Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:25:03 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
காயல் வரலாறு
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 2
#KOTWART072
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 20, 2013
மண்ணறை கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு! (பாகம்-2)
இந்த பக்கம் 5827 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முதல் பாகம் காண இங்கே சொடுக்குக

எஸ். ராமச்சந்திரன் - தொல்பொருள் ஆராய்ச்சியாளர். கொற்கை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் பணிபுரிந்துள்ள இவர், காயல்பட்டினத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட தனது ஆய்வுகளின் முடிவில் சில கல்வெட்டுகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. தான் கண்ட கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள தகவல்களுடன், அவைகள் குறித்த தனது கருத்தையும் இணைத்து இவ்வாய்வறிக்கையை அவர் தயார் செய்துள்ளார்.

-----------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டணம் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் ஊராகும். இவ்வூரில் உள்ள மீஸான் (ஸமசான மயானம் எனப் பொருள்படும்) கல்வெட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் அறியப்பட்ட செய்திகள் தொகுத்துத் தரப்படுகின்றன.

(1)

காயல்பட்டணம் கல்லறைக் கல்வெட்டுகள் காயல்பட்டணம் பெரிய குத்பா பள்ளிவாசல் மீசான் கல்வெட்டுகள் கொற்றக்குடை உருவம் பொறிக்கப்பட்டுளள், கொல்லம் 752 (கி.பி. 1587) ஆம் வருடக் கல்வெட்டில் 8 தலைமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. முதல் தலைமுறையைச் சேர்ந்தவர் அசனா நைனா ஆவார். (இப்பெயர் ஹஸன் நாயகனார் என்பதன் திரிபாகும்) இக்கல்லறையில் அடக்கமாகியிருப்பவர் எட்டாம் தலைமுறையைச் சேர்ந்த அப்துல் கபாரான இம்மடி செண்பகராம முதலியார் ஆவார்.

கி.பி. 1587 இல் போர்ச்சுக்கீஸியர்களே இப்பகுதியிலிருந்த இஸ்லாமியக் கடற்படை வீரர்களுக்கும் வணிகர்களுக்கும் முதன்மையான எதிரிகளாக இருந்ததால், கேரள அரசர்களின் (திருவிதாங்கூர், கொச்சி, கோழிக்கோடு) பெயரான செண்பகராமன் என்ற பெயரையும், விஜய நகர அரசர் சிலரின் பட்டப்பெயரான இம்மடி என்ற பெயரையும் இவர் தமது பட்டப் பெயருடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார் எனலாம். கொற்றக் குடை சித்திரிக்கப்பட்டிருப்பதால் இவர் கடற்படைத் தலைவராக இருந்திருக்க வாய்பு உள்ளது. முதலியார் என்பது படைமுதலி எனப் பொருள்படும் சாதிப் பட்டமாகும். திருவனந்தபுரம் பகுதியில் ஈழவர் குல வீரர்கள் முதலியார் என்ற சாதிப் பட்டம் புனைந்து கொள்வது வழக்கம். எனவே, இவர்கள் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து அரபுக் கலப்பினை ஏற்று மதம் மாறியவர்களாக இருக்கலாம். முக்குவர், கரையார் இனத்தவர்களாகவும் இருக்கலாம்.

(2)

பெரிய குத்பா பள்ளிவாசலிலே உள்ள மற்றொரு மீசான் கல்வெட்டு, 15ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியை அல்லது 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தது. ஜமால் முதலியாரான பராக்ரம பாண்டிய முதலியார் மகளார் மகதூம் நாச்சியார் - இன் பெயர் இக்கல்லறைக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

பராக்ரம பாண்டிய முதலியார் என்ற பெயர், கி.பி. 1420-62 காலகட்டத்தில் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அரிகேசரி பராக்ரம பாண்டியனின் கடற்படைத் தலைவராக இருந்தவர் இவர் என்பதை உணர்த்தும். அரிகேசரி பராக்ரம பாண்டியனின் கடற்படை வெற்றிகள் அம்மன்னனின் மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்படுகின்றன. சிங்கை, அநுரை, வீரை, முதலை ஆகிய ஊர்களில் நிகழ்ந்த போர்களில் அரிகேசரி பராக்ரம பாண்டியன் பெற்ற வெற்றிகள் இக்கடற்படையின் துணையுடனே நிகழ்ந்தன எனலாம்.

(3)

பெரிய குத்பா பள்ளியின் வெளியே தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில், கொல்லம் 596 ஆம் ஆண்டில் (கி.பி. 1420) மகமூது என்பவரின் மகள் மதலியா நாச்சியார் இறந்த செய்தி குறிப்பிடப்படுகிறது.

(4)

பெரிய குத்பா பள்ளியிலுள்ள வேறொரு கல்லறைக் கல்வெட்டில், கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலுக்கவெட்டி மரக்காயர் என்பவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. எதிரியின் உடலில் பெரிய அளவில் வெட்டு விழாமல் உடல் முழுதும் சிறு கீறல்கள் விழும் வகையில் வெட்டுதல் சிலுக்கு வெட்டு எனப்படும் என்று 1836-37ஆம் ஆண்டில் வெளிவந்த ஜே.பி. ராட்லரின் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. படை வெட்டும் போர்ப்பயிற்சியின் போதும், போட்டிகளின்போதும் இத்தகைய மெச்சத்தக்க வாள் வீச்சு முறை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். மெய் சிலிர்க்கும்வண்ணம் அல்லது எதிரிக்கு மயிர்க் கூச்செறியும் விதத்தில் வெட்டுதல் என்ற பொருளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

(5)

காயல்பட்டணத்திலுள்ள சிறு பள்ளியிலிருந்த ஒரு கல்லறைக் கல்வெட்டு கொல்லம் 671 (கிபி. 1496) -ஐச் சேர்ந்தது. சாது நாயினா, அவர் மகன் செயிதி அகமது நாயினாரான வீர பாண்டிய முதலியார், அவர் மகன் ஜமால் நாயினார், அவர் மகன் செய்யது அகமது நாயினார், அவர் மகன் ஜமால் நாயினார், அவர் மகன் சேகாலி நாயினாரான செண்பகராம முதலியார் என 6 தலைமுறைகள் இக்கல்வெட்டிஎல் குறிப்பிடப்படுகின்றன. இரண்டாவது தலைமுறையினராக குறிப்பிடப்படும் செயிதி அகமது நாயினாரான (சையத் அகமத் நாயகனாரான) வீரபாண்டிய முதலியார் என்பவர், கி.பி. 1334- 1380 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்த மாறவர்மன் வீரபாண்டியனின் கடற்படைத் தலைவராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

காயல்பட்டணத்தில் பெரிய அளவிலான இஸ்லாமிய மதமாற்றம் மதுரை சுல்தான்களின் ஆட்சிக் காலத்தொடக்கத்தில் (கி.பி.1327) நிகழ்ந்ததென்றும் 1335இல் தில்லி சுல்தான்களின் மேலாதிக்கத்தை உதறிவிட்டு மதுரை சுல்தானான சையத் ஜலாலுதின் அசன் சா சுயாட்சி அமைத்தபோது, கி.பி. 1358-59 இல் மதுரை சுல்தானியத்தில் பாமினி சுல்தான்களின் தலையீடு நிகழ்ந்தபோதோ காயல்பட்டணத்திலிருந்த இஸ்லாமியக் கடற்படை வீரர்கள் சிலர் பாண்டியரின் மறு எழுச்சிக்கு ஆதரவாகத் திரும்பியிருக்க வேண்டும் என்றும் நாம் ஊகிக்கலாம். இது அழகான சமூக வரலாற்றாய்வுக்குரிய குறிப்பாகும்.

(6)

ரெட்டைக்குளம் பள்ளிக் கல்லறைக் கல்வெட்டு கொல்லம் 644-க்கு (கி.பி.1468) உரியது. அய்யமுதலியார் மகன் வாலிசலார் மரக்காயர் மரித்த செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

கருப்புடையார் பள்ளியில் உள்ள இரண்டு கல்லறைக் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை.

(7)

முதற் கல்வெட்டு கொல்லம் 688 (கி.பி.1512) ஆம் ஆண்டுக்குரியது. நொளம்பாதராய முதலியார் மகன் கார்த்தியார் அவர் மகள் பீவியார் என 3 தலைமுறையினர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்டுகின்றனர். நொளபம்பாதராய முதலியார் என்பவரே இவ்வம்சத்தவரில் முதன் முதலில் இஸ்லாமியராக மாறியிருக்க வேண்டும். அவர் வாழ்ந்தது 15ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகலாம். (பீவியார், உத்தேசமாக 60 வயதில் இறந்தார் எனக் கொண்டால் அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் - கி.பி.1482 அளவில் நொளம்பாத ராய முதலியார் இந்திருக்கலாம்.)

தென்திருப்பேரையிலுள்ள கைலாசநாதர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் மானவீர வளநாட்டை திருச்செந்தூருக்குத் தெற்கே குலசேகரன்பட்டினத்தை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்த வீர நுளம்பாத ராயன் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார். கருப்புடையார் பள்ளிக் கல்வெட்டில் குறிப்பிடபப் டும் நொளம்பாதராய முதலியார், அவ்வீரநுளம்பாத ராயனின் வம்சத்தாரோடு உறவுடைய கடற்படை வீரராக இருக்க வாய்புள்ளது.

(8)

இப்பள்ளியிலுள்ள மற்றொரு கல்வெட்டு கொல்லம் 701 (கி.பி. 1526) க்குரியது. கோசாலி நயினா அவரது மகன் கச்சி நயினா அவரது மகன் மகமது நயினா அவர் மகனார் சேரா முதலியார் ஆகியோர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர். கோசாலி நயினா என்பது கொச்சாலி நயினா என்பதன் திரிபாகலாம். குஞ்சு அலி, கொச்சு அலி என்பன மலையாள வழக்கிலமைந்த பெயர்களாகும். கச்சி நயினா (கச்சி நாயகனார்) என்ற பெயர் கச்சி கொண்ட பாண்டியன் எனப்பட்ட பாண்டியர் பட்டப்பெயருடன் தொடர்புடையதாகலாம்.

குலசேகரபட்டினத்திலுள்ள சிவன் கோயிலின் பெயர் கச்சி கொண்ட பாண்டீச்சுரம் ஆகும். மேலும், இப்பகுதியில் ஆற்றூரையடுத்து உள்ள முக்காணியில் கச்சி நாச்சியார் தர்கா உள்ளது. கச்சிநாச்சி விளை (கச்சிநாவிளை) என்ற ஊர் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ளது. இப்பெயர்களெல்லாம் கச்சிகொண்ட பாண்டியன் என்ற பட்டப் பெயருடன் தொடர்புடைய பதவிப் பெயர்களின் அல்லது ஆட்பெயர்களின் பிற்காலத் திரிபு வடிவங்களெனலாம்.

காயல்பட்டணம் இஸ்லாமியக் கல்லறைக் கல்வெட்டுகள் மேலும் ஆய்வு செய்வதற்கு உரியவை. கி.பி. 1400 தொடங்கி, 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை கொல்லம் ஆண்டுக் குறிப்புடனும், தமிழ் எண்களைப் பயன்படுத்தியும் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டதாகும்.


--------------------------------------------------------------------------------------------

அடுத்து வரும் பாகத்தில் இங்கிலாந்து நாட்டு பேராசிரியர் ஒருவர் - காயல்பட்டினத்தில் 1980களின் பின்பகுதியில் மேற்கொண்ட ஆய்வினை தொடர்ந்து - வெளியிட்ட கல்வெட்டுகள் குறித்த தகவல்கள், புகைப்படங்களுடன் வெளியிடப்படும்.

முதல் பாகம் காண இங்கே சொடுக்குக

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பாண்டிய மன்னர்களின் கடற் காவலர்களாக
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 21 December 2013
IP: 119.*.*.* China | Comment Reference Number: 32133

கொல்லம் ஆண்டு என்பதென்ன? ஏன் ஹிஜ்ரி ஆண்டுகளை கல்வெட்டுக்களில் குறிப்பிடவில்லை ? கிருஸ்துவ ஆண்டிற்கும் கொல்லம் ஆண்டிற்கும் சுமார் 824 ஆண்டுகள் வித்தியாசம் தெரிகிறது. ஹிஜ்ரி என்றால் 622 முதல் 580 ஆண்டுகள் வித்தியாசம் இருக்க வேண்டும் அல்லவா!

கட்டுரையாளர் அல்லது விவரம் தெரிந்தவர்கள் விளக்க முடியுமா?

பயனுள்ள கட்டுரை. பிற மதத்தினர்/ சரித்திர ஆர்வலர்கள் இதை படிக்க வரும்போது , நாம் யார், நம் பூர்வீகம் என்ன என்பதை அவர்களால் உணர முடியும். நாம் மண்ணின் மைந்தர்கள்தான் என்பது அவர்களுக்கு தற்போது விளங்கும். பாண்டிய மன்னர்களின் கடற் காவலர்களாக நம் முன்னோர் பணியாற்றியது இந்த கல்வெட்டுக்களின் வாயிலாக தெரிய வருகிறது.

இந்துத்துவா அரசியல் கட்சிகள் நாம் அனைவரும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து புலம்பெயர்ந்ததாக அல்லவா பரப்புரை செய்கின்றன!

Administrator: கொல்லம் ஆண்டுகள் என்பது கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தற்போதைய தமிழக மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி (தூத்துக்குடியும் சேர்த்து) ஆகியவற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன் - அங்குள்ள மக்களால் பயன்படுத்தப்பட்ட காலண்டர். உதய மார்த்தாண்ட வர்மர் என்ற மன்னர் அறிமுகப்படுத்தியதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இதன் துவக்கம் - ஆகஸ்ட் 25/15, 824, கிருஸ்துவ ஆண்டு என கணக்கிடப்படுகிறது. கொல்லம் காலண்டர் - சூரிய சுழற்சி அடிப்படையிலானது (அதாவது ஆண்டு என்பது 365/366 நாட்கள்).

ஹிஜ்ரி காலண்டருடன் இது வேறுபடும். ஹிஜ்ரி காலண்டர் தேதிகள், ஜூலை 16, 622 கிருஸ்துவ ஆண்டுடன் துவங்கியதாக பொதுவாக கூறப்படுகிறது. மேலும் ஹிஜ்ரி/இஸ்லாமிய ஆண்டு, சந்திரனை அடிப்படையாக கொண்டது. அதாவது - ஓர் ஆண்டு என்பது சுமார் 354 நாட்களாகும்.

எனவே - கொல்லம் ஆண்டு கணக்கும், ஹிஜ்ரி ஆண்டு கணக்கும் வேறுபடும்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் - அந்தந்த மக்கள், தங்கள் பகுதியின் வரலாறு அடிப்படையில் (உதராணமாக ஒரு குறிப்பிட்ட மன்னர் ஆட்சிக்கு வந்த நாள் முதல், ஒரு குறிப்பிட்ட மிக பெரிய சம்பவம் நடந்த நாள் முதல் என) காலண்டர்களை பயன்படுத்தி வந்தார்கள்.

ஆய்வாளர் ராமச்சந்திரன் - ஆய்வு செய்த கல்வெட்டுகளில் கொல்லம் ஆண்டுகள் இருந்தது என்பது அவரின் கட்டுரையில் தெளிவு. ஹிஜ்ரி காலண்டர் தேதியும் கூட இருந்ததா என அவர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. இஸ்லாமியர்களின் மண்ணறை கல்வெட்டுகள் என்பதால், ஹிஜ்ரி ஆண்டுகளும் இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

அனைத்து சமுதாய மக்களும் எளிதாக புரிந்துகொள்வதற்காக - எல்லா வரலாற்று ஆசிரியர்களும் பயன்படுத்தும் முறையான கிருத்துவ ஆண்டுகளையும் இணைத்து தேதியினை குறிப்பிடும் வழக்கத்தை, ஆய்வாளர் ராமச்சந்திரன் கையாண்டுள்ளார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. காயலின் முகவரியை கண்டுகொண்டோம்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) on 22 December 2013
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32150

மயிர்கூச்செரியும் ஆச்சரியமான தகவல்கள், நம் முன்னோர்களின் முத்தான முகவரிகள், நான் இந்நாட்டின் மைந்தர்களே என உறக்கக்கூவி முழக்கமிடவேண்டும் போல் தோன்றுகிறது. இன்னும் பல தகவல்களோடு பல பாகங்கள் தொடர்ந்து வரவேண்டும்.

இத்தகைய வரலாற்று பின்னணியை தொகுத்து தரும் தொகுப்பாசிரியர் பெயரையும் வெளியிட்டால் அது இக்கட்டுரைக்கு இன்னும் மெருகேற்றும் என்பது அடியேனின் பணிவான வேண்டுகோள்.

அடுத்த பாகம் எப்போது வெளிவரும் எனும் பேராவலோடு...
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: I.M.Abdur Rahim (Kayalpatnam) on 22 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32152

இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளது. சில காலங்களுக்கு முன்னால் நான் மதுரையில் பணியாற்றிய போது , காயல்பட்டினம் முன்னோர்கள் ஐய்யங்கார் சமூகத்தை சேர்ந்தவர் என்று ஒரு ஆடிட்டர் என்னிடம் கூறினார். அதன் பேரில் மேலும் தவகல் வரும் என்று காத்திருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: pirabu n s sulthan jamaludeen (dubai) on 29 December 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32217

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் நம்மூரில் ஆய்வுசெய்யும்போது எனக்கும் அவர்களுடன் சென்று பல விஷயங்களை அறியமுடிந்தது.அவர்கள் எழுதிஎடுத்த கல்வெட்டுதகவல்களை நான் நகலெடுத்துவைத்துளேன்.அதில்கூட பலகல்வெட்டுகள் இன்றில்லை என்பதே வருத்தப்படவேண்டிய விஷயம்.காரணம் நம்மிடம்போதிய விழிப்புணர்வும்,ஆர்வமும் இல்லாததே.

இன்றுவரை பல அரபிகல்வெடுகள் வாசிக்கபடாமலே உள்ளது.அதுபோன்று நம்மூரில்இதுவரை அகழாய்வு செய்யப்படவில்லை.அகழாய்வுசெய்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுற்பட்ட பலபொருள்கள் கிடைக்கும்.இதுவரை 800 ஆண்டுகளுக்குமுற்பட்ட நாணயங்களும் ஆயிரம் ஆண்டுகளுக்குமுற்பட்ட மண்ணாலான சட்டிபானைகளும், மண்ணாலான கிணற்றுரைகளும் கிடைதிருகின்றன. அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும்பல நுற்றாண்டுக்குமுற்பட்ட பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் தமிழகத்திற்கு அப்பால் பலவரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் நம்மூரின் தொன்மையை நாம் அறியமுடிகிறது.குறிப்பாக மலையாளநூலான ‘ துஹ்பதுல் முஜாஹிதீன் ‘ என்ற கிதாபில் சஹாபி மாலிக் இப்னு தீனார் ( ரலியல்லாஹுதஆலஅன்ஹு )அவர்கள் காயல்பதியில் ஒருபள்ளியை கெட்டியதாஹவும் காயல்பதிக்கு தன்பிரதிநிதியாக காசிம் என்பவரை நியமித்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன.

கி பி 842ல் முஹம்மதுகல்ஜி ( ரஹ்மத்துல்லாஹ் அலைஹி) அவர்களால் கெட்டபட்ட ஜும்ஆபெரியபள்ளி இஸ்லாம் அமைதியான வழியில் தென்னிந்தியாவில் 1000 வருடம்களுக்கு முன்பெபரவி இருந்தது என்பதை பறைசாற்றுகிறது. நாமும் நம் சந்ததிகளும் நம்மையும் நம்மூரின் தொன்மையையும் அறியவேண்டுமென்றால் இருக்கின்ற கல்வெட்டுகளையும் பழைய பள்ளிவாசல்களையும் முறையே பராமரித்தாலே போதும்.இல்லையென்றால் நம்மையும் நாளை நாடோடிகளாகவே சித்தரிப்பார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

வஸ்ஸலாம்

(பிரபு சுல்தான் ஜமாலுதீன்)
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 30 December 2013
IP: 113.*.*.* China | Comment Reference Number: 32224

---------------------கி பி 842ல் முஹம்மதுகல்ஜி ( ரஹ்மத்துல்லாஹ் அலைஹி) அவர்களால் கெட்டபட்ட ஜும்ஆபெரியபள்ளி இஸ்லாம் அமைதியான வழியில் தென்னிந்தியாவில் 1000 வருடம்களுக்கு முன்பெபரவி இருந்தது என்பதை பறைசாற்றுகிறது.--------------------------------- (கோப்பி & பேஸ்ட்)

எங்கு கட்டினார்? நம் ஊரிலா? அது எந்த ஜும்ஆ பள்ளிவாசல்? நீங்க குறிப்பிடுவது நம்முடைய பெரிய ஜும்ஆ பள்ளிவாசலா? அப்படியானால் நம் பெரியபள்ளி கட்டிமுடித்து கிட்டத்தட்ட 1200 வருடங்கள் ஆகிறதா? மாஷா அல்லாஹ் .

நம் ஊரில் நிறைய பள்ளிவாசல்களில் உள்ள தூண்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்தினால் அவை மறைக்கப்பட்டன என தெரியவில்லை. குறிப்பாக இரெட்டை குளத்துப்பள்ளி, மொகுதூம் பள்ளி , பெரிய பள்ளி போன்ற பள்ளிவாசல்களில் உள்ள தூண்களில் ஓவியங்கள் வரையப்பட்டிடருந்ததை முன்பு பார்க்க முடிந்த்தது. இப்போது அது சமதளமாக பூசி மறைக்கப்பட்டிருக்கிறது.அந்த ஓவியங்களை வைத்தே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதன் காலத்தை கணிக்க முடியும்.

நமது ஊரில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு நில உரிமையாளர்கள் எவரும் இப்போது அனுமதிப்பது கடினமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved