Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:28:21 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9750
#KOTW9750
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 6, 2012
“தூத்துக்குடியே அழிந்துவிடும்!” - DCW ஆலைக்கெதிரான போராட்டம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3695 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இப்போராட்ட நிகழ்ச்சிகள், நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களிலும், தனியார் தொலைக்காட்சிகள் அடங்கிய காட்சி ஊடகங்களிலும், இணையதளங்களிலும் செய்திகளாக வெளியிடப்பட்டது.

‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில், “தூத்துக்குடியே அழிந்துவிடும்” என்ற தலைப்பில், DCW தொழிற்சாலைக்கெதிராக காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA நடத்திய போராட்டம் குறித்த செய்தி பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-



தொகுப்பு:
ஹாஜி N.S.E.மஹ்மூது
துணைத்தலைவர், KEPA.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்லாஹு அக்பர்........
posted by s.s.md meerasahib (riyadh) [06 December 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24383

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே....... குமுதம் ரிப்போர்டர்..... மனித இனத்தை பாதுகாக்க பதித்த செய்தி என் மனதை தொட்டது. அவர் கொடுத்த எச்சரிக்கையும் ( “தூத்துக்குடியே அழிந்துவிடும்!” ) உண்மையிலும் உண்மை.
ரிபோட்டருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

பணமுதலைகள் எதையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைப்பது......!!! "நினைப்பு புளைப்பை கெடுத்துவிடும்" என்ற பழமொழிக்கு ஒப்பாகும். இந்த செய்திகளை வெளிக்கொண்டு வரும்..... நாளிதழ், வாரயிதழ், மாதயிதழ், மற்றும் இணையதலம்களுக்கு நன்றி சொல்வதோடு "அல்லாஹு அக்பர்"........ என்று சொல்லி வரவேற்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உன்னிடமுள்ள கோடிகள் கை கொடுக்காது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [06 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24385

பெயரில்லாப் பேர்வழிகளை வைத்து நோட்டீஸ் போட்ட நிர்வாகம், அந்த மொட்டை நோட்டிசில் குறிப்பிட்ட சில வசககங்கள்,

"காயல்பட்டணத்தில் ஒரு சிலர்களால் ஒரு புதிய அமைப்பு என்று சொல்லிக்கொண்டு ஆர்ப்பாட்டம் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்... ஆனால் அந்த ஊர் மக்கள் அனைவர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை இந்த ஆர்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள மாட்டார்கள்"

என்ற தன் மனநிலையை மொட்டை நோட்டிசின் மூலம் வெளியிட்டு நம் மக்களின் வேகத்தையும், உணர்ச்சியையும் ஒடுக்கிவிடலாம் என்ற அந்த நிர்வாகத்தின் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது என்பதற்கு மேற்கண்ட நாளேட்டின் செய்திகளே சாட்சி.

உண்மையை ஒடுக்கிவிட உன்னிடமுள்ள கோடிகள் கைக்கொடுக்காது அப்பனே!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...எங்கள் குடும்ப சகோதரர்கள்,சகோதரிகள் பாதிப்புக்குள்ளானது
posted by OMER ANAS (DOHA QATAR.) [06 December 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24389

முதலில் இந்த ஆளையினை,அதன் அடிப்படை நாசக்கார சக்தியினை வேரோடு பிடுங்கி எரிய எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும்,என்றும் பின் வாங்கிட நினைக்காத அனைத்து நல் உள்ளங்களுக்கும்,உண்மையினைஉள்ளபடி வெளியிட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி!

இந்த கொடிய ஆலையாலோ என்னவோ என் அன்பிற்கு உரிய சகோதரனை என் குடும்பம் இழந்துள்ளது.அந்த வலி இன்னும் எங்களை வாட்டி எடுக்கிறது!

ஒரு தீய செயலும் அவரிடம் இல்லாத போதும்,ஊரே அவரைபற்றி மெச்சிய போதும் அவர் மரணம் அடைந்த செய்தி மட்டுமே எங்களுக்கு அன்று கிடைத்ததே தவிர இந்த ஆட்கொல்லி நோயால்தான் மரணம் ஏற்ப்பட்டது என்பது கூட பிற்காலத்தில்தான் நாங்கள் அறிந்து கொண்டோம்.

இதுபோல் எத்துனையோ நம் சகோதர சகோதரிகளை நாம் இழந்துள்ளோம்........!இனியும், இரத்தத்தால் ஒன்றுபட்ட நம் மாவட்ட அனைத்து மக்களையும் நாம் நாளை இழக்கும் முன்,மார்க்கம் அரசியல் சாதி மதம் இதுகளையெல்லாம் பாராமல் நாம் ஒன்று பட்டோமேயானால் நேற்றைய எகிப்து போல் நாளை நம் மாவட்டம் நிச்சயம் நல்லபடி நமக்கு கிடைக்கும்.

இந்த விசயத்திலாவது நாம் ஒன்று பாடுவோமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சபத மேற்ப்போமாக!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [06 December 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24396

அன்பு சகோதரர் omar anas அவர்களே, "இந்த விஷயத்திலாவது ஒன்று படுவோம்" என்ற உங்கள் உள்ளத்தின் ஆதங்கம், வார்த்தைகளால் வெளி வந்து விழுகிறது!.

நீங்களும்,உங்களைப் போன்றவர்களும் இவ் விசியத்தில் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளானிர்களோ அதை விட பன்மடங்கு எனக்கு நெருங்கியவரின் பாதிப்பை பார்த்து இன்று வரை பதை,பதைப்புக்குள்ளாகி இருக்கிறேன்.!

அன்பு சகோதரர் omar anas அவர்களே,நீங்கள் என்னை விட இளையவராகத்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன், காக்கா என்ற உரிமையில் வேண்டுகிறேன்,

நாம் பாதிப்புக்குள்ளான இந்த விசயத்தில் மட்டுமல்ல இனி வரும் காலங்களில் நாம் சந்திக்கும் எல்லா நல்ல காரியங்கள் முதல் நம்மை எச் சூழ்நிலையிலாவது வீழ்த்தி விட வேண்டுமென்று கங்ககனம் கட்டி கொண்டு திரை மறைவுச்சதி வலைபின்னும் தீயவர்கின் பிடியிலில்சிக்காமல் நாம் நம்மை தற்காத்து கொள்ள சபதமெடுக்க வேண்டும்!

இந்த நேரத்தில் தான் நாம் ஒற்றுமையுடன் ஒரிங்கிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும்!, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் யாரிடம் தவறு என்ற ஆராய்சியை அப்புறப்படுத்தி விட்டு நம் அன்பு உடன் பிறவா காயல் கண்மணிகளுக்காக ஓரணியில் நிற்ப்போம்

எதிர் காலத்தில் ஒரு விசயத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு நல்ல விசியதிற்க்கும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாய், ஒருவர் மனதை மற்றவர் புரிந்து, புண்ணிய காரியங்களை செய்ய புறப்பட்ட பிள்ளைகள் நாங்கள் என்று நம்மை படைத்த நாயனின் கிருபையை நாடியவர்களாக,, நாம் மதிக்கும் சான்றோரகளும்,,நம்மை ஈன்றோர்களும் இதயம் குளிர நம் எதிர் கால எண்ணங்களும் செயல் களும் அமையவேண்டுமென விரும்புகிறேன்!.

வல்ல அல்லாஹ் என் துவாவை கபூலாக்க தாங்களையும், என் இந்த கருத்தை படிக்கும் அனைவர்களையும் அன்புடன் வேண்டுகிறேன்

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. குமுதம் கூறியது முற்றிலும் உண்மையே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [07 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24403

மண் மறைந்த மாமேதை எங்கள் பாசத்திற்குரிய எஸ்.கே மாமா அவர்கள் அன்றைக்கே துடி துடித்துப் பேசியது இன்னும் என் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கின்றது.

“அடேய்! DCW காரன் மிக பயங்கரமான ஒரு கெமிக்கலெ லாரி லாரியாக் கொண்டு வர்றாண்டா! அதுமட்டும் தப்பித்தவறி விபத்துக்குள்ளாச்சுன்னா...அப்புறம் பல கிலோமீட்டர் தூரத்துக்கு தீப் பிழம்பு மாதிரி உருண்டு போய் அது ஊரையே அழிச்சுடும்ண்டா”, எவ்வளவு அக்கறை? அதைப் பற்றிய அறிவு? இன்னும் கொஞ்ச காலம் அவர்கள் வாழந்திருக்க மாட்டார்களா? எனத் தோன்றுகின்றது.

தூத்துக்குடியையே அழித்து விடும் மிக ஆபத்தானதும், மனித உயிருக்கே உலைவைக்கும் இந்த கொடிய விசிஎம்-ஐ தூத்துக்குடி பகுதியில் DCW சேமித்து வைத்திருப்பதோடு மேலும் அதிக அளவு சேமித்து வைக்க அனுமைதி வழங்கக் கூடாதென்று ஆலைக்கெதிராக வழக்கு தொடர்ந்திருக்கும் தூத்துக்குடி மதிமுக மாவட்ட செயலாளர் திரு ஜேயல் அவர்கள் குமுதம் இதழுக்கு கொடுத்திருக்கும் பேட்டி முற்றிலும் உண்மையே!.

இந்த ஐந்து ஆண்டு காலங்களாக ஆலையினால் மக்களுக்கு அதுவும் குறிப்பாக காயல்பட்டினத்திற்கு ஏற்படும் பாதிப்பு அளவுக்கதிகமாகப் போய்விட்டது. காரணம் அதன் புதிய பல உற்பத்திகளும் அதானால் வெளியாகும் கழிவுகளும் தான் என்பதில் சந்தேகமே இல்லை!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தூத்துகுடியே அழிந்துவிடும்
posted by NIZAR (kayalpatnam) [07 December 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24404

தூத்துக்குடியே அழிந்திவிடும் என்பது சற்று கூடுதலான செய்தியாக தெரிந்தாலும்,நிச்சயம் அதுதான் உண்மை,

கதார்லிருந்து DCW க்கு வரும் சுவாசித்தாலே புற்றுநோயை ஏற்படுத்தும் VCM என்ற கொடிய நோயை உருவாகும் கலவையை அசட்டுதைரியதுடன்,டேங்கர் லாரியில் துறைமுகத்தில் இருந்து DCW க்கு கொண்டுவருவது எவ்வளவு கொடுமையான, மனிதாபிமானமற்ற, கொலைவெரிதனமான செயல் என்பதில் சந்தேகமில்லை,

இந்த டேங்கர் லாரி விபத்தில் சிக்கி அல்லது வேறது காரணங்களாலோ வாகனம் சிதைந்து இந்த VCM வெளியேறினால் காயல்படினதுக்கு மட்டுமா பிரச்னை, இந்த மாவட்டமே கொடுமையான பாதிப்பை சந்திக்கும், அதன் பிறகு தொலைக்காட்சி அரங்கில் வட்டமாக உட்கார்ந்து எத்தனை உயிர் போச்சின்னு, எதுனால ஏற்பட்டது என்று எல்லாம் சோலிமுடிந்த பிறகு கதை பேசுவார்கள்,

இவ்வளவு கொடுமையான ஆபத்தை புட்டு புட்டு வைத்தும், இந்த மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுபாடு வாரியம் கண்டுகொள்ளாமல் இருப்பது எவ்வளவு மக்கள் விரோதபோக்கு என்பதை மக்கள் உணர வேண்டும். மக்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள சகோதரர் ஜோயலுக்கு வாழ்த்துக்கள்.

பணம் கொடுத்து எல்லாரையும் விலைக்கு வாங்க முடியாது, ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டும்போது மக்கள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்கிவிடுவார்கள். ஊடகங்கள் மூலம் இப்பிரச்சனை என்ன என்று மாவட்ட பொதுமக்களுக்கு இப்பொழுதான் செய்தி போய்சேருகிறது. எனவே நல்ல மாற்றம் வரும் காலங்களில் ஏற்படும் என்ன நம்புவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கேட்பாரற்று கிடந்த DCW பிரச்சினை
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [07 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24411

கேட்பாரற்று கிடந்த DCW பிரச்சினை நகர் மக்களின் ஒத்துழைப்புடன் இப்போது KEPA மூலம் அனைத்து மாநில - மாவட்ட அதிகாரிகளும் கேட்கும்படியாக ஆகியிருக்கிறது..

நகர் மக்களை கனிவோடு கண்ணியத்தோடு ஒற்றுமை படுத்திய KEPA விற்கு பாராட்டுக்கள்...! தொடரட்டும் நமது ஒற்றுமை...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (6/12/2012) [Views - 2297; Comments - 1]
உனக்குமாடா...? (?!)  (5/12/2012) [Views - 3324; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved