறைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.

நகர்மன்ற நடவடிக்கைகளைப் பொருத்த வரை, ஊர் நலன் கருதி கொண்டு வரப்பட்ட எல்லா தீர்மானங்களும் மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசையும், அதன் அதிகாரிகளையும் சார்ந்த விஷயம். இங்குதான் தவறு நடக்கிறது. பல அடுக்கு அதிகார நிலை கொண்ட நம் நாட்டில், கீழ்மட்ட நிலையிலுள்ள அதிகாரியை மேல்மட்ட நிலையிலுள்ளவர் கறாராகத் தட்டிக் கேட்பதில்லை. ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், அணுக வேண்டிய முறையில் அணுகினால்தான் திட்டத்தை நிறைவேற்ற அனுமதி கிடைக்கும். இந்நிலைதான் காலங்காலமாக இருந்து வருகிறது.

நிலமை இப்படியிருக்க, தீர்மானங்கள் செயல்வடிவம் பெறாமல் இருப்பதற்கு தலைவியுடன் உறுப்பினர்கள் ஒத்துழைக்காமல் இருப்பதுதான் காரணம் என்பதைப் போன்ற தோற்றத்தை தங்கள் வலைதளம் மக்களிடம் ஏற்படுத்தியது. தலைவியுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் எந்தத் தீர்மானமும் நிறைவேறியிருக்காதே? இதுபோன்ற செயல் என்னைப் பொருத்த வரை மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

நான் நகர்மன்ற உறுப்பினராக இருந்த வரை, தலைவி சொன்னார் என்பதற்காகவோ அல்லது உறுப்பினர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ - எதனையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. என் மனதிற்கு சரியெனப் பட்டதை ஆதரித்தேன், தவறெனப் பட்டதை எதிர்த்தேன்.

குப்பை தட்டும் இடம் தேர்வு செய்வதைப் பொருத்த வரை, நான் உறுப்பினராக இருந்த சமயத்தில், முன்னாள் தலைவர் மரியாதைக்குரிய மர்ஹூம் எம்.கே.டி. அப்பா அவர்கள் காலத்தில் தெரிவு செய்யப்பட்ட இடம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. அப்போது அது வெளியாகியிருந்தால் நான் அந்த இடத்தை ஆதரித்திருப்பேன்.

ஆனாலும், இதையும் தாண்டி மக்களுடன் நேரடி தொடர்புள்ள நகர்மன்றக் காரியங்களை நல்ல முறையில் செய்ய முடியும். ஆனால், இதைப் பற்றிய என்னுடைய கருத்துக்களும், யோசனைகளும் இரு சாராரிடமும் எடுபடவில்லை. (உ-ம்.: மக்கள் குறைதீர் கூட்டம், முறைகேடான குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு போன்றவை.)

இனி, தங்களைப் போன்ற ஊடகங்கள்தான் இது சம்பந்தமான விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதே சமயம், ஊடகங்களும் - கடிவாளம் போடப்பட்ட குதிரையைப் போல செயல்பட வேண்டும்.

காயல்பட்டணம் டாட் காம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இது சகோதரர் லுக்குமான் அவர்களின் காலம் கடந்த பதிவு.. இதோ...இங்குதான் தவறு நடக்கிறது.
posted by: தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 20 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32118

சகோதரர் லுக்குமான் காக்கா அவர்களின் ஆக்கத்தில் பல அனுபவத்தை அவர் வெளி படுத்தி உள்ளார்.. அதை எடிட் செய்யாமல் முழுதையும் வெளியிட்டு இருப்பது ஊடகத்தின் தரத்தை உயர்த்த செய்கின்றது... மேலும் மேலும் சிறந்து இந்த ஊடகம் வளர வாழ்த்துக்கள்...

நகர்மன்ற நடவடிக்கைகளைப் பொருத்த வரை, ஊர் நலன் கருதி கொண்டு வரப்பட்ட எல்லா தீர்மானங்களும் மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசையும், அதன் அதிகாரிகளையும் சார்ந்த விஷயம். இங்குதான் தவறு நடக்கிறது. CP இது சகோதரர் லுக்குமான் அவர்களின் காலம் கடந்த பதிவு..

இந்த தவறை அன்று உணராத இன்றைய உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவியால் தான் வேலைகள் நடைபெறுவது இல்லை இந்த தலைவியால் தான் எல்லாம் கிடப்பில் கிடக்கின்றன ஆகையால் தலைவி பதவி விலக வேண்டும் என்றும் இன்னும் பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கப்பட்டன...! ஆனால் இன்று உறுப்பினர்கள் மனதில் எங்கு தவறு நடக்கின்றது என்று உணர ஆரம்பித்து விட்டது போல சமீபத்திய 18 டிசம்பர் நகர்மன்ற கூட்டத்தின் போது பிரதிபலித்தன...

ஊழல் எதிர்ப்பு இயக்கம் சென்னை - காயல்பட்டினம் கிளையின் சார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தின் போது பேசிய விருத்தாசலம் முன்னால் நகர்மன்ற தலைவர் வள்ளுவனின் விழிப்புணர்வு உரையினை காலம் சென்று இன்று நமது நகர்மன்ற உறுப்பினர்கள் உணர்ந்துள்ளார்கள்..

வள்ளுவனின் முக்கிய உரையின் சில வரிகள் இதோ... "என்றைக்குமே நகர்மன்ற தலைவரையும் - நகர்மன்ற உறுப்பினர்களையும் பிரித்து வைத்து இருக்கவே நகர்மன்ற அரசு அதிகாரிகளும் - ஊழியர்களும் செய்வார்கள்.. ஒற்றுமையாகவே இருக்க வைக்க மாட்டார்கள் என்பது தான்"

18 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் பல தவறை சுயமாக சிந்தித்து கண்டுபிடித்து இந்த.. இந்த... தவறுகளுக்கு நீங்கள் தான் உங்கள் டிப்பார்மென்ட் தான் காரணம் நீங்கள் தான் ஒத்துழைப்பது இல்லை... உங்களால் தான் பிரச்சனையே ஆரம்பம் என மிக ஆக்கரோசமாக கடுமையாக நகர்மன்ற அதிகாரிகளை 5 வது வார்டு உறுப்பினர் தம்பி ஜகாங்கீர் வருதெடுத்தார்... மேலும் அவர் கூறியாதவது இப்போது முழுதையும் விளங்கி கொண்டோம் நாங்கள் (ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் குறிப்பிட்டு) எங்களுக்கும் - தலைவிக்கும் என்ன சொத்து தகராறா...? இது முன் நாங்கள் சண்டை பிடித்தோம் அந்த சண்டைக்கெல்லாம் காரணம் நீங்கள் தான் என்று இப்போது விளங்குகிறது என குறுப்பிடுகிறார்...

இதில் இருந்து நமக்கு (நடுநிலையாளர்களுக்கு) என்ன விளங்குகிறது வள்ளுவளின் அனுபவ பேச்சு உண்மையாகிறது என புரிகிறது...

மீதமுள்ள ஆண்டுகளில் தலைவியோடு உறுப்பினர்களும் உறுப்பினர்களோடு தலைவியும் சேர்ந்து நகர்மன்றத்தில் உள்ள அதிகாரிகளை - ஊழியர்களை வேலை வாங்குவதில் முக்கிய கவனம் செலுத்துங்கள்... இன்சாஹ் அல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved