Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:06:55 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9075
#KOTW9075
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 5, 2012
தவறான முறையில் குடிநீர் உறிஞ்சப்பட்ட வீடுகளில் மின் மோட்டார் பறிமுதல்! காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அதிரடி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4298 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரின் பல்லாண்டு கால கனவான 2ஆவது பைப் லைன் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான டெண்டர் - ஒப்பந்தப்புள்ளி நேற்று திறக்கப்பட்டுள்ளது.

தவறான முறையில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளைக் கண்டறிந்து, அவ்வாறு தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் படி நகராட்சியால் இன்று துவக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நடைமுறைக் குறைகளைக் களைந்து - சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சென்னையிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ்.-ஐ, 16.05.2012 அன்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.

அவரது அறிவுரையின் பேரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் ஆர்.சங்கரன், ஆத்தூர் குடிநீரேற்று நிலைய துணைப் பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர், 31.05.2012 அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்தனர்.

அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகளிடம், நகராட்சியின் குடிநீர் வினியோக முறை குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்,

தயவுதாட்சண்யமின்றி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தல், அவர்களுக்குத் தண்டனை வழங்கல், அவர்களது குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகளை நகர்மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது (கவுன்சிலர்கள்) முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது...

என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நகர்மன்றத்திற்கு வழங்கினர். அதன் தொடர்ச்சியாக, மின் மோட்டார் கொண்டு முறைகேடாக குடிநீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் அறிவித்திருந்தார்.

இது தவிர, மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகரின் அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் பரப்புரை செய்யப்பட்டது.

இந்நிலையில், மின் மோட்டார் மூலம் முறைகேடாக தண்ணீர் உறிஞ்சுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணி காயல்பட்டினம் நகராட்சியால் இன்று காலை துவக்கப்பட்டுள்ளது.

துவக்கமாக, காயல்பட்டினம் மேலப்பள்ளி தெருவில், நகராட்சி ஆணையர் அஷோக் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு, நான்கு முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 4 வீடுகளில் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து எச்சரித்து சென்றனர்.



தற்போது, பெரிய நெசவுத் தெருவில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.Kaja Mahlari (Singapore) [05 September 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21848

. (தவறான முறையில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளைக் கண்டறிந்து, அவ்வாறு தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் படி நகராட்சியால் இன்று நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.)

அல்ஹம்துலில்லாஹ்) யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுங்கள்.! .

(மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தல், அவர்களுக்குத் தண்டனை வழங்கல், அவர்களது குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகளை நகர்மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும்).

ஆம் ! அவசியம் இதனை மேற்கொள்ளுங்கள் ! ( அதற்கு இந்த நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது (கவுன்சிலர்கள்) முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது..).

ஆம் ! நிச்சயம் கவ்ன்சிலர்களின் ஒத்துழைப்பு அவசியம் ! அவர்களின் ஆதரவு இல்லாமல் சாதிப்பது கடினம் !

(இது தவிர, மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகரின் அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் பரப்புரை செய்யப்பட்டது. )

ஆம் ! பொது மக்களே உங்களில் யாரும் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டு இருந்தால் உடனே அதில் இருந்து மீண்டு ,முற்றிலுமாக நீங்கி அல்லாஹ்விடம் தௌபா செய்து மீண்டும் அதில் ஈடுபடாமல் உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்.!

(இந்நிலையில், மின் மோட்டார் மூலம் முறைகேடாக தண்ணீர் உறிஞ்சுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணி காயல்பட்டினம் நகராட்சியால் இன்று காலை துவக்கப்பட்டுள்ளது.)

ஆம் ! உங்கள் நடவடிக்கையை இறைவன் வெற்றியாக்கி தருவானாக !

வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு, நான்கு முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 4 வீடுகளில் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து எச்சரித்து சென்றனர்.

ஆம் ! சோதனையை தொடருங்கள் ! இன்னும் தோண்ட,தோண்ட எத்தனை பூதங்கள் வெளிவருமோ ! சாதனை புரியுங்கள்! எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அவர் அவர்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படவும், பிறரின் உரிமைகளை தலையிடாமல் இருக்கவும் பேரருள் புரிவானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [05 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21849

அடப் பாவிகளா! இத்தனை நாள்களாக குடிதண்ணீரை நீங்கள் மோட்டார் மூலம் எடுக்கவில்லை? நகர அப்பாவி மக்களின் இரத்தத்தை ஊரிந்து வந்து அறுந்து இருக்குறீர்கள். உருப்படாமல் போகவா?

இன்னும் அணைத்து தெருக்களிலும் திடீர் சோதனை மேற்கொண்டால் முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள். திருட்டுக்கு மோட்டார் மட்டும் பறிமுதல் செய்தால் போதாது, அவர்களது குடிநீர் இணைப்பையும் ரத்து செய்யவும்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...கவுன்சிலர் ஒருவர் வீட்டில் பம்ப்செட் மூலம் தண்ணீர் ....
posted by b.a.buhari (chennai) [05 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21854

assalamualikum

கவுன்சிலர் ஒருவர் வீட்டில் பம்ப்செட் மூலம் தண்ணீர் .... எடு பதாக தகவல் மக்கள் மூலம் வந்து உள்ளது, இது வேலியே பயிரை மேஈந்த கதை. முதலில் இவர்கள் யார் எண்டு கண்டு அவர்கள் வீட்டில் சோதனை செய்யுங்கள் .இது ஒரு உண்மை

தகவல்,
புஹாரி
கொசியர் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [05 September 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21860

மோட்டாரை மட்டும் பறிமுதல் செய்வது என்பது திருடர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல . திரும்பவும் புதிய மோட்டாரை வாங்கி திருடுவார்கள் . அவர்கள் வீட்டு மின்சாரம் , குடிநீர் இணைப்பை துண்டித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் .

நகராட்சியின் இந்த நடவடிக்கை தொய்வில்லாமல் தொடரவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...தனி மனித ஒழுக்கம்
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [05 September 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21861

என்ன தான் தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் இந்த மின்மோட்டார் உபயோகிப்பதை தடுக்கவே முடியாது. தனிமனிதன் திருந்தாத வரை ஒன்றும் செய்யமுடியாது.

நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், அங்கத்தினர்களின் வீடுகளிலிருந்து சோதனையை ஆரம்பியுங்கள் பார்க்கலாம்.

யார் வீட்டில் மின் மோட்டாரை, குடிநீர் இணைப்பில் நிரந்தரமாக பிக்ஸ் பண்ணியுள்ளார்களோ அவர்கள் தான் மாட்டுவார்கள்.

எத்தனை வகை மோட்டார் புழக்கத்தில் உள்ளது தெரியுமா?

நம் கால் சூ அளவுக்கு பவர் புல் மோட்டார், வீட்டை சுத்தம் செய்யும் வேக்குவம் கிளீனர் உடன் தண்ணீரையும் உறிஞ்சும் வகை, என்று பல வகைகளில் உள்ள மோட்டார்களை தண்ணீர் விடும்போது பிக்ஸ் பண்ணி, தண்ணீரை உறிஞ்சு.. உறிஞ்சு என்று உறிஞ்சிவிட்டு, அழகாக கழற்றி உள்ளே வைத்து விடுகிறார்கள். இவர்களை எப்படி பிடிப்பது..!!

ஆக, இறைவனுக்கு பயந்தது, தனி மனித ஒழுக்கம் இல்லாத வரை இதை மட்டும் அல்ல, எந்த திருட்டையும் தடுக்கவே முடியாது.

மார்க்க வல்லுனர்கள் மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்..நிலைமை மாறும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Muzammil (Dubai) [05 September 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21866

This is what the people expect. I think this little bit late. Well action.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நகராட்சி ஊழியரின் துணைகொண்டு ...
posted by Firdous (Colombo) [05 September 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 21868

நகராச்சி ஊழியரின் துணை இல்லாமல் மோட்டார் பொறுத்திருக்க இயலாது. அவரிடம் விசாரித்தாலோ, அவரின் துணையோடு யாரெல்லாம் மோட்டார் பொருதியுள்ளர்கள் என்பதை எளிதில் கண்டறியலாம்.

முன்மாதிரியாக அதிகார வர்க்கத்தினர் தாமாகவே முன்வந்து மோட்டார் இணைப்பை துண்டித்துகொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Fasi Ismail (Hetang, China) [05 September 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 21869

பறிமுதல் செய்த மோட்டார்களை மட்டும் படமாக போட்டால் மட்டும் போதாது இந்தமாதிரி தண்ணீரை முறைகேடாக உறுஞ்சி எடுக்கிற அந்த நபருடைய போட்டாவையும் மேலும் அந்த வீட்டையும் படம் பிடித்து போடுனும் அப்பவாது அவர்களுக்கு புத்தி வரலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Bring enough Water to our people
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [05 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21871

நமது மக்கள் பிரச்னையை கண்டுபிடித்து விட்டார்கள். அந்த பிரச்னைக்கு காரணம் என்ன என்று ஏன் கண்டுபிடிக்காமல் இருக்கிறீர்கள்.

தண்ணீர் ஒழுங்காக வந்தால் ஏன் மோட்டார் வைக்க வேண்டும். முதலில் ஊருக்கு தேவையான தண்ணீர் கொண்டு வாருங்கள். மக்களை நிம்மதி படுத்த வையுங்கள். Secondary Pipe லைன் திட்டத்தை உடனடியக கொண்டுவர ஆவணம் செய்யுங்கள். நமது ஊர் மக்கள் யாரும் மோட்டார் connection வைத்து தண்ணீரை உறிஞ்சு வியாபாரம் செய்யவில்லை.

நாம் நம் மக்களிடம் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க கற்று கொடுக்கலாம்.

எனது வீட்டில் கூட corporation வாட்டரை எதிர்பார்க்க வில்லை போரிங் வாட்டரை வாட்டர் treatment machine வைத்து நல்ல தண்ணியாக மாற்றி drinking வாட்டருக்கு உபயோக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. திருடனாய் பார்த்து
posted by SUBHAN N.M.PEER MOHAMED (abu dhabi) [05 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21874

திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டைஒழிக்க முடியாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [06 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21881

நல்ல முயற்சி. அதிரடி நடவடிக்கைகள் தொடரட்டும். யாரும் இந்த தீய செயலுக்கு துணைபோகமாட்டார்கள்.

இணைய தளங்களில் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்பவர்கள் பல கருத்துக்களை தாறுமாறாக எழுதுகிறார்கள். நடந்த தவறுகளை திரும்ப திரும்ப பெரிது படுத்தி அதை வேறு கோணங்களில் பேசி திசை திருப்பி குற்றச்சாட்டுகளை, பழிகளை பலர் மீதும் போடுகிறார்கள். இது ஆரோக்கியாமான செய்தி அல்ல. இப்போது நகராட்சி எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டி அதற்கு நாம் நம்மாலான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட மனிதர்கள் பேரில் காழ்ப்பு உணர்சிகளை வெளிப்படுத்துவது அறிவுடமையாகாது. ஏற்கெனவே இந்த தவறு செய்துகொண்டிருந்தவர்கள் உள்ளங்களை காயப்படுத்தி அவர்கள் உள்ளங்களில் ஒருவிதமான வைராக்கியம் ஏற்படுத்தி இந்த தவறை மீண்டும் செய்யத்தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தான் இந்த விமர்சனங்கள் பயன்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படுமாறு எனது சகோதரர்களை வேண்டிக்கொள்கிறேன்.

அலைக்கற்று ஊழல்கள், கிரானைட் ஊழல்கள் ,கல் குவாரி ஊழல்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு பற்றி தினசரி பத்திரிகைகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

எனவே இந்த அளவு நமதூரில் துரித நடவடிக்கயில் இறங்கி இருக்கின்ற இந்த நகராட்சியின் நடவடிக்கைக்கு தலைவர் முதல் எல்லா உறுப்பினர்களும். ஏன் இந்த மன்றத்தின் உறுப்பினர்கள் தலைவி மீது கடுப்பாக உள்ளவர்களும்கூட சொந்த விருப்பு வெறுப்பினால் மனம் நொந்து போய் இருப்பவர்களும் கூட பேதங்கள் மறந்து, ஊரு நன்மைக்காக இந்த விஷயத்தில் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by SHAJAHAN (DAMMAM) [06 September 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21883

எல்லா குத்பா பள்ளிகளிலும் எச்சரித்து கொண்டு வரணும்.அல்லாஹுக்கு பயந்து கொள்ளுங்கள். அண்டை வீட்டாரின் பத்வாவை பெற்று கொள்ளாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இந்த தகவலை யார்...! எழுதுகிறார்... என்று முக்கியம் அல்ல... இந்த தகவல் உண்மை தானா.. என்பதே முக்கியம்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [06 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21885

குடிநீர் உறிஞ்சப்பட்ட வீடுகளில் மின் மோட்டார் பறிமுதல்! தலைப்பு செய்தி போடும் இணையதளமே.... ஏன் பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டாரை திருப்பி கொடுத்த தகவலை செய்தியாக மக்களுக்கு போடுவது இல்லை... ஆணையருக்கும் ஊழியர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நல்ல பேர் வாங்கி கொடுக்கவா... ? தலைவரை களங்கம் படுத்தும் நோக்கமா...

பறிமுதல் செய்த மின் மோட்டர்கள் சம்பவ நாள் அன்றே உரியவரிடம் திருப்பி கொடுக்க பட்டது... இதுவே உண்மை...!

ஏன் திருப்பி கொடுத்தீர்கள் சட்டப்படி அவர்களுக்கு அபராதம் விதித்து மோட்டரை பறிமுதல் செய்து இருக்கலாமே... அப்போது தானே பிறருக்கு இது ஒரு பாடமாக அமையும் என்று நகரமன்ற தலைவர் ஆணையரிடம் முறையிட்டதாகவும் பின்பு ஆணையர் தலைவரை பார்த்து இந்த விசியத்தில் மிக அசிங்கமான வார்த்தைகள் விவாதம் சொல்லி பெரியதாகி விட்டதாகவும் நம்பகமான தகவல் அறிந்தேன்...

பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டரை ஏன் ஆணையர் அந்த குற்றவாளிக்கு திருப்பி கொடுக்க வேண்டும்...? அபராதம் விதித்து இருக்கலாமே... ஏன் இந்த விசியத்தில் மாறுபட்டார்..?

நகரமன்ற தலைவர் நியாயம் கேட்டால் அவர்கள் அதிகம் எல்லா விசியதிலும் தலையிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள்...

நடுநிலை வாதிகள் இந்த சம்பவத்தை தீர விசாரித்தல் உங்களுக்கு இதில் உள்ள உண்மை விளங்கும்...

(குறிப்பு - போர் வெல் மோட்டாரை பிடித்தோம் பிறகு திருப்பி கொடுத்து விட்டோம் என்று மழுப்புவார்கள்...)

இந்த தகவலை யார்...! எழுதுகிறார்... என்று முக்கியம் அல்ல... இந்த தகவல் உண்மை தானா.. என்பதே முக்கியம்...!

ஆணையர் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைப்பு (மின் மோட்டார் பறிமுதல்) இதில் ஒத்துழைப்பு இல்லை என்றால் மக்கள் விரும்பும் எதையும் சாதிக்க முடியாது...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [06 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21886

தவறான முறையில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளைக் கண்டறிந்து, அவ்வாறு தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டர்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் நகராட்ட்சி ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் !

தயவுதாட்சண்யமின்றி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்து, அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கி , அனைவருக்கும் தட்டுப்பாடில்லாத தண்ணீர் வழங்கவும் முழு முயற்சி மேர் கொள்ளுமாறும் தன்னலம் பாராது பொது நலம் பேனும் சிறந்த தலைவர்களாக தொன் ராட்டுமாறும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வதுடன் ,மக்களே ! மறுமையின் வெட்கையையும் , தாகத்தையும் சற்று நினைதுப்பாருக்கள் .

ஒரு ஜான் உயரத்தில் இருக்கும் சூரியனின் கடும் வெப்பத்தால் மூளை உருகி ஓடும் வியர்வை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையையும் சற்று சீர் தூக்கிப்பாருங்கள் . யாருமே தண்ணீர் திருட முன் வரவே மாட்டீர்கள் ......யனவே,,,,மறுமைக்காக இம்மையை இழக்க தயாராகுங்கள் மக்களே ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by M Sajith (DUBAI) [06 September 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21901

திருப்பித் தரப்பட்டதா? அது எதுக்கு? இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கும் ஓலங்களுக்கு பிறகும் செய்தவர்களுக்கு இதுவா சரியான நடவடிக்கை..?

மற்றவர்களும் இதே ஸ்டைலில் மாட்டினால் பார்த்துக்கொள்ளலாம் அதான் தந்துருவாங்களே என்று இருந்த்துவிடப் போகிறார்கள்.!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. தண்ணீர் திருடர்கள்!
posted by ஹ.இ.ருக்னுதீன் புஹாரி (கேரளா) [06 September 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 21907

இரத்தினபுரி,மேலப்பள்ளி தெரு மற்றும் பெரிய நெசவு தெரு ஆகிய பகுதிகளில் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப் பட்டது.பாராட்டுகள்.

இது தவீர இன்னும் kayalpatnam அணைத்து தெருக்களிலும், அணைத்து வீடுகளிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி தலைவி, அதிகாரிகள், ஊழியர்கள், உறுப்பினர்கள் வீடுகளிலிருந்து சோதனையை ஆரம்பியுங்கள். யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுங்கள்!

மக்களே! மறுமையின் வெட்கையையும்,தாகத்தையும் சற்று நினைத்துப்பாருங்கள்.ஒரு ஜான் உயரத்தில் இருக்கும் சூரியனின் கடும் வெப்பத்தால் மூளை உருகி ஓடும், வியர்வை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையையும் சற்று சீர் தூக்கிப்பாருங்கள். யாருமே தண்ணீர் திருட முன் வரவே மாட்டீர்கள்.அல்லாஹுக்கு பயந்து கொள்ளுங்கள். அண்டை வீட்டாரின் பத்வாவை பெற்று கொள்ளாதீர்கள்.

அன்புடன்,
ஹ.இ.ருக்னுதீன் புஹாரி, கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Water Meter
posted by Riyath (HongKong) [07 September 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 21917

Practically, municipality cant control the people to not use motors, but they can monitor water meter to calculate monthly pay or supply limited as similer as they are doing for electricity distribution. Not sure what happened to the meters fixed in all our homes in the past (10years ago) and why they stopped this technique.

Basic thing is Municipality must know how much quantity of water sent by source, recived by destination, distributed to locals to tally their responsible monthly calculations. Do they have this data to answer all of our questions related to water problem.

Allah is very gracefull and providing all resources (including rain water) in this world, but we are missing to setup infrastructure to save rain water and talking about how to remove waste water on road while rainy season.

I never know we are sending rain water to Paabanaasam dam or Aathur lake while rainy season, but expecting water from there during summer. How its reasonable? We need to change the one way water supply to two-ways. The current method of Saving rain water in home tank is not successfull in my experience as the water impure and smelly due to long time storage in tiny area.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved