Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:57:48 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9340
#KOTW9340
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 10, 2012
“நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?” எனும் தலைப்பில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய கருத்தரங்கம்! விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் வள்ளுவன் சிறப்புரை!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3420 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், “நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணி முதல் 08.30 மணி வரை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.



நிகழ்வுகள்:
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ‘ஹிதாயா’ அப்துர்ரஹ்மான் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார். அதன் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், துணைத்தலைவர் எஸ்.அப்துல் வாஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழு உறுப்பினர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். செயற்குழு உறுப்பினர்ளான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் வரவேற்புரையாற்றியதோடு, சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகவுரையாற்றினார்.





கடந்த முறை விருத்தாச்சலம் நகர்மன்றத்தில் நேர்மையான நகர்மன்றத் தலைவராக செயல்பட்டு, தவறுகளை தானும் செய்யாமல் - பிறரையும் செய்ய விடாமல் 5 ஆண்டு பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து சாதனை படைத்த கண் மருத்துவ பேராசிரியர் வள்ளுவன் இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் உரை:
விருத்தாச்சலம் நகராட்சியில், அவருக்கு உறுதுணையாக இருந்து நகர்மன்ற நிர்வாகத்தை சிறப்புற செயல்படுத்திட உறுதுணை புரிந்த விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மாப்பிள்ளை முஹ்யித்தீன் இக்கருத்தரங்கில் துவக்க உரையாற்றினார்.







ஒரு நேர்மையான நகர்மன்ற நிர்வாகத்தை நடத்திட டாக்டர் வள்ளுவன் மேற்கொண்ட அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் தான் துணை நின்ற நிகழ்வுகள், அதற்காக பட்ட சிரமங்கள் குறித்த தனது அனுபவங்களை அவர் தனதுரையில் பகிர்ந்துகொண்டார். அத்துடன் மாலை அமர்வு நிறைவுற்றது.

இரண்டாம் அமர்வு:
மஃரிப் தொழுகைக்குப் பின், மாலை 06.45 மணியளவில் துவங்கிய அமர்வில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் காயல்பட்டினம் கிளையின் துவக்கம் மற்றும் செயற்பாடுகள் குறித்து, நிகழ்ச்சி நெறியாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா விளக்கிப் பேசினார்.

டாக்டர் வள்ளுவன் உரை:
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான - விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் தலைவர் - கண் மருத்துவ பேராசிரியர் டாக்டர் வள்ளுவன் சிறப்புரையாற்றினார்.



ஒரு நகராட்சியிலுள்ள தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உரிமைகள், தகுதிகள், கடமைகள் குறித்தும், பத்திரப்பதிவு அலுவலகம், தொழிற்சாலை நிர்வாகம் உள்ளிட்ட அரசு - அரசு சாரா இயந்திரங்கள் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும், அவற்றில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய வழிவகைகள் குறித்தும், நடைபெறும் முறைகேடுகளைக் களைவதற்கான நடைமுறைகள் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நன்மைகள், அதனைப் பயன்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.



கேள்வியும் - விளக்கமும்...
அதனைத் தொடர்ந்து, கருத்தரங்க தலைப்பு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எழுத்து மூலம் பெறப்பட்ட கேள்விகளை ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஒவ்வொன்றாக வாசிக்க, டாக்டர் வள்ளுவன் அவற்றுக்கு சட்ட சான்றுகளுடன் விளக்கமளித்தார்.



நிகழ்ச்சியில் இடம்பெற்ற கேள்விகள் சிலவும், அவற்றுக்கு டாக்டர் வள்ளுவன் அளித்த விளக்கங்களும் பின்வருமாறு:-

கேள்வி: தவறு செய்யும் நகர்மன்ற ஊழியர் மீது - தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் எவ்வாறு புகார் அளிக்கலாம் / நடவடிக்கை எடுக்கலாம்?

விளக்கம்: தவறு செய்யும் நகர்மன்ற ஊழியர்கள் மீதான புகார்களை நகர்மன்றத் தலைவர், ஆணையர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ.), மாவட்ட ஆட்சியர், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் (சி.எம்.ஏ.) உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கலாம்.

அரசு அதிகாரிகள் - அலுவலர்கள் செய்யும் தவறுகளுக்காக, பாராளுமன்றத்தின் பிரதமர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது சட்டமன்றத்தின் முதலமைச்சர் உள்ளிட்டவர்களோ நடவடிக்கை எடுப்பது போல் நகர்மன்றத் தலைவர் நேரடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதே நிலை. எனவேதான், அனைத்துத் துறைகளையும் விட நகராட்சி நிர்வாகங்களில் தவறுகள் துணிச்சலுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தவறுகளுக்காக அவர்களது மேலதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டாலும் கூட, பெரும்பாலும் அவர்களும் அவர்கள் இனத்திற்கு சாதகமாகவே செயல்படும் நிலையுள்ளது.

எனினும், மக்கள் போராட்டத்தின் மூலம் தவறுகளை ஓரளவுக்கு மட்டுப்படுத்த இயலும். நகராட்சி அதிகாரிகளின் நிர்வாகக் குறைபாடுகளை முற்றிலுமாகக் களைய வேண்டுமெனில், பாராளுமன்றம் - சட்டமன்றத்திற்கு உள்ளது போன்ற அதிகாரம் நகர்மன்றத்திகும் இருக்க வேண்டும். இது குறித்து நான் பதவியேற்ற காலம் முதல் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறேன்.



கேள்வி: நகராட்சி ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க நகர்மன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?

விளக்கம்: அவ்வாறு செய்ய அதிகாரமில்லை.

கேள்வி: நகர்மன்றத்தின் சாதாரண - அவசர கூட்டங்களில் பார்வையாளர்கள் கலந்துகொள்ளலாமா?

விளக்கம்: நகராட்சி நிர்வாகம் என்பது மக்கள் வரிப்பணத்தில் நடப்பதாகவும். எனவே, நகராட்சியில் நடைபெறும் எந்தக் கூட்டமானாலும் - அரசு சட்ட விதிகளின்படி, பார்வையாளர்கள் கலந்துகொள்ள முழு உரிமையுண்டு.

நான் விருத்தாச்சலம் நகர்மன்றத் தலைவராக இருக்கையில், எனது இருக்கையின் மேலே,
“இந்த நகர்மன்றம் மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுவதாகும்!
இங்கு அவர்களே எஜமானர்கள்!!”

என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளேன். இன்றளவும் அந்த வாசகம் அப்படியே உள்ளது.

நகர்மன்றக் கூட்டங்களில் பார்வையாளர்கள் கலந்துகொள்ள அனுமதியிருக்கிறது என்றாலும், அக்கூட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கவனிக்கலாம் என்பதைத் தவிர அவர்கள் கருத்து சொல்லவோ, கேள்வி கேட்கவோ, கூட்ட அரங்கினுள் கூச்சலிடவோ அனுமதியில்லை. அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் அவர்களை வெளியேற்ற நகர்மன்றத் தலைவருக்கு முழு அதிகாரமுண்டு.

கேள்வி: அரசு விலையில் நியாயமான முறையில் டெண்டர் எடுத்து, பணி செய்ய வாய்ப்புள்ளதா?

விளக்கம்: வாய்ப்புள்ளது. எங்கள் பொறுப்புக் காலத்தின்போது அதுபோன்று பல பணிகளை அரசு விலையில் நியாயமான முறையில் நாங்கள் டெண்டர் எடுத்து செய்துள்ளோம்.

கேள்வி: உள்ளூரில் வேலைதேடும் பட்டதாரிகளை நகராட்சி பணிகளில் அமர்த்த வழி உண்டா?

விளக்கம்: அவர்களை தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாக வைத்துக்கொள்ள தடையேதும் இல்லை. நான் விருத்தாச்சலம் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, பல்வேறு பணிகளுக்கு தற்காலிகப் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நாங்களாகவே வைத்துக்கொண்டு பல பணிகளை செய்து முடித்துள்ளோம்.

கேள்வி: நகராட்சியின் வங்கி கணக்குகள் எத்தனை, அவற்றில் பணம் எவ்வளவு உள்ளது, யார் யாருக்கு செக் வழங்கப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் ரகசியமா? அவற்றை மக்கள் தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாமா?

விளக்கம்: மக்கள் பணம் என்பதால் இதில் ரசகியம் எதுவுமில்லை. நகர்மன்றத் தலைவர் / உறுப்பினர்கள் தேவைப்படும்போது கடிதம் அளித்து அத்தகவல்களை நேரடியாகப் பார்வையிடலாம். தெரிந்த தகவல்களை அவர்கள் பொதுமக்களுடன் பகிர்ந்தகோள்ளலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் அத்தகவல்களை ஆவணங்களாகவும் பெறலாம்.

கேள்வி: நகர்மன்றத் தலைவர் எல்லா விஷயங்களையும் உறுப்பினர்களின் அனுமதி பெற்றுதான் செய்யவேண்டுமா?

விளக்கம்: பெரும்பாலும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றாலும், நகர்மன்றத் தலைவருக்கு சட்டம் அளித்துள்ள சில தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவைகளைப் பொருத்து அவர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

கேள்வி: நகர்மன்றக் கூட்டம் நடக்கும்போது ஆணையர் பங்கு என்ன? அவரின் அதிகாரம் அக்கூட்டத்தில் எது வரை உள்ளது?

விளக்கம்: நகர்மன்றக் கூட்டம் என்பது நகர்மன்றத் தலைவரால் நடத்தப்படுவதாகும். ஆணையர் உட்பட எந்த அதிகாரியானாலும், தலைவர் அனுமதிக்கும் வரை மட்டுமே கூட்டத்தில் இருக்க இயலும்.

கேள்வி: பெருவாரியான (மெஜாரிட்டி) நகர்மன்ற உறுப்பினர்கள் ஒரு முடிவெடுக்கும்போது, அதற்கு தலைவரின் உடன்பாடு இல்லை என்றால், அதனை அவர் மினிட் புத்தகத்தில் பதிவு செய்யலாமா?

விளக்கம்: தாராளமாகப் பதிவு செய்யலாம். பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, அதுகுறித்த தனது கருத்தை அத்தீர்மானத்தின் ஓரத்தில் குறிப்பிடலாம்.

கேள்வி: நகர்மன்றக் கூட்டத்தை நடத்த தலைவர் இருக்கும் நிலையில், அவரில்லாமல் துணைத்தலைவரோ மற்றவர்களோ கூட்டத்தை நடத்த சட்டத்தில் இடமுண்டா?

விளக்கம்: அவ்வாறு நடத்தவே இயலாது. ஒருவேளை தலைவர் வர இயலாமற்போனால் துணைத்தலைவர் கூட்டத்தை நடத்தலாம். துணைத்தலைவரும் வர இயலாவிட்டால், இதர உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தமக்குள் மூவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவர் மூலம் கூட்டத்தை நடத்தலாம்.

தலைவர் இருக்கும்போது வேறு யாரும் எந்தக் கூட்டத்தையும் நடத்த இயலாது.

கேள்வி: நகர்மன்றக் கூட்டங்களில் இண்டர்நெட் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி உள்ளதா?

விளக்கம்: நகர்மன்றத்தின் அனைத்துக் கூட்டங்களையும் அவதானித்து செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி உண்டு.

இவ்வாறாக, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, டாக்டர் வள்ளுவனால் விளக்கமளிக்கப்பட்டது.

நன்றியுரைக்குப் பின், துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கருத்தரங்க நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.







கருத்தரங்கம் நடைபெற்ற ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், ஐசிஐசிஐ வங்கி முனையிலும், பேருந்து நிலைய வளாகத்திலும் திரளான பொதுமக்கள் திரண்டிருந்து, உரைகளை அவதானித்தனர்.

கருத்தரங்க நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர், சிறப்பு விருந்தினர் டாக்டர் வள்ளுவனை பார்வையாளர்கள் சூழ்ந்துகொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.



நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஏ.எஸ்.முஹ்யித்தீன், ஏ.எஸ்.புகாரீ, ‘நட்புடன்’ முத்து இஸ்மாஈல், மாஸ்டர் கம்ப்யூட்டர் அப்துல் மாலிக், ஷஃபீயுல்லாஹ், மரைக்கார், ஸதக்கத்துல்லாஹ், எம்.என்.அஹ்மத் ஸாஹிப், ஹஸன் இர்ஷாத், ஏ.கே.இம்ரான் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர்.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [10 October 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22729

பாராட்டுக்கள்.

இது மாதிரியான பிரயோசனமான நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்துங்கள். அப்பொழுது தான் உண்மைகள், தகவல்கள் மக்களுக்கு நினைவுக்கு வரும்.

மறதி அதிகம் உள்ள மக்களுக்கு இது மாதிரி நிகழ்ச்சிகள் ஒரு ரெப்ரெஸ் ( Refresh (F5) ) பட்டனை பிரஸ் பண்ணறது மாதிரி.

மாட்டு வண்டியை ஓட்டுபவர், மாடு ஒழுங்காக சென்றாலும், தவறாக சென்றாலும் அடிக்கடி அதை அடித்துக்கொண்டே இருப்பார்.

-ஏனப்பா.. மாடு ஒழுங்காக தானே செல்லுகிறது, எதற்கு அதை அடிக்கடி அடிக்கின்றாய்? ஏன் இப்படி கத்துகிறாய்...? என்றால்..

- மாட்டுக்கு நாம் மேலே உட்கார்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருக்கனும், இல்லை என்றால் எங்காவது சாடிவிடும்.. என்பார்.

அது மாதிரி நினைவு படுத்திக்கொண்டே இருங்கள்.

இந்த நிகழ்வை நடத்திய, கலந்து கொண்ட அனைவர்களுக்கும் நன்றிகள் பல.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உங்களுக்கு இந்த வள்ளுவனின் சோதனைகள் போல் பல வரலாம்... நேர்மை தோல்வி அடையாது...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [10 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22730

கடந்த 2011 முதல் 2016 வரை காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நேர்மையான நகர்மன்றத் தலைவராக செயல்பட்டு, தவறுகளை தானும் செய்யாமல் - பிறரையும் தவறு செய்ய விடாமல் தடுத்து 5 ஆண்டு பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து, தன்னை நகர்மன்ற தலைமை பொறுப்புக்கு அனுப்பிய மக்களின் அனாமத்தையும், தான் கொடுத்த வாக்கையும் 5 ஆண்டு காலம் பாதுகாத்து வெளிப்படையான நிர்வாகம் செய்து, மக்களின் மன நிறைவோடு சாதனை படைத்த மழலையர் பள்ளி நிறுவனர், பட்டதாரி புரட்சி பெண் - திருமதி ஆபிதா அவர்கள் இன்னன்ன ஊரில் வெளியூரில் சிறப்பு விருந்தினராகக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்... என்ற செய்தியை வரும்காலத்தில் நமது மக்கள் செய்தியாக படிக்க வேண்டும்...

இன்று ஒரு விருத்தாச்சலம் வள்ளுவன் நமதூர் கருத்தரங்கில் கலந்துகொண்டார்...

நாளை நீங்கள் வேறு ஒரு ஊரில் இவரை போல் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்...

இந்த வள்ளுவனும் உங்களை போல் வெளிப்படை நிர்வாகம் நகராட்சியில் நடத்தியவர் தான்... அதனால் அவர் சந்தித்த நெருக்கடிகள் பல... இருந்தாலும் பின்பு கடைசியில் அவரின் நேர்மைக்கு கிடைத்தது.. வெற்றி... வெற்றி..

உங்களுக்கு இந்த வள்ளுவனின் சோதனைகள் போல் பல வரலாம்... நேர்மை என்றும் தோல்வி அடையாது... எதிர்கொள்ளுங்கள்... வெற்றி நிச்சயம்.. போராடுங்கள் தவறுக்கு எதிராக...

மக்கள் சக்தி ஒன்றே போதும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [10 October 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22731

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்ல அருமையான கருத்தரங்கம். பொது மக்களின் கூட்டம் தான் ரொம்பவே குறைவு.இது போன்ற மக்களின் விழிப்புணர்வு கருத்தரங்கதிற்க்கு பொது மக்கள் திரளாகவே வரணும்.

மரியாதை குரிய. டாக்டர் வள்ளுவன் அவர்களின் எல்லா பதிலும் மக்களுக்கு தேவையானது. முக்கியமான இரு கேள்விகளை நாம் கவனிக்கவேணும்.

NO.1.... நகர்மன்றத்தின் அனைத்துக் கூட்டங்களையும் அவதானித்து செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி உண்டு.

NO.2......பார்வையாளர்கள் கலந்துகொள்ள முழு உரிமையுண்டு. ( பார்வையாளர்கள் எல்லை மீற கூடாது )

தங்களின் வாசகம் சூப்பர் ஐயா ''''''' இந்த நகர்மன்றம் மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுவதாகும்.....இங்கு அவர்களே எஜமானர்கள் ......

தற்போது நம் நகர் மன்றம் மிகவும் சிறப்புடன் நடந்தேறியது.....இன்ஷா அல்லாஹ் நம் ஊருக்கு மேலைக்கு இது போன்ற '''“நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?”'''கருத்தரங்கம்.....எல்லாம் தேவையே படாது.என்று நினைக்கிறேன்.

மிஞ்சு உள்ள 4 வருடமும் நல்ல முறையில் நம் ஊர் நகர் மன்றம் நடந்து நம் ஊருக்கு நல்ல ...நல்ல ...திட்டங்களும் .... நடக்கும் என்று நாம் யாவர்களும் துவா செய்வோமாக.

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய கருத்தரங்கம்!
posted by Salai.Mohamed Mohideen (USA) [10 October 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 22735

ஒரு சமுதாயம் நல்லதொரு மாற்றத்தை விழிப்புணர்வை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதற்க்கான அடையாளங்கள் தான் இது போன்ற கருத்தரங்கங்கள். இது போன்ற விழிப்புணர்ச்சிகள் எப்பொழுதும் தொடர்ந்து மக்களுக்கு தந்து கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு... 'தொடர்ந்து' ஞாபகப்படுத்தி கொண்டிருப்பது இது போன்ற இயக்கங்களின் கடமை.

மாப்பிள்ளை முஹ்யித்தீன் அவர்களை போல், முந்தைய நமது நகர்மன்றத்தில் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரகளாய் பணியாற்றிய திருத்துவராஜ் போன்றவர்கள் நமது தலைவிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

“இந்த நகர்மன்றம் மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுவதாகும்! இங்கு அவர்களே எஜமானர்கள்!!” -- புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் ... புரியவைத்தால் மிக நலம் !!

மக்களை பிடித்திருக்கும் தீராத நோய்களாய் இருக்கின்ற இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க இப்பிரபஞ்சத்தில் இனி எவரும் புதிதாக பிறந்து வரப்போவதில்லை... சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

தாங்கள் அறிய விரும்பும் தகவல்களை உடனே தெரிந்துகொள்ள கொண்டுவரப்பட்ட 'தகவல் அறியும் உரிமை' சட்டத்தை சாமானிய மக்களும் பயன்படுத்தும் போது தான் ஊழல்களை தடுக்க முயலும்.

நகர்மன்றத் தலைவருக்கு சட்டம் அளித்துள்ள சில தனிப்பட்ட அதிகாரங்களை நன்மையான காரியங்களுக்கு நமது தலைவியும் பயன்படுத்த வேண்டும்.

'வழிகாட்டும் வள்ளுவன்' என்ற புத்தகத்தை படித்து பார்த்தால்... நமது நகர்மன்ற தலைமை சந்திக்க வேண்டிய சோதனைகள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றது. நமது நகர்மன்றமும் நிச்சயம் கரையேறும் என்ற நம்பிக்கையுள்ளது !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வண்டிமாடு ரெண்டும் இங்கே முன்னேப் போகுதம்மா....வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [10 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22737

எப்படியோ? இப்படி ஒரு கோட்டை போட்டுட்டீங்க...! இனி அதுலெ ரோட்டை போடுறது நம்ம நகர்மன்றத்தினர் கையில் தான் இருக்கு!

தலைவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இருக்கா? இருக்கா? இருக்கா?
தலைவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இருக்கு! இருக்கு! இருக்கு!

வலைதளம், ஊடகங்கள் பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்கா? இருக்கா? இருக்கா?
வலைதளம், ஊடகங்கள் பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்கு இருக்கு! இருக்கு!

ஆணையருக்கு நகர் மன்றக்கூட்டத்தில் பங்கு என்ன? என்ன? என்ன?
தலைவர் சொல்லுற வரை இருக்கலாம்! இருக்கலாம்! இருக்கலாம்!

இப்படி பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாயிற்று!

நண்பர் ஜியாயுத்தீன் சொன்ன மாட்டு உதாரணம் சூப்பர்! ஆனால் இதுலெ யார் மாடு? யார் மாட்டு வண்டிக்காரர்? என்பதை கொஞ்சம் வாலை முறுக்கி புரியும் படி சொல்லியிருக்கலாம்.

சரி விடுங்க...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...! நகர்மன்றம் நல்லவிதமா நடந்தாலே போதும்! உங்க பாஷையிலெ சொல்லனும்ன்னா வண்டி ஒழுங்கா ஓடுனாலே போதும்!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by salai s nawas (singapore) [11 October 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 22738

கூட்டம் நன்றாக நடந்து இருக்கிறது. நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்து அவர்களின் உரிமையை அறியாயது சிறு குறைதான்.

ஒரு காலத்தில் அரசியல் சட்டதிட்டங்களும் அரசாங்க அலுவலக விதி முறைகளும் தெரியாமல் இருந்தோம், ஆனால் இன்றோ இது போன்ற நிகழ்சிகளும் ஊடக வளர்ச்சியும் பாடம் சொல்லி தந்து கொண்டிருக்கின்றன.

விருத்தாசலம்- க்கு ஒரு வள்ளுவன்
காயல்பட்டினம்- க்கு ஒரு வல்லுவி (அதாங்க நம்ம தலைவி)

லஞ்ச ஒழிப்பு குழு -- வாழ்வாங்கு வாழ்க

உங்களில் ஒருவனாய் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நன்மையை நோக்கி!
posted by kavimagan (qatar) [11 October 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 22739

எந்த ஒரு சமூகத்திலும், அதனை வழி கெடுப்பவர்கள் பலம் வாய்ந்தவர்களைப் போல் தோன்றினாலும், பணம் படைத்தவர்களும், பாசிச வெறி பிடித்தவர்களும் ஒன்றுகூடி தனது முழு பலத்தை பிரயோகித்தாலும், அதனைத் தனது உயிரைக் கொடுத்தேனும் தடுத்தி நிறுத்தி, அந்த சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்தும் தளபதிகளை, வல்ல ரஹ்மான் உருவாக்கி உரமூட்டி வருவதற்கு, சரித்திர சான்றுகள் ஏராளம் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த நிகழ்வினை நான் காண்கிறேன்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்த, பெருந்தகையாளர்கள், இந்த நிகழ்வு வெற்றிபெற உழைத்த தளபதிகள், பார்வையாளர்களாய் கலந்து கொண்ட பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

அஞ்சுவதுவதும், அடிபணிவதும் அவனன்றி யார்க்குமில்லை என்ற பெருமுழக்கத்துடன், தடைகளைத் தகர்த்து, தாய்மண்ணின் நன்மைக்காய் ஒன்றிணைந்து உழைத்திடுவோம். பணத்திற்கும், புகழுக்கும் பணியாத போர்வாளாய் நிமிர்ந்து நிற்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வாழ்க, ஊழலை ஒழித்துக்கட்ட புறப்பட்டிருக்கும் எம் காயல் நகர மக்கள்........
posted by S.K.Shameemul Islam (Chennai) [11 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22742

"நபியே அவர்கள் திருந்தவில்லை என்றால் நீங்கள் உங்களையே மாய்த்துக் கொள்வீர்கள் போலுமே" என்ற இறைமறை கருத்திற்கேற்ப முதுகை முறிக்கும் பல முயற்சிகளை நம்மூரிலும் ஒருகூட்டம் தொடந்து செய்து கொண்டேதான் இருக்கிறது. எதிரி பலம் அன்றும் யானை பலமாகத்தான் இருந்தது. யானைப்படையே கஃபாவை அழிக்க வந்ததும் வரலாறுதானே. இறுதியில் நபிதான் வென்றார்கள். யானைப்படை தோற்றுப்போனது என்பது வரலாறு. இங்கும் அதுதான் தொடர் முயற்சியாக நடந்து வருகிறது.

சத்தியத்தை சூது கவ்வும்; ஆனால் சத்தியம் வெல்லும் என்பது அனைவரும் அறிந்ததே. ஊழல் அரசுகளால் காலங்காலமாய் அவதியுற்ற மக்கள் எழுச்சிதானே அரபுலகத்தையே புரட்டிப்போட்டு அதன் விளைவாய் ஒழுக்கமுள்ளவர்களின் ஆட்சி ஒவ்வொரு நாடாய் அரங்கேறி வருகிறது.

இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை மேடையில் பார்க்கும் போது மக்கள் மத்தியில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்கள் போல்தான் தெரிகிறது. ஆனால் சாமானியர்கள் தான் இன்றைய அரபுலக புத்தெழுச்சியின் கதாநாயகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைவாகவே தெரிகிறது. மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விழிப்புணர்ச்சி பெறாமல் இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் வரிப்பணத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு தொடர் கொண்டாட்டமே. ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்க்கும்போது அதிகமாக படித்தவர்களாகவும் நாட்டு நடப்புகளைத் தெரிந்தவர்களாகவுமே பார்க்கமுடிகிறது.

எனவே ஊழலை ஒழித்துக்கட்டி ஊர் மக்களைப் பாதுகாத்து நல்லவர்களைக் கொண்டு தம்மை ஆளவைக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் என்பது விடியலின் ஒளிக்கீற்றாய் எம் அடிமனதில் விழுகிறது.

வாழ்க, ஊழலை ஒழித்துக்கட்ட புறப்பட்டிருக்கும் எம் காயல் நகர மக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...ஊழல்
posted by NIZAR AL (kayalpatnam) [11 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22749

டாக்டர் வள்ளுவன் வரவளைத்து ஏற்பாடுசெய்த நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பு இருந்தாலும் மிக குறைவான மக்கள் கூட்டத்தை பெற்றது வருத்தமானது.இந்த காயல் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஊரின் அணைத்து பகுதி மக்களின் ஆலோசனை பெறாமல் ஒரு குறிப்பிட்ட சாரரே இந்த முயற்சியில் ஈடுபட்டு அவர்களே அதன் தலைவர்களாகவும் பொறுப்புகளிலும் உள்ளார்கள் போன்று தெரிகிறது .நல்ல விசயத்துக்காக யார் ஈடுபட்டாலும் வரவேற்பது கடமையாக இருந்தாலும் எல்லா சங்கங்கள், அமைப்புகள், அணைத்து ஜமாத்கள் கலந்த ஒப்புதொலோடு,அணைத்து பிரதிநதிகள் கொண்ட இந்த காயல் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அமையுமானால் நிச்சயம் இது வெற்றி அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

YOURS,
NIZAR AL
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved