Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:15:57 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9770
#KOTW9770
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 11, 2012
DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து த.அ.உரிமை சட்டம் மூலம் சென்னை வாழ் காயலர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கேள்வி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3747 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிடுவது என பொதுக்கூட்டத்தின்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, சென்னை வாழ் காயலர்களை திரட்டுவதற்காக அங்குள்ள கல்லூரிகளின் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதுபோல, காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரியும் நகைக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கும், நகர்நல அமைப்புகளின் நிர்வாகிகளிடமும் நேரடியாகச் சென்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சென்னை - மண்ணடியிலுள்ள மஸ்ஜிதே மஃமூர், மஸ்ஜிதுல் அஷ்ரஃப் ஆகிய பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரையின்போது இதுகுறித்து அறிவிக்கப்பட்டு, அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 09.12.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 02.00 மணியளவில், சென்னை - மண்ணடி - தம்புச்செட்டி தெருவிலுள்ள அக்வாபேஸ் கன்ஸல்டன்ட்ஸ் அலுவலக வளாகத்தில் KEPA குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம், அதன் துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில் நடைபெற்றது.



தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு மறுநாள் வருகை தரும் காயலர்களை ஒருங்கிணைத்து செய்யப்பட வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.



10.12.2012 திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தில், ஹாஜி எல்.கே.எஸ்.ரஃபீ அஹ்மத், ஹாஜி டைமண்ட் செய்யித் அஹ்மத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன், ஜெம் ஷேக், ஜெம் காமில், பல்லாக் சுலைமான், ஆடிட்டர் ரிஃபாய் உட்பட சென்னை வாழ் காயலர்கள் சுமார் 275 பேரும், காயல்பட்டினத்திலிருந்து இதற்கென சென்றிருந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உட்பட சுமார் 25 பேர், மலபார் காயல் நல மன்ற தலைவர் மஸ்ஊத் உட்பட மொத்தம் சுமார் 300 பேர் ஒன்று திரண்டனர்.





துவக்கமாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - தலா பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி, DCW ஆலை தொடர்பான கேள்விகளை 200 காயலர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தனித்தனியே அளித்து, அதற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொண்டனர்.



































இதற்கான ஏற்பாடுகளை, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம் வழிகாட்டலில், KEPA நிர்வாகிகளின் சார்பாக சென்னை வாழ் காயலர்கள் செய்திருந்தனர்.

படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. முயற்ச்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...Re:...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [11 December 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24440

உங்களின் முயற்ச்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...

சில கருப்பு ஆடுகளின் விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்..... சூரியனை கண்டு குலைப்பது, குலைந்துக்கொண்டே இருக்கட்டும்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. DCW -MASS POLLUTION
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [11 December 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 24443

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.. நன்றி....

எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வெற்றி தந்தருள்வானக ..ஆமீன்......

JAHIR HUSSAIN VENA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by aboobacker mz (chennai) [11 December 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 24444

அல்ஹம்துலில்லாஹ்.. இறைவன் நமக்கு முழு வெற்றியை தருவானாக.. ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24445

நமதூர் மக்கள் திரண்டிருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

அது என்னவோ தெரியவில்லை காயல்பட்டினத்தை விட்டு வெளியே சென்றால் நாம் காயலர்கள் என்ற உணர்வு கொப்பளித்து கொண்டு வருகிறது, ஊரில் இருக்கும்போது அந்த உணர்வுகள் சற்று பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறது. மேலும் விமர்சனங்கள் செய்பவர்கள் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்கள் எழுத்துக்கள் நாகரிகமில்லாமல் இருப்பது வேதனை தருகிறது.

நிறைவு இருந்தால் தட்டிக்கொடுப்பதும் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுவதும் இரண்டு நிலையிலும் எழுத்து நாகரிகம் மிக அவசியம்.

படித்தவர்கள் பண்புள்ளவர்கள் என்று போற்றப்படும் நம்மவர்களிடம் இந்த பலவீனம் உள்ளதை நடுநிலையாளர்கள் வேதனையுடன் அவதானித்து வருகிறார்கள். கவனித்துக்கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம் நல்ல நோக்கங்களுக்கு துணை நிற்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புறமுதிகிடுவோரை புறம் தள்ளிவிட்டுபுண்ணிய பயணம் தொடரட்டும்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [11 December 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24446

புகாரியில் வரும் முதல் ஹதீஸே "நம்முடைய எல்லா செயல்களும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலேயே அமையும்" என்பதாகும்!

உடன்பிறவா பிறப்புகளுக்காக நீங்கள் நாடும் நன்மைக்குண்டான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நிச்சியம் தருவான்!

ஒருவர் ஒருஉதவியை ஒருவருக்கு செய்தால் அவ்உதவிக்குறிய பலனை 10 மடங்கு தருவதாக நம்மை படைத்தவன் பெருமிதத்துடன் உறுதி அளித்துள்ளான்.!

அந்த முன்னோனாம் மேலோனின் நன்மையை பெரும் புண்ணியவான்களே, உங்கள் புண்ணியபயணம் எந்த இடையூறு வந்தாலும் எத்தொய்வுமில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்! இறுதி வெற்றி எமெக்கே இன்ஷாஅல்லாஹ்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by noohu thamby (tanzania) [11 December 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 24447

இது போல் அணைத்து விசியத்திளும் ஒன்று கூடி நின்றாலே வெற்றி நம்மை வந்து சேறும், இது போன்ற விசியங்களில் இனியாவது ஒன்று நிற்போம். ஒன்று படுவோம் ஊரை பாதுகாப்போம்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வரலாற்றுப் படிப்பினைகள்!
posted by kavimagan (qatar) [11 December 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24448

பல்லாயிரம் ஆண்டுகள் முன்பிலிருந்து, இன்று வரை உள்ள சமூக நீதிக்கான போராட்டங்கள் அனைத்திலும், அதனை பலவீனப்படுத்த சூழ்ச்சியாளர்கள் விரிக்கும் வலையில், யாரேனும் விழுந்து கொண்டிருப்பதை, வரலாற்றுப் பாடங்களில் இருந்து அறிந்தே வைத்திருக்கிறோம்.

அதே நேரத்தில், சோரம் போனவர்களைக் கண்டு சோர்ந்து போகாமல், தம்மை வீழ்த்த நினைத்தவர்களை வீழ்த்திக் காட்டிய, சமூகப் போராளிகளின் வரலாற்றையும் நாம் அறிந்திருக்கிறோம். இதில் KEPA சோரம் போனவர்களைக் கண்டு சோர்ந்து போகாத மாபெரும் மக்கள் இயக்கமாகும்.

அறுசுவை உணவிற்கும், அழிந்து போகும் பணத்திற்கும் ஆசைப்பட்டு, சமூகத்தை காட்டிக் கொடுக்க நினைப்பவர்களின் வஞ்சக எண்ணங்கள் வல்ல ரஹ்மானின் கிருபையினால் தூள் தூளாக நொறுங்கட்டும்.

பெரியவர்களின் வழிகாட்டுதலோடு, இளைஞர் பட்டாளம் சாதித்துக் காட்டட்டும்.

இறையருளால் அந்த நல்ல நாட்கள் நம் கண் முன் விரிந்திடும் வரையில் காத்திருக்காமல் நாமும் களம் புகுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Salai Sheikh Saleem (Kayalpatnam) [11 December 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 24453

அல்லாஹ்வை முன்னிறுத்தி ஒரு இனத்தையே பாதுகாக்க போராடும் இந்த அறப்போரில் எத்துனை இடையூறுகள் வந்தாலும், எத்துனை கைக்கூலிகள் ஊளையிட்டாலும் அவனின் நாட்டப்படியே வெற்றிதான் நமக்கு கிடைக்கும் என்பதை உறுதி செய்யவே இப்படிப்பட்ட ஒரு இலட்சியவாதிகளின் சங்கமம். மாஷா அல்லாஹ்.

எதனைப்பற்றியும் கவலை கொள்ளாது இனி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொய்வில்லாது தொடருங்கள். அல்லாஹ் நிச்சயம் உண்மையின் பக்கமே என்பதை உணராதவர்கள் அதற்க்கான பலனை பெறுவார்கள்.

தங்களது சொந்த வேலைகளையும் விட்டு விட்டு ஊர் நலனிற்காக இந்த மனு அளிப்பில் கலந்து கொண்ட எல்லா தொண்டுள்ளங்களுக்கும் ஒட்டு மொத்த காயளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள். ஜஜாக்கால்லாஹ் ஹைரன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஆனந்த கண்ணீரும்....... ஆத்திர கண்ணீரும்.....!!!
posted by s.s.md meerasahib (riyadh) [11 December 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24455

அஸ்ஸலாமு அலைக்கும். நமது காயல் கண்மணிகள் தமிழக அரசு உரிமை சட்டம் மூலம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேள்வி கேட்கவும்...... நமது எதிர்ப்பை தெரிவிக்கவும் கூடிய கூட்டத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிகிறது. என்னை போன்றவர்களால் கலந்து கொள்ள முடியாமையை நினைத்து வருந்துகிறேன். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்வதோடு...... எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா இறைஞ்சுகிறேன்.

அதே.... சமயம் இதில் கமாண்டு பதிக்கும் ஒரு சிலர். ஒரு சிலரை பிரித்தாண்டு...... ஒரு சிலரை புகழ்த்தும் என்னம்களை இந்த பொது தளத்தில் பதிப்பதை கண்டு ஆத்திர கண்ணீரும் வருகின்றன. காயல் மக்கள் ஒன்று கூடி பலத்தை நிரூபிச்சி இருக்கும் நல்ல இந்த நிகழ்வில் பிரித்தாளும் கமாண்டுகள் தேவை இல்லாத்த ஒன்று. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Two sides of the same Kayal
posted by Abdul Wahid S. (Kayalpatnam.) [11 December 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 24457

Bravo. "Hats off" to you guys in Chennai.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. மக்கள் எழுச்சியுடன் கைகோர்ப்போம் !!
posted by Salai. Mohamed Mohideen (USA) [11 December 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24460

முதுமைக்கும் பணிச்சுமைக்கும் மத்தியில்
ஒன்று குழுமியிருக்கும் இம்மக்கள் எங்கே
ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு
விமர்சிக்கும் அண்ணாந்து துப்புபவர்கள் எங்கே

காலம் ஒன்றும் கடந்து விட வில்லை
சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா ?
உயிர்க் கொல்லி DCW-க்கு வேட்டுவைக்க
மக்கள் எழுச்சியுடன் கைகோர்ப்பார்களா ?

DCW-வின் விதிமீறலுக்கெதிரான நம் போராட்டம்
வென்றெடுக்க வேண்டியதே நம் அனைவரின் நாட்டம்
அமிலக் கழிவைக் கடலில் கலந்து மனித உயிர்களை
அழிக்க நினைத்தால் அதுவே அவர்க்கும் அழிவாகும்

திங்கக்கிழமை வாரத்தின் தொடக்க நாள்
அதுவே DCW-வை முடக்க நாம் குறித்த நாள்
போராட்ட வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்... ?

நம் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு
எவ்விடயத்திலும் இதுபோல் ஒன்றிணைவதற்கு
இப்போராட்ட களம் ஒரு தொடக்கமாகட்டும்
நம்மை சீண்டுபவர்களுக்கு சாவுமணி அடிக்கட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by SHAIK DAWOOD (MALDIVES) [12 December 2012]
IP: 27.*.*.* Maldives | Comment Reference Number: 24480

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.. நன்றி....

எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வெற்றி தந்தருள்வானக ..ஆமீன்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved